Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, August 30, 2010

இளைய பல்லவன்:- முடிவில்லா மௌனத்தின் மொழி. . .


உள்ளே உறங்கா
மௌனம்...
பேசாமல் பேசும்
கவனம்...

எண்ணங்கள் . . .
வார்த்தை உலகின்
வார்த்திடாத வண்ணங்கள் . . .

அவை..
உள்ளே உறங்கா மௌனம்
காலம் தொடாத கோலம்...


பார்வையின் வழியே பயணம் - யாரும்
பார்த்திட முடியாத ஜனனம் . . .
கேள்வியின் முடிவில் மீளாத பதிலின்
அடிநாத சலனம். . .

அது..
உள்ளே உறங்கா மௌனம்
காற்றும் புகாத உலகம்..


மீண்டும் ஒரு கவிதை! (முயற்சி)

Friday, April 9, 2010

பார்வை



காற்றின் மெல்லசைவும்
கடலின் நல்லலையும்
சங்கின் வெண்ணிறமும்
சலங்கை ஒலிக்குரலும்

தேனின் தீஞ்சுவையும்
தீயின் தண்ணொளியும்
நிலவின் தண் பொழிவும்
நீரின் இன் சுவையும்

பனியின் இளங்குளிரும்
பாலின் நறுசுவையும்
மானின் மருள்விழியும்
மயிலின் சிறு நடையும்

மழையின் சிறுதுளியும்
மலையின் பெருவெளியும்
யாழைப் பழித்த மொழியும்
வாளைப் பழித்த விழியும்


ஆஹா...



கண்ணே...



உன்னை உலகிலுள்ள அத்துணை

பொருளாகவும் பார்க்கக்

கற்றுக் கொடுத்து விட்டார்கள்...



.




.





.



.




.




.








பெண்
ணாகத் தவிர...

Sunday, February 28, 2010

வழக்கம் போல்....

வழக்கம் போல் சூரியன் கிழக்கே உதித்து மேற்கே மறைந்து கொண்டிருக்கிறான்.

வழக்கம் போல் நிலவு வளர்ந்து தேய்ந்து வருகிறது

வழக்கம் போல் புவி தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருக்கிறது

வழக்கம் போல் தீவிரவாதிகளும், நக்சலைட்டுகளும், மொழி,மத,பிராந்திய வெறியர்களும் தங்கள் தாக்குதல்களைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

வழக்கம்போல் விலைவாசி உயர்ந்துகொண்டேஏஏஏஏஏஏ இருக்கிறது.

வழக்கம் போல் மன்மோகன்சிங் கவலைப் பட்டுக்கொண்டிருக்கிறார்

வழக்கம் போல் சிதம்பரம் கடைசிக் கண்டனங்களைத் தெரிவித்துக்கொண்டிருக்கிறார்.

வழக்கம் போல் கலைஞருக்கும், அம்மையாருக்கும் அறிக்கைப் போர் நடந்து கொண்டிருக்கிறது.

வழக்கம்போல் போக்குவரத்து நெரிசலில் சென்னை சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

வழக்கம்போல் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வழக்கம்போல் பதிவுலகில் பதிவுகள் வந்துகொண்டிருக்கின்றன.


அட..

எல்லாமே வழக்கமாக இருக்கும் போது நான் மட்டும் மாறினால்?

அதனால்தான்..


வழக்கம் போல் . . .

நான். . .

பதிவுகளைத் தொடர்ந்து தராமல் இருக்கிறேன்.

Wednesday, December 23, 2009

சுய தேடல் . . .

தூரத்தே தெரியும் மலைகள்
அருகே விரியும் வயல்கள்
சற்றே நெளியும் ஓடை - அவை
யாவிலும் இல்லை கவனம்

செவியில் கேட்கும் மழலை
ஆசையாய் பேசும் மனைவி
காலைச் சுற்றும் பூனை - எதுவும்
தொடவில்லை என்னை

இருந்தும் இல்லாமல் இருக்கும்
இன்றைய வாழ்வின் நிலைக்கும்
நேற்றைய பொழுதின் சிந்தனை - அதுவும்
அண்டவில்லை என்னை

இன்பம் இல்லா வாழ்வென
துன்பத்தில் மனம் தினம் வாட
கண்ணெதிரே இருக்கும் நீரை மறுத்து
கானலுக்கேங்கும் மனிதா

உன்னுள் தேடு
உண்மை தேடு
உன்னைத் தேடு

Friday, July 3, 2009

நானும் நானும்...

