ஒரு ஊர். அதில் இரு பங்காளிக் குடும்பங்கள். அவர்கள் தான் அந்த ஊர் நாட்டாமைகள். சின்ன நாட்டாமை இறந்துவிட பெரிய நாட்டாமை தம்பியின் நாட்டாமைத் தனத்தையும் சேர்த்து கவனித்து வருகிறார். தம்பியின் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்களுக்குரிய நாட்டாமை உரிமையை அளித்து விடுகிறார்.
இதில் பெரிய நாட்டாமையின் மகனுக்கு ஏக பொறாமை. எப்படியாவது சித்தப்பா மகன்களை ஏமாற்றி அவர்களுடைய நாட்டாமையைப் பறித்துவிடவேண்டுமென்று தன் தாய்மாமனுடன் சதிசெய்கிறான். அதன் படி அவர்களை ஏமாற்றி ஊரை விட்டுத் துரத்தியும் விடுகிறான்.
காலங்கள் பல கடந்த பின், மீண்டும் ஊருக்குத் திரும்பும் தம்பி பிள்ளைகள், தங்கள் நாட்டாமைத்தனத்தைக் கேட்கின்றனர். ஆனால் பெரிய நாட்டாமையின் மகன் அவர்களை அவமானப்படுத்தி விடுகிறான். ஊரில் சிலர் சின்ன நாட்டாமையின் மகன்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
சமரசம் செய்ய ஒரு ஜகஜால கில்லாடி வருகிறார். அவருக்கும் அல்வா கொடுக்கிறான் பெரிய நாட்டாமையின் மகன். இனி பேசிப்பயனில்லை என்று சண்டைக்கு அழைக்கின்றனர் சின்ன நாட்டாமையின் மகன்கள். ஜகஜால கில்லாடி இவர்கள் பக்கம்.
இந்த ஜஜாகியின் தில்லாலங்கடி வேலைகள் மூலமாக சின்ன நாட்டாமையின் மகன்கள் பெரிய நாட்டாமையின் மகனையும் மற்றவர்களையும் அழித்து விடுகின்றனர். பெரிய நாட்டாமை, மகன் இறந்த துயரத்தில் ஊரை விட்டே சென்று விடுகிறார்.
இறுதியில் மொத்த ஊரும் சின்ன நாட்டாமையின் மகன்களின் கட்டுப்பாட்டில் வருகிறது.
பி.கு:- கதையைப் படித்து விட்டு தயை கூர்ந்து உங்கள் விமர்சனங்களை பின்னூட்டங்களாகத் தெரிவிக்கவும். இந்தக் கதையை திரைப்படமாக எடுக்க விரும்புவோர்க்கு திரைக்கதை அமைத்துத் தரப்படும்!
Tuesday, August 24, 2010
Monday, August 23, 2010
Wednesday, August 18, 2010
திரைக்கதை எழுதுவது எப்படி - 7 : கனவு காணுங்கள்!
முன்னுரை:- சற்றேறக்குறைய ஒரு வருடத்திற்கு முன் நின்று விட்ட இந்தத் தொடரை மீண்டும் இப்போது தொடர்கிறேன். தொடர்ச்சியைக் கருத்தில் கொண்டு மீண்டும் ஒரு முறை பழைய பதிவுகளைப் படித்தல் நலம்.
===
திரைக்கதை எழுதுவது என்பது ஒரு செயல் அல்ல. அது பல செயல்களின் தொகுப்பு. A series of events. நான் ஒரு நவீன கட்டிடத்தில் பணி புரிகிறேன். 24லட்சம் சதுர அடி அளவில் கட்டப்பட்டுள்ள் கட்டிடம் அது. இந்தக் கட்டிடத்தை கட்டி முடிப்பது என்பது ஒருவர் மட்டுமே செய்யக் கூடியதல்ல. பல்வேறு துறை வல்லுனர்களின் பங்களிப்பும் தேவைப்படும்.
அடிப்படையாக, ஒரு rendering அளிப்போம். அதாவது கட்டிடம் முடியும் போது அது எப்படி இருக்கும் என்பதைச் சொல்லும் படம். இனி Backwork செய்ய வேண்டும். பிறகு, கட்டிட வரைபடம். வரைபடத்தின் டீட்டெயில்கள். பல்வேறு கோணங்களில் அதே வரைபடத்தின் நகல்கள் ஆகியவை தயாரிக்கப்படும்.
