ஒரு ஊர். அதில் இரு பங்காளிக் குடும்பங்கள். அவர்கள் தான் அந்த ஊர் நாட்டாமைகள். சின்ன நாட்டாமை இறந்துவிட பெரிய நாட்டாமை தம்பியின் நாட்டாமைத் தனத்தையும் சேர்த்து கவனித்து வருகிறார். தம்பியின் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்களுக்குரிய நாட்டாமை உரிமையை அளித்து விடுகிறார்.
இதில் பெரிய நாட்டாமையின் மகனுக்கு ஏக பொறாமை. எப்படியாவது சித்தப்பா மகன்களை ஏமாற்றி அவர்களுடைய நாட்டாமையைப் பறித்துவிடவேண்டுமென்று தன் தாய்மாமனுடன் சதிசெய்கிறான். அதன் படி அவர்களை ஏமாற்றி ஊரை விட்டுத் துரத்தியும் விடுகிறான்.
காலங்கள் பல கடந்த பின், மீண்டும் ஊருக்குத் திரும்பும் தம்பி பிள்ளைகள், தங்கள் நாட்டாமைத்தனத்தைக் கேட்கின்றனர். ஆனால் பெரிய நாட்டாமையின் மகன் அவர்களை அவமானப்படுத்தி விடுகிறான். ஊரில் சிலர் சின்ன நாட்டாமையின் மகன்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
சமரசம் செய்ய ஒரு ஜகஜால கில்லாடி வருகிறார். அவருக்கும் அல்வா கொடுக்கிறான் பெரிய நாட்டாமையின் மகன். இனி பேசிப்பயனில்லை என்று சண்டைக்கு அழைக்கின்றனர் சின்ன நாட்டாமையின் மகன்கள். ஜகஜால கில்லாடி இவர்கள் பக்கம்.
இந்த ஜஜாகியின் தில்லாலங்கடி வேலைகள் மூலமாக சின்ன நாட்டாமையின் மகன்கள் பெரிய நாட்டாமையின் மகனையும் மற்றவர்களையும் அழித்து விடுகின்றனர். பெரிய நாட்டாமை, மகன் இறந்த துயரத்தில் ஊரை விட்டே சென்று விடுகிறார்.
இறுதியில் மொத்த ஊரும் சின்ன நாட்டாமையின் மகன்களின் கட்டுப்பாட்டில் வருகிறது.
பி.கு:- கதையைப் படித்து விட்டு தயை கூர்ந்து உங்கள் விமர்சனங்களை பின்னூட்டங்களாகத் தெரிவிக்கவும். இந்தக் கதையை திரைப்படமாக எடுக்க விரும்புவோர்க்கு திரைக்கதை அமைத்துத் தரப்படும்!
Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts
Tuesday, August 24, 2010
Saturday, July 25, 2009
ஃபைனல் இன்டர்வியூ
கடந்த ஆறு மாதமாக முயற்சித்தும் ஒன்றும் சரியாக அமையவில்லை. இந்த முறைதான் ஃபைனல் இன்டர்வியூ வரை வந்திருக்கிறது. இப்போதும் முழுமையான திருப்தி இல்லைதான் என்றாலும் இது வரை வந்ததிலேயே இதுதான் பெஸ்ட் என்று சொல்லக்கூடியவாறு இருப்பதுதான் ஹை லைட். சம்பள விவகாரம்தான் இழுத்தடிக்கிறது.
'கூடவோ குறைச்சலோ, இதயே முடிக்கப் பாருங்க. எத்தனை நாள்தான் இப்படி தேடிக்கிட்டே இருக்கப் போறீங்க' என்று, தங்கமணி காலையில் சொன்னது நினைவில் வந்தது. எனக்கும் சரியாகப் பட்டது.
தங்கமணியின் சப்போர்ட்டால்தான் இத்தனை நாள் தள்ள முடிந்தது. இது போன்று எல்லோருக்கும் அமைவது கடினம்தான்.
அதை நினைத்துத்தான் இந்த முறை எப்படியும் முடித்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எல்லாம் முதல் ரவுண்ட் இன்டர்வியூவிலேயே பேசியாகிவிட்டது. சி.டி.சி. விவகாரம் தான் இழுத்தடிக்கிறது. அதற்காகத்தான் இந்த இன்டர்வியூ.
விரைவாகவே அலுவலகம் சென்று காத்திருக்க ஆரம்பித்தேன். இப்படி காத்திருக்க வேண்டியிருக்கிறதே என்றும் நினைத்துக் கொண்டேன். என்ன செய்வது. நேரம் அவ்வளவுதான்.
அவர் வந்துவிட்டதாக ஆபீஸ் பாய் வந்து சொன்னான். சந்திப்பு அறையில் காத்திருப்பதாகவும் சொன்னான்.
அந்த அறை நோக்கி நடந்தேன். முருகா என்று நினைத்தது மனம்.
'குட் மார்னிங்க்' என்றேன்.
'வெரி குட் மார்னிங்க்' என்றார் அவரும்.
சிறிது ஆசுவாசத்திற்குப் பிறகு,
'சொல்லுங்க.. ' என்றார்.
'நீங்கதான் சொல்லணும்' - நான்.
'நேரடியாகவே விஷயத்துக்கு வர்றேன். நீங்க சொல்ற சி.டி.சி. மார்கெட் நிலவரத்திற்கு சற்றும் பொருத்தமில்லாமல் இருக்கிறது. நீங்க வேணும்னா நாலு எடத்துல விசாரிக்கலாம். மத்ததெல்லாம் முடிந்து விட்ட நிலையில், இந்த விஷயத்திற்காக இழுத்தடிப்பது எனக்கும் நன்றாகப் படவில்லை.' என்ற ரீதியில் பேசிய அவர்,
'கூட்டி கழிச்சி பாத்தா எல்லாம் சரியாகத்தான் வரும்' என்று அண்ணாமலை ராதாரவியானார்.
மீண்டும் ஒரு முறை யோசித்தேன். தங்கமணி சொன்னது ஞாபகம் வந்தது. முடிவெடுத்துவிட்டேன்.
'ஓ கே. நீங்க சொல்றதுக்கே ஒத்துக்கிறேன். மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாமா?'
'குட். தாங்க்ஸ். இட்ஸ் ஃபைன் வித் மீ' என்று சொன்னார்.
'சரி வாங்க. எங்க ஜி. எம். ஐ மீட் பண்ணிட்டு, ஹெச். ஆர்.ல போய் அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் வாங்கிக்கலாம்' என்றேன்.
ஒரு வழியாக ஆறு மாதமாக காலியாக இருந்த என்னுடைய சபார்டினேட் போஸ்டுக்கு இன்று ஆள் எடுத்துவிட்ட மகிழ்ச்சியில், ஜி.எம். ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
இந்த்க்காலத்தில் தகுதி, திறமை, அனுபவத்தோடு ஆள் கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது பட்டால்தான் புரிகிறது.
மிஸ்டர். தங்கமணி, எம்.டெக்., எம்.பி.ஏ., ஜி.எம். என்று பெயர்ப் பலகை போட்ட ரூம் கதவு எங்களை வரவேற்றது.
சிறுகதை, ரிப்பீட்டு
'கூடவோ குறைச்சலோ, இதயே முடிக்கப் பாருங்க. எத்தனை நாள்தான் இப்படி தேடிக்கிட்டே இருக்கப் போறீங்க' என்று, தங்கமணி காலையில் சொன்னது நினைவில் வந்தது. எனக்கும் சரியாகப் பட்டது.
தங்கமணியின் சப்போர்ட்டால்தான் இத்தனை நாள் தள்ள முடிந்தது. இது போன்று எல்லோருக்கும் அமைவது கடினம்தான்.
அதை நினைத்துத்தான் இந்த முறை எப்படியும் முடித்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எல்லாம் முதல் ரவுண்ட் இன்டர்வியூவிலேயே பேசியாகிவிட்டது. சி.டி.சி. விவகாரம் தான் இழுத்தடிக்கிறது. அதற்காகத்தான் இந்த இன்டர்வியூ.
விரைவாகவே அலுவலகம் சென்று காத்திருக்க ஆரம்பித்தேன். இப்படி காத்திருக்க வேண்டியிருக்கிறதே என்றும் நினைத்துக் கொண்டேன். என்ன செய்வது. நேரம் அவ்வளவுதான்.
அவர் வந்துவிட்டதாக ஆபீஸ் பாய் வந்து சொன்னான். சந்திப்பு அறையில் காத்திருப்பதாகவும் சொன்னான்.
அந்த அறை நோக்கி நடந்தேன். முருகா என்று நினைத்தது மனம்.
'குட் மார்னிங்க்' என்றேன்.
'வெரி குட் மார்னிங்க்' என்றார் அவரும்.
சிறிது ஆசுவாசத்திற்குப் பிறகு,
'சொல்லுங்க.. ' என்றார்.
'நீங்கதான் சொல்லணும்' - நான்.
'நேரடியாகவே விஷயத்துக்கு வர்றேன். நீங்க சொல்ற சி.டி.சி. மார்கெட் நிலவரத்திற்கு சற்றும் பொருத்தமில்லாமல் இருக்கிறது. நீங்க வேணும்னா நாலு எடத்துல விசாரிக்கலாம். மத்ததெல்லாம் முடிந்து விட்ட நிலையில், இந்த விஷயத்திற்காக இழுத்தடிப்பது எனக்கும் நன்றாகப் படவில்லை.' என்ற ரீதியில் பேசிய அவர்,
'கூட்டி கழிச்சி பாத்தா எல்லாம் சரியாகத்தான் வரும்' என்று அண்ணாமலை ராதாரவியானார்.
மீண்டும் ஒரு முறை யோசித்தேன். தங்கமணி சொன்னது ஞாபகம் வந்தது. முடிவெடுத்துவிட்டேன்.
'ஓ கே. நீங்க சொல்றதுக்கே ஒத்துக்கிறேன். மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாமா?'
'குட். தாங்க்ஸ். இட்ஸ் ஃபைன் வித் மீ' என்று சொன்னார்.
'சரி வாங்க. எங்க ஜி. எம். ஐ மீட் பண்ணிட்டு, ஹெச். ஆர்.ல போய் அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் வாங்கிக்கலாம்' என்றேன்.
ஒரு வழியாக ஆறு மாதமாக காலியாக இருந்த என்னுடைய சபார்டினேட் போஸ்டுக்கு இன்று ஆள் எடுத்துவிட்ட மகிழ்ச்சியில், ஜி.எம். ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
இந்த்க்காலத்தில் தகுதி, திறமை, அனுபவத்தோடு ஆள் கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது பட்டால்தான் புரிகிறது.
மிஸ்டர். தங்கமணி, எம்.டெக்., எம்.பி.ஏ., ஜி.எம். என்று பெயர்ப் பலகை போட்ட ரூம் கதவு எங்களை வரவேற்றது.
சிறுகதை, ரிப்பீட்டு
Monday, July 13, 2009
ஹாய் . . .
ஹாய்.. என்ற மென்மையான குரல் அவனைத் திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால் அந்தக் குரல் கூப்பிட்டது அவனையல்ல. இருந்தாலும் குரலுக்குச் சொந்தக்காரியை ஒருதடவை பார்த்ததில் குயிலின் குறல் கொண்ட குமரியின் அழகு அவனைக் கவர்ந்தது. இவன் பார்த்ததால் அவளும் பார்த்தாள். சாரி என்பதைப் போல் புன்னகை பூத்தாள்.
இட்ஸ் ஓக்கே.. என்ற பதில் பார்வையுடன் திரும்பி நடந்தான். நடந்தவனின் நினைவுகள் கடந்தகாலத்தை அசை போட்டன. ஹாய்.. இந்த ஒரு வார்த்தைதானே....
