Showing posts with label பத்து. Show all posts
Showing posts with label பத்து. Show all posts

Friday, February 20, 2009

பத்து கேள்விகள் கேட்பவர்களிடம் பத்து கேள்விகள்..

தொற்று வியாதி மற்ற இடங்களில் பரவுகிறதோ இல்லையோ, வலையுலகில், பதிவுலகில் அதிவேகமாகப் பரவி விடுகிறது. பத்து கேள்விகள் போடாவிட்டால் நாம் நம் இமாலயக் கடமையிலிருந்து தவறிவிடுகிறோமோ என்ற அச்சம் எழுந்துவிடுகிறது. ஆகவே நாமும் ஜோதியில் ஐக்கியமாகிவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் வந்தவை இந்தக் கேள்விக்கணைகள்.


கேள்வி கேட்பது என்று முடிவு செய்தவுடந்தான் இந்த கஷ்டம் தெரிந்தது யாரிடம் கேட்பது. எல்லோரும் எல்லாரிடமும் கேட்டுவிட்டார்களே. அடடடடடா.. தலையைப் பிய்த்துக் கொண்டு நான் கடவுள் ஆர்யா போசில் யோசித்ததில் உதயமானதுதான் கேள்வி கேட்பவரிடமே கேள்வி கேட்பது என்ற ஐடியா..


இப்போ ஸ்ட்ரெயிட்டா கேள்விக்கு போகலாம்


1. உங்க கேள்விகளெல்லாம் 10க்குள்ளயே முடிச்சுக்கிறீங்களே அதுக்கு மேல இல்லையா?


2. அப்படி இருக்குதுன்னு சொன்னா அதை ஏன் டிஸ்கில போட மாட்டேன்றீங்க?


3. ஏன் மனுஷங்களையே கேள்வி கேக்கறீங்க. ஆடு மாடு, மெஷின் ரயில் பஸ்னு நெறய இருக்கே இவங்களப்பாத்து கேக்க மாட்டீங்களா?


4. பதில் சொல்றவங்களுக்கு ஏன் பரிசு குடுக்க மாட்டேன்றீங்க? உங்களுக்கு பதில் வேணாமா?


5. எப்படி யோசிச்சு யோசிச்சு கேள்வி கேக்கறீங்க?


6. ஒரே கேள்வியே மாத்தி மாத்தி கேக்கறா மாதிரியிருக்கே ஏன்?


7. கேள்வியெல்லாம் மொக்கையாவே இருக்கே ஏன்?


8. எனக்கு கேள்வி கேக்குற உரிமையிருக்கா?


9. நான் ஜோதியில ஐக்கியமாகிட்டேனா?

10. இந்த பதிவு போட்டதுனால இந்த கேள்விய நான் என்னையே கேட்டுக்கிட்டதா ஆகுமா?



நான் கேள்வியோட நிக்க மாட்டேன்.

பதில் எதிர்பார்ப்பேன்.

தயவு செய்து பதில் சொல்லுங்க.

பதில் சொல்லுங்க.

பதில் சொல்லுங்க.



(நம்ம சோலி முடிஞ்சுது. எங்கப்பா கோலி சோடா? (இது கேள்வில வராது. ஒரு ரைமிங்கா இருக்கட்டுமேன்னு போட்டது)