Facade எனப்படும் வெளிப்புறம் எவ்வாறு இருக்க வேண்டும். அதற்குத் தேவையான சப்போர்ட் என்ன? கட்டிடத்தின் strength, column, pillar, beam, post tensioning ஆகிய சிவில் எஞ்சினீரிங் சம்பந்தப்பட்ட விளக்கங்களும், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் உபகரணங்கள் மற்றும் சாதனங்களின் தேவைகளும், விவரமாக எழுதப்பட வேண்டும். பிறகு இவை எவ்வாறு எப்போது கிடைக்க வேண்டும் என்பதும் முடிவு செய்ய வேண்டும். இதற்கு ஆகும் செலவு, அதை எப்படி செய்வது? கடன் வாங்க வேண்டுமா? சொந்தப்பணத்திலா? ஆகிய பல்வேறு கேள்விகள், பதில்கள், விளக்கங்கள். ஏனைய, ஏனைய...
இதே போல்தான் திரைப்படம் எடுப்பதும். திரைக்கதை ஒரு கதையை சொல்லும் விதம். கதை என்பது ஒரு கட்டிடம் என்று எடுத்துக்கொண்டால் நமது கட்டிடத்தை தனித்துவமாகத் தெரிய வைக்கும் செயல் திரைக்கதை எனலாம். அப்படித் தனித்துவமாகத் தெரிய வைக்க அதிக செலவும் செய்யலாம். அல்லது ஒரு சில சிறிய மாற்றங்கள் மூலம் மிக அழகாகவும் தெரியச் செய்யலாம்.
ஆனால் ஒன்று, திரைக்கதைக்கென்று ஒரு இலக்கணம் இருக்கிறது. அதன் வரையறைக்குட்பட்டே அனைவரும் திரைக்கதை எழுதுகின்றனர். ஒரு சிலர் புதிய முயற்சிகளைச் செய்தாலும், முன்னர் நான் கூறிய முறைகளில் திரைக்கதைகளை அமைக்கிறார்கள்.
ஃ ஃ ஃ ஃ ஃ
திரைக்கதை எழுத மிக முக்கியத் தேவை உங்கள் visualization திறமை. காட்சிப்படுத்துதல் அல்லது கனவு காணுதல். ஒரு இயக்குனர் தன் நடிகர் நடிகையிடம் தான் நினைப்பதை எதிர்ப்பார்க்கிறார். அதனால்தான் அவரது திருப்திக்கு ஏற்றார்ப்போல் காட்சி அமையும் வரை ரீடேக் வாங்குகிறார்.
தாவணிக்கனவுகளில் ஒரு காட்சி. இயக்குனர் வசன கர்த்தாவிடம், தங்கை திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை காட்சிப் படுத்துமாறு கேட்க அந்த வசன கர்த்தா பழைய முறையில் தூக்கு, விஷம் என்று எழுதுவார். அதை மறைவிலிருந்து பார்க்கும் பாக்கியராஜ் அருமையாக 'டபுள் பிரமோஷன்' கான்சப்டை இதில் புகுத்துவார். அங்கே நிற்கிறது திரைக்கதையாசிரியரின் தனித்துவமும் விஷுவலைசேஷனும். ஆனால் அதே டயலாக் இன்றைய காலகட்டத்தில் எடுபடாதென்பது வேறு விஷயம்! அதனால்தான் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த, டி.ராஜேந்தர், பாக்கியராஜ், பாரதிராஜா, பாலச்சந்தர் ஆகியோர் இருக்கும் இடம் தெரியவில்லை!!
இன்று செண்டிமெண்ட் சீன் ஒன்று வைத்தாலும் படம் அவுட்டாகிவிடும் என்ற நிலை உள்ளது. இன்றைய தேதியில் கடைசியில் வெற்றி பெற்ற அண்ணன் தங்கை செண்டிமெண்ட் படம் கிழக்குச் சீமையிலே. அது கூட புதிய கதைக் களத்திற்காகத்தான் வெற்றி பெற்றது.
ஒரு காலத்தில் புராணப்படங்களும், பக்திப் படங்களும் வந்தன (எம்.கே.டி, பி.யூ.சி). அடுத்து ஏழ்மை ஒழிப்பு (எம்.ஜி.ஆர்), அடுத்து புரட்சிகர கருத்துக்கள், கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையிலான படங்கள்(ருத்ரைய்யா, பாலச்சந்தர்), கிராமத்துக் கதைகள் (பாரதிராஜா, பாக்கியராஜ், ராமராஜன்). ஆனால் இவை யாவும் ஒரு காலத்திற்கு மேல் தொடர்ந்து நிலைக்க வில்லை.
இன்று வரும் கிராமத்துப் படங்களும் அன்று வந்த கிராமத்துப் படங்களும், வெவ்வேறான கிராமங்களை வெளிக்கொணர்கின்றன. ராவணன் வெற்றிபெறாததற்குக் காரணம் அந்த கிராமத்தை நம்மோடு தொடர்பு படுத்த முடியவில்லை.
ஆக, விஷுவலைசேஷனும் காலத்திற்கேற்ப இருக்கவேண்டுமே ஒழிய பழையதைப் போட்டால் யாரும் காசு கொடுத்து சாப்பிட மாட்டார்கள்!