====
ஹாய்... கல்லூரியின் முதல் நாளில் தோழமையுடன் கேட்ட ஒலி அவனுக்குக் கல்லூரியைப் பற்றிய அறிவுறுத்தல்களிலிருந்து மாறுபட்டிருந்ததை எண்ணி வியந்தவாறே திரும்பிப்பார்த்தான், அந்தப் பார்வை அவன் வாழ்க்கையையே திருப்பிப்போடும் என்பதை அறியாமல்.
ஹாய்.. என் பேர் மதன். நைஸ் டு மீட் யூ. உன் பேரத்தெரிஞ்சுக்கலாமா.
ஹாய். ஐ ஆம் ராம். நைஸ் டு மீட் யூ டூ. நான் இ.சி.இ. நீ?
மி டூ.
ரொம்ப நல்லதாப்போச்சு. இங்க ராக்கிங் அதிகம்னாங்களே..
இல்ல.இல்ல. இது ஸ்கூல் மாதிரி போகப் போகத் தெரிஞ்சிப்ப.
இப்படியாகத் துவங்கியது, ஹாஸ்டலில் ஒரே ரூம் கிடைத்து, ஒரே பைக்கில் திரிந்து,.. எல்லாம் ஒரே ஒரே...
"ஒரே"வில் இருவருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் எதிர்ப்பார்க்காத ஒன்றும் ஒரேவாக வந்த போது...
====
மூன்றாமாண்டு இறுதியில்...
ஹாய் ராம்... இன்னிக்கு என்ன ஆச்சி தெரியுமா.- மதன் ஆர்வமுடன்
பெத்தாச்சியா, படையாச்சியா? - ராம்.
நக்கலா.. கேள்டா. ப்ரிடிஷ் கவுன்சில்லருந்து வெளிய வந்தேனா. அப்ப ஒரு ஃபிகர்டா. நான் கனவுல என்ன நெனச்சிக்கிட்டிருந்தேனோ அப்படியே.. வந்து ஹாய்னு சொல்லி என்கிட்ட டைம் கேக்கறா..
அவ டைம் பேட்னு இதுலேருந்தே தெரியுதே..
அடிங்.. கேள்றா. அப்படியே டெவலப் ஆகி.. ஒரு இதுவாயிருச்சிடா. நீ என்ன சொல்ற. அதுவாயிருந்தா கன்டினு பண்ணலாங்கிறியா..
டேய்.. நீ சென்னைக்குப் புதுசுடா.. இதெல்லாம் டைம் பாஸ் வேல. நீ ஒழுங்கா படிக்கிற வேலையப் பாரு..
பொறாமடா ஒனக்கு. ஒண்ணு ஒனக்கும் மாட்டும் போது வெச்சிக்கறண்டா..
மாட்டியது அவனுக்கு. அதுதான் ஒரே..
===
நான்காமாண்டு.. மத்தியில்...
ஹாய் மதன், இன்னிக்கி எம்.ஜி.எம்.முக்கு போலாம்னு சொல்லியிருக்கா. நீயும் வந்து ஒன்னோட ஒப்பினியன சொல்றா.
டேய். படிக்கத உட்டுட்டு எம்.ஜி.எம்னு சுத்தற? சரி வர்றேன். எனக்குதான் ஒண்ணுமில்லன்னு ஆகிப்போச்சு. உனக்காவது ஒண்ணு மாட்டுதான்னு பாப்பம்.
தேங்க்ஸ்டா. நீ மொதல்லயே போயிடு.
சரி சரி ஒழுங்கா வந்து சேரு. அங்க இங்கன்னு நடுவுலயே கழண்டுக்காதே. சொல்லிட்டேன்.
ராம் எம்.ஜி.எம்.மில் காத்திருந்தான்.
===
ஹாய் ராம். திஸ் இஸ் ராதா. - மதன்.
ஹாய்... - ராதா.
ராதா? திக்கென்றது ராமுக்கு. திரும்பிப்பார்த்தால்.. ப்ரிடிஷ் கவுன்சில் கன்ஃபர்ம் ஆனது.
ஹாய்... - ராம்.
ராதா ஒன்றும் இல்லாதது போல் இருந்தாள். ஏனென்றால் அவளுக்கு அப்போது ஒன்றும் இல்லையே.. ராமுக்குத்தான் ஒன்றும் புரியவில்லை.
====
ஹாய்... பழக்கமான இந்தக் குரல் அவனை மீண்டும் இங்கே அழைத்து வந்தது.
ஹாய் மதன்... ஹவ் ஆர் யூ? ஹவ் இஸ் ராதா?
வீ ஆல் ஆர் டூயிங் வெல். வா வா. ஏண்டா. அமெரிக்கா போனா தமிழ்ல பேச மாட்டியா.
அட நீ வேற. அங்க தடுக்கி விழுந்தா தமிழனுங்கதான். தமிழ்ல பேசிப்பேசி இங்கிலீஷ் மறந்துடுச்சுன்னுதான் இங்க இப்படி பேசறேன். சரி வீட்டுக்குப் போலாமா?
ஷ்யூர்.
====
ஹாய் ராதா .. ஹவ் ஆர் யூ மை டார்லிங்.. என்றவாறே ராதாவைத்தூக்கி அழுத்தமாக ஒரு முத்தத்தைக் கொடுத்தான்.
நைஸ் அங்கிள்.. தேங்க்யூ.. ராதா எப்படியிருக்கா- என்றாள் மழலை கலந்த மொழியில் ராதா. மதனின் மகள்.
ம். ரொம்ப நல்லாயிருக்கா. இப்ப ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டா. பேசறயா. என்று சொல்லி செல்லினான் ராம். மறுமுனையில் அவன் மகள் ராதா.
ஹாய்... ராதா. நான் ராதா பேசறேன்..
மறுமுனையிலும் ஹாய் கேட்டிருக்க வேண்டும்..
இங்கேயும் "ஒரே"
இட்ஸ் ஓக்கே.. என்ற பதில் பார்வையுடன் திரும்பி நடந்தான். நடந்தவனின் நினைவுகள் கடந்தகாலத்தை அசை போட்டன. ஹாய்.. இந்த ஒரு வார்த்தைதானே....
====
ஹாய்... கல்லூரியின் முதல் நாளில் தோழமையுடன் கேட்ட ஒலி அவனுக்குக் கல்லூரியைப் பற்றிய அறிவுறுத்தல்களிலிருந்து மாறுபட்டிருந்ததை எண்ணி வியந்தவாறே திரும்பிப்பார்த்தான், அந்தப் பார்வை அவன் வாழ்க்கையையே திருப்பிப்போடும் என்பதை அறியாமல்.
ஹாய்.. என் பேர் மதன். நைஸ் டு மீட் யூ. உன் பேரத்தெரிஞ்சுக்கலாமா.
ஹாய். ஐ ஆம் ராம். நைஸ் டு மீட் யூ டூ. நான் இ.சி.இ. நீ?
மி டூ.
ரொம்ப நல்லதாப்போச்சு. இங்க ராக்கிங் அதிகம்னாங்களே..
இல்ல.இல்ல. இது ஸ்கூல் மாதிரி போகப் போகத் தெரிஞ்சிப்ப.
இப்படியாகத் துவங்கியது, ஹாஸ்டலில் ஒரே ரூம் கிடைத்து, ஒரே பைக்கில் திரிந்து,.. எல்லாம் ஒரே ஒரே...
"ஒரே"வில் இருவருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் எதிர்ப்பார்க்காத ஒன்றும் ஒரேவாக வந்த போது...
====
மூன்றாமாண்டு இறுதியில்...
ஹாய் ராம்... இன்னிக்கு என்ன ஆச்சி தெரியுமா.- மதன் ஆர்வமுடன்
பெத்தாச்சியா, படையாச்சியா? - ராம்.
நக்கலா.. கேள்டா. ப்ரிடிஷ் கவுன்சில்லருந்து வெளிய வந்தேனா. அப்ப ஒரு ஃபிகர்டா. நான் கனவுல என்ன நெனச்சிக்கிட்டிருந்தேனோ அப்படியே.. வந்து ஹாய்னு சொல்லி என்கிட்ட டைம் கேக்கறா..
அவ டைம் பேட்னு இதுலேருந்தே தெரியுதே..
அடிங்.. கேள்றா. அப்படியே டெவலப் ஆகி.. ஒரு இதுவாயிருச்சிடா. நீ என்ன சொல்ற. அதுவாயிருந்தா கன்டினு பண்ணலாங்கிறியா..
டேய்.. நீ சென்னைக்குப் புதுசுடா.. இதெல்லாம் டைம் பாஸ் வேல. நீ ஒழுங்கா படிக்கிற வேலையப் பாரு..
பொறாமடா ஒனக்கு. ஒண்ணு ஒனக்கும் மாட்டும் போது வெச்சிக்கறண்டா..
மாட்டியது அவனுக்கு. அதுதான் ஒரே..
===
நான்காமாண்டு.. மத்தியில்...
ஹாய் மதன், இன்னிக்கி எம்.ஜி.எம்.முக்கு போலாம்னு சொல்லியிருக்கா. நீயும் வந்து ஒன்னோட ஒப்பினியன சொல்றா.
டேய். படிக்கத உட்டுட்டு எம்.ஜி.எம்னு சுத்தற? சரி வர்றேன். எனக்குதான் ஒண்ணுமில்லன்னு ஆகிப்போச்சு. உனக்காவது ஒண்ணு மாட்டுதான்னு பாப்பம்.
தேங்க்ஸ்டா. நீ மொதல்லயே போயிடு.
சரி சரி ஒழுங்கா வந்து சேரு. அங்க இங்கன்னு நடுவுலயே கழண்டுக்காதே. சொல்லிட்டேன்.
ராம் எம்.ஜி.எம்.மில் காத்திருந்தான்.
===
ஹாய் ராம். திஸ் இஸ் ராதா. - மதன்.
ஹாய்... - ராதா.
ராதா? திக்கென்றது ராமுக்கு. திரும்பிப்பார்த்தால்.. ப்ரிடிஷ் கவுன்சில் கன்ஃபர்ம் ஆனது.
ஹாய்... - ராம்.
ராதா ஒன்றும் இல்லாதது போல் இருந்தாள். ஏனென்றால் அவளுக்கு அப்போது ஒன்றும் இல்லையே.. ராமுக்குத்தான் ஒன்றும் புரியவில்லை.
====
ஹாய்... பழக்கமான இந்தக் குரல் அவனை மீண்டும் இங்கே அழைத்து வந்தது.
ஹாய் மதன்... ஹவ் ஆர் யூ? ஹவ் இஸ் ராதா?
வீ ஆல் ஆர் டூயிங் வெல். வா வா. ஏண்டா. அமெரிக்கா போனா தமிழ்ல பேச மாட்டியா.
அட நீ வேற. அங்க தடுக்கி விழுந்தா தமிழனுங்கதான். தமிழ்ல பேசிப்பேசி இங்கிலீஷ் மறந்துடுச்சுன்னுதான் இங்க இப்படி பேசறேன். சரி வீட்டுக்குப் போலாமா?
ஷ்யூர்.
====
ஹாய் ராதா .. ஹவ் ஆர் யூ மை டார்லிங்.. என்றவாறே ராதாவைத்தூக்கி அழுத்தமாக ஒரு முத்தத்தைக் கொடுத்தான்.
நைஸ் அங்கிள்.. தேங்க்யூ.. ராதா எப்படியிருக்கா- என்றாள் மழலை கலந்த மொழியில் ராதா. மதனின் மகள்.
