அத்தியாயம் 22 : இவை போதாது.
கொல்லி மலை அடிவாரத்தில் தங்கியிருந்த மாலிக்கின் படைகளை நடத்தி வந்த ஜலாலுதீன், மாலிக்கிடமிருந்து ஒரு தகவலும் வராமல் போகவே என்ன செய்வதென்ற யோசனையில் ஆழ்ந்திருந்தான். கொள்ளைக் கூட்டத்தின் கலவையாக அமைந்திருந்த அந்தப் படையினர் நீண்ட காலம் அமைதியாக இருந்து அறியாதவர்கள். அப்போதே அவர்களிடத்தில் சிறு சலசலப்பு ஏற்படத் துவங்கியிருந்தது.
ஆயினும் விஷயம் கைமீறிச் செல்வதற்குள் மாலிக் வந்து சேர்ந்தான். வந்தவன் முகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்குக் கோபத்தின் உச்சியில் இருந்ததைக் கண்ட ஜலாலுதீனுக்கு அவனை அண்டவும் அச்சமாக இருந்தது. மாலிக்கின் அழைப்பிற்காகக் காத்திருந்தவன் படைகளிடையே மாலிக்கின் வருகையை அறிவிக்கும் படி பணித்துவிட்டு, அவைகளை வரிசைப்படுத்தவும் உத்தரவிட்டான்.
ஜலாலுதீனின் இந்த ஏற்பாடுகள் மாலிக்கின் மனதை ஓரளவு சாந்தப்படுத்தின. அவனை அருகில் அழைத்து, "மிகச் சிறப்பாகப் படையை அழைத்து வந்திருக்கிறாய், ஜலாலுதீன். இத்தகைய முரட்டுக் கூட்டத்தைக் கட்டுப்படுத்த எனக்கே சில காலம் பிடித்தது. உன்னிடத்தில் விரைவாக பணிந்துவிட்டார்கள்." என்றான்.
"எல்லாம் உங்கள் உத்தரவுப்படியே நடந்தது, ஹுசூர். தாங்கள் சொல்லியபடியே செய்ததால் ஒரு குறைவும் இல்லை. இனியும் உங்கள் ஹுக்குமிற்காகக் காத்திருக்கிறோம்." என்றான் பணிவுடன்.
"அச்சா. ஜலாலுதீன், நம்மைத் தக்காணத்திற்கு, சுல்தான் அனுப்பிய போது என்ன சொன்னார் என்று நினைவிருக்கிறதா"
"நிச்சயமாக ஹுசூர். அதை மறக்க முடியுமா. தக்ஷிண பாரதத்தின் முக்கியமாக மாபாரின் (மதுரையை மாபார் என்று அழைத்தனர் சுல்தானியர்கள். பின்னர் அதுவே திரிந்து மலபார் ஆனது) உயர்ந்த செல்வங்களைப் பற்றி தான் அறிந்தவற்றைக் கூறினார். அந்தப் பகுதி தன் ஆளுகைக்குட்பட்டு இருக்கவேண்டும் என்ற அவாவையும் வெளிப்படுத்தினார். அதற்கான தக்க தருணத்தை எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருந்தீர்கள். இறைவன் அந்த சந்தர்ப்பத்தையும் தங்களுக்குக் காட்டியுள்ளான்" என்று நிதானமாக அதே சமயத்தில் தீர்க்கமாக எடுத்துரைத்தான் ஜலாலுதீன்.
"அத்தகைய பெரும் பொறுப்பை எனக்கு அளித்ததன் காரணம் என்ன?" என்று வினவினான் ஜலாலுதீனின் அறிவைச் சோதிக்க எண்ணி.
"சுல்தானுக்காக முதலிலேயே தேவகிரியைப் பிடித்தீர்கள். அவர்களிடமிருந்து வரியையும் வசூலித்து வருகிறீர்கள். தக்காணம் தங்களுக்குத் தலைகீழ்ப்பாடம். சிறிய படையையும் வைத்துக் கொண்டு பெரும் வெற்றிகளை ஈட்டியுள்ளீர்கள். இவை போதாதா. உங்களிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்க"
"ம். ஆம். இவை போதாது. ஜலாலுதீன், இவை போதாதுதான்" என்றான் மாலிக் சற்று விரக்தியுடன்.
"ஹுசூர். மன்னிக்க வேண்டும். புரியவில்லை"
"ஜலாலுதீன். சுல்தானுக்கு மாபாரைப் பற்றி முழுமையாகத் தெரியவில்லை. அப்படித் தெரிந்திருந்தால், தன்னிடம் இருக்கும் 4,75,000 வீரர்களையும் என்னுடன் அனுப்பியிருப்பார். அத்துணை பேர் இங்கு வந்திருந்தாலும், அவர்களால் இங்கே இருக்கும் செல்வத்தைக் கவர்ந்து செல்வது மிகக் கடினமான செயல். அவ்வளவு செல்வம் இங்கே கொட்டிக் கிடக்கிறது. ஹும். நான் வந்து கவர்ந்து செல்வதென்பது, ஆற்று நீரை நாய் நக்கிக் குடிப்பது போன்றது. ஆனாலும் பரவாயில்லை. வந்ததற்குச் சிலவற்றைக் கவர்ந்து சென்று மீண்டும் வரவேண்டும் என்று சுல்தானிடம் கூறுவேன். அப்போது நீ தனியாக வர வேண்டியிருக்கலாம். ஆகவே, இந்தப் பகுதிகளை மிகக் கவனமாகப் பார்த்துக்கொள்."
"உத்தரவு ஹுசூர். இப்போது படை நடத்த அனுமதி உண்டா."
"படையெடுப்பை மேற்கொண்டு நடத்துவது, மதுரையில் பாண்டியப் படையின் நிலையைப் பொறுத்தது. அருகில் உறையூரில் வந்து இறங்கியிருக்கும் வல்லாளனைச் சந்திக்க வேண்டும். அவன் நிலை என்னவென்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். பாவம். என்னை நன்றாக நம்பிவிட்டான் என்று நினைக்கிறேன். இல்லையென்றால், தன் தலை நகரை நிர்க்கதியாக விட்டுவிட்டு வந்திருப்பானா. இந்தப் படையெடுப்பை முடித்துக் கொண்டு, மின்னல் வேகத்தில் திரும்பிச் சென்று, துவாரசமுத்திரத்தைத் தாக்க வேண்டும். ஆகவே, நமது படைகளில் குதிரைப் படையையும், மங்கோலிய வில்லாளிகளையும் இப்போதே பிரித்துவிடு. துவார சமுத்திரத்தை நீதான் தாக்க வேண்டும். அது உன் பயிற்சிக் களமாக இருக்கும். புரிந்ததா." என்று கூறி நிறுத்தினான் மாலிக்.
"அவ்வாறே ஆகட்டும். இன்ஷா அல்லாஹ்" என்றான் பலமாகத் தலையைத் தாழ்த்தி.
"இன்ஷா அல்லாஹ். இப்போதைக்கு படையைப் பிரிப்பதற்குக் காரணம், வியூகம் அமைப்பதுதான் என்று சொல்லிவிடு. துவார சமுத்திரத்தைத் தாக்கும் திட்டம் மிக ரகசியமாக இருக்கட்டும். மீண்டும் மாலைத் தொழுகைக்குப் பின் என்னை வந்து பார்." என்று அவனை அனுப்பினான்.
=====
தென்னிந்திய வரலாற்றில், குறிப்பாகத் தமிழக வரலாற்றில் களப்பிரர்களின் காலம் இருண்ட காலம் என்று கூறுவர். ஆனால் மாலிக் கஃபூர் படையெடுத்து வந்து தமிழகச் செல்வங்களைக் கொள்ளை கொண்ட நிகழ்ச்சி அவ்வளவாக பாராட்டப்படுவது கிடையாது. களப்பிரர்கள் சில நூற்றாண்டுகளில் செய்த செயல்களை மாலிக் ஒரு சில மாதங்களிலேயே செய்ய முற்பட்டான். அதில் வெற்றி பெற்றானா? அவன் எண்ணம் ஈடேறியதா? மாபார் சுல்தானின் ராஜ்ஜியத்தில் இணைந்ததா?.
(தொடரும்...)
Showing posts with label சக்கர வியூகம் - இரண்டாம் பாகம். Show all posts
Showing posts with label சக்கர வியூகம் - இரண்டாம் பாகம். Show all posts
Friday, January 29, 2010
Thursday, January 21, 2010
சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 21
அத்தியாயம் 21 - உன்னுடன் சேர்ந்து போராட.
ஹொய்சளத் தலை நகர் தொரசமுத்திரத்தை நோக்கித் தனக்கு அளிக்கப்பட்ட படைகளுடன் புறப்பட்ட ஆதவனுக்கு, வல்லாளனே நேரில் வந்து வழியனுப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புறப்படும் முன், வல்லாளனின் கால்களில் விழுந்து ஆசி பெற வந்த ஆதவனைத் தடுத்து நிறுத்திய வல்லாளன்,
'ஆதவா, ஒரு நாட்டிற்குத் தலை நகரம் முக்கியமானது. என் கவனக் குறைவால் அதைப் போதிய பாதுகாப்பின்றி விட்டுவிட்டேன். அங்கே முக்கியமாக, ஹொய்சள வம்சத்தின் வாரிசு, என் மகன் இருக்கிறான். என்னைப் பற்றிய கவலை இல்லை. ஆனால் என்னுடன் ஹொய்சள வம்சம் முடிந்து விட்டதாக ஏற்படக்கூடாது. ஆகவே உன்னை அங்கு அனுப்புவதற்கு முக்கியக் காரணம், என் மகனைக் கண்ணின் இமை போல் காத்துவர வேண்டும் என்பதுதான். அப்படியே கோட்டையையும் பலப்படுத்த வேண்டும். உன்னால் நிச்சயம் முடியும் என்று நம்பியே இந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறேன். அரசியாருக்கு ஒரு ஓலை தருகிறேன். அவர்கள் சொல்படியும் கேட்டு நடந்து கொள். வெற்றி உனதே போய்வா. இங்கிருந்து அவ்வப்போது ஓலைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். அதே போன்று அங்கிருந்தும் எனக்குச் செய்திகள் வர வேண்டும்." என்று மிக சுருக்கமாக எடுத்துரைத்தான்.
இதைப் போன்று ஏதாவது இருக்கும் என்று நினைத்த ஆதவனும், அரசனின் உத்தரவைப்பெற்ற உடன், தனது படைகளை நடத்தத் துவங்கினான்.
=====
மதுரையைப் போர் மேகங்கள் சூழ்ந்திருக்க, அங்கே அரண்மனையில் அமைதியின்றி அமர்ந்திருந்த சுந்தர பாண்டியனுக்கு விக்ரம பாண்டியர் ஒரு தூது அனுப்பியிருந்தார். அவனைத் தனியாகச் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் உள்ள நிலையில் விக்ரம பாண்டியரை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பம் சுந்தர பாண்டியனை ஆட்கொண்டது. நீண்ட சிந்தனைக்குப் பின், விக்ரம பாண்டியரைச் சந்திப்பதென்று முடிவெடுத்தான்.
மதுரைக்கு வடமேற்கே தஞ்சை செல்லும் பெரு வழியில் அமைந்திருந்த ஒரு சத்திரத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
"சுந்தரா நலமா"
"நாடு உள்ள நிலையில் நல்ல கேள்வி." சுந்தரனின் பதிலில் வேதனை மிகுந்திருந்தது.
"சுந்தரா, அது நம் மனதைப் பொறுத்தது. எந்த நிலையிலும் நம்மை நாம் தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிக எதிர்ப்பார்ப்பிற்கும், அதனால் ஏற்படும் ஏமாற்றத்திற்கும், நம்மை ஆட்படுத்திக்கொள்ளலாகாது. இது உனக்குத் தெரியாததா" குரலில் சற்று கனிவும், கண்டிப்பும் கூட்டிப் பேசினார் விக்ரம பாண்டியர்.
"மாமா, தங்கள் அறிவும், அனுபவமும் என்னை விட வீரபாண்டியனுக்கே அதிகம் பயன் படும் போது, எனக்குக் குறைவாகத் தெரிந்திருப்பதில் வியப்பில்லையல்லவா?"
"சுந்தரா, என்னைப் பொறுத்தவரை நீங்கள் இருவருமே சமம் தான். உங்களுக்கு மேலாக இந்தப் பாண்டியப் பேரரசைப் பேணிக்காப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். இப்பொழுது, வீர பாண்டியனுடன் இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. அவ்வளவுதான். கூடிய விரைவில் உன்னுடனும் இருப்பேன். என்னை நீ நம்பலாம்"
"நம்பிக்கையின் அடிப்படையிலேயே இவ்வளவு தூரம் தனியாக வந்திருக்கிறேன். சரி. என்ன விஷயமாக வரச்சொல்லியிருந்தீர்கள்"
"நம்பிக்கைக்கு நன்றி சுந்தரா. ஒன்றை நன்றாக நினைவில் கொள். விக்ரம பாண்டியன் ஒரு போதும், பாண்டிய மண்ணிற்கோ, மன்னர்களுக்கோ துரோகம் செய்யமாட்டான். சரி விஷயத்திற்கு வருவோம். மதுரைக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை அறிவாயல்லவா?"
"ம். மதுரையை நோக்கித் திரிசூலம் குறிவைக்கப்பட்டிருக்கிறது." சுந்தர பாண்டியனின் பதிலில் அவனது இயலாமை வெளிப்பட்டது.
"அல்ல. திரிசூலம் அல்ல. ஒரு வேல், அதனுடன் ஒரு வால். அவ்வளவுதான்" என்றார் நகைச் சுவையாக.
"என்ன வேலும் வாலுமா."
"ஆம். வேல், மாலிக் கஃபூரைக் குறிக்கும். அவன் அடியொற்றி வந்த வல்லாளனைத்தான் வால் என்று அழைத்தேன். மாலிக் கஃபூர் மதுரையைத் தாக்கும் போது தானும் இடையில் புகுந்து பழைய கணக்கைத் தீர்த்துக்கொள்ளப் பார்க்கிறான் வல்லாளன். ஆனால் அந்த வேலையும் முறியடிக்க வேண்டும். வாலையும் நறுக்க வேண்டும்."
"அப்படியென்றால் வீர பாண்டியனின் படை?" சுந்தரனின் பரபரப்பு உச்சத்தை அடைந்தது.
விக்ரம பாண்டியரது உதட்டில் புன் முறுவல் மிகுந்தது. மிகுந்த நிதானத்துடனும், மெதுவாகவும் சொன்னார், அவனுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம். "ஆம். அது, உன்னுடன் சேர்ந்து போராட"
சுந்தர பாண்டியன் மயக்கமுறும் நிலையை எய்தினான். சற்றுத் தெளிந்தபின் விவரமாகக் கூறுமாறு விக்ரம பாண்டியரைக் கேட்டுக்கொண்டான். அவ்வாறே விக்ரம் பாண்டியர் அவரது வியூகத்தைப் பற்றி எடுத்துரைக்க, சுந்தர பாண்டியனது முகத்தில் பரவசம் கூடியது.
ஆனால் மாலிக் கஃபூர் அதுவரை வாளாவிருக்கவில்லை. இங்கே இவர்கள் பேசிக்கொண்டிருக்க, அங்கே துவக்கிவிட்டான் அவனது ஆட்டத்தை.
(தொடரும்)
ஹொய்சளத் தலை நகர் தொரசமுத்திரத்தை நோக்கித் தனக்கு அளிக்கப்பட்ட படைகளுடன் புறப்பட்ட ஆதவனுக்கு, வல்லாளனே நேரில் வந்து வழியனுப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. புறப்படும் முன், வல்லாளனின் கால்களில் விழுந்து ஆசி பெற வந்த ஆதவனைத் தடுத்து நிறுத்திய வல்லாளன்,
'ஆதவா, ஒரு நாட்டிற்குத் தலை நகரம் முக்கியமானது. என் கவனக் குறைவால் அதைப் போதிய பாதுகாப்பின்றி விட்டுவிட்டேன். அங்கே முக்கியமாக, ஹொய்சள வம்சத்தின் வாரிசு, என் மகன் இருக்கிறான். என்னைப் பற்றிய கவலை இல்லை. ஆனால் என்னுடன் ஹொய்சள வம்சம் முடிந்து விட்டதாக ஏற்படக்கூடாது. ஆகவே உன்னை அங்கு அனுப்புவதற்கு முக்கியக் காரணம், என் மகனைக் கண்ணின் இமை போல் காத்துவர வேண்டும் என்பதுதான். அப்படியே கோட்டையையும் பலப்படுத்த வேண்டும். உன்னால் நிச்சயம் முடியும் என்று நம்பியே இந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறேன். அரசியாருக்கு ஒரு ஓலை தருகிறேன். அவர்கள் சொல்படியும் கேட்டு நடந்து கொள். வெற்றி உனதே போய்வா. இங்கிருந்து அவ்வப்போது ஓலைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். அதே போன்று அங்கிருந்தும் எனக்குச் செய்திகள் வர வேண்டும்." என்று மிக சுருக்கமாக எடுத்துரைத்தான்.
இதைப் போன்று ஏதாவது இருக்கும் என்று நினைத்த ஆதவனும், அரசனின் உத்தரவைப்பெற்ற உடன், தனது படைகளை நடத்தத் துவங்கினான்.
=====
மதுரையைப் போர் மேகங்கள் சூழ்ந்திருக்க, அங்கே அரண்மனையில் அமைதியின்றி அமர்ந்திருந்த சுந்தர பாண்டியனுக்கு விக்ரம பாண்டியர் ஒரு தூது அனுப்பியிருந்தார். அவனைத் தனியாகச் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் உள்ள நிலையில் விக்ரம பாண்டியரை நம்புவதா வேண்டாமா என்ற குழப்பம் சுந்தர பாண்டியனை ஆட்கொண்டது. நீண்ட சிந்தனைக்குப் பின், விக்ரம பாண்டியரைச் சந்திப்பதென்று முடிவெடுத்தான்.
மதுரைக்கு வடமேற்கே தஞ்சை செல்லும் பெரு வழியில் அமைந்திருந்த ஒரு சத்திரத்தில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.
"சுந்தரா நலமா"
"நாடு உள்ள நிலையில் நல்ல கேள்வி." சுந்தரனின் பதிலில் வேதனை மிகுந்திருந்தது.
"சுந்தரா, அது நம் மனதைப் பொறுத்தது. எந்த நிலையிலும் நம்மை நாம் தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிக எதிர்ப்பார்ப்பிற்கும், அதனால் ஏற்படும் ஏமாற்றத்திற்கும், நம்மை ஆட்படுத்திக்கொள்ளலாகாது. இது உனக்குத் தெரியாததா" குரலில் சற்று கனிவும், கண்டிப்பும் கூட்டிப் பேசினார் விக்ரம பாண்டியர்.
"மாமா, தங்கள் அறிவும், அனுபவமும் என்னை விட வீரபாண்டியனுக்கே அதிகம் பயன் படும் போது, எனக்குக் குறைவாகத் தெரிந்திருப்பதில் வியப்பில்லையல்லவா?"
"சுந்தரா, என்னைப் பொறுத்தவரை நீங்கள் இருவருமே சமம் தான். உங்களுக்கு மேலாக இந்தப் பாண்டியப் பேரரசைப் பேணிக்காப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறேன். இப்பொழுது, வீர பாண்டியனுடன் இருக்க வேண்டிய சூழல் இருக்கிறது. அவ்வளவுதான். கூடிய விரைவில் உன்னுடனும் இருப்பேன். என்னை நீ நம்பலாம்"
"நம்பிக்கையின் அடிப்படையிலேயே இவ்வளவு தூரம் தனியாக வந்திருக்கிறேன். சரி. என்ன விஷயமாக வரச்சொல்லியிருந்தீர்கள்"
"நம்பிக்கைக்கு நன்றி சுந்தரா. ஒன்றை நன்றாக நினைவில் கொள். விக்ரம பாண்டியன் ஒரு போதும், பாண்டிய மண்ணிற்கோ, மன்னர்களுக்கோ துரோகம் செய்யமாட்டான். சரி விஷயத்திற்கு வருவோம். மதுரைக்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தை அறிவாயல்லவா?"
"ம். மதுரையை நோக்கித் திரிசூலம் குறிவைக்கப்பட்டிருக்கிறது." சுந்தர பாண்டியனின் பதிலில் அவனது இயலாமை வெளிப்பட்டது.
"அல்ல. திரிசூலம் அல்ல. ஒரு வேல், அதனுடன் ஒரு வால். அவ்வளவுதான்" என்றார் நகைச் சுவையாக.
"என்ன வேலும் வாலுமா."
"ஆம். வேல், மாலிக் கஃபூரைக் குறிக்கும். அவன் அடியொற்றி வந்த வல்லாளனைத்தான் வால் என்று அழைத்தேன். மாலிக் கஃபூர் மதுரையைத் தாக்கும் போது தானும் இடையில் புகுந்து பழைய கணக்கைத் தீர்த்துக்கொள்ளப் பார்க்கிறான் வல்லாளன். ஆனால் அந்த வேலையும் முறியடிக்க வேண்டும். வாலையும் நறுக்க வேண்டும்."
"அப்படியென்றால் வீர பாண்டியனின் படை?" சுந்தரனின் பரபரப்பு உச்சத்தை அடைந்தது.
விக்ரம பாண்டியரது உதட்டில் புன் முறுவல் மிகுந்தது. மிகுந்த நிதானத்துடனும், மெதுவாகவும் சொன்னார், அவனுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம். "ஆம். அது, உன்னுடன் சேர்ந்து போராட"
சுந்தர பாண்டியன் மயக்கமுறும் நிலையை எய்தினான். சற்றுத் தெளிந்தபின் விவரமாகக் கூறுமாறு விக்ரம பாண்டியரைக் கேட்டுக்கொண்டான். அவ்வாறே விக்ரம் பாண்டியர் அவரது வியூகத்தைப் பற்றி எடுத்துரைக்க, சுந்தர பாண்டியனது முகத்தில் பரவசம் கூடியது.
ஆனால் மாலிக் கஃபூர் அதுவரை வாளாவிருக்கவில்லை. இங்கே இவர்கள் பேசிக்கொண்டிருக்க, அங்கே துவக்கிவிட்டான் அவனது ஆட்டத்தை.
(தொடரும்)
Friday, January 15, 2010
சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 20
அத்தியாயம் 20 - வல்லாளனின் தெளிவு
தஞ்சைக்கு சற்று வடக்கே தண்டு இறங்கியிருந்த வீரபாண்டியனின் படைத்தளத்தில் அமைந்திருந்த ஒரு கூடாரத்தில் வீரபாண்டியன், விக்ரம பாண்டியன், மாராயர் மற்றும் இளவழுதி ஆகியோர் அமர்ந்திருந்தனர். மேற்கொண்டு படை நடத்த வேண்டியதைப் பற்றி விவாதிப்பதற்காகவே அவர்கள் அங்கே அமர்ந்திருந்தது தெளிவாகத் தெரிந்தது.
"விக்ரம பாண்டியரே, நாம் இங்கே வந்து சற்றேறக்குறைய ஒரு வாரம் ஆகிவிட்டது. கொல்லி மலை வில்லவர்களும் வந்து சேர்ந்து விட்டனர். நமது படைகள் மதுரையை நோக்கி உடனே புறப்படுவது நல்லது. இல்லாவிட்டால் படை வீரர்களிடத்தில் சோம்பலும் உற்சாகக் குறைவும் தோன்றிவிடும்" என்றார் மாராயர்.
"மாராயரே, அதை உணர்ந்தே இருக்கிறேன். ஆனால் நாம் மதுரையை அடையும் போது மாலிக் கஃபூரின் படைகளும் அங்கே வந்து சேர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் சுந்தரன் நம்மைத் தாக்குவதா அல்லது மாலிக்கஃபூரைத் தாக்குவதா என்று புரியாமல் குழப்பமடைவான். ஆகவே மாலிக்கின் படைகளின் நடமாட்டத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அங்கிருந்து தக்க செய்தி வந்தவுடன் நம் புறப்பட்டுவிடலாம்." விக்ரமரின் பதிலில் இருந்த தந்திரம், மாராயரை அமைதிப்படுத்தியது.
=====
உறையூரின் அருகே தண்டு இறங்கியிருந்த ஹொய்சளப்படைகளைப் பார்வையிட்டபடியே அவற்றின் ஊடாக நடந்து சென்ற குவலாலா கோட்டைத் தலைவன் ஆதவனுக்கு இந்தப் படையெடுப்பிற்கான காரணம் முற்றிலும் விளங்கவில்லை. இதை ஒருசில உப தளபதிகளும் வாய்விட்டு கேட்கவே செய்தனர். அவர்களையெல்லாம் மன்னர் உத்தரவு என்ற வார்த்தைகளைச் சொல்லி அடக்கியாயிற்று. ஹொய்சளத்தின் ப்ரதான படைகள் இங்கே வந்து விட தேசம் நிர்க்கதியாக இருக்கிறதே என்ற கவலை ஏற்பட்டது அவனுக்கு. நாற்புறமும் பகைவர் இருக்க, அனைத்துப் படைகளையும் தெற்கு நோக்கித் திருப்ப வேண்டிய அவசியம் ஏன் என்ற கேள்விக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. சரியான சமயத்தில் வந்து சேர்ந்து கொள்வதாக ஓலை மூலம் தெரிவித்திருந்த மன்னரும் வந்து சேரவில்லை. இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இங்கே அமைதியாக அமர்ந்திருப்பது? வந்த வேகத்தில் நேராக மதுரை மீது இறங்கியிருந்தால் இந்நேரம் மதுரைக் கோட்டையில் ஹொய்சளர்களின் கொடி பறந்திருக்கும். இந்த மாதண்ட நாயகம் பிடித்து வைத்த பிள்ளையாரைப் போல் இருக்கிறாரே ஒழிய ஒரு உத்தரவும் தருவதில்லை. ம்ஹூம். ஒன்றும் சொல்லிக் கொள்வது போல் இல்லையே. இது எங்கே கொண்டு போய் விடும்? தாயே ஹொய்சளர்களைக் காப்பாற்று என்று குவலாலாவின் காவல் தெய்வம், துர்க்கையை மனதார வேண்டிக் கொண்டான்.
அந்த வேண்டுதலை குவலாலா கோலாரம்மன் காதில் விழுந்திருக்க வேண்டும். அன்று மாலையே ஹொய்சள மன்னன் வல்லாளன் அந்த படைத்தளத்திற்கு வந்து சேர்ந்தான். ஆனால் அவன் முகத்தில் உற்சாகம் சிறிதளவும் இல்லை. வந்தவுடன் ஸ்நானபானங்களைக் கூட கவனிக்காமல், மாதண்ட நாயகத்துடன் தனியாக ஆலோசனையில் இறங்கி விட்டான். சற்றேறக்குறைய நான்கு நாழிகைகளுக்கும் மேலாக நீடித்த ஆலோசனைக்குப் பிறகு வெளிப்போந்த மாதண்ட நாயகத்தின் முகத்திலும் ஈயாடவில்லை. எதற்கும் அசைந்து கொடுக்காத மாதண்ட நாயகத்தையே ஆட்டம் காண வைத்த செய்தி என்னவாக இருக்கும் என்று எவ்வளவு சிந்தித்துப் பார்த்தும் ஆதவனுக்குப் புலப்படவில்லை. எனினும் அவராகவே சொல்லட்டுமென்று விட்டுவிட்டான்.
அடுத்த நாள் காலை அவனை அழைத்த மாதண்ட நாயகம், மன்னனின் பாசறைக்குச் செல்ல வேண்டுமென்று கூறி அழைத்துச் சென்றார். அங்கே கவலையின் மொத்த உருவமாக அமர்ந்திருந்தான் வல்லாளன். இரவு உறங்கச் செல்லவில்லை என்பதற்கு அறிகுறியாக அவனது பாசறையில் இடப்பட்டிருந்த மஞ்சம் கலையாமல் இருந்தது. இதற்கு முன் பல முறை வல்லாளனைப் பார்த்திருக்கிறான் ஆதவன். வல்லாளன் எந்த நிலையிலும் கலங்காதவன் என்ற பெயரைப் பெற்றிருந்தான். அப்படிப்பட்டவனும் இவ்வளவு கலங்கியிருக்கிறானென்றால், மாதண்ட நாயகம் நேற்று அவ்வாறு இருந்தது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று நினைத்துக் கொண்டான். மேற்கொண்டு அரசரோ, மாதண்ட நாயகமோ பேசட்டுமென்று வாளாவிருந்தான்.
வந்து சிறிது நேரமாகியும், மன்னன் தங்கள் பக்கம் திரும்பாதிருக்கவே, சற்று தொண்டையைக் கனைத்து அரசனது கவனத்தைத் திருப்பப்பார்த்தார் மாதண்ட நாயகம். அதில் வெற்றியும் பெற்றார். இவர்கள் பக்கம் திரும்பிய வல்லாளன், ஆதவன் மீது கண்களை நன்றாக ஓட்டினான். அது ஆதவனை என்னவோ செய்தது. வெட்கத்தில் தலையைக் குனிந்து கொண்டான். அந்த செய்கை வல்லாளனின் முகத்தில் புன்முறுவலை வரவழைத்தது.
"நாயகரே, இவன் நமது திட்டத்தை சரியாக நிறைவேற்றுவானா? இப்படி வெட்கத்தில் வளைந்து நிற்கிறானே?" என்று கேட்டான் வல்லாளன். தொடர்ந்து சிறு சிரிப்பும் வெளிவந்தது அவன் வாயிலிருந்து.
"அரசே, தங்கள் முகத்தில் இந்த மந்தகாசத்தை உண்டாக்கியவன் நிச்சயம் நம் திட்டத்தை நன்றாக நிறைவேற்றுவான். குவலாலாவிலிருந்து உறையூருக்குப் படைகளை நகர்த்திய விதத்திலேயே இவன் திறமையைக் கண்டுபிடித்துவிட்டேன். குவலாலாவில் இப்போது பெரிய படைகள் இல்லாவிட்டாலும், அதை யாராலும் உடனே பிடித்து விட முடியாது. அப்படிப்பட்ட முன்னேற்பாடுகளைச் செய்திருக்கிறான்."
"நல்லது. ஆதவா, உன்னை இங்கே அழைத்ததன் காரணத்தை மாதண்ட நாயகம் விளக்கினாரா?"
"இல்லை அரசே, நேராகத் தங்களிடம் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்" என்றான் ஆதவன் பணிவுடன். அவனிடமிருந்த வெட்கம் சற்று விலகியிருந்தது.
"ம். இந்தப் படையெடுப்பு சில பல ஊகங்களின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. ஆனால் அந்த ஊகங்கள் தவறாகலாம் என்ற நிலை இப்போது இருப்பதாகப் படுகிறது எனக்கு. மாதண்ட நாயகமும் அப்படியே நினைக்கிறார். இந்நிலையில் நமது திட்டத்தில் சிறு மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஆகவே நாம் இங்கிருந்து ஒரு பிரிவுப் படையை நகர்த்திக் கொண்டு மீண்டும் தொரசமுத்திரத்திற்கே செல்லவேண்டும். இங்கிருக்கும் மற்றொரு பிரிவு மதுரையைத் தாக்க வேண்டும். இப்போது கேள்வி என்னவென்றால், யார் தொரசமுத்திரத்திற்குச் செல்வது என்பதுதான். நான் இங்கே இருக்க வேண்டும் என்பது என் ஆசை. நீண்ட நாட்களாகத் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று பாண்டியர்களிடம் உள்ளது. ஆகவே தொரசமுத்திரத்திற்குச் செல்லும் படைக்கு உன்னைத் தளபதியாக நியமிக்கலாம் என்று மாதண்ட நாயகம் கருதுகிறார். உனக்குச் சம்மதமா?" என்று சுருக்கமாக எடுத்துரைத்தான் வல்லாளன.
ஆதவனுக்குக் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டாற்போல் இருந்தது. குவலாலாவின் கோட்டைப் பொறுப்பையே இப்போதுதான் ஏற்றுக்கொண்டிருந்தான். அப்படியிருக்க உடனடியாகப் படைப்பிரிவிற்குத் தளபதியென்றால் என்ன ஆவது? அந்தப் படையில் இருக்கும் மற்ற உபதளபதிகள் இதை ஏற்றுக்கொள்வார்களா? நம்மால் முடிகிற காரியமா? என்ற பல்வேறு கேள்விகள் அவன் மனதில் கணப்பொழுதில் எழுந்தன. அதனால் உடனே பதிலிறுக்க முடியவில்லை. ஆனால் மாதண்ட நாயகம் விடுவதாக இல்லை.
"அரசே, மவுனமாக இருப்பதிலிருந்தே அவனுக்குச் சம்மதம் என்று தெரிகிறதே. இனி தாமதப் படுத்தாமல் படையைப் பிரித்து வடக்கே நடத்த வேண்டியதுத்தான். இம்முறை ராஜபாட்டையிலேயே செல்லலாம்." என்றார் மாதண்ட நாயகம்.
"சரி, நீங்கள் சென்று என் உத்தரவை அனைத்து உபதளபதிகளுக்கும் தெரியப்படுத்துங்கள். நான் சற்று நேரம் ஆதவனுடன் தனியாகப் பேச வேண்டியிருக்கிறது" என்ற வல்லாளன் மாதண்ட நாயகத்தை வெளியேற்றிவிட்டு, ஆதவனை அருகில் அழைத்தான். மாதண்ட நாயகம் வெளியே சென்றுவிட்டார் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, தன் உடையிலிருந்து ஒரு வரைபடத்தை எடுத்து வைத்தான். அது தக்ஷிணபாரதத்தின் படம் என்பது தெள்ளென விளங்கியது ஆதவனுக்கு. மேற்கொண்டு அரசன் பேசுவதற்காகக் காத்திருந்தான்.
"ஆதவா, இந்தப் படத்தை நன்றாகப் பார். இது தக்ஷிண பாரதத்தின் படம் என்பது உனக்குப் புரிந்திருக்கும். நாம் உறையூரில் இருக்கிறோம். இங்கிருந்து நேர் தெற்கே மதுரை இருக்கிறது. சற்றுத் தள்ளி வடமேற்கில் கொல்லி மலை அடிவாரத்தில் மாலிக் கஃபூரின் படைகள் இருக்கின்றன. கிழக்கே தஞ்சைக்கருகில், வீரபாண்டியனின் படைகள் இருக்கின்றன. இந்தப் படைகள் மூன்றும் மதுரையை நோக்கி இருக்கின்றன. வேகமாக வந்து சேர்ந்த இந்தப் படைகள் அனைத்துமே ஏதோ ஒரு காரணத்திற்காக மதுரையைத் தாக்காமல் கடந்த ஒரு வார காலமாக நின்று கொண்டிருக்கின்றன. இதன் காரணம் என்னவென்று உன்னால் ஊகிக்க முடிகிறதா?" என்று வினவினான் வல்லாளன்.
"இந்தப் படைகள் எதிர்ப்பார்த்து வந்த ஒரு நிகழ்வு இன்னும் நடக்காமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் அவை தேங்கி நிற்க எந்த ஒரு காரணமும் இல்லை"
"நன்று ஆதவா. நன்று. இந்தப் படையெடுப்பின் பின் புலத்தை நீ அறிய வேண்டியது அவசியமாகிறது. பாண்டியர்கள் ஹொய்சளர்களை கண்ணூர் கொப்பத்திலிருந்து விரட்டியடித்தனர். கண்ணூர்க்கொப்பம், ஹொய்சளர்களின் தமிழகத் தலை நகரம். அதன் பிறகுதான் நாம் குவலாலாவை பலப்படுத்தினோம். இப்போது குவலாலா ஹொய்சளர்களின் எல்லையாக விளங்குகிறது. கண்ணூர்க்கொப்பத்தை மீட்டெடுப்பது மட்டுமின்றி மதுரையையும் அழிப்பதே என் படையெடுப்பின் முக்கிய நோக்கம். இதன் காரணமாக மாலிக் கஃபூரையும் நான் சந்தித்தேன். அவனையும் துணைக்கழைத்தேன். அவனும் ஒப்புக்கொண்டான். அவ்வாறே அவனது படைகளையும் கொல்லிமலைக்கருகில் நிறுத்தியிருக்கிறான்."
"திட்டப்படி சரியாகத்தான் இருக்கிறது. இனி தாமதமின்றி மதுரையைத் தாக்கலாமே."
"அப்படித்தான் செய்திருக்க வேண்டும். ஆனால் மாலிக் கஃபூரின் சூழ்ச்சியும் வஞ்சகமும் இப்போதுதான் புரிகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைக்கிறான். ஹொய்சளர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே உள்ள பகையைப் பயன் படுத்தி இருவரையும் அழித்து அவன் பயன் பெற நினைக்கிறான். அவன் விரித்த வலையில் தக்ஷிண பாரதம் முழுவதும் விழுந்து விட்டதாகவே நினைக்கிறேன். ஆனால் ஹொய்சளர்களை அவ்வளவு எளிதில் அவனால் அழித்துவிட முடியாது. எனக்கு உதவுவதாகச் சொன்னது போல் சுந்தர பாண்டியனிடமும் சொல்லியிருக்கிறான். அதனால்தான் சுந்தர பாண்டியன் யாரையும் முன்னேறித் தாக்கவில்லை. மாலிக் கஃபூரின் உதவியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறான்.
இதன் படி, மாலிக் நம்மையும் பாண்டியரையும் மோதவிட்டு இடையில் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு வழியில் தொரசமுத்திரத்தையும் அழித்துவிட்டு மீண்டும் தில்லி திரும்பத் திட்டமிட்டுள்ளான். தொரசமுத்திரத்தைத் தாக்க மாட்டேன் என்று என்னிடம் கூறிய உறுதிமொழியை உடைப்பதாக முடிவெடுத்துவிட்டான். அவனை நம்பியது என் தவறுதான். அதற்கான பரிகாரம் தேட வேண்டியதும் என் பொறுப்பு. ஆகவே நான் இங்கிருந்து மாலிக் கஃபூரையும், சுந்தர பாண்டியனையும் கவனித்துக்கொள்கிறேன். நீ தொரசமுத்திரத்திற்குச் சென்று அதன் பாதுகாப்பை கவனித்துக்கொள். இங்கே போர் முடிந்தவுடன் நான் உன்னுடன் வந்து சேர்ந்து கொள்கிறேன். இனி நாம் படைத்தளத்திற்குச் சென்று தொரசமுத்திரம் செல்ல வேண்டிய படைகளைப் பிரித்தெடுப்போம்" என்று சொல்லி வேகமாக வெளியே சென்றான் வல்லாளன்.
ஆதவனுக்கு அது அரசனின் ஆணை என்று புரிந்தது. இனி எல்லாம் இறைவன் செயல் என்று எண்ணியவாறு அரசனைத் தொடர்ந்து சென்றான்.
(தொடரும்)
தஞ்சைக்கு சற்று வடக்கே தண்டு இறங்கியிருந்த வீரபாண்டியனின் படைத்தளத்தில் அமைந்திருந்த ஒரு கூடாரத்தில் வீரபாண்டியன், விக்ரம பாண்டியன், மாராயர் மற்றும் இளவழுதி ஆகியோர் அமர்ந்திருந்தனர். மேற்கொண்டு படை நடத்த வேண்டியதைப் பற்றி விவாதிப்பதற்காகவே அவர்கள் அங்கே அமர்ந்திருந்தது தெளிவாகத் தெரிந்தது.
"விக்ரம பாண்டியரே, நாம் இங்கே வந்து சற்றேறக்குறைய ஒரு வாரம் ஆகிவிட்டது. கொல்லி மலை வில்லவர்களும் வந்து சேர்ந்து விட்டனர். நமது படைகள் மதுரையை நோக்கி உடனே புறப்படுவது நல்லது. இல்லாவிட்டால் படை வீரர்களிடத்தில் சோம்பலும் உற்சாகக் குறைவும் தோன்றிவிடும்" என்றார் மாராயர்.
"மாராயரே, அதை உணர்ந்தே இருக்கிறேன். ஆனால் நாம் மதுரையை அடையும் போது மாலிக் கஃபூரின் படைகளும் அங்கே வந்து சேர்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் சுந்தரன் நம்மைத் தாக்குவதா அல்லது மாலிக்கஃபூரைத் தாக்குவதா என்று புரியாமல் குழப்பமடைவான். ஆகவே மாலிக்கின் படைகளின் நடமாட்டத்தைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். அங்கிருந்து தக்க செய்தி வந்தவுடன் நம் புறப்பட்டுவிடலாம்." விக்ரமரின் பதிலில் இருந்த தந்திரம், மாராயரை அமைதிப்படுத்தியது.
=====
உறையூரின் அருகே தண்டு இறங்கியிருந்த ஹொய்சளப்படைகளைப் பார்வையிட்டபடியே அவற்றின் ஊடாக நடந்து சென்ற குவலாலா கோட்டைத் தலைவன் ஆதவனுக்கு இந்தப் படையெடுப்பிற்கான காரணம் முற்றிலும் விளங்கவில்லை. இதை ஒருசில உப தளபதிகளும் வாய்விட்டு கேட்கவே செய்தனர். அவர்களையெல்லாம் மன்னர் உத்தரவு என்ற வார்த்தைகளைச் சொல்லி அடக்கியாயிற்று. ஹொய்சளத்தின் ப்ரதான படைகள் இங்கே வந்து விட தேசம் நிர்க்கதியாக இருக்கிறதே என்ற கவலை ஏற்பட்டது அவனுக்கு. நாற்புறமும் பகைவர் இருக்க, அனைத்துப் படைகளையும் தெற்கு நோக்கித் திருப்ப வேண்டிய அவசியம் ஏன் என்ற கேள்விக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. சரியான சமயத்தில் வந்து சேர்ந்து கொள்வதாக ஓலை மூலம் தெரிவித்திருந்த மன்னரும் வந்து சேரவில்லை. இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் இங்கே அமைதியாக அமர்ந்திருப்பது? வந்த வேகத்தில் நேராக மதுரை மீது இறங்கியிருந்தால் இந்நேரம் மதுரைக் கோட்டையில் ஹொய்சளர்களின் கொடி பறந்திருக்கும். இந்த மாதண்ட நாயகம் பிடித்து வைத்த பிள்ளையாரைப் போல் இருக்கிறாரே ஒழிய ஒரு உத்தரவும் தருவதில்லை. ம்ஹூம். ஒன்றும் சொல்லிக் கொள்வது போல் இல்லையே. இது எங்கே கொண்டு போய் விடும்? தாயே ஹொய்சளர்களைக் காப்பாற்று என்று குவலாலாவின் காவல் தெய்வம், துர்க்கையை மனதார வேண்டிக் கொண்டான்.
அந்த வேண்டுதலை குவலாலா கோலாரம்மன் காதில் விழுந்திருக்க வேண்டும். அன்று மாலையே ஹொய்சள மன்னன் வல்லாளன் அந்த படைத்தளத்திற்கு வந்து சேர்ந்தான். ஆனால் அவன் முகத்தில் உற்சாகம் சிறிதளவும் இல்லை. வந்தவுடன் ஸ்நானபானங்களைக் கூட கவனிக்காமல், மாதண்ட நாயகத்துடன் தனியாக ஆலோசனையில் இறங்கி விட்டான். சற்றேறக்குறைய நான்கு நாழிகைகளுக்கும் மேலாக நீடித்த ஆலோசனைக்குப் பிறகு வெளிப்போந்த மாதண்ட நாயகத்தின் முகத்திலும் ஈயாடவில்லை. எதற்கும் அசைந்து கொடுக்காத மாதண்ட நாயகத்தையே ஆட்டம் காண வைத்த செய்தி என்னவாக இருக்கும் என்று எவ்வளவு சிந்தித்துப் பார்த்தும் ஆதவனுக்குப் புலப்படவில்லை. எனினும் அவராகவே சொல்லட்டுமென்று விட்டுவிட்டான்.
அடுத்த நாள் காலை அவனை அழைத்த மாதண்ட நாயகம், மன்னனின் பாசறைக்குச் செல்ல வேண்டுமென்று கூறி அழைத்துச் சென்றார். அங்கே கவலையின் மொத்த உருவமாக அமர்ந்திருந்தான் வல்லாளன். இரவு உறங்கச் செல்லவில்லை என்பதற்கு அறிகுறியாக அவனது பாசறையில் இடப்பட்டிருந்த மஞ்சம் கலையாமல் இருந்தது. இதற்கு முன் பல முறை வல்லாளனைப் பார்த்திருக்கிறான் ஆதவன். வல்லாளன் எந்த நிலையிலும் கலங்காதவன் என்ற பெயரைப் பெற்றிருந்தான். அப்படிப்பட்டவனும் இவ்வளவு கலங்கியிருக்கிறானென்றால், மாதண்ட நாயகம் நேற்று அவ்வாறு இருந்தது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்று நினைத்துக் கொண்டான். மேற்கொண்டு அரசரோ, மாதண்ட நாயகமோ பேசட்டுமென்று வாளாவிருந்தான்.
