Thursday, September 6, 2012

பூரி கிழங்கு - சமையல் குறிப்பு

பூரி கிழங்கு (சில ஊர்களில் பூரி மசால்) சரியாகச் செய்யப்படும் பட்சத்தில் மிகச்சுவையான டிஃபன் வகையாகும். அப்படி சுவையாகச் செய்யும் முறையை இப்போது பார்ப்போம்.


பூரி செய்யத் தேவையான பொருட்கள்


கோதுமை மாவு - சல்லிக்காமல் இருந்தால் நல்லது
பால் - சிறிதளவு (ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன்)
உப்பு - தேவையான அளவு
வெண்ணை அல்லது எண்ணை - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு




மாவு பிசையும் முறை:-




சப்பாத்திக்கும் பூரிக்கும் வெவ்வேறு முறையில் மாவு பிசைய வேண்டும். பூரிக்கு சற்று இளகிய பதத்தில் மாவு பிசைய வேண்டும். சிலர் மாவு பிசைந்தவுடன் அதை வெறும் மாவில் புரட்டி விடுவார்கள். இது மிகவும் தவறான செயல். இதனால் எண்ணையில் கசண்டு தங்கி விடும்.

முதலில் மாவை ஒரு அகன்ற பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.
அதில் உப்பைப் போடுங்கள். நன்றாகக் கலக்குங்கள்.
பிறகு சற்று குழிவாகச் செய்து முதலில் பாலையும், பிறகு நீரையும் ஊற்றுங்கள். மெதுவாகப் பிசையுங்கள். கையில் மாவு ஒட்டாத வகையில், சேர்ந்த பிறகு, வெண்ணையையோ எண்ணையையோ விட்டு நன்றாகப் பிசையுங்கள். மாவு இறுக்கமாக இல்லாமல் சற்று தளதள வென்று நீரோட்டமாக இருக்க வேண்டும். ஒரு அரை மணி நேரம் ஊறினால் போதும்.




பூரி சுடும் முறை




எண்ணை வாணலியை அடுப்பில் ஏற்றி, அரை வாணலிக்குச் சற்று குறைவாக எண்ணை விட்டுக்கொள்ளுங்கள்.

ஊறிய மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளுங்கள். மிக முக்கியமாக மாவை வட்டமாகத் தேய்க்கும் போது உலர்ந்த மாவில் புரட்டக் கூடாது. மாவைத் தேய்க்க எவர்சில்வர் பூரிக்கட்டை / தட்டு அல்லது மொழு மொழு தரை (கிச்சன் ஸ்லாப்) மிகச் சிறந்தது. அந்த இடத்தில் சற்று எண்ணையை விட்டு தேய்த்தால் அருமையாக வரும். மிக மெல்லியதாகத் தேய்க்காமல் சற்று கனமாக இட வேண்டும்.

எண்ணை காய்ந்தவுடன் ஒரு பூரியை வாணலியில் போட்டு அதன் மேல் காய்ந்த எண்ணையைத் துடுப்பால் தள்ள வேண்டும். அப்போது புஸ்ஸென்று பூரி உப்பிக் கொண்டு வரும். பிறகு திருப்பி விட்டு சற்று பொன்னிறமானவுடன் வெளியே எடுத்து விடவேண்டியதுதான்.

இப்போது ஓட்டலில் கிடைப்பது போலவே உப்பலான, மெதுவான சுவையான பூரி தயார்!!!




அடுத்து கிழங்கு செய்யும் முறை:-




முதலில் தேவையான பொருட்கள்.