ம். ரொம்ப நல்லாயிருக்கா. இப்ப ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டா. பேசறயா. என்று சொல்லி செல்லினான் ராம். மறுமுனையில் அவன் மகள் ராதா.
ஹாய்... ராதா. நான் ராதா பேசறேன்..
மறுமுனையிலும் ஹாய் கேட்டிருக்க வேண்டும்..
இங்கேயும் "ஒரே"
Thursday, June 25, 2009
லவ் ஆல் (உரையாடல் போட்டிக்கான சிறுகதை)
நகரின் மையமான சாலையில் அமைந்துள்ள புதிய கட்டிடத்தை நீங்கள் அந்த வழியாகச் செல்லும் போது ஒரு முறையாவது பார்த்திருப்பீர்கள். அந்தக் கட்டிடத்தில் கம்பெனி இருக்கிறதென்பதே ஒரு மிகப் பெரிய அட்ராக்ஷன். அப்படித்தான் ராகவனுடைய கம்பெனிக்கும் கிடைத்தது. கம்பெனியின் பெயர், அந்த கட்டிடத்தின் பெயர் எழுதிவிட்டால் போதும். யாரும் வந்துவிடுவார்கள். எப்போதும் விறுவிறுப்புடனும் சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் இருப்பது கம்பெனி, கட்டிடம், ராகவன் ஆகியோரின் ஸ்பெஷாலிட்டி.
====
அன்று வழக்கம் போல் படு டென்ஷனான நாள். நாளை தேவைப்படுவதை நேற்றே வேண்டுமென்று இன்று தலைமையலுவலகத்திலிருந்து வந்த மெயில் எல்லாரையும் பம்பரமாகச் சுழற்றியது.
"அருண், எஞ்சினீரிங்க்லருந்து அந்த ஸ்பெக் ஷீட் ஃபில் பண்ணி வந்துருச்சா?"
"அருண், அக்கவுன்ட்ஸ்ல பட்ஜெட் வேரியன்ஸ் அனலசிஸ் பண்ணிட்டாங்களா?"
"அருண், கையோட மார்க்கெட்டிங் அப்டேட் குடுங்கப்பான்னு கேட்டா அல்வாதான் குடுக்குறாங்க. போய் உடனே வாங்கிட்டுவா"
இப்படியாக சாட்டையைச் சுழற்றிக் கொண்டிருந்தான் ராகவன். வயது 36 இருக்கலாம். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை டை அடிக்கிறான். முடி வளர்வது நின்றுவிட்டதோ என்ற கவலை உண்டு. இப்போதெல்லாம் சலூனுக்குப் போகும்போது லைட்டா ட்ரிம் பண்ணுங்க என்றுதான் சொல்வான். பத்து வருடங்களுக்கு முன்பு, ஃபுல்லா ஷார்ட் பண்ணிடுங்க என்று சொல்பவன்.
செல்போன் சிணுங்கியது. ப்ச் என்றவாறே எடுத்தவன், "குட் மார்னிங்க் சார். இன்னும் ஆஃப் அன் அவர்ல உங்க இன்பாக்சுக்கு வந்துடும் சார்."
"...."
" ஹி.ஹி.. இங்க இப்பதான் பவர் வந்து சிஸ்டம்லாம் பூட் ஆயிட்டிருக்கு. அதனாலதான் டிலே. "
"..."
"அதெல்லாம் இல்ல சார். நெஜமாவே. இவ்ளோ பெரிய பில்டிங்க்னுதான் பேரு. மெயின்டனன்ஸ் டீமுக்கு காட்டமா ஒரு மெய்ல் போட்டிருக்கேன். உங்களுக்கும் காப்பி போட்டிருக்கேன்."
"..."
"என்னாது.. வர்லியா.. ஓ சாரி சார், மெய்ல் சர்வர் கூட டவுன் தான். இப்ப அனுப்பிச்சிடுறேன்"
"..."
"ஆமா சார். டேட்டாதான்"
"...."
"ஓகே சார். டெஃபனிட்லி"
"...." (டொக்)
"தேங்க்ஸ்" என்று வைத்தவன் வாயிலிருந்து "உஃப்" என்ற ஒலி முத்தாய்ப்பாகக் கேட்டது.
சொன்னது போல் அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ரிப்போர்ட்கள் சென்றுவிட, அடுத்த சுழலுக்குத் தயாரானது கம்பெனி.
====
லஞ்ச் ரூமில் எல்லாரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
"ஒரே ரோதனையாப் போச்சுப்பா. ராகவா, இதுக்கு ஏதாவது வழி பண்ண மாட்டியா?" அருண் கேட்டான்.
"..." மவுனமும் புன் சிரிப்பும் கலந்த பதில்தான் வந்தது ராகவனிடமிருந்து.
====
"ஹலோ, மதுரை?, நான் ராகவன் ரீஜினல் ஆஃபீஸ்லருந்து, கலாவுக்குக் கனெக்ட் பண்ணுங்க"
"கலா எப்படியிருக்கீங்க? செல் ஃபோன் ஆஃப்ல இருக்கு. எனி பிராப்ளம்?"
"..."
"ஓக்கே. ஓக்கே. சாரி. பட் அர்ஜன்ட் ரிகுயர்மென்ட் ஃப்ரம் ஹெச்.ஓ. ஐ அம் ஹெல்ப்லெஸ். உடனே பண்ணி அனுப்புங்க. மெய்ல் அனுப்பியிருக்கேன். இன்ஃபாக்ட் இதை நேத்தே நீங்க அனுப்புவீங்கன்னு எதிர்பார்த்தேன். இனிமே கொஞ்சம் ப்ரோ ஆக்டிவா இருந்துக்குங்க".
"...."
"அதெப்படிங்க, டேட்டா கேட்டா மட்டும் சர்வர் டவுன் ஆகும், பவர் கட் ஆகும்? இந்த ப்ராப்ளம்லாம் இருக்கக் கூடாதுன்னுட்டுதானே, பெரிய புது பில்டிங்க்ல ஆஃபீஸ் புடிச்சது?"
"..."
"இந்தக் கதையெல்லாம் வாணாம். எனக்கு ஒரு மெய்லும் வர்ல"
"..."
"தட்ஸ் யுவர் பிராப்ளம். முடிச்சி அனுப்பிச்சுட்டு, ஒரு தடவ ஃபோன் பண்ணுங்க. நான் ஓக்கே சொன்னதும் கெளம்பிடலாம். பட் உங்க அதர் காண்டாக்ட் நம்பரக் கொடுங்க. ஐ வில் ட்ரை டு அவாய்ட் டிஸ்டர்பிங்க் யூ அஸ் ஃபார் அஸ் பாசிபிள்"
"..."
"ஓகே. தாங்க்ஸ். பை." மறுபடியும் ஒரு "உஃப்"
"ரிப்போர்ட் கேட்டா கத கதயா சொல்றாப்பா" அருணிடம் சொல்லியது ராகவன்தான்.
====
மாலை அலுவலகத்தின் கேம்ஸ் ரூமில் டேபிள் டென்னிஸ் ஆட வந்திருந்தான் ராகவன். கூட அருண்.
"தாங்க்ஸ் பா. எப்படியோ மதுரைலருந்து வாங்கி கொடுத்துட்ட. அந்தம்மா நாளைக்குன்னு சொன்னதும் ரொம்ப டென்ஷனாயிட்டேன். இப்ப ஹெச். ஓக்கு அனுப்பனதுதார் ரிலீஃபா இருக்குது. ஏம்பா எத கேட்டாலும் பிராஞ்ச்ல உடனே கொடுக்க மாட்றாங்க?"
"சரி சரி அதான் முடிஞ்சிடிச்சில்ல. வா. சர்வீஸ் போடு. லவ் ஆல்"
"ஓகே. லவ் ஆல்..." டொக். டொக். டொக். டொக்....
பந்து இங்கும் அங்கும் வந்து போய்க்கொண்டிருந்தது.
====
அன்று வழக்கம் போல் படு டென்ஷனான நாள். நாளை தேவைப்படுவதை நேற்றே வேண்டுமென்று இன்று தலைமையலுவலகத்திலிருந்து வந்த மெயில் எல்லாரையும் பம்பரமாகச் சுழற்றியது.
"அருண், எஞ்சினீரிங்க்லருந்து அந்த ஸ்பெக் ஷீட் ஃபில் பண்ணி வந்துருச்சா?"
"அருண், அக்கவுன்ட்ஸ்ல பட்ஜெட் வேரியன்ஸ் அனலசிஸ் பண்ணிட்டாங்களா?"
"அருண், கையோட மார்க்கெட்டிங் அப்டேட் குடுங்கப்பான்னு கேட்டா அல்வாதான் குடுக்குறாங்க. போய் உடனே வாங்கிட்டுவா"
இப்படியாக சாட்டையைச் சுழற்றிக் கொண்டிருந்தான் ராகவன். வயது 36 இருக்கலாம். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை டை அடிக்கிறான். முடி வளர்வது நின்றுவிட்டதோ என்ற கவலை உண்டு. இப்போதெல்லாம் சலூனுக்குப் போகும்போது லைட்டா ட்ரிம் பண்ணுங்க என்றுதான் சொல்வான். பத்து வருடங்களுக்கு முன்பு, ஃபுல்லா ஷார்ட் பண்ணிடுங்க என்று சொல்பவன்.
செல்போன் சிணுங்கியது. ப்ச் என்றவாறே எடுத்தவன், "குட் மார்னிங்க் சார். இன்னும் ஆஃப் அன் அவர்ல உங்க இன்பாக்சுக்கு வந்துடும் சார்."
"...."
" ஹி.ஹி.. இங்க இப்பதான் பவர் வந்து சிஸ்டம்லாம் பூட் ஆயிட்டிருக்கு. அதனாலதான் டிலே. "
"..."
"அதெல்லாம் இல்ல சார். நெஜமாவே. இவ்ளோ பெரிய பில்டிங்க்னுதான் பேரு. மெயின்டனன்ஸ் டீமுக்கு காட்டமா ஒரு மெய்ல் போட்டிருக்கேன். உங்களுக்கும் காப்பி போட்டிருக்கேன்."
"..."
"என்னாது.. வர்லியா.. ஓ சாரி சார், மெய்ல் சர்வர் கூட டவுன் தான். இப்ப அனுப்பிச்சிடுறேன்"
"..."
"ஆமா சார். டேட்டாதான்"
"...."
"ஓகே சார். டெஃபனிட்லி"
"...." (டொக்)
"தேங்க்ஸ்" என்று வைத்தவன் வாயிலிருந்து "உஃப்" என்ற ஒலி முத்தாய்ப்பாகக் கேட்டது.
சொன்னது போல் அடுத்த அரை மணி நேரத்தில் அந்த ரிப்போர்ட்கள் சென்றுவிட, அடுத்த சுழலுக்குத் தயாரானது கம்பெனி.
====
லஞ்ச் ரூமில் எல்லாரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
"ஒரே ரோதனையாப் போச்சுப்பா. ராகவா, இதுக்கு ஏதாவது வழி பண்ண மாட்டியா?" அருண் கேட்டான்.
"..." மவுனமும் புன் சிரிப்பும் கலந்த பதில்தான் வந்தது ராகவனிடமிருந்து.
====
"ஹலோ, மதுரை?, நான் ராகவன் ரீஜினல் ஆஃபீஸ்லருந்து, கலாவுக்குக் கனெக்ட் பண்ணுங்க"
"கலா எப்படியிருக்கீங்க? செல் ஃபோன் ஆஃப்ல இருக்கு. எனி பிராப்ளம்?"
"..."
