Showing posts with label தேர்தல். Show all posts
Showing posts with label தேர்தல். Show all posts

Tuesday, April 21, 2009

தேர்தல் - 'திரு'விளையாடல்

அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே!

இனிமையான இந்தியத் திருநாட்டின் எழுச்சிப் பாதையை வகுத்திட வேண்டி மக்களுக்காக மக்களே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டத்திலே நாம் இருக்கிறோம். இன்றைய ஓட்டு நாளைய நோட்டு. ஆம். இன்று போடும் ஓட்டு தான் நாளை நாம் பெறுவது மூன்று சைபர் நோட்டா, இரண்டு சைபர் நோட்டா, ஒரு சைபர் நோட்டா என்பதை முடிவு செய்யும்.

ஆகவே தவறாகப் போடும் நம் ஓட்டு நாம் நமக்கே வைத்துக் கொள்ளும் வேட்டு (ஆஹா, ஓட்டு, நோட்டு, வேட்டு.. அப்படியே தமிழ் கொஞ்சி விளையாடுதேப்பா....)

சரி விஷயத்திற்கு வருவோம். தேர்தல் காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறதென்பதை நீங்கள் அறிவீர்கள். சோழர்கள் காலத்தின் குடவோலை முறையைப் பற்றி உத்திரமேரூர் கல்வெட்டுகள் செப்புகின்றன [என்ன செய்வது. வரலாறு கலக்காமல் எழுத முடிவதில்லை:(( ]. தேர்தல்களில் இப்போது 'திரு'வின் விளையாட்டு அதிகமாகிவிட்டதால் இந்தப் பதிவுக்கு 'தேர்தல் திருவிளையாடல்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பல்வேறு உத்தரவுகளால் கொஞ்சம் அடக்கி வாசிக்கப் படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை என் கணிப்பில் மீண்டும் தி.மு.க கூட்டணிதான் அதிக இடங்களைப் பெறும். அதற்கான மூன்று காரணங்கள்.

1. எக்கச்சக்க தி.மு.க எதிர்ப்பு அலை:- ஆனால் இந்த எதிர்ப்பு அலையின் பலன் அதிமுக கூட்டணிக்குச் செல்லாமல் தடுத்து விடுவதில் தேமுதிக முதலிடத்திலும் மற்ற கட்சியினர் அடுத்துள்ள இடங்களிலும் இருக்கிறார்கள். ஆகவே எதிர்ப்பு வோட்டுகள் பலமாகப் பிரிந்து தி.மு.க. கூட்டணிக்குப் பலனளிக்கிறது. அடிப்படை ஓட்டுக்களுடன் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெறுவார்கள் என்பது என் கணிப்பு.

2. அமைப்பு ரீதியான 'சப்போர்ட்':- திமுக வார்டு முதல் வட்டம் மாவட்டம் வரை அமைப்பு ரீதியாக செம்மையாக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள் முதலிலேயே துவங்கி விட்டது. மற்ற கட்சிகளைப் பார்க்கும் போது தி.மு.க. வெகுவாக முன்னேறியிருப்பது கண்கூடு. ஆனால் ஆமை முயல் கதையாகாமல் தி.மு.க.வினர் பார்த்துக்கொள்ள வேண்டும்.

3. மாநில அரசின் வாழ்வாதாரப் பிரச்சினை:- தி.மு.க. மாநிலத்தில் காங்கிரசைச் சார்ந்தே உள்ளது. ஆகவே மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்க உதவினால்தான் மாநில அரசு நிலைக்கும் என்ற காங்கிரசைக் கை கழுவ முடியாத சூழல். ஆகவே காங்கிரசில் எவ்வளவு குழப்பமேற்பட்டாலும் தி.மு.க அவற்றையெல்லாம் சரிகட்ட வேண்டிய நிலை.

இன்றைய நிலையில் குறைந்த பட்சம் 35 தொகுதிகளாவது திமுக கூட்டணிக்குக் கிடைக்கும் என எதிர் பார்க்கலாம். எல்லாம் மே 16 அன்று தெரிந்து விடுகிறது.

Thursday, April 16, 2009

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

காங்கிரசுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பதினாறு தொகுதிகளை திமுக ஒதுக்கியது. இந்த பதினாறு தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. அதன் பேரில் வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணி கடந்த பல நாட்களாக நடந்து வருகிறது.


இதனிடையில் நாளை பதினேழாம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வரும் பதினெட்டாம் தேதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெறவுள்ளது.


இருபத்து நான்காம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைகிறது.


என் கவலையெல்லாம் இருபத்து நான்காம் தேதிக்குள் வேட்பாளர்களை அறிவித்து அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவிட வேண்டுமே என்பதுதான்:((