வந்து சிறிது நேரமாகியும், மன்னன் தங்கள் பக்கம் திரும்பாதிருக்கவே, சற்று தொண்டையைக் கனைத்து அரசனது கவனத்தைத் திருப்பப்பார்த்தார் மாதண்ட நாயகம். அதில் வெற்றியும் பெற்றார். இவர்கள் பக்கம் திரும்பிய வல்லாளன், ஆதவன் மீது கண்களை நன்றாக ஓட்டினான். அது ஆதவனை என்னவோ செய்தது. வெட்கத்தில் தலையைக் குனிந்து கொண்டான். அந்த செய்கை வல்லாளனின் முகத்தில் புன்முறுவலை வரவழைத்தது.
"நாயகரே, இவன் நமது திட்டத்தை சரியாக நிறைவேற்றுவானா? இப்படி வெட்கத்தில் வளைந்து நிற்கிறானே?" என்று கேட்டான் வல்லாளன். தொடர்ந்து சிறு சிரிப்பும் வெளிவந்தது அவன் வாயிலிருந்து.
"அரசே, தங்கள் முகத்தில் இந்த மந்தகாசத்தை உண்டாக்கியவன் நிச்சயம் நம் திட்டத்தை நன்றாக நிறைவேற்றுவான். குவலாலாவிலிருந்து உறையூருக்குப் படைகளை நகர்த்திய விதத்திலேயே இவன் திறமையைக் கண்டுபிடித்துவிட்டேன். குவலாலாவில் இப்போது பெரிய படைகள் இல்லாவிட்டாலும், அதை யாராலும் உடனே பிடித்து விட முடியாது. அப்படிப்பட்ட முன்னேற்பாடுகளைச் செய்திருக்கிறான்."
"நல்லது. ஆதவா, உன்னை இங்கே அழைத்ததன் காரணத்தை மாதண்ட நாயகம் விளக்கினாரா?"
"இல்லை அரசே, நேராகத் தங்களிடம் அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்" என்றான் ஆதவன் பணிவுடன். அவனிடமிருந்த வெட்கம் சற்று விலகியிருந்தது.
"ம். இந்தப் படையெடுப்பு சில பல ஊகங்களின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. ஆனால் அந்த ஊகங்கள் தவறாகலாம் என்ற நிலை இப்போது இருப்பதாகப் படுகிறது எனக்கு. மாதண்ட நாயகமும் அப்படியே நினைக்கிறார். இந்நிலையில் நமது திட்டத்தில் சிறு மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஆகவே நாம் இங்கிருந்து ஒரு பிரிவுப் படையை நகர்த்திக் கொண்டு மீண்டும் தொரசமுத்திரத்திற்கே செல்லவேண்டும். இங்கிருக்கும் மற்றொரு பிரிவு மதுரையைத் தாக்க வேண்டும். இப்போது கேள்வி என்னவென்றால், யார் தொரசமுத்திரத்திற்குச் செல்வது என்பதுதான். நான் இங்கே இருக்க வேண்டும் என்பது என் ஆசை. நீண்ட நாட்களாகத் தீர்க்க வேண்டிய கணக்கு ஒன்று பாண்டியர்களிடம் உள்ளது. ஆகவே தொரசமுத்திரத்திற்குச் செல்லும் படைக்கு உன்னைத் தளபதியாக நியமிக்கலாம் என்று மாதண்ட நாயகம் கருதுகிறார். உனக்குச் சம்மதமா?" என்று சுருக்கமாக எடுத்துரைத்தான் வல்லாளன.
ஆதவனுக்குக் கண்ணைக்கட்டிக் காட்டில் விட்டாற்போல் இருந்தது. குவலாலாவின் கோட்டைப் பொறுப்பையே இப்போதுதான் ஏற்றுக்கொண்டிருந்தான். அப்படியிருக்க உடனடியாகப் படைப்பிரிவிற்குத் தளபதியென்றால் என்ன ஆவது? அந்தப் படையில் இருக்கும் மற்ற உபதளபதிகள் இதை ஏற்றுக்கொள்வார்களா? நம்மால் முடிகிற காரியமா? என்ற பல்வேறு கேள்விகள் அவன் மனதில் கணப்பொழுதில் எழுந்தன. அதனால் உடனே பதிலிறுக்க முடியவில்லை. ஆனால் மாதண்ட நாயகம் விடுவதாக இல்லை.
"அரசே, மவுனமாக இருப்பதிலிருந்தே அவனுக்குச் சம்மதம் என்று தெரிகிறதே. இனி தாமதப் படுத்தாமல் படையைப் பிரித்து வடக்கே நடத்த வேண்டியதுத்தான். இம்முறை ராஜபாட்டையிலேயே செல்லலாம்." என்றார் மாதண்ட நாயகம்.
"சரி, நீங்கள் சென்று என் உத்தரவை அனைத்து உபதளபதிகளுக்கும் தெரியப்படுத்துங்கள். நான் சற்று நேரம் ஆதவனுடன் தனியாகப் பேச வேண்டியிருக்கிறது" என்ற வல்லாளன் மாதண்ட நாயகத்தை வெளியேற்றிவிட்டு, ஆதவனை அருகில் அழைத்தான். மாதண்ட நாயகம் வெளியே சென்றுவிட்டார் என்பதை உறுதி செய்து கொண்ட பிறகு, தன் உடையிலிருந்து ஒரு வரைபடத்தை எடுத்து வைத்தான். அது தக்ஷிணபாரதத்தின் படம் என்பது தெள்ளென விளங்கியது ஆதவனுக்கு. மேற்கொண்டு அரசன் பேசுவதற்காகக் காத்திருந்தான்.
"ஆதவா, இந்தப் படத்தை நன்றாகப் பார். இது தக்ஷிண பாரதத்தின் படம் என்பது உனக்குப் புரிந்திருக்கும். நாம் உறையூரில் இருக்கிறோம். இங்கிருந்து நேர் தெற்கே மதுரை இருக்கிறது. சற்றுத் தள்ளி வடமேற்கில் கொல்லி மலை அடிவாரத்தில் மாலிக் கஃபூரின் படைகள் இருக்கின்றன. கிழக்கே தஞ்சைக்கருகில், வீரபாண்டியனின் படைகள் இருக்கின்றன. இந்தப் படைகள் மூன்றும் மதுரையை நோக்கி இருக்கின்றன. வேகமாக வந்து சேர்ந்த இந்தப் படைகள் அனைத்துமே ஏதோ ஒரு காரணத்திற்காக மதுரையைத் தாக்காமல் கடந்த ஒரு வார காலமாக நின்று கொண்டிருக்கின்றன. இதன் காரணம் என்னவென்று உன்னால் ஊகிக்க முடிகிறதா?" என்று வினவினான் வல்லாளன்.
"இந்தப் படைகள் எதிர்ப்பார்த்து வந்த ஒரு நிகழ்வு இன்னும் நடக்காமல் இருக்க வேண்டும். இல்லையென்றால் அவை தேங்கி நிற்க எந்த ஒரு காரணமும் இல்லை"
"நன்று ஆதவா. நன்று. இந்தப் படையெடுப்பின் பின் புலத்தை நீ அறிய வேண்டியது அவசியமாகிறது. பாண்டியர்கள் ஹொய்சளர்களை கண்ணூர் கொப்பத்திலிருந்து விரட்டியடித்தனர். கண்ணூர்க்கொப்பம், ஹொய்சளர்களின் தமிழகத் தலை நகரம். அதன் பிறகுதான் நாம் குவலாலாவை பலப்படுத்தினோம். இப்போது குவலாலா ஹொய்சளர்களின் எல்லையாக விளங்குகிறது. கண்ணூர்க்கொப்பத்தை மீட்டெடுப்பது மட்டுமின்றி மதுரையையும் அழிப்பதே என் படையெடுப்பின் முக்கிய நோக்கம். இதன் காரணமாக மாலிக் கஃபூரையும் நான் சந்தித்தேன். அவனையும் துணைக்கழைத்தேன். அவனும் ஒப்புக்கொண்டான். அவ்வாறே அவனது படைகளையும் கொல்லிமலைக்கருகில் நிறுத்தியிருக்கிறான்."
"திட்டப்படி சரியாகத்தான் இருக்கிறது. இனி தாமதமின்றி மதுரையைத் தாக்கலாமே."
"அப்படித்தான் செய்திருக்க வேண்டும். ஆனால் மாலிக் கஃபூரின் சூழ்ச்சியும் வஞ்சகமும் இப்போதுதான் புரிகிறது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைக்கிறான். ஹொய்சளர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே உள்ள பகையைப் பயன் படுத்தி இருவரையும் அழித்து அவன் பயன் பெற நினைக்கிறான். அவன் விரித்த வலையில் தக்ஷிண பாரதம் முழுவதும் விழுந்து விட்டதாகவே நினைக்கிறேன். ஆனால் ஹொய்சளர்களை அவ்வளவு எளிதில் அவனால் அழித்துவிட முடியாது. எனக்கு உதவுவதாகச் சொன்னது போல் சுந்தர பாண்டியனிடமும் சொல்லியிருக்கிறான். அதனால்தான் சுந்தர பாண்டியன் யாரையும் முன்னேறித் தாக்கவில்லை. மாலிக் கஃபூரின் உதவியை எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறான்.
இதன் படி, மாலிக் நம்மையும் பாண்டியரையும் மோதவிட்டு இடையில் கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு வழியில் தொரசமுத்திரத்தையும் அழித்துவிட்டு மீண்டும் தில்லி திரும்பத் திட்டமிட்டுள்ளான். தொரசமுத்திரத்தைத் தாக்க மாட்டேன் என்று என்னிடம் கூறிய உறுதிமொழியை உடைப்பதாக முடிவெடுத்துவிட்டான். அவனை நம்பியது என் தவறுதான். அதற்கான பரிகாரம் தேட வேண்டியதும் என் பொறுப்பு. ஆகவே நான் இங்கிருந்து மாலிக் கஃபூரையும், சுந்தர பாண்டியனையும் கவனித்துக்கொள்கிறேன். நீ தொரசமுத்திரத்திற்குச் சென்று அதன் பாதுகாப்பை கவனித்துக்கொள். இங்கே போர் முடிந்தவுடன் நான் உன்னுடன் வந்து சேர்ந்து கொள்கிறேன். இனி நாம் படைத்தளத்திற்குச் சென்று தொரசமுத்திரம் செல்ல வேண்டிய படைகளைப் பிரித்தெடுப்போம்" என்று சொல்லி வேகமாக வெளியே சென்றான் வல்லாளன்.
ஆதவனுக்கு அது அரசனின் ஆணை என்று புரிந்தது. இனி எல்லாம் இறைவன் செயல் என்று எண்ணியவாறு அரசனைத் தொடர்ந்து சென்றான்.
(தொடரும்)
Wednesday, January 6, 2010
சக்கரவியூகம் - இரண்டாம் பாகம் . . . 19
அத்தியாயம் 19 - சுந்தர பாண்டியன் திட்டம்
தென்னகத்தின் வரலாற்றில், குறிப்பாகத் தமிழகத்தின் வரலாற்றில் ஏற்பட்ட முக்கியத் திருப்பம் மாலிக் கஃபூரின் மதுரைப் படையெடுப்பு. இந்தப் படையெடுப்பைப் பற்றி வரலாற்றில் பல்வேறு விதமான குறிப்புகள் காணப்படுகின்றன. அமீர் குஸ்ரூ என்பவர், சுந்தர பாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையே பகை இருந்ததென்றும் அதைப் பயன் படுத்திக்கொண்டு மாலிக் கஃபூர் மதுரை மீது படையெடுத்தான் என்றும் தெரிவிக்கிறார். இதை வன்மையாக மறுக்கின்றனர் தமிழக வரலாற்றாய்வாளர்கள். வீர பாண்டியனும் சுந்தர பாண்டியனும் தனித்தனியாக அரசாண்டு வந்தாலும் அவர்களிடையே பகையில்லையென்றும், ஒரே நேரத்தில் இருவரும் அரசாள்வது பாண்டிய குலத்தின் வழமையான ஒன்றேயென்றும் தெரிவிக்கின்றனர். சுந்தர பாண்டியன் தன் தந்தை மீது மிகுந்த மரியாதையும் பக்தியும் வைத்திருந்தான் என்றும், தன் தந்தையின் உடல் நலம் பெற வேண்டி கோவில்களுக்கு நிவந்தங்கள் அளித்ததாகவும் தெரிவிக்கிறார்கள். இந்தக் கருத்துகள் இப்புதினத்தைப் புரிந்து கொள்ள மேலும் வலு சேர்க்கும்.
=====
இரவு நன்றாக மலர்ந்து விட்டாலும், மதுரை வீதிகளில் கூட்டம் குறையாததால் ஆங்காங்கே ஏற்றப்பட்ட பந்தங்களால் நகரம் ஜொலித்தது. நகருக்கு வடக்கே சில காத தூரத்தில் எதிரிப் படைகள் தண்டு இறங்கியிருந்த செய்தி நகர மக்களுக்கு அரசல் புரசலாகத் தெரிந்திருந்தாலும், அதைப் பற்றி அவர்கள் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அவர்களது வழக்கமான கோலாகலத்திற்கும் குறைவில்லை.
ஆனால், அதேநேரத்தில் அரண்மனையின் மாடத்தில் அமைதியின்றி நின்றிருந்தான் சுந்தர பாண்டியன். அவன் திட்டம் நிறைவேறாமல் போய் விடுமோ என்ற அச்சம் அவன் மனதில் எழுந்தது. ஆதரவுக்கரம் நீட்ட தகுதியான யாரும் இல்லாத நிலையில் தான் இருப்பதாகப் பட்டது அவனுக்கு. மாலிக் கஃபூரைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கச் சென்ற ஆட்களும் இன்னும் திரும்பவில்லை. ஒரு நெடிய பெருமூச்சில் தன் மனதிலிருந்த பாரத்தைக் குறைக்கப்பார்த்தான். அது கூடியதே தவிர குறையவில்லை.
எதிரிப்படைகள் தளம் அமைத்து சற்றேறக்குறைய பதினைந்து தினங்கள் ஆகிவிட்டன. எந்நேரமும் அவை முன்னேறக்கூடும். அவனது படைகளும் போருக்கு ஆயத்தமாகவே இருந்தன. ஆனால் ஒரே சமயத்தில் மூன்று பேர் தாக்கினால் அவை சிதறிவிடும் அபாயம் இருந்தது. இந்த வீர பாண்டியனும் சமயம் பார்த்து மூக்கை நுழைக்கிறானே என்ற கோபம் அவனை வாட்டியது. முதலில் அவனைத்தான் தாக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டான். மேலும் சில நாழிகைகள் கடந்தும் அடுத்து செய்யவேண்டிய செயல் என்னவென்பது முடிவெடுக்க முடியாததாக இருந்தது. மன பாரத்தை இறுதியில் மீனாட்சியம்மையின் பாதத்தில் வைத்துவிடவேண்டியதுதான் என்று எண்ணினான்.
====
மாலிக் கஃபூருக்குத் திடீரென மர்மக் காய்ச்சல் ஏற்படவே, திருமலைக் காட்டிலேயே சில காலம் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவன் சாதாரண உடையிலேயே இருந்ததால் அவனை யாரும் அடையாளம் காண முடியவில்லை. அவ்வப்போது இசுலாமிய வீரர்கள் அந்தப் பகுதியில் உலாவுவதால் யாருக்கும் எவ்வித சந்தேகமும் ஏற்படவில்லை. எங்கே என்ன நடக்கிறது என்பதும் அவனுக்குத் தெரியவில்லை. மனதில் இருப்புக் கொள்ளாமல் பல்லைக் கடித்துக் கொண்டு அங்கே தங்கியிருந்தான். அவனுக்கு வைத்தியம் பார்ப்பவர்களோ, அவனை எங்கும் வெளியில் செல்ல விடாமல், மயக்க மருந்தைக் கொடுத்து சர்வ ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். சற்றேறக்குறைய ஒரு மாதத்திற்குப் பின்னரே அவன் உடல் நிலை தேறியது. அதுவரையில் சிகிச்சை போதுமென்று பலவந்தமாக அங்கிருந்து கிளம்பி காஞ்சி வழியாகப் பயணப்பட்டான்.
காஞ்சியில் அப்போது திருவாதிரைத் திருநாளும், வைணவத் தலங்களில் பகல் பத்து உற்சவங்களும் நடைபெற்று வந்தன. வழியில் தென் பட்ட கோவில்களில் நடந்த இந்த உற்சவங்களும், தெய்வத்திருமேனிகளின் வீதியுலாக்களும் அத்திருமேனியில் படர்ந்திருந்த விலைமதிப்பில்லாத ஆபரணங்களும் நவரத்தினங்களும் அவன் உள்ளக்கிடைக்கைக்குப் பெரிதும் தூபம் போட்டன. ஆனால் ஏதும் செய்யவியலாத கையறு நிலையில் இருந்தான். ஆஹா... வடக்கே இருக்கும் ஆலயங்களைக் கொள்ளையடித்து மார்தட்டிக் கொண்டார்களே, இங்கேயல்லவா அனைத்து செல்வங்களும் இருக்கின்றன. இருக்கட்டும் இருக்கட்டும், இவையனைத்தும் ஒரு நாளைக்கு என் வசமாகும். அப்போது பார்க்கிறேன் தில்லி பாதுஷாவை.. என்று மனதில் கறுவிக்கொண்டான்.
அப்படி நினைத்துக் கொண்டே அந்தப் பக்கமாக வந்த ஒரு சிவனாரின் தெய்வத்திருமேனி மீது அவன் கண்கள் படர்ந்தன. அவன் எண்ணத்தைக் கண்டு கொண்டதாக இருந்தது சிவனாரின் கொவ்வைச் செவ்வாயிலிருந்து வெளிப்பட்ட குமிழ் சிரிப்பு!!!.
(தொடரும்)
தென்னகத்தின் வரலாற்றில், குறிப்பாகத் தமிழகத்தின் வரலாற்றில் ஏற்பட்ட முக்கியத் திருப்பம் மாலிக் கஃபூரின் மதுரைப் படையெடுப்பு. இந்தப் படையெடுப்பைப் பற்றி வரலாற்றில் பல்வேறு விதமான குறிப்புகள் காணப்படுகின்றன. அமீர் குஸ்ரூ என்பவர், சுந்தர பாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையே பகை இருந்ததென்றும் அதைப் பயன் படுத்திக்கொண்டு மாலிக் கஃபூர் மதுரை மீது படையெடுத்தான் என்றும் தெரிவிக்கிறார். இதை வன்மையாக மறுக்கின்றனர் தமிழக வரலாற்றாய்வாளர்கள். வீர பாண்டியனும் சுந்தர பாண்டியனும் தனித்தனியாக அரசாண்டு வந்தாலும் அவர்களிடையே பகையில்லையென்றும், ஒரே நேரத்தில் இருவரும் அரசாள்வது பாண்டிய குலத்தின் வழமையான ஒன்றேயென்றும் தெரிவிக்கின்றனர். சுந்தர பாண்டியன் தன் தந்தை மீது மிகுந்த மரியாதையும் பக்தியும் வைத்திருந்தான் என்றும், தன் தந்தையின் உடல் நலம் பெற வேண்டி கோவில்களுக்கு நிவந்தங்கள் அளித்ததாகவும் தெரிவிக்கிறார்கள். இந்தக் கருத்துகள் இப்புதினத்தைப் புரிந்து கொள்ள மேலும் வலு சேர்க்கும்.
=====
இரவு நன்றாக மலர்ந்து விட்டாலும், மதுரை வீதிகளில் கூட்டம் குறையாததால் ஆங்காங்கே ஏற்றப்பட்ட பந்தங்களால் நகரம் ஜொலித்தது. நகருக்கு வடக்கே சில காத தூரத்தில் எதிரிப் படைகள் தண்டு இறங்கியிருந்த செய்தி நகர மக்களுக்கு அரசல் புரசலாகத் தெரிந்திருந்தாலும், அதைப் பற்றி அவர்கள் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. அவர்களது வழக்கமான கோலாகலத்திற்கும் குறைவில்லை.
ஆனால், அதேநேரத்தில் அரண்மனையின் மாடத்தில் அமைதியின்றி நின்றிருந்தான் சுந்தர பாண்டியன். அவன் திட்டம் நிறைவேறாமல் போய் விடுமோ என்ற அச்சம் அவன் மனதில் எழுந்தது. ஆதரவுக்கரம் நீட்ட தகுதியான யாரும் இல்லாத நிலையில் தான் இருப்பதாகப் பட்டது அவனுக்கு. மாலிக் கஃபூரைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்கச் சென்ற ஆட்களும் இன்னும் திரும்பவில்லை. ஒரு நெடிய பெருமூச்சில் தன் மனதிலிருந்த பாரத்தைக் குறைக்கப்பார்த்தான். அது கூடியதே தவிர குறையவில்லை.
எதிரிப்படைகள் தளம் அமைத்து சற்றேறக்குறைய பதினைந்து தினங்கள் ஆகிவிட்டன. எந்நேரமும் அவை முன்னேறக்கூடும். அவனது படைகளும் போருக்கு ஆயத்தமாகவே இருந்தன. ஆனால் ஒரே சமயத்தில் மூன்று பேர் தாக்கினால் அவை சிதறிவிடும் அபாயம் இருந்தது. இந்த வீர பாண்டியனும் சமயம் பார்த்து மூக்கை நுழைக்கிறானே என்ற கோபம் அவனை வாட்டியது. முதலில் அவனைத்தான் தாக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டான். மேலும் சில நாழிகைகள் கடந்தும் அடுத்து செய்யவேண்டிய செயல் என்னவென்பது முடிவெடுக்க முடியாததாக இருந்தது. மன பாரத்தை இறுதியில் மீனாட்சியம்மையின் பாதத்தில் வைத்துவிடவேண்டியதுதான் என்று எண்ணினான்.
====
மாலிக் கஃபூருக்குத் திடீரென மர்மக் காய்ச்சல் ஏற்படவே, திருமலைக் காட்டிலேயே சில காலம் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவன் சாதாரண உடையிலேயே இருந்ததால் அவனை யாரும் அடையாளம் காண முடியவில்லை. அவ்வப்போது இசுலாமிய வீரர்கள் அந்தப் பகுதியில் உலாவுவதால் யாருக்கும் எவ்வித சந்தேகமும் ஏற்படவில்லை. எங்கே என்ன நடக்கிறது என்பதும் அவனுக்குத் தெரியவில்லை. மனதில் இருப்புக் கொள்ளாமல் பல்லைக் கடித்துக் கொண்டு அங்கே தங்கியிருந்தான். அவனுக்கு வைத்தியம் பார்ப்பவர்களோ, அவனை எங்கும் வெளியில் செல்ல விடாமல், மயக்க மருந்தைக் கொடுத்து சர்வ ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். சற்றேறக்குறைய ஒரு மாதத்திற்குப் பின்னரே அவன் உடல் நிலை தேறியது. அதுவரையில் சிகிச்சை போதுமென்று பலவந்தமாக அங்கிருந்து கிளம்பி காஞ்சி வழியாகப் பயணப்பட்டான்.
காஞ்சியில் அப்போது திருவாதிரைத் திருநாளும், வைணவத் தலங்களில் பகல் பத்து உற்சவங்களும் நடைபெற்று வந்தன. வழியில் தென் பட்ட கோவில்களில் நடந்த இந்த உற்சவங்களும், தெய்வத்திருமேனிகளின் வீதியுலாக்களும் அத்திருமேனியில் படர்ந்திருந்த விலைமதிப்பில்லாத ஆபரணங்களும் நவரத்தினங்களும் அவன் உள்ளக்கிடைக்கைக்குப் பெரிதும் தூபம் போட்டன. ஆனால் ஏதும் செய்யவியலாத கையறு நிலையில் இருந்தான். ஆஹா... வடக்கே இருக்கும் ஆலயங்களைக் கொள்ளையடித்து மார்தட்டிக் கொண்டார்களே, இங்கேயல்லவா அனைத்து செல்வங்களும் இருக்கின்றன. இருக்கட்டும் இருக்கட்டும், இவையனைத்தும் ஒரு நாளைக்கு என் வசமாகும். அப்போது பார்க்கிறேன் தில்லி பாதுஷாவை.. என்று மனதில் கறுவிக்கொண்டான்.
அப்படி நினைத்துக் கொண்டே அந்தப் பக்கமாக வந்த ஒரு சிவனாரின் தெய்வத்திருமேனி மீது அவன் கண்கள் படர்ந்தன. அவன் எண்ணத்தைக் கண்டு கொண்டதாக இருந்தது சிவனாரின் கொவ்வைச் செவ்வாயிலிருந்து வெளிப்பட்ட குமிழ் சிரிப்பு!!!.
(தொடரும்)
Thursday, December 31, 2009
சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 18
அத்தியாயம் 18 - திரிசூலம் !
ஜலாலுதீனிடம் உத்தரவைப் பிறப்பித்த சிறிது நேரத்திலேயே அந்தக் காட்டிலிருந்து ஒரு குதிரையில் புறப்பட்டு விட்டான் மாலிக். உடன் வர நினைத்த சில காவலர்களையும் வேண்டாமென்று சொல்லிவிட்டான். அங்கிருந்து நேர் தெற்கு நோக்கிச் செல்லாமல் தென்கிழக்காகப் பயணப் பட்டான். சற்றேறக்குறைய ஒரே வாரத்தில் திருமலையடிவாரத்தை அடைந்துவிட்டான். அங்கிருந்து காஞ்சி வழியாக செல்வதுதான் அவனது திட்டம். ஒரே வாரத்தில் அவ்வளவு தூரத்தைக் கடந்து விட்டதால் சற்று இளைப்பாற நினைத்தான். அவனது படைகளும் வந்து சேர வேண்டுமல்லவா?
=====
மாலிக் திருமலையடிவாரத்தை அடைந்த அதே சமயத்தில் குவலாலாவிற்கு வந்த குதிரைப்படைத் தலைவன் வெளியேறினான். அதற்குப் பிறகு மாதண்ட நாயகத்தின் உத்தரவின் படி படைகள் புறப்படுவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளத் துவங்கினான். முதலில் உணவுப் பொதிகளைச் சுமந்து கொண்டு மாட்டு வண்டிகள் முன்னே சென்றன. அவற்றின் பின், தண்டு இறக்கும் போது தேவையான கூடாரங்கள், நீண்ட கழிகள், வடங்கள் ஆகியவை அடங்கிய வண்டிகள் சென்றன. அதைத் தொடர்ந்து, தளவாடங்களைச் சுமந்து செல்லும் பொதிகள் சென்றன. அவற்றின் மேல் பாதுகாப்புக் கருதி வைக்கோல் போர்த்தப்பட்டிருந்தது. இவற்றோடு யானைப்படையும் புறப்பட்டது. யானைகளுக்கு மதம் பிடிக்காமலிருக்கும் பொருட்டு, அதற்குத் தேவையான மருந்துகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆகவே யானைகள் எது சொன்னாலும் செய்யும் பூனைகளைப் போல் சாதுவாகக் கிளம்பிச் சென்றன.
இவை குவலாலாவை விட்டுக் கிளம்பிய மூன்றாவது நாள், காலாட்படையினரை உறையூர் நோக்கிச் செல்லுமாறு பணித்தான் ஆதவன். வழியில் முன்னே சென்ற உணவுப் பொதிகள் மூலமாக இந்தப் படைக்கு ஆங்காங்கே உணவு தயாராக வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் கிளம்பிய மூன்று நாட்களுக்குப் பிறகு குதிரைப்படைகள் புறப்பட்டன. அவற்றுடன் முக்கிய தளபதிகளுக்கான ரதங்களும் புறப்பட்டன.
இவ்வாறாக ஒரே வாரத்தில் அவனது படைகள் அனைத்தும் ஒரே சமயத்தில் உறையூர் சேரும் வகையில் படைகளை நடத்தினான். படைகள் செல்லும் பெருவழியில் எந்த வித நெருக்கமும் ஏற்படாத வகையில் அமைந்த இந்த ஏற்பாட்டை மிகவும் பாராட்டினார் மாதண்ட நாயகம். கோட்டையைப் பாதுகாக்க சிறு படையை விட்டுவிட்டு மாதண்ட நாயகமும், ஆதவனும் உறையூர் புறப்பட்டனர்.
======
ஜலாலுதீன் தன் படைகளை மாலிக் கஃபூரின் உத்தரவுப் படி தென் மேற்காக நடத்திச் சென்றான். நேராக கொல்லி மலை செல்லாமல், வட ஆந்திரத்திலிருந்து மேற்கே சென்று மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டி தலைக்காடு வரை இறங்கி அங்கிருந்து மீண்டும் தென்கிழக்காகத் திரும்பி கொல்லி மலையை அடைந்தான்.
அவனது படையில் மங்கோலியர்கள் முதலிய இனத்தவர் இருந்ததால் அவர்களுக்குக் காட்டு வழியே இனிமையாக அமைந்தது ஆங்காங்கே தென் பட்ட விலங்குகளையே வேட்டையாடி உண்டனர். திறந்த வெளிகளிலேயே உறங்கினர். அவர்களிடமிருந்த வேல், வில், அம்பு தவிர வேறொரு தளவாடமும் அவர்களிடத்தில் இல்லை. ஆகவே அவர்களது பயணம் துரிதகதியில் அமைந்தது.
======
வீரதவளப்பட்டணத்தின் படைவீட்டில் அமைந்திருந்த வீர பாண்டியனின் படைகள் மற்றும் வில்லவர் ஐந்நூறு பேரும் சிதம்பரம் வழியாக தஞ்சைக்கு சற்று வடக்கே தண்டு இறங்கினர். அளவில் சிறு படையான வீர பாண்டியன் படை வீரதவளப்பட்டணத்திலிருந்து தஞ்சைக்கு ஒரே வாரத்தில் வந்து சேர்ந்து விட்டது. இப்படியாக மதுரையை நோக்கி மூன்று படைகள் முறையே கொல்லிமலை, உறையூர் மற்றும் தஞ்சையில் தண்டு இறங்கியிருந்தன.
மேலே உள்ள வரைபடத்தில் பச்சை நிறத்தில் குறியிடப்பட்டுள்ள வழியாக ஜலாலுதீன் மாலிக்கின் படைகளை அழைத்துவந்தான். சிவப்பு நிற வழியாக ஹொய்சள வல்லாளனின் படைகள் துவாரசமுத்திரத்திலிருந்து கிளம்பி குவலாலா வழியாக உறையூரை அடைந்தன. நீல நிறக்குறியீட்டின் வழியாக வீர பாண்டியனின் படைகள் வீரதவளப்பட்டணத்தின் படைவீட்டிலிருந்து நேராக தஞ்சைக்கு சற்று வடக்கே முகாமிட்டிருந்தன. இந்த அமைப்பு மதுரையைத் தாக்கும் திரிசூலத்தை ஒத்திருப்பதைப் பார்க்கலாம்.
இந்த மூன்று படைகளும் மிக விரைவாகவும் மறைவாகவும் வந்து சேர்ந்ததால் மற்ற படைகளின் நடமாட்டத்தைப் பற்றிய தகவல் யாருக்கும் தெரியாமல் போயிற்று. ஆனால் மதுரையிலிருந்த சுந்தரனுக்கோ இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் உடனே தெரிய வந்தது. அவன் நினைத்தது ஒன்று ஆனால் நடப்பது வேறாக இருந்ததால் அவன் மனம் பெரிதும் குழம்பியிருந்தது.
மதுரையை நோக்கி நீண்டிருந்த திரிசூலம் அவன் மனதை பெரும் கலக்கத்திற்குள்ளாக்கியது. அவனது நண்பன் மாலிக் கஃபூரிடமிருந்தும் ஒரு தகவலும் இல்லை. மாலிக்கின் படையில் மாலிக் கஃபூர் இல்லை என்பதும், ஜலாலுதீன்தான் அந்தப்படைகளுக்குத் தலைமை வகிக்கிறான் என்பதும் அவனுக்குக் கிடைத்திருந்தது.
மதுரைக்கு ஒரு பெரும் ஆபத்து நெருங்கிவிட்டதை அவன் பரிபூரணமாக உணர்ந்தான்.
(தொடரும்)
ஜலாலுதீனிடம் உத்தரவைப் பிறப்பித்த சிறிது நேரத்திலேயே அந்தக் காட்டிலிருந்து ஒரு குதிரையில் புறப்பட்டு விட்டான் மாலிக். உடன் வர நினைத்த சில காவலர்களையும் வேண்டாமென்று சொல்லிவிட்டான். அங்கிருந்து நேர் தெற்கு நோக்கிச் செல்லாமல் தென்கிழக்காகப் பயணப் பட்டான். சற்றேறக்குறைய ஒரே வாரத்தில் திருமலையடிவாரத்தை அடைந்துவிட்டான். அங்கிருந்து காஞ்சி வழியாக செல்வதுதான் அவனது திட்டம். ஒரே வாரத்தில் அவ்வளவு தூரத்தைக் கடந்து விட்டதால் சற்று இளைப்பாற நினைத்தான். அவனது படைகளும் வந்து சேர வேண்டுமல்லவா?
=====
மாலிக் திருமலையடிவாரத்தை அடைந்த அதே சமயத்தில் குவலாலாவிற்கு வந்த குதிரைப்படைத் தலைவன் வெளியேறினான். அதற்குப் பிறகு மாதண்ட நாயகத்தின் உத்தரவின் படி படைகள் புறப்படுவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளத் துவங்கினான். முதலில் உணவுப் பொதிகளைச் சுமந்து கொண்டு மாட்டு வண்டிகள் முன்னே சென்றன. அவற்றின் பின், தண்டு இறக்கும் போது தேவையான கூடாரங்கள், நீண்ட கழிகள், வடங்கள் ஆகியவை அடங்கிய வண்டிகள் சென்றன. அதைத் தொடர்ந்து, தளவாடங்களைச் சுமந்து செல்லும் பொதிகள் சென்றன. அவற்றின் மேல் பாதுகாப்புக் கருதி வைக்கோல் போர்த்தப்பட்டிருந்தது. இவற்றோடு யானைப்படையும் புறப்பட்டது. யானைகளுக்கு மதம் பிடிக்காமலிருக்கும் பொருட்டு, அதற்குத் தேவையான மருந்துகள் அளிக்கப்பட்டிருந்தன. ஆகவே யானைகள் எது சொன்னாலும் செய்யும் பூனைகளைப் போல் சாதுவாகக் கிளம்பிச் சென்றன.
இவை குவலாலாவை விட்டுக் கிளம்பிய மூன்றாவது நாள், காலாட்படையினரை உறையூர் நோக்கிச் செல்லுமாறு பணித்தான் ஆதவன். வழியில் முன்னே சென்ற உணவுப் பொதிகள் மூலமாக இந்தப் படைக்கு ஆங்காங்கே உணவு தயாராக வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் கிளம்பிய மூன்று நாட்களுக்குப் பிறகு குதிரைப்படைகள் புறப்பட்டன. அவற்றுடன் முக்கிய தளபதிகளுக்கான ரதங்களும் புறப்பட்டன.
இவ்வாறாக ஒரே வாரத்தில் அவனது படைகள் அனைத்தும் ஒரே சமயத்தில் உறையூர் சேரும் வகையில் படைகளை நடத்தினான். படைகள் செல்லும் பெருவழியில் எந்த வித நெருக்கமும் ஏற்படாத வகையில் அமைந்த இந்த ஏற்பாட்டை மிகவும் பாராட்டினார் மாதண்ட நாயகம். கோட்டையைப் பாதுகாக்க சிறு படையை விட்டுவிட்டு மாதண்ட நாயகமும், ஆதவனும் உறையூர் புறப்பட்டனர்.
======
ஜலாலுதீன் தன் படைகளை மாலிக் கஃபூரின் உத்தரவுப் படி தென் மேற்காக நடத்திச் சென்றான். நேராக கொல்லி மலை செல்லாமல், வட ஆந்திரத்திலிருந்து மேற்கே சென்று மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டி தலைக்காடு வரை இறங்கி அங்கிருந்து மீண்டும் தென்கிழக்காகத் திரும்பி கொல்லி மலையை அடைந்தான்.
அவனது படையில் மங்கோலியர்கள் முதலிய இனத்தவர் இருந்ததால் அவர்களுக்குக் காட்டு வழியே இனிமையாக அமைந்தது ஆங்காங்கே தென் பட்ட விலங்குகளையே வேட்டையாடி உண்டனர். திறந்த வெளிகளிலேயே உறங்கினர். அவர்களிடமிருந்த வேல், வில், அம்பு தவிர வேறொரு தளவாடமும் அவர்களிடத்தில் இல்லை. ஆகவே அவர்களது பயணம் துரிதகதியில் அமைந்தது.
======
வீரதவளப்பட்டணத்தின் படைவீட்டில் அமைந்திருந்த வீர பாண்டியனின் படைகள் மற்றும் வில்லவர் ஐந்நூறு பேரும் சிதம்பரம் வழியாக தஞ்சைக்கு சற்று வடக்கே தண்டு இறங்கினர். அளவில் சிறு படையான வீர பாண்டியன் படை வீரதவளப்பட்டணத்திலிருந்து தஞ்சைக்கு ஒரே வாரத்தில் வந்து சேர்ந்து விட்டது. இப்படியாக மதுரையை நோக்கி மூன்று படைகள் முறையே கொல்லிமலை, உறையூர் மற்றும் தஞ்சையில் தண்டு இறங்கியிருந்தன.
இந்த மூன்று படைகளும் மிக விரைவாகவும் மறைவாகவும் வந்து சேர்ந்ததால் மற்ற படைகளின் நடமாட்டத்தைப் பற்றிய தகவல் யாருக்கும் தெரியாமல் போயிற்று. ஆனால் மதுரையிலிருந்த சுந்தரனுக்கோ இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் உடனே தெரிய வந்தது. அவன் நினைத்தது ஒன்று ஆனால் நடப்பது வேறாக இருந்ததால் அவன் மனம் பெரிதும் குழம்பியிருந்தது.
மதுரையை நோக்கி நீண்டிருந்த திரிசூலம் அவன் மனதை பெரும் கலக்கத்திற்குள்ளாக்கியது. அவனது நண்பன் மாலிக் கஃபூரிடமிருந்தும் ஒரு தகவலும் இல்லை. மாலிக்கின் படையில் மாலிக் கஃபூர் இல்லை என்பதும், ஜலாலுதீன்தான் அந்தப்படைகளுக்குத் தலைமை வகிக்கிறான் என்பதும் அவனுக்குக் கிடைத்திருந்தது.
மதுரைக்கு ஒரு பெரும் ஆபத்து நெருங்கிவிட்டதை அவன் பரிபூரணமாக உணர்ந்தான்.
(தொடரும்)
Thursday, December 24, 2009
சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 17
அத்தியாயம் 17 - ஜலாலுதீன்
மாலிக் கஃபூரின் படைத்தளத்திற்கு மீண்டும் வருகிறோம். முன்பு சுந்தர பாண்டியன் வந்த போது நாமும் அவனுடன் ரகசியமாக வந்து திரும்பி விட்டதால் அவனது படை பலத்தைப் பார்க்க முடியவில்லை. இப்போது வெட்ட வெளிச்சத்தில் அந்த நிலப்பரப்பில் பரந்து விரிந்திருந்த படைத்தளத்தைக் கண்ணாரக் காணலாம்.
தில்லியிலிருந்து அழைத்து வந்த படையும், இடையே இணைந்த படையும் சேர்ந்து ஒரு சிறு பெரும் சைன்யமாகியிருந்தது. எந்த ஒரு பிடிப்பும் இன்றி, மாலிக் கஃபூரின் ஆணைக்குக் கட்டுப்பட்டோ, பயந்தோதான் பணியாற்றிக்கொண்டிருந்தனர் அந்தப் படை வீரர்கள். அவர்களை வீரர்கள் என்று அழைப்பதே வீரர்களுக்குச் செய்யும் அவமரியாதையாகும்.
மங்கோலியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட குதிரைப்படயினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் இருந்தனர். செங்கிஸ்கானின் குதிரைப்படையின் சாகசத்திற்கு தில்லி பலமுறை பலியாகியிருக்கிறது. அந்த மங்கோலியர்களையே பணத்தாசை காட்டி மயக்கிவிட்டான் மாலிக் கஃபூர். இந்தப் புறம் வில்லாளிகள். மத்திய ஆசியப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வேட்டையாடுவது என்பது மூச்சுவிடுவதைப் போன்று இயல்பான ஒன்று. ஈவு, இரக்கம் என்ற இரண்டு வார்த்தையும் இவ்விரு பிரிவினரின் அகராதியிலும் கிடையாது. இப்படிப்பட்ட படையினரை வைத்துத்தான் யாதவர்களை வீழ்த்தியும், காகதீயர்களை அடிபணியவைத்தும் தனது வெற்றிப்பாதையை வகுத்து வந்திருந்தான் மாலிக் கஃபூர்.
ஒரு தலைவன் தான் எடுத்த பணியைச் செவ்வனே செய்து முடிக்க வேண்டியது அவனுக்குள்ள முதல் கடமை. அந்தப் பணி சரியா தவறா என்பது அவனுக்கு இரண்டாம் பட்சம்தான். அந்தப் பணியை முடிக்கத் தேவையான தளவாடங்கள், உத்திகள், உதவிகள், தந்திரங்கள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும். யார் மூலமாக என்ன சாதிக்க வேண்டுமோ, அவர்களை சரியான தருணத்தில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் முழுமையான வெற்றி கிட்டும். தெய்வப்புலவர் திருவள்ளுவரும் 'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்' என்று மேலாண்மை பாடம் நடத்துகிறார்!
மாலிக் கஃபூர் நிச்சயமாக திருக்குறளைப் படிக்கவில்லையென்றாலும், அவரது வாய்மொழிக்கேற்ப, அவனது படையில் மங்கோலியர்களையும், மத்திய ஆசிய வில்லாளர்களையும் சேர்த்துக் கொண்டிருந்தான். இவர்களோடு பணம் மட்டுமே குறியாகக் கொண்ட படையும், தில்லியிலிருந்து வந்த சுல்தானின் படையும் சேர்ந்து கொண்டதால், வெற்றி மட்டுமே அவனது சொந்தமாக இருந்து வந்தது.
எப்போது படை நகர வேண்டும், எவ்வளவு படை நகர வேண்டும் என்பதைப் பற்றியும் விவாதிப்பதற்காக, தனது தளபதிகளை தனது கூடாரத்திற்கு அழைத்தான் மாலிக். அவனது ஆலோசனைக் கூட்டம் எப்போதுமே அவன் உத்தரவு செய்வதும் மற்றையோர் ஆமோதிப்பதுமாகவே நடைபெறுவது வழக்கம். அன்றும் அதே போல் அவனது உத்தரவை எதிர்பார்த்து வந்திருந்தனர் தளபதிகள்.
"நாம் தெற்கு நோக்கி நகர வேண்டிய நேரம் வந்து விட்டது" சுருங்கச் சொன்னான் மாலிக்.
"உத்தரவிடுங்கள். படை நகரத் தயாராக இருக்கிறது" கூட்டத்திலிருந்து ஒரு குரல்.
"ம். இதுவரை நாம் படை நடத்தியதற்கும், இனி நடப்பதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது." என்று சொன்ன மாலிக் தளபதிகளின் மீது தன் கண்களை ஓட்டினான். அவனே மேலும் தொடர்வான் என்பதால் ஒருவரும் வாயைத் திறக்கவில்லை.
"இனி நாம் செல்ல இருக்கும் தேசம், இதுவரை நாம் பார்த்ததற்கு முற்றிலும் மாறு பட்டது. அங்கே நமது பாரம்பரிய போர் முறை எடுபடாது. செல்வங்கள் அங்கே அரண்மனைகளில் இல்லை. அவை இருப்பது கோவில்களில். புரிந்ததா?"
ஒரு மாதிரியாகத் தலையாட்டி வைத்தனர் தளபதிகள்.