"ஓக்கே. ஓக்கே. சாரி. பட் அர்ஜன்ட் ரிகுயர்மென்ட் ஃப்ரம் ஹெச்.ஓ. ஐ அம் ஹெல்ப்லெஸ். உடனே பண்ணி அனுப்புங்க. மெய்ல் அனுப்பியிருக்கேன். இன்ஃபாக்ட் இதை நேத்தே நீங்க அனுப்புவீங்கன்னு எதிர்பார்த்தேன். இனிமே கொஞ்சம் ப்ரோ ஆக்டிவா இருந்துக்குங்க".
"...."
"அதெப்படிங்க, டேட்டா கேட்டா மட்டும் சர்வர் டவுன் ஆகும், பவர் கட் ஆகும்? இந்த ப்ராப்ளம்லாம் இருக்கக் கூடாதுன்னுட்டுதானே, பெரிய புது பில்டிங்க்ல ஆஃபீஸ் புடிச்சது?"
"..."
"இந்தக் கதையெல்லாம் வாணாம். எனக்கு ஒரு மெய்லும் வர்ல"
"..."
"தட்ஸ் யுவர் பிராப்ளம். முடிச்சி அனுப்பிச்சுட்டு, ஒரு தடவ ஃபோன் பண்ணுங்க. நான் ஓக்கே சொன்னதும் கெளம்பிடலாம். பட் உங்க அதர் காண்டாக்ட் நம்பரக் கொடுங்க. ஐ வில் ட்ரை டு அவாய்ட் டிஸ்டர்பிங்க் யூ அஸ் ஃபார் அஸ் பாசிபிள்"
"..."
"ஓகே. தாங்க்ஸ். பை." மறுபடியும் ஒரு "உஃப்"
"ரிப்போர்ட் கேட்டா கத கதயா சொல்றாப்பா" அருணிடம் சொல்லியது ராகவன்தான்.
====
மாலை அலுவலகத்தின் கேம்ஸ் ரூமில் டேபிள் டென்னிஸ் ஆட வந்திருந்தான் ராகவன். கூட அருண்.
"தாங்க்ஸ் பா. எப்படியோ மதுரைலருந்து வாங்கி கொடுத்துட்ட. அந்தம்மா நாளைக்குன்னு சொன்னதும் ரொம்ப டென்ஷனாயிட்டேன். இப்ப ஹெச். ஓக்கு அனுப்பனதுதார் ரிலீஃபா இருக்குது. ஏம்பா எத கேட்டாலும் பிராஞ்ச்ல உடனே கொடுக்க மாட்றாங்க?"
"சரி சரி அதான் முடிஞ்சிடிச்சில்ல. வா. சர்வீஸ் போடு. லவ் ஆல்"
"ஓகே. லவ் ஆல்..." டொக். டொக். டொக். டொக்....
பந்து இங்கும் அங்கும் வந்து போய்க்கொண்டிருந்தது.
Friday, March 13, 2009
எத்திராஜ், ஸ்டெல்லா மேரீஸ், காயிதே மில்லத் மற்றும் நான்
வழக்கம் போல சுற்றிக் கொண்டிராமல் நேரடியாகவே விஷயத்திற்கு வந்துவிடுகிறேன். இதைப் படித்தபின் இதுதானா விஷயம் என்று ஆச்சரியக் குறியும், ஸ்மைலியும் போடலாமே ஒழிய, இதுதானா விஷயம் என்று கேள்விக் குறியோ, அழுகை ஸ்மைலியோ போடக்கூடாது என்ற விஷயத்தையும் தெளிவு படுத்த விரும்புகிறேன். (ஆஹா.. விஷயத்தைக் கூறாமலேயே முதல் பாராவை முடிப்பதில்தான் எத்தனை திருப்தி!!!)
சரி விஷயத்திற்கு வருகிறேன். அப்போது நான் சி.ஏ. படித்துக் கொண்டிருந்தேன். மற்ற ப்ரொஃபஷனல் கோர்ஸ்களைப் போலல்லாமல், சி.ஏ.வை ஆடிட்டரிடம் வேலை செய்து கொண்டே படிக்க வேண்டும். இப்படி வேலை செய்யாமல் சில பேர் பேப்பரில் மட்டும் சர்டிஃபிகேட் வாங்கி விடுவார்கள்.இவர்களை 'டம்மி ஆர்டிகிள்ஸ்' என்று அழைப்போம். இவர்கள் படித்துக் கொண்டேஏஏஏஏஏ இருப்பார்கள். ஏன் இங்கே இழுக்கிறேன் என்றால், சி.ஏ. தேர்வில் கேட்கப்படும் சில கேள்விகள் ப்ராக்டிகலான விஷயங்கள் சம்பந்தப் பட்டவை. ஆகவே டம்மி ஆட்களெல்லாம் தேர்வில் பம்மித்தான் ஆகவேண்டும்.
சரி விஷயத்திற்கு வருகிறேன். இப்படிப்பட்ட சி.ஏ.வில் சம்பந்தாசம்பந்தமில்லாத சப்ஜக்ட் ஒன்று உண்டு. அதுதான் ஆபரேஷனல் ரிசர்ச். ஆபரேஷனை ரிசர்ச் செய்து என்ன கிழிக்கப் போகிறோம் என்று தெரியாத நிலையில் அந்த சப்ஜக்ட் வந்து மாட்டியது. இந்த மாதிரியான மூளைக்கு வேலை கொடுக்கும் வேலை வேண்டாமென்று சி.ஏ.விற்கு வந்தால் இங்கேயும் அது வந்து ஜிங்கு ஜிங்கென்று ஆடிக்கொண்டிருக்கிறது. என்ன செய்வது. விதி வலியதல்லவா. என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது.
சரி விஷயத்திற்கு வருகிறேன். இறங்கிவிட்ட பிறகு யோசிக்க முடியாதே. எப்படியாவது முடித்துவிடவேண்டும். இப்படிப்பட்ட ஆபரேஷன் ரிசர்ச் புத்தகத்தை ஸ்கேன் செய்து கொண்டிருந்தால் அதில் ஒரு பகுதி பெர்ட் & சி.பி.எம். என்னடா இது ஆஸ்திரேலிய நகரும், அரசியல் கட்சி பெயரும் போல் இருக்கிறதே என்று பார்த்தால் அது ப்ரோக்ராம் எவால்யூவேஷன் அண்ட் ரிவ்யூ டெக்னிக் மற்றும் க்ரிடிகல் பாத் மெத்தட் என்று சொன்னார்கள்.
சரி விஷயத்திற்கு வருகிறேன். பெயரைத் தெரிந்து கொள்வதற்கே மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியாகிவிட்டது. மற்றதை எங்கே வாங்குவது? இதை வேறு, சாய்சில் விடமுடியாத படி கேட்கிறார்கள். பயங்கர குழப்பமாக இருந்தது. அப்போதுதான் ஆபத்பாந்தவனாக சீனியர் ஒருவன் கை கொடுத்தான். அதுதான் இந்தத் தலைப்பு. அவன் சொன்னதை உங்களுக்குக் கீழே வசனமாகக் கொடுத்துள்ளேன்.
நான்: டேய் (இவன் கொஞ்சம் ஜூனியர் சீனியர். எனவே 'டேய்'), இத எப்படிறா படிச்சு பாஸ் பண்ண? இது இருக்குன்னு மொதல்லயே தெரிஞ்சிருந்துதுன்னா இந்த பக்கமே வந்திருக்க மாட்டேன்.
சீனியர்: இதெல்லாம் ஜுஜுபிடா.
நான்: மொதல்லயே பாஸ் பண்ணிட்ட. நீ ஏன் சொல்லமாட்ட?
சீனியர்: அதான் எங்கிட்ட வந்துட்ட இல்ல. நான் கிளியர் பண்றேன். இப்ப நீ எங்க இருக்க.
நான்: இங்க தான் இருக்கேன்.
சீனியர்: டேய். ஒழுங்கா பதில் சொன்னா சரியா கத்து தருவேன். இந்த மாதிரி டார்ச்சர் பண்ணா, டரியலாயிடுவ.
நான்: இல்லண்ணா. இனிமே சரியா பதில் சொல்றேன். வேப்பேரில இருக்கேன்.
சீனியர்: அது. இப்படியே மெய்ன்டெய்ன் பண்ணு. நான் எங்க இருக்கேன்.
நான்: (இது கூட தெரியாம இருக்க. உங்கிட்ட வந்து கேக்க வேண்டியிருக்கு). நீயும் வேப்பேரிலதான் இருக்க.
சீனியர்: குட். இப்ப சி.ஏ. கிளாஸ் எங்க நடக்குது.
நான்: (அது எங்க நடக்குது. ஓடுதுல்ல. நம்மளால அதுங்கூட ஓட முடியாமத்தானே உன்னத் தேடி வந்தது) ராயப்பேட்டைல.
சீனியர்: இங்கேருந்து ராயப்பேட்டைக்கு எப்படி போலாம்.
நான்: (ஒழுங்கா போய்ச் சேரணும்னா, டிரஸ் போட்டுட்டு தான் போகணும். இல்லைன்னா கீழ்பாக்கத்துக்கு டைவர்ட் பண்ணிருவாங்களே) நெறய வழி இருக்கு.
சீனியர்: ஒரு ரெண்டு வழி சொல்லு.
நான்: எக்மோர் போயி உட்லன்ட்ஸ்,பைலட் வழியா ராயப்பேட்டை போலாம். சேத்பட் போயி நுங்கம்பாக்கம் ஹை ரோட் ராதாகிருஷ்ணன் ரோடு வழியாவும் போலாம்.
சீனியர்: இதுவரைக்கும் கரைக்டா சொல்லியிருக்கே. இப்ப ஈசியான கேள்விகேக்கறேன். இந்த ரூட்ல இருக்குற லேடீஸ் காலேஜ் பேரெல்லாம் சொல்லு.
நான்: (எத்திராஜ், காயிதே மில்லத், டபள்யூ.சி.சி., டி.ஜி. வைஷ்ணவ், ஸ்டெல்லா மேரீஸ்) லேடீஸ் காலேஜா, அப்படின்னா?
சீனியர்: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.
நான்: சரிண்ணே.. சாரிண்ணே.. எத்திராஜ், காயிதே மில்லத், டபள்யூ.சி.சி., டி.ஜி. வைஷ்ணவ், ஸ்டெல்லா மேரீஸ்.
சீனியர்: அது. இன்னோருவாட்டி இப்படி பண்ணே, அங்கயே கட் பண்ணிருவேன். அப்புறம் பாதி சக்கர வியூகம் கேட்ட அபிமன்யு கதையாயிடும்.
நான்: (சக்கரவியூகம்.. பேர் நல்லாயிருக்கே. தேவைப்படும் போது யூஸ் பண்ணிக்கலாம்). டேய். சீனியராச்சேன்னு மதிச்சு வந்து கேட்டா ஓவரா போற. நீ சொல்ல மாட்டேன்னா சொல்லு, நமக்கு சேச்சிங்க நெறைய இருக்காங்க. நான் அங்க போய்க்கிறேன்.
சீனியர்: கண்ணா இதுக்கெல்லாம் கோவிச்சுக்கலாமாடா. சரி சரி சொல்லித்தர்றேன். ட்ராக்க மாத்தாத. இந்த ரூட்ல இருக்குற லேடீஸ் காலேஜ் பேரெல்லாம் சொல்லு.
நான்: (இதென்ன விஷ்ணு சகஸ்ர நாமமா?) எத்திராஜ், காயிதே மில்லத், டபள்யூ.சி.சி., டி.ஜி. வைஷ்ணவ், ஸ்டெல்லா மேரீஸ்.
சீனியர்: எந்த ரூட்ல எந்த எந்த காலேஜ் இருக்கு.