உருளைக்கிழங்கு - 4 - 5 பெரிய கிழங்குகள்
வெங்காயம் - 2 - 3 மீடியம் சைஸ்
பச்சை மிளகாய் - 3 - 4
இஞ்சி - ஒரு இன்ச் சைசுக்கு ஒரு துண்டு.
கொத்து மஞ்சள் - ஒரு விரற்கிடை
தாளிக்கத் தேவையான பொருட்கள் (கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு)
தணியாப் பொடி (மல்லிப் பொடி) - சிறிதளவு
கொத்தமல்லித் தழை, கருவேப்பிலை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை:-


உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி சற்று சிறிய அளவில் நசுக்கியோ, நறுக்கியோ வைத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயத்தை நீள வாக்கில் சின்னதாக அரிந்து வைத்துக் கொள்ளுங்கள்
பச்சை மிளகாயை நீளவாக்கில் 'ஸ்லிட்' செய்து வைத்துக் கொள்ளுங்கள்
இஞ்சியை இரண்டு மூன்றாக அரிந்து, நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
கொத்து மஞ்சள் கிடைத்தால் அதை நசுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் வாணலியை ஏற்றி எண்ணையைத் தாராளமாக ஊற்ற வேண்டும். எண்ணை காய்ந்த உடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு என்ற வரிசையில் போட்டு கடுகு வெடிக்கும் வரையும், பருப்புகள் சிவக்கும் வரையும் அதை துடுப்பால் தள்ளிக் கொண்டே இருங்கள். பிறகு பச்சை மிளகாயைச் சேருங்கள். அடுத்து இஞ்சியையும், மஞ்சளையும் சேர்க்க வேண்டும்.

இவை வதங்கும் போது வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இப்போது உப்பு சேர்க்கவும். இவை வதங்கும் போது உருளைக் கிழங்கைச் சேர்த்து ஒன்றாகக் கிளரி அதன் மேல் தணியாத் தூளைத் தூவி நன்றாக வதக்க வேண்டும்.

இவையனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து வரும் போது, சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். சற்று இளகிய பதம் வரும் போது அதன் மேல் மல்லித் தழையும், கருவேப்பிலையையும் கிள்ளிப்போட்டு இறக்கி விடுங்கள்.

இப்போது சுவையான கிழங்கு தயார்!!!

கொத்து மஞ்சள் கிடைக்க வில்லையென்றால் மஞ்சள் தூளை வெங்காயம் வதங்கும் போது மஞ்சள் தூளைச் சேர்க்கலாம்.

இந்தக் காம்பினேஷனுக்கு இணையான டிஃபன் உலகத்திலேயே இல்லை.

செய்து பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களைக் கூறுங்கள்.

Saturday, April 21, 2012

குழந்தை வளர்ப்பு - ஆறு வித்தியாசங்கள்

குழந்தை வளர்ப்பதில் முதல் குழந்தை வளர்ப்பதற்கும் இரண்டாவது மற்றும் அதற்கடுத்த குழந்தைகளை வளர்ப்பதற்கும் ஆறு வித்தியாசங்களுக்கு மேல் இருக்கின்றன. ஆனால் சாம்பிளுக்கு ஆறு.


ப்ரெக்னென்சி கன்ஃபர்ம் ஆகும் போது

ரங்கு: பாத்துமா. மெதுவா. தல சுத்துதா? டாக்டர் கிட்ட போலாமா? நான் வேண்ணா லீவு போட்டுடட்டுமா?

ரங்கு: தல சுத்துதா? கொஞ்சம் உக்காந்தா சரியா போயிடுது. இதுக்கெதுக்கு டாக்டர். இன்னிக்கு ஆஃபீஸ்ல ஆடிட்டிங். கண்டிப்பா லீவு போட முடியாது. வேணுண்ணா, நாளைக்கு சாயந்திரம் நீயே போயிட்டு வந்துடு.


டெலிவரிக்குப் பின்

ரங்கு: குழந்தையை யாரும் தூக்க விடாதே, நீயே தூக்கு. நானா. அய்யோ எனக்கு பிடிக்கத் தெரியாதே. இப்படி அழுதுகிட்டே இருக்கே, ஏதாவது குடேன்.