"நீங்கள் அனைவரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசன் வேறு. ஆண்டவன் வேறு. அரசன் மீது நாம் போர் தொடுத்தால் மக்களிடம் இருந்து எதிர்ப்பு இருக்காது. ஆண்டவனிடம் நம் கைவரிசையைக் காண்பித்தால், மக்கள் நம்மை வாழ விடமாட்டார்கள். ஆகவே நமது திட்டமும் இதை அடிப்படையாகக் கொண்டுதான் இருக்க வேண்டும்" என்று சற்று நிறுத்தினான் மாலிக் கஃபூர்.
இவ்வளவு ஆணித்தரமாக அலசும் எந்த ஒரு தலைவனையும் அவனது உபதளபதிகள் தலைமேல் வைத்துக் கொண்டாடுவார்கள். ஆனால் மாலிக்கிற்கு வாய்த்த உபதளபதிகளுக்கோ இவை ஒன்றும் சுத்தமாகப் புரியவில்லை. அவன் இதெல்லாம் ஏன் சொல்கிறான் என்று கூட ஓரிருவர் யோசிக்கத் துவங்கினார்கள்.
"சரி, இவற்றையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நமது படைகள் சற்று பிரிந்து செல்ல வேண்டும். ஆகவே நமது படைகள் இன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு பத்து தவணைகளில் இங்கிருந்து புறப்படும். நாம் இருப்பது ஹொய்சள தேசத்தின் வட எல்லையில். நாம் செல்ல வேண்டியது பாண்டிய தேசத்திற்கு. நாம் படை நடத்தும் போது இடையில் இருக்கும் ஹொய்சள தேசத்தை நாம் ஒன்றும் செய்யக் கூடாது. ஹொய்சளர்கள் நமது படையைத் தடுக்கும் வகையில் ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு பிரிவிலும் சுல்தானின் கொடி முன்னே செல்ல வேண்டும். இங்கிருந்து நேர் தெற்கே சென்றால் நாம் கொல்லி மலையை அடைவோம். நமது படைகள் அங்கே தண்டு இறங்கட்டும். அதற்குப் பிறகு நடக்க வேண்டியதைப் பற்றி நான் அங்கே வந்து சொல்கிறேன். இனி என்னை நீங்கள் அங்கு தான் பார்க்க முடியும்." என்று விவரித்தவன் இறுதியாக "புரிந்ததா?" என்று சம்பிரதாயமாகக் கேட்டு வைத்தான்.
அவனது வியூகம் ஒன்றும் தளபதிகளுக்குப் புரியவில்லை. ஒரு மாதத்திற்குப் படை நடத்தினால் எதிரி விழித்துக் கொள்வானே? முதலில் இருக்கும் ஹொய்சளர்களைத் தாக்கினால் அந்த படையையும் தங்களுடன் சேர்த்துக்கொள்ளலாமே? படை கிளம்பி நேராக இலக்கைத் தாக்கினால் முழு வேகத்துடன் தாக்கி எளிதில் வெற்றி அடையலாமே? எதற்கு இடையில் கொல்லி மலையில் தங்க வேண்டும்? இப்படியெல்லாம் ஒருவரும் யோசிக்க வில்லை. அப்படி யோசிக்கவும் அவர்களுக்குச் சொல்லித்தரப்படவில்லை. அனைவரும் எழுந்து அவன் சொன்னதைப் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தலை தாழ்த்தி வணங்கி அவனது கூடாரத்தை விட்டு வெளியேறினர். அப்படி சென்றவர்களில் ஒருவனை மட்டும் நிறுத்தினான் மாலிக். மற்றவர்கள் அகன்றுவிட்டனர் என்பதை நிச்சயம் செய்து கொண்ட பின் அவனைத் தன் அருகில் அழைத்து "உன்னை மட்டும் அழைத்தது ஆச்சரியமாக இருக்கிறதா ஜலாலுதீன்?" என்று புன்னகையுடன் வினவினான்.
ஜலாலுதீன் என்று அழைக்கப்பட்ட ஜலாலுதீன் அசன் கான், சற்றேறக்குறைய இருபது வயதுடையவனாகத் தோன்றினான் . தில்லி சுல்தானியப் படைப் பிரிவின் தளபதியாக சுல்தான் அலாவுதீன் கில்ஜியால் நியமிக்கப் பட்டவன். நல்ல அறிவாளியானாலும் அதை மாலிக் கஃபூர் இருக்கும் போது உபயோகிப்பது தன் தலையைத் தானே கொய்து கொள்வது போல் என்பதை உணர்ந்திருந்தானாகையால் அவனது போக்கு இந்தப் படையெடுப்பில் மாலிக் காலால் இட்டதைத் தலையால் செய்வதென்பதாகவே இருந்தது. இதுவே மாலிக் அவனிடத்தில் மதிப்பு வைப்பதற்கும் காரணமாக அமைந்தது. மேலும் சுல்தான் தேர்ந்தெடுத்த ஒருவரை தன் அருகில் வைத்துக் கொள்வது நாளைக்கு ஏதாவதொரு விதத்தில் நன்மை பயக்கும் என்பதும் மாலிக்கின் எண்ணம்.
"அப்படியெல்லாம் இல்லை. தங்கள் உத்தரவை நிறைவேற்றுவதுதான் எங்கள் பணியென்பதை சுல்தான் தெளிவுபடுத்தியுள்ளார்". என்றான் அடக்க ஒடுக்கமாக.
"ஜலாலுதீன், இப்போது போன தளபதிகளெல்லாம் நான் சொல்வதை மட்டுமே செய்வார்கள். அவர்களாக ஒன்றும் யோசிக்க மாட்டார்கள். ஆனால் நீ அப்படியல்ல. சுல்தான் அவர்களே உன்னை பிரத்யேகமாக தேர்வு செய்துள்ளார். தில்லியை விட்டுக் கிளம்பும் போது கூட என்னைத் தனியாக அழைத்து உன்னை நல்ல படியாக நடத்துமாறு உத்தரவிட்டார். நீயும் மிக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறாய். அதனால்தான், இனி படையை நடத்தும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கலாம் என்று எண்ணுகிறேன்" மாலிக் சற்று நிறுத்தி அவன் கண்களை ஊடுறுவினான். ஜலாலுதீனுக்கு என்ன சொல்வதென்று விளங்கவில்லை. இதில் ஏதோ சூது இருப்பது மட்டும் அவன் உள்ளத்திற்குத் தெளிவாகத் தெரிந்தது.
"அத்தகைய திறமை என்னிடம் இருப்பதாகத் தாங்கள் நினைத்தால் அதில் தவறேதுமிருக்காது என்பது என் எண்ணம்."
அதைக் கேட்டு பெரிதாக நகைத்த மாலிக், "ஜலாலுதீன், இந்த பதில் மூலம் நீ மிக மிக புத்திசாலி என்பது உறுதியாகிறது. நல்லது. நான் சொன்னது போல், உங்களைப் பிரிய வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்தப் படையெடுப்பு மிகவும் வித்தியாசமானது. ஆகவேதான் அவ்வாறு உத்தரவிட்டேன். இனி நான் இல்லாத போது நீதான் படைகளை நடத்த வேண்டும். அதற்கான உத்தரவுப் பத்திரம் இதோ. இனி நான் சொல்வதைக் கவனமாகக் கேள்" என்று அவனிடம் ஒரு சீலையைக் கொடுத்துவிட்டு அவன் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் எடுத்துரைத்தான்.
"அப்படியே ஆகட்டும். இன்ஷா அல்லாஹ்" என்றவாறே வெளியேறினான் ஜலாலுதீன். அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த மாலிக்கின் வாயிலிருந்த் சிறிது நேரம் கழித்து வந்தன "இன்ஷா அல்லாஹ்" என்ற சொற்கள்.
(தொடரும்)
மாலிக் கஃபூரின் படைத்தளத்திற்கு மீண்டும் வருகிறோம். முன்பு சுந்தர பாண்டியன் வந்த போது நாமும் அவனுடன் ரகசியமாக வந்து திரும்பி விட்டதால் அவனது படை பலத்தைப் பார்க்க முடியவில்லை. இப்போது வெட்ட வெளிச்சத்தில் அந்த நிலப்பரப்பில் பரந்து விரிந்திருந்த படைத்தளத்தைக் கண்ணாரக் காணலாம்.
தில்லியிலிருந்து அழைத்து வந்த படையும், இடையே இணைந்த படையும் சேர்ந்து ஒரு சிறு பெரும் சைன்யமாகியிருந்தது. எந்த ஒரு பிடிப்பும் இன்றி, மாலிக் கஃபூரின் ஆணைக்குக் கட்டுப்பட்டோ, பயந்தோதான் பணியாற்றிக்கொண்டிருந்தனர் அந்தப் படை வீரர்கள். அவர்களை வீரர்கள் என்று அழைப்பதே வீரர்களுக்குச் செய்யும் அவமரியாதையாகும்.
மங்கோலியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட குதிரைப்படயினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர் இருந்தனர். செங்கிஸ்கானின் குதிரைப்படையின் சாகசத்திற்கு தில்லி பலமுறை பலியாகியிருக்கிறது. அந்த மங்கோலியர்களையே பணத்தாசை காட்டி மயக்கிவிட்டான் மாலிக் கஃபூர். இந்தப் புறம் வில்லாளிகள். மத்திய ஆசியப்பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வேட்டையாடுவது என்பது மூச்சுவிடுவதைப் போன்று இயல்பான ஒன்று. ஈவு, இரக்கம் என்ற இரண்டு வார்த்தையும் இவ்விரு பிரிவினரின் அகராதியிலும் கிடையாது. இப்படிப்பட்ட படையினரை வைத்துத்தான் யாதவர்களை வீழ்த்தியும், காகதீயர்களை அடிபணியவைத்தும் தனது வெற்றிப்பாதையை வகுத்து வந்திருந்தான் மாலிக் கஃபூர்.
ஒரு தலைவன் தான் எடுத்த பணியைச் செவ்வனே செய்து முடிக்க வேண்டியது அவனுக்குள்ள முதல் கடமை. அந்தப் பணி சரியா தவறா என்பது அவனுக்கு இரண்டாம் பட்சம்தான். அந்தப் பணியை முடிக்கத் தேவையான தளவாடங்கள், உத்திகள், உதவிகள், தந்திரங்கள் அனைத்தையும் பின்பற்ற வேண்டும். யார் மூலமாக என்ன சாதிக்க வேண்டுமோ, அவர்களை சரியான தருணத்தில் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் முழுமையான வெற்றி கிட்டும். தெய்வப்புலவர் திருவள்ளுவரும் 'இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல்' என்று மேலாண்மை பாடம் நடத்துகிறார்!
மாலிக் கஃபூர் நிச்சயமாக திருக்குறளைப் படிக்கவில்லையென்றாலும், அவரது வாய்மொழிக்கேற்ப, அவனது படையில் மங்கோலியர்களையும், மத்திய ஆசிய வில்லாளர்களையும் சேர்த்துக் கொண்டிருந்தான். இவர்களோடு பணம் மட்டுமே குறியாகக் கொண்ட படையும், தில்லியிலிருந்து வந்த சுல்தானின் படையும் சேர்ந்து கொண்டதால், வெற்றி மட்டுமே அவனது சொந்தமாக இருந்து வந்தது.
எப்போது படை நகர வேண்டும், எவ்வளவு படை நகர வேண்டும் என்பதைப் பற்றியும் விவாதிப்பதற்காக, தனது தளபதிகளை தனது கூடாரத்திற்கு அழைத்தான் மாலிக். அவனது ஆலோசனைக் கூட்டம் எப்போதுமே அவன் உத்தரவு செய்வதும் மற்றையோர் ஆமோதிப்பதுமாகவே நடைபெறுவது வழக்கம். அன்றும் அதே போல் அவனது உத்தரவை எதிர்பார்த்து வந்திருந்தனர் தளபதிகள்.
"நாம் தெற்கு நோக்கி நகர வேண்டிய நேரம் வந்து விட்டது" சுருங்கச் சொன்னான் மாலிக்.
"உத்தரவிடுங்கள். படை நகரத் தயாராக இருக்கிறது" கூட்டத்திலிருந்து ஒரு குரல்.
"ம். இதுவரை நாம் படை நடத்தியதற்கும், இனி நடப்பதற்கும் பெரும் வித்தியாசம் இருக்கிறது." என்று சொன்ன மாலிக் தளபதிகளின் மீது தன் கண்களை ஓட்டினான். அவனே மேலும் தொடர்வான் என்பதால் ஒருவரும் வாயைத் திறக்கவில்லை.
"இனி நாம் செல்ல இருக்கும் தேசம், இதுவரை நாம் பார்த்ததற்கு முற்றிலும் மாறு பட்டது. அங்கே நமது பாரம்பரிய போர் முறை எடுபடாது. செல்வங்கள் அங்கே அரண்மனைகளில் இல்லை. அவை இருப்பது கோவில்களில். புரிந்ததா?"
ஒரு மாதிரியாகத் தலையாட்டி வைத்தனர் தளபதிகள்.
"நீங்கள் அனைவரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அரசன் வேறு. ஆண்டவன் வேறு. அரசன் மீது நாம் போர் தொடுத்தால் மக்களிடம் இருந்து எதிர்ப்பு இருக்காது. ஆண்டவனிடம் நம் கைவரிசையைக் காண்பித்தால், மக்கள் நம்மை வாழ விடமாட்டார்கள். ஆகவே நமது திட்டமும் இதை அடிப்படையாகக் கொண்டுதான் இருக்க வேண்டும்" என்று சற்று நிறுத்தினான் மாலிக் கஃபூர்.
இவ்வளவு ஆணித்தரமாக அலசும் எந்த ஒரு தலைவனையும் அவனது உபதளபதிகள் தலைமேல் வைத்துக் கொண்டாடுவார்கள். ஆனால் மாலிக்கிற்கு வாய்த்த உபதளபதிகளுக்கோ இவை ஒன்றும் சுத்தமாகப் புரியவில்லை. அவன் இதெல்லாம் ஏன் சொல்கிறான் என்று கூட ஓரிருவர் யோசிக்கத் துவங்கினார்கள்.
"சரி, இவற்றையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நமது படைகள் சற்று பிரிந்து செல்ல வேண்டும். ஆகவே நமது படைகள் இன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு பத்து தவணைகளில் இங்கிருந்து புறப்படும். நாம் இருப்பது ஹொய்சள தேசத்தின் வட எல்லையில். நாம் செல்ல வேண்டியது பாண்டிய தேசத்திற்கு. நாம் படை நடத்தும் போது இடையில் இருக்கும் ஹொய்சள தேசத்தை நாம் ஒன்றும் செய்யக் கூடாது. ஹொய்சளர்கள் நமது படையைத் தடுக்கும் வகையில் ஒன்றும் செய்ய மாட்டார்கள். ஒவ்வொரு பிரிவிலும் சுல்தானின் கொடி முன்னே செல்ல வேண்டும். இங்கிருந்து நேர் தெற்கே சென்றால் நாம் கொல்லி மலையை அடைவோம். நமது படைகள் அங்கே தண்டு இறங்கட்டும். அதற்குப் பிறகு நடக்க வேண்டியதைப் பற்றி நான் அங்கே வந்து சொல்கிறேன். இனி என்னை நீங்கள் அங்கு தான் பார்க்க முடியும்." என்று விவரித்தவன் இறுதியாக "புரிந்ததா?" என்று சம்பிரதாயமாகக் கேட்டு வைத்தான்.
அவனது வியூகம் ஒன்றும் தளபதிகளுக்குப் புரியவில்லை. ஒரு மாதத்திற்குப் படை நடத்தினால் எதிரி விழித்துக் கொள்வானே? முதலில் இருக்கும் ஹொய்சளர்களைத் தாக்கினால் அந்த படையையும் தங்களுடன் சேர்த்துக்கொள்ளலாமே? படை கிளம்பி நேராக இலக்கைத் தாக்கினால் முழு வேகத்துடன் தாக்கி எளிதில் வெற்றி அடையலாமே? எதற்கு இடையில் கொல்லி மலையில் தங்க வேண்டும்? இப்படியெல்லாம் ஒருவரும் யோசிக்க வில்லை. அப்படி யோசிக்கவும் அவர்களுக்குச் சொல்லித்தரப்படவில்லை. அனைவரும் எழுந்து அவன் சொன்னதைப் புரிந்து கொண்டதற்கு அறிகுறியாகத் தலை தாழ்த்தி வணங்கி அவனது கூடாரத்தை விட்டு வெளியேறினர். அப்படி சென்றவர்களில் ஒருவனை மட்டும் நிறுத்தினான் மாலிக். மற்றவர்கள் அகன்றுவிட்டனர் என்பதை நிச்சயம் செய்து கொண்ட பின் அவனைத் தன் அருகில் அழைத்து "உன்னை மட்டும் அழைத்தது ஆச்சரியமாக இருக்கிறதா ஜலாலுதீன்?" என்று புன்னகையுடன் வினவினான்.
ஜலாலுதீன் என்று அழைக்கப்பட்ட ஜலாலுதீன் அசன் கான், சற்றேறக்குறைய இருபது வயதுடையவனாகத் தோன்றினான் . தில்லி சுல்தானியப் படைப் பிரிவின் தளபதியாக சுல்தான் அலாவுதீன் கில்ஜியால் நியமிக்கப் பட்டவன். நல்ல அறிவாளியானாலும் அதை மாலிக் கஃபூர் இருக்கும் போது உபயோகிப்பது தன் தலையைத் தானே கொய்து கொள்வது போல் என்பதை உணர்ந்திருந்தானாகையால் அவனது போக்கு இந்தப் படையெடுப்பில் மாலிக் காலால் இட்டதைத் தலையால் செய்வதென்பதாகவே இருந்தது. இதுவே மாலிக் அவனிடத்தில் மதிப்பு வைப்பதற்கும் காரணமாக அமைந்தது. மேலும் சுல்தான் தேர்ந்தெடுத்த ஒருவரை தன் அருகில் வைத்துக் கொள்வது நாளைக்கு ஏதாவதொரு விதத்தில் நன்மை பயக்கும் என்பதும் மாலிக்கின் எண்ணம்.
"அப்படியெல்லாம் இல்லை. தங்கள் உத்தரவை நிறைவேற்றுவதுதான் எங்கள் பணியென்பதை சுல்தான் தெளிவுபடுத்தியுள்ளார்". என்றான் அடக்க ஒடுக்கமாக.
"ஜலாலுதீன், இப்போது போன தளபதிகளெல்லாம் நான் சொல்வதை மட்டுமே செய்வார்கள். அவர்களாக ஒன்றும் யோசிக்க மாட்டார்கள். ஆனால் நீ அப்படியல்ல. சுல்தான் அவர்களே உன்னை பிரத்யேகமாக தேர்வு செய்துள்ளார். தில்லியை விட்டுக் கிளம்பும் போது கூட என்னைத் தனியாக அழைத்து உன்னை நல்ல படியாக நடத்துமாறு உத்தரவிட்டார். நீயும் மிக சிறப்பாகச் செயல்பட்டு வருகிறாய். அதனால்தான், இனி படையை நடத்தும் பொறுப்பை உன்னிடத்தில் ஒப்படைக்கலாம் என்று எண்ணுகிறேன்" மாலிக் சற்று நிறுத்தி அவன் கண்களை ஊடுறுவினான். ஜலாலுதீனுக்கு என்ன சொல்வதென்று விளங்கவில்லை. இதில் ஏதோ சூது இருப்பது மட்டும் அவன் உள்ளத்திற்குத் தெளிவாகத் தெரிந்தது.
"அத்தகைய திறமை என்னிடம் இருப்பதாகத் தாங்கள் நினைத்தால் அதில் தவறேதுமிருக்காது என்பது என் எண்ணம்."
அதைக் கேட்டு பெரிதாக நகைத்த மாலிக், "ஜலாலுதீன், இந்த பதில் மூலம் நீ மிக மிக புத்திசாலி என்பது உறுதியாகிறது. நல்லது. நான் சொன்னது போல், உங்களைப் பிரிய வேண்டிய நேரம் வந்து விட்டது. இந்தப் படையெடுப்பு மிகவும் வித்தியாசமானது. ஆகவேதான் அவ்வாறு உத்தரவிட்டேன். இனி நான் இல்லாத போது நீதான் படைகளை நடத்த வேண்டும். அதற்கான உத்தரவுப் பத்திரம் இதோ. இனி நான் சொல்வதைக் கவனமாகக் கேள்" என்று அவனிடம் ஒரு சீலையைக் கொடுத்துவிட்டு அவன் நடந்து கொள்ள வேண்டிய முறைகளையும் எடுத்துரைத்தான்.
"அப்படியே ஆகட்டும். இன்ஷா அல்லாஹ்" என்றவாறே வெளியேறினான் ஜலாலுதீன். அவன் சென்ற திசையையே பார்த்துக் கொண்டிருந்த மாலிக்கின் வாயிலிருந்த் சிறிது நேரம் கழித்து வந்தன "இன்ஷா அல்லாஹ்" என்ற சொற்கள்.
(தொடரும்)
Wednesday, December 16, 2009
சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 16
அத்தியாயம் 16 - இணைந்த இதயங்கள்
நீண்ட நாட்களுக்குப் பிறகு நாம் வீரதவளப்பட்டணத்திற்குச் செல்கிறோம். வீரபாண்டியன் தன் தலை நகரை மிக விரைவில் நிர்மாணம் செய்து செயல்பட வைத்திருந்தான். காஞ்சிக்கு சற்று அருகில் இருந்தும், இந்த நகருக்குள் பல்வேறு புதிய கட்டடங்களையும் எழுப்பியிருந்தான். வீரதவளப்பட்டணத்திலிருந்து சற்று தள்ளி இருந்த படைவீட்டில் (தற்போது படவேடு என்று அழைக்கப்படுகிறது) அவனது படைகள் தண்டு இறங்கியிருந்தன. பாண்டியப்படைகளில் ஒரு பகுதியும், இந்த நகரம் அமைந்தபின் சேர்த்த படையுமாக சேர்த்து, சற்றேறக்குறைய பத்தாயிரம் வீரர்கள் இருந்தனர். அவர்களை பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடுத்துவதற்காக, மாராயர் அங்கேயே முகாமிட்டிருந்தார். அவருக்குத் துணையாக இளவழுதியும் அங்கேயே இருந்தான். அவர்களோடு, கொல்லிமலை வில்லவர்கள் ஐன்னூற்றுவரும் அங்கே இருந்து வந்தனர்.
போருக்கான ஆயத்தம் செய்யவேண்டும் என்று விக்ரம பாண்டியர் சொல்லிவிட்டதன் விளைவாக, அங்கே பல்வேறு பொருட்களும் சேகரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. பொதி வண்டிகள், அவற்றை நடத்த பொதி மாடுகள், படைகள் தங்குவதற்காகத் தயாரிக்கப்பட்ட கூடாரங்கள், உணவு சமைக்கத் தேவையான பாத்திரங்கள், அரிசி, பருப்பு ஆகியவை தனியே ஒரு பகுதியில் சேமிக்கப்பட்டது.
போர்த்தளவாடங்களான, வாள், வேல், கவசம், சலாகை முதலியவை அங்கேயே அமைக்கப்பட்ட கொல்லர் பட்டறைகளில் தயாராகிக் கொண்டிருந்தன. மேலும் குதிரைகள், யானைகளுக்குத் தேவையான கவசங்களும், உணவுப் பண்டங்களும் திரட்டப்பட்டன.
ஆனால் இத்தனை பெரிய படையை அங்கே நிர்வகிப்பது, புதிய அரசுக்குப் பெரும் தலைவலியாக இருந்தது. அதற்குத் தேவையான நிதி திரட்டுவதில் சுணக்கம் ஆரம்பம் முதலே இருந்து வந்தது. புதிய அரசுக்கு வரி கொடுப்பதில் ஆங்காங்கே குழப்பம் நீடித்தது. ஆயினும் இவற்றையெல்லாம், விக்ரம பாண்டியர் ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு வந்தார்.
வீரபாண்டியன் தன் மனையாள் கயல்விழியுடன் வீரதவளப்பட்டணத்திலேயே சிறிது காலம் உல்லாசமாக இருந்து வந்தான். அவர்கள் இருவருக்கும் மிக மிக எளிய முறையில் திருமணம் நடைபெற்றிருந்தது. ஆகவே நமக்குக் கூட அழைப்பு அனுப்பவில்லை!. இப்போதுதான் நாம் தெரிந்து கொண்டாலும் மனதைத் தேற்றிக்கொண்டு மணமக்களை வாழ்த்துவோம்!!.
ஆனால் இளவழுதியும், தேன்மொழியும் இன்னும் சிறிது காலம் காதலர்களாகவே தொடர்ந்து இருப்பதாக முடிவு செய்து விட்டனர் போலிருக்கிறது. அவர்களுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. தேன்மொழி, வீரதவளப்பட்டணத்திலேயே இருந்து வந்தாள். படைவீடு செல்ல அவளுக்கு விருப்பமென்றாலும், ஏனோ மாராயர் மறுத்து வந்தார். அவ்வப்போது அங்கே வரும் இளவழுதிக்கு சில நல்ல யோசனைகளும் தெரிவித்து வந்தாள்.
====
காதலர்களுக்கு உகந்த நேரம் மாலைப் பொழுதுதான். அப்போதுதான் சூரியன் மலைவாயிலில் விழுவதற்கும் சந்திரன் அலைவாயிலில் எழுவதற்கும் சரியாக இருக்கும். அப்போது ஒளியிருந்தும் இல்லாதது போன்ற ஒரு மயக்கமான சூழல், காதலர்களின் மனதை ஒத்ததாக இருப்பதால் அவர்களுக்கும் அந்தி நேரத்தில் எண்ணங்கள் விழுந்தும் எழுந்தும் ஒருவித மயக்கத்தைத் தரும். அத்துடன் பூங்கா போன்ற மனதிற்கினிய இடத்தில் இருந்துவிட்டால் இந்த மயக்கம் மேலும் வாட்டி எடுக்கும். இதை பசலை நோய் என்பர் கவிஞர் திலகங்கள்!
அத்தகைய ஒரு அழகான உத்தியான வனத்தில் மாலை உலா சென்ற தேன்மொழிக்கு அத்தகைய பசலை கண்டு பலவேறு எண்ணங்கள் வந்து வாட்டின. நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கிறோமல்லவா? இது என்ன? பொதுவாக பசலை படர்ந்தவர்கள் இளைத்து காணப்படுவர். ஆனால் தேன்மொழியோ நல்ல வனப்புடன் இளமைச் செழிப்புடன் இருக்கிறாளே? ஒருவேளை பசலையென்பது பொய்யோ? ஆனால் அவ்வப்போது விம்மித்தணியும் எழில் சிகரங்கள் அவளது மனப்பாங்கை ஒருவாறு உணர்த்துவதை நாம் அறியலாம். என்ன செய்வது. இருந்த ஒரு தோழி கயல்விழியும் கல்யாணம் செய்துகொண்டு கற்புக்கரசியாகிவிட்டாள். இவள் பாடு அல்லவா திண்டாட்டமாகிவிட்டது.
தேன்மொழியின் இதயத்தில் இளவழுதியின்பால், அன்பு, பாசம், கோபம், வெறுப்பு, துக்கம், பயம் போன்ற விதவிதமான உணர்ச்சிகள் அலையலையாய் எழும்பின. இன்று வருவதாய் வாக்களித்திருந்தவனிடம் வெளிப்படையாகக் கேட்டுவிடுவது என்றே எண்ணியிருந்தாள். திருமணம் என்ற உறவு ஏற்பட்டால்தான், உரிமை பலப்படும் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது.
உத்தியான வனத்திலிருக்கும் விளக்குகளுக்கு எண்ணெயிட்டு திரியேற்றுவோர், தம் பணிகளைச் செய்யத் துவங்கினர். இரூளும் மெல்ல சூழ்ந்தது. காத்திருந்த கண்கள் களையிழந்தன. காதலனைக் காணாத காரணத்தால். தேன்மொழி தன்னையே கடிந்து கொண்டாள். மீண்டும் ஒரு நெடிய பெருமூச்சுடன் அரண்மனை திரும்பத்துவங்கினாள்.
அங்கிருந்த பல்வேறு மலர்ச்செடிகளும், மாலை நேரத்தில் மொட்டவிழ்த்து மணம் பரப்பத் துவங்கியிருந்தன. அதன்பால் தன் கவனத்தைத் திருப்பியவள், அந்த மணத்தை ரசித்தவாறு தன் நிலை மறந்து மெல்லக் கைவீசி நடந்து கொண்டிருந்த போது, அவளது கரங்களைப் பற்றினான் அவள் காதலன். ஆயினும் அவன் கண் தன் கடைக்கண் பார்வையையும் செலுத்தவில்லை. என்ன விந்தை. அவன் வருவானா என்று எதிர்ப்பார்த்து ஏமாந்தவளுக்கு அவன் முன்னால் நின்றாலும் அவனை நோக்க மனமில்லை. தன் மனப்போக்கை எண்ணி சற்று நகைக்கவும் செய்தாள். அது புன்முறுவலாக வெளிப்பட்டது. அதை அவளது சம்மதமாக எண்ணி தன் பக்கம் இழுத்தான் இளவழுதி. அதை எதிர்ப்பாராத தேன்மொழி, அவன் மீது விழுந்தாள்.
ஒரு நாழிகை நேரம் காதலர் இருவரும் வேருலகம் சென்று வந்தனர். அவர்கள் செய்கையைப் பார்ப்பது அநாகரீகமான செயல் என்பதால் நாம் சற்று நேரம் அவ்வனத்தில் உலாவிவிட்டு மீண்டும் அங்கே வந்து அவர்களைப் பார்த்தால் வழக்கம் போல் அவர்கள் உடல் இங்கே இருந்தாலும், உள்ளம் எங்கோ சஞ்சரித்துக்கொண்டிருந்ததைக் காண முடிகிறது. எதற்கும் ஒரு முடிவு வேண்டுமல்லவா? ஒரு சிறு தென்றல் காற்று அவர்கள் அமர்ந்திருந்த மரத்தைத் தழுவிச் சென்றபோது சிலிர்த்த அந்த மரத்திலிருந்து உதிர்ந்த மலர்கள் அவர்களை இவ்வுலகிற்கு மீட்டன.
எப்போதும் சுதாரிப்பது பெண்ணினம்தான். அந்த வகையில் தேன்மொழியும் தன் நிலை உணர்ந்தாள். ஆனால் அவனிடமிருந்து விலக மனம் மறுத்தது. காலம் காலமாக ஊட்டி வளர்க்கப்பட்ட கற்பு நெறி பற்றிய தெளிவு அவனிடமிருந்து பிரிந்து செல்ல அறிவுறுத்தியது. வேண்டாவெறுப்பாக சற்று விலக முயன்றாள். அந்த முயற்சியும் இளவழுதிக்குச் சாதகமாகவே அமைந்தது. அவளது இயற்கை அழகுடன் இயைந்து உறவாடும் நிலையைப் பெற்றான். கண்ணோடு கண் நோக்கிவிட்டால் வாய்ச்சொற்களுக்குப் பயன் என்ன? ஆனால் அவர்களுக்குள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் ஊகிக்க முடியவில்லையே. ஏதாவது பேசினால்தானே நாம் கேட்க முடியும். ஹூம் எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது?
ஒருவழியாக இளவழுதி தனது தொண்டையைக் கனைத்தான். அதற்குப் பதிலளிக்கும் விதமாக தேன்மொழியிடமிருந்து ஒரு ஹும். அடடா. என்ன இது. இன்று போய் நாளைதான் வரவேண்டும் போலிருக்கிறதே. இதோ இளவழுதி பேசிவிட்டான்.
"தேன்மொழி, கோபமா?"
"நல்ல கேள்வி, இவ்வளவு நேரம் ஒன்றாக இருந்துவிட்டு.."
"ஏதாவது பேசவேண்டுமல்லவா?"
"எல்லாம் பேசுவீர்கள், ஒன்றைத் தவிர"
"எந்த ஒன்று?"
"நான் அதையும் வெட்கத்தை விட்டுச் சொல்ல வேண்டுமா? சரி சொல்லித் தொலைக்கிறேன். மாமா என்னிடம் பலமுறை கேட்டுவிட்டார் என் திருமணத்தைப் பற்றி. உங்கள் எண்ணம் என்னவென்று தெரியாமல் நான் என்ன சொல்ல"
"என் எண்ணம் தெரியாதா உனக்கு"
"எல்லாம் தெரிகிறது. ஆனால் திருமணம் பற்றி ஒன்றுமே பேசமாட்டேன் என்கிறீர்களே"
இதற்குப் பதிலாக, இளவழுதியிடமிருந்து ஒரு பெருமூச்சுதான் வெளிவந்தது. அதுவரை இருந்த குதூகலம் சட்டென்று மாறி முகத்தில் ஒரு வித குழப்பம் குடிகொண்டது. "தேன்மொழி, உன்னைத் தவிர வேறு யாரிடமும் என் ரகசியத்தைக் கூறியதில்லை. நானே சொல்ல வேண்டுமென்றிருந்தேன். நீயும் கேட்டுவிட்டாய். என் வாழ்வில் ஒரு பெண் என்றால் அது நீதான். என் மனையாளும் நீதான். ஆனால் நம் திருமணம் நடைபெற வேண்டுமென்றால் ஒரு சில நிகழ்வுகள் நடந்தாக வேண்டும்."
அவன் பதில் அவளையும் குழப்பியது. "ஒன்றும் புரியவில்லையே, என்ன நிகழவேண்டும்".
"தேன்மொழி" என்று அழைத்தவன் சற்று நிறுத்தினான் அவளது கண்ணோடு கண் நோக்கி. "நான் சென்ற வருடம் தில்லையம்பலம் சென்றிருந்தேனல்லவா? அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளை எதிர்ப்பார்த்திருக்கிறேன். அது இன்னும் ஓரிரு திங்களில் நிகழ்வதற்கான சாத்தியங்கள் வெளிப்படுகின்றன. அதன் பின் நம் திருமணம்தான்".
"என்னவென்பதை எனக்கு விளக்கிச் சொல்லுங்களேன்" விடுவதாக இல்லை தேன்மொழி.
"உனக்கும் தெரியவேண்டியதுதான். இங்கே உட்கார். தில்லையில் எனக்கு ஒரு சூத்திரம் கற்றுத்தரப்பட்டது. அதன் பெயர் சக்கர வியூகம். அதை நடைமுறைப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அந்த முயற்சிக்குப் பின் நம் திருமணம் சாத்தியமாகிவிடும்".
"சக்கரவியூகமா? அதை நாம் பாரதக்கதையிலல்லவா படித்திருக்கிறோம்."
"இது வேறு. நிச்சயமாக உனக்கு இதைப்பற்றி பிறகு சொல்கிறேன். இப்போதைக்கு என்னையும் என் வார்த்தைகளையும் நம்பு".
"இப்போது மட்டுமல்ல எப்போதும் உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்" என்றாள் தேன்மொழி ஏக்கத்துடன். அனிச்சையாக எழுந்த அவள் கரங்களைத் தன் கரங்களுள் ஏந்தினான் இளவழுதி. இணைந்த அந்தக் கரங்கள் சக்கர வியூகத்திற்கு ஒரு புது சூத்திரம் அமைத்தன.
(தொடரும்)
நீண்ட நாட்களுக்குப் பிறகு நாம் வீரதவளப்பட்டணத்திற்குச் செல்கிறோம். வீரபாண்டியன் தன் தலை நகரை மிக விரைவில் நிர்மாணம் செய்து செயல்பட வைத்திருந்தான். காஞ்சிக்கு சற்று அருகில் இருந்தும், இந்த நகருக்குள் பல்வேறு புதிய கட்டடங்களையும் எழுப்பியிருந்தான். வீரதவளப்பட்டணத்திலிருந்து சற்று தள்ளி இருந்த படைவீட்டில் (தற்போது படவேடு என்று அழைக்கப்படுகிறது) அவனது படைகள் தண்டு இறங்கியிருந்தன. பாண்டியப்படைகளில் ஒரு பகுதியும், இந்த நகரம் அமைந்தபின் சேர்த்த படையுமாக சேர்த்து, சற்றேறக்குறைய பத்தாயிரம் வீரர்கள் இருந்தனர். அவர்களை பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடுத்துவதற்காக, மாராயர் அங்கேயே முகாமிட்டிருந்தார். அவருக்குத் துணையாக இளவழுதியும் அங்கேயே இருந்தான். அவர்களோடு, கொல்லிமலை வில்லவர்கள் ஐன்னூற்றுவரும் அங்கே இருந்து வந்தனர்.
போருக்கான ஆயத்தம் செய்யவேண்டும் என்று விக்ரம பாண்டியர் சொல்லிவிட்டதன் விளைவாக, அங்கே பல்வேறு பொருட்களும் சேகரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன. பொதி வண்டிகள், அவற்றை நடத்த பொதி மாடுகள், படைகள் தங்குவதற்காகத் தயாரிக்கப்பட்ட கூடாரங்கள், உணவு சமைக்கத் தேவையான பாத்திரங்கள், அரிசி, பருப்பு ஆகியவை தனியே ஒரு பகுதியில் சேமிக்கப்பட்டது.
போர்த்தளவாடங்களான, வாள், வேல், கவசம், சலாகை முதலியவை அங்கேயே அமைக்கப்பட்ட கொல்லர் பட்டறைகளில் தயாராகிக் கொண்டிருந்தன. மேலும் குதிரைகள், யானைகளுக்குத் தேவையான கவசங்களும், உணவுப் பண்டங்களும் திரட்டப்பட்டன.
ஆனால் இத்தனை பெரிய படையை அங்கே நிர்வகிப்பது, புதிய அரசுக்குப் பெரும் தலைவலியாக இருந்தது. அதற்குத் தேவையான நிதி திரட்டுவதில் சுணக்கம் ஆரம்பம் முதலே இருந்து வந்தது. புதிய அரசுக்கு வரி கொடுப்பதில் ஆங்காங்கே குழப்பம் நீடித்தது. ஆயினும் இவற்றையெல்லாம், விக்ரம பாண்டியர் ஒரு வழியாக சமாளித்துக் கொண்டு வந்தார்.
வீரபாண்டியன் தன் மனையாள் கயல்விழியுடன் வீரதவளப்பட்டணத்திலேயே சிறிது காலம் உல்லாசமாக இருந்து வந்தான். அவர்கள் இருவருக்கும் மிக மிக எளிய முறையில் திருமணம் நடைபெற்றிருந்தது. ஆகவே நமக்குக் கூட அழைப்பு அனுப்பவில்லை!. இப்போதுதான் நாம் தெரிந்து கொண்டாலும் மனதைத் தேற்றிக்கொண்டு மணமக்களை வாழ்த்துவோம்!!.
ஆனால் இளவழுதியும், தேன்மொழியும் இன்னும் சிறிது காலம் காதலர்களாகவே தொடர்ந்து இருப்பதாக முடிவு செய்து விட்டனர் போலிருக்கிறது. அவர்களுக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை. தேன்மொழி, வீரதவளப்பட்டணத்திலேயே இருந்து வந்தாள். படைவீடு செல்ல அவளுக்கு விருப்பமென்றாலும், ஏனோ மாராயர் மறுத்து வந்தார். அவ்வப்போது அங்கே வரும் இளவழுதிக்கு சில நல்ல யோசனைகளும் தெரிவித்து வந்தாள்.
====
காதலர்களுக்கு உகந்த நேரம் மாலைப் பொழுதுதான். அப்போதுதான் சூரியன் மலைவாயிலில் விழுவதற்கும் சந்திரன் அலைவாயிலில் எழுவதற்கும் சரியாக இருக்கும். அப்போது ஒளியிருந்தும் இல்லாதது போன்ற ஒரு மயக்கமான சூழல், காதலர்களின் மனதை ஒத்ததாக இருப்பதால் அவர்களுக்கும் அந்தி நேரத்தில் எண்ணங்கள் விழுந்தும் எழுந்தும் ஒருவித மயக்கத்தைத் தரும். அத்துடன் பூங்கா போன்ற மனதிற்கினிய இடத்தில் இருந்துவிட்டால் இந்த மயக்கம் மேலும் வாட்டி எடுக்கும். இதை பசலை நோய் என்பர் கவிஞர் திலகங்கள்!
அத்தகைய ஒரு அழகான உத்தியான வனத்தில் மாலை உலா சென்ற தேன்மொழிக்கு அத்தகைய பசலை கண்டு பலவேறு எண்ணங்கள் வந்து வாட்டின. நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்கிறோமல்லவா? இது என்ன? பொதுவாக பசலை படர்ந்தவர்கள் இளைத்து காணப்படுவர். ஆனால் தேன்மொழியோ நல்ல வனப்புடன் இளமைச் செழிப்புடன் இருக்கிறாளே? ஒருவேளை பசலையென்பது பொய்யோ? ஆனால் அவ்வப்போது விம்மித்தணியும் எழில் சிகரங்கள் அவளது மனப்பாங்கை ஒருவாறு உணர்த்துவதை நாம் அறியலாம். என்ன செய்வது. இருந்த ஒரு தோழி கயல்விழியும் கல்யாணம் செய்துகொண்டு கற்புக்கரசியாகிவிட்டாள். இவள் பாடு அல்லவா திண்டாட்டமாகிவிட்டது.
தேன்மொழியின் இதயத்தில் இளவழுதியின்பால், அன்பு, பாசம், கோபம், வெறுப்பு, துக்கம், பயம் போன்ற விதவிதமான உணர்ச்சிகள் அலையலையாய் எழும்பின. இன்று வருவதாய் வாக்களித்திருந்தவனிடம் வெளிப்படையாகக் கேட்டுவிடுவது என்றே எண்ணியிருந்தாள். திருமணம் என்ற உறவு ஏற்பட்டால்தான், உரிமை பலப்படும் என்பது அவளுக்குத் தெரிந்திருந்தது.
உத்தியான வனத்திலிருக்கும் விளக்குகளுக்கு எண்ணெயிட்டு திரியேற்றுவோர், தம் பணிகளைச் செய்யத் துவங்கினர். இரூளும் மெல்ல சூழ்ந்தது. காத்திருந்த கண்கள் களையிழந்தன. காதலனைக் காணாத காரணத்தால். தேன்மொழி தன்னையே கடிந்து கொண்டாள். மீண்டும் ஒரு நெடிய பெருமூச்சுடன் அரண்மனை திரும்பத்துவங்கினாள்.
அங்கிருந்த பல்வேறு மலர்ச்செடிகளும், மாலை நேரத்தில் மொட்டவிழ்த்து மணம் பரப்பத் துவங்கியிருந்தன. அதன்பால் தன் கவனத்தைத் திருப்பியவள், அந்த மணத்தை ரசித்தவாறு தன் நிலை மறந்து மெல்லக் கைவீசி நடந்து கொண்டிருந்த போது, அவளது கரங்களைப் பற்றினான் அவள் காதலன். ஆயினும் அவன் கண் தன் கடைக்கண் பார்வையையும் செலுத்தவில்லை. என்ன விந்தை. அவன் வருவானா என்று எதிர்ப்பார்த்து ஏமாந்தவளுக்கு அவன் முன்னால் நின்றாலும் அவனை நோக்க மனமில்லை. தன் மனப்போக்கை எண்ணி சற்று நகைக்கவும் செய்தாள். அது புன்முறுவலாக வெளிப்பட்டது. அதை அவளது சம்மதமாக எண்ணி தன் பக்கம் இழுத்தான் இளவழுதி. அதை எதிர்ப்பாராத தேன்மொழி, அவன் மீது விழுந்தாள்.
ஒரு நாழிகை நேரம் காதலர் இருவரும் வேருலகம் சென்று வந்தனர். அவர்கள் செய்கையைப் பார்ப்பது அநாகரீகமான செயல் என்பதால் நாம் சற்று நேரம் அவ்வனத்தில் உலாவிவிட்டு மீண்டும் அங்கே வந்து அவர்களைப் பார்த்தால் வழக்கம் போல் அவர்கள் உடல் இங்கே இருந்தாலும், உள்ளம் எங்கோ சஞ்சரித்துக்கொண்டிருந்ததைக் காண முடிகிறது. எதற்கும் ஒரு முடிவு வேண்டுமல்லவா? ஒரு சிறு தென்றல் காற்று அவர்கள் அமர்ந்திருந்த மரத்தைத் தழுவிச் சென்றபோது சிலிர்த்த அந்த மரத்திலிருந்து உதிர்ந்த மலர்கள் அவர்களை இவ்வுலகிற்கு மீட்டன.