அன்றும், இன்றும், என்றும் வற்றாத ஜீவ நதிகள் மூன்று. அவை, காதல், ஆக்ஷன், காமெடி...
ஆக உங்கள் கதையை
1. விஷுவலைஸ் செய்யுங்கள்.
2. நிகழ் காலத்திற்கு ஏற்ப கதைக்களனைத் தேர்ந்தெடுங்கள்.
3. மூன்று ஜீவ நதிகளையும் இணையுங்கள்!!
மீண்டும் சந்திப்போம்.
===
திரைக்கதை எழுதுவது என்பது ஒரு செயல் அல்ல. அது பல செயல்களின் தொகுப்பு. A series of events. நான் ஒரு நவீன கட்டிடத்தில் பணி புரிகிறேன். 24லட்சம் சதுர அடி அளவில் கட்டப்பட்டுள்ள் கட்டிடம் அது. இந்தக் கட்டிடத்தை கட்டி முடிப்பது என்பது ஒருவர் மட்டுமே செய்யக் கூடியதல்ல. பல்வேறு துறை வல்லுனர்களின் பங்களிப்பும் தேவைப்படும்.
அடிப்படையாக, ஒரு rendering அளிப்போம். அதாவது கட்டிடம் முடியும் போது அது எப்படி இருக்கும் என்பதைச் சொல்லும் படம். இனி Backwork செய்ய வேண்டும். பிறகு, கட்டிட வரைபடம். வரைபடத்தின் டீட்டெயில்கள். பல்வேறு கோணங்களில் அதே வரைபடத்தின் நகல்கள் ஆகியவை தயாரிக்கப்படும்.
Facade எனப்படும் வெளிப்புறம் எவ்வாறு இருக்க வேண்டும். அதற்குத் தேவையான சப்போர்ட் என்ன? கட்டிடத்தின் strength, column, pillar, beam, post tensioning ஆகிய சிவில் எஞ்சினீரிங் சம்பந்தப்பட்ட விளக்கங்களும், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் உபகரணங்கள் மற்றும் சாதனங்களின் தேவைகளும், விவரமாக எழுதப்பட வேண்டும். பிறகு இவை எவ்வாறு எப்போது கிடைக்க வேண்டும் என்பதும் முடிவு செய்ய வேண்டும். இதற்கு ஆகும் செலவு, அதை எப்படி செய்வது? கடன் வாங்க வேண்டுமா? சொந்தப்பணத்திலா? ஆகிய பல்வேறு கேள்விகள், பதில்கள், விளக்கங்கள். ஏனைய, ஏனைய...
இதே போல்தான் திரைப்படம் எடுப்பதும். திரைக்கதை ஒரு கதையை சொல்லும் விதம். கதை என்பது ஒரு கட்டிடம் என்று எடுத்துக்கொண்டால் நமது கட்டிடத்தை தனித்துவமாகத் தெரிய வைக்கும் செயல் திரைக்கதை எனலாம். அப்படித் தனித்துவமாகத் தெரிய வைக்க அதிக செலவும் செய்யலாம். அல்லது ஒரு சில சிறிய மாற்றங்கள் மூலம் மிக அழகாகவும் தெரியச் செய்யலாம்.
ஆனால் ஒன்று, திரைக்கதைக்கென்று ஒரு இலக்கணம் இருக்கிறது. அதன் வரையறைக்குட்பட்டே அனைவரும் திரைக்கதை எழுதுகின்றனர். ஒரு சிலர் புதிய முயற்சிகளைச் செய்தாலும், முன்னர் நான் கூறிய முறைகளில் திரைக்கதைகளை அமைக்கிறார்கள்.
ஃ ஃ ஃ ஃ ஃ
திரைக்கதை எழுத மிக முக்கியத் தேவை உங்கள் visualization திறமை. காட்சிப்படுத்துதல் அல்லது கனவு காணுதல். ஒரு இயக்குனர் தன் நடிகர் நடிகையிடம் தான் நினைப்பதை எதிர்ப்பார்க்கிறார். அதனால்தான் அவரது திருப்திக்கு ஏற்றார்ப்போல் காட்சி அமையும் வரை ரீடேக் வாங்குகிறார்.
தாவணிக்கனவுகளில் ஒரு காட்சி. இயக்குனர் வசன கர்த்தாவிடம், தங்கை திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருக்கிறாள் என்பதை காட்சிப் படுத்துமாறு கேட்க அந்த வசன கர்த்தா பழைய முறையில் தூக்கு, விஷம் என்று எழுதுவார். அதை மறைவிலிருந்து பார்க்கும் பாக்கியராஜ் அருமையாக 'டபுள் பிரமோஷன்' கான்சப்டை இதில் புகுத்துவார். அங்கே நிற்கிறது திரைக்கதையாசிரியரின் தனித்துவமும் விஷுவலைசேஷனும். ஆனால் அதே டயலாக் இன்றைய காலகட்டத்தில் எடுபடாதென்பது வேறு விஷயம்! அதனால்தான் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த, டி.ராஜேந்தர், பாக்கியராஜ், பாரதிராஜா, பாலச்சந்தர் ஆகியோர் இருக்கும் இடம் தெரியவில்லை!!