கவிதை எழுதி நீண்ட நாட்களாயிற்றென்றாலும் அந்த தாகமும் அதன் தாக்கமும் என்னை விட்டகன்றபாடில்லையாகையால்மீண்டும் ஒரு கவிதைத் தொகுப்பு.


1. முதலும் முடிவும்..

முதலில் முடியும்
முதலும்..
முடிவில் முதலாய் வரும்
முடிவும்...
முதலும் இல்லை
முடிவும் இல்லை என்கிறது
முத்தாய்ப்பாய் ...



2. இல்லாமலிருத்தல்

எங்கே எதுவும்
இல்லாமல் இருக்கிறதோ
அங்கே
இல்லாமை
இருக்கிறது...



3. எங்கே அழகு

உன்னிடம்
இருக்கும் அழகு..
நீ என்னோடு
இருப்பதால்
என்னிடம்
இருக்கிறது..



4. குழந்தை

எதிர்ப்பார்ப்பின்றி
எதிர்பார்க்கும்...
ஏமாற்றினாலும்
ஏமாறாது
நம்மை ஏமாற்றும்


5. தொலைந்தது

தேடிக்கொண்டிருக்கிறேன்...
எதைத்
தொலைத்தேன்
என்பதை..



6. ஏன்

கேட்டேன்..மறந்தேன்.
பார்த்தேன்..நினைத்தேன்..
செய்தேன்..உணர்ந்தேன்..
ஏன்?


7. நானும் நானும்

நானும் நானும்
வேறல்ல என்றாலும்
நானும் நானும்
ஒன்றானதால்
நானும் நானும்
நண்பர்கள்


8. ஒளி

இருளைப்
போக்குவதால் அல்ல
இருளற்றிருப்பதால்
அது
ஒளி..



9. தத்துவம்

தவறானதெதுவும்
தத்துவமாகாததானாலும்
தத்துவம்
தவறாகலாம்..

10. கவிதை

எழுதாமல்
இருந்தாலும்
கவிதை
கவிதைதான்.


இதன் தாக்கத்தை சற்றே தெளிவுபடுத்திச் செல்வீர். என் கவிதைத் தாகத்தைத் தீர்ப்பீர். உங்கள் கருத்துக்களே என் கவிதைக்கு சுவாசக் காற்று.

Saturday, June 13, 2009

மீண்டு(ம்) வந்து கொண்டிருக்கிறேன் ! ! !

வலைப்பூவும், தமிழ்மணமும் நீங்காமல் நெஞ்சில் நிறைந்திருக்க
வாராமல் வந்துகொண்டிருந்தேன் இத்துணை நாளாய்.

ஆம்
என் வலைப்பூ வழியாக வாராமல், பதிவுலகத்தின் பக்கங்களை
எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன் அவ்வப்போது.
ஏக்கங்கள்...
என்னால் எழுத முடியவில்லையே என்று
எண்ணங்கள்....
எதுவும் தொடரமுடியவில்லையே என்று...

அழுத்தும் பணிச்சுமைகள்
அன்றாடம் ஆறு மணி நேரம்
அதுதான் ஓய்வின் சமயம்

இடையில் ஒரு தேர்வுக்கான தயாரிப்பு
இத்துணை இக்கட்டான நிலையிலும்...
இதுதான் வாழ்க்கை
இப்படியான சூழலின்
இறுக்கம் குறைந்திருக்கிறது
இப்போது...

நண்பர்களும் அன்பர்களும்
நலமென்று தெரிகிறது
நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும்
நன்றாய் வளர்கிறது வலைப்பூங்காவனம்.
நான் மட்டும்....


ஒன்று புரிந்தது...

வலைப்பூவில்லா வாழ்க்கை
வாழ்க்கையில்லா வாழ்க்கை..