எப்போதும் சுதாரிப்பது பெண்ணினம்தான். அந்த வகையில் தேன்மொழியும் தன் நிலை உணர்ந்தாள். ஆனால் அவனிடமிருந்து விலக மனம் மறுத்தது. காலம் காலமாக ஊட்டி வளர்க்கப்பட்ட கற்பு நெறி பற்றிய தெளிவு அவனிடமிருந்து பிரிந்து செல்ல அறிவுறுத்தியது. வேண்டாவெறுப்பாக சற்று விலக முயன்றாள். அந்த முயற்சியும் இளவழுதிக்குச் சாதகமாகவே அமைந்தது. அவளது இயற்கை அழகுடன் இயைந்து உறவாடும் நிலையைப் பெற்றான். கண்ணோடு கண் நோக்கிவிட்டால் வாய்ச்சொற்களுக்குப் பயன் என்ன? ஆனால் அவர்களுக்குள் என்ன பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நம்மால் ஊகிக்க முடியவில்லையே. ஏதாவது பேசினால்தானே நாம் கேட்க முடியும். ஹூம் எவ்வளவு நேரம்தான் காத்திருப்பது?
ஒருவழியாக இளவழுதி தனது தொண்டையைக் கனைத்தான். அதற்குப் பதிலளிக்கும் விதமாக தேன்மொழியிடமிருந்து ஒரு ஹும். அடடா. என்ன இது. இன்று போய் நாளைதான் வரவேண்டும் போலிருக்கிறதே. இதோ இளவழுதி பேசிவிட்டான்.
"தேன்மொழி, கோபமா?"
"நல்ல கேள்வி, இவ்வளவு நேரம் ஒன்றாக இருந்துவிட்டு.."
"ஏதாவது பேசவேண்டுமல்லவா?"
"எல்லாம் பேசுவீர்கள், ஒன்றைத் தவிர"
"எந்த ஒன்று?"
"நான் அதையும் வெட்கத்தை விட்டுச் சொல்ல வேண்டுமா? சரி சொல்லித் தொலைக்கிறேன். மாமா என்னிடம் பலமுறை கேட்டுவிட்டார் என் திருமணத்தைப் பற்றி. உங்கள் எண்ணம் என்னவென்று தெரியாமல் நான் என்ன சொல்ல"
"என் எண்ணம் தெரியாதா உனக்கு"
"எல்லாம் தெரிகிறது. ஆனால் திருமணம் பற்றி ஒன்றுமே பேசமாட்டேன் என்கிறீர்களே"
இதற்குப் பதிலாக, இளவழுதியிடமிருந்து ஒரு பெருமூச்சுதான் வெளிவந்தது. அதுவரை இருந்த குதூகலம் சட்டென்று மாறி முகத்தில் ஒரு வித குழப்பம் குடிகொண்டது. "தேன்மொழி, உன்னைத் தவிர வேறு யாரிடமும் என் ரகசியத்தைக் கூறியதில்லை. நானே சொல்ல வேண்டுமென்றிருந்தேன். நீயும் கேட்டுவிட்டாய். என் வாழ்வில் ஒரு பெண் என்றால் அது நீதான். என் மனையாளும் நீதான். ஆனால் நம் திருமணம் நடைபெற வேண்டுமென்றால் ஒரு சில நிகழ்வுகள் நடந்தாக வேண்டும்."
அவன் பதில் அவளையும் குழப்பியது. "ஒன்றும் புரியவில்லையே, என்ன நிகழவேண்டும்".
"தேன்மொழி" என்று அழைத்தவன் சற்று நிறுத்தினான் அவளது கண்ணோடு கண் நோக்கி. "நான் சென்ற வருடம் தில்லையம்பலம் சென்றிருந்தேனல்லவா? அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளை எதிர்ப்பார்த்திருக்கிறேன். அது இன்னும் ஓரிரு திங்களில் நிகழ்வதற்கான சாத்தியங்கள் வெளிப்படுகின்றன. அதன் பின் நம் திருமணம்தான்".
"என்னவென்பதை எனக்கு விளக்கிச் சொல்லுங்களேன்" விடுவதாக இல்லை தேன்மொழி.
"உனக்கும் தெரியவேண்டியதுதான். இங்கே உட்கார். தில்லையில் எனக்கு ஒரு சூத்திரம் கற்றுத்தரப்பட்டது. அதன் பெயர் சக்கர வியூகம். அதை நடைமுறைப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அந்த முயற்சிக்குப் பின் நம் திருமணம் சாத்தியமாகிவிடும்".
"சக்கரவியூகமா? அதை நாம் பாரதக்கதையிலல்லவா படித்திருக்கிறோம்."
"இது வேறு. நிச்சயமாக உனக்கு இதைப்பற்றி பிறகு சொல்கிறேன். இப்போதைக்கு என்னையும் என் வார்த்தைகளையும் நம்பு".
"இப்போது மட்டுமல்ல எப்போதும் உங்களைத்தான் நம்பியிருக்கிறேன்" என்றாள் தேன்மொழி ஏக்கத்துடன். அனிச்சையாக எழுந்த அவள் கரங்களைத் தன் கரங்களுள் ஏந்தினான் இளவழுதி. இணைந்த அந்தக் கரங்கள் சக்கர வியூகத்திற்கு ஒரு புது சூத்திரம் அமைத்தன.
(தொடரும்)
Wednesday, December 9, 2009
சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 15 !
இதுவரை:-
சக்கரவியூகம் இதுவரை சற்றேறக்குறைய 45 பகுதிகளாக வெளி வந்திருக்கிறது. இதுவரை நடந்த கதையின் ஓட்டத்தை அது நடந்த ஊர்களின் பெயர்களில் பார்ப்போம்.
காஞ்சி:-
காஞ்சியின் கடிகையில் பயின்ற மாணாக்கர்களுக்கு சக்கர வியூகத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள ஆசை. ஆனால் ஆசாரியர் தெளிவாக விளக்க வில்லை. துணை ஆசாரியன் மாதவன் அதை விளக்குவதாகக் கூறுகிறான். மாணாக்கர்கள், வீர பாண்டியன் (மதுரை), வல்லாளன் (துவாரசமுத்திரம், ஹொய்சளம்), இளவழுதி (திருவெள்ளரை), கோப்பெருஞ்சிங்கன் (காஞ்சிபுரம்), ஹரிஹர ராயன், புக்கராயன் (காஞ்சி). இவர்கள் அனைவருமே முக்கியப் பாத்திரங்கள்.
திருவெள்ளரை:-
இளவழுதியின் சொந்த ஊர். அவன் தந்தை மாராயரும் சகோதரி கயல்விழியும், மாமன் மகள் தேன்மொழியும் அந்த ஊரில் வசிக்கிறார்கள். வீரபாண்டியனும் இளவழுதியும் இங்கே வர, முறையே கயல்விழியிடமும், தேன் மொழியிடமும் காதல் கொள்கிறார்கள். தேன்மொழிக்கு மாலிக் கஃபூரின் திட்டம் தற்செயலாகத் தெரிய வருகிறது.
ஸ்ரீரங்கம்:-
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி, வல்லாளனை தமிழகத்தின் பக்கம் இருத்த முயற்சிக்கிறார். ஆனால் வல்லாளன் பிடி கொடுத்துப் பேசவில்லை. அதே நேரத்தில் அவரிடம் வந்த இளவழுதியை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்துகிறார்.
சிதம்பரம்:-
திருவாதிரைத் திரு நாளில், சிதம்பரத்தில் அனைவருக்கும் சக்கரவியூகத்தைப் பற்றி எடுத்துரைக்கிறான் மாதவன். ஆனால் இளவழுதிக்கு மட்டும் உண்மையான சக்கரவியூகத்தைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறான்.
மதுரை:-
சுந்தர பாண்டியனுக்கும் வீர பாண்டியனுக்கும் வாரிசுரிமைப் போட்டி வெளிப்படையாக நடக்கிறது. கயல்விழி மாறுவேடத்தில் வீரபாண்டியனின் மாமன் விக்ரம பாண்டியன் வீட்டில் தங்குகிறாள். வீரபாண்டியனின் தந்தை குலசேகர பாண்டியர் மரணமடைகிறார். சுந்தரன் தந்திரமாக அரசுக்கட்டில் ஏறுகிறான். (இத்துடன் முதல் பாகம் முடிவடைந்தது)
துவார சமுத்திரம் (ஹளபேடு) :-
இரண்டாம் பாகத்தில், வல்லாளன் அரசனாக தனது அவையைக் கூட்டி தமிழகத்தின் மீது போர் தொடுக்க வேண்டியதன் தேவையைத் தெரிவிக்கிறான். மாலிக் கஃபூர் பற்றிய அச்சம் தேவை இல்லை என்றும் தெரிவிக்கிறான். இவனுக்கு நீலா என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.
வீரதவளப்பட்டணம் (வந்தவாசி):-
விக்ரம பாண்டியன் செய்த ஒரு உடன்படிக்கை மூலம், வீரதவளப்பட்டினத்தைத் தலைமையிடமாகக் கொண்டு வீர பாண்டியன் ஒரு அரசை நிறுவுகிறான். அங்கே மாராயர், இளவழுதி, கயல்விழி, தேன்மொழி ஆகியோர் வருகிறார்கள். அங்கே மாலிக் கஃபூரின் தென்னிந்தியப் படையெடுப்பின் திட்டத்தை விளக்குகிறார் விக்ரம பாண்டியர்.
ஆந்திராவின் காடு:-
மாலிக் கஃபூர் தன் படைகளுடன் தங்கியிருக்கிறான். அவனைச் சந்திக்க சுந்தர பாண்டியன் வருகிறான். அவன் மதுரையைத் தாக்க வருமாறு அழைக்கிறான். மாலிக் கஃபூர் மேலும் ஒரு திட்டத்தை வகுக்கிறான்.
குவலாலா (கோலார்):-
ஹொய்சளர்களின் முக்கிய நகரமான குவலாலாவில் ஹொய்சளப் படைகள் ஒன்று சேர்கின்றன. அங்கே அரசரை எதிர்பார்த்து மாதண்ட நாயகமும், குவலாலாவின் கோட்டைத்தலைவன் ஆதவனும் காத்திருக்கிறார்கள்.
= = =
இனி. . .
ஹொய்சள தேசத்தின் முக்கிய நகரமான குவலாலாவையும், அதன் தலை நகரான துவார சமுத்திரத்தையும் இணைக்கும் முக்கியப் பெருவழி எப்போதும் மிகுந்த ஆரவாரத்துடனும் ஜனத்திரளுடனும் இருக்குமென்றாலும், அன்று அந்த வழியில் அதுவரை ஒரு ஈ, காக்கை கூட வர வில்லை. அந்தப் பெருவழியில் அன்று பொதுவானவர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஒரு முக்கியப் பிரமுகரின் வருகைக்காக நீண்ட நேரமாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த போது, கோட்டைக் காவலன் ஆதவனுக்கும், மாதண்ட நாயகத்திற்கும் தெரிந்தது ஒரு சிறு புழுதிப்படலம் மட்டுமே. சற்று நேரம் கழித்து அங்கே ஏறக்குறைய நூறு குதிரைகளில் வீரர்கள் வருவது புலப்பட்டது. அக்கூட்டத்தின் முன்னே ஹொய்சளர்களின் ராஜ முத்திரையிட்ட பதாகையைத் தாங்கியவாறு வந்த ஒரு குதிரையால் அந்தக் கூட்டத்தில் முக்கிய பிரமுகர் வருகிறார் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டது.
கோட்டை வாயிலை அந்த வீரர் கூட்டம் நெருங்குவதற்கும், ஆதவனும், மாதண்ட நாயகமும் அங்கே செல்வதற்கும் சரியாக இருந்தது. அந்தக் கூட்டத்தில் இவர்கள் இருவரும் தேடிய முக்கியப் பிரமுகர் இல்லை.
"ஆதவா, படையின் முன்னே பதாகை. ஆனால் படையிலோ தலைவர் இல்லை. ஒரே குழப்பமாக இருக்கிறதே" என்றார் மாதண்ட நாயகம்.
"எனக்கும் அதே சந்தேகம்தான். எதற்கும் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று பார்ப்போம். நாமாக ஒன்றும் கூற வேண்டாம்." ஆதவன் சொன்னது சரியாகவே பட்டது மாதண்ட நாயகத்திற்கு. (இனி இவரை நாயகம் என்றே அழைப்போம்.)
சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட குதிரை வீரர்கள், ஒரு ஒழுங்கான வரிசையில் தங்கள் குதிரைகளை நிறுத்திக் கொண்டார்கள். அவர்களில் தலைவன் போல் காணப்பட்ட ஒருவன், தனது கொம்பை எடுத்து பலமாக ஊதினான். பிறகு "கோட்டைத் தலைவரிடம் அவசரமாக ஒரு தகவல் சொல்ல வேண்டும். மன்னரின் ஆணை. உடனே கதவைத் திறவுங்கள்" என்றான் சத்தமாக. அதைக் கேட்டு வாயிலின் முகப்பிற்கு வந்த நாயகம், "யார் நீ, முதலில் அதைத் தெளிவாகச் சொல். பிறகு உள்ளே வருவதைப் பற்றி பேசலாம்" என்றார் கோபமாக.
"நான் யாரென்பது தேவையில்லாத விஷயம். இதோ மன்னரின் பதாகை இருக்கிறது. அவரது முத்திரை பதித்த ஓலை இருக்கிறது. முக்கியமான தகவல் என்று அவரே என்னிடம் கூறினார். அதோடு அவரது இலச்சினையையும் கொடுத்திருக்கிறார்" என்று ஹொய்சள ராஜ முத்திரையைக் காட்ட முற்பட்டான். இந்தப் பதிலால் திருப்தியடைந்த நாயகம், "சரி, நீ மட்டும் உள்ளே வா. மற்றவர்கள் அங்கேயே இருக்கட்டும்" என்று கூறி ஒருவன் மட்டும் உள்ளே நுழையும் அளவுக்கு வழியை ஏற்படுத்துமாறு கோட்டைக் காவலர்களுக்குக் கட்டளையிட்டார்.
உள்ளே வந்த வீரன் மாதண்ட நாயகத்திடம் ஓலையை அளித்துவிட்டு, "நான் வந்த வேலை முடிந்தது. உத்தரவு கொடுங்கள். நாங்கள் உடனே புறப்பட வேண்டும்." என்றான்.
"எங்கே" ஓலையைப் பிரித்துக் கொண்டே நாயகம் வினவினார்.
"அதைச் சொல்ல உத்தரவில்லை"
"நான் நாயகம்"
"நான் அரசரின் தூதுவன்"
அதற்குள் ஓலையைப் பிரித்துவிட்ட நாயகம் அதன் மீது தன் கண்களை ஓட்டினார். சற்று நேரத்திற்குப் பிறகு அந்தத் தூதுவனைப் பார்த்த நாயகம், "இதை மன்னர் தான் அளித்தாரா?" என்றார்.
"ஆம்"
"எங்கே"
"அதைச் சொல்ல உத்தரவில்லை"
"இந்த ஓலையின் மீது எனக்கு நம்பிக்கையில்லை"
"அதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை"
"சரி உன் பெயர் என்ன?"
"அதைச் சொல்ல உத்தரவில்லை"
"ம். என் பொறுமையைச் சோதிக்கிறாய். உன்னை இப்போதே சிறை செய்ய முடியும்"
"அரசரின் உத்தரவு அவ்வாறு இல்லை"
எதற்கும் அசராத அந்த வீரனின் நிலையைப் பார்த்து சற்று அசந்துதான் போனார் நாயகம். சிறிய சிந்தனைக்குப் பின் "சரி, நீ செல்லலாம்" என்று உத்தரவு பிறப்பித்தார். அவனும் அவரை வணங்கிவிட்டு, கோட்டைவாயிலை விட்டகன்றான். உடனே சில வீரர்களை அழைத்து அவனைப் பின் தொடர்ந்து சென்று கண்காணிக்குமாறு உத்தரவிட்டுவிட்டு, ஆதவனைத் தேடிச் சென்றார்.
"ஆதவா, அரசரிடமிருந்து ஓலை வந்திருக்கிறது"
"அரசரிடமிருந்தா?, அவரையல்லவா எதிர்ப்பார்த்தோம்." ஆதவன் வினவினான் ஆச்சரியத்துடன்.
"ம். ஆனால் ஓலை மீது எனக்கு என்னவோ நம்பிக்கை பிறக்கவில்லை. இதோ பார்" என்று ஓலையை அவனிடம் நீட்டினார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது
"நாயகத்திற்கு... நாம் வேறு சில பணிகளில் ஈடுபட்டிருப்பதால், தற்போதைக்கு குவலாலா வருவதற்கில்லை. ஆகவே படைகளைத் திரட்டிக்கொண்டு, காவிரிக் கரை வழியாக, உறையூரில் தண்டு இறங்கவும். உங்களை அங்கே சந்திக்கிறேன். உடன் ஆதவனையும் அழைத்துச் செல்லவும்." இதன் பின் அரச இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது.
அதை மீண்டும் ஒரு முறை வாசித்துவிட்டு, "இதைச் சந்தேகிக்க ஒரு முகாந்திரமும் இல்லையே" என்றான் ஆதவன்.
"இல்லை ஆதவா, ஓலை சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் அரசரின் திட்டம் இதுவல்ல. என்னால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. யோசித்துக்கொண்டிருக்கிறேன்" என்றார் நாயகம். அவரது முகத்தில் கவலையும், குழப்பமும் சேர்ந்து இருந்தன.
"நீங்கள் குழம்ப வேண்டாம். அரசரது உத்தரவுப் படியே நடப்பதுதான் நல்லது என்று நினைக்கிறேன்"
"ம். எதற்கும் ஓரிரு நாட்கள் பொறுப்போம். அந்த வீரனைப் பின் தொடர்ந்து செல்ல ஆட்களை அனுப்பியிருக்கிறேன். பார்க்கலாம். எதற்கும் நீ படை நடத்துவதற்கான பூர்வாங்க வேலைகளைத் துவக்கிவிடு" என்று ஆதவனைப் பணித்துவிட்டு மெதுவாக நடந்தார் நாயகம். அவரையே பார்த்தவாறு நின்றிருந்தான் ஆதவன்.
(தொடரும்)
'
சக்கரவியூகம் இதுவரை சற்றேறக்குறைய 45 பகுதிகளாக வெளி வந்திருக்கிறது. இதுவரை நடந்த கதையின் ஓட்டத்தை அது நடந்த ஊர்களின் பெயர்களில் பார்ப்போம்.
காஞ்சி:-
காஞ்சியின் கடிகையில் பயின்ற மாணாக்கர்களுக்கு சக்கர வியூகத்தைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள ஆசை. ஆனால் ஆசாரியர் தெளிவாக விளக்க வில்லை. துணை ஆசாரியன் மாதவன் அதை விளக்குவதாகக் கூறுகிறான். மாணாக்கர்கள், வீர பாண்டியன் (மதுரை), வல்லாளன் (துவாரசமுத்திரம், ஹொய்சளம்), இளவழுதி (திருவெள்ளரை), கோப்பெருஞ்சிங்கன் (காஞ்சிபுரம்), ஹரிஹர ராயன், புக்கராயன் (காஞ்சி). இவர்கள் அனைவருமே முக்கியப் பாத்திரங்கள்.
திருவெள்ளரை:-
இளவழுதியின் சொந்த ஊர். அவன் தந்தை மாராயரும் சகோதரி கயல்விழியும், மாமன் மகள் தேன்மொழியும் அந்த ஊரில் வசிக்கிறார்கள். வீரபாண்டியனும் இளவழுதியும் இங்கே வர, முறையே கயல்விழியிடமும், தேன் மொழியிடமும் காதல் கொள்கிறார்கள். தேன்மொழிக்கு மாலிக் கஃபூரின் திட்டம் தற்செயலாகத் தெரிய வருகிறது.
ஸ்ரீரங்கம்:-
ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளி, வல்லாளனை தமிழகத்தின் பக்கம் இருத்த முயற்சிக்கிறார். ஆனால் வல்லாளன் பிடி கொடுத்துப் பேசவில்லை. அதே நேரத்தில் அவரிடம் வந்த இளவழுதியை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்துகிறார்.
சிதம்பரம்:-
திருவாதிரைத் திரு நாளில், சிதம்பரத்தில் அனைவருக்கும் சக்கரவியூகத்தைப் பற்றி எடுத்துரைக்கிறான் மாதவன். ஆனால் இளவழுதிக்கு மட்டும் உண்மையான சக்கரவியூகத்தைப் பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறான்.
மதுரை:-
சுந்தர பாண்டியனுக்கும் வீர பாண்டியனுக்கும் வாரிசுரிமைப் போட்டி வெளிப்படையாக நடக்கிறது. கயல்விழி மாறுவேடத்தில் வீரபாண்டியனின் மாமன் விக்ரம பாண்டியன் வீட்டில் தங்குகிறாள். வீரபாண்டியனின் தந்தை குலசேகர பாண்டியர் மரணமடைகிறார். சுந்தரன் தந்திரமாக அரசுக்கட்டில் ஏறுகிறான். (இத்துடன் முதல் பாகம் முடிவடைந்தது)
துவார சமுத்திரம் (ஹளபேடு) :-
இரண்டாம் பாகத்தில், வல்லாளன் அரசனாக தனது அவையைக் கூட்டி தமிழகத்தின் மீது போர் தொடுக்க வேண்டியதன் தேவையைத் தெரிவிக்கிறான். மாலிக் கஃபூர் பற்றிய அச்சம் தேவை இல்லை என்றும் தெரிவிக்கிறான். இவனுக்கு நீலா என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கிறார்கள்.
வீரதவளப்பட்டணம் (வந்தவாசி):-
விக்ரம பாண்டியன் செய்த ஒரு உடன்படிக்கை மூலம், வீரதவளப்பட்டினத்தைத் தலைமையிடமாகக் கொண்டு வீர பாண்டியன் ஒரு அரசை நிறுவுகிறான். அங்கே மாராயர், இளவழுதி, கயல்விழி, தேன்மொழி ஆகியோர் வருகிறார்கள். அங்கே மாலிக் கஃபூரின் தென்னிந்தியப் படையெடுப்பின் திட்டத்தை விளக்குகிறார் விக்ரம பாண்டியர்.
ஆந்திராவின் காடு:-
மாலிக் கஃபூர் தன் படைகளுடன் தங்கியிருக்கிறான். அவனைச் சந்திக்க சுந்தர பாண்டியன் வருகிறான். அவன் மதுரையைத் தாக்க வருமாறு அழைக்கிறான். மாலிக் கஃபூர் மேலும் ஒரு திட்டத்தை வகுக்கிறான்.
குவலாலா (கோலார்):-
ஹொய்சளர்களின் முக்கிய நகரமான குவலாலாவில் ஹொய்சளப் படைகள் ஒன்று சேர்கின்றன. அங்கே அரசரை எதிர்பார்த்து மாதண்ட நாயகமும், குவலாலாவின் கோட்டைத்தலைவன் ஆதவனும் காத்திருக்கிறார்கள்.
= = =
இனி. . .
ஹொய்சள தேசத்தின் முக்கிய நகரமான குவலாலாவையும், அதன் தலை நகரான துவார சமுத்திரத்தையும் இணைக்கும் முக்கியப் பெருவழி எப்போதும் மிகுந்த ஆரவாரத்துடனும் ஜனத்திரளுடனும் இருக்குமென்றாலும், அன்று அந்த வழியில் அதுவரை ஒரு ஈ, காக்கை கூட வர வில்லை. அந்தப் பெருவழியில் அன்று பொதுவானவர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஒரு முக்கியப் பிரமுகரின் வருகைக்காக நீண்ட நேரமாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த போது, கோட்டைக் காவலன் ஆதவனுக்கும், மாதண்ட நாயகத்திற்கும் தெரிந்தது ஒரு சிறு புழுதிப்படலம் மட்டுமே. சற்று நேரம் கழித்து அங்கே ஏறக்குறைய நூறு குதிரைகளில் வீரர்கள் வருவது புலப்பட்டது. அக்கூட்டத்தின் முன்னே ஹொய்சளர்களின் ராஜ முத்திரையிட்ட பதாகையைத் தாங்கியவாறு வந்த ஒரு குதிரையால் அந்தக் கூட்டத்தில் முக்கிய பிரமுகர் வருகிறார் என்ற தகவல் உறுதி செய்யப்பட்டது.
கோட்டை வாயிலை அந்த வீரர் கூட்டம் நெருங்குவதற்கும், ஆதவனும், மாதண்ட நாயகமும் அங்கே செல்வதற்கும் சரியாக இருந்தது. அந்தக் கூட்டத்தில் இவர்கள் இருவரும் தேடிய முக்கியப் பிரமுகர் இல்லை.
"ஆதவா, படையின் முன்னே பதாகை. ஆனால் படையிலோ தலைவர் இல்லை. ஒரே குழப்பமாக இருக்கிறதே" என்றார் மாதண்ட நாயகம்.
"எனக்கும் அதே சந்தேகம்தான். எதற்கும் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று பார்ப்போம். நாமாக ஒன்றும் கூற வேண்டாம்." ஆதவன் சொன்னது சரியாகவே பட்டது மாதண்ட நாயகத்திற்கு. (இனி இவரை நாயகம் என்றே அழைப்போம்.)
சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்ட குதிரை வீரர்கள், ஒரு ஒழுங்கான வரிசையில் தங்கள் குதிரைகளை நிறுத்திக் கொண்டார்கள். அவர்களில் தலைவன் போல் காணப்பட்ட ஒருவன், தனது கொம்பை எடுத்து பலமாக ஊதினான். பிறகு "கோட்டைத் தலைவரிடம் அவசரமாக ஒரு தகவல் சொல்ல வேண்டும். மன்னரின் ஆணை. உடனே கதவைத் திறவுங்கள்" என்றான் சத்தமாக. அதைக் கேட்டு வாயிலின் முகப்பிற்கு வந்த நாயகம், "யார் நீ, முதலில் அதைத் தெளிவாகச் சொல். பிறகு உள்ளே வருவதைப் பற்றி பேசலாம்" என்றார் கோபமாக.
"நான் யாரென்பது தேவையில்லாத விஷயம். இதோ மன்னரின் பதாகை இருக்கிறது. அவரது முத்திரை பதித்த ஓலை இருக்கிறது. முக்கியமான தகவல் என்று அவரே என்னிடம் கூறினார். அதோடு அவரது இலச்சினையையும் கொடுத்திருக்கிறார்" என்று ஹொய்சள ராஜ முத்திரையைக் காட்ட முற்பட்டான். இந்தப் பதிலால் திருப்தியடைந்த நாயகம், "சரி, நீ மட்டும் உள்ளே வா. மற்றவர்கள் அங்கேயே இருக்கட்டும்" என்று கூறி ஒருவன் மட்டும் உள்ளே நுழையும் அளவுக்கு வழியை ஏற்படுத்துமாறு கோட்டைக் காவலர்களுக்குக் கட்டளையிட்டார்.
உள்ளே வந்த வீரன் மாதண்ட நாயகத்திடம் ஓலையை அளித்துவிட்டு, "நான் வந்த வேலை முடிந்தது. உத்தரவு கொடுங்கள். நாங்கள் உடனே புறப்பட வேண்டும்." என்றான்.
"எங்கே" ஓலையைப் பிரித்துக் கொண்டே நாயகம் வினவினார்.
"அதைச் சொல்ல உத்தரவில்லை"
"நான் நாயகம்"
"நான் அரசரின் தூதுவன்"
அதற்குள் ஓலையைப் பிரித்துவிட்ட நாயகம் அதன் மீது தன் கண்களை ஓட்டினார். சற்று நேரத்திற்குப் பிறகு அந்தத் தூதுவனைப் பார்த்த நாயகம், "இதை மன்னர் தான் அளித்தாரா?" என்றார்.
"ஆம்"
"எங்கே"
"அதைச் சொல்ல உத்தரவில்லை"
"இந்த ஓலையின் மீது எனக்கு நம்பிக்கையில்லை"
"அதைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை"
"சரி உன் பெயர் என்ன?"
"அதைச் சொல்ல உத்தரவில்லை"
"ம். என் பொறுமையைச் சோதிக்கிறாய். உன்னை இப்போதே சிறை செய்ய முடியும்"
"அரசரின் உத்தரவு அவ்வாறு இல்லை"
எதற்கும் அசராத அந்த வீரனின் நிலையைப் பார்த்து சற்று அசந்துதான் போனார் நாயகம். சிறிய சிந்தனைக்குப் பின் "சரி, நீ செல்லலாம்" என்று உத்தரவு பிறப்பித்தார். அவனும் அவரை வணங்கிவிட்டு, கோட்டைவாயிலை விட்டகன்றான். உடனே சில வீரர்களை அழைத்து அவனைப் பின் தொடர்ந்து சென்று கண்காணிக்குமாறு உத்தரவிட்டுவிட்டு, ஆதவனைத் தேடிச் சென்றார்.
"ஆதவா, அரசரிடமிருந்து ஓலை வந்திருக்கிறது"
"அரசரிடமிருந்தா?, அவரையல்லவா எதிர்ப்பார்த்தோம்." ஆதவன் வினவினான் ஆச்சரியத்துடன்.
"ம். ஆனால் ஓலை மீது எனக்கு என்னவோ நம்பிக்கை பிறக்கவில்லை. இதோ பார்" என்று ஓலையை அவனிடம் நீட்டினார். அதில் இவ்வாறு எழுதியிருந்தது
"நாயகத்திற்கு... நாம் வேறு சில பணிகளில் ஈடுபட்டிருப்பதால், தற்போதைக்கு குவலாலா வருவதற்கில்லை. ஆகவே படைகளைத் திரட்டிக்கொண்டு, காவிரிக் கரை வழியாக, உறையூரில் தண்டு இறங்கவும். உங்களை அங்கே சந்திக்கிறேன். உடன் ஆதவனையும் அழைத்துச் செல்லவும்." இதன் பின் அரச இலச்சினை பொறிக்கப்பட்டிருந்தது.
அதை மீண்டும் ஒரு முறை வாசித்துவிட்டு, "இதைச் சந்தேகிக்க ஒரு முகாந்திரமும் இல்லையே" என்றான் ஆதவன்.
"இல்லை ஆதவா, ஓலை சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் அரசரின் திட்டம் இதுவல்ல. என்னால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. யோசித்துக்கொண்டிருக்கிறேன்" என்றார் நாயகம். அவரது முகத்தில் கவலையும், குழப்பமும் சேர்ந்து இருந்தன.
"நீங்கள் குழம்ப வேண்டாம். அரசரது உத்தரவுப் படியே நடப்பதுதான் நல்லது என்று நினைக்கிறேன்"
"ம். எதற்கும் ஓரிரு நாட்கள் பொறுப்போம். அந்த வீரனைப் பின் தொடர்ந்து செல்ல ஆட்களை அனுப்பியிருக்கிறேன். பார்க்கலாம். எதற்கும் நீ படை நடத்துவதற்கான பூர்வாங்க வேலைகளைத் துவக்கிவிடு" என்று ஆதவனைப் பணித்துவிட்டு மெதுவாக நடந்தார் நாயகம். அவரையே பார்த்தவாறு நின்றிருந்தான் ஆதவன்.
(தொடரும்)
'
Thursday, August 20, 2009
சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 14
அத்தியாயம் 14: குவலாலா. . கோட்டைத்தலைவன்..
ஹொய்சள வம்சத்தின் கடைசி மன்னனான வீர வல்லாளன் தன் சாம்ராஜ்யத்தை விரிவாக்கும் திட்டத்தை மிகச்சிறப்பாகவே தயாரித்திருந்தான். படைகள் நகர வேண்டிய முறை முதற்கொண்டு வியூகம் அமைத்து முன்னேற வேண்டிய விதம் வரை தெளிவாகத் திட்டமிருந்தது அனைவரையும் கவர்ந்ததென்றே சொல்லவேண்டும். இதை ஒரு சிலர் தலையசைத்தும், புன்னகை கூட்டியும் ஆமோதித்தனர். என்றும் சற்று சந்தேகத்துடனேயே வல்லாளனை அணுகும் மகாமாத்யருக்கும் அந்தத்திட்டம் மிகச் சிறப்பானதொன்றாகவே தோன்றியது. அதன் பிறகு போர் சன்னத்தத்திற்கு வேண்டிய சாமக்ரியைகளை (பொருட்களை) ஏற்பாடு செய்து அதையும் தென் எல்லைக்கு அனுப்பிவிடுமாறு கட்டளையிட்ட மன்னவன், இனி தினமும் இந்த அவை கூடும் என்றும் அடுத்த நடவடிக்கைகளை ஆலோசித்து பணியாற்றவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தான்.
அன்றைய கூட்டம் மிகச்சிறப்பாகவே நடைபெற்றதாக அனைவரும் கருதினர். அன்று முதல் ஹொய்சள ராஜ்ஜியத்தில் அங்கங்கே சிற்சில வியத்தகு நிகழ்ச்சிகள் அரங்கேறின. மக்கள் என்ன நடக்கிறது என்றே தெரியாதவாறு மின்னல் வேகத்தில் தோன்றி மறைந்தன. வர்த்தகம், மக்கள் நடமாட்டம் ஆகியவை நன்றாக நடந்து கொண்டிருந்தாலும், ஏதோ ஒரு மாற்றம் தோன்றவே செய்தது.
====
அன்றைய அரசவைக்கூட்டத்திற்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப்பிறகு ஹொய்சள தேசத்தின் தென் எல்லையில் நாம் இருக்கிறோம். அதன் முக்கிய நகரம் குவலாலா (இன்றைய கோலார்). அதற்கு நேர் மேற்கே மற்றொரு முக்கிய நகரமான தலைக்காடு (மைசூர்) இருந்தது என்றாலும், ஹொய்சள தேசத்திற்கும் பாண்டிய, தொண்டை மண்டலங்களுக்குமிடையேயான ராஜபாட்டையும், சகடப்பெருவழியும் குவலாலாவை மையம் கொண்டே சென்றன. ஆகவே அது முக்கிய கேந்திர நகரமாக விளங்கியது.(முன்னர் கூறியது போல் ராஜபாட்டையில் அரசர்களும், அரசப் பிரதிநிதிகளும், படைகளும், முக்கிய வணிக வேளாளர் குழுக்களும் பயணித்தன. ராஜபாட்டையில் ஆங்காங்கே சத்திரங்களும் சாவடிகளும் நிறைந்திருந்தன. முக்கியமானவர்கள் பிரயாணம் செய்வதால் பாதுகாப்பும் அதிகமாக இருந்தன. இந்தப் பாதையில் பொதுமக்கள் முக்கிய விழாக்காலங்கள் தவிர பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. சகடப்பெருவழி என்பது சரக்குப் போக்குவரத்துக்காகவே பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட வழியாகும். இந்த வழியாகத்தான் விளை பொருட்கள், வாணிபப் பொதிகள் ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக்குச் சென்று வந்தன. இந்தப் பெருவழிகளில் முக்கிய நகருக்கு இடைத்தூரம் குறிக்கும் கற்களும் (மைல் கல்) இடம்பெற்றிருந்தன. )
[தருமபுரிக்கு அருகில் மாட்டலாம் பட்டியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்லில் 'அதியமான் பெருவழி' என்று பொறிக்கப்பட்டு "நாவற்தாவளத்துக்கு 27 காதம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாவற்தாவளம் ஒரு முக்கியச்சந்தையாகும்.]"
கி.பி. நான்காம் நூற்றாண்டில் கங்கர்களின் தலை நகரமாக விளங்கியதை பல்லவர்கள் கைப்பற்றினர். பிறகு சில காலம் ராஷ்டிரகூடர்களின் வசத்திலிருந்ததை, முதலாம் ராஜராஜ சோழர் தன் வசம் கொண்டு வந்தார். சோழர்கள் வீழ்ந்த பிறகு ஹொய்சளர்களின் முக்கிய நகரமானது இந்தக் குவலாலா. பிற்காலத்தில் விஜய நகர சாம்ராஜ்யத்தின் முக்கிய நகரமாகவும், பிறகு ஹைதர் அலியின் முதல் தலை நகரமாகவும் விளங்கியது கோலார் என்று இன்று அழைக்கப்படுகிற குவலாலா. இந்த நகரின் அருகே இரு பெரும் ஏரிகள் அதன் அரணாகவும், நீர் நிலைகளாகவும் செயல்பட்டு வந்தன.
=====
குவலாலாவின் கோட்டை மதிள்களின் மேல் வீரர்களின் நடமாட்டம் மிகுந்திருந்தது. அந்த நகருக்குள் கடந்த ஒரு மாத காலத்தில் பற்பல மனிதர்கள் வந்து குவிந்தவண்ணம் இருந்தனர். உணவுப் பொதிகளும், தளவாட வண்டிகளும் வந்த வண்ணம் இருந்தன. அவற்றையெல்லாம் நகரின் கிழக்குப்பகுதியிலுள்ள ஏரியின் கரையில் அமைந்திருந்த பெரிய தோப்பிற்குத் திருப்பி விட்டுக்கொண்டிருந்தனர் காவல் வீரர்கள். புதிதாக வந்த வீரர்கள் நகரில் நுழைந்தவுடன் அவர்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு அந்நகரை ஒட்டியுள்ள மலையடிவாரத்திற்கு அனுப்பப்பட்டனர். ஆகவே நகரில் நடமாட்டம் இருந்ததே ஒழிய அங்கே யாரும் அதிக நேரம் தங்கவில்லை. இவ்வாறின்றி புதிய மனிதர்கள் யாரேனும் தென்பட்டால் உடனே அழைத்து விசாரிக்கவும் தேவைப்பட்டால் அவர்களைச் சிறையில் அடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்படியான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க அன்று வடக்கு வாசல் வழக்கத்தை விட அதிக பரபரப்புடன் காணப்பட்டது. வீரர்கள் அந்த் வழியே வருவோரைத் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தனர். கோட்டையிலிருந்து வடக்குவாசல் வழியாக வெளியே செல்லவோ, கோட்டைக்கு உள்ளே நுழையவோ அன்று அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தென்திசை மாதண்ட நாயகமும், அந்தக் கோட்டைத் தலைவனும் வடக்குவாசலின் மேல் விதானத்தில் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் பார்வை அந்த வடக்குவாசலை அடைந்த ராஜபாட்டையிலேயே நிலைத்திருந்தது. இருவர் முகத்திலும் கவலைகளின் ரேகைகள் படர்ந்திருந்தன. அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாலும், எதுவும் பேசாமலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமலும் இருந்தனர். அவர்களின் முகச்சாயலிலிருந்து யாரோ முக்கியமான ஒருவரை அல்லது முக்கியச் செய்தியை எதிர்ப்பார்ப்பது போல் தோன்றியது.
குவலாலாவின் கோட்டைத்தலைவன் பணிக்குப் புதியவன். இளைஞன். கடந்த பல ஆண்டுகளாக அந்தக் கோட்டை பேருக்குத்தான் கோட்டையாக இருந்து வந்தது. போர் என்ற ஒன்று நடைபெற்று பல்லாண்டுகள் ஆன காரணத்தால் அங்கே போர் சன்னத்தங்கள் குறைந்து வணிக ரீதியான முக்கியத்துவம் அதிகரித்திருந்தது. அவனது தந்தையிடமிருந்து அந்தப்பதவி அவனுக்கு வந்திருந்தது. அந்த வகையில் கோட்டைத்தலைவன் வணிகனாகவே மாறிவிட்டிருந்தான். வணிக சம்பந்தமான காரியங்களைத் திறம்பட நடத்திக்கொண்டிருந்தான். அவனது கவனமின்றி ஒரு சிறு துரும்பு கூட நாட்டின் எல்லையைத்தாண்டாது என்பது பிரசித்தமாக இருந்தது.
திடீரென்று தென் திசை மாதண்ட நாயகம் வந்து போர் குறித்து அறிவித்தவுடன் செய்வதறியாது திகைத்தான். நல்லவேளையாக மாதண்ட நாயகமே கோட்டைக் காவலை பலப்படுத்தும் வேலையில் இறங்கிவிட்டதால் அவன் நிம்மதியடைந்தான். ஆனாலும் அவனது வணிகப் பணிகள் பாதிப்படைந்ததால் சொல்லவொணாத்துயரமும் கோபமும் அடைந்தான். ஆனால் இரு நாட்களுக்கு முன் மாதண்ட நாயகம் சொன்ன செய்தி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரசர் வீர வல்லாளரே நேரடியாகக்கோட்டைக்கு வந்து அங்கேயே தண்டு இறங்கி போர்ப்பணிகளைக் கவனிக்கப்போகிறார் என்பதே அது.
அந்த செய்தியைக் கேட்டவுடன், அரசனுக்கு நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டுமே என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. என்ன செய்தால் நல்லபலன் கிடைக்கும் என்று குழம்பிக்கொண்டிருந்தான். அப்போதுதான் மீண்டும் மாதண்ட நாயகம் அழைப்பதாகவும் இம்முறை வடக்கு வாசலுக்கு வந்து சேரும்படியும் தகவல் வந்தது. தன் தலைவிதியை நொந்து கொண்டு மதிய ஆகாரம் கூட சரியாக உண்ணாமல் உடனே புறப்பட்டான் கோட்டைத்தலைவன். வடக்கு வாசலை அடைந்த போது அங்கு நிலவிய பரபரப்பு அவனது குழப்பத்தை அதிகரித்தது.
"வருக வருக கோட்டைத்தலைவரே, உங்களிடம் முக்கியமாகப் பேச வேண்டியிருந்ததால் உங்களை இங்கேயே வரவழைத்துவிட்டேன். நானும் இங்கே இருந்தாக வேண்டிய சூழ் நிலை. பொருட்படுத்தமாட்டீர்கள் என்று நம்புகிறேன்" என்று பவ்யமாகப் பேச்சை ஆரம்பித்தார் மாதண்ட நாயகம். பேச்சில் சிறிது நகைச்சுவை இழையோடினாலும், அவரது மனம் தெளிவாக இல்லை என்பதை வதனம் தெள்ளென எடுத்தியம்பியது.
"அய்யா, அதை ஒன்றும் பொருட்படுத்த மாட்டேன். ஆனால் தயவு செய்து என்னை மரியாதையாக அழைப்பதைத் தவிர்க்க வேண்டுகிறேன். நான் உங்களை விட வயதில் மிகச் சிறியவன். தங்கள் மகனுக்கொப்பானவன். என்னைப்பெயரிட்டே அழைக்கலாம்" என்றான் கோட்டைத்தலைவன். அவனை மரியாதையாக அழைப்பது சங்கடத்திலாழ்த்தியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட மாதண்ட நாயகம்,
"சரி அப்படியே அழைக்கிறேன். இன்று மன்னர் வருவதாகத் தெரிவித்தேன் அல்லவா? மற்றொரு தகவல் வந்திருக்கிறது. வழியில் வந்து கொண்டிருந்த மன்னர் சட்டென்று மறைந்து விட்டதாகவும், அவர் இறுதியாகத் தங்கியிருந்த சத்திரத்தில் ஒரு ஓலை கிடைத்திருப்பதாகவும் அதை எடுத்துக் கொண்டு ஒரு வீரன் வருவதாகவும் செய்திகள் வந்தன. அந்த வீரனை எதிர் பார்த்தே நான் இங்கே காத்திருக்கிறேன். வந்த தகவலின் படி அந்த வீரனும் மதியத்திற்குள் இங்கு வந்திருக்க வேண்டும். இப்போதோ மாலை நெருங்கப்போகிறது. இன்னும் வந்தபாடில்லை. அதைப்பற்றி யோசிக்கவே உன்னை அழைத்தேன்" என்றார்.
"வீரன் வருவதாக வந்தத்தகவல் எப்போது வந்தது?"
"இன்று காலை தான் வந்தது. அரசனது ஓலையைக் கொண்டு வரும் வீரன் சற்று தாமதித்து வருவதாகவும், இந்தத் தகவலைச்சொல்லும் படியாகச் சொன்னதாகவும்
காலை வந்தவன் சொல்கிறான். தகவல் கொண்டு வந்தவன் நம்பத்தகுந்தவன்தான். ஆனாலும் ஓலை வராததால் சற்று கவலை உண்டாகியிருக்கிறது"
"கவலை வேண்டாம் மாதண்ட நாயகரே, எப்படியும் வீரன் விரைவில் வந்து விடுவான் அதற்காகத்தானே இந்த வழியில் போக்குவரத்தை நிறுத்தி விட்டீர்கள். சற்று கவனிப்போம்." என்று கூறிய கோட்டைத்தலைவன், மாதண்ட நாயகத்துடன் சேர்ந்து வடக்கிலிருந்து வரும் ராஜபாட்டையைக் கவனிக்கத் தொடங்கினான்.