ரங்கு: குழந்தைய நானே வச்சிக்கிறேன். பெரியதுக்கு நீதான் வந்து சாப்பாடு போடணுமாம். அழுதா ரெண்டு தடவ ஆட்டினா சரியா போயிடுது.


வளரும் போது - மூன்று வயது வரை

தங்கு: ட்ரிங்..ட்ரிங்... ஏங்க (ஆப்ஷனல்) குழந்த அழுதுகிட்டே இருக்குங்க. என்ன பண்றதுன்னே தெரியல. உடனே சைல்டு ஸ்பெஷலிஸ்ட் கிட்ட போணும். கெளம்பி வாங்க.

ரங்கு: சரி உடனே வரேன்.


ரங்கு: காலைல சின்னது அழுதுகிட்டே இருந்துதே என்னாச்சு.

தங்கு: அதுக்கு பொழுது போலன்னு அழுது. ரெண்டு அடி குடுத்தேன். நிப்பாட்டிடுச்சு.



ஸ்கூலுக்கு அனுப்பும் போது

தங்கு: ஏங்க (ஆப்ஷனல்), குழந்தைய நல்லா பாத்துக்குவங்களா? அதுக்கு மூச்சா வருதுன்னு கூட சொல்லத் தெரியாதே. நான் வேண்ணா விட்டுட்டு அங்கேயே வெயிட் பண்ணி கூட்டிட்டு வந்துரவா? ஸ்கூல் போமாட்டேன்னு அழுதே. அங்க அடிச்சிருப்பாங்களோ. கம்ப்ளெயின்ட் பண்ணலாமா? இன்னிக்கு ஸ்கூலுக்கு அனுப்பல.



ரங்கு: நேத்தி ஸ்கூல் போமாட்டேன்னு சின்னது சொன்னதே என்னாச்சு.

தங்கு: சும்மா? வீட்ல் ஒக்காந்து டோரா பாக்கணும்னு ஆக்ஷன் பண்ணுது. வெரட்டி உட்டுட்டேன்.



காலேஜ் அட்மிஷன்

ரங்கு: நல்ல காலேஜ்ல அலஞ்சு திரிஞ்சு அட்மிஷன் பண்ணனும். நாம கேக்கற சப்ஜக்ட் கெடைக்கறதுக்கு கொஞ்சம் செலவு செஞ்சா என்ன?

ரங்கு: கெடச்ச காலேஜ்ல கெடச்ச சப்ஜக்ட் சூஸ் பண்ணு. பரவால்ல. எல்லாமே நல்ல சப்ஜக்ட்தான். இல்லாட்டி ஏன் அதை வைக்கப் போறாங்க. நாம படிக்கறதுல தான் இருக்கு.


கல்யாணம்

தங்கு: நல்ல வரனா இருக்கணும். நமக்கும் குழந்தைக்கும் ப்ரச்னை வராம இருக்கணும். நல்ல மாதிரி கல்யாணம் நடக்கணும்.

தங்கு: நல்ல வரனா இருக்கணும். நமக்கும் குழந்தைக்கும் ப்ரச்னை வராம இருக்கணும். நல்ல மாதிரி கல்யாணம் நடக்கணும்.

நார்மல் டெக்ஸ்டில் இருப்பது முதல் குழந்தை டயலாக். இடாலிக்ஸில் இருப்பது இரண்டாவது குழந்தை டயலாக்.

இதன் மூலம் கிடைக்கும் நீதி. முதல் குழந்தைக்குக் கிடைக்கும் கவனிப்பு, இரண்டாம் குழந்தைக்குக் கிடைப்பதில்லை. முதலாவது ரொம்ப ரொம்ப ஓவர், அடுத்தது ரொம்ப ரொம்ப கம்மி.

நீங்க மொதல் குழந்தையா ரெண்டாவது (அ) அதற்கு மேற்பட்ட குழந்தையா?