நான்: (எங்க வர்றான் இவன்? ஒரு வேள நம்மள வார்றானோ). எக்மோர் ரூட்ல எத்திராஜ், காயிதே மில்லத். சேத்பட் ரூட்ல டபள்யூ.சி.சி, டி.ஜி.வைஷ்ணவ், ஸ்டெல்லா மேரீஸ் இருக்கு.
சீனியர்: குட். நல்லா வருவேடா. இப்ப நான் சேத்பட் ரூட்ல போறேன். நீ எக்மோர் ரூட்ல போற.
நான்: ஒத்துக்க மாட்டேன். நீ எக்மோர் ரூட்ல போ. (எனக்கு காயிதே மில்லத். உனக்கு ஸ்டெல்லா மேரீஸா)
சீனியர்: ஒரு பேச்சுக்கு சொன்னேன்டா. சரி அப்படியே வச்சுக்குவோம். இப்ப ரெண்டு பேரும் ஸ்டெல்லா மேரீஸ் கிட்ட மீட் பண்ணனும்னா எவ்வளவு நேரம் ஆகும்.
நான்: நீ சீக்கிரம் போயிடுவ. எனக்கு லேட்டாகும்.
சீனியர்: ஏன் லேட்டாகும்.
நான்: ஜெமினி சிக்னல் க்ராஸ் பண்ணனுமே.
சீனியர்: நான் சீக்கிரம் போயிட்டாலும் நீ வர்ற வரைக்கும் என்னால ஒண்ணும் பண்ண முடியாது இல்லயா. அதனால நீ வர்ற ரூட்தான் க்ரிடிகல். இதுதான் க்ரிடிகல் பாத். இதையே கொஞ்சம் டெவலப் பண்ணா பெர்ட். அவ்வளவுதான். புரிஞ்சுதா.
நான்: (அதுசரி. நீ தனியா என்னைக்கு பண்ணியிருக்க. கும்பல்ல கோவிந்தாதானே) சரிடா. இது கத்து குடுத்ததுக்காக இனிமே உன்ன டா போட்டு பேச மாட்டேன். சரியா.
சீனியர்: டேய் அப்படில்லாம் பண்ணி என்னைய பிரிச்சிராதடா.
=====
இப்படித்தான் நான் பெர்ட் சி.பி.எம் கற்றுக்கொண்டேன். இதுதான் எத்திராஜ், ஸ்டெல்லா மேரீஸ், காயிதே மில்லத் உடனான என் அனுபவம்.ப்ராக்கெட்டுக்குள் இருப்பதெல்லாம் நான் மனதில் நினைத்துக் கொண்டவை என்பதை குறிப்பிடவேண்டிய அவசியமில்லையல்லவா?
=====
இந்தக் கதை எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். மறக்காமல் தம்ஸ் அப்பிலும், தமிழிஷ் ஓட்டுப்பட்டையிலும் குத்திவிட்டு செல்லுங்கள்.
நன்றி.
சரி விஷயத்திற்கு வருகிறேன். அப்போது நான் சி.ஏ. படித்துக் கொண்டிருந்தேன். மற்ற ப்ரொஃபஷனல் கோர்ஸ்களைப் போலல்லாமல், சி.ஏ.வை ஆடிட்டரிடம் வேலை செய்து கொண்டே படிக்க வேண்டும். இப்படி வேலை செய்யாமல் சில பேர் பேப்பரில் மட்டும் சர்டிஃபிகேட் வாங்கி விடுவார்கள்.இவர்களை 'டம்மி ஆர்டிகிள்ஸ்' என்று அழைப்போம். இவர்கள் படித்துக் கொண்டேஏஏஏஏஏ இருப்பார்கள். ஏன் இங்கே இழுக்கிறேன் என்றால், சி.ஏ. தேர்வில் கேட்கப்படும் சில கேள்விகள் ப்ராக்டிகலான விஷயங்கள் சம்பந்தப் பட்டவை. ஆகவே டம்மி ஆட்களெல்லாம் தேர்வில் பம்மித்தான் ஆகவேண்டும்.
சரி விஷயத்திற்கு வருகிறேன். இப்படிப்பட்ட சி.ஏ.வில் சம்பந்தாசம்பந்தமில்லாத சப்ஜக்ட் ஒன்று உண்டு. அதுதான் ஆபரேஷனல் ரிசர்ச். ஆபரேஷனை ரிசர்ச் செய்து என்ன கிழிக்கப் போகிறோம் என்று தெரியாத நிலையில் அந்த சப்ஜக்ட் வந்து மாட்டியது. இந்த மாதிரியான மூளைக்கு வேலை கொடுக்கும் வேலை வேண்டாமென்று சி.ஏ.விற்கு வந்தால் இங்கேயும் அது வந்து ஜிங்கு ஜிங்கென்று ஆடிக்கொண்டிருக்கிறது. என்ன செய்வது. விதி வலியதல்லவா. என்னைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தது.
சரி விஷயத்திற்கு வருகிறேன். இறங்கிவிட்ட பிறகு யோசிக்க முடியாதே. எப்படியாவது முடித்துவிடவேண்டும். இப்படிப்பட்ட ஆபரேஷன் ரிசர்ச் புத்தகத்தை ஸ்கேன் செய்து கொண்டிருந்தால் அதில் ஒரு பகுதி பெர்ட் & சி.பி.எம். என்னடா இது ஆஸ்திரேலிய நகரும், அரசியல் கட்சி பெயரும் போல் இருக்கிறதே என்று பார்த்தால் அது ப்ரோக்ராம் எவால்யூவேஷன் அண்ட் ரிவ்யூ டெக்னிக் மற்றும் க்ரிடிகல் பாத் மெத்தட் என்று சொன்னார்கள்.
சரி விஷயத்திற்கு வருகிறேன். பெயரைத் தெரிந்து கொள்வதற்கே மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்கியாகிவிட்டது. மற்றதை எங்கே வாங்குவது? இதை வேறு, சாய்சில் விடமுடியாத படி கேட்கிறார்கள். பயங்கர குழப்பமாக இருந்தது. அப்போதுதான் ஆபத்பாந்தவனாக சீனியர் ஒருவன் கை கொடுத்தான். அதுதான் இந்தத் தலைப்பு. அவன் சொன்னதை உங்களுக்குக் கீழே வசனமாகக் கொடுத்துள்ளேன்.
நான்: டேய் (இவன் கொஞ்சம் ஜூனியர் சீனியர். எனவே 'டேய்'), இத எப்படிறா படிச்சு பாஸ் பண்ண? இது இருக்குன்னு மொதல்லயே தெரிஞ்சிருந்துதுன்னா இந்த பக்கமே வந்திருக்க மாட்டேன்.
சீனியர்: இதெல்லாம் ஜுஜுபிடா.
நான்: மொதல்லயே பாஸ் பண்ணிட்ட. நீ ஏன் சொல்லமாட்ட?
சீனியர்: அதான் எங்கிட்ட வந்துட்ட இல்ல. நான் கிளியர் பண்றேன். இப்ப நீ எங்க இருக்க.
நான்: இங்க தான் இருக்கேன்.
சீனியர்: டேய். ஒழுங்கா பதில் சொன்னா சரியா கத்து தருவேன். இந்த மாதிரி டார்ச்சர் பண்ணா, டரியலாயிடுவ.
நான்: இல்லண்ணா. இனிமே சரியா பதில் சொல்றேன். வேப்பேரில இருக்கேன்.
சீனியர்: அது. இப்படியே மெய்ன்டெய்ன் பண்ணு. நான் எங்க இருக்கேன்.
நான்: (இது கூட தெரியாம இருக்க. உங்கிட்ட வந்து கேக்க வேண்டியிருக்கு). நீயும் வேப்பேரிலதான் இருக்க.
சீனியர்: குட். இப்ப சி.ஏ. கிளாஸ் எங்க நடக்குது.
நான்: (அது எங்க நடக்குது. ஓடுதுல்ல. நம்மளால அதுங்கூட ஓட முடியாமத்தானே உன்னத் தேடி வந்தது) ராயப்பேட்டைல.
சீனியர்: இங்கேருந்து ராயப்பேட்டைக்கு எப்படி போலாம்.
நான்: (ஒழுங்கா போய்ச் சேரணும்னா, டிரஸ் போட்டுட்டு தான் போகணும். இல்லைன்னா கீழ்பாக்கத்துக்கு டைவர்ட் பண்ணிருவாங்களே) நெறய வழி இருக்கு.
சீனியர்: ஒரு ரெண்டு வழி சொல்லு.
நான்: எக்மோர் போயி உட்லன்ட்ஸ்,பைலட் வழியா ராயப்பேட்டை போலாம். சேத்பட் போயி நுங்கம்பாக்கம் ஹை ரோட் ராதாகிருஷ்ணன் ரோடு வழியாவும் போலாம்.
சீனியர்: இதுவரைக்கும் கரைக்டா சொல்லியிருக்கே. இப்ப ஈசியான கேள்விகேக்கறேன். இந்த ரூட்ல இருக்குற லேடீஸ் காலேஜ் பேரெல்லாம் சொல்லு.
நான்: (எத்திராஜ், காயிதே மில்லத், டபள்யூ.சி.சி., டி.ஜி. வைஷ்ணவ், ஸ்டெல்லா மேரீஸ்) லேடீஸ் காலேஜா, அப்படின்னா?
சீனியர்: டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.
நான்: சரிண்ணே.. சாரிண்ணே.. எத்திராஜ், காயிதே மில்லத், டபள்யூ.சி.சி., டி.ஜி. வைஷ்ணவ், ஸ்டெல்லா மேரீஸ்.
சீனியர்: அது. இன்னோருவாட்டி இப்படி பண்ணே, அங்கயே கட் பண்ணிருவேன். அப்புறம் பாதி சக்கர வியூகம் கேட்ட அபிமன்யு கதையாயிடும்.
நான்: (சக்கரவியூகம்.. பேர் நல்லாயிருக்கே. தேவைப்படும் போது யூஸ் பண்ணிக்கலாம்). டேய். சீனியராச்சேன்னு மதிச்சு வந்து கேட்டா ஓவரா போற. நீ சொல்ல மாட்டேன்னா சொல்லு, நமக்கு சேச்சிங்க நெறைய இருக்காங்க. நான் அங்க போய்க்கிறேன்.
சீனியர்: கண்ணா இதுக்கெல்லாம் கோவிச்சுக்கலாமாடா. சரி சரி சொல்லித்தர்றேன். ட்ராக்க மாத்தாத. இந்த ரூட்ல இருக்குற லேடீஸ் காலேஜ் பேரெல்லாம் சொல்லு.
நான்: (இதென்ன விஷ்ணு சகஸ்ர நாமமா?) எத்திராஜ், காயிதே மில்லத், டபள்யூ.சி.சி., டி.ஜி. வைஷ்ணவ், ஸ்டெல்லா மேரீஸ்.
சீனியர்: எந்த ரூட்ல எந்த எந்த காலேஜ் இருக்கு.
நான்: (எங்க வர்றான் இவன்? ஒரு வேள நம்மள வார்றானோ). எக்மோர் ரூட்ல எத்திராஜ், காயிதே மில்லத். சேத்பட் ரூட்ல டபள்யூ.சி.சி, டி.ஜி.வைஷ்ணவ், ஸ்டெல்லா மேரீஸ் இருக்கு.
சீனியர்: குட். நல்லா வருவேடா. இப்ப நான் சேத்பட் ரூட்ல போறேன். நீ எக்மோர் ரூட்ல போற.