அப்படித் தொடங்கி மூன்று நாழிகைகளுக்கும் மேலாயிற்றே ஒழிய ஒருவரும் வந்த பாடில்லை. இருவருக்கும் இருப்புக் கொள்ளவில்லை. நான்கு கண்களும் அந்தப்பாதையையே உற்று நோக்கிக்கொண்டிருந்தன. சட்டென்று மாதண்ட நாயகத்தின் முகத்தில் ஒரு மலர்ச்சி.
"ஆதவா, அங்கே பார்" என்று கோட்டைத்தலைவனை அழைத்தார் மாதண்ட நாயகம். தூரத்தே சிறு புழுதிப்படலம்.
(தொடரும்)
ஹொய்சள வம்சத்தின் கடைசி மன்னனான வீர வல்லாளன் தன் சாம்ராஜ்யத்தை விரிவாக்கும் திட்டத்தை மிகச்சிறப்பாகவே தயாரித்திருந்தான். படைகள் நகர வேண்டிய முறை முதற்கொண்டு வியூகம் அமைத்து முன்னேற வேண்டிய விதம் வரை தெளிவாகத் திட்டமிருந்தது அனைவரையும் கவர்ந்ததென்றே சொல்லவேண்டும். இதை ஒரு சிலர் தலையசைத்தும், புன்னகை கூட்டியும் ஆமோதித்தனர். என்றும் சற்று சந்தேகத்துடனேயே வல்லாளனை அணுகும் மகாமாத்யருக்கும் அந்தத்திட்டம் மிகச் சிறப்பானதொன்றாகவே தோன்றியது. அதன் பிறகு போர் சன்னத்தத்திற்கு வேண்டிய சாமக்ரியைகளை (பொருட்களை) ஏற்பாடு செய்து அதையும் தென் எல்லைக்கு அனுப்பிவிடுமாறு கட்டளையிட்ட மன்னவன், இனி தினமும் இந்த அவை கூடும் என்றும் அடுத்த நடவடிக்கைகளை ஆலோசித்து பணியாற்றவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தான்.
அன்றைய கூட்டம் மிகச்சிறப்பாகவே நடைபெற்றதாக அனைவரும் கருதினர். அன்று முதல் ஹொய்சள ராஜ்ஜியத்தில் அங்கங்கே சிற்சில வியத்தகு நிகழ்ச்சிகள் அரங்கேறின. மக்கள் என்ன நடக்கிறது என்றே தெரியாதவாறு மின்னல் வேகத்தில் தோன்றி மறைந்தன. வர்த்தகம், மக்கள் நடமாட்டம் ஆகியவை நன்றாக நடந்து கொண்டிருந்தாலும், ஏதோ ஒரு மாற்றம் தோன்றவே செய்தது.
====
அன்றைய அரசவைக்கூட்டத்திற்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப்பிறகு ஹொய்சள தேசத்தின் தென் எல்லையில் நாம் இருக்கிறோம். அதன் முக்கிய நகரம் குவலாலா (இன்றைய கோலார்). அதற்கு நேர் மேற்கே மற்றொரு முக்கிய நகரமான தலைக்காடு (மைசூர்) இருந்தது என்றாலும், ஹொய்சள தேசத்திற்கும் பாண்டிய, தொண்டை மண்டலங்களுக்குமிடையேயான ராஜபாட்டையும், சகடப்பெருவழியும் குவலாலாவை மையம் கொண்டே சென்றன. ஆகவே அது முக்கிய கேந்திர நகரமாக விளங்கியது.(முன்னர் கூறியது போல் ராஜபாட்டையில் அரசர்களும், அரசப் பிரதிநிதிகளும், படைகளும், முக்கிய வணிக வேளாளர் குழுக்களும் பயணித்தன. ராஜபாட்டையில் ஆங்காங்கே சத்திரங்களும் சாவடிகளும் நிறைந்திருந்தன. முக்கியமானவர்கள் பிரயாணம் செய்வதால் பாதுகாப்பும் அதிகமாக இருந்தன. இந்தப் பாதையில் பொதுமக்கள் முக்கிய விழாக்காலங்கள் தவிர பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. சகடப்பெருவழி என்பது சரக்குப் போக்குவரத்துக்காகவே பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட வழியாகும். இந்த வழியாகத்தான் விளை பொருட்கள், வாணிபப் பொதிகள் ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக்குச் சென்று வந்தன. இந்தப் பெருவழிகளில் முக்கிய நகருக்கு இடைத்தூரம் குறிக்கும் கற்களும் (மைல் கல்) இடம்பெற்றிருந்தன. )
[தருமபுரிக்கு அருகில் மாட்டலாம் பட்டியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்லில் 'அதியமான் பெருவழி' என்று பொறிக்கப்பட்டு "நாவற்தாவளத்துக்கு 27 காதம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாவற்தாவளம் ஒரு முக்கியச்சந்தையாகும்.]"
கி.பி. நான்காம் நூற்றாண்டில் கங்கர்களின் தலை நகரமாக விளங்கியதை பல்லவர்கள் கைப்பற்றினர். பிறகு சில காலம் ராஷ்டிரகூடர்களின் வசத்திலிருந்ததை, முதலாம் ராஜராஜ சோழர் தன் வசம் கொண்டு வந்தார். சோழர்கள் வீழ்ந்த பிறகு ஹொய்சளர்களின் முக்கிய நகரமானது இந்தக் குவலாலா. பிற்காலத்தில் விஜய நகர சாம்ராஜ்யத்தின் முக்கிய நகரமாகவும், பிறகு ஹைதர் அலியின் முதல் தலை நகரமாகவும் விளங்கியது கோலார் என்று இன்று அழைக்கப்படுகிற குவலாலா. இந்த நகரின் அருகே இரு பெரும் ஏரிகள் அதன் அரணாகவும், நீர் நிலைகளாகவும் செயல்பட்டு வந்தன.
=====
குவலாலாவின் கோட்டை மதிள்களின் மேல் வீரர்களின் நடமாட்டம் மிகுந்திருந்தது. அந்த நகருக்குள் கடந்த ஒரு மாத காலத்தில் பற்பல மனிதர்கள் வந்து குவிந்தவண்ணம் இருந்தனர். உணவுப் பொதிகளும், தளவாட வண்டிகளும் வந்த வண்ணம் இருந்தன. அவற்றையெல்லாம் நகரின் கிழக்குப்பகுதியிலுள்ள ஏரியின் கரையில் அமைந்திருந்த பெரிய தோப்பிற்குத் திருப்பி விட்டுக்கொண்டிருந்தனர் காவல் வீரர்கள். புதிதாக வந்த வீரர்கள் நகரில் நுழைந்தவுடன் அவர்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு அந்நகரை ஒட்டியுள்ள மலையடிவாரத்திற்கு அனுப்பப்பட்டனர். ஆகவே நகரில் நடமாட்டம் இருந்ததே ஒழிய அங்கே யாரும் அதிக நேரம் தங்கவில்லை. இவ்வாறின்றி புதிய மனிதர்கள் யாரேனும் தென்பட்டால் உடனே அழைத்து விசாரிக்கவும் தேவைப்பட்டால் அவர்களைச் சிறையில் அடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்படியான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க அன்று வடக்கு வாசல் வழக்கத்தை விட அதிக பரபரப்புடன் காணப்பட்டது. வீரர்கள் அந்த் வழியே வருவோரைத் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தனர். கோட்டையிலிருந்து வடக்குவாசல் வழியாக வெளியே செல்லவோ, கோட்டைக்கு உள்ளே நுழையவோ அன்று அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தென்திசை மாதண்ட நாயகமும், அந்தக் கோட்டைத் தலைவனும் வடக்குவாசலின் மேல் விதானத்தில் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் பார்வை அந்த வடக்குவாசலை அடைந்த ராஜபாட்டையிலேயே நிலைத்திருந்தது. இருவர் முகத்திலும் கவலைகளின் ரேகைகள் படர்ந்திருந்தன. அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாலும், எதுவும் பேசாமலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமலும் இருந்தனர். அவர்களின் முகச்சாயலிலிருந்து யாரோ முக்கியமான ஒருவரை அல்லது முக்கியச் செய்தியை எதிர்ப்பார்ப்பது போல் தோன்றியது.
குவலாலாவின் கோட்டைத்தலைவன் பணிக்குப் புதியவன். இளைஞன். கடந்த பல ஆண்டுகளாக அந்தக் கோட்டை பேருக்குத்தான் கோட்டையாக இருந்து வந்தது. போர் என்ற ஒன்று நடைபெற்று பல்லாண்டுகள் ஆன காரணத்தால் அங்கே போர் சன்னத்தங்கள் குறைந்து வணிக ரீதியான முக்கியத்துவம் அதிகரித்திருந்தது. அவனது தந்தையிடமிருந்து அந்தப்பதவி அவனுக்கு வந்திருந்தது. அந்த வகையில் கோட்டைத்தலைவன் வணிகனாகவே மாறிவிட்டிருந்தான். வணிக சம்பந்தமான காரியங்களைத் திறம்பட நடத்திக்கொண்டிருந்தான். அவனது கவனமின்றி ஒரு சிறு துரும்பு கூட நாட்டின் எல்லையைத்தாண்டாது என்பது பிரசித்தமாக இருந்தது.
திடீரென்று தென் திசை மாதண்ட நாயகம் வந்து போர் குறித்து அறிவித்தவுடன் செய்வதறியாது திகைத்தான். நல்லவேளையாக மாதண்ட நாயகமே கோட்டைக் காவலை பலப்படுத்தும் வேலையில் இறங்கிவிட்டதால் அவன் நிம்மதியடைந்தான். ஆனாலும் அவனது வணிகப் பணிகள் பாதிப்படைந்ததால் சொல்லவொணாத்துயரமும் கோபமும் அடைந்தான். ஆனால் இரு நாட்களுக்கு முன் மாதண்ட நாயகம் சொன்ன செய்தி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரசர் வீர வல்லாளரே நேரடியாகக்கோட்டைக்கு வந்து அங்கேயே தண்டு இறங்கி போர்ப்பணிகளைக் கவனிக்கப்போகிறார் என்பதே அது.
அந்த செய்தியைக் கேட்டவுடன், அரசனுக்கு நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டுமே என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. என்ன செய்தால் நல்லபலன் கிடைக்கும் என்று குழம்பிக்கொண்டிருந்தான். அப்போதுதான் மீண்டும் மாதண்ட நாயகம் அழைப்பதாகவும் இம்முறை வடக்கு வாசலுக்கு வந்து சேரும்படியும் தகவல் வந்தது. தன் தலைவிதியை நொந்து கொண்டு மதிய ஆகாரம் கூட சரியாக உண்ணாமல் உடனே புறப்பட்டான் கோட்டைத்தலைவன். வடக்கு வாசலை அடைந்த போது அங்கு நிலவிய பரபரப்பு அவனது குழப்பத்தை அதிகரித்தது.
"வருக வருக கோட்டைத்தலைவரே, உங்களிடம் முக்கியமாகப் பேச வேண்டியிருந்ததால் உங்களை இங்கேயே வரவழைத்துவிட்டேன். நானும் இங்கே இருந்தாக வேண்டிய சூழ் நிலை. பொருட்படுத்தமாட்டீர்கள் என்று நம்புகிறேன்" என்று பவ்யமாகப் பேச்சை ஆரம்பித்தார் மாதண்ட நாயகம். பேச்சில் சிறிது நகைச்சுவை இழையோடினாலும், அவரது மனம் தெளிவாக இல்லை என்பதை வதனம் தெள்ளென எடுத்தியம்பியது.
"அய்யா, அதை ஒன்றும் பொருட்படுத்த மாட்டேன். ஆனால் தயவு செய்து என்னை மரியாதையாக அழைப்பதைத் தவிர்க்க வேண்டுகிறேன். நான் உங்களை விட வயதில் மிகச் சிறியவன். தங்கள் மகனுக்கொப்பானவன். என்னைப்பெயரிட்டே அழைக்கலாம்" என்றான் கோட்டைத்தலைவன். அவனை மரியாதையாக அழைப்பது சங்கடத்திலாழ்த்தியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட மாதண்ட நாயகம்,
"சரி அப்படியே அழைக்கிறேன். இன்று மன்னர் வருவதாகத் தெரிவித்தேன் அல்லவா? மற்றொரு தகவல் வந்திருக்கிறது. வழியில் வந்து கொண்டிருந்த மன்னர் சட்டென்று மறைந்து விட்டதாகவும், அவர் இறுதியாகத் தங்கியிருந்த சத்திரத்தில் ஒரு ஓலை கிடைத்திருப்பதாகவும் அதை எடுத்துக் கொண்டு ஒரு வீரன் வருவதாகவும் செய்திகள் வந்தன. அந்த வீரனை எதிர் பார்த்தே நான் இங்கே காத்திருக்கிறேன். வந்த தகவலின் படி அந்த வீரனும் மதியத்திற்குள் இங்கு வந்திருக்க வேண்டும். இப்போதோ மாலை நெருங்கப்போகிறது. இன்னும் வந்தபாடில்லை. அதைப்பற்றி யோசிக்கவே உன்னை அழைத்தேன்" என்றார்.
"வீரன் வருவதாக வந்தத்தகவல் எப்போது வந்தது?"
"இன்று காலை தான் வந்தது. அரசனது ஓலையைக் கொண்டு வரும் வீரன் சற்று தாமதித்து வருவதாகவும், இந்தத் தகவலைச்சொல்லும் படியாகச் சொன்னதாகவும்
காலை வந்தவன் சொல்கிறான். தகவல் கொண்டு வந்தவன் நம்பத்தகுந்தவன்தான். ஆனாலும் ஓலை வராததால் சற்று கவலை உண்டாகியிருக்கிறது"
"கவலை வேண்டாம் மாதண்ட நாயகரே, எப்படியும் வீரன் விரைவில் வந்து விடுவான் அதற்காகத்தானே இந்த வழியில் போக்குவரத்தை நிறுத்தி விட்டீர்கள். சற்று கவனிப்போம்." என்று கூறிய கோட்டைத்தலைவன், மாதண்ட நாயகத்துடன் சேர்ந்து வடக்கிலிருந்து வரும் ராஜபாட்டையைக் கவனிக்கத் தொடங்கினான்.
அப்படித் தொடங்கி மூன்று நாழிகைகளுக்கும் மேலாயிற்றே ஒழிய ஒருவரும் வந்த பாடில்லை. இருவருக்கும் இருப்புக் கொள்ளவில்லை. நான்கு கண்களும் அந்தப்பாதையையே உற்று நோக்கிக்கொண்டிருந்தன. சட்டென்று மாதண்ட நாயகத்தின் முகத்தில் ஒரு மலர்ச்சி.
"ஆதவா, அங்கே பார்" என்று கோட்டைத்தலைவனை அழைத்தார் மாதண்ட நாயகம். தூரத்தே சிறு புழுதிப்படலம்.
(தொடரும்)
Thursday, August 13, 2009
சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 13
அத்தியாயம் 13: ஹொய்சள சாம்ராஜ்யம்
காலைக் கிரணங்களை வீசி மெல்ல எழுந்தான் கதிரவன். அவனோடு எழுந்தன உலக உயிர்களெலாம். உறங்குவது போலும் சாக்காடு என்றார் வள்ளுவப் பெருந்தகை. அந்த சாக்காட்டிலிருந்து உலகத்தை மீட்டு மீண்டும் உயிர்ப்பிக்க வந்த உதய சூரியன் மாலைப் பொழுதைப் போலன்றி தன் செந்நிற கிரணங்களின் வண்ணத்தை உடனே பொன்னிறத்துக்கு மாற்றினான். அவனது சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஹொய்சள தலை நகர மக்களுக்கும் வந்து விட்டது போலும். அந்தக் காலை வேளை வழக்கம் போலவே கலகலப்பாக இருந்தது.
இரவில், நீலாவுடனான அந்தரங்க தர்க்கம் மூன்றாம் ஜாமத்தைத் தாண்டி நீண்டாலும் சூரியன் உதிக்குமுன்னரே எழுந்து காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, தலை நகரத்தின் தலைமைக் கோவிலான ஹொய்சளேஸ்வரர் கோவிலுக்குச் சென்றான். கூடவே நீலாவும். ஒரு மன்னவனாகச் செல்லாமல் பக்தனாகச் சென்ற மன்னவனை மக்கள் வணங்கவும் செய்தனர். அதை பொருட்படுத்தாமல் நேரே கோவிலுக்குள் சென்றான் வல்லாளன். நாமும் அவனைத் தொடர்வோம். அப்போதுதான் அந்தக் கோவிலை நன்றாகப் பார்க்க முடியும்.
ஹொய்சளேஸ்வராலயம், தமிழகக் கோவில்களைப் போலன்றி முற்றிலும் வேறு விதமாக இருந்தது. அங்கே ராஜ கோபுரம் இல்லை. கோவிலைச் சுற்றியும் மதிள்கள் இருந்தன. உள்ளே நுழைய தோரண வாயில் மட்டுமே உண்டு. உள்ளே நுழந்ததும் விசாலமான பிரகாரம் நம்மை பிரமிக்க வைக்கிறது. வாயிற்தோரணத்திலிருந்து சற்றேறக்குறைய நூறு அடிகள் தொலைவில் முக்கியக் கோவில் அமையப்பெற்றிருந்தது. ஜகதி என்ற மேடை அமைப்பின் மேல் அமையப்பெற்றிருந்த கோவிலின் தூண்களும், பக்கச்சுவர்களும் பல்வேறு நுணுக்கமான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்தக் கோவில் தமிழ் நாட்டுக் கோவில்களைப் போல் கருங்கற்களால் அமைக்கப்படாமல், கெட்டியான சுண்ணாம்புக்கற்களால் அமைக்கப்பட்டிருந்தது. அதனாலேயே அவ்வளவு நுணுக்கமான, உயிரோட்டமுள்ள, தத்ரூபமான சிற்பங்களைச் செதுக்க முடிந்தது. ஆஹா. இவற்றைக் காணக் கண் கோடி இருந்தாலும் போதாதல்லவா?
அந்த ஜகதி எனப்படும் மேடையில் ஏறினால் நமக்கு முதலில் தெரிவது ஒரு மண்டபம். தூண்கள் உருளை வடிவில் இருந்தன. வெளிப்புறத் தூண்களைப் போலன்றி இவற்றில் சிற்பங்கள் அமையாமல் வட்டமாகச் செதுக்கப்பட்டிருந்தன. அதைத் தாண்டி கருவறை எனப்படும் கர்ப்பக்கிரஹத்துக்குச் சென்றால் அங்கே, ஹொய்சளேஸ்வரர் அருள் பாலித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகிலேயே சந்தளேஸ்வரரும் அருள் பாலித்துக் கொண்டிருந்தனர். வல்லாளனின் கொள்ளுப்பாட்டனான விஷ்ணுவர்தனனின் ஆட்சியில் அவன் நினைவாகவும் அவன் மனைவி சந்தளாதேவியின் நினைவாகவும் அவனது படைத்தலைவன் கேதுமல்லன் கட்டிய கோவில் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
நாட்டைக் குறிக்கும் வகையிலும், ஆளும் பரம்பரையைக் குறிக்கும் வகையிலும் ஹொய்சளேஸ்வரா எனப் பெயர் பெற்று தலை நகரத்திலேயே அமையப்பெற்ற கோவிலில் எப்போதும் சிறப்புடன் பூஜைகள் நடப்பது வழக்கம். அதுவும் இன்று அரசனும் அரசியும் விஜயம் செய்திருக்கிறார்கள் என்பதால் பூஜையின் சிறப்பு அதிகமாயிற்று. பூஜையில் மிக கவனத்துடன் கலந்து கொண்ட வல்லாளன் தன் புதிய முயற்சி வெற்றிபெற வேண்டுமென்று மனமுருகி வேண்டிக்கொண்டிருந்தான்.
விஸ்தாரமான பூஜைகளின் முடிவில் முதல் மரியாதையை ஏற்றுக்கொண்டு பிராசாதங்களைப் பெற்றுக்கொள்ளும் போது அந்தப் பிரசாதத்தட்டு தவறி கீழே விழுந்தது. அதிர்ச்சியடைந்த முதியவரான அர்ச்சகர் தன்னை மன்னித்தருளுமாறு மன்னவனிடம் மன்றாடினார். அந்த நிகழ்வு தன் மனதைச் சிறிது வாட்டவே, அர்ச்சகரை அமைதி கொள்ளுமாறு பணித்துவிட்டு கோவிலை விட்டகன்ற வல்லாளன், நேரடியாகத் தன் அந்தரங்க ஆலோசனை மண்டபத்தை அடைந்தான்.
====
மீண்டுமொருமுறை அந்த மண்டபத்திற்கு நாம் செல்ல வேண்டியிருக்கிறது. இம்முறை ஏற்கனவே இருந்தவர்களை விட சிலர் கூடுதலாக இருந்தனர். அவர்கள் முறையே வடதிசை தண்ட நாயகம் மற்றும் தென் திசை தண்ட நாயகம். (தண்ட நாயகம் என்பது அந்த திசையில் அமைந்த படைக்குத் தளபதியைக் குறிக்கும்.) அரசன் வரவை நோக்கிக்காத்திருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். அரசன் வரும் தகவல் வந்ததும் அனைவரும் அமைதியாக எழுந்து நின்றனர்.
(இங்கே சிலவற்றை நாம் தெளிவு படுத்த வேண்டியிருக்கிறது. வரலாற்றுப் புதினங்களைப் படிப்பவர்கள் சில நிகழ்வுகள் அனைத்து புதினங்களிலும் இருப்பதைக் காணலாம். அவற்றுள் ஒன்று அந்தரங்க ஆலோசனை. இவை புதினங்களில் முக்கிய இடம் பெறுகின்றன, திருப்பு முனையாக இருக்கும் இடங்களில் இவை கட்டாயம் இடம் பெறும். இந்த ஆலோசனைகள் உண்மையாகவே நடந்திருக்குமா அல்லது புனைவா என்று நான் கேட்டுக்கொண்டதுண்டு. ஆனால், பல்வேறு புத்தகங்களைப் படிக்கும் போது, மன்னன் சர்வாதிகாரம் படைத்தவனாக இருந்தாலும், அமைச்சர் குழுவினருடனும், மற்ற அரச அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசித்த பின்னரே எந்த முடிவும் எடுத்ததாகத் தெரிகிறது. ஒவ்வொரு அரசவையிலும் அமைச்சர் குழு முக்கிய அங்கம் வகித்து வந்தது. அவர்களது முக்கியப்பணி அரசு இயந்திரத்தைத் திறம்பட நடத்துவது. அரசனுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்குவது.
இன்றைய அரசு முறையின் முன்னோடி, ஹொய்சள அரசு முறைதான் என்பதை முன்னரே பார்த்தோம். ஆகவே, முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் போதெல்லாம் அமைச்சரவையைக் கூட்டுவது இன்றியமையாததாகிறது!! மேலும் 'ப்ரோடோகால்' மிகக் கடுமையாகக் கடை பிடிக்கப்பட்டு வந்ததும், மன்னன் மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டு 'ஐகானிக் ஸ்டேச்சர்' அளிக்கப்பட்டதும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று அறியப்படுகின்றன. ஆகவே அவ்வாறு ஆலோசனைகள் வருவதும் மன்னனுடனான பேச்சுக்களும் இயல்பை ஒட்டியே இருக்கின்றன என்பதை அனைவரும் அறிந்து கொள்வீர்களாக!)
கையசைவினாலேயே அவர்களை அமரச்சொன்ன வல்லாளன் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டான்.
"நமது அரசில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் உங்களது ஆலோசனையின் பேரிலேயே எடுக்கப்படுகின்றன. அவற்றின் வெற்றி தோல்விகளுக்கு நீங்களும் பொறுப்பாவீர்கள். அந்தக் கடமையை இதுவரையிலும் சரியாகவே நிறைவேற்றி வந்துள்ளீர்கள் என்பதை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இன்று ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்பதற்காகவே ஹொய்சளேஸ்வரரைத் தரிசித்து விட்டு நேராக இங்கு வந்துள்ளேன். சில மாதங்களுக்கு முன்பு இங்கே நாம் கூடியிருந்த போது படையெடுப்பைப்பற்றி முடிவு செய்தோம். அந்தப் படையெடுப்புக்கு இப்போது நேரம் வந்து விட்டது. தளபதியாரே, நமது தற்போதைய படை நிலவரம் என்ன என்பதை அனைவருக்கும் விளக்குங்கள்"
"உத்தரவு மன்னா. நம்மிடையே மூன்று படைப்பிரிவுகள் இருக்கின்றன. அவை முறையே குத்தி (ஆந்திர மாநிலம் குண்டக்கல் அருகே இருக்கிறது. பிற்காலத்தில் இது விஜய நகரப் பேரரசின் முதல் தலை நகராக விளங்கியது.), குவலாலா (இன்றைய கோலார்) மற்றும் தலை நகரான த்வார சமுத்திரத்தல் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆறு மாதங்களுக்கு முன் வரை குறைந்த படை வீரர்களை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. மற்ற படை வீரர்கள் தத்தம் ஊர்களுக்குச் செல்லுமாறும் தங்கள் குடும்பத் தொழிலைக் கவனித்து வரவும் பணிக்கப்பட்டனர். சில மாதங்களுக்கு முன் இங்கு நடை பெற்ற ஆலோசனையின் பேரில் அனைவரும் படையில் சேருமாறு அழைக்கப்பட்டனர். இப்போது நம்மிடையே மொத்தமாக 48000 படை வீரர்களும், 4800 குதிரைகளும், 2400 யானைகளும் 400 ரதங்களும் இருக்கின்றன (1:5:10:100 என்ற அமைப்பில் படைகள் அமைக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. அதையே பயன் படுத்தியிருக்கிறேன்."
"இந்தப்படைகளை ஒன்று சேர்க்க எத்தனை நாட்கள் பிடிக்கும்?"
"மன்னா, வடக்கிலோ தெற்கிலோ சேர்க்க வேண்டுமென்றால் ஒரு பட்சத்திற்குள் (பதினைந்து நாட்கள்) சேர்த்து விடலாம்."
"அப்படி சேர்ப்பது வெளிப்படையாகத் தெரியுமா?"
"ஆம் மன்னா, ராஜபாட்டைகளையும், சகடப்பெருவழிகளையும் உபயோகித்தால் மட்டுமே படைகள் விரைவில் சேர முடியும். அப்படிச் செய்யும் போது அனைவருக்கும் தெரிய வருவதில் வியப்பில்லையே"
"நமது படைகள் ரகசியமாகக் கலக்க வேண்டுமென்று விரும்புகிறேன்"
"அப்படியென்றால் அவர்களைக் காட்டு வழியாகத்தான் அழைத்து வர வேண்டியிருக்கும். அதற்கு ஒரு மாதத்திற்கும் மேல் அவகாசம் தேவைப்படும். எங்கே என்பதையும் மன்னர் தெரிவிக்க வில்லை. வடக்கிலா, தெற்கிலா?"
"சமயம் வரும் போது தெரிவிக்கிறேன். ஒரு மாதம் என்பது சரியாகத்தான் இருக்கும். படைகளை ஒரே வழியிலன்றி பல வழிகளிலும் பயணம் செய்யுமாறு உத்தரவிடுங்கள். அனைவரும் ஒரே நாளில் புறப்படாமல், ஒவ்வொரு நாளும் சிலரை அனுப்பினால் படை நகர்வது வெளியில் தெரியாமல் இருக்கும். மேலும் படைகளை மொத்தமாகக் கலக்க விடாமல், பாதி படைகளை சற்றுத் தூரத்தில் நிறுத்துங்கள். முதலில் இருக்கும் படை நகர்ந்ததும் இந்தப் படை அர்த்த சந்திர வடிவத்தில் பரவி முன்னர் செல்லும் படைக்கு அரணாகச் செல்ல வேண்டும். முன்னே செல்லும் படையில் யானைகளை அதிகப் படுத்துங்கள். அவை அரணாகச் செயல் படும். பின்னால் இருக்கும் படையில் குதிரைப்படையை நடுவில் நிறுத்துங்கள். அவை இரு பக்கமும் பாயும் நிலையில் இருக்க வேண்டும். படை வீரர்களிடத்தில் வேலும் வில்லும் அதிக அளவில் இருக்கட்டும். வாள் சிலரிடம் மட்டும் இருந்தால் போதுமானது. முன்னர் செல்லும் படைக்கு வடதிசை தண்ட நாயகமும் பின்னால் நிற்குப் படைக்கு தென் திசை தண்ட நாயகமும் தலைமையேற்பார்கள். போர் முகத்தில் நானும் இருப்பேன். என்னுடன் தளபதி இருந்து படைகளின் நடவடிக்கையை மாற்றத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டே இருப்பார். தேவைக்கேற்ப நானும் யுத்தத்தில் பங்கெடுப்பேன். இம்முறை நமது வெற்றியில்தான் ஹொய்சளர்களின் தலை விதி நிர்ணயிக்கப்படும். தலை நகரில் அமாத்யர்கள் இருப்பார்கள். இந்தப் போர் சற்றேறக்குறைய ஒரு பட்சத்தில் முடிந்து விடும். வரும் விஜயதசமியன்று படை வடிவம் நகர வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா" என்று அடைமழை அருவி போல் திட்டத்தை விளக்கிவிட்டு தன் ஆசனத்தில் சற்று சாய்ந்து கொண்டு அனைவரையும் பார்த்தான் வல்லாளன். திட்டத்தை புரிந்து கொள்வதற்கு சற்று நேரம் பிடித்தது. அதன் பிறகும் அதன் லாப நஷ்டங்களைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தனர். வழக்கம் போல் முதலில் சுதாரித்தவர் மகாமாத்யர்தான்.
"மன்னர் அனைத்துப் படைகளையும் ஒரு பகுதியில் கலக்கத் திட்டமிட்டிருப்பது புரிகிறது. அது எந்தப்பகுதி என்பதும் இன்னும் சொல்லவில்லை. ஆனால் மற்ற பகுதி திறந்து விடப்பட்ட கதவு போல் ஆகிவிடுமே என்று அஞ்சுகிறேன்"
"மகாமாத்யரே, நன்று சொன்னீர். அவ்வாறே ஆக வேண்டும். ஏனென்றால் நான் திறந்து விடப்போகும் கதவின் பக்கம் யாரும் வரப்போவதில்லை"
"அது எப்படி உறுதியாகக் கூறுகிறீர்கள்?"
"சொல்கிறேன். வேறு விளக்கங்கள். சந்தேகங்கள்?"
"திசையைத் தவிர வேறொன்றுமில்லை மன்னா?"
"நல்லது. சொல்கிறேன் கேளுங்கள். நமது படைகள் அனைத்தையும் குவலாலத்தில் சேர்க்க வேண்டும். நமது நோக்கம் பாண்டியரைத் தாக்கி தமிழகத்தை ஹொய்சள தேசத்துடன் இணைப்பது. மகாமாத்யரே, தெற்கில் தான் நமக்குப் பகை அதிகம். வடக்கில் நமக்குக் கவலையில்லை. புரிந்ததா?"
மன்னன் எண்ணம் பாண்டியர்களைத் தாக்குவதில் ஸ்திரப்பட்டுவிட்டதை அறிந்து கொண்ட மகாமாத்யர், "மன்னா தாங்கள், மாலிக் கஃபூரை மறந்து விட்டீர்களோ என்று எண்ணுகிறேன்"
"இல்லை மகாமாத்யரே, இல்லை. அவனால் இங்கே ஆபத்து வராது"
"அதை எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்'
"அவனை மதுரைக்கு வருமாறு சுந்தர பாண்டியன் ஏற்கனவே அழைப்பு விடுத்து விட்டான். அத்துடன் அவனுக்கு வழியும் போட்டுக்கொடுத்துவிட்டான். அந்த வழி முதலில் வீரதவளப்பட்டணம், பிறகு மதுரை, பிறகு த்வார சமுத்திரம். த்வாரசமுத்திரத்திற்கு மூக்கைச் சுற்றிக்கொண்டு வரப்போகிறான் மாலிக் கஃபூர். அவனையும் பாண்டியர்களையும் ஒரு சேர தமிழகத்தில் அழிப்பேன்" என்று முடித்த போது ஆவேசம் நிறைந்திருந்தது அவன் குரலில். அவன் அளித்த தகவல் அங்கு கூடியிருந்தோருக்குப் புதுமையாக இருந்தது. மன்னன் சொல்வது போல் நடந்தால் ஹொய்சள தேசம், ஹொய்சள சாம்ராஜ்யமாகிவிடுமென்பதையும், அதற்காக மன்னம் மிகப்பெரிய ஆபத்தான திட்டத்தில் இறங்கியிருக்கிறானென்பதையும் அங்கிருந்தோர் ஐயமற அறிந்து கொண்டனர்.
(தொடரும்)
காலைக் கிரணங்களை வீசி மெல்ல எழுந்தான் கதிரவன். அவனோடு எழுந்தன உலக உயிர்களெலாம். உறங்குவது போலும் சாக்காடு என்றார் வள்ளுவப் பெருந்தகை. அந்த சாக்காட்டிலிருந்து உலகத்தை மீட்டு மீண்டும் உயிர்ப்பிக்க வந்த உதய சூரியன் மாலைப் பொழுதைப் போலன்றி தன் செந்நிற கிரணங்களின் வண்ணத்தை உடனே பொன்னிறத்துக்கு மாற்றினான். அவனது சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் ஹொய்சள தலை நகர மக்களுக்கும் வந்து விட்டது போலும். அந்தக் காலை வேளை வழக்கம் போலவே கலகலப்பாக இருந்தது.
இரவில், நீலாவுடனான அந்தரங்க தர்க்கம் மூன்றாம் ஜாமத்தைத் தாண்டி நீண்டாலும் சூரியன் உதிக்குமுன்னரே எழுந்து காலைக்கடன்களை முடித்துக் கொண்டு, தலை நகரத்தின் தலைமைக் கோவிலான ஹொய்சளேஸ்வரர் கோவிலுக்குச் சென்றான். கூடவே நீலாவும். ஒரு மன்னவனாகச் செல்லாமல் பக்தனாகச் சென்ற மன்னவனை மக்கள் வணங்கவும் செய்தனர். அதை பொருட்படுத்தாமல் நேரே கோவிலுக்குள் சென்றான் வல்லாளன். நாமும் அவனைத் தொடர்வோம். அப்போதுதான் அந்தக் கோவிலை நன்றாகப் பார்க்க முடியும்.
ஹொய்சளேஸ்வராலயம், தமிழகக் கோவில்களைப் போலன்றி முற்றிலும் வேறு விதமாக இருந்தது. அங்கே ராஜ கோபுரம் இல்லை. கோவிலைச் சுற்றியும் மதிள்கள் இருந்தன. உள்ளே நுழைய தோரண வாயில் மட்டுமே உண்டு. உள்ளே நுழந்ததும் விசாலமான பிரகாரம் நம்மை பிரமிக்க வைக்கிறது. வாயிற்தோரணத்திலிருந்து சற்றேறக்குறைய நூறு அடிகள் தொலைவில் முக்கியக் கோவில் அமையப்பெற்றிருந்தது. ஜகதி என்ற மேடை அமைப்பின் மேல் அமையப்பெற்றிருந்த கோவிலின் தூண்களும், பக்கச்சுவர்களும் பல்வேறு நுணுக்கமான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்தக் கோவில் தமிழ் நாட்டுக் கோவில்களைப் போல் கருங்கற்களால் அமைக்கப்படாமல், கெட்டியான சுண்ணாம்புக்கற்களால் அமைக்கப்பட்டிருந்தது. அதனாலேயே அவ்வளவு நுணுக்கமான, உயிரோட்டமுள்ள, தத்ரூபமான சிற்பங்களைச் செதுக்க முடிந்தது. ஆஹா. இவற்றைக் காணக் கண் கோடி இருந்தாலும் போதாதல்லவா?
அந்த ஜகதி எனப்படும் மேடையில் ஏறினால் நமக்கு முதலில் தெரிவது ஒரு மண்டபம். தூண்கள் உருளை வடிவில் இருந்தன. வெளிப்புறத் தூண்களைப் போலன்றி இவற்றில் சிற்பங்கள் அமையாமல் வட்டமாகச் செதுக்கப்பட்டிருந்தன. அதைத் தாண்டி கருவறை எனப்படும் கர்ப்பக்கிரஹத்துக்குச் சென்றால் அங்கே, ஹொய்சளேஸ்வரர் அருள் பாலித்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகிலேயே சந்தளேஸ்வரரும் அருள் பாலித்துக் கொண்டிருந்தனர். வல்லாளனின் கொள்ளுப்பாட்டனான விஷ்ணுவர்தனனின் ஆட்சியில் அவன் நினைவாகவும் அவன் மனைவி சந்தளாதேவியின் நினைவாகவும் அவனது படைத்தலைவன் கேதுமல்லன் கட்டிய கோவில் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
நாட்டைக் குறிக்கும் வகையிலும், ஆளும் பரம்பரையைக் குறிக்கும் வகையிலும் ஹொய்சளேஸ்வரா எனப் பெயர் பெற்று தலை நகரத்திலேயே அமையப்பெற்ற கோவிலில் எப்போதும் சிறப்புடன் பூஜைகள் நடப்பது வழக்கம். அதுவும் இன்று அரசனும் அரசியும் விஜயம் செய்திருக்கிறார்கள் என்பதால் பூஜையின் சிறப்பு அதிகமாயிற்று. பூஜையில் மிக கவனத்துடன் கலந்து கொண்ட வல்லாளன் தன் புதிய முயற்சி வெற்றிபெற வேண்டுமென்று மனமுருகி வேண்டிக்கொண்டிருந்தான்.
விஸ்தாரமான பூஜைகளின் முடிவில் முதல் மரியாதையை ஏற்றுக்கொண்டு பிராசாதங்களைப் பெற்றுக்கொள்ளும் போது அந்தப் பிரசாதத்தட்டு தவறி கீழே விழுந்தது. அதிர்ச்சியடைந்த முதியவரான அர்ச்சகர் தன்னை மன்னித்தருளுமாறு மன்னவனிடம் மன்றாடினார். அந்த நிகழ்வு தன் மனதைச் சிறிது வாட்டவே, அர்ச்சகரை அமைதி கொள்ளுமாறு பணித்துவிட்டு கோவிலை விட்டகன்ற வல்லாளன், நேரடியாகத் தன் அந்தரங்க ஆலோசனை மண்டபத்தை அடைந்தான்.
====
மீண்டுமொருமுறை அந்த மண்டபத்திற்கு நாம் செல்ல வேண்டியிருக்கிறது. இம்முறை ஏற்கனவே இருந்தவர்களை விட சிலர் கூடுதலாக இருந்தனர். அவர்கள் முறையே வடதிசை தண்ட நாயகம் மற்றும் தென் திசை தண்ட நாயகம். (தண்ட நாயகம் என்பது அந்த திசையில் அமைந்த படைக்குத் தளபதியைக் குறிக்கும்.) அரசன் வரவை நோக்கிக்காத்திருந்தவர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள். அரசன் வரும் தகவல் வந்ததும் அனைவரும் அமைதியாக எழுந்து நின்றனர்.
(இங்கே சிலவற்றை நாம் தெளிவு படுத்த வேண்டியிருக்கிறது. வரலாற்றுப் புதினங்களைப் படிப்பவர்கள் சில நிகழ்வுகள் அனைத்து புதினங்களிலும் இருப்பதைக் காணலாம். அவற்றுள் ஒன்று அந்தரங்க ஆலோசனை. இவை புதினங்களில் முக்கிய இடம் பெறுகின்றன, திருப்பு முனையாக இருக்கும் இடங்களில் இவை கட்டாயம் இடம் பெறும். இந்த ஆலோசனைகள் உண்மையாகவே நடந்திருக்குமா அல்லது புனைவா என்று நான் கேட்டுக்கொண்டதுண்டு. ஆனால், பல்வேறு புத்தகங்களைப் படிக்கும் போது, மன்னன் சர்வாதிகாரம் படைத்தவனாக இருந்தாலும், அமைச்சர் குழுவினருடனும், மற்ற அரச அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசித்த பின்னரே எந்த முடிவும் எடுத்ததாகத் தெரிகிறது. ஒவ்வொரு அரசவையிலும் அமைச்சர் குழு முக்கிய அங்கம் வகித்து வந்தது. அவர்களது முக்கியப்பணி அரசு இயந்திரத்தைத் திறம்பட நடத்துவது. அரசனுக்குத் தேவையான அறிவுரைகள் வழங்குவது.
இன்றைய அரசு முறையின் முன்னோடி, ஹொய்சள அரசு முறைதான் என்பதை முன்னரே பார்த்தோம். ஆகவே, முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் போதெல்லாம் அமைச்சரவையைக் கூட்டுவது இன்றியமையாததாகிறது!! மேலும் 'ப்ரோடோகால்' மிகக் கடுமையாகக் கடை பிடிக்கப்பட்டு வந்ததும், மன்னன் மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டு 'ஐகானிக் ஸ்டேச்சர்' அளிக்கப்பட்டதும் உள்ளங்கை நெல்லிக்கனி போன்று அறியப்படுகின்றன. ஆகவே அவ்வாறு ஆலோசனைகள் வருவதும் மன்னனுடனான பேச்சுக்களும் இயல்பை ஒட்டியே இருக்கின்றன என்பதை அனைவரும் அறிந்து கொள்வீர்களாக!)
கையசைவினாலேயே அவர்களை அமரச்சொன்ன வல்லாளன் நேரடியாக விஷயத்திற்கு வந்துவிட்டான்.
"நமது அரசில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் உங்களது ஆலோசனையின் பேரிலேயே எடுக்கப்படுகின்றன. அவற்றின் வெற்றி தோல்விகளுக்கு நீங்களும் பொறுப்பாவீர்கள். அந்தக் கடமையை இதுவரையிலும் சரியாகவே நிறைவேற்றி வந்துள்ளீர்கள் என்பதை நினைக்கும் போது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இன்று ஒரு முக்கிய முடிவு எடுக்க வேண்டும் என்பதற்காகவே ஹொய்சளேஸ்வரரைத் தரிசித்து விட்டு நேராக இங்கு வந்துள்ளேன். சில மாதங்களுக்கு முன்பு இங்கே நாம் கூடியிருந்த போது படையெடுப்பைப்பற்றி முடிவு செய்தோம். அந்தப் படையெடுப்புக்கு இப்போது நேரம் வந்து விட்டது. தளபதியாரே, நமது தற்போதைய படை நிலவரம் என்ன என்பதை அனைவருக்கும் விளக்குங்கள்"
"உத்தரவு மன்னா. நம்மிடையே மூன்று படைப்பிரிவுகள் இருக்கின்றன. அவை முறையே குத்தி (ஆந்திர மாநிலம் குண்டக்கல் அருகே இருக்கிறது. பிற்காலத்தில் இது விஜய நகரப் பேரரசின் முதல் தலை நகராக விளங்கியது.), குவலாலா (இன்றைய கோலார்) மற்றும் தலை நகரான த்வார சமுத்திரத்தல் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆறு மாதங்களுக்கு முன் வரை குறைந்த படை வீரர்களை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. மற்ற படை வீரர்கள் தத்தம் ஊர்களுக்குச் செல்லுமாறும் தங்கள் குடும்பத் தொழிலைக் கவனித்து வரவும் பணிக்கப்பட்டனர். சில மாதங்களுக்கு முன் இங்கு நடை பெற்ற ஆலோசனையின் பேரில் அனைவரும் படையில் சேருமாறு அழைக்கப்பட்டனர். இப்போது நம்மிடையே மொத்தமாக 48000 படை வீரர்களும், 4800 குதிரைகளும், 2400 யானைகளும் 400 ரதங்களும் இருக்கின்றன (1:5:10:100 என்ற அமைப்பில் படைகள் அமைக்கப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. அதையே பயன் படுத்தியிருக்கிறேன்."
"இந்தப்படைகளை ஒன்று சேர்க்க எத்தனை நாட்கள் பிடிக்கும்?"
"மன்னா, வடக்கிலோ தெற்கிலோ சேர்க்க வேண்டுமென்றால் ஒரு பட்சத்திற்குள் (பதினைந்து நாட்கள்) சேர்த்து விடலாம்."