Thursday, December 8, 2011

குழந்தை வளர்ப்பு - ஆறு வித்தியாசங்கள்

குழந்தை வளர்ப்பதில் முதல் குழந்தை வளர்ப்பதற்கும் இரண்டாவது மற்றும் அதற்கடுத்த குழந்தைகளை வளர்ப்பதற்கும் ஆறு வித்தியாசங்களுக்கு மேல் இருக்கின்றன. ஆனால் சாம்பிளுக்கு ஆறு.


ப்ரெக்னென்சி கன்ஃபர்ம் ஆகும் போது

ரங்கு: பாத்துமா. மெதுவா. தல சுத்துதா? டாக்டர் கிட்ட போலாமா? நான் வேண்ணா லீவு போட்டுடட்டுமா?

ரங்கு: தல சுத்துதா? கொஞ்சம் உக்காந்தா சரியா போயிடுது. இதுக்கெதுக்கு டாக்டர். இன்னிக்கு ஆஃபீஸ்ல ஆடிட்டிங். கண்டிப்பா லீவு போட முடியாது. வேணுண்ணா, நாளைக்கு சாயந்திரம் நீயே போயிட்டு வந்துடு.


டெலிவரிக்குப் பின்

ரங்கு: குழந்தையை யாரும் தூக்க விடாதே, நீயே தூக்கு. நானா. அய்யோ எனக்கு பிடிக்கத் தெரியாதே. இப்படி அழுதுகிட்டே இருக்கே, ஏதாவது குடேன்.

ரங்கு: குழந்தைய நானே வச்சிக்கிறேன். பெரியதுக்கு நீதான் வந்து சாப்பாடு போடணுமாம். அழுதா ரெண்டு தடவ ஆட்டினா சரியா போயிடுது.


வளரும் போது - மூன்று வயது வரை

தங்கு: ட்ரிங்..ட்ரிங்... ஏங்க (ஆப்ஷனல்) குழந்த அழுதுகிட்டே இருக்குங்க. என்ன பண்றதுன்னே தெரியல. உடனே சைல்டு ஸ்பெஷலிஸ்ட் கிட்ட போணும். கெளம்பி வாங்க.

ரங்கு: சரி உடனே வரேன்.


ரங்கு: காலைல சின்னது அழுதுகிட்டே இருந்துதே என்னாச்சு.

தங்கு: அதுக்கு பொழுது போலன்னு அழுது. ரெண்டு அடி குடுத்தேன். நிப்பாட்டிடுச்சு.



ஸ்கூலுக்கு அனுப்பும் போது

தங்கு: ஏங்க (ஆப்ஷனல்), குழந்தைய நல்லா பாத்துக்குவங்களா? அதுக்கு மூச்சா வருதுன்னு கூட சொல்லத் தெரியாதே. நான் வேண்ணா விட்டுட்டு அங்கேயே வெயிட் பண்ணி கூட்டிட்டு வந்துரவா? ஸ்கூல் போமாட்டேன்னு அழுதே. அங்க அடிச்சிருப்பாங்களோ. கம்ப்ளெயின்ட் பண்ணலாமா? இன்னிக்கு ஸ்கூலுக்கு அனுப்பல.



ரங்கு: நேத்தி ஸ்கூல் போமாட்டேன்னு சின்னது சொன்னதே என்னாச்சு.

தங்கு: சும்மா? வீட்ல் ஒக்காந்து டோரா பாக்கணும்னு ஆக்ஷன் பண்ணுது. வெரட்டி உட்டுட்டேன்.



காலேஜ் அட்மிஷன்

ரங்கு: நல்ல காலேஜ்ல அலஞ்சு திரிஞ்சு அட்மிஷன் பண்ணனும். நாம கேக்கற சப்ஜக்ட் கெடைக்கறதுக்கு கொஞ்சம் செலவு செஞ்சா என்ன?