இன்று செண்டிமெண்ட் சீன் ஒன்று வைத்தாலும் படம் அவுட்டாகிவிடும் என்ற நிலை உள்ளது. இன்றைய தேதியில் கடைசியில் வெற்றி பெற்ற அண்ணன் தங்கை செண்டிமெண்ட் படம் கிழக்குச் சீமையிலே. அது கூட புதிய கதைக் களத்திற்காகத்தான் வெற்றி பெற்றது.
ஒரு காலத்தில் புராணப்படங்களும், பக்திப் படங்களும் வந்தன (எம்.கே.டி, பி.யூ.சி). அடுத்து ஏழ்மை ஒழிப்பு (எம்.ஜி.ஆர்), அடுத்து புரட்சிகர கருத்துக்கள், கம்யூனிச சித்தாந்தத்தின் அடிப்படையிலான படங்கள்(ருத்ரைய்யா, பாலச்சந்தர்), கிராமத்துக் கதைகள் (பாரதிராஜா, பாக்கியராஜ், ராமராஜன்). ஆனால் இவை யாவும் ஒரு காலத்திற்கு மேல் தொடர்ந்து நிலைக்க வில்லை.
இன்று வரும் கிராமத்துப் படங்களும் அன்று வந்த கிராமத்துப் படங்களும், வெவ்வேறான கிராமங்களை வெளிக்கொணர்கின்றன. ராவணன் வெற்றிபெறாததற்குக் காரணம் அந்த கிராமத்தை நம்மோடு தொடர்பு படுத்த முடியவில்லை.
ஆக, விஷுவலைசேஷனும் காலத்திற்கேற்ப இருக்கவேண்டுமே ஒழிய பழையதைப் போட்டால் யாரும் காசு கொடுத்து சாப்பிட மாட்டார்கள்!
அன்றும், இன்றும், என்றும் வற்றாத ஜீவ நதிகள் மூன்று. அவை, காதல், ஆக்ஷன், காமெடி...
ஆக உங்கள் கதையை
1. விஷுவலைஸ் செய்யுங்கள்.
2. நிகழ் காலத்திற்கு ஏற்ப கதைக்களனைத் தேர்ந்தெடுங்கள்.
3. மூன்று ஜீவ நதிகளையும் இணையுங்கள்!!
மீண்டும் சந்திப்போம்.
Monday, August 16, 2010
வானவில் 16.08.2010
நம் நாடு:-
இந்தியாவின் 64வது சுதந்திர தினம் வழக்கம் போல் வரலாறு காணாத பாதுகாப்புடன் கொண்டாடப்பட்டது. காஷ்மீரில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இங்கு சுதந்திரம் யாருக்கு? யாருக்கோ...
===
சவால்:-
இலவச பம்புசெட் வழங்கப்போவதாக வந்த புதிய அறிவிப்பு நிச்சயம் 14ம் தேதி அம்மையார் திருச்சியில் நிகழ்த்திய உரையின் எதிரொலிதான் என்பதில் சந்தேகமில்லை. இதே போக்கில் போனால் மக்கள் அம்மையாரை எதிர்க்கட்சியாகவே இருக்க வைத்து தேவையானதைப் பெற்றுக் கொள்வார்கள் போலிருக்கிறது! எதற்கும் அ.தி.மு.க. சற்று முன் சாக்கிரதையுடன் செயல்படுவது நல்லது.
===
காமன்வெல்த் போட்டிகள் துவங்குவது சந்தேகமே. அப்படியே துவங்கினாலும் நல்ல விதமாக நடைபெறுவது சற்று சிரமம்தான். கட்டுமானத்துறையில் பணிபுரியும் நான், தற்போது வெளியாகும் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, புதிய தலைமைச் செயலகப் பாணியில் ஒப்பேற்றலாமே ஒழிய முழு அளவில் விளையாட்டுக்களை நடத்தத் தகுதியற்றவையாகவே காட்சியளிக்கின்றன இந்த மைதானங்களும் விளையாட்டரங்கங்களும். எந்நேரத்திலும் மாற்றுத் தகவல் வரலாம்!
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே...