"அப்படி சேர்ப்பது வெளிப்படையாகத் தெரியுமா?"
"ஆம் மன்னா, ராஜபாட்டைகளையும், சகடப்பெருவழிகளையும் உபயோகித்தால் மட்டுமே படைகள் விரைவில் சேர முடியும். அப்படிச் செய்யும் போது அனைவருக்கும் தெரிய வருவதில் வியப்பில்லையே"
"நமது படைகள் ரகசியமாகக் கலக்க வேண்டுமென்று விரும்புகிறேன்"
"அப்படியென்றால் அவர்களைக் காட்டு வழியாகத்தான் அழைத்து வர வேண்டியிருக்கும். அதற்கு ஒரு மாதத்திற்கும் மேல் அவகாசம் தேவைப்படும். எங்கே என்பதையும் மன்னர் தெரிவிக்க வில்லை. வடக்கிலா, தெற்கிலா?"
"சமயம் வரும் போது தெரிவிக்கிறேன். ஒரு மாதம் என்பது சரியாகத்தான் இருக்கும். படைகளை ஒரே வழியிலன்றி பல வழிகளிலும் பயணம் செய்யுமாறு உத்தரவிடுங்கள். அனைவரும் ஒரே நாளில் புறப்படாமல், ஒவ்வொரு நாளும் சிலரை அனுப்பினால் படை நகர்வது வெளியில் தெரியாமல் இருக்கும். மேலும் படைகளை மொத்தமாகக் கலக்க விடாமல், பாதி படைகளை சற்றுத் தூரத்தில் நிறுத்துங்கள். முதலில் இருக்கும் படை நகர்ந்ததும் இந்தப் படை அர்த்த சந்திர வடிவத்தில் பரவி முன்னர் செல்லும் படைக்கு அரணாகச் செல்ல வேண்டும். முன்னே செல்லும் படையில் யானைகளை அதிகப் படுத்துங்கள். அவை அரணாகச் செயல் படும். பின்னால் இருக்கும் படையில் குதிரைப்படையை நடுவில் நிறுத்துங்கள். அவை இரு பக்கமும் பாயும் நிலையில் இருக்க வேண்டும். படை வீரர்களிடத்தில் வேலும் வில்லும் அதிக அளவில் இருக்கட்டும். வாள் சிலரிடம் மட்டும் இருந்தால் போதுமானது. முன்னர் செல்லும் படைக்கு வடதிசை தண்ட நாயகமும் பின்னால் நிற்குப் படைக்கு தென் திசை தண்ட நாயகமும் தலைமையேற்பார்கள். போர் முகத்தில் நானும் இருப்பேன். என்னுடன் தளபதி இருந்து படைகளின் நடவடிக்கையை மாற்றத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டே இருப்பார். தேவைக்கேற்ப நானும் யுத்தத்தில் பங்கெடுப்பேன். இம்முறை நமது வெற்றியில்தான் ஹொய்சளர்களின் தலை விதி நிர்ணயிக்கப்படும். தலை நகரில் அமாத்யர்கள் இருப்பார்கள். இந்தப் போர் சற்றேறக்குறைய ஒரு பட்சத்தில் முடிந்து விடும். வரும் விஜயதசமியன்று படை வடிவம் நகர வேண்டும். ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா" என்று அடைமழை அருவி போல் திட்டத்தை விளக்கிவிட்டு தன் ஆசனத்தில் சற்று சாய்ந்து கொண்டு அனைவரையும் பார்த்தான் வல்லாளன். திட்டத்தை புரிந்து கொள்வதற்கு சற்று நேரம் பிடித்தது. அதன் பிறகும் அதன் லாப நஷ்டங்களைப் பற்றி எண்ணிக் கொண்டிருந்தனர். வழக்கம் போல் முதலில் சுதாரித்தவர் மகாமாத்யர்தான்.
"மன்னர் அனைத்துப் படைகளையும் ஒரு பகுதியில் கலக்கத் திட்டமிட்டிருப்பது புரிகிறது. அது எந்தப்பகுதி என்பதும் இன்னும் சொல்லவில்லை. ஆனால் மற்ற பகுதி திறந்து விடப்பட்ட கதவு போல் ஆகிவிடுமே என்று அஞ்சுகிறேன்"
"மகாமாத்யரே, நன்று சொன்னீர். அவ்வாறே ஆக வேண்டும். ஏனென்றால் நான் திறந்து விடப்போகும் கதவின் பக்கம் யாரும் வரப்போவதில்லை"
"அது எப்படி உறுதியாகக் கூறுகிறீர்கள்?"
"சொல்கிறேன். வேறு விளக்கங்கள். சந்தேகங்கள்?"
"திசையைத் தவிர வேறொன்றுமில்லை மன்னா?"
"நல்லது. சொல்கிறேன் கேளுங்கள். நமது படைகள் அனைத்தையும் குவலாலத்தில் சேர்க்க வேண்டும். நமது நோக்கம் பாண்டியரைத் தாக்கி தமிழகத்தை ஹொய்சள தேசத்துடன் இணைப்பது. மகாமாத்யரே, தெற்கில் தான் நமக்குப் பகை அதிகம். வடக்கில் நமக்குக் கவலையில்லை. புரிந்ததா?"
மன்னன் எண்ணம் பாண்டியர்களைத் தாக்குவதில் ஸ்திரப்பட்டுவிட்டதை அறிந்து கொண்ட மகாமாத்யர், "மன்னா தாங்கள், மாலிக் கஃபூரை மறந்து விட்டீர்களோ என்று எண்ணுகிறேன்"
"இல்லை மகாமாத்யரே, இல்லை. அவனால் இங்கே ஆபத்து வராது"
"அதை எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்'
"அவனை மதுரைக்கு வருமாறு சுந்தர பாண்டியன் ஏற்கனவே அழைப்பு விடுத்து விட்டான். அத்துடன் அவனுக்கு வழியும் போட்டுக்கொடுத்துவிட்டான். அந்த வழி முதலில் வீரதவளப்பட்டணம், பிறகு மதுரை, பிறகு த்வார சமுத்திரம். த்வாரசமுத்திரத்திற்கு மூக்கைச் சுற்றிக்கொண்டு வரப்போகிறான் மாலிக் கஃபூர். அவனையும் பாண்டியர்களையும் ஒரு சேர தமிழகத்தில் அழிப்பேன்" என்று முடித்த போது ஆவேசம் நிறைந்திருந்தது அவன் குரலில். அவன் அளித்த தகவல் அங்கு கூடியிருந்தோருக்குப் புதுமையாக இருந்தது. மன்னன் சொல்வது போல் நடந்தால் ஹொய்சள தேசம், ஹொய்சள சாம்ராஜ்யமாகிவிடுமென்பதையும், அதற்காக மன்னம் மிகப்பெரிய ஆபத்தான திட்டத்தில் இறங்கியிருக்கிறானென்பதையும் அங்கிருந்தோர் ஐயமற அறிந்து கொண்டனர்.
(தொடரும்)
Thursday, August 6, 2009
சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 12
அத்தியாயம் 12: குறில் நெடில்
தொரசமுத்திரம் என்று கொச்சையாக அந்நாளில் அழைக்கப்பட்டதும் ஹளபேடு என்று இன்னாளில் அறியப்படுவதுமாகிய ஹொய்சளர்களின் தலை நகரமாகிய த்வார சமுத்திரத்திற்கு மீண்டும் நாம் செல்ல வேண்டியிருக்கிறது. நீண்ட காலமாக வல்லாளனைத் தனியாக விட்டுவிட்டு வந்து விட்டதற்கு அவனிடம் மன்னிப்பு கேட்டேயாக வேண்டும். ஏனெனில், இந்த இடைப்பட்ட காலத்தில் அவனது திட்டம் மிகச் சிறப்பாக வேலை செய்யத் துவங்கியிருந்தது.
அது ஒரு கார்கால நாளின் மாலைப் பொழுது. காலை முதல் பெய்திருந்த மழை சற்று ஒய்ந்து லேசான சாரல் அடித்துக் கொண்டிருந்தது. நடுவானில் மேகங்கள் திரண்டிருந்தாலும், மேற்கே மேகங்கள் இல்லாததால் சூரியனின் செந்நிற கிரணங்கள் பூமியை எட்டிப்பார்த்தன. நன்றாகப் பெய்த மழையில் கரும்பச்சை வர்ணத்தைப் பெற்றிருந்த மரங்கள் மேலைச் சூரியனின் கிரணங்களால் மெருகூட்டப்பட்டு மேலும் தகதகத்தன. சூரியனின் ஒளி லேசாக அடித்துக் கொண்டிருந்த சாரலில் பட்டுத் தெரித்ததால் கீழ்வானில் தோன்றிய வானவில், வானுலகின் தோரணவாயிலோ என்றெண்ணும் வகையில் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. சமுத்திரம் என்ற பெயருக்கேற்றார்ப்போல் நீண்டு பரந்து விரிந்திருந்த த்வாரசமுத்திர ஏரியானது மழையால் நிரம்பி காற்றால் தளும்பிக் கொண்டிருந்தது. ஏரியிலிருந்து வந்த குளிர்காற்றும், மழைச்சாரலும், ஒரு இன்பானுபவத்தை அளித்துக் கொண்டிருந்தன.
அந்த ஏரியின் கரையில் அமைந்திருந்த மண்டபத்தின் மேல் உப்பரிகையில் அமர்ந்து ஏரியை நோக்கிக்கொண்டிருந்தான் வல்லாளன். இத்தகைய ரம்மியமான சூழல் இருந்தும் முகத்தில் தோன்றிய கவலை ரேகைகள் அவனது இருப்பு இங்கில்லை என்பதை தெளிவாகப் பறைசாற்றிக்கொண்டிருந்தன.
ஒவ்வொரு அரசகுலமும் ஒவ்வொரு காலகட்டத்தில் சிறப்பான நிலையை அடைந்திருக்கின்றன. அந்த வகையில் ஹொய்சளர்களில் வல்லாளனின் கொள்ளுத்தாத்தாவாகிய இரண்டாம் வல்லாளன் காலத்தில் ஹொய்சளர்களின் கீர்த்தி சிறப்பான நிலையை எட்டியிருந்தது என்பதை முன்னரே பார்த்தோம். அதற்குப் பிறகு அவரது மகன் சோமேஸ்வரன் ஒரு விதமாக நாட்டைப் பரிபாலனம் செய்தான், இறுதியில் அவனால் கட்டிக்காக்க முடியாமல் போகவே தனது இரு மகன்களுக்கும் நாட்டைப் பிரித்துக் கொடுத்து விட்டான். நரசிம்மன் என்ற மகனை த்வாரசமுத்திரத்திற்கும், ராமனாதன் என்ற மகனை தமிழகப் பகுதிக்கும் தலைவனாக நியமித்தான். ஆனால் ஜடாவர்ம சுந்தர பாண்டியரின் பராக்ரமத்தால் ராமனாதன் முறியடிக்கப்பட்டதோடு, அவனது உதவிக்கு வந்த நரசிம்மனும் குடகு வரை விரட்டப்பட்டான். இந்தத் தோல்வி நரசிம்மனை வெகுவாக பாதித்தது. அதைவிட அவனது மகனாகிய வல்லாளனை மிகவும் கொதிப்படைய வைத்தது. சமயம் பார்த்து பாண்டியர்களை வஞ்சம் தீர்க்க திட்டமிட்டிருந்தான். இந்தப் பின்னணியில்தான் மாலிக் கஃபூர் படையெடுப்புக்கான ஏற்பாடுகளும், சுந்தரபாண்டியன் மற்றும் வீரபாண்டியனுக்கிடையேயான அரசப் பிளவும் ஏற்பட்டிருந்தன.
மேற்கண்ட நிகழ்வுகளின் காரணம் பற்றி பாண்டியர்கள் மிகவும் பலவீனமடைந்திருப்பதாகக் கருதினான் வல்லாளன். அதற்கான ஆதாரம் இருக்கவே செய்தது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக யுத்தம் என்ற ஒன்றே இல்லாத நிலையில் இருந்தது பாண்டிய தேசம். சுற்றியுள்ள பகைவர்கள் யாரும் அந்த அளவுக்கு வலுவில்லாததே காரணம். அதனால் பாண்டிய வீரர்களுக்கு போர் என்றால் என்னவென்றே தெரியாத சூழல் ஏற்பட்டிருந்தது. அப்படிப்பட்ட நிலையில் பாண்டிய தேசம் இரண்டாகப் பிரிந்தது மேலும் பலவீனத்தைக் கூட்டியது. பாண்டியனைப் பழி தீர்க்க இதுதான் சமயமென்று கருதினான் வல்லாளன். ஆனால் மாலிக் கஃபூர் பற்றிய சிந்தனை அவன் மனதை விட்டகலவில்லை.
இவ்வாறாக பற்பல யோசனைகளில் இருந்ததால், இயற்கையில் கலா ரசிகனான வல்லாளன் அந்தச் சூழலிலிருந்து அன்னியப்பட்டுப்போனான். சூரியன் மலை வாயிலில் விழுந்து இருள் கவியத் தொடங்கி பந்தங்கள் ஏற்றப்பட்ட போதுதான் அவனது நினைவு இவ்வுலகிற்குத் திரும்பியது. நெடிய பெருமூச்சுடன் ஆசனத்தை விட்டெழுந்து கீழே இறங்கி மாளிகை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.
=====
அரச மாளிகையானது கோட்டையின் மேற்குப் பகுதியை ஒட்டினார்ப்போல் அமைக்கப் பட்டிருந்தது. அதை ஒட்டி த்வாரசமுத்திரமென்னும் ஏரி இருந்ததால் அது இயற்கை அரணாக மட்டுமின்றி, சுகமான காற்றுக்கும் வழி செய்தது. ஏரியிலிருந்து வெட்டிவிடப்பட்ட கால்வாய் அந்தப்புரத்திலுள்ள நந்தவனத்திற்கு நீரைச் சேர்த்ததோடு அங்கே உள்ளே அமைக்கப்பட்டிருந்த செயற்கைக் குளத்திற்கும் நீரைப் பாய்ச்சியது. அந்தப்புர வாசிகள் அங்கே நீராடுவதற்கும், விளையாடுவதற்கும் ஏற்றார்போல் அமைக்கப்பட்டிருந்த அந்தக் குளமும் அதைச் சுற்றியுள்ள நந்தவனமும் வல்லாளனின் இல்லாளான நீலாவின் கைவண்ணத்தில் சிறப்பாக அமைந்திருந்தது.
இத்தகைய எழில் கொஞ்சும் சூழல் எதிலும் மனதைச் செலுத்தமுடியாமல் அந்தப்புரம் வந்த வல்லாளன் நேராக உள்மாளிகையை அடைந்து ஆகாரமும் அருந்தாமல் படுக்கையறைக்குச் சென்றான். உடை கூட மாற்றாமல் மஞ்சத்தில் அமர்ந்து தனது சிந்தையிலிருந்த சிந்தனைக் குதிரையை மீண்டும் விரட்டினான்.
அரசன் உள்ளே வந்துவிட்டான் என்ற செய்தி கேட்டதுமே நீலா தனது பணிகளை முடித்துக் கொண்டு மகனை உறங்கச் செய்துவிட்டு, படுக்கையறைக்கு விரைந்தாள். அங்கே அவள் கண்ட காட்சி புதிதாக இல்லை. கடந்த சில நாட்களாகவே வல்லாளனின் நிலை இதுதான் என்பது அவளுக்குத் தெரிந்திருந்ததால், ஒரு நெடிய மூச்சின் காரணமாக அவள் அவயவங்கள் எழும்பித் தாழ்ந்தன. கதவைத் தாளிட்டுவிட்டு மஞ்சம் நோக்கிச் சென்றவள், ஏதும் பேசாமல் அவனருகில் அமர்ந்தாள்.
பொதுவாகவே கலா ரசிகனும், இன்பப்பிரியனுமான வல்லாளன், நீலாவிடத்தில் அளவிடற்கரிய அன்பை வைத்திருந்தான். அவளருகாம அவனை எப்போதுமே இன்பத்தில் ஆழ்த்தும் திறமை படைத்தது. அப்படியிருந்தவனையும் மாற்றக்கூடிய பெருங்கவலை என்னவென்பதை அவளிடத்தில் தெரிவிக்காமலேயே இருந்தான் வல்லாளன். ஆனால் சிறந்த மதியூகியான நீலா அவன் மனதில் ஓடிய எண்ணங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள். ஆயினும் அவனே சொல்லட்டுமென்று வாளாவிருந்துவிட்டாள். இப்போது அவனது நிலை மோசமாகிவிடவே இனி அப்படியே விடுவதில் ஒரு பயனுமில்லை என்ற முடிவிற்கு வந்தவளாய், அவனை சற்றே உலுக்கினாள்.
அவளது அருகாமையின் வாசம் அவனது நாசியைத் தொளைத்து அவனை இவ்வுலகிற்கு இழுத்துவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்க, அந்த உலுக்கல் அவனை உடனே டுக்கையறையில் இறக்கியது. அவளை நோக்கித் திரும்பியவன், "நீலா" என்றான். புன்முறுவல் செய்ய முயன்று தோல்வியும் கண்டான்.
"சுவாமி. உங்களிடம் இந்த மாறுதலை கடந்த சில வாரங்களாகவே பார்த்து வருகிறேன். உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்களை நான் அறிவேன். ஆயினும் நீங்களே சொல்லாமல் நான் கேட்பது அவ்வளவு நன்றாயிராது என்பதாலேயே வாளாவிருந்துவிட்டேன். ஆனால் இப்போது உங்கள் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இனி தாமதிப்பதில் பயனில்லை. சொல்லுங்கள்." என்றாள் ஆறுதலாக அவனை வருடியவாறு. நீலாவின் பேச்சும் வருடலும் வல்லாளனை இளக்கிவிட்டன. இவ்வளவு புரிதலுள்ள மனைவி அமையப்பெற்றிருக்க தான் வீணே வருந்திக்கொண்டிருக்கிறோமே என்று எண்ணியவன், "நீலா, எது எப்படியாயினும் உன் அருகாமையில் நான் அனைத்தையும் மறந்துவிடுகிறேன். ஆனால் என்னால் மறக்கவோ மறுக்கவோ முடியாதது ஒன்றுண்டு. அதுதான் பாண்டியர்களிடம் என் தந்தை அடைந்த தோல்வி. தன் சகோதரனைத் தாக்க வந்தவனைத் தடுக்க வந்தவனிடம் நடந்து கொள்ள வேண்டிய முறையில் நடந்து கொள்ளாமல் மிகவும் மோசமாக நடந்து கொண்டான் பாண்டியன். அது நம் பரம்பரைக்கே அழியாத வடுவை ஏற்படுத்திவிட்டது. அதைத் துடைத்தெறிய வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கிறது. இத்தனை நாளும் வாளாவிருந்துவிட்டேன். இப்போது காலம் கனிந்து விட்டது. பாண்டியர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள். இதுதான் சரியான சந்தர்ப்பம். கணக்கை நேர் செய்யவேண்டிய தருணம். பாண்டியர்களை அடியோடு அழித்து தமிழகத்தை ஹொய்சள ராஜ்ஜியத்துடன் சேர்த்துவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதை முடித்துவிடுவது ஒன்றும் பெரிய காரியமல்ல. ஆனால் வடக்கில் மாலிக் கஃபூர் தண்டு இறங்கியிருக்கிறான். அவனைத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனைக் கவனிப்பதா, இல்லை பிளவு பட்டிருக்கும் பாண்டியர்களுடனான பகையைத் தீர்த்துக் கொள்வதா என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருக்கிறேன். நீ என்ன சொல்கிறாய் நீலா". என்று கடகடவென பள்ளி சென்று திரும்பிய குழந்தை அனைத்தையும் தாயிடத்தில் ஒப்பிப்பது போல் கொட்டிவிட்டான். இப்போது அவனும் குழந்தையாகப் படுத்துவிட்டான் அவள் மடியில்.
இவையனைத்தும் நீலா அறிந்ததேயென்றாலும், உடனடியாக ஒன்றும் சொல்லாமல், அவனது தலையைக் கோதியவாறே மந்தகாசப் பார்வையை அவனது விழிகளோடு கலக்க விட்டாள். அது பூரணமாக அவனை கவலையிலிருந்து வெளியே கொண்டுவந்தது. "சுவாமி, ஆந்திரத்தில் அமைந்துள்ள காகதீய அரசின் மகாராணியார் ருத்ராம்பா தேவியிடத்தில் சில காலம் பழக நேர்ந்தது. கலை மகளும், அலை மகளும், மலை மகளும் ஒருங்கே இருப்பது போன்ற வடிவில் இருந்தார்கள் அந்த தேவி. ஆயினும் ஒரு அன்னையைப் போல் ஆதுரத்துடன் எங்களிடத்தில் பழகுவார்கள். ஒரு முறை அவர்களது அரசவைக்குச் செல்ல நேரிட்டது. அப்போது அவர்களது அரசாட்சித் திறனைக் கண்டு வியந்திருக்கிறேன். நாமும் இது போல் ஒரு நாள் சிறந்த ராஜதந்திரியாவோம் என்றும் எண்ணியதுண்டு. அதற்கேற்றார்ப்போல், தாங்களும் அவ்வப்போது என்னிடத்தில் யோசனைகள் கேட்டு வருகிறீர்கள். தாங்கள் காஞ்சிக் கடிகையில் பயிலச் சென்றிருந்தபோது, இந்த நாட்டை என் சக்திக்கேற்றார்ப்போல் நிர்வகித்தேன். ருத்ராம்பா தேவி இந்த நிலையில் இருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று எண்ணுகிற போது எனக்குத் தோன்றியது ஒன்றுதான்". என்று சொல்லி நிறுத்தியவள், அவன் கண்ணோடு கண்ணை மீண்டும் கலந்தாள்.
"சுவாமி, ஸ்தான பலம் என்று ஒன்று உண்டு. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலையாதீர்கள். நமக்கருகில் இருக்கும் மாலிக் கஃபூர் தற்போதைக்கு அசையாவிட்டாலும், நம் அசைவுகளை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். நெடுங்காலம் அவனால் தாமதிக்க முடியாது. விரைவில் நகர ஆரம்பித்துவிடுவான். அவனது கைக்கெட்டிய தூரத்தில் இருக்கிறது த்வாரசமுத்திரம். இதை நீங்கள் இப்போது விட்டகன்றால் உடனே படையெடுத்து வந்து அழித்துவிடுவான். ஆகவே, தாங்கள் இங்கே தாமதித்து, அவனை எதிர்கொள்வதே நல்லது. பாண்டியர்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.அருகில் ஒரு எதிரியை வைத்துக் கொண்டு நெடுந்தூரம் செல்லாதீர்கள். உங்களுக்குச் சொந்தமான ஸ்தானத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள். " என்று கூறி முடிக்கும் போது இருவரும் மஞ்சத்தில் சாய்ந்திருந்தனர். அவளது கடைசி வரிகளைக் கேட்ட வல்லாளனின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை மலர்ந்தது. நீலாவின் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், வல்லாளனது கைகள் அவளது அங்கங்களை ஆராய்ந்து கொண்டிருந்தன. அவை ஒன்றும் புதிதல்லவென்றாலும், ஒவ்வொருமுறையும் புதிதாய்த் தோன்றியது வல்லாளனுக்கு. அவனது ஆராய்ச்சியில் வெகுவாக மயங்கிய நீலா தான் சொல்ல வந்ததை சரியாகவே சொல்லிவிட்டாள்.
அவனது புன்னகைக்கு அர்த்தம் புரியாமல் என்னவென்று கேட்டாள். உனது கடைசி வரிகளில் குறிலும் நெடிலும் விளையாடுவதை எண்ணினேன். புன்னகை மலர்ந்தது, என்று கூறி அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் விளக்கவும் செய்தான். அதன் பலனை உடனடியாகவும் பெற்றுக்கொண்டான்.
அதற்குப் பிறகு வந்த உம் என்ற ஒற்றை ஒலியைத் தவிர அந்த அறையில் புரியும்படியான ஓசை எதுவும் கேட்கவில்லை.
(தொடரும்)
தொரசமுத்திரம் என்று கொச்சையாக அந்நாளில் அழைக்கப்பட்டதும் ஹளபேடு என்று இன்னாளில் அறியப்படுவதுமாகிய ஹொய்சளர்களின் தலை நகரமாகிய த்வார சமுத்திரத்திற்கு மீண்டும் நாம் செல்ல வேண்டியிருக்கிறது. நீண்ட காலமாக வல்லாளனைத் தனியாக விட்டுவிட்டு வந்து விட்டதற்கு அவனிடம் மன்னிப்பு கேட்டேயாக வேண்டும். ஏனெனில், இந்த இடைப்பட்ட காலத்தில் அவனது திட்டம் மிகச் சிறப்பாக வேலை செய்யத் துவங்கியிருந்தது.
அது ஒரு கார்கால நாளின் மாலைப் பொழுது. காலை முதல் பெய்திருந்த மழை சற்று ஒய்ந்து லேசான சாரல் அடித்துக் கொண்டிருந்தது. நடுவானில் மேகங்கள் திரண்டிருந்தாலும், மேற்கே மேகங்கள் இல்லாததால் சூரியனின் செந்நிற கிரணங்கள் பூமியை எட்டிப்பார்த்தன. நன்றாகப் பெய்த மழையில் கரும்பச்சை வர்ணத்தைப் பெற்றிருந்த மரங்கள் மேலைச் சூரியனின் கிரணங்களால் மெருகூட்டப்பட்டு மேலும் தகதகத்தன. சூரியனின் ஒளி லேசாக அடித்துக் கொண்டிருந்த சாரலில் பட்டுத் தெரித்ததால் கீழ்வானில் தோன்றிய வானவில், வானுலகின் தோரணவாயிலோ என்றெண்ணும் வகையில் கண்ணுக்கு விருந்தாக அமைந்தது. சமுத்திரம் என்ற பெயருக்கேற்றார்ப்போல் நீண்டு பரந்து விரிந்திருந்த த்வாரசமுத்திர ஏரியானது மழையால் நிரம்பி காற்றால் தளும்பிக் கொண்டிருந்தது. ஏரியிலிருந்து வந்த குளிர்காற்றும், மழைச்சாரலும், ஒரு இன்பானுபவத்தை அளித்துக் கொண்டிருந்தன.
அந்த ஏரியின் கரையில் அமைந்திருந்த மண்டபத்தின் மேல் உப்பரிகையில் அமர்ந்து ஏரியை நோக்கிக்கொண்டிருந்தான் வல்லாளன். இத்தகைய ரம்மியமான சூழல் இருந்தும் முகத்தில் தோன்றிய கவலை ரேகைகள் அவனது இருப்பு இங்கில்லை என்பதை தெளிவாகப் பறைசாற்றிக்கொண்டிருந்தன.
ஒவ்வொரு அரசகுலமும் ஒவ்வொரு காலகட்டத்தில் சிறப்பான நிலையை அடைந்திருக்கின்றன. அந்த வகையில் ஹொய்சளர்களில் வல்லாளனின் கொள்ளுத்தாத்தாவாகிய இரண்டாம் வல்லாளன் காலத்தில் ஹொய்சளர்களின் கீர்த்தி சிறப்பான நிலையை எட்டியிருந்தது என்பதை முன்னரே பார்த்தோம். அதற்குப் பிறகு அவரது மகன் சோமேஸ்வரன் ஒரு விதமாக நாட்டைப் பரிபாலனம் செய்தான், இறுதியில் அவனால் கட்டிக்காக்க முடியாமல் போகவே தனது இரு மகன்களுக்கும் நாட்டைப் பிரித்துக் கொடுத்து விட்டான். நரசிம்மன் என்ற மகனை த்வாரசமுத்திரத்திற்கும், ராமனாதன் என்ற மகனை தமிழகப் பகுதிக்கும் தலைவனாக நியமித்தான். ஆனால் ஜடாவர்ம சுந்தர பாண்டியரின் பராக்ரமத்தால் ராமனாதன் முறியடிக்கப்பட்டதோடு, அவனது உதவிக்கு வந்த நரசிம்மனும் குடகு வரை விரட்டப்பட்டான். இந்தத் தோல்வி நரசிம்மனை வெகுவாக பாதித்தது. அதைவிட அவனது மகனாகிய வல்லாளனை மிகவும் கொதிப்படைய வைத்தது. சமயம் பார்த்து பாண்டியர்களை வஞ்சம் தீர்க்க திட்டமிட்டிருந்தான். இந்தப் பின்னணியில்தான் மாலிக் கஃபூர் படையெடுப்புக்கான ஏற்பாடுகளும், சுந்தரபாண்டியன் மற்றும் வீரபாண்டியனுக்கிடையேயான அரசப் பிளவும் ஏற்பட்டிருந்தன.
மேற்கண்ட நிகழ்வுகளின் காரணம் பற்றி பாண்டியர்கள் மிகவும் பலவீனமடைந்திருப்பதாகக் கருதினான் வல்லாளன். அதற்கான ஆதாரம் இருக்கவே செய்தது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக யுத்தம் என்ற ஒன்றே இல்லாத நிலையில் இருந்தது பாண்டிய தேசம். சுற்றியுள்ள பகைவர்கள் யாரும் அந்த அளவுக்கு வலுவில்லாததே காரணம். அதனால் பாண்டிய வீரர்களுக்கு போர் என்றால் என்னவென்றே தெரியாத சூழல் ஏற்பட்டிருந்தது. அப்படிப்பட்ட நிலையில் பாண்டிய தேசம் இரண்டாகப் பிரிந்தது மேலும் பலவீனத்தைக் கூட்டியது. பாண்டியனைப் பழி தீர்க்க இதுதான் சமயமென்று கருதினான் வல்லாளன். ஆனால் மாலிக் கஃபூர் பற்றிய சிந்தனை அவன் மனதை விட்டகலவில்லை.
இவ்வாறாக பற்பல யோசனைகளில் இருந்ததால், இயற்கையில் கலா ரசிகனான வல்லாளன் அந்தச் சூழலிலிருந்து அன்னியப்பட்டுப்போனான். சூரியன் மலை வாயிலில் விழுந்து இருள் கவியத் தொடங்கி பந்தங்கள் ஏற்றப்பட்ட போதுதான் அவனது நினைவு இவ்வுலகிற்குத் திரும்பியது. நெடிய பெருமூச்சுடன் ஆசனத்தை விட்டெழுந்து கீழே இறங்கி மாளிகை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.
=====
அரச மாளிகையானது கோட்டையின் மேற்குப் பகுதியை ஒட்டினார்ப்போல் அமைக்கப் பட்டிருந்தது. அதை ஒட்டி த்வாரசமுத்திரமென்னும் ஏரி இருந்ததால் அது இயற்கை அரணாக மட்டுமின்றி, சுகமான காற்றுக்கும் வழி செய்தது. ஏரியிலிருந்து வெட்டிவிடப்பட்ட கால்வாய் அந்தப்புரத்திலுள்ள நந்தவனத்திற்கு நீரைச் சேர்த்ததோடு அங்கே உள்ளே அமைக்கப்பட்டிருந்த செயற்கைக் குளத்திற்கும் நீரைப் பாய்ச்சியது. அந்தப்புர வாசிகள் அங்கே நீராடுவதற்கும், விளையாடுவதற்கும் ஏற்றார்போல் அமைக்கப்பட்டிருந்த அந்தக் குளமும் அதைச் சுற்றியுள்ள நந்தவனமும் வல்லாளனின் இல்லாளான நீலாவின் கைவண்ணத்தில் சிறப்பாக அமைந்திருந்தது.
இத்தகைய எழில் கொஞ்சும் சூழல் எதிலும் மனதைச் செலுத்தமுடியாமல் அந்தப்புரம் வந்த வல்லாளன் நேராக உள்மாளிகையை அடைந்து ஆகாரமும் அருந்தாமல் படுக்கையறைக்குச் சென்றான். உடை கூட மாற்றாமல் மஞ்சத்தில் அமர்ந்து தனது சிந்தையிலிருந்த சிந்தனைக் குதிரையை மீண்டும் விரட்டினான்.
அரசன் உள்ளே வந்துவிட்டான் என்ற செய்தி கேட்டதுமே நீலா தனது பணிகளை முடித்துக் கொண்டு மகனை உறங்கச் செய்துவிட்டு, படுக்கையறைக்கு விரைந்தாள். அங்கே அவள் கண்ட காட்சி புதிதாக இல்லை. கடந்த சில நாட்களாகவே வல்லாளனின் நிலை இதுதான் என்பது அவளுக்குத் தெரிந்திருந்ததால், ஒரு நெடிய மூச்சின் காரணமாக அவள் அவயவங்கள் எழும்பித் தாழ்ந்தன. கதவைத் தாளிட்டுவிட்டு மஞ்சம் நோக்கிச் சென்றவள், ஏதும் பேசாமல் அவனருகில் அமர்ந்தாள்.
பொதுவாகவே கலா ரசிகனும், இன்பப்பிரியனுமான வல்லாளன், நீலாவிடத்தில் அளவிடற்கரிய அன்பை வைத்திருந்தான். அவளருகாம அவனை எப்போதுமே இன்பத்தில் ஆழ்த்தும் திறமை படைத்தது. அப்படியிருந்தவனையும் மாற்றக்கூடிய பெருங்கவலை என்னவென்பதை அவளிடத்தில் தெரிவிக்காமலேயே இருந்தான் வல்லாளன். ஆனால் சிறந்த மதியூகியான நீலா அவன் மனதில் ஓடிய எண்ணங்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள். ஆயினும் அவனே சொல்லட்டுமென்று வாளாவிருந்துவிட்டாள். இப்போது அவனது நிலை மோசமாகிவிடவே இனி அப்படியே விடுவதில் ஒரு பயனுமில்லை என்ற முடிவிற்கு வந்தவளாய், அவனை சற்றே உலுக்கினாள்.
அவளது அருகாமையின் வாசம் அவனது நாசியைத் தொளைத்து அவனை இவ்வுலகிற்கு இழுத்துவரும் முயற்சியில் ஈடுபட்டிருக்க, அந்த உலுக்கல் அவனை உடனே டுக்கையறையில் இறக்கியது. அவளை நோக்கித் திரும்பியவன், "நீலா" என்றான். புன்முறுவல் செய்ய முயன்று தோல்வியும் கண்டான்.
"சுவாமி. உங்களிடம் இந்த மாறுதலை கடந்த சில வாரங்களாகவே பார்த்து வருகிறேன். உங்கள் மனதில் இருக்கும் எண்ணங்களை நான் அறிவேன். ஆயினும் நீங்களே சொல்லாமல் நான் கேட்பது அவ்வளவு நன்றாயிராது என்பதாலேயே வாளாவிருந்துவிட்டேன். ஆனால் இப்போது உங்கள் நிலை மிகவும் மோசமாகிவிட்டது. இனி தாமதிப்பதில் பயனில்லை. சொல்லுங்கள்." என்றாள் ஆறுதலாக அவனை வருடியவாறு. நீலாவின் பேச்சும் வருடலும் வல்லாளனை இளக்கிவிட்டன. இவ்வளவு புரிதலுள்ள மனைவி அமையப்பெற்றிருக்க தான் வீணே வருந்திக்கொண்டிருக்கிறோமே என்று எண்ணியவன், "நீலா, எது எப்படியாயினும் உன் அருகாமையில் நான் அனைத்தையும் மறந்துவிடுகிறேன். ஆனால் என்னால் மறக்கவோ மறுக்கவோ முடியாதது ஒன்றுண்டு. அதுதான் பாண்டியர்களிடம் என் தந்தை அடைந்த தோல்வி. தன் சகோதரனைத் தாக்க வந்தவனைத் தடுக்க வந்தவனிடம் நடந்து கொள்ள வேண்டிய முறையில் நடந்து கொள்ளாமல் மிகவும் மோசமாக நடந்து கொண்டான் பாண்டியன். அது நம் பரம்பரைக்கே அழியாத வடுவை ஏற்படுத்திவிட்டது. அதைத் துடைத்தெறிய வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கிறது. இத்தனை நாளும் வாளாவிருந்துவிட்டேன். இப்போது காலம் கனிந்து விட்டது. பாண்டியர்கள் பிளவுபட்டிருக்கிறார்கள். இதுதான் சரியான சந்தர்ப்பம். கணக்கை நேர் செய்யவேண்டிய தருணம். பாண்டியர்களை அடியோடு அழித்து தமிழகத்தை ஹொய்சள ராஜ்ஜியத்துடன் சேர்த்துவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதை முடித்துவிடுவது ஒன்றும் பெரிய காரியமல்ல. ஆனால் வடக்கில் மாலிக் கஃபூர் தண்டு இறங்கியிருக்கிறான். அவனைத்தான் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவனைக் கவனிப்பதா, இல்லை பிளவு பட்டிருக்கும் பாண்டியர்களுடனான பகையைத் தீர்த்துக் கொள்வதா என்ற கேள்விக்கு விடை தெரியாமல் இருக்கிறேன். நீ என்ன சொல்கிறாய் நீலா". என்று கடகடவென பள்ளி சென்று திரும்பிய குழந்தை அனைத்தையும் தாயிடத்தில் ஒப்பிப்பது போல் கொட்டிவிட்டான். இப்போது அவனும் குழந்தையாகப் படுத்துவிட்டான் அவள் மடியில்.
இவையனைத்தும் நீலா அறிந்ததேயென்றாலும், உடனடியாக ஒன்றும் சொல்லாமல், அவனது தலையைக் கோதியவாறே மந்தகாசப் பார்வையை அவனது விழிகளோடு கலக்க விட்டாள். அது பூரணமாக அவனை கவலையிலிருந்து வெளியே கொண்டுவந்தது. "சுவாமி, ஆந்திரத்தில் அமைந்துள்ள காகதீய அரசின் மகாராணியார் ருத்ராம்பா தேவியிடத்தில் சில காலம் பழக நேர்ந்தது. கலை மகளும், அலை மகளும், மலை மகளும் ஒருங்கே இருப்பது போன்ற வடிவில் இருந்தார்கள் அந்த தேவி. ஆயினும் ஒரு அன்னையைப் போல் ஆதுரத்துடன் எங்களிடத்தில் பழகுவார்கள். ஒரு முறை அவர்களது அரசவைக்குச் செல்ல நேரிட்டது. அப்போது அவர்களது அரசாட்சித் திறனைக் கண்டு வியந்திருக்கிறேன். நாமும் இது போல் ஒரு நாள் சிறந்த ராஜதந்திரியாவோம் என்றும் எண்ணியதுண்டு. அதற்கேற்றார்ப்போல், தாங்களும் அவ்வப்போது என்னிடத்தில் யோசனைகள் கேட்டு வருகிறீர்கள். தாங்கள் காஞ்சிக் கடிகையில் பயிலச் சென்றிருந்தபோது, இந்த நாட்டை என் சக்திக்கேற்றார்ப்போல் நிர்வகித்தேன். ருத்ராம்பா தேவி இந்த நிலையில் இருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று எண்ணுகிற போது எனக்குத் தோன்றியது ஒன்றுதான்". என்று சொல்லி நிறுத்தியவள், அவன் கண்ணோடு கண்ணை மீண்டும் கலந்தாள்.
"சுவாமி, ஸ்தான பலம் என்று ஒன்று உண்டு. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலையாதீர்கள். நமக்கருகில் இருக்கும் மாலிக் கஃபூர் தற்போதைக்கு அசையாவிட்டாலும், நம் அசைவுகளை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். நெடுங்காலம் அவனால் தாமதிக்க முடியாது. விரைவில் நகர ஆரம்பித்துவிடுவான். அவனது கைக்கெட்டிய தூரத்தில் இருக்கிறது த்வாரசமுத்திரம். இதை நீங்கள் இப்போது விட்டகன்றால் உடனே படையெடுத்து வந்து அழித்துவிடுவான். ஆகவே, தாங்கள் இங்கே தாமதித்து, அவனை எதிர்கொள்வதே நல்லது. பாண்டியர்களைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.அருகில் ஒரு எதிரியை வைத்துக் கொண்டு நெடுந்தூரம் செல்லாதீர்கள். உங்களுக்குச் சொந்தமான ஸ்தானத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளுங்கள். " என்று கூறி முடிக்கும் போது இருவரும் மஞ்சத்தில் சாய்ந்திருந்தனர். அவளது கடைசி வரிகளைக் கேட்ட வல்லாளனின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை மலர்ந்தது. நீலாவின் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாலும், வல்லாளனது கைகள் அவளது அங்கங்களை ஆராய்ந்து கொண்டிருந்தன. அவை ஒன்றும் புதிதல்லவென்றாலும், ஒவ்வொருமுறையும் புதிதாய்த் தோன்றியது வல்லாளனுக்கு. அவனது ஆராய்ச்சியில் வெகுவாக மயங்கிய நீலா தான் சொல்ல வந்ததை சரியாகவே சொல்லிவிட்டாள்.
அவனது புன்னகைக்கு அர்த்தம் புரியாமல் என்னவென்று கேட்டாள். உனது கடைசி வரிகளில் குறிலும் நெடிலும் விளையாடுவதை எண்ணினேன். புன்னகை மலர்ந்தது, என்று கூறி அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில் விளக்கவும் செய்தான். அதன் பலனை உடனடியாகவும் பெற்றுக்கொண்டான்.
அதற்குப் பிறகு வந்த உம் என்ற ஒற்றை ஒலியைத் தவிர அந்த அறையில் புரியும்படியான ஓசை எதுவும் கேட்கவில்லை.
(தொடரும்)
Wednesday, July 29, 2009
சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 11
அத்தியாயம் 11: திட்டம்
மாலிக் கஃபூர் என்ற பெயர், காஞ்சிக் கடிகையின் சிறந்த மாணாக்கர்களையே கவலையும் சந்தேகமும் கொள்ளச் செய்ததென்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. மாலிக் கஃபூரின் அட்டூழியங்களை அவர்கள் அறிந்தே இருந்தார்கள். தக்காணமும் அங்கிருந்து அபகரிக்க நினைத்த அதன் அபரிமிதமான செல்வமும் அவனை மேலும் கொடூரமானவனாக்கியிருந்தது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. அவன் தென் தமிழகம் வரை வரமாட்டான் என்றே எண்ணியிருந்தார்கள். ஆனால் சுந்தர பாண்டியன் அவனை தாம்பூலம் வைத்து அழைக்காத குறையாக அவனை வரச்செய்தது அவர்களை சற்று கலக்கமுறச் செய்தது.
"இன்று நாம் கூடிப் பேசுவது போல் இனியும் சந்தர்ப்பம் வாய்க்குமா என்பது சந்தேகம் தான். ஆகவே அனைவரும் கவனமுடன் கேளுங்கள். இப்போதைய தக்ஷிண பாரத நிலையைத் தெளிவாகச் சொல்கிறேன். மாலிக் கஃபூருக்கு ஆந்திரத்தில் பெரிதாக ஒன்றும் சிக்காது. அவனது கவனம் முழுவதும், ஹொய்சளத்திலும், பாண்டிய தேசத்திலும்தான் இருக்கிறது. அவனது முதல் திட்டம், ஹொய்சளர்களைத் தாக்கி அங்கே நிலை பெற்றுப் பின் தமிழகத்தைத் தாக்குவதென்பது.
ஆனால் சுந்தரன் வலுவற்ற தமிழகத்தைக் காட்டி அவனை முதலில் இங்கே இழுக்கிறான். மாலிக் கஃபூரும் இன்றைய நிலையை நன்கு அறிந்திருப்பதால் அதற்குச் சம்மதம் தெரிவித்து இங்கு வருகிறான். வருபவனுக்கு நாட்டைப் பிடிக்கும் எண்ணம் சிறிதும் இல்லை. அவனது முதல் திட்டம் இங்கிருக்கும் கோவில்களின் சொத்துக்களை அபகரிப்பதுதான். அத்தகைய செல்வங்களை நாம் சற்றும் விட்டுத்தரக்கூடாது. அதற்கான மாற்றுத் திட்டத்தைத்தான் இங்கே வரைந்திருக்கிறேன். சற்று கவனமாகப் பாருங்கள்.

(இது அன்றைய தென்னிந்தியாவின் வரைபடம். 1 என்ற இடத்தில் மாலிக் கஃபூர் இருக்கிறான். 2 ஹொய்சளர்களின் தலை நகரம். 3 திருவரங்கம். 4 மதுரை. தென் இந்தியாவின் நடுவே இருப்பது மேற்குத் தொடர்ச்சி மலை. சற்றுப் பிரிந்து கிழக்கே செல்வது கிழக்குத் தொடர்ச்சி மலை.)