ரங்கு: கெடச்ச காலேஜ்ல கெடச்ச சப்ஜக்ட் சூஸ் பண்ணு. பரவால்ல. எல்லாமே நல்ல சப்ஜக்ட்தான். இல்லாட்டி ஏன் அதை வைக்கப் போறாங்க. நாம படிக்கறதுல தான் இருக்கு.


கல்யாணம்

தங்கு: நல்ல வரனா இருக்கணும். நமக்கும் குழந்தைக்கும் ப்ரச்னை வராம இருக்கணும். நல்ல மாதிரி கல்யாணம் நடக்கணும்.

தங்கு: நல்ல வரனா இருக்கணும். நமக்கும் குழந்தைக்கும் ப்ரச்னை வராம இருக்கணும். நல்ல மாதிரி கல்யாணம் நடக்கணும்.

நார்மல் டெக்ஸ்டில் இருப்பது முதல் குழந்தை டயலாக். இடாலிக்ஸில் இருப்பது இரண்டாவது குழந்தை டயலாக்.

இதன் மூலம் கிடைக்கும் நீதி. முதல் குழந்தைக்குக் கிடைக்கும் கவனிப்பு, இரண்டாம் குழந்தைக்குக் கிடைப்பதில்லை. முதலாவது ரொம்ப ரொம்ப ஓவர், அடுத்தது ரொம்ப ரொம்ப கம்மி.

நீங்க மொதல் குழந்தையா ரெண்டாவது (அ) அதற்கு மேற்பட்ட குழந்தையா?

Tuesday, November 23, 2010

என்ன கொடுமை தமிழ்மணம் இது

அய்யா தமிழ்மண நிர்வாகிகளே,

தமிழ்மணத்தின் மாறுதல்கள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. காலத்தின் கோலத்திற்கேற்றார்ப்போல் மாறுதல்கள் இயல்பானவையே.

ஆயினும் ஒரு பிளாக்கர் தொடர்ந்து துன்புறுத்தப்படுவது எப்படி நியாயமாகமுடியும்?

இப்படி ஒரேயடியாக இருட்டடிப்பு செய்யுமளவுக்கு என் பிளாக்கில் என்னதான் குறை இருக்கிறது என்பதை தெரியப்படுத்துவீர்களா..

இந்த பதிவாவது வருமென்ற நம்பிக்கையில்....

அன்பு
இளைய பல்லவன்

Monday, August 30, 2010

இளையபல்லவன்:- பதிவரசியல்! அயல் நாட்டு அன்னிய சக்திகளின் சதி!!

நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்ன பதிவுலகமடா இது? திருந்துமென்று பார்த்தால் திரும்பவும் சாக்கடைக்கல்லவா சென்று விட்டது? ஏன்? ஏன்? ஏன்? கருத்துச் சுதந்திரம் கூடாதா? பதிவெழுதச் சுதந்திரமில்லையா? உரிமைக் குரல் கொடுப்போரின் குரல்வளை நெறிக்கப்பட்டால் கூட கூக்குரலெழும். ஆனால் அவர்களையே இருட்டடிப்புச் செய்துவிட்டால்.... ஆஹா.. இது ஒரு தனி முயற்சியல்ல. பலமான கூட்டணியின் பயங்கரச் சதி.. மேலே படியுங்கள்...


மக்களே.. இவ்வளவும் இளையபல்லவனுக்கு இன்று நேர்ந்திருக்கலாம். நாளை உங்களுக்கும் நேராதென்பது என்ன நிச்சயம். ஒன்றாகப் போராடுவோம். இளையபல்லவனுக்கு விடிவு காலம் வரும் வரை பசி நோக்காமல், கண் துஞ்சாமல், எவ்வெவ்வருத்தம் பாராமல், கருமமே கண்ணாக இருப்போம். இந்த அறை கூவலைக் கேட்டு வாரீர் வாரீர்.. நடக்கும் கொடுமைகளைப் பாரீர்... பாரீர்...