===
ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்:-
இலங்கைக்குத் கருணாஸ் செல்வதைத் தடுத்தவர்கள், இலங்கையில் நடக்கும் துடுப்பாட்டப் போட்டியை தடுக்காதது ஏனோ? அதில் பங்கு பெறும் முரளி விஜயைக் கூட கண்டிக்கவில்லையே? குறைந்த பட்சம் அந்தத் தொடரை ஒளிபரப்பும் தொலைக்காட்சி அலைவரிசையைக் கூட கண்டிக்கவில்லையே என்று அடுக்கடுக்காகக் கேள்வி கேட்க நான் ஒன்றும் கே.. அல்ல. ஆகவே நான் என் வழியில் போகின்றேன்!
===
வலையுலகில் அவ்வப்போது நடக்கும் பதிவர்களுக்கிடையேயான மோதல்கள் எள்ளளவும் யாருக்கும் நன்மை பயப்பதில்லை. இது மிக அதிக எதிர் விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது. பதிவர்கள் இப்போது ஒருவரை ஒருவர் முழுமையாக நம்புவதில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை.
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது...
===
மெக்சிகோ கடலில் ஏற்பட்ட எண்ணெய்க்கசிவு அடங்குவதற்குள் மும்பைத் துறைமுகத்தை ஒட்டியே இரு கப்பல்களும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் நிகழ்ந்த எண்ணெய்க்கசிவு அந்தப் பகுதியின் இயற்கை வளத்தைப் பாதித்துள்ளதாகச் சிலரும் அப்படியொன்றும் பாதிப்பில்லையென்று அமைச்சரும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒருதுளியானாலும் பெருவெள்ளமானாலும், விஷம் விஷமே.
உலகை அழிக்க யாரும் புதிதாய் இனி பிறக்கத் தேவையில்லை.
===
கொள்ளையிலும் கொள்ளை பகல் கொள்ளை!
சென்னையில் உள்ள ஹோட்டல்களைப் போல் கொள்ளையடிக்கும் கும்பல் வேறு எந்த ஊரிலாவது இருக்கிறதா என்பது சந்தேகமே. நேற்று (15.08.2010) அன்று மாலை வடபழனி பேருந்து நிலையம் அருகே உள்ள நம்மவீடு வசந்த பவனுக்கு சென்றோம். மாஸ்டர் இல்லாததால் சில உணவு வகைகள் இல்லை என்றார்கள். ரவா தோசை கேட்டால் வீட்டில் செய்யும் மைதா தோசையை எண்ணை வழிய கொண்டுவந்து கொடுக்கிறார்கள். பூரி கேட்டல் அதுவும் அப்பளம் போல் இருக்கிறது ஆனால் மிகவும் சிறிய வடிவில்!. விலை என்னவோ 35 ரூபாய், 40 ரூபாய் என்று பட்டப் பகல் கொள்ளை. புகார் அளிக்கலாம் என்று மேனேஜரைப் பார்க்கச் சென்றால் அவர் இல்லையாம்! வெறும் சேர் டேபிள்தான்.
இங்கு மட்டுமல்ல அனைத்து இடங்களுமே இப்படித்தான். அட பணத்தை வாங்குகிறீர்களே அதற்கு ஒழுங்காக ஏதாவது போடவேண்டாமா? இப்படி வரும் பணம் உங்களிடத்தில் நிலைக்குமா? எப்படி வந்ததோ அப்படியே போய்விடும். இன்றைய தேதியில் சென்னையில் ஓட்டலுக்குச் செல்லும் அனைவரின் மனமும் இப்படித்தான் சாபமிடும். இதை உணர்ந்து திருந்துவார்களா??
இந்தியாவின் 64வது சுதந்திர தினம் வழக்கம் போல் வரலாறு காணாத பாதுகாப்புடன் கொண்டாடப்பட்டது. காஷ்மீரில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இங்கு சுதந்திரம் யாருக்கு? யாருக்கோ...
===
சவால்:-
இலவச பம்புசெட் வழங்கப்போவதாக வந்த புதிய அறிவிப்பு நிச்சயம் 14ம் தேதி அம்மையார் திருச்சியில் நிகழ்த்திய உரையின் எதிரொலிதான் என்பதில் சந்தேகமில்லை. இதே போக்கில் போனால் மக்கள் அம்மையாரை எதிர்க்கட்சியாகவே இருக்க வைத்து தேவையானதைப் பெற்றுக் கொள்வார்கள் போலிருக்கிறது! எதற்கும் அ.தி.மு.க. சற்று முன் சாக்கிரதையுடன் செயல்படுவது நல்லது.
===
காமன்வெல்த் போட்டிகள் துவங்குவது சந்தேகமே. அப்படியே துவங்கினாலும் நல்ல விதமாக நடைபெறுவது சற்று சிரமம்தான். கட்டுமானத்துறையில் பணிபுரியும் நான், தற்போது வெளியாகும் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, புதிய தலைமைச் செயலகப் பாணியில் ஒப்பேற்றலாமே ஒழிய முழு அளவில் விளையாட்டுக்களை நடத்தத் தகுதியற்றவையாகவே காட்சியளிக்கின்றன இந்த மைதானங்களும் விளையாட்டரங்கங்களும். எந்நேரத்திலும் மாற்றுத் தகவல் வரலாம்!