இதோ...

வந்து கொண்டிருக்கிறேன்..மீண்டு(ம்)
வந்துகொண்டிருக்கிறேன்...
வந்துவிடும் சக்கர வியூகமும், மொக்கைக் கவிதைகளும்...

வலைப்பூவே நீ வாழ்க வாழ்க..

என்னைக் காணாமல் ஏங்கிய (?) அன்பு நெஞ்சங்களுக்கும்
எண்ணத்தை வெளிப்படுத்திய சுரேஷ் (பழனியிலிருந்து), சதீசுகுமார், தீனதயாளன் அவர்களுக்கும்
என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த நான் ஆதவனுக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

டிஸ்கி: இது கவிதையான்னு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க. அப்படியே ஓட்டும் போடுங்க..

மீண்டு(ம்) வந்து கொண்டிருக்கிறேன்!!!

மீண்டு(ம்) வந்து கொண்டிருக்கிறேன்!!!

வலைப்பூவும், தமிழ்மணமும் நீங்காமல் நெஞ்சில் நிறைந்திருக்க
வாராமல் வந்துகொண்டிருந்தேன் இத்துணை நாளாய்.

ஆம்
என் வலைப்பூ வழியாக வாராமல், பதிவுலகத்தின் பக்கங்களை
எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன் அவ்வப்போது.
ஏக்கங்கள்...
என்னால் எழுத முடியவில்லையே என்று
எண்ணங்கள்....
எதுவும் தொடரமுடியவில்லையே என்று...

அழுத்தும் பணிச்சுமைகள்
அன்றாடம் ஆறு மணி நேரம்
அதுதான் ஓய்வின் சமயம்

இடையில் ஒரு தேர்வுக்கான தயாரிப்பு
இத்துணை இக்கட்டான நிலையிலும்...
இதுதான் வாழ்க்கை
இப்படியான சூழலின்
இறுக்கம் குறைந்திருக்கிறது
இப்போது...

நண்பர்களும் அன்பர்களும்
நலமென்று தெரிகிறது
நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும்
நன்றாய் வளர்கிறது வலைப்பூங்காவனம்.
நான் மட்டும்....


ஒன்று புரிந்தது...

வலைப்பூவில்லா வாழ்க்கை
வாழ்க்கையில்லா வாழ்க்கை..


இதோ...

வந்து கொண்டிருக்கிறேன்..மீண்டு(ம்)
வந்துகொண்டிருக்கிறேன்...
வந்துவிடும் சக்கர வியூகமும், மொக்கைக் கவிதைகளும்...

வலைப்பூவே நீ வாழ்க வாழ்க..

என்னைக் காணாமல் ஏங்கிய (?) அன்பு நெஞ்சங்களுக்கும்
எண்ணத்தை வெளிப்படுத்திய சுரேஷ் (பழனியிலிருந்து), சதீசுகுமார், தீனதயாளன் அவர்களுக்கும்
என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த நான் ஆதவனுக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

டிஸ்கி: இது கவிதையான்னு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க. அப்படியே ஓட்டும் போடுங்க..

Monday, March 23, 2009

கண்டேன் கண்மணிகளை !!!

ஒரு வழியாக கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த ஃபாலோயர்களை பதிவில் மீண்டும் கொண்டு வந்தாகிவிட்டது.


இதற்கு வழி செய்த வேத்தியன் அவர்களின் இந்தப் பதிவின் மூலம் பலரும் பயனடைந்திருப்பது பாராட்டுக்குறியது என்றாலும் அதை சரியாகப் பாராட்டுவது என்பது மிகக் கடினமான செயல்.

ஆனாலும் என் பணி சிறக்க அவர் பதிவில் நான் இட்ட பின்னூட்டக் கவிதையை இங்கே மறுபிரசுரம் செய்கிறேன்.

* * * *

ரொம்ப நன்றின்னு சொல்றது

ரொம்ப குறைவாப் படுது. ஆனாலும்

ரொம்ப நன்றின்னுதான் சொல்லவேண்டியிருக்குது!!

ரொம்ப நன்றி!!!



