மௌனம்...
பேசாமல் பேசும்
கவனம்...
எண்ணங்கள் . . .
வார்த்தை உலகின்
வார்த்திடாத வண்ணங்கள் . . .
அவை..
உள்ளே உறங்கா மௌனம்
காலம் தொடாத கோலம்...
பார்வையின் வழியே பயணம் - யாரும்
பார்த்திட முடியாத ஜனனம் . . .
கேள்வியின் முடிவில் மீளாத பதிலின்
அடிநாத சலனம். . .
அது..
உள்ளே உறங்கா மௌனம்
காற்றும் புகாத உலகம்..
மீண்டும் ஒரு கவிதை! (முயற்சி)
2 comments:
டெஸ்ட்
மௌனத்தின் மொழி மகிழ்ச்சி அளிக்கிறது.
நல்லதொரு கவிதை தந்தமைக்கு வாழ்த்துகள்..
Post a Comment