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே...
===
ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்:-
இலங்கைக்குத் கருணாஸ் செல்வதைத் தடுத்தவர்கள், இலங்கையில் நடக்கும் துடுப்பாட்டப் போட்டியை தடுக்காதது ஏனோ? அதில் பங்கு பெறும் முரளி விஜயைக் கூட கண்டிக்கவில்லையே? குறைந்த பட்சம் அந்தத் தொடரை ஒளிபரப்பும் தொலைக்காட்சி அலைவரிசையைக் கூட கண்டிக்கவில்லையே என்று அடுக்கடுக்காகக் கேள்வி கேட்க நான் ஒன்றும் கே.. அல்ல. ஆகவே நான் என் வழியில் போகின்றேன்!
===
வலையுலகில் அவ்வப்போது நடக்கும் பதிவர்களுக்கிடையேயான மோதல்கள் எள்ளளவும் யாருக்கும் நன்மை பயப்பதில்லை. இது மிக அதிக எதிர் விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது. பதிவர்கள் இப்போது ஒருவரை ஒருவர் முழுமையாக நம்புவதில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை.
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது...
===
மெக்சிகோ கடலில் ஏற்பட்ட எண்ணெய்க்கசிவு அடங்குவதற்குள் மும்பைத் துறைமுகத்தை ஒட்டியே இரு கப்பல்களும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் நிகழ்ந்த எண்ணெய்க்கசிவு அந்தப் பகுதியின் இயற்கை வளத்தைப் பாதித்துள்ளதாகச் சிலரும் அப்படியொன்றும் பாதிப்பில்லையென்று அமைச்சரும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒருதுளியானாலும் பெருவெள்ளமானாலும், விஷம் விஷமே.
உலகை அழிக்க யாரும் புதிதாய் இனி பிறக்கத் தேவையில்லை.
===
கொள்ளையிலும் கொள்ளை பகல் கொள்ளை!
சென்னையில் உள்ள ஹோட்டல்களைப் போல் கொள்ளையடிக்கும் கும்பல் வேறு எந்த ஊரிலாவது இருக்கிறதா என்பது சந்தேகமே. நேற்று (15.08.2010) அன்று மாலை வடபழனி பேருந்து நிலையம் அருகே உள்ள நம்மவீடு வசந்த பவனுக்கு சென்றோம். மாஸ்டர் இல்லாததால் சில உணவு வகைகள் இல்லை என்றார்கள். ரவா தோசை கேட்டால் வீட்டில் செய்யும் மைதா தோசையை எண்ணை வழிய கொண்டுவந்து கொடுக்கிறார்கள். பூரி கேட்டல் அதுவும் அப்பளம் போல் இருக்கிறது ஆனால் மிகவும் சிறிய வடிவில்!. விலை என்னவோ 35 ரூபாய், 40 ரூபாய் என்று பட்டப் பகல் கொள்ளை. புகார் அளிக்கலாம் என்று மேனேஜரைப் பார்க்கச் சென்றால் அவர் இல்லையாம்! வெறும் சேர் டேபிள்தான்.
இங்கு மட்டுமல்ல அனைத்து இடங்களுமே இப்படித்தான். அட பணத்தை வாங்குகிறீர்களே அதற்கு ஒழுங்காக ஏதாவது போடவேண்டாமா? இப்படி வரும் பணம் உங்களிடத்தில் நிலைக்குமா? எப்படி வந்ததோ அப்படியே போய்விடும். இன்றைய தேதியில் சென்னையில் ஓட்டலுக்குச் செல்லும் அனைவரின் மனமும் இப்படித்தான் சாபமிடும். இதை உணர்ந்து திருந்துவார்களா??
Monday, August 9, 2010
புதியது: இளையபல்லவன்.காம்
என் இனிய வலையுலக மக்களே! உங்கள் அனைவருக்கும் இனிய ஆகஸ்டு 9ம் நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் வாழ்க.
Welcome to the new http://www.ilayapallavan.com
தொட்டணைத்தூறும் மணற்கேணி என்றார் திருவள்ளுவர். எவ்வளவு எடுக்கின்றோமோ அவ்வளவும் சுரக்கும். கடந்த சிலமாதங்களாகவே என் அறிவின் ஊற்று தூர்க்கப்படாமல் மூடிவிட்டது! இப்போதுதான் தூர் வாரிக்கொண்டிருக்கிறேன்.