நான்: ஒத்துக்க மாட்டேன். நீ எக்மோர் ரூட்ல போ. (எனக்கு காயிதே மில்லத். உனக்கு ஸ்டெல்லா மேரீஸா)
சீனியர்: ஒரு பேச்சுக்கு சொன்னேன்டா. சரி அப்படியே வச்சுக்குவோம். இப்ப ரெண்டு பேரும் ஸ்டெல்லா மேரீஸ் கிட்ட மீட் பண்ணனும்னா எவ்வளவு நேரம் ஆகும்.
நான்: நீ சீக்கிரம் போயிடுவ. எனக்கு லேட்டாகும்.
சீனியர்: ஏன் லேட்டாகும்.
நான்: ஜெமினி சிக்னல் க்ராஸ் பண்ணனுமே.
சீனியர்: நான் சீக்கிரம் போயிட்டாலும் நீ வர்ற வரைக்கும் என்னால ஒண்ணும் பண்ண முடியாது இல்லயா. அதனால நீ வர்ற ரூட்தான் க்ரிடிகல். இதுதான் க்ரிடிகல் பாத். இதையே கொஞ்சம் டெவலப் பண்ணா பெர்ட். அவ்வளவுதான். புரிஞ்சுதா.
நான்: (அதுசரி. நீ தனியா என்னைக்கு பண்ணியிருக்க. கும்பல்ல கோவிந்தாதானே) சரிடா. இது கத்து குடுத்ததுக்காக இனிமே உன்ன டா போட்டு பேச மாட்டேன். சரியா.
சீனியர்: டேய் அப்படில்லாம் பண்ணி என்னைய பிரிச்சிராதடா.
=====
இப்படித்தான் நான் பெர்ட் சி.பி.எம் கற்றுக்கொண்டேன். இதுதான் எத்திராஜ், ஸ்டெல்லா மேரீஸ், காயிதே மில்லத் உடனான என் அனுபவம்.ப்ராக்கெட்டுக்குள் இருப்பதெல்லாம் நான் மனதில் நினைத்துக் கொண்டவை என்பதை குறிப்பிடவேண்டிய அவசியமில்லையல்லவா?
=====
இந்தக் கதை எப்படி இருந்தது என்று சொல்லுங்கள். மறக்காமல் தம்ஸ் அப்பிலும், தமிழிஷ் ஓட்டுப்பட்டையிலும் குத்திவிட்டு செல்லுங்கள்.
நன்றி.
Wednesday, February 11, 2009
சிம்ரனும் நானும்
இது சினிமா நட்சத்திரம் சிம்ரனைப் பற்றியது அல்ல என்று நீங்கள் நினைத்திருப்பீர்களேயானால் உங்கள் ஊகம் மிகச் சரியானதே.
===
ஒரு நாள் வழக்கம்போல் காலையில் வந்து உள்பெட்டி(இன்பாக்ஸ்)யைத் திறந்து அலசிக்கொண்டிருக்கும் போது இந்த மெயில் வந்தது
டியர் .... (என் பெயர்)
ஹோப் யு ஆர் டூயிங் ஃபைன். ஐ ஆம் சிம்ரன் ஜாய்ன்ட் ஆஸ் மார்கெடிங் எக்சிகுடிவ் இன் ஜலந்தர். ஐ நீட் ஃபாலோவிங் இன்ஃபோ.
. .......
(இப்படியெல்லாம் எழுதிவிட்டு கடைசியில்)
வித் லவ் அண்ட் ரிகார்ட்ஸ்,
சிம்ரன்
====
அவ்வளவுதாங்க மெயில். உடனே சிம்ரன் கேட்ட இன்ஃபர்மேஷனை கஷ்டப்பட்டு கலெக்ட் செய்துவிட்டு பதில் அனுப்ப டைப் செய்யும் போதுதான் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஆனாலும் இப்படி டைப் செய்துவிட்டேன்.
டியர் சிம்ரன்,
தேங்க்ஸ் ஃபார் யுவர் மெயில். வெல்கம் டு ..... (எங்க கம்பேனி பேர்) ஃபேமிலி. தி இன்ஃபோ இஸ் அட்டாச்டு ஹியர்வித்.
ப்ளீஸ் கீப் இன் டச் ஃபார் ஃபர்தர் இன்ஃபோ.
(எப்படி முடிப்பது? சரி சிம்ரனைப் போலவே முடித்து விடலாம் என்று)
வித் லவ் அண்ட் ரிகார்ட்ஸ்,
(என் பெயர்)
====
இப்படி ஆரம்பித்த மெயில் போக்குவரத்து ரொம்ப நாள் தொடர்ந்தது. கடைசியில் ஒரு நாள் ஆடிட்டுக்காக ஜலந்தர் போகவேண்டியிருந்தது. அங்கு வருவதாகத் தகவல் சொல்லிவிட்டு சென்றேன். சிம்ரன் சில தகவல்களைக் கேட்க அதையும் நேரில் கொண்டு வருவதாக மெயில் அனுப்பினேன்.
====
முதல் நாள் ப்ராஞ்சுக்குப் போனால் சிம்ரன் லீவாம். அது சரி நாம் தான் 10 நாள் இங்கே இருப்போமே. வேலை நடந்து கொண்டிருந்தது. அடுத்த நாள்.
====
அலுவலகம் வந்து ஆடிட் ரூமில் ஆடிட் செய்து கொண்டிருக்கும் போது ஒரு சிங்கர் (சிங் - பஞ்சாபி) வந்தார். ஆஜானுபாகுவான என்று சொல்வது சற்று குறைத்து மதிப்பிடுவதைப் போல் இருந்தார்.
"குடு மார்ணிங்க் சாஆஆஅர்." என்று பஞ்சாபியில் சொல்லி பலமாகக் கையைப் பிடித்து ஆட்டினார். ஒரு வழியாகக் கையை விடுவித்துக் கொண்டு "குட் மார்னிங்." என்றேன் வலியை மறைத்துக் கொண்டு.
"ஹவ் யூ ப்ராட் த இன்ஃபர்மேஷன்ஸ் சார்" என்று தொடர்ந்தார் பஞ்சாபியில்.
"வாட் இன்ஃபர்மேஷன்ஸ்?"
"த ஒன் ஐ ஆஸ்க்டு இன் தட் மெயில்"
"மெயில்? யூ ஆர்...." (ஆஹா... சின்ன பொறி தட்டியது மனதுக்குள்)
"சாரி சார். ஐ ஃபர்காட் டு இன்ட்ரொடியூஸ் மைசெல்ஃப். ஐ ஆம் சிம்ரன். சிம்ரஞ்சித்சிங் மான்" என்று மீண்டும் கையை நீட்டினார் ஆவலோடு.
நான் தமிழ்ப் பண்பாட்டைக் காக்கவும் என் கைகளைக் காக்கவும் இரு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தேன்.
====
டிஸ்கி:- 1. இது சிறுகதை என்று வகைப் படுத்தப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்.
2. இதன் மூலம் தெரிய வரும் கருத்து, சிங் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே பெயர்தான். கடைசியில் கவுர் என்று வந்தால் அது பெண். இல்லையென்றால் ஆண். உதாரணம் சிம்ரஞ்சித்சிங்க் கவுர் என்றால் பெண். சிம்ரஞ்சித்சிங்க் மான் என்றால் ஆண்.
===
ஒரு நாள் வழக்கம்போல் காலையில் வந்து உள்பெட்டி(இன்பாக்ஸ்)யைத் திறந்து அலசிக்கொண்டிருக்கும் போது இந்த மெயில் வந்தது
டியர் .... (என் பெயர்)
ஹோப் யு ஆர் டூயிங் ஃபைன். ஐ ஆம் சிம்ரன் ஜாய்ன்ட் ஆஸ் மார்கெடிங் எக்சிகுடிவ் இன் ஜலந்தர். ஐ நீட் ஃபாலோவிங் இன்ஃபோ.
. .......
(இப்படியெல்லாம் எழுதிவிட்டு கடைசியில்)
வித் லவ் அண்ட் ரிகார்ட்ஸ்,
சிம்ரன்
====
அவ்வளவுதாங்க மெயில். உடனே சிம்ரன் கேட்ட இன்ஃபர்மேஷனை கஷ்டப்பட்டு கலெக்ட் செய்துவிட்டு பதில் அனுப்ப டைப் செய்யும் போதுதான் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ஆனாலும் இப்படி டைப் செய்துவிட்டேன்.
டியர் சிம்ரன்,
தேங்க்ஸ் ஃபார் யுவர் மெயில். வெல்கம் டு ..... (எங்க கம்பேனி பேர்) ஃபேமிலி. தி இன்ஃபோ இஸ் அட்டாச்டு ஹியர்வித்.
ப்ளீஸ் கீப் இன் டச் ஃபார் ஃபர்தர் இன்ஃபோ.
(எப்படி முடிப்பது? சரி சிம்ரனைப் போலவே முடித்து விடலாம் என்று)
வித் லவ் அண்ட் ரிகார்ட்ஸ்,
(என் பெயர்)
====
இப்படி ஆரம்பித்த மெயில் போக்குவரத்து ரொம்ப நாள் தொடர்ந்தது. கடைசியில் ஒரு நாள் ஆடிட்டுக்காக ஜலந்தர் போகவேண்டியிருந்தது. அங்கு வருவதாகத் தகவல் சொல்லிவிட்டு சென்றேன். சிம்ரன் சில தகவல்களைக் கேட்க அதையும் நேரில் கொண்டு வருவதாக மெயில் அனுப்பினேன்.
====
முதல் நாள் ப்ராஞ்சுக்குப் போனால் சிம்ரன் லீவாம். அது சரி நாம் தான் 10 நாள் இங்கே இருப்போமே. வேலை நடந்து கொண்டிருந்தது. அடுத்த நாள்.
====
அலுவலகம் வந்து ஆடிட் ரூமில் ஆடிட் செய்து கொண்டிருக்கும் போது ஒரு சிங்கர் (சிங் - பஞ்சாபி) வந்தார். ஆஜானுபாகுவான என்று சொல்வது சற்று குறைத்து மதிப்பிடுவதைப் போல் இருந்தார்.
"குடு மார்ணிங்க் சாஆஆஅர்." என்று பஞ்சாபியில் சொல்லி பலமாகக் கையைப் பிடித்து ஆட்டினார். ஒரு வழியாகக் கையை விடுவித்துக் கொண்டு "குட் மார்னிங்." என்றேன் வலியை மறைத்துக் கொண்டு.
"ஹவ் யூ ப்ராட் த இன்ஃபர்மேஷன்ஸ் சார்" என்று தொடர்ந்தார் பஞ்சாபியில்.
"வாட் இன்ஃபர்மேஷன்ஸ்?"
"த ஒன் ஐ ஆஸ்க்டு இன் தட் மெயில்"
"மெயில்? யூ ஆர்...." (ஆஹா... சின்ன பொறி தட்டியது மனதுக்குள்)
"சாரி சார். ஐ ஃபர்காட் டு இன்ட்ரொடியூஸ் மைசெல்ஃப். ஐ ஆம் சிம்ரன். சிம்ரஞ்சித்சிங் மான்" என்று மீண்டும் கையை நீட்டினார் ஆவலோடு.
நான் தமிழ்ப் பண்பாட்டைக் காக்கவும் என் கைகளைக் காக்கவும் இரு கரம் கூப்பி வணக்கம் தெரிவித்தேன்.
====
டிஸ்கி:- 1. இது சிறுகதை என்று வகைப் படுத்தப்பட்டிருப்பதைக் கவனிக்கவும்.
2. இதன் மூலம் தெரிய வரும் கருத்து, சிங் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே பெயர்தான். கடைசியில் கவுர் என்று வந்தால் அது பெண். இல்லையென்றால் ஆண். உதாரணம் சிம்ரஞ்சித்சிங்க் கவுர் என்றால் பெண். சிம்ரஞ்சித்சிங்க் மான் என்றால் ஆண்.