என்ன நடந்தது?? இளையபல்லவனிடமே கேட்டோம். 'போல்ட்' எழுத்துக்களில் உள்ளவை தானைத் தலைவர், தன்மானச் சிங்கம், இளையபல்லவர் சொன்னது.



எந்தப் பதிவு போட்டாலும் என் பெயர் தெரிவதில்லை...


அட.. பதிவின் தலைப்பை வைத்தே நான்தான் பதிவு போட்டேன் என்று மக்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு பிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரபலமான பதிவராகிவிட்டேனா என்று எனக்கு வந்த ஆச்சரியம், வழக்கமாகக் கடைப்பக்கம் வரும் ஒன்றிரண்டு பேர் கூட வராமல் போனபோதுதான் தெளிவாகியது.

பதிவின் பெயர் மட்டும் வருகிறது. வகைப்படுத்திய விதம் தெரிகிறது. என் பெயர் மட்டும் இல்லை:(

இதுவாவது பரவாயில்லை. ஒரு வாரத்திற்கு முன் 'புதியது'?! என்ற லேபிள் வேறு!!!



ஆஹா. இது என்ன கொடுமை? யார் குரல் கொடுத்தார்கள் என்று தெரியவிடாமல் செய்யப்படுகிறதா?? அதுவும் பழைய குரலை புதிய குரல் என்று அறிமுகம் செய்யப்படுகிறதா??



அடுத்து...


மறுமொழிகள் திரட்டப்படுவதில்லை...


அய்யா... என் பதிவெல்லாம் ஒரு சில மணித்துளிகளாவது முகப்பில் தெரிகிறதென்றால் அது அவ்வப்போது வரும் ஒன்றிரண்டு பின்னூட்டங்களினால்தான். அப்படி பின்னூட்டம் வராவிட்டால் நமக்கு நாமே திட்டத்தின் படி ஒன்றிரண்டு 'டெஸ்ட்' பின்னூட்டங்கள் போடும் திட்டத்தைச் செயல் படுத்தி பதிவை 'மார்க்கெட்டிங்' செய்திருக்கிறேன்.

அய்யகோ.. ஆனால் இப்போதோ, முதலுக்கே மோசம் வந்தது போல்.. மொத்தமாக அந்த வரிசையிலேயே வருவதில்லை...



அந்தோ பரிதாபம்.. தில்லாலங்கடி வேலை செய்தாவது தன் பதிவை அவயத்து முந்தியிருப்பச் செய்யும் செயலைக் கூட தடுக்கும் தன்னிகரல்லா உலகமடா இஃது..



அடுத்து...
தமிழ்மணம் கருவிப்பட்டை செய்யும் மக்கர்...

என்பதிவின் மேல் தமிழ்மணம் கருவிப்பட்டை, பதிவை அனுப்புவதற்கு முன் எப்படியிருக்குமோ அப்படியே இருக்கிறது. யாராவது கருணை மனம் மிகுந்த தர்மவான்கள்/தர்மவானிகள் இரக்கப்பட்டு அவ்வப்போது போடும் அரை வோட்டு அல்லது ஒன்றரை ஓட்டு கூட விழாமல் சதி செய்யப்பட்டு விட்டது!!!

இப்படி அடுக்கடுக்காக, எனக்கு எப்போதாவது எழுதவேண்டும் என்று வரும் ஆசையை முளையிலேயே கிள்ளியெறியவும், அந்த ஒன்றிரண்டு பதிவுக்காக பரிதாபப்பட்டு வரும் ஒன்றிரண்டு பின்னூட்டங்களும் வரக்கூடாது, வந்தாலும் தெரியக்கூடாது என்ற நல்(?!)லெண்ணத்திலும், ஓட்டுப்போடுவதையே கடமையாகக்கொண்டுள்ள ஓரிரண்டு நல்லவர்களின் ஓட்டுரிமையைப் பறிக்கும் பொருட்டும் இவ்வாறெல்லாம் சதி செய்யப்படுகிறது என்று நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லாவிட்டாலும்... நம்பாமல் இருக்க முடியவில்லை...