இதை மேலும் துரிதப்படுத்தும் பொருட்டும், மீண்டும் எழுத வரும் ஒரு முயற்சியின் முதற்கட்டமாகவும், என் வலைத்தளத்தை பிளாக்கரிலிருந்து, டாட் காம் ஆக மாற்றியிருக்கிறேன். டாட் காமிற்கு மாற்ற செலவு செய்துவிட்டதால் அதற்காகவாவது எழுதுவேன் என்று நினைக்கிறேன் (கணக்காளன் அல்லவா !)
என் அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு நண்பர் டெம்ப்ளேட் முதலியவைகளை மாற்றியமைத்துத்தருவதாகக் கூறியிருக்கிறார். ஆக சீவி முடித்து சிங்காரித்து சிவந்த நெற்றியில் பொட்டும் வைத்து உங்கள் முன்னால் வருவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது இளையபல்லவனின் காஞ்சித்தலைவன் தளம்.
மீண்டும் வலையில் என் எழுத்துக்கள் நிறைய சிக்க வேண்டுமென்பதே என் அவா. தொடர்ந்து எழுதுவேன் என்று நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை!!
என்றும் மாறா நன்றிகளுடன்,
இளைய பல்லவன்.
Welcome to the new http://www.ilayapallavan.com
தொட்டணைத்தூறும் மணற்கேணி என்றார் திருவள்ளுவர். எவ்வளவு எடுக்கின்றோமோ அவ்வளவும் சுரக்கும். கடந்த சிலமாதங்களாகவே என் அறிவின் ஊற்று தூர்க்கப்படாமல் மூடிவிட்டது! இப்போதுதான் தூர் வாரிக்கொண்டிருக்கிறேன்.
இதை மேலும் துரிதப்படுத்தும் பொருட்டும், மீண்டும் எழுத வரும் ஒரு முயற்சியின் முதற்கட்டமாகவும், என் வலைத்தளத்தை பிளாக்கரிலிருந்து, டாட் காம் ஆக மாற்றியிருக்கிறேன். டாட் காமிற்கு மாற்ற செலவு செய்துவிட்டதால் அதற்காகவாவது எழுதுவேன் என்று நினைக்கிறேன் (கணக்காளன் அல்லவா !)
என் அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு நண்பர் டெம்ப்ளேட் முதலியவைகளை மாற்றியமைத்துத்தருவதாகக் கூறியிருக்கிறார். ஆக சீவி முடித்து சிங்காரித்து சிவந்த நெற்றியில் பொட்டும் வைத்து உங்கள் முன்னால் வருவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது இளையபல்லவனின் காஞ்சித்தலைவன் தளம்.
மீண்டும் வலையில் என் எழுத்துக்கள் நிறைய சிக்க வேண்டுமென்பதே என் அவா. தொடர்ந்து எழுதுவேன் என்று நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை!!
என்றும் மாறா நன்றிகளுடன்,
இளைய பல்லவன்.
Monday, April 12, 2010
எனக்குப் பிடித்த நடிகையர் 10/10 - பார்ட் 1


பிரிக்க முடியாததும், சேர்ந்தே இருப்பதுமாகிய தமிழும் திரையுலகமும் நம்மை என்றும் காப்பதாக!
"லாங்க் லாங்க் அகோ, சோ லாங்க் அகோ, நோ படி கேன் சே ஹவ் லாங்க் அகோ" என்ற ஆங்கிலப் பழமொழி(?!)க்கேற்ப என்றோ ஒரு காலத்தில் என்னை இந்தத் தொடருக்கு அழைத்த மாமனிதர் வாழ்க வளர்க!!
ஆனால் ஒன்று. என்னைப் போன்றவர்களிடம் உங்களுக்குப் பிடித்த பத்து நடிகைகளைப் பட்டியலிடுங்கள் என்று கேட்டால், என்ன செய்வது. இது நிச்சயமாக மாட்டிவிடும் வேலைதானே. பட்டியலில் இல்லாதவர்களிடம் திட்டு வாங்குவது நானா இவர்களா? பட்டியலில் இருப்பவர்களிடம் கூட எனக்கு ஏன் முதலிடம் தரவில்லை என்ற கேள்விக்கணைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருக்கிறதே, இதைப் பற்றியாவது சற்று சிந்தித்தார்களா? - என்றெல்லாம் கேட்கத் தோன்றினாலும், நமக்கு அவ்வளவு காட்சிமை (சீன்) இல்லை என்பதால், ஏதோ நம் பங்குக்கு பத்தைப் போட்டு ஒப்பேற்றுவோம்.
இதில் புதுமையைப் புகுத்தும் விதமாக நான்கு கால கட்டங்களாகப் பிரித்துக் கொண்டேன்.
ஒன்று 'ஓல்டு இஸ் கோல்டு',
இரண்டு 'கலர்ஃபுல் இஸ் சியர்ஃபுல்',
மூன்று 'சினிமாஸ்கோப் - லாட்ஸ் ஆஃப் ஸ்கூப்',
நான்கு - 'லேட்டஸ்ட் - டேஸ்டஸ்ட்'.
இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் " ஓல்டு இஸ் கோல்டு "
1. டி.ஆர்.ராஜகுமாரி
தமிழ்த் திரையுலகில் நம் பாட்டன், முப்பாட்டன்களைக் கட்டிப்போட்ட பெயர், டி.ஆர். ராஜகுமாரி. சந்திரலேகா ஒன்று போதும், இவர் பெயர் சொல்ல. எம்.கே.தியாகராஜ பாகவதரின் படங்கள் ஓடியதில் டி.ஆர். ராஜகுமாரிக்குப் பெரும் பங்குண்டு. இன்றளவும், நெம்பர் ஒன் வில்லி நடிகை டி.ஆர். ராஜகுமாரிதான்.
2. பத்மினி
நாட்டியப் பேரொளியின் பிற்காலப் படங்களில் அவ்வளவாக அவரால் ஜொலிக்க முடியாவிட்டாலும், அவரது முற்காலப் படங்கள் அவருக்கு நடிப்பில் அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தன. வஞ்சிக்கோட்டை வாலிபனில் வைஜயந்தியுடன் ஆடும் ஆட்டமும் பி.எஸ். வீரப்பாவின் 'சபாஷ் சரியான போட்டி'யும் மறக்க முடியுமா?
3. விஜயகுமாரி
விஜயகுமாரியின் 'தமிழ்' முகமும் வசன உச்சரிப்பும், ஆழ்ந்த நடிப்பும், மிகவும் சிறப்பானவை. அவரது பல படங்கள் கிளாசிக் மூவீஸ் வகையைச் சேர்ந்தவை. நானும் ஒரு பெண்ணாகட்டும், வானம்பாடியாகட்டும் அல்லது பிற படங்களாகட்டும், தன் நடிப்புத் திறமையால் சவாலான பாத்திரங்களை இயல்பாக நடித்துக் கொடுத்தவர். எஸ்.எஸ்.ஆருடன் இணைந்து நடித்தவை கூடுதல் வெற்றி கண்ட படங்கள்.
4. அஞ்சலி தேவி
நன்றாகத் துவங்கிய அவரது கேரியர், சிறந்த அம்மா கேரக்டராக வந்து முடிந்தது. அடுத்த வீட்டுப் பெண் முதலான பல படங்கள் பேர் சொல்லும் படங்கள். உன்னைக் கண் தேடுதே, 'எக்' என்று சொல்லும் ஒரு 'எக்'கில் கிக் இருப்பதை அன்னாள் ரசிகர்கள் ஒப்புக் கொள்வார்கள்!
5. பானுமதி
லேடி சூப்பர்ஸ்டார், என்ற பெயருண்டு இவருக்கு. பற்பல கண்டிஷன்கள் போட்ட ஒரே நடிகை இவர்தான். இவரது டயலாக் டெலிவரியும் மேனரிசமும் இவரது தன்னம்பிக்கையை எடுத்துக் காட்டின.
6. சரோஜாதேவி
கீச்சுக்குயில் சரோஜாதேவியை பட்டியலில் சேர்க்க வேண்டுமேயென்று சேர்த்திருக்கிறேன். பற்பல படங்கள் நடித்திருந்தாலும், என்னைப் பொறுத்த வரை, அவரது பெர்ஃபார்மன்ஸ் இன்னும் சற்று பெட்டராக இருக்கலாம். வேறொன்றும் சொல்வதற்கில்லை.
7. சாவித்ரி
சரோஜா தேவிக்குப் போட்ட கமெண்டே இவருக்கும் போடலாம்.
8. ஈ.வி.சரோஜா
ஒரு திறமையான ஆனால் சரியாகக் கவனிக்கப்படாத நடிகை. என் தங்கையில் அறிமுகமாகி, வீரத்திருமகன், குலேபகாவலி, படிக்காத மேதை என்று பற்பல படங்களில் நடித்தவர். இயக்குனர் டி.ஆர்.ராமண்ணாவின் மனைவி.
9. சச்சு
மற்றுமொரு திறமையான நடிகை, தடம் புரண்டு காமெடி நடிகையானது வரலாற்றுச் சோகம்.
10. தேவிகா
நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது என்பது வரை சரி. இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது என்பது எந்த ஊர் நியாயம் என்பது தெரியவில்லை. இருந்தாலும், ஆண்டவன் கட்டளை முதலான நல்ல படங்களில் நடித்துள்ளார்.
அடுத்த தலை முறை நடிகைகளைப் பற்றி, அடுத்த பதிவில்....
(மேற்கண்டவற்றில் ஏதேனும் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள். திருத்திக்கொள்கிறேன்.)