Thursday, January 29, 2009
ஒருவன், இருத்திகள் (?!)
ஒரு ஊரில் ஒருவன் இருந்தான். மிக அழகானவன். அவன் சுற்றத்தார் அவனுக்கும் அவனைப் போலவே அழகான இன்னொருத்திக்கும் திருமணம் செய்து வைத்தனர். அவர்களது திருமண வாழ்வு மிக இனிமையானதாக இருந்தது. அவர்களைப் போல் அன்னியோன்னிய தம்பதிகள் இவ்வுலகத்தில் இல்லை என்பது போல் நடந்து கொண்டார்கள்.
யார் கண் பட்டதோ, அவர்கள் வாழ்க்கையில் ஒரு புயல் அடித்தது. ஆம் ஒரு பூவே அவர்கள் வாழ்க்கையில் புயலானது. ஒரு விழாவிற்கு அவர்கள் சென்ற போது அங்கே ஒரு ஆரணங்கு ஆடினாள். அவள் ஆட்டம் இவர்கள் ஆனந்த வாழ்வுக்கு ஆபத்தாய் அமைந்தது. அவன் தன் மனைவியைப் பிரிந்து ஆரணங்கின் மேல் மையல் கொண்டான்.
அவளோ அனவரதமும் அவனையே நினைத்திருந்தாள். விரலாபரணம் இடையாபரணமானது. உள்ளங்கவர் கள்வன் இவள் உள்ளத்தை உணரவில்லை. காலம் கனியும் என்று காத்திருந்தாள் காதற்பேதை. அவள் உறுதி காலத்தின் கோலத்தை மாற்றியது.
ஆடலரசியின் அழகில் மயங்கிய ஆண்மகன் விழித்தெழுந்தான் ஓர் நாள். அந்தோ பரிதாபம். அவன் விழித்தபோது இழப்பதற்கு ஒன்றுமில்லை அவனிடம். மீண்டு(ம்) வந்தான் அவளிடம். அவளோ அவன் செய்த தவற்றை நினைக்கக் கூட இல்லை. மணாளன் வந்ததால் மனம் மகிழ்ந்தாள். அவனைப் போற்றிப் புகழ்ந்தாள். ஆகா, இன்னா செய்தவன் நாணுமாறு நன்னயம் செய்து, ஒறுத்து விட்டாள் நங்கை. வள்ளுவன் வாக்குக்கு வாழ்வளித்த வனிதை.
ஊரார் தூற்றலைத் தாங்காத தலைவன் வெளியூர் செல்வோம் செல்வம் தேடி என்றான். மன்னவனின் சொல்லை மறந்தறியாப் பாவையுடன் சென்றான் மாநகர் நோக்கி.
சென்றவனின் கையில் செல்வமில்லை. கலங்கினான் காதலன். கால் கொலுசைக் கொடுத்துக் கை கொடுத்தாள் காரிகை. அதை விற்றுப் பணமாக்கச் சென்றான். ஆனால் பாவம், வந்தான் பிணமாக, திருடன் என்ற பழியோடு. அழுதாள், அரண்டாள் மங்கை நல்லாள். ஆயினும் என்ன மாண்டவர் மீள்வரோ.
அழுகை நீக்கினாள். ஆவேசம் கூட்டினாள். புகுந்தாள் மாநகர் வேந்தர் மாளிகையில் பொங்கு கடலென. ஆர்ப்பரித்தாள் ஆண்டவனைப் பார்த்து. நீதான் நீதிமானா? வள நாட்டின் காவலன் வழி மாறலாமா? காரிகையின் வாழ்வில் காலனாய் மாறலாமா? என்றாள். ஆண்டவன் ஆடிப் போனான். அய்யகோ என்றவன் அடங்கினான் அவனுள். அவன் அடிபற்றித் தொடர்ந்தாள் ஆண்டவன் தலைவி. அதோடு நின்றாளில்லை ஆரணங்கு. அழித்தாள் மாநகரை உருத்தெரியாமல். சென்றாள் மேற்கு நோக்கி. இருந்தாள் வடக்கு நோக்கி.
ஆங்கே ஆடலரசியோ இவர்கள் நிலை கேட்டு வெதும்பினாள். துறந்தாள் அனைத்தையும். தழுவினாள் தர்மத்தின் தாளை.
ஒருவன் ஒருத்தி என்பது மரபு. ஒருவன் இருத்தி என்பது மரபை மீறிய செயல். இதுதான் ஒருவன், இரு மகளிரின் காதை.
இதைத்தான் சற்றொப்ப 2000 வருடங்களுக்கு முன்பே காப்பியடித்து விட்டார் இளங்கோவடிகள் என்பவர். அதற்கு 'சிலப்பதிகாரம்' என்றும் பெயரிட்டு விட்டார். இப்போது என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்??:(((
யார் கண் பட்டதோ, அவர்கள் வாழ்க்கையில் ஒரு புயல் அடித்தது. ஆம் ஒரு பூவே அவர்கள் வாழ்க்கையில் புயலானது. ஒரு விழாவிற்கு அவர்கள் சென்ற போது அங்கே ஒரு ஆரணங்கு ஆடினாள். அவள் ஆட்டம் இவர்கள் ஆனந்த வாழ்வுக்கு ஆபத்தாய் அமைந்தது. அவன் தன் மனைவியைப் பிரிந்து ஆரணங்கின் மேல் மையல் கொண்டான்.
அவளோ அனவரதமும் அவனையே நினைத்திருந்தாள். விரலாபரணம் இடையாபரணமானது. உள்ளங்கவர் கள்வன் இவள் உள்ளத்தை உணரவில்லை. காலம் கனியும் என்று காத்திருந்தாள் காதற்பேதை. அவள் உறுதி காலத்தின் கோலத்தை மாற்றியது.
ஆடலரசியின் அழகில் மயங்கிய ஆண்மகன் விழித்தெழுந்தான் ஓர் நாள். அந்தோ பரிதாபம். அவன் விழித்தபோது இழப்பதற்கு ஒன்றுமில்லை அவனிடம். மீண்டு(ம்) வந்தான் அவளிடம். அவளோ அவன் செய்த தவற்றை நினைக்கக் கூட இல்லை. மணாளன் வந்ததால் மனம் மகிழ்ந்தாள். அவனைப் போற்றிப் புகழ்ந்தாள். ஆகா, இன்னா செய்தவன் நாணுமாறு நன்னயம் செய்து, ஒறுத்து விட்டாள் நங்கை. வள்ளுவன் வாக்குக்கு வாழ்வளித்த வனிதை.
ஊரார் தூற்றலைத் தாங்காத தலைவன் வெளியூர் செல்வோம் செல்வம் தேடி என்றான். மன்னவனின் சொல்லை மறந்தறியாப் பாவையுடன் சென்றான் மாநகர் நோக்கி.
சென்றவனின் கையில் செல்வமில்லை. கலங்கினான் காதலன். கால் கொலுசைக் கொடுத்துக் கை கொடுத்தாள் காரிகை. அதை விற்றுப் பணமாக்கச் சென்றான். ஆனால் பாவம், வந்தான் பிணமாக, திருடன் என்ற பழியோடு. அழுதாள், அரண்டாள் மங்கை நல்லாள். ஆயினும் என்ன மாண்டவர் மீள்வரோ.
அழுகை நீக்கினாள். ஆவேசம் கூட்டினாள். புகுந்தாள் மாநகர் வேந்தர் மாளிகையில் பொங்கு கடலென. ஆர்ப்பரித்தாள் ஆண்டவனைப் பார்த்து. நீதான் நீதிமானா? வள நாட்டின் காவலன் வழி மாறலாமா? காரிகையின் வாழ்வில் காலனாய் மாறலாமா? என்றாள். ஆண்டவன் ஆடிப் போனான். அய்யகோ என்றவன் அடங்கினான் அவனுள். அவன் அடிபற்றித் தொடர்ந்தாள் ஆண்டவன் தலைவி. அதோடு நின்றாளில்லை ஆரணங்கு. அழித்தாள் மாநகரை உருத்தெரியாமல். சென்றாள் மேற்கு நோக்கி. இருந்தாள் வடக்கு நோக்கி.
ஆங்கே ஆடலரசியோ இவர்கள் நிலை கேட்டு வெதும்பினாள். துறந்தாள் அனைத்தையும். தழுவினாள் தர்மத்தின் தாளை.
ஒருவன் ஒருத்தி என்பது மரபு. ஒருவன் இருத்தி என்பது மரபை மீறிய செயல். இதுதான் ஒருவன், இரு மகளிரின் காதை.
இதைத்தான் சற்றொப்ப 2000 வருடங்களுக்கு முன்பே காப்பியடித்து விட்டார் இளங்கோவடிகள் என்பவர். அதற்கு 'சிலப்பதிகாரம்' என்றும் பெயரிட்டு விட்டார். இப்போது என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்??:(((
Tuesday, January 20, 2009
சரிங்க...
'அட்சம்பேட்ட (அடிசன்பேட்டை) யாராவது கீறீங்களாபா?' என்ற கண்டெக்டரின் கத்தல் அவன் காதுக்கருகில் ஒலித்து தூக்கத்தைக் கலைத்தது. என்ன செய்வது சீட் கிடைக்காமல் பின்படிக்கெட்டுக்கு அடுத்த சீட்டில் அமர்ந்திருந்தான் அப்படியும் களைப்பில் தூங்கிவிட்டான். வெகு நாட்களுக்குப் பிறகு அதாவது ஏழு வருடங்களுக்குப் பிறகு காஞ்சிபுரம் வருகிறான்.
எத்தனை காலமானாலும் உலகமே தலைகீழானாலும் காஞ்சிபுரம் மட்டும் மாறப்போவதில்லை. அதே பஸ் ஸ்டாண்டு. கொஞ்சம் விரிவாக்கம் செய்திருந்தாலும் அந்த பழைய நாற்றம் போகவில்லை. சக்தி கபேயின் நசுங்கிய டம்ளர்கள், சுற்றியுள்ள இனிப்பகங்கள், பழக்கடைகள்...
வெளியே வந்தால் ராஜவீதிகளை ஒன் வே செய்திருக்கிறார்கள். அட, சிக்னல் கூட போட்டிருக்கிறார்கள். அப்படியே கங்கனாமண்டபம் (கங்கை கொண்டான் மண்டபம்) வழியாக ஏகாம்பர நாதர் கோவிலுக்கு அருகில் உள்ள அவன் வீட்டிற்குச் சென்றான்.
அய்யப்ப பக்தர்களின் கூட்டமும், வடமாநில மக்களின் கூட்டமும் சேர்ந்து அந்தப் பகுதியே கசகச என்றிருந்தது. படிக்கும் காலங்களில் மதியான நேரத்தில் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டால் போதும். படிக்கும் மூட் இருந்தால் படிப்பு சூப்பராக வரும். தூங்கும் மூட் இருந்தால் அதுவும் தானாக வரும். பெரும்பாலும் இரண்டாவது மூட் தான்.
வீட்டிற்கு வந்து சம்பிரதாயமாகப் பேசிவிட்டு குளியல் டிபன் முடித்துக் கொண்டு மீண்டும் வெளியே கிளம்பிவிட்டான். இவன் ஒட்டுறவே இல்லாமல் இருந்து ஏழு வருடங்களுக்குப் பிறகு இங்கு வந்ததன் காரணம் அவன் வீட்டில் தெரிந்தே இருந்தது.
