நேற்றைய டிராஃபிக் ஜாம் தான் சென்னை வரலாற்றிலேயே முதன் முறையாக என்று சொல்லக்கூடிய வகையில் அமைந்திருந்த ஜாமாகும். சென்னையில் நேற்று கடும் மழையுடன் டிராஃபிக் ஜாமும் சேர்ந்து கொண்டது.
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல குறைந்தது 3 முதல் 5 மணி நேரங்களானது.
அம்பத்தூரில் மாலை 5 மணிக்குப் புறப்பட்ட ஒருவர் தாம்பரம் சேரும் போது மணி இரவு பனிரெண்டரை.
பலரும் பேருந்து, தொடர்வண்டி, விமானம் முதலியவற்றைத் தவறவிட்டனர். இவர்களில் பெரும்பாலோர் தீபாவளிக்காக ஊருக்குச் செல்பவர்களாவார்கள்.
இது தான் சென்னை வரலாற்றிலேயே முதன் முறையாக என்று சொல்லக்கூடிய வகையில் அமைந்திருந்த ஜாமாகும்.
அருஞ்சொற்பொருள் : ஜாம் - கூழ்.