ஓட்டு வாங்கும் உரிமையும் ஓட்டுப்போடும் உரிமையும் ஒருங்கே தட்டிப் பறிக்கப்படுகிறதே. ஐயகோ.. என்செய்வோம்?. என்செய்வோம்?...



அ.உ.இ.ப.மு.கவின் செயற்குழு, பொதுக்குழு, மற்றும் அனைத்துக் குழுக்களின் கூட்டுக்குழம்பு(சாரி குழு) எடுத்த முடிவினை உங்கள் முன் எடுத்து வைக்கிறோம்...

அ. மேற்கண்ட குறைகளையெல்லாம் உடனே சீர் செய்ய வேண்டும். இடைக்கால நிவாரணமாக கீழ்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால், ஒவ்வொரு மணித்துளிக்கும் ஒரு பதிவிட்டு தமிழ்மண முகப்பு நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அ.உ.இ.ப.மு.க. (அகில உலக இளையபல்லவன் பதிவுகள் முன்னேற்ற கழகம்) உறுப்பினர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

1. பதிவுலகிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த பிரபல பதிவர் தலைமையில் ஒரு கமிஷன் வைத்து விசாரணை செய்
2. இடைக்கால நிவாரணமாக அடுத்த ஒரு மாதத்திற்கு இளையபல்லவனை நட்சத்திரமாக்கு
3. இளையபல்லவனின் அனைத்து இடுகைகளுக்கும் உடனே 25 வாக்குகளை வழங்கு
4. இளையபல்லவனின் அனைத்து இடுகைகளுக்கும் உடனே 50 மறுமொழிகளை வழங்கு

குறிப்பு:-

1. மேலும் கோரிக்கைகள் அ.உ.இ.ப.மு.க.வினர் சார்பாக வரவேற்கப்படுகின்றன
2. அ.உ.இ.ப.மு.க.வில் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
3. அ.உ.இ.ப.மு.க. இல்லாத இடமே இல்லையென்றாலும், மேலும் கிளைகள் துவங்க அனுமதி வழங்கப்படுகிறது.
4. அ.உ.இ.ப.மு.க. சார்பாக போராட்டம் நடத்த தகவல்களுடன் தொடர்பு கொள்ளவும்.
5. 200க்கும் மேல் தொகுதிகள் கொடுத்து கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புவோர், தொடர்புகொள்ளவும்.


இப்படிக்கு:-
இ.ப.மு.க. சார்பில்
தமிழ்மண நிர்வாகிகளின் 'கடைக்கண் காட்சி'
காணக்காத்திருக்கும்
'குணா' -
இளையபல்லவன்.

பின்குறிப்பு:- என் பிளாக்கிற்கு இவ்வளவு பிரச்சினைகளை அளித்து ஒரு பதிவெழுத வாய்ப்பளித்த தமிழ்மணத்திற்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

இளைய பல்லவன்:- முடிவில்லா மௌனத்தின் மொழி. . .


உள்ளே உறங்கா
மௌனம்...
பேசாமல் பேசும்
கவனம்...

எண்ணங்கள் . . .
வார்த்தை உலகின்
வார்த்திடாத வண்ணங்கள் . . .

அவை..
உள்ளே உறங்கா மௌனம்
காலம் தொடாத கோலம்...


பார்வையின் வழியே பயணம் - யாரும்
பார்த்திட முடியாத ஜனனம் . . .
கேள்வியின் முடிவில் மீளாத பதிலின்
அடிநாத சலனம். . .

அது..
உள்ளே உறங்கா மௌனம்
காற்றும் புகாத உலகம்..


மீண்டும் ஒரு கவிதை! (முயற்சி)