மாலிக் இருக்கும் இடத்திலிருந்து தமிழகத்திற்கு மேற்கு மலைத் தொடரின் கிழக்குப்பகுதி வழியாக நேரே வந்துவிடலாம். அங்கே அவனுக்கு ஹொய்சளர்களின் எதிர்ப்பிருக்காது. நேராக அவன் இறங்குமிடம் கொல்லிமலைப் பகுதிதான். அங்கிருந்து மதுரைக்குச் செல்லும் ராஜபாட்டையை அவன் அடைவான். அங்கே இருப்பது திருவெள்ளரையும், திருவரங்கமும். திருவரங்கத்தில் இல்லாத செல்வங்கள் இல்லையல்லவா? அதைக் கவர்வது அவன் நோக்கம். அதற்குப் பிறகு நேராகக் கீழே இறங்கி மதுரையைக் கைப்பற்றி பிறகு வடக்கே திரும்பி ஹொய்சளர்களைத் தாக்கிவிட்டு வடதேசம் திரும்புவதுதான் அவன் உத்தேசம். இந்த வகையில் அவன் மேற்குத் தொடர்ச்சி மலையை ப்ரதக்ஷிணமாக வருவான்" என்று அவன் போகும் பாதையை வரைபடமிட்டுக் காட்டினார்.
"உங்களுக்கு மாலிக் கஃபூரின் திட்டம் இவருக்கு இவ்வளவு தெளிவாகத் தெரியவந்தது எப்படி?" இளவழுதி வினவினான் சந்தேகத்தோடு.
"எனக்கு அவன் திட்டம் இதுதான் என்பது தெரியாது. அவன் நிலையில் நான் இருந்தால் இப்படித்தான் செய்வேன். ஏனென்றால் அருகிலிருக்கும் வலுவான எதிரியை விட தூரத்திலிருக்கும் வலுவில்லாத எதிரியை அழிப்பது சுலபம். அந்த வெற்றி தரும் போதையும் உற்சாகமும் வலுவான எதிரியை நன்றாக எதிர் கொள்ளத் தயார் படுத்தும் மேலும் இந்த வெற்றி வலுவான எதிரியிடம் சற்று பயத்தையும் ஏற்படுத்தும்" என்று விவரித்தார் விக்ரமர். அவரது வாதம் ஏற்கத்தக்கதாக இருந்தது.
"சரி இனி ஆகவேண்டியதைப் பார்ப்போம். விரைவிலேயே நாம் மதுரையை அடைய வேண்டியதிருக்கும். வழியில் உங்கள் கொல்லிமலைப் படையையும் அழைத்துக் கொள்வோம். மதுரை நம் வசம் வந்துவிட்டால் மாலிக் கஃபூரை எளிதில் திருப்பி விடலாம்." என்று விவரிக்கத் தொடங்கினார்.
"மதுரையை நாம் தாக்குவது நாம் சுந்தரனுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கு முரணானது" என்று சுட்டிக்காட்டினான் வீரபாண்டியன்.
"உண்மைதான் வீரா. ஆனால் ஒப்பந்தத்தை முதலில் முறித்தவன் அவன்தான். மாலிக் கஃபூரை வரவழைத்ததன் மூலம் நமக்கும் ஆபத்தைத் தேடித்தந்திருக்கிறான். ஆகவே நம் மீது தவறொன்றுமில்லை. இத்துடன் நாம் கலைகிறோம். மாராயரே நீங்கள் அடுத்த ஓரிரு நாட்களில் இங்கிருக்கும் படைகளைத் தயார் படுத்த வேண்டும். இளவழுதியும் தேன்மொழியும் கொல்லி மலைக்குச் சென்று அங்கிருக்கும் படைகளுடன் திருவரங்கத்தில் தங்கியிருக்க வேண்டும். வீரபாண்டியனும் நானும் படைகளுடன் கிளம்பியதும் நீங்களும் கயல்விழியும் இங்கே தங்கியிருந்து அரசகாரியங்களைக் கவனித்துக் கொள்ளலாம்" விக்ரம பாண்டியனின் வியூகம் மளமளவென வெளிவந்தது.
அவ்வளவு பரபரப்பான விஷயங்களைப் பேசிய போதும் வாயே திறக்காத மாராயர் இறுதியாக "இந்தப் படையெடுப்பின் நோக்கம் மதுரையைக் கைப்பற்றுவதாகத் தெரியவில்லை. தமிழகத்தை பலவீனப்படுத்துவது போல் இருக்கிறது. இதன் மூலம் மாலிக் கஃபூருக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச எதிர்ப்பையும் நாம் அகற்றி விடுகிறோம்." என்று தெளிவாகப் பேசினார். விக்ரமனின் முகத்தில் மந்தகாசம் பூத்தது.
"மாராயரே, இப்போது நடக்கப் போவது தர்மயுத்தமல்லை. ஏன் எப்போதுமே யுத்தம், தர்மமல்லை. யுத்ததர்மமென்பதும் எதுவுமில்லை. இதன் தாக்கத்தை நான் சொல்வதை விட நீங்கள் பார்த்துத் தெரிந்து கொள்வது நலம். இப்போது இதற்கு மறுப்புத் தெரிவிக்காது இந்தத் திட்டத்தை நிறைவேற்ற உதவ வேண்டும்." இப்படி விக்ரமர் சொல்லும் போதே இளவழுதிக்கு சக்கர வியூகம் நினைவிற்கு வந்தது. அவன் கண்கள் மின்னின. அதை கவனிக்கத் தவறாத விக்ரமர் அவனைத் தனியாகச் சந்திக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.
"அவ்வாறே ஆகட்டும். மேற்கொண்டு காரியங்களைப் பார்ப்போம்" என்று மாராயர் முடிக்க அவை மீண்டும் கலைந்தது.
அன்று முதல் வீரதவளப்பட்டணத்தில் போர் ஆயத்தங்கள் அதிகமாயின. அரசு நிறுவி சில திங்களுக்குள்ளாகவே போர் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எங்கே செல்லப் போகிறோம் என்பது எந்த போர் வீரனுக்கும் தெரியாது. ஏன் தளபதிக்கே தெரியாது...
(தொடரும்)
மாலிக் கஃபூர் என்ற பெயர், காஞ்சிக் கடிகையின் சிறந்த மாணாக்கர்களையே கவலையும் சந்தேகமும் கொள்ளச் செய்ததென்றால் அதற்குக் காரணம் இருக்கவே செய்தது. மாலிக் கஃபூரின் அட்டூழியங்களை அவர்கள் அறிந்தே இருந்தார்கள். தக்காணமும் அங்கிருந்து அபகரிக்க நினைத்த அதன் அபரிமிதமான செல்வமும் அவனை மேலும் கொடூரமானவனாக்கியிருந்தது அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. அவன் தென் தமிழகம் வரை வரமாட்டான் என்றே எண்ணியிருந்தார்கள். ஆனால் சுந்தர பாண்டியன் அவனை தாம்பூலம் வைத்து அழைக்காத குறையாக அவனை வரச்செய்தது அவர்களை சற்று கலக்கமுறச் செய்தது.
"இன்று நாம் கூடிப் பேசுவது போல் இனியும் சந்தர்ப்பம் வாய்க்குமா என்பது சந்தேகம் தான். ஆகவே அனைவரும் கவனமுடன் கேளுங்கள். இப்போதைய தக்ஷிண பாரத நிலையைத் தெளிவாகச் சொல்கிறேன். மாலிக் கஃபூருக்கு ஆந்திரத்தில் பெரிதாக ஒன்றும் சிக்காது. அவனது கவனம் முழுவதும், ஹொய்சளத்திலும், பாண்டிய தேசத்திலும்தான் இருக்கிறது. அவனது முதல் திட்டம், ஹொய்சளர்களைத் தாக்கி அங்கே நிலை பெற்றுப் பின் தமிழகத்தைத் தாக்குவதென்பது.
ஆனால் சுந்தரன் வலுவற்ற தமிழகத்தைக் காட்டி அவனை முதலில் இங்கே இழுக்கிறான். மாலிக் கஃபூரும் இன்றைய நிலையை நன்கு அறிந்திருப்பதால் அதற்குச் சம்மதம் தெரிவித்து இங்கு வருகிறான். வருபவனுக்கு நாட்டைப் பிடிக்கும் எண்ணம் சிறிதும் இல்லை. அவனது முதல் திட்டம் இங்கிருக்கும் கோவில்களின் சொத்துக்களை அபகரிப்பதுதான். அத்தகைய செல்வங்களை நாம் சற்றும் விட்டுத்தரக்கூடாது. அதற்கான மாற்றுத் திட்டத்தைத்தான் இங்கே வரைந்திருக்கிறேன். சற்று கவனமாகப் பாருங்கள்.
(இது அன்றைய தென்னிந்தியாவின் வரைபடம். 1 என்ற இடத்தில் மாலிக் கஃபூர் இருக்கிறான். 2 ஹொய்சளர்களின் தலை நகரம். 3 திருவரங்கம். 4 மதுரை. தென் இந்தியாவின் நடுவே இருப்பது மேற்குத் தொடர்ச்சி மலை. சற்றுப் பிரிந்து கிழக்கே செல்வது கிழக்குத் தொடர்ச்சி மலை.)
மாலிக் இருக்கும் இடத்திலிருந்து தமிழகத்திற்கு மேற்கு மலைத் தொடரின் கிழக்குப்பகுதி வழியாக நேரே வந்துவிடலாம். அங்கே அவனுக்கு ஹொய்சளர்களின் எதிர்ப்பிருக்காது. நேராக அவன் இறங்குமிடம் கொல்லிமலைப் பகுதிதான். அங்கிருந்து மதுரைக்குச் செல்லும் ராஜபாட்டையை அவன் அடைவான். அங்கே இருப்பது திருவெள்ளரையும், திருவரங்கமும். திருவரங்கத்தில் இல்லாத செல்வங்கள் இல்லையல்லவா? அதைக் கவர்வது அவன் நோக்கம். அதற்குப் பிறகு நேராகக் கீழே இறங்கி மதுரையைக் கைப்பற்றி பிறகு வடக்கே திரும்பி ஹொய்சளர்களைத் தாக்கிவிட்டு வடதேசம் திரும்புவதுதான் அவன் உத்தேசம். இந்த வகையில் அவன் மேற்குத் தொடர்ச்சி மலையை ப்ரதக்ஷிணமாக வருவான்" என்று அவன் போகும் பாதையை வரைபடமிட்டுக் காட்டினார்.
"உங்களுக்கு மாலிக் கஃபூரின் திட்டம் இவருக்கு இவ்வளவு தெளிவாகத் தெரியவந்தது எப்படி?" இளவழுதி வினவினான் சந்தேகத்தோடு.
"எனக்கு அவன் திட்டம் இதுதான் என்பது தெரியாது. அவன் நிலையில் நான் இருந்தால் இப்படித்தான் செய்வேன். ஏனென்றால் அருகிலிருக்கும் வலுவான எதிரியை விட தூரத்திலிருக்கும் வலுவில்லாத எதிரியை அழிப்பது சுலபம். அந்த வெற்றி தரும் போதையும் உற்சாகமும் வலுவான எதிரியை நன்றாக எதிர் கொள்ளத் தயார் படுத்தும் மேலும் இந்த வெற்றி வலுவான எதிரியிடம் சற்று பயத்தையும் ஏற்படுத்தும்" என்று விவரித்தார் விக்ரமர். அவரது வாதம் ஏற்கத்தக்கதாக இருந்தது.
"சரி இனி ஆகவேண்டியதைப் பார்ப்போம். விரைவிலேயே நாம் மதுரையை அடைய வேண்டியதிருக்கும். வழியில் உங்கள் கொல்லிமலைப் படையையும் அழைத்துக் கொள்வோம். மதுரை நம் வசம் வந்துவிட்டால் மாலிக் கஃபூரை எளிதில் திருப்பி விடலாம்." என்று விவரிக்கத் தொடங்கினார்.
"மதுரையை நாம் தாக்குவது நாம் சுந்தரனுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்திற்கு முரணானது" என்று சுட்டிக்காட்டினான் வீரபாண்டியன்.
"உண்மைதான் வீரா. ஆனால் ஒப்பந்தத்தை முதலில் முறித்தவன் அவன்தான். மாலிக் கஃபூரை வரவழைத்ததன் மூலம் நமக்கும் ஆபத்தைத் தேடித்தந்திருக்கிறான். ஆகவே நம் மீது தவறொன்றுமில்லை. இத்துடன் நாம் கலைகிறோம். மாராயரே நீங்கள் அடுத்த ஓரிரு நாட்களில் இங்கிருக்கும் படைகளைத் தயார் படுத்த வேண்டும். இளவழுதியும் தேன்மொழியும் கொல்லி மலைக்குச் சென்று அங்கிருக்கும் படைகளுடன் திருவரங்கத்தில் தங்கியிருக்க வேண்டும். வீரபாண்டியனும் நானும் படைகளுடன் கிளம்பியதும் நீங்களும் கயல்விழியும் இங்கே தங்கியிருந்து அரசகாரியங்களைக் கவனித்துக் கொள்ளலாம்" விக்ரம பாண்டியனின் வியூகம் மளமளவென வெளிவந்தது.
அவ்வளவு பரபரப்பான விஷயங்களைப் பேசிய போதும் வாயே திறக்காத மாராயர் இறுதியாக "இந்தப் படையெடுப்பின் நோக்கம் மதுரையைக் கைப்பற்றுவதாகத் தெரியவில்லை. தமிழகத்தை பலவீனப்படுத்துவது போல் இருக்கிறது. இதன் மூலம் மாலிக் கஃபூருக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச எதிர்ப்பையும் நாம் அகற்றி விடுகிறோம்." என்று தெளிவாகப் பேசினார். விக்ரமனின் முகத்தில் மந்தகாசம் பூத்தது.
"மாராயரே, இப்போது நடக்கப் போவது தர்மயுத்தமல்லை. ஏன் எப்போதுமே யுத்தம், தர்மமல்லை. யுத்ததர்மமென்பதும் எதுவுமில்லை. இதன் தாக்கத்தை நான் சொல்வதை விட நீங்கள் பார்த்துத் தெரிந்து கொள்வது நலம். இப்போது இதற்கு மறுப்புத் தெரிவிக்காது இந்தத் திட்டத்தை நிறைவேற்ற உதவ வேண்டும்." இப்படி விக்ரமர் சொல்லும் போதே இளவழுதிக்கு சக்கர வியூகம் நினைவிற்கு வந்தது. அவன் கண்கள் மின்னின. அதை கவனிக்கத் தவறாத விக்ரமர் அவனைத் தனியாகச் சந்திக்க வேண்டுமென்று ஆவல் கொண்டார்.
"அவ்வாறே ஆகட்டும். மேற்கொண்டு காரியங்களைப் பார்ப்போம்" என்று மாராயர் முடிக்க அவை மீண்டும் கலைந்தது.
அன்று முதல் வீரதவளப்பட்டணத்தில் போர் ஆயத்தங்கள் அதிகமாயின. அரசு நிறுவி சில திங்களுக்குள்ளாகவே போர் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. எங்கே செல்லப் போகிறோம் என்பது எந்த போர் வீரனுக்கும் தெரியாது. ஏன் தளபதிக்கே தெரியாது...
(தொடரும்)
Wednesday, July 22, 2009
சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 10
வீரதவளப்பட்டிணத்தின் அரண்மனையில் நடைபெற்ற விருந்திற்குப் பிறகு மேல்மாடத்தில் நடைபெற்ற பிரத்யேக சந்திப்பில் சில வித்தியாச நிகழ்வுகளை இளவழுதி எதிர்பார்த்தான் என்றாலும், பேச்சு துவங்கிய உடனேயே தன் தங்கையை பெண் கேட்பார்கள் என்று எதிர் பார்க்கவில்லை. வீர பாண்டியனுக்கும் கயல்விழிக்கும் இருந்த நெருக்கம் அவனுக்குத் தெரிந்தே இருந்தது. துடிப்பான பெண்ணானதால் கயல்விழியிடம் அவனுக்கு நம்பிக்கை இருந்தது. தந்தையின் பதிலுக்காகக் காத்திருந்தான். இத்துணைக்கும் வீர பாண்டியனும், கயலவிழியும் ஒருவரையொருவர் பார்ப்பதைத் தவிர்க்க பிரம்மப்பிரயத்தனப்பட்டனர்.
மாராயர் உடனடியாக சுதாரித்துக் கொண்டவராய், "நாங்கள் அரச குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அரச குலத்தைச் சேராதவர்கள் அரியணை ஏறுவது மரபும் அல்ல" என்றார்.
"மரபுகள் காலத்தின் பாற்பட்டவை. நேற்று சரியான ஒன்று இன்று தவறாகிறது. நேற்று தவறான ஒன்று இன்று சரியாகிறது. அரச குலத்தோர்தான் ஆள வேண்டுமென்றால் புதிய அரசுகள் என்றும் ஏற்பட்டிருக்காது. காலத்தோடு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆகவே உங்கள் நிலை இன்றைய நிலையில் ஏற்கத்தக்கதல்ல. இதைத் தவிர வேறு ஆட்சேபணை ஒன்றும் இருக்காது என்றே நம்புகிறேன்." என்று மாராயரது சம்மதத்தை வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்ட விக்ரமர், "நீ என்ன சொல்கிறாய் கயல்விழி?" என்று கயல்விழியை இழுத்தார்.
இயல்பிலேயே மிகவும் துணிச்சல்காரியான கயல்விழி, திருமணம் என்ற பேச்சு வந்தவுடன் பெண்ணிற்குரிய நாணம் மேலோங்கிவிட்டதை அறிந்து ஆச்சரியப்பட்டாலும் விரைவிலேயே சுதாரித்துக் கொண்டாள். "அய்யா, நான் என்ன சொல்வதற்கு இருக்கிறது. நீங்களும் தந்தையும் எங்கள் நன்மையை முன்னிட்டே எதையும் செய்வீர்கள் என்ற நம்பிக்கை பரிபூரணமாக என்னிடம் இருக்கிறது." என்றாள். அவளது சொற்கள் அனைவரையும் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கொள்ளச் செய்தன.
"மாராயரே, கேட்டீர்களா உமது புதல்வியின் பதிலை. எவ்வளவு தந்திரத்துடன் பாரத்தை நம் மீது சுமத்திவிட்டாள். இவளைத் தவிர இந்த அரண்மனையின் தலைவியாக இருக்க யாருக்கு அருகதை இருக்கிறது. இனியும் தாமதிப்பது தவறு என்றே நினைக்கிறேன்." என்றார் விக்ரமர்.
"உண்மைதான் விக்ரமரே, தாமதிப்பது தவறுதான். நடப்பவை யாவும் நன்மைக்கே. விரைவிலேயே திருமணம் முடித்துவிடலாம். திருவெள்ளரை புண்டரிகாக்ஷனும், மதுரை மீனாக்ஷியும் அருள் புரிந்துவிட்ட பிறகு அதைத் தடுக்க நாம் யார்?" எனச் சொல்லியவாறே, "கயல்விழி, உன் நம்பிக்கை வீண் போகவில்லையல்லவா?" புன்னகையுடன் வினவினார்.
கயல்விழியும் சளைக்காமல்,"என் நம்பிக்கை எப்போதும் பொய்த்ததில்லையப்பா" என்றாள். திருமணப் பேச்சு முடிந்த விதம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தேன் மொழி, கயல்விழியை வெளிப்படையாகப் பாராட்டவும் செய்தாள்.
"நல்லது. அறவியலில் நல்ல முடிவு கண்டோம். இனி மறவியலைப் பற்றி பார்ப்போம், குறிப்பாக தமிழக நிலவரம், ஹொய்சளர்கள், முகமதியர்கள், மாலிக் கஃபூர்.." எல்லாரது கவனமும் விக்ரம பாண்டியரின் பேச்சை நோக்கித் திரும்பியது. அவர் ஒவ்வொன்றாக விவரிக்க நிலை அவ்வளவு நன்றாக இல்லை என்பது அனைவருக்கும் புலனாயிற்று. "ஆக எனக்கு வந்த தகவல்களின் படி சுந்தர பாண்டியன் மாலிக் கஃபூரை மதுரைக்கு அழைத்துள்ளான்.."
"இனி நம் பணி என்ன?" வினவினான் இளவழுதி.
"சுந்தர பாண்டியன் தரம் தாழ்ந்து விட்டான். மதுரையைக் கைப்பற்றுவோம். அதற்கான பணிகள் உடனே துவங்க வேண்டும். நாலை பகலுணவுக்குப் பிறகு மீண்டும் நாம் சந்திப்போம் அப்போது இதைப் பற்றிய உங்கள் கருத்துக்களுடன் என் திட்டத்தையும் சொல்கிறேன். இப்போதே இரவு நீண்டுவிட்டது. இனி நாம் உறங்கச் செல்ல வேண்டியதுதான்"
அன்றைய பல்வேறு நிகழ்வுகள் அனைவரையும் சற்று அதிக ஆயாசப்படுத்தியிருந்தன. மறுப்பேதும் சொல்லாமல் அனைவரும் தங்கள் படுக்கையறை திரும்பினர். ஆனால் ஒருவரும் உறங்கவில்லை.
=====
மறு நாள், பகலுணவுக்குப் பின் மீண்டும் அந்த மேல் மாடத்தில் அனைவரும் கூடிய போது அவர்களிடத்தில் சற்று தெளிவு பிறந்திருந்தது. வீர பாண்டியன், விக்ரம பாண்டியன், மாராயர், தேன் மொழி, கயல்விழி, இளவழுதி என்ற வரிசையில் சக்கர வட்டமாக அமர்ந்திருந்தனர். அவர்கள் முன் ஒரு சீலையில் வரைபடம் அமைக்கப் பட்டிருந்தது. அது தென் தேசத்து வரைபடம் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. அதில் மதுரை, ஸ்ரீரங்கம், வீரதவளப்பட்டணம், காஞ்சீபுரம், ஹொய்சளர்களின் தலை நகரமான தொர சமுத்திரம் முதலிய இடங்கள் குறிக்கப்பெற்றிருந்தன. அவற்றை இணைக்கும் ராஜ பாட்டைகளும், முக்கிய மலைப் பகுதிகளும் ஆறுகளும் வரையப்பட்டிருந்தன. தொர சமுத்திரத்திற்கு வடகிழக்கில் ஒரு பகுதியில் பிறைவடிவக் குறி அமைக்கப்பட்டிருந்தது. அனைவரது கவனமும் அந்தச் சீலையின் மீதே இருந்தது.
ஒரு முறை மெதுவாகக் கனைத்துக் கொண்ட விக்ரமர், " இந்தச் சீலையில் இருப்பது தக்ஷிண பாரதத்தைக் குறிக்கும் படம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இப்போது முக்கியமாக மதுரை குறிவைக்கப்பட்டுள்ளது. ஆதி காலம் தொட்டு தமிழகத்தில் எத்தனையோ அரசுகள் இருந்தாலும், தலை நகரங்கள் இருந்தாலும், மதுரை மட்டும் என்றும் அழியாமல் இன்று வரை இருந்து வருகிறது. அந்த மதுரைக்குத் தான் இப்போது ஆபத்து வந்திருக்கிறது. இன்றைய நிலையில் தென் தேசத்தில் ஆந்திரம், ஹொய்சளம், கேரளம், தமிழகம் என்று அரசியல் பிளவுபட்டிருக்கிறது. இதில் ஆந்திரத்தில் காகதீயர்கள் நிலை பெற்றுவிட்டார்கள். அவர்கள் வம்புச் சண்டைக்கும் செல்வதில்லை, வந்த சண்டையையும் விடுவதில்லை. அவர்களால் இப்போது நமக்குப் பிரச்சனையில்லை. கேரளத்தில் வீர ரவி உதயமார்த்தாண்ட வர்மனை ஜடாவர்மராகிய சுந்தர பாண்டியர் வீழ்த்திய பிறகு அங்கிருந்தும் தொல்லை ஏதுமில்லை. ஆனால் ஹொய்சளர்கள் அப்படியில்லை. அவர்கள் ஒரு பெரும் சக்தியாக உருவாகப் பார்க்கிறார்கள். காகதீயர்களை வெற்றி கொள்ள முடியாததால், தமிழகத்தை நோக்கித் திரும்ப நினைக்கிறார்கள். தற்போது மிக பலவீனமாக இருக்கும் தமிழகத்தைத் தாக்கினால் சேதம் அதிகமின்றி அதைக் கைப்பற்றி விடலாம் என்று எண்ணியிருக்கிறார்கள். ஆகவே நமது எதிரி நமக்கு நேர் வடக்கே இருக்கிறான். அவன்தான் வல்லாளன்" என்று தொர சமுத்திரத்தை நோக்கி தனது குறுவாளைக் காட்டினார் விக்ரமர். "இவனின்றி இன்னொருவனும் அவனருகே இருக்கிறான். அவன் இங்கே இருக்கிறான்" என்று பிறையிட்ட இடத்தைக் காட்டவும் செய்தார்.
"அது.."
"மாலிக் கஃபூர்"
"நினைத்தேன்" ஒரு சேரச் சொன்னார்கள் வீர பாண்டியனும், இளவழுதியும்.
"அவனை நிறுத்தி திசைதிருப்புவதுதான் நமது நோக்கம்" விக்ரமர் சொன்னது நடக்குமா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்தது.
(தொடரும்)
மாராயர் உடனடியாக சுதாரித்துக் கொண்டவராய், "நாங்கள் அரச குலத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அரச குலத்தைச் சேராதவர்கள் அரியணை ஏறுவது மரபும் அல்ல" என்றார்.
"மரபுகள் காலத்தின் பாற்பட்டவை. நேற்று சரியான ஒன்று இன்று தவறாகிறது. நேற்று தவறான ஒன்று இன்று சரியாகிறது. அரச குலத்தோர்தான் ஆள வேண்டுமென்றால் புதிய அரசுகள் என்றும் ஏற்பட்டிருக்காது. காலத்தோடு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆகவே உங்கள் நிலை இன்றைய நிலையில் ஏற்கத்தக்கதல்ல. இதைத் தவிர வேறு ஆட்சேபணை ஒன்றும் இருக்காது என்றே நம்புகிறேன்." என்று மாராயரது சம்மதத்தை வலுக்கட்டாயமாக எடுத்துக் கொண்ட விக்ரமர், "நீ என்ன சொல்கிறாய் கயல்விழி?" என்று கயல்விழியை இழுத்தார்.
இயல்பிலேயே மிகவும் துணிச்சல்காரியான கயல்விழி, திருமணம் என்ற பேச்சு வந்தவுடன் பெண்ணிற்குரிய நாணம் மேலோங்கிவிட்டதை அறிந்து ஆச்சரியப்பட்டாலும் விரைவிலேயே சுதாரித்துக் கொண்டாள். "அய்யா, நான் என்ன சொல்வதற்கு இருக்கிறது. நீங்களும் தந்தையும் எங்கள் நன்மையை முன்னிட்டே எதையும் செய்வீர்கள் என்ற நம்பிக்கை பரிபூரணமாக என்னிடம் இருக்கிறது." என்றாள். அவளது சொற்கள் அனைவரையும் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கொள்ளச் செய்தன.
"மாராயரே, கேட்டீர்களா உமது புதல்வியின் பதிலை. எவ்வளவு தந்திரத்துடன் பாரத்தை நம் மீது சுமத்திவிட்டாள். இவளைத் தவிர இந்த அரண்மனையின் தலைவியாக இருக்க யாருக்கு அருகதை இருக்கிறது. இனியும் தாமதிப்பது தவறு என்றே நினைக்கிறேன்." என்றார் விக்ரமர்.
"உண்மைதான் விக்ரமரே, தாமதிப்பது தவறுதான். நடப்பவை யாவும் நன்மைக்கே. விரைவிலேயே திருமணம் முடித்துவிடலாம். திருவெள்ளரை புண்டரிகாக்ஷனும், மதுரை மீனாக்ஷியும் அருள் புரிந்துவிட்ட பிறகு அதைத் தடுக்க நாம் யார்?" எனச் சொல்லியவாறே, "கயல்விழி, உன் நம்பிக்கை வீண் போகவில்லையல்லவா?" புன்னகையுடன் வினவினார்.
கயல்விழியும் சளைக்காமல்,"என் நம்பிக்கை எப்போதும் பொய்த்ததில்லையப்பா" என்றாள். திருமணப் பேச்சு முடிந்த விதம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. தேன் மொழி, கயல்விழியை வெளிப்படையாகப் பாராட்டவும் செய்தாள்.
"நல்லது. அறவியலில் நல்ல முடிவு கண்டோம். இனி மறவியலைப் பற்றி பார்ப்போம், குறிப்பாக தமிழக நிலவரம், ஹொய்சளர்கள், முகமதியர்கள், மாலிக் கஃபூர்.." எல்லாரது கவனமும் விக்ரம பாண்டியரின் பேச்சை நோக்கித் திரும்பியது. அவர் ஒவ்வொன்றாக விவரிக்க நிலை அவ்வளவு நன்றாக இல்லை என்பது அனைவருக்கும் புலனாயிற்று. "ஆக எனக்கு வந்த தகவல்களின் படி சுந்தர பாண்டியன் மாலிக் கஃபூரை மதுரைக்கு அழைத்துள்ளான்.."
"இனி நம் பணி என்ன?" வினவினான் இளவழுதி.
"சுந்தர பாண்டியன் தரம் தாழ்ந்து விட்டான். மதுரையைக் கைப்பற்றுவோம். அதற்கான பணிகள் உடனே துவங்க வேண்டும். நாலை பகலுணவுக்குப் பிறகு மீண்டும் நாம் சந்திப்போம் அப்போது இதைப் பற்றிய உங்கள் கருத்துக்களுடன் என் திட்டத்தையும் சொல்கிறேன். இப்போதே இரவு நீண்டுவிட்டது. இனி நாம் உறங்கச் செல்ல வேண்டியதுதான்"
அன்றைய பல்வேறு நிகழ்வுகள் அனைவரையும் சற்று அதிக ஆயாசப்படுத்தியிருந்தன. மறுப்பேதும் சொல்லாமல் அனைவரும் தங்கள் படுக்கையறை திரும்பினர். ஆனால் ஒருவரும் உறங்கவில்லை.
=====
மறு நாள், பகலுணவுக்குப் பின் மீண்டும் அந்த மேல் மாடத்தில் அனைவரும் கூடிய போது அவர்களிடத்தில் சற்று தெளிவு பிறந்திருந்தது. வீர பாண்டியன், விக்ரம பாண்டியன், மாராயர், தேன் மொழி, கயல்விழி, இளவழுதி என்ற வரிசையில் சக்கர வட்டமாக அமர்ந்திருந்தனர். அவர்கள் முன் ஒரு சீலையில் வரைபடம் அமைக்கப் பட்டிருந்தது. அது தென் தேசத்து வரைபடம் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. அதில் மதுரை, ஸ்ரீரங்கம், வீரதவளப்பட்டணம், காஞ்சீபுரம், ஹொய்சளர்களின் தலை நகரமான தொர சமுத்திரம் முதலிய இடங்கள் குறிக்கப்பெற்றிருந்தன. அவற்றை இணைக்கும் ராஜ பாட்டைகளும், முக்கிய மலைப் பகுதிகளும் ஆறுகளும் வரையப்பட்டிருந்தன. தொர சமுத்திரத்திற்கு வடகிழக்கில் ஒரு பகுதியில் பிறைவடிவக் குறி அமைக்கப்பட்டிருந்தது. அனைவரது கவனமும் அந்தச் சீலையின் மீதே இருந்தது.
ஒரு முறை மெதுவாகக் கனைத்துக் கொண்ட விக்ரமர், " இந்தச் சீலையில் இருப்பது தக்ஷிண பாரதத்தைக் குறிக்கும் படம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். இப்போது முக்கியமாக மதுரை குறிவைக்கப்பட்டுள்ளது. ஆதி காலம் தொட்டு தமிழகத்தில் எத்தனையோ அரசுகள் இருந்தாலும், தலை நகரங்கள் இருந்தாலும், மதுரை மட்டும் என்றும் அழியாமல் இன்று வரை இருந்து வருகிறது. அந்த மதுரைக்குத் தான் இப்போது ஆபத்து வந்திருக்கிறது. இன்றைய நிலையில் தென் தேசத்தில் ஆந்திரம், ஹொய்சளம், கேரளம், தமிழகம் என்று அரசியல் பிளவுபட்டிருக்கிறது. இதில் ஆந்திரத்தில் காகதீயர்கள் நிலை பெற்றுவிட்டார்கள். அவர்கள் வம்புச் சண்டைக்கும் செல்வதில்லை, வந்த சண்டையையும் விடுவதில்லை. அவர்களால் இப்போது நமக்குப் பிரச்சனையில்லை. கேரளத்தில் வீர ரவி உதயமார்த்தாண்ட வர்மனை ஜடாவர்மராகிய சுந்தர பாண்டியர் வீழ்த்திய பிறகு அங்கிருந்தும் தொல்லை ஏதுமில்லை. ஆனால் ஹொய்சளர்கள் அப்படியில்லை. அவர்கள் ஒரு பெரும் சக்தியாக உருவாகப் பார்க்கிறார்கள். காகதீயர்களை வெற்றி கொள்ள முடியாததால், தமிழகத்தை நோக்கித் திரும்ப நினைக்கிறார்கள். தற்போது மிக பலவீனமாக இருக்கும் தமிழகத்தைத் தாக்கினால் சேதம் அதிகமின்றி அதைக் கைப்பற்றி விடலாம் என்று எண்ணியிருக்கிறார்கள். ஆகவே நமது எதிரி நமக்கு நேர் வடக்கே இருக்கிறான். அவன்தான் வல்லாளன்" என்று தொர சமுத்திரத்தை நோக்கி தனது குறுவாளைக் காட்டினார் விக்ரமர். "இவனின்றி இன்னொருவனும் அவனருகே இருக்கிறான். அவன் இங்கே இருக்கிறான்" என்று பிறையிட்ட இடத்தைக் காட்டவும் செய்தார்.
"அது.."
"மாலிக் கஃபூர்"
"நினைத்தேன்" ஒரு சேரச் சொன்னார்கள் வீர பாண்டியனும், இளவழுதியும்.
"அவனை நிறுத்தி திசைதிருப்புவதுதான் நமது நோக்கம்" விக்ரமர் சொன்னது நடக்குமா என்ற சந்தேகத்தைத் தோற்றுவித்தது.
(தொடரும்)
Wednesday, July 15, 2009
சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 9
அத்தியாயம் 9 - விருந்து தந்த வியப்பு
புதிய தலை நகரான வீரதவளப்பட்டணத்திற்கு சோபை சேர்க்கும் விதமாக அமைந்திருந்த அரச மாளிகையின் முன் முன்றிலில் அன்று இரவு ஒரே களேபரமாக இருந்தது. புதிய விருந்தினர்களை வரவேற்பதற்காக அரசரும், விக்ரம பாண்டியரும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். புது அரசனான வீர பாண்டியனின் எண்ண ஓட்டத்தை நன்கு அறிந்து கொண்ட விக்ரமர், கயல்விழியின் வருகை பயனளிக்கத் தொடங்கிவிட்டதை எண்ணிப் பெருமகிழ்ச்சி அடைந்தார்.
அந்த நகருக்கு வந்த பின் இத்தனை கோலாகலத்துடன் அரண்மனை என்றுமே இருந்ததில்லையாகையால் பணிமக்களும் பேருவகையுடன் பணியாற்றிக்கொண்டிருந்தனர். மாலை மயங்கியதும் பந்தவிளக்குகள் ஏற்றப்பட்டு தூரத்தே வைக்கப்பட்டன. அவை காற்றால் அணையாதிருக்க அவற்றைச் சுற்றி தகடு அமைக்கப்பட்டிருந்ததால் வெளிச்சம் நேராகப் பாய்ந்தது. அப்படி நேராகப் பாய்ந்தாலும் அருகருகே அவ்வாறான விளக்குகள் அமைக்கப்பட்டிருந்ததால் மற்ற இடங்களில் இருட்டு இல்லை. இவ்வாறு தொலைவில் வெளிச்சம் வந்து கொண்டிருக்க அரசரும் அவரது விருந்தினர்களும் அமரும் இடத்தில் அமைக்கப் பெற்றிருந்த இரத்தினக் கம்பளங்களை ஒட்டி நொந்தா விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. மூலைக்கொன்றாக நிறுத்தப்பட்டிருந்த பாவை விளக்குகளும் அவற்றின் இரு மருங்கிலும் விதானத்திலிருந்து தொங்க விடப்பட்டிருந்த நொந்தா விளக்குகளும் அந்த முன்றிலை தெளிவுறக்காட்டின. அப்படித் தெளிவாகக் காட்டினாலும், நறுமணம் கருதி போடப்பட்டிருந்த அகிற்புகையானது தன் பணியான நறுமணத்தைப் பரப்பியதோடல்லாமல், அந்த வெளிச்சத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியே அடைந்தது. ஒரு மருங்கில் இசைக் கலைஞர்கள் இன்ப நாதத்தை மீட்டிக்கொண்டிருக்க அவர்களோடு தோற்கருவிக்கலைஞர்களும் மெல்லிய ஒலியெழுப்பிக் கொண்டிருந்தனர்.
இவற்றையெல்லாம் காணவேண்டுமென்ற அவா இருந்தும் பகலவன் தன் பணியை முடித்துக் கொண்ட காரணத்தால் மலைவாயிலில் விழுந்து மறைந்துவிடவே, மறுபுறத்திலிருந்து வான்மதி மெல்ல எட்டிப்பார்த்தது. பகலவன் இல்லாது போகவே அவனைத் தேடிக்கொண்டு மேற்கு நோக்கி நகரத்தொடங்கியதால் ஏற்பட்ட இயற்கை வெளிச்சம் அந்த சூழலை மேலும் ரம்மியமாக்கியது. ஆடி மாதமானாலும், தென்றலின் மெல்லிய காற்று குறையாமல் வீசி தன் பங்கைத் தவறாமல் ஆற்றியது.அனைவரும் தரையிலேயே அமர்ந்து உணவுண்ணும் வகையில் சுற்றிலும் வெண்பஞ்சு மெத்தைகளும், திண்டுகளும் அமைக்கப்பெற்றிருந்த விதம் வடக்கே புதிதாக வந்திருந்த சுல்தானியர்களின் விருந்தோம்பல் முறையை ஒத்திருந்ததை அதை அறிந்தவர்கள் புரிந்து கொண்டார்கள்.
அன்று விருந்தினர்களோடு, முக்கியத் தளபதிகளுக்கும் அமைச்சர்களுக்குமாக சேர்த்தே விருந்து நடைபெறவிருந்தது. ஒவ்வொருவராக வரத்தொடங்கிய முக்கியஸ்தர்களும், விருந்தினர்களும், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் சென்று அமர்ந்து தங்களுக்குள் பேசியவாறு அரசனை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர்.
அனைத்து ஏற்பாடுகளும் செவ்வனே செய்யப்பட்ட நிலையில் விருந்தினர்களும் வந்து அமர்ந்திருக்க, அரண்மனையின் உட்புற ஆலாட்சி மணி மெல்லிய ஒலியெழுப்பி அரசனின் வருகையை அறிவித்தது. விருந்தானாலும், அரசனின் வருகையைக் கருதி கட்டியங்கூறுவோன் பாண்டியர்களது மெய்கீர்த்தியை வாசிக்க புதிய பாண்டிய மண்டலாதிபதியான வீர பாண்டியத் தேவர் எழுந்தருளினார்.
அது அரசவையில்லாததால் மகுடம் தரிக்காமல் தலைக் குழலை தோளின் இருமருங்கிலும் அலைபாய விட்டு, மேலுக்கு ஒரு உத்தரீயத்தை அணிந்து அதன் மேல் இரத்தினங்களால் ஆன இரு ஹாரங்களைத் தரித்தும் நின்ற வீர பாண்டியன், தன் வாளையும் இடையில் கட்டி எடுத்துவந்தது சிலரை வியப்பில் ஆழ்த்தியது. அப்படி வியப்பில் ஆழ்த்திய நிகழ்வை நன்றாகக் கவனித்தாலும் கவனிக்காதது போலக் காட்டிக்கொண்ட வீர பாண்டியன், அனைவரையும் அமருமாறு பணித்துத் தானும் அமர்ந்தான். அவனது உத்தரவை எதிர்ப்பார்த்து நின்றிருந்த விக்ரம பாண்டியரை நோக்கி நிகழ்ச்சியைத் துவக்குமாறும் சைகை செய்தான். இவ்வளவிலும், பெண்கள் யாரும் தென்படாததைக் கவனிக்கத் தவறவில்லை. விக்ரம பாண்டியர் பேச ஆரம்பித்ததுமே இசைக்கலைஞர்கள் தங்கள் திறமையைச் சற்று நிறுத்தி வைத்தனர்.
அனைவரையும் ஒரு முறை தீர்க்கமாகப் பார்த்த விக்ரம பாண்டியர், "அன்பர்களே, இந்த இனிய மாலைப் பொழுதினிலே, இங்கு கூடியிருக்கும் உங்களுடன் என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. பாண்டிய தேசத்துப்புகழ் தென் தமிழகத்திலேயே தங்கிவிடாமல், வட தமிழகம் வரை வந்திருப்பது அது மேலும் விருத்தியடைவதற்கான ஹேதுவாகவே நாம் கருத வேண்டும். இனிய இந்த நேரத்தை அரசியல் பேசிக் கழிக்க விரும்பவில்லை. இந்த அரசு அமைந்ததற்குப் பிறகு நடத்தப் பெறும் இந்தப் பெரிய விருந்தோம்பலை நீங்கள் அனைவரும் சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இனி நர்த்தனமும் அதைத் தொடர்ந்து பாரதக் கூத்தும் நடைபெறும். அனைவரும் உண்டும் கண்டும் களிக்க வேண்டுமென்பது அரசரின் அவா. இனி நிகழ்ச்சிகள் துவங்கும்." என்று கூறி முடிக்க அந்த முன்றிலின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையைச் சுற்றி திடீரென வெளிச்சப்பந்தங்கள் தோன்றின. அதுவரை காணாமல் இருந்த அந்த மேடை சட்டெனத் தோன்றவே அங்கு குழுமியிருந்தோரின் ஆஹாகாரம் முன்றிலின் விதானத்தை முட்டியது.
இதைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடந்தவாறிருக்க, விருந்து மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. மதுபானம் செய்வோரும், மாமிசம் உண்ணுவோரும் தங்கள் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்து கொண்டிருந்து பணியாட்களின் வேகத்தைச் சோதித்துக் கொண்டிருந்தனர். பணியாட்களும் அசராது அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தனர்.
அனைவரையும் அவர்களருகே சென்று நலம் விசாரித்த பாண்டிய மன்னனை அனைவரும் போற்றிப்புகழ்ந்தனர். இறுதியாக முக்கிய விருந்தினராக வந்திருந்த மாராயரையும், இளவழுதியையும் தன்னருகே அமரச் செய்த மன்னன் அவர்களிடம் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தான். ஆனாலும் அவன் எண்ணம் அங்கில்லை என்பதை உணர இருவருக்கும் அதிக நேரம் பிடிக்கவில்லை. "விருந்து முடிந்தவுடன் மேல்மாடத்தில் நாம் முக்கியமாகப் பேச வேண்டும். அப்போது கயல்விழியும், தேன்மொழியும் உடனிருந்தால் நல்லது" என்று சொன்னான் அரசன். "அவ்வாறே ஆகட்டும். இங்கு விருந்து நடப்பதால் சபை நாகரீகம் கருதி அவர்களை அழைத்து வரவில்லை. அங்கே அவர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள்" என்றார் மாராயர்.
ஏழு நாழிகைகளுக்கும் மேலாக நீடித்த அந்த விருந்து ஒரு வழியாக முடிவிற்கு வந்த போது வான்மதி நடுவானைத் தாண்டியிருந்தாள். அனைவரும் அவர்கள் இல்லம் திரும்ப அரசனும் மாராயர், விக்ரமர் மற்றும் இளவழுதியும் மேல்மாடம் நோக்கிச் சென்றனர். அரசனின் வேகத்தைக் கவனித்த விக்ரமன் உள்ளூரப் புன்னகைத்துக் கொண்டு "வீரா உன்னைக் கட்டிப்போடும் கயிற்றைக் கண்டு கொண்டேன். இனி உன் செயல் சீரிய முறையில் செல்ல வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதுதான்" என்று நினைத்துக் கொண்டார்.