* * * *

கவிதையைப் பாராட்டியும் ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போனீங்கன்னா,

இது மாதிரி சமூகப் பணி அதிகமா செய்யிறதுக்கு வாய்ப்பா அமையும்.

Friday, March 20, 2009

முத்தான பத்து

ஒன்று



இரண்டு



மூன்று



நான்கு



ஐந்து



ஆறு



ஏழு



எட்டு



ஒன்பது



முத்து....




வணக்கம்.

Friday, February 27, 2009

என்னுள் மறைந்த நான் - சிறப்பு கவிதைக் கொத்து

என் கவிதை புனையும் திறமையை வெளிப்படுத்தும் பொருட்டும், கவுஜ எழுதுவது எப்படி என்று சுட்டிக்காட்டியதற்காகவும் இந்தக் கவிதைகளை (அல்லது கவுஜகளை) ஆசிப் அண்ணாச்சிக்கு டெடிகேட் செய்கிறேன். இது கவிதையா, கவுஜையா என்பதை அவரது முடிவுக்கு விட்டுவிடுகிறேன்.


எண்ணங்களை
இயம்பும்
வார்த்தைகள்
இல்லை.
என்ன சொல்ல ?



மனத்தோப்பின்
உள்ளே
நின்றது
தனிமரம்.
உண்மை.



மறந்து போவதும்
மறத்துப் போவதும்
மறைந்து போவதும்
நினைவுகள்.




பார்த்தேன்.
பார்க்கிறேன்.
பார்ப்பேன்.
பார்வை.



புதுமை சேர்ந்து
வந்தது
பழையது.
நவீனம்.



முகமறியா
இருட்டின்
முகவரி.
வெளிச்சம்.


உள்ளும்
வெளியும்
சமமாய்.
தேடல்.


கேட்காமல்
தேடாமல்
கிடைக்குமா.
எதிர்பார்ப்பு.



கண்கள்
மூடினாலும்
காட்சிகள்
விரியும்.
கனவு.


என்னைப் பற்றிய
எண்ணத்தில்
மறைந்து
போகிறேன்.
நான்.




அவ்வளவுதாங்க
நம்மளால
முடிஞ்சது.



எதுனா
சொல்லிட்டுப்
போங்க.


ரொம்ப
ஃபீலிங்கா
இருக்கும்...

Tuesday, February 17, 2009

பிப்ரவரி மாதத்து டிசம்பர்ப் பூக்கள்..

இயற்கை

இயற்கையாக இருப்பதால்
மட்டுமல்ல
இயற்கையாக இல்லாமல்
இருப்பதால்தான்
அது இயற்கை


வாழ்க்கை

விடியலின் பனித்துளியை
இழுத்தது சூரியன் ஒளி
மீண்டும் மறு நாள்
வந்தது பனித்துளி
தொடர்ந்தது சூரியன் ஒளி


பயணம்

பயணிகள்
புறப்படும் இடம்
சேரும் இடம்
எல்லாம் மாறும்
மாறாதது
பயணம் மட்டுமே


நினைவுகள்

நிஜத்தில்
நிழலாய்த்
தொடரும்
நிஜத்தின்
நிழல்...

டிசம்பர்ப் பூக்கள்

டிசம்பர்ப்பூக்கள்
டிசம்பர் மாதத்து
மலரல்ல
அது . . .
பிப்ரவரியிலும்
பூக்கும் . . .

Thursday, December 18, 2008

கிறுக்கலாய் சில கவிதைகள்....

முதன்மை

முதல் கவிதை

முதல் காதல்

முதல் முத்தம்

முடியும் வரை

தொடரும்...

===

முழுமை

அழகாய் நீ

அணிகலனாய் நான்

முயல்வோம்

முழுமை பெற

===


எதிர்பார்ப்பு

ஏங்குகிறது

எந்தன் நெஞ்சு

ஏந்திழையை

எதிர்பார்த்து

===

துணை

கனவும் கற்பனையும்

காதவழி வாராது

செயலும் சொல்லும்

செல்லும் எங்கெங்கும்

===

ஒன்று

நான் நீ

நீ நான்

நாம் நாம்

எல்லாம் ஒன்று