நேராக வாடகை சைக்கிள் கடைக்குச் சென்று ஒரு சைக்கிள் எடுத்துக் கொண்டான். அவன் வழக்கமாக எடுக்கும் கடைதான். இவன் வருகைக்காகவே நல்ல சைக்கிள் வைத்திருப்பார் அந்த கடைக்காரர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும் இவனை மறக்க வில்லை என்பதை அவர் பேச்சு காட்டியது. 'இன்னாபா, இத்தன்நாளா எங்க பூட்ட. ஆளயே காணமே. நல்லாக்கிறயா' கடைக்காரர் கேட்டது தான் இன்னும் அயல்மனிதனாகவில்லை என்ற எண்ணத்தைத் தந்தது.
'நல்லா இருக்கறங்க. வேல ஜாஸ்தியா இருந்துட்டதால வரமுடில. நீங்க நல்லாயிருக்கீங்களா'.
'ஆமாம்பா, ஏதோ ஓடிகினு கெடக்குது. இந்த வண்டி பூட்டி ஒரு மாசந்தான் ஆவுது. நீ எட்துனு போ'
நன்றாகவே இருந்தது சைக்கிள். கைலாச நாதர் கோவில் நோக்கி வண்டியை செலுத்தினான். கைலாச நாதரை பக்தர்கள் வருடத்திற்கு ஒருமுறைதான் தொந்தரவு செய்வார்கள். சிவராத்திரியின் போது அங்கு கூடும் கூட்டம் சொல்லி மாளாது. மற்ற காலங்களில் தினமும் வரும் டூரிஸ்டுகள்தான் அவரது விசிட்டர்கள். பெரும்பாலும் வெளி நாட்டினராதலால் உள்ளே வருவதும் குறைவு.
அன்றும் வந்து செல்லவேண்டிய பேருந்துகள் போய்விட்டன. ஒன்றிரண்டு கார்கள் மட்டும் நின்றுகொண்டிருந்தன. சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே சென்றான். ஒவ்வொரு இடமாக செல்லும் போதும் பழைய நினைவுகள் அவனை ஆட்கொண்டன. பள்ளிக்காலத்தில் ஆண்டர்சனிலிருந்து அவன் வீட்டுக்கு நேரடியாகச் செல்லலாம். ஆனால் கைலாச நாதரை விசிட் செய்வது வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும். தனிமை தந்த சுகம் அது. அருகிலேயே பள்ளி விளையாட்டு மைதானம் இருந்ததும் ஒரு காரணம்.
அப்படித்தான் ஒரு முறை ஹோம் ஒர்க் செய்யவில்லை. மதியானம் சாப்பிட்டவுடன் சரவணனுடன் கோவிலுக்கு வந்துவிட்டான். மாலை வழக்கம் போல் வீடு. சில காலத்திற்கு இது வழக்கமானது. பிறகு வீட்டிலும் பள்ளியிலும் தெரிந்த போது நல்ல உதை. இப்போது அவன் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு. நண்பர்களின் தொடர்பும் அற்றுப் போய் விட்டது. அமெரிக்காவிலிருந்து அய்யம்பேட்டை வரை பிரிந்திருந்தனர் நண்பர்கள். டாக்டர், இஞ்சினியர், சார்டர்ட் அக்கவுன்டன்ட், க்ளெர்க், கடை முதலாளி, தொழிலாளி, பட்டு நெசவாளி என பல வண்ணங்கள்.
கோவில் ப்ரகாரத்தில் ஓடி விழுந்த குழந்தையின் அழுகை அவனை இன்றைக்கு இழுத்துக் கொண்டு வந்தது.
வெளியே வந்தவன் பிள்ளையார் பாளையத்திற்குச் சென்றான். அங்குதான் அவன் நண்பன் சரவணனின் வீடு இருக்கிறது. அவனொருவன்தான் பள்ளிப்பருவ நினைவுகளின் நிஜம். அதுவும் இப்போது இல்லை என்ற நினைப்பே ஆயாசத்தைத் தந்தது.அவன் வீடு இருக்கிறது. அவன் இல்லை இப்போது. ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது எல்லாம் முடிந்து.
அந்தத் தகவல் கேட்டுதான் வந்திருக்கிறான் இவன். சரவணனின் வீட்டில் இயல்பு நிலை திரும்பியது போல் காணப்பட்டது. நடு நடுத்தரக் குடும்பம்தான். பட்டு நெசவுடன் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் விவசாயமும் நடந்து வந்தது. அவனுக்கு அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று அனைவரும் இருக்கிறார்கள். தந்தையும் தாயும் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்று கூறியிருக்கிறான்.
'வாப்பா. அவன் இப்பிடி பண்ட்டு போவான்னு யாருமே நெனக்கிலியே. சொல்லாம பூட்டானே.' என்று கூறினார்கள் அவன் தாய். அழுதழுது கண்ணீர் வற்றிவிட்டிருக்கும் போல. அவன் சகோதரி 'காப்பித்தண்ணி சாப்புடுண்ணா' என்று கொடுத்தாள். ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் கல்யாணமாகி இப்போது பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்திருக்கிறாள்.
'என்ன ஆச்சி' சம்பிரதாயமாகக் கேட்டான்.
'மலைக்கு போய்ட்டு வந்தாம்பா. நல்லாதான் இருந்தான். சக்தியோட கோவிலுக்கு(கைலாச நாதர் கோவில்)ப் போய்ட்டு வரேன். நல்லா சமச்சி வைய்யின்னு சொல்ட்டு போனான். கோவில்லயே நெஞ்சுவலி வந்துட்ச்சி போல. சக்தி அங்கருந்து ஆட்டோல பெரியாஸ்பத்திரிக்கி தூக்கினு போச்சி. அங்கருந்துதான் பெரியவனுக்கு தகவல் வந்துச்சி. அங்க போறதுக்குள்ள அல்லாம் முட்ஞ்சிரிச்சி. மொதல்லயே நெஞ்சுல கோளாறு போல. ஒண்ணுமே சொல்லாம இருந்துட்டாம்பா. இல்லன்னா இப்படி வுட்ருப்போமா? ' என்று சொல்லி முடித்தார்கள். எத்தனையாவது முறையாக சொல்லியிருப்பார்களோ.
'உடும்மா. அண்ணன் என் வயத்தல வந்து பொறக்கும். அப்ப மறுபடியும் வளத்துக்கோ.' அவள் அம்மாவை தேற்றியவள் 'ஆமாண்ணா, ஏன் ஊரு பக்கமே வர்றதில்ல. என்னாச்சி? நீ இருந்திருந்தின்னா அண்ணன் இப்பிடி போயிருக்காதோ என்னமோ. அதுக்கு இன்னான்னு உங்கிட்டயாவது சொல்லியிருக்கும்'
'இல்லமா. வரக்கூடாதுண்ட்டுல்லாம் இல்ல. வேல அப்பிடி. இப்ப கூட சரவணனுக்கோசரந்தான் வந்தேன். ஃபோன்ல பேசறப்பகூட எதுவுமே சொல்லலயே. உன் கல்யாணம். விவசாயம் பத்தில்லாம் பேசுனான். இதப்பத்தி வாயே தெறக்கல. அவனுக்கே தெரீல போல. கவலப்படாதீங்க. மனசத் தேத்திக்கிங்க. வேறென்ன சொல்றது.'
'பரவால்லபா. இதுக்கோசரம் இம்மாந்தூரம் வந்தியே. நீயாவது ஒடம்ப பாத்துக்க. ஏதாவதுன்னா ஒடனே டாக்டர் கிட்ட காட்டிடு.' என்றார்கள் சரவணின் தாய்
'சரிங்க. நீங்களும் உங்க ஒடம்ப பாத்துக்குங்க. எனக்கு அப்பப்ப ஃபோன் பண்ணுங்க.'
அவர்கள் சொன்ன அடுத்த வார்த்தைகள் அவனை சிலையாக்கின.
'சரிப்பா. ஆனா ஒண்ணு. அன்னிக்கி யாருமே ஒரு நெலமைல இல்ல. அப்பறந்தான் தோணிச்சி, அதுங்கண்ணுங்களையாவது குட்துருக்கலாமேன்னு.'
எத்தனை காலமானாலும் உலகமே தலைகீழானாலும் காஞ்சிபுரம் மட்டும் மாறப்போவதில்லை. அதே பஸ் ஸ்டாண்டு. கொஞ்சம் விரிவாக்கம் செய்திருந்தாலும் அந்த பழைய நாற்றம் போகவில்லை. சக்தி கபேயின் நசுங்கிய டம்ளர்கள், சுற்றியுள்ள இனிப்பகங்கள், பழக்கடைகள்...
வெளியே வந்தால் ராஜவீதிகளை ஒன் வே செய்திருக்கிறார்கள். அட, சிக்னல் கூட போட்டிருக்கிறார்கள். அப்படியே கங்கனாமண்டபம் (கங்கை கொண்டான் மண்டபம்) வழியாக ஏகாம்பர நாதர் கோவிலுக்கு அருகில் உள்ள அவன் வீட்டிற்குச் சென்றான்.
அய்யப்ப பக்தர்களின் கூட்டமும், வடமாநில மக்களின் கூட்டமும் சேர்ந்து அந்தப் பகுதியே கசகச என்றிருந்தது. படிக்கும் காலங்களில் மதியான நேரத்தில் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டால் போதும். படிக்கும் மூட் இருந்தால் படிப்பு சூப்பராக வரும். தூங்கும் மூட் இருந்தால் அதுவும் தானாக வரும். பெரும்பாலும் இரண்டாவது மூட் தான்.
வீட்டிற்கு வந்து சம்பிரதாயமாகப் பேசிவிட்டு குளியல் டிபன் முடித்துக் கொண்டு மீண்டும் வெளியே கிளம்பிவிட்டான். இவன் ஒட்டுறவே இல்லாமல் இருந்து ஏழு வருடங்களுக்குப் பிறகு இங்கு வந்ததன் காரணம் அவன் வீட்டில் தெரிந்தே இருந்தது.
நேராக வாடகை சைக்கிள் கடைக்குச் சென்று ஒரு சைக்கிள் எடுத்துக் கொண்டான். அவன் வழக்கமாக எடுக்கும் கடைதான். இவன் வருகைக்காகவே நல்ல சைக்கிள் வைத்திருப்பார் அந்த கடைக்காரர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகும் இவனை மறக்க வில்லை என்பதை அவர் பேச்சு காட்டியது. 'இன்னாபா, இத்தன்நாளா எங்க பூட்ட. ஆளயே காணமே. நல்லாக்கிறயா' கடைக்காரர் கேட்டது தான் இன்னும் அயல்மனிதனாகவில்லை என்ற எண்ணத்தைத் தந்தது.
'நல்லா இருக்கறங்க. வேல ஜாஸ்தியா இருந்துட்டதால வரமுடில. நீங்க நல்லாயிருக்கீங்களா'.
'ஆமாம்பா, ஏதோ ஓடிகினு கெடக்குது. இந்த வண்டி பூட்டி ஒரு மாசந்தான் ஆவுது. நீ எட்துனு போ'
நன்றாகவே இருந்தது சைக்கிள். கைலாச நாதர் கோவில் நோக்கி வண்டியை செலுத்தினான். கைலாச நாதரை பக்தர்கள் வருடத்திற்கு ஒருமுறைதான் தொந்தரவு செய்வார்கள். சிவராத்திரியின் போது அங்கு கூடும் கூட்டம் சொல்லி மாளாது. மற்ற காலங்களில் தினமும் வரும் டூரிஸ்டுகள்தான் அவரது விசிட்டர்கள். பெரும்பாலும் வெளி நாட்டினராதலால் உள்ளே வருவதும் குறைவு.
அன்றும் வந்து செல்லவேண்டிய பேருந்துகள் போய்விட்டன. ஒன்றிரண்டு கார்கள் மட்டும் நின