மேல் மாடத்தில் அனைவரும் அமர்வதற்கான ஆசனங்கள் வட்டவடிவில் போடப்பட்டிருந்தன. பெண்கள் முன் கூட்டியே வந்திருந்தாலும், நாகரீகம் கருதி, ஒரு மூலையில் நின்றிருந்தனர். அரசன் முதலானோர் வரவும், தங்களை சற்றே அசைத்துக் கொண்டு தங்கள் இருப்பைக் காட்டிக்கொண்டனர்.
"இங்கே வா கயல்விழி, வா தேன்மொழி. இவ்வளவு நேரம் கழித்து சந்திப்பதில் சங்கடம் ஏதுமில்லையே" என்று கூறினார் விக்ரமர்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை." என்று சொல்லியவாறே கயல்விழியுடன் வந்தமர்ந்தாள் தேன்மொழி.
"நல்லது இனி நாம் பேசத்தடையில்லை. மாராயரே. உங்களிடம் சில முக்கியச் செய்திகளைப்பற்றி பேச வேண்டியதிருக்கிறது." விக்ரமர் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
"விக்ரமரே தாராளமாகச் சொல்லுங்கள்."
"நன்றி மாராயரே. வீர பாண்டியன் இப்போது ஒரு தேசத்திற்கு அரசனாகி விட்டான். ஆனாலும் அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அரசனுக்கு அரசி இருப்பதுதான் மரபு. ஆகவே, வீர பாண்டியனுக்கு விரைவில் திருமணம் நடத்திவிட வேண்டும் என்ற அவா என் எண்ணத்தில் சில் நாட்களாகவே மேலோங்கியிருக்கிறது"
அரசியல் பேசுவார் என்று எதிர்பார்த்த் மாராயர், இப்படி திருமணம் பற்றி பேச்சு வரவே ஒன்றும் சொல்வதறியாது திகைத்தார். தன் மகளுக்கும், வீர பாண்டியனுக்கும் உள்ள தொடர்பை அறிந்திருந்தாரானாலும், இப்போது என்ன சொல்வது என்ற எண்ணத்தில் பதிலிறுக்க மறந்து விட்டார். அவரது எண்ண ஓட்டத்தைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட விக்ரமர்,
"மாராயரே, அரசியலும் பேசுவோம். அதற்கு முதற்படி இந்த அறவியல். அதாவது இல்லறவியல். இங்கிருப்போருக்குத் தெரியாததை நான் சொல்லப்போவதில்லை. ஆனாலும் தெரிவித்து விடுகிறேன். கயல்விழி தேவியார் பாண்டிய சிம்மாசனத்தை அலங்கரிக்கும் நாளை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என்று ஒரே போடாகப் போட்டர்.
சுற்றியிருந்தோர் வாயடைத்து நின்ற விதத்தைப் பார்த்து அங்கிருந்த பாவை விளக்குகள் சிரித்ததைப் போன்றிருந்தது. வான்மதியாளும் சிரிப்பதற்கு வசதியாக மேகமுந்தானையால் தன் முகத்தை மூடினாள்.
(தொடரும்)
புதிய தலை நகரான வீரதவளப்பட்டணத்திற்கு சோபை சேர்க்கும் விதமாக அமைந்திருந்த அரச மாளிகையின் முன் முன்றிலில் அன்று இரவு ஒரே களேபரமாக இருந்தது. புதிய விருந்தினர்களை வரவேற்பதற்காக அரசரும், விக்ரம பாண்டியரும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். புது அரசனான வீர பாண்டியனின் எண்ண ஓட்டத்தை நன்கு அறிந்து கொண்ட விக்ரமர், கயல்விழியின் வருகை பயனளிக்கத் தொடங்கிவிட்டதை எண்ணிப் பெருமகிழ்ச்சி அடைந்தார்.
அந்த நகருக்கு வந்த பின் இத்தனை கோலாகலத்துடன் அரண்மனை என்றுமே இருந்ததில்லையாகையால் பணிமக்களும் பேருவகையுடன் பணியாற்றிக்கொண்டிருந்தனர். மாலை மயங்கியதும் பந்தவிளக்குகள் ஏற்றப்பட்டு தூரத்தே வைக்கப்பட்டன. அவை காற்றால் அணையாதிருக்க அவற்றைச் சுற்றி தகடு அமைக்கப்பட்டிருந்ததால் வெளிச்சம் நேராகப் பாய்ந்தது. அப்படி நேராகப் பாய்ந்தாலும் அருகருகே அவ்வாறான விளக்குகள் அமைக்கப்பட்டிருந்ததால் மற்ற இடங்களில் இருட்டு இல்லை. இவ்வாறு தொலைவில் வெளிச்சம் வந்து கொண்டிருக்க அரசரும் அவரது விருந்தினர்களும் அமரும் இடத்தில் அமைக்கப் பெற்றிருந்த இரத்தினக் கம்பளங்களை ஒட்டி நொந்தா விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. மூலைக்கொன்றாக நிறுத்தப்பட்டிருந்த பாவை விளக்குகளும் அவற்றின் இரு மருங்கிலும் விதானத்திலிருந்து தொங்க விடப்பட்டிருந்த நொந்தா விளக்குகளும் அந்த முன்றிலை தெளிவுறக்காட்டின. அப்படித் தெளிவாகக் காட்டினாலும், நறுமணம் கருதி போடப்பட்டிருந்த அகிற்புகையானது தன் பணியான நறுமணத்தைப் பரப்பியதோடல்லாமல், அந்த வெளிச்சத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியே அடைந்தது. ஒரு மருங்கில் இசைக் கலைஞர்கள் இன்ப நாதத்தை மீட்டிக்கொண்டிருக்க அவர்களோடு தோற்கருவிக்கலைஞர்களும் மெல்லிய ஒலியெழுப்பிக் கொண்டிருந்தனர்.
இவற்றையெல்லாம் காணவேண்டுமென்ற அவா இருந்தும் பகலவன் தன் பணியை முடித்துக் கொண்ட காரணத்தால் மலைவாயிலில் விழுந்து மறைந்துவிடவே, மறுபுறத்திலிருந்து வான்மதி மெல்ல எட்டிப்பார்த்தது. பகலவன் இல்லாது போகவே அவனைத் தேடிக்கொண்டு மேற்கு நோக்கி நகரத்தொடங்கியதால் ஏற்பட்ட இயற்கை வெளிச்சம் அந்த சூழலை மேலும் ரம்மியமாக்கியது. ஆடி மாதமானாலும், தென்றலின் மெல்லிய காற்று குறையாமல் வீசி தன் பங்கைத் தவறாமல் ஆற்றியது.அனைவரும் தரையிலேயே அமர்ந்து உணவுண்ணும் வகையில் சுற்றிலும் வெண்பஞ்சு மெத்தைகளும், திண்டுகளும் அமைக்கப்பெற்றிருந்த விதம் வடக்கே புதிதாக வந்திருந்த சுல்தானியர்களின் விருந்தோம்பல் முறையை ஒத்திருந்ததை அதை அறிந்தவர்கள் புரிந்து கொண்டார்கள்.
அன்று விருந்தினர்களோடு, முக்கியத் தளபதிகளுக்கும் அமைச்சர்களுக்குமாக சேர்த்தே விருந்து நடைபெறவிருந்தது. ஒவ்வொருவராக வரத்தொடங்கிய முக்கியஸ்தர்களும், விருந்தினர்களும், தங்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் சென்று அமர்ந்து தங்களுக்குள் பேசியவாறு அரசனை எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர்.
அனைத்து ஏற்பாடுகளும் செவ்வனே செய்யப்பட்ட நிலையில் விருந்தினர்களும் வந்து அமர்ந்திருக்க, அரண்மனையின் உட்புற ஆலாட்சி மணி மெல்லிய ஒலியெழுப்பி அரசனின் வருகையை அறிவித்தது. விருந்தானாலும், அரசனின் வருகையைக் கருதி கட்டியங்கூறுவோன் பாண்டியர்களது மெய்கீர்த்தியை வாசிக்க புதிய பாண்டிய மண்டலாதிபதியான வீர பாண்டியத் தேவர் எழுந்தருளினார்.
அது அரசவையில்லாததால் மகுடம் தரிக்காமல் தலைக் குழலை தோளின் இருமருங்கிலும் அலைபாய விட்டு, மேலுக்கு ஒரு உத்தரீயத்தை அணிந்து அதன் மேல் இரத்தினங்களால் ஆன இரு ஹாரங்களைத் தரித்தும் நின்ற வீர பாண்டியன், தன் வாளையும் இடையில் கட்டி எடுத்துவந்தது சிலரை வியப்பில் ஆழ்த்தியது. அப்படி வியப்பில் ஆழ்த்திய நிகழ்வை நன்றாகக் கவனித்தாலும் கவனிக்காதது போலக் காட்டிக்கொண்ட வீர பாண்டியன், அனைவரையும் அமருமாறு பணித்துத் தானும் அமர்ந்தான். அவனது உத்தரவை எதிர்ப்பார்த்து நின்றிருந்த விக்ரம பாண்டியரை நோக்கி நிகழ்ச்சியைத் துவக்குமாறும் சைகை செய்தான். இவ்வளவிலும், பெண்கள் யாரும் தென்படாததைக் கவனிக்கத் தவறவில்லை. விக்ரம பாண்டியர் பேச ஆரம்பித்ததுமே இசைக்கலைஞர்கள் தங்கள் திறமையைச் சற்று நிறுத்தி வைத்தனர்.
அனைவரையும் ஒரு முறை தீர்க்கமாகப் பார்த்த விக்ரம பாண்டியர், "அன்பர்களே, இந்த இனிய மாலைப் பொழுதினிலே, இங்கு கூடியிருக்கும் உங்களுடன் என் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. பாண்டிய தேசத்துப்புகழ் தென் தமிழகத்திலேயே தங்கிவிடாமல், வட தமிழகம் வரை வந்திருப்பது அது மேலும் விருத்தியடைவதற்கான ஹேதுவாகவே நாம் கருத வேண்டும். இனிய இந்த நேரத்தை அரசியல் பேசிக் கழிக்க விரும்பவில்லை. இந்த அரசு அமைந்ததற்குப் பிறகு நடத்தப் பெறும் இந்தப் பெரிய விருந்தோம்பலை நீங்கள் அனைவரும் சிறப்பிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இனி நர்த்தனமும் அதைத் தொடர்ந்து பாரதக் கூத்தும் நடைபெறும். அனைவரும் உண்டும் கண்டும் களிக்க வேண்டுமென்பது அரசரின் அவா. இனி நிகழ்ச்சிகள் துவங்கும்." என்று கூறி முடிக்க அந்த முன்றிலின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையைச் சுற்றி திடீரென வெளிச்சப்பந்தங்கள் தோன்றின. அதுவரை காணாமல் இருந்த அந்த மேடை சட்டெனத் தோன்றவே அங்கு குழுமியிருந்தோரின் ஆஹாகாரம் முன்றிலின் விதானத்தை முட்டியது.
இதைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடந்தவாறிருக்க, விருந்து மிகச் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. மதுபானம் செய்வோரும், மாமிசம் உண்ணுவோரும் தங்கள் தேவைகளைச் சிறப்பாகப் பூர்த்தி செய்து கொண்டிருந்து பணியாட்களின் வேகத்தைச் சோதித்துக் கொண்டிருந்தனர். பணியாட்களும் அசராது அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருந்தனர்.
அனைவரையும் அவர்களருகே சென்று நலம் விசாரித்த பாண்டிய மன்னனை அனைவரும் போற்றிப்புகழ்ந்தனர். இறுதியாக முக்கிய விருந்தினராக வந்திருந்த மாராயரையும், இளவழுதியையும் தன்னருகே அமரச் செய்த மன்னன் அவர்களிடம் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தான். ஆனாலும் அவன் எண்ணம் அங்கில்லை என்பதை உணர இருவருக்கும் அதிக நேரம் பிடிக்கவில்லை. "விருந்து முடிந்தவுடன் மேல்மாடத்தில் நாம் முக்கியமாகப் பேச வேண்டும். அப்போது கயல்விழியும், தேன்மொழியும் உடனிருந்தால் நல்லது" என்று சொன்னான் அரசன். "அவ்வாறே ஆகட்டும். இங்கு விருந்து நடப்பதால் சபை நாகரீகம் கருதி அவர்களை அழைத்து வரவில்லை. அங்கே அவர்கள் நிச்சயம் கலந்து கொள்வார்கள்" என்றார் மாராயர்.
ஏழு நாழிகைகளுக்கும் மேலாக நீடித்த அந்த விருந்து ஒரு வழியாக முடிவிற்கு வந்த போது வான்மதி நடுவானைத் தாண்டியிருந்தாள். அனைவரும் அவர்கள் இல்லம் திரும்ப அரசனும் மாராயர், விக்ரமர் மற்றும் இளவழுதியும் மேல்மாடம் நோக்கிச் சென்றனர். அரசனின் வேகத்தைக் கவனித்த விக்ரமன் உள்ளூரப் புன்னகைத்துக் கொண்டு "வீரா உன்னைக் கட்டிப்போடும் கயிற்றைக் கண்டு கொண்டேன். இனி உன் செயல் சீரிய முறையில் செல்ல வேண்டிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதுதான்" என்று நினைத்துக் கொண்டார்.
மேல் மாடத்தில் அனைவரும் அமர்வதற்கான ஆசனங்கள் வட்டவடிவில் போடப்பட்டிருந்தன. பெண்கள் முன் கூட்டியே வந்திருந்தாலும், நாகரீகம் கருதி, ஒரு மூலையில் நின்றிருந்தனர். அரசன் முதலானோர் வரவும், தங்களை சற்றே அசைத்துக் கொண்டு தங்கள் இருப்பைக் காட்டிக்கொண்டனர்.
"இங்கே வா கயல்விழி, வா தேன்மொழி. இவ்வளவு நேரம் கழித்து சந்திப்பதில் சங்கடம் ஏதுமில்லையே" என்று கூறினார் விக்ரமர்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை." என்று சொல்லியவாறே கயல்விழியுடன் வந்தமர்ந்தாள் தேன்மொழி.
"நல்லது இனி நாம் பேசத்தடையில்லை. மாராயரே. உங்களிடம் சில முக்கியச் செய்திகளைப்பற்றி பேச வேண்டியதிருக்கிறது." விக்ரமர் நேரடியாக விஷயத்திற்கு வந்தார்.
"விக்ரமரே தாராளமாகச் சொல்லுங்கள்."
"நன்றி மாராயரே. வீர பாண்டியன் இப்போது ஒரு தேசத்திற்கு அரசனாகி விட்டான். ஆனாலும் அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. அரசனுக்கு அரசி இருப்பதுதான் மரபு. ஆகவே, வீர பாண்டியனுக்கு விரைவில் திருமணம் நடத்திவிட வேண்டும் என்ற அவா என் எண்ணத்தில் சில் நாட்களாகவே மேலோங்கியிருக்கிறது"
அரசியல் பேசுவார் என்று எதிர்பார்த்த் மாராயர், இப்படி திருமணம் பற்றி பேச்சு வரவே ஒன்றும் சொல்வதறியாது திகைத்தார். தன் மகளுக்கும், வீர பாண்டியனுக்கும் உள்ள தொடர்பை அறிந்திருந்தாரானாலும், இப்போது என்ன சொல்வது என்ற எண்ணத்தில் பதிலிறுக்க மறந்து விட்டார். அவரது எண்ண ஓட்டத்தைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட விக்ரமர்,
"மாராயரே, அரசியலும் பேசுவோம். அதற்கு முதற்படி இந்த அறவியல். அதாவது இல்லறவியல். இங்கிருப்போருக்குத் தெரியாததை நான் சொல்லப்போவதில்லை. ஆனாலும் தெரிவித்து விடுகிறேன். கயல்விழி தேவியார் பாண்டிய சிம்மாசனத்தை அலங்கரிக்கும் நாளை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என்று ஒரே போடாகப் போட்டர்.
சுற்றியிருந்தோர் வாயடைத்து நின்ற விதத்தைப் பார்த்து அங்கிருந்த பாவை விளக்குகள் சிரித்ததைப் போன்றிருந்தது. வான்மதியாளும் சிரிப்பதற்கு வசதியாக மேகமுந்தானையால் தன் முகத்தை மூடினாள்.
(தொடரும்)
Wednesday, July 8, 2009
சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 8
அத்தியாயம் 8: வீர தவளப் பட்டிணம்
கடந்த அத்தியாயங்களில் பல்வேறு நிகழ்வுகள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள். கதையின் ஓட்டத்திற்கு அது தேவையாக இருக்கிறது. பெரும்பாலும் உண்மையும் அதுதான். மனித மனம் என்றுமே ஒன்றே போல் சிந்தித்ததில்லை. மனம் சொன்னதை செய்யும் உடலும் ஒன்றே போல் செய்ததில்லை. நாம் ஒவ்வொரு இடத்திலும் அதற்குத் தகுந்தாற்போல் நம் சிந்தனைகளையும் நடவடிக்கைகளையும் மாற்றியமைத்துக் கொள்கிறோம். இதுதான் வாழ்வாதாரக் கோட்பாட்டின் அடிப்படை. (We align ourselves to the requirement of the situtation. This is the fundamental concept of survival theory. Those who does this evovle. Others perish).
இந்த வகையில்தான் ஒவ்வொரு சூழலிலும் நம் கதாபாத்திரங்கள் அந்தந்த சூழலுக்கேற்றாற்போல் தங்கள் செயல்களை மாற்றியமைத்துக் கொண்டார்கள். குறிப்பாக வல்லாளனும், சுந்தர பாண்டியனும் இப்படி மாற்றிப் பேசி வருவது அவர்கள் செயல்களை ஒட்டியே உள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
===
சுந்தர பாண்டியன் தன் ராஜ்ஜியத்தைத் தாக்க வருமாறு வலிய அழைப்பு விடுத்தது மாலிக் கஃபூருக்கு பெரும் அதிர்ச்சியைத் தரவில்லையாயினும் ஆச்சரியத்தைத் தூண்டியது. பழம் நழுவிப் பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது என்ற பழமொழி அவனுக்கு அப்போது தெரியாவிட்டாலும் அந்த அளவுக்கு சுந்தர பாண்டியன் தாம்பாளத்தில் வைத்து தமிழகத்தைத் தருவது போல் இருக்கிறதே என்ற எண்ணம் ஏற்படாமல் இல்லை. உள்ளுக்குள் சந்தோஷம் கொப்பளித்தாலும் மேலுக்கு வழக்கம் போலவே அமைதியாக இருந்து சுந்தர பாண்டியன் மேற்கொண்டு சொல்லப்போவதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
"மாலிக். சுருக்கமாகக் கூறி விடுகிறேன். நீ ஹொய்சளர்களை வடக்கிலிருந்து தாக்கும் போது நான் அவர்களைத் தெற்கிலிருந்து தாக்கி ஹொய்சள தேசத்தைக் கைப்பற்றி பாண்டிய அரசுடன் சேர்த்து விடுவேன். நீ உனக்கு வேண்டிய செல்வங்களுடன் டில்லி திரும்பலாம். அதன் மூலம் என் வீரம் வெளிப்பட்டு பாண்டிய அரசுக்கு நான் நிரந்தர வாரிசாகி விடுவேன். இதுதான் நம் முதல் திட்டம். ஆனால் இப்போது நான் மதுரையை ஆட்சி செய்து கொண்டிருப்பதாலும், என் சகோதரனும் அதில் பங்கெடுத்துக் கொண்டிருப்பதாலும் அவனைக் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
எனவே திட்டத்தில் மாறுதல் செய்துள்ளேன். நீ ஹொய்சளர்களைத் தாக்காமல் நேரடியாக தமிழகத்திற்குள் வந்து விடு. மதுரையைச் சுற்றி வளைக்கும் போது உன்னைப் பின்புறமாக வீர பாண்டியன் தாக்குவான். அப்போது அவனை நீ கவனித்துக் கொண்டால் போதும். இதற்குப் பிரதியாக உன் ஹொய்சளப் படையெடுப்பிற்கு நான் உதவுகிறேன். அத்துடன் உனக்குத் தேவையான பல அரிய பொக்கிஷங்களும் தருகிறேன். நீ ஹொய்சளர்களின் மீதான வெற்றியுடனும் எங்களது பொக்கிஷங்களுடனும் டில்லி திரும்பலாம். என்ன சொல்கிறாய்?"
மாலிக் கஃபூர் இப்போது திகைத்துத்தான் போனான். அதன் காரணம் பற்றியும் அவனால் உடனே பதிலிறுக்க முடியவில்லை. அவன் முகத்திலிருந்த புன் முறுவல் தற்போது மேலும் விரிவடைந்தது. "மாலிக் நீ உண்மையிலேயே அதிர்ஷ்டக்காரன்தான்" என்று தன்னைத்தானே மனதிற்குள் பாராட்டிக்கொண்டான்.
"நண்பா. நல்லது. அவ்வாறே செய்யலாம். இன்னும் ஒரு மாத காலத்தில் நாம் மதுரையில் சந்திப்போம், இறைவன் கருணையினால். நீ மற்ற ஏற்பாடுகளைச் செய்ய உடனே புறப்படுவது நல்லது. எதையும் காலம் தாழ்த்தாமல் செய்யவேண்டும் அல்லவா?"
"உண்மைதான் மாலிக். நான் உடனே புறப்படுகிறேன். சொன்னது ஞாபகமிருக்கட்டும். இனி உன்னைத் தொடர்பு கொள்வது சற்றுக் கடினம்தான். ஆயினும் முயற்சிக்கிறேன்." என்றவாறே கிளம்பினான் சுந்தர பாண்டியன். அவன் புரவி மறையும் வரை காத்திருந்த மாலிக் அவசர அவசரமாகத் தனது தளபதிகளை வரச்சொன்னான். மாலையில் நடந்த அந்த சந்திப்பு தக்காணம் என்று அறியப்படும் தென்னிந்தியாவிற்குத் தெரிந்திராத பல நிகழ்வுகளுக்கும், வரலாற்றின் மாற்றத்திற்கும் காரணமாக அமைந்தது. மாலிக் கஃபூரின் மனக்கணக்கு அவனது தளபதிகளுக்குப் புரியவில்லை.
ஒவ்வொருவரும் போடும் கணக்கு ஒவ்வொரு விதம். ஆனால் ஆண்டவன் கணக்கு அலாதியானது. இறுதியானது. சிலருக்குக் கூடுதல், சிலருக்குக் குறைவு. யாருக்கும் கேட்டது, கேட்டது போல் கிடைப்பதில்லை!.
===
பாண்டிய தேசம் இரு தலை நகரங்களிலிருந்து ஆட்சி செய்யப்பட்டு வந்தது. புதுத் தலை நகரம் வீர தவளப் பட்டினம். (காஞ்சிக்கருகில் இருந்ததாக வரலாற்றாய்வர்கள் சிலர் கருதுகிறார்கள். ஆனால் சரியான இடம் இது என்று அறுதியிட்டுக் கூறவியலவில்லை. வந்தவாசியாக இருக்கலாம் என்பது என் எண்ணம். வீரதவளப்பட்டணம், வந்து வசித்த இடம் ஆகியவ மருவி வந்தவாசி ஆகியிருக்கலாம். வந்தவாசி, பின்னர் ஆற்காட்டு நவாப்களின் முக்கியக் கோட்டைகளில் ஒன்றாக விளங்கி, ஆற்காடு - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்த நகரம். இங்கு நடைபெற்ற ஆங்கில ப்ரெஞ்சு யுத்தம், தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு அடிகோலியது. நம் கதைக்கு வந்தவாசியை வீரதவளப்பட்டினமாக அமைத்துக் கொள்வது தவறாகாது என்பதால் அதையே பயன் படுத்துகிறேன்.)
காஞ்சிக்குத் தென் மேற்கில், மதுரைக்குச் செல்லும் ராஜபாட்டையில் அமைந்திருந்தது இந்தக் கோட்டை நகரம். அங்கு ஏற்கனவே இருந்த சிறு கோட்டையையும், மாளிகையையும் புதுப்பித்து தலை நகருக்கேற்றார்ப்போல் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தது. படை கலன்களும், படைவீடுகளும் சுற்றுப்புறத்தில் ஏற்பட்டன. புதிய மந்திரிகளும், அரசாங்க அதிகாரிகளும் நிர்வாகத்தைக் கவனிக்கத் தொடங்கினர். மதுரைக்கும் வீர தவளப்பட்டணத்திற்கும் இருந்த ராஜபாட்டையானது செம்மைப் படுத்தப்பட்டது. அருகிலிருந்த சிறு குன்று அந்நகருக்கு அழகு சேர்த்தது.
இவையனைத்தும் விக்ரம பாண்டியரது தலைமையிலும், நேரடிக் கண்காணிப்பிலும் நடைபெற்று வந்தன. புதிய அரசனான வீர பாண்டியனோ இவை எதிலும் பட்டும் படாமல் விலகியே நின்றான். அவன் உள்ளத்தில் இந்த ஏற்பாட்டின் தாக்கம் ஓயாது கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தது. விக்ரம பாண்டியர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் பயனில்லாமல் போகவே ஓர் உபாயம் செய்தார். இருவரை அழைத்து வர ஏற்பாடு செய்தார் வந்ததோ நால்வர். அவர்கள் இளவழுதி, அவனது தந்தை மாராயர், சகோதரி கயல்விழி மற்றும் அவனது மாமன் மகள் தேன்மொழி.
கயல்விழியையும் தேன்மொழியையும் பார்க்கும் போது அவர்கள் இன்னும் மணமாகமல் இருக்கக் காண்கிறோம். முன்பு பார்க்கும் போது இருந்த குழந்தைத் தனம் குறைந்து பக்குவப்பட்டிருந்தாள் கயல்விழி. அந்தப் பக்குவம் அவள் அழகுக்கு மெருகூட்டியது. தான் இங்குதான் வாழப்போகிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டிருப்பதை விழியென்னும் ஏரிக்குள் தத்தளிக்கும் மீன்களாகத் திரியும் அவளது கண்ணின் மணிகள் காட்டிக் கொடுத்து விடுகின்றன. அவளது பருவம், கனிந்து அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்கதிர்களைப்போல் விளைந்து நின்றதை நாம் உணர்ந்து கொள்கிறோம்.
தேன்மொழியோ அடியோடு மாறிப்போய்விட்டாள். கொல்லிமலைப் படையை இளவழுதியின் கட்டுப்பாட்டில் விட்டதோடல்லாமல், இவளும் அவனிடம் கட்டுண்டுவிட்டாள். இளவழுதியின் கண்கள் தாவும் இடங்களிலெல்லாம் இவளும் நோக்குவதை நாம் பார்க்கத்தவறவில்லை. கயல்விழியுடன் அடிக்கொருதரம் பேசியபடியும், குறுஞ்சிரிப்பு செய்தபடியும் வந்து கொண்டிருந்தது, இளவழுதியின் கவனத்தைச் சிதறடித்தது. அவனால் இவர்கள் புறம் திரும்பாமல் இருக்க முடியவில்லை. அப்படித் திரும்பும் போதெல்லாம் அதிகமாகிய அவர்களது சிரிப்பு, அவன் கோபத்தைக் கிளறியது. முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டான்.
மாராயரோ இவற்றையெல்லாம் கவனித்தும் கவனிக்காதது போல் புதிய தலை நகரை நோட்டம் விட்டார். அத்தலை நகரில் உள்ள பாதுகாப்புக் குறைவையும் கவனத்தில் கொண்டார். வீரபாண்டியன் நல்ல பிள்ளை. ஏன் இந்த முடிவெடுத்தான் என்ற கேள்வியை அவனிடமே கேட்டுவிடுவது என்ற முடிவில்தான் அங்கு வந்திருந்தார்.
இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையிலிருந்தாலும் அவர்களுக்குள்ளே மேலோட்டமாக பேச்சு இருந்து கொண்டேதான் இருந்தது. நால்வரும் தனித்தனி குதிரைகளில் வந்துகொண்டிருந்தனர். கோட்டை வாயிலை அடைந்தபோது விக்ரமபாண்டியர் வரவே, அவர்கள் அங்கேயே குதிரையிலிருந்து இறங்க வேண்டியதாயிற்று.
"ஆகா. வந்துவிட்டீர்களா? உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கயல்விழி, நலமா?" என்று குறிப்பாக விசாரித்தவர், பதிலுக்குக் காத்திராமல், "நாம் விரைந்து மாளிகைக்குச் செல்வது நலம். வீர பாண்டியன் செய்கை சற்றும் விரும்பத்தகாததாக இருக்கிறது. அதற்காகத்தான் உங்களை அழைக்க வேண்டியிருந்தது. வாருங்கள் சென்று கொண்டே பேசுவோம்".என்று அவசரப்படுத்தினார்.
"என்ன செய்துவிட்டான் வீரபாண்டியன்?" வினவினார் மாராயர்.
"ஒன்றும் செய்யவில்லை. புதிய அரசன் என்ற முறையில் எதுவுமே செய்வதில்லை. அனைத்தையும் நான்தான் செய்ய வேண்டியிருக்கிறது. அன்று ஒப்புக் கொண்டவன் இன்று பின் வாங்குகிறான். இப்போது இந்தக் கோட்டையை நீங்கள் கவனித்ததை நானும் பார்த்தேன். இதிலுள்ள பாதுகாப்புக் குறைபாடுகள் எனக்கும் தெரியும். ஆயினும் நான் ஒருவன் என்ன செய்வது? அவன் திருந்தினால் ஒழிய ஒன்றும் நடக்கப் போவதில்லை. நீங்கள் தான் வந்து சொல்லவேண்டும்" என்று படபடவென்று பொரிந்து தள்ளினார்.
"நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் நாங்கள் வந்துவிட்டோமல்லவா. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது. பிறகு எல்லாம் திருவெள்ளரை புண்டரிகாக்ஷன் செயல்" என்று குறிப்பிட்டார் மாராயர்.
இவர்கள் இருவரைத் தொடர்ந்து மற்ற மூவரும் அரண்மனை மாளிகை நோக்கிப் பயணித்தனர். அவர் சொன்னது சரிதான் என்பது போல் வீரபாண்டியனின் நடவடிக்கைகளில் உடனடி மாற்றம் ஏற்பட்டது. உற்சாகம் எங்கும் தொற்றிக்கொண்டது.
(தொடரும்)
கடந்த அத்தியாயங்களில் பல்வேறு நிகழ்வுகள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததை நீங்கள் அறிவீர்கள். கதையின் ஓட்டத்திற்கு அது தேவையாக இருக்கிறது. பெரும்பாலும் உண்மையும் அதுதான். மனித மனம் என்றுமே ஒன்றே போல் சிந்தித்ததில்லை. மனம் சொன்னதை செய்யும் உடலும் ஒன்றே போல் செய்ததில்லை. நாம் ஒவ்வொரு இடத்திலும் அதற்குத் தகுந்தாற்போல் நம் சிந்தனைகளையும் நடவடிக்கைகளையும் மாற்றியமைத்துக் கொள்கிறோம். இதுதான் வாழ்வாதாரக் கோட்பாட்டின் அடிப்படை. (We align ourselves to the requirement of the situtation. This is the fundamental concept of survival theory. Those who does this evovle. Others perish).
இந்த வகையில்தான் ஒவ்வொரு சூழலிலும் நம் கதாபாத்திரங்கள் அந்தந்த சூழலுக்கேற்றாற்போல் தங்கள் செயல்களை மாற்றியமைத்துக் கொண்டார்கள். குறிப்பாக வல்லாளனும், சுந்தர பாண்டியனும் இப்படி மாற்றிப் பேசி வருவது அவர்கள் செயல்களை ஒட்டியே உள்ளதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
===
சுந்தர பாண்டியன் தன் ராஜ்ஜியத்தைத் தாக்க வருமாறு வலிய அழைப்பு விடுத்தது மாலிக் கஃபூருக்கு பெரும் அதிர்ச்சியைத் தரவில்லையாயினும் ஆச்சரியத்தைத் தூண்டியது. பழம் நழுவிப் பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது என்ற பழமொழி அவனுக்கு அப்போது தெரியாவிட்டாலும் அந்த அளவுக்கு சுந்தர பாண்டியன் தாம்பாளத்தில் வைத்து தமிழகத்தைத் தருவது போல் இருக்கிறதே என்ற எண்ணம் ஏற்படாமல் இல்லை. உள்ளுக்குள் சந்தோஷம் கொப்பளித்தாலும் மேலுக்கு வழக்கம் போலவே அமைதியாக இருந்து சுந்தர பாண்டியன் மேற்கொண்டு சொல்லப்போவதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
"மாலிக். சுருக்கமாகக் கூறி விடுகிறேன். நீ ஹொய்சளர்களை வடக்கிலிருந்து தாக்கும் போது நான் அவர்களைத் தெற்கிலிருந்து தாக்கி ஹொய்சள தேசத்தைக் கைப்பற்றி பாண்டிய அரசுடன் சேர்த்து விடுவேன். நீ உனக்கு வேண்டிய செல்வங்களுடன் டில்லி திரும்பலாம். அதன் மூலம் என் வீரம் வெளிப்பட்டு பாண்டிய அரசுக்கு நான் நிரந்தர வாரிசாகி விடுவேன். இதுதான் நம் முதல் திட்டம். ஆனால் இப்போது நான் மதுரையை ஆட்சி செய்து கொண்டிருப்பதாலும், என் சகோதரனும் அதில் பங்கெடுத்துக் கொண்டிருப்பதாலும் அவனைக் கவனிக்க வேண்டியது அவசியமாகிறது.
எனவே திட்டத்தில் மாறுதல் செய்துள்ளேன். நீ ஹொய்சளர்களைத் தாக்காமல் நேரடியாக தமிழகத்திற்குள் வந்து விடு. மதுரையைச் சுற்றி வளைக்கும் போது உன்னைப் பின்புறமாக வீர பாண்டியன் தாக்குவான். அப்போது அவனை நீ கவனித்துக் கொண்டால் போதும். இதற்குப் பிரதியாக உன் ஹொய்சளப் படையெடுப்பிற்கு நான் உதவுகிறேன். அத்துடன் உனக்குத் தேவையான பல அரிய பொக்கிஷங்களும் தருகிறேன். நீ ஹொய்சளர்களின் மீதான வெற்றியுடனும் எங்களது பொக்கிஷங்களுடனும் டில்லி திரும்பலாம். என்ன சொல்கிறாய்?"
மாலிக் கஃபூர் இப்போது திகைத்துத்தான் போனான். அதன் காரணம் பற்றியும் அவனால் உடனே பதிலிறுக்க முடியவில்லை. அவன் முகத்திலிருந்த புன் முறுவல் தற்போது மேலும் விரிவடைந்தது. "மாலிக் நீ உண்மையிலேயே அதிர்ஷ்டக்காரன்தான்" என்று தன்னைத்தானே மனதிற்குள் பாராட்டிக்கொண்டான்.
"நண்பா. நல்லது. அவ்வாறே செய்யலாம். இன்னும் ஒரு மாத காலத்தில் நாம் மதுரையில் சந்திப்போம், இறைவன் கருணையினால். நீ மற்ற ஏற்பாடுகளைச் செய்ய உடனே புறப்படுவது நல்லது. எதையும் காலம் தாழ்த்தாமல் செய்யவேண்டும் அல்லவா?"
"உண்மைதான் மாலிக். நான் உடனே புறப்படுகிறேன். சொன்னது ஞாபகமிருக்கட்டும். இனி உன்னைத் தொடர்பு கொள்வது சற்றுக் கடினம்தான். ஆயினும் முயற்சிக்கிறேன்." என்றவாறே கிளம்பினான் சுந்தர பாண்டியன். அவன் புரவி மறையும் வரை காத்திருந்த மாலிக் அவசர அவசரமாகத் தனது தளபதிகளை வரச்சொன்னான். மாலையில் நடந்த அந்த சந்திப்பு தக்காணம் என்று அறியப்படும் தென்னிந்தியாவிற்குத் தெரிந்திராத பல நிகழ்வுகளுக்கும், வரலாற்றின் மாற்றத்திற்கும் காரணமாக அமைந்தது. மாலிக் கஃபூரின் மனக்கணக்கு அவனது தளபதிகளுக்குப் புரியவில்லை.
ஒவ்வொருவரும் போடும் கணக்கு ஒவ்வொரு விதம். ஆனால் ஆண்டவன் கணக்கு அலாதியானது. இறுதியானது. சிலருக்குக் கூடுதல், சிலருக்குக் குறைவு. யாருக்கும் கேட்டது, கேட்டது போல் கிடைப்பதில்லை!.
===
பாண்டிய தேசம் இரு தலை நகரங்களிலிருந்து ஆட்சி செய்யப்பட்டு வந்தது. புதுத் தலை நகரம் வீர தவளப் பட்டினம். (காஞ்சிக்கருகில் இருந்ததாக வரலாற்றாய்வர்கள் சிலர் கருதுகிறார்கள். ஆனால் சரியான இடம் இது என்று அறுதியிட்டுக் கூறவியலவில்லை. வந்தவாசியாக இருக்கலாம் என்பது என் எண்ணம். வீரதவளப்பட்டணம், வந்து வசித்த இடம் ஆகியவ மருவி வந்தவாசி ஆகியிருக்கலாம். வந்தவாசி, பின்னர் ஆற்காட்டு நவாப்களின் முக்கியக் கோட்டைகளில் ஒன்றாக விளங்கி, ஆற்காடு - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்த நகரம். இங்கு நடைபெற்ற ஆங்கில ப்ரெஞ்சு யுத்தம், தென்னிந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு அடிகோலியது. நம் கதைக்கு வந்தவாசியை வீரதவளப்பட்டினமாக அமைத்துக் கொள்வது தவறாகாது என்பதால் அதையே பயன் படுத்துகிறேன்.)
காஞ்சிக்குத் தென் மேற்கில், மதுரைக்குச் செல்லும் ராஜபாட்டையில் அமைந்திருந்தது இந்தக் கோட்டை நகரம். அங்கு ஏற்கனவே இருந்த சிறு கோட்டையையும், மாளிகையையும் புதுப்பித்து தலை நகருக்கேற்றார்ப்போல் அமைக்கும் பணி முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தது. படை கலன்களும், படைவீடுகளும் சுற்றுப்புறத்தில் ஏற்பட்டன. புதிய மந்திரிகளும், அரசாங்க அதிகாரிகளும் நிர்வாகத்தைக் கவனிக்கத் தொடங்கினர். மதுரைக்கும் வீர தவளப்பட்டணத்திற்கும் இருந்த ராஜபாட்டையானது செம்மைப் படுத்தப்பட்டது. அருகிலிருந்த சிறு குன்று அந்நகருக்கு அழகு சேர்த்தது.
இவையனைத்தும் விக்ரம பாண்டியரது தலைமையிலும், நேரடிக் கண்காணிப்பிலும் நடைபெற்று வந்தன. புதிய அரசனான வீர பாண்டியனோ இவை எதிலும் பட்டும் படாமல் விலகியே நின்றான். அவன் உள்ளத்தில் இந்த ஏற்பாட்டின் தாக்கம் ஓயாது கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தது. விக்ரம பாண்டியர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் பயனில்லாமல் போகவே ஓர் உபாயம் செய்தார். இருவரை அழைத்து வர ஏற்பாடு செய்தார் வந்ததோ நால்வர். அவர்கள் இளவழுதி, அவனது தந்தை மாராயர், சகோதரி கயல்விழி மற்றும் அவனது மாமன் மகள் தேன்மொழி.
கயல்விழியையும் தேன்மொழியையும் பார்க்கும் போது அவர்கள் இன்னும் மணமாகமல் இருக்கக் காண்கிறோம். முன்பு பார்க்கும் போது இருந்த குழந்தைத் தனம் குறைந்து பக்குவப்பட்டிருந்தாள் கயல்விழி. அந்தப் பக்குவம் அவள் அழகுக்கு மெருகூட்டியது. தான் இங்குதான் வாழப்போகிறோம் என்ற எண்ணம் ஏற்பட்டிருப்பதை விழியென்னும் ஏரிக்குள் தத்தளிக்கும் மீன்களாகத் திரியும் அவளது கண்ணின் மணிகள் காட்டிக் கொடுத்து விடுகின்றன. அவளது பருவம், கனிந்து அறுவடைக்குக் காத்திருக்கும் நெற்கதிர்களைப்போல் விளைந்து நின்றதை நாம் உணர்ந்து கொள்கிறோம்.
தேன்மொழியோ அடியோடு மாறிப்போய்விட்டாள். கொல்லிமலைப் படையை இளவழுதியின் கட்டுப்பாட்டில் விட்டதோடல்லாமல், இவளும் அவனிடம் கட்டுண்டுவிட்டாள். இளவழுதியின் கண்கள் தாவும் இடங்களிலெல்லாம் இவளும் நோக்குவதை நாம் பார்க்கத்தவறவில்லை. கயல்விழியுடன் அடிக்கொருதரம் பேசியபடியும், குறுஞ்சிரிப்பு செய்தபடியும் வந்து கொண்டிருந்தது, இளவழுதியின் கவனத்தைச் சிதறடித்தது. அவனால் இவர்கள் புறம் திரும்பாமல் இருக்க முடியவில்லை. அப்படித் திரும்பும் போதெல்லாம் அதிகமாகிய அவர்களது சிரிப்பு, அவன் கோபத்தைக் கிளறியது. முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டான்.
மாராயரோ இவற்றையெல்லாம் கவனித்தும் கவனிக்காதது போல் புதிய தலை நகரை நோட்டம் விட்டார். அத்தலை நகரில் உள்ள பாதுகாப்புக் குறைவையும் கவனத்தில் கொண்டார். வீரபாண்டியன் நல்ல பிள்ளை. ஏன் இந்த முடிவெடுத்தான் என்ற கேள்வியை அவனிடமே கேட்டுவிடுவது என்ற முடிவில்தான் அங்கு வந்திருந்தார்.
இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையிலிருந்தாலும் அவர்களுக்குள்ளே மேலோட்டமாக பேச்சு இருந்து கொண்டேதான் இருந்தது. நால்வரும் தனித்தனி குதிரைகளில் வந்துகொண்டிருந்தனர். கோட்டை வாயிலை அடைந்தபோது விக்ரமபாண்டியர் வரவே, அவர்கள் அங்கேயே குதிரையிலிருந்து இறங்க வேண்டியதாயிற்று.
"ஆகா. வந்துவிட்டீர்களா? உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். கயல்விழி, நலமா?" என்று குறிப்பாக விசாரித்தவர், பதிலுக்குக் காத்திராமல், "நாம் விரைந்து மாளிகைக்குச் செல்வது நலம். வீர பாண்டியன் செய்கை சற்றும் விரும்பத்தகாததாக இருக்கிறது. அதற்காகத்தான் உங்களை அழைக்க வேண்டியிருந்தது. வாருங்கள் சென்று கொண்டே பேசுவோம்".என்று அவசரப்படுத்தினார்.
"என்ன செய்துவிட்டான் வீரபாண்டியன்?" வினவினார் மாராயர்.
"ஒன்றும் செய்யவில்லை. புதிய அரசன் என்ற முறையில் எதுவுமே செய்வதில்லை. அனைத்தையும் நான்தான் செய்ய வேண்டியிருக்கிறது. அன்று ஒப்புக் கொண்டவன் இன்று பின் வாங்குகிறான். இப்போது இந்தக் கோட்டையை நீங்கள் கவனித்ததை நானும் பார்த்தேன். இதிலுள்ள பாதுகாப்புக் குறைபாடுகள் எனக்கும் தெரியும். ஆயினும் நான் ஒருவன் என்ன செய்வது? அவன் திருந்தினால் ஒழிய ஒன்றும் நடக்கப் போவதில்லை. நீங்கள் தான் வந்து சொல்லவேண்டும்" என்று படபடவென்று பொரிந்து தள்ளினார்.
"நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம் நாங்கள் வந்துவிட்டோமல்லவா. எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது. பிறகு எல்லாம் திருவெள்ளரை புண்டரிகாக்ஷன் செயல்" என்று குறிப்பிட்டார் மாராயர்.
இவர்கள் இருவரைத் தொடர்ந்து மற்ற மூவரும் அரண்மனை மாளிகை நோக்கிப் பயணித்தனர். அவர் சொன்னது சரிதான் என்பது போல் வீரபாண்டியனின் நடவடிக்கைகளில் உடனடி மாற்றம் ஏற்பட்டது. உற்சாகம் எங்கும் தொற்றிக்கொண்டது.
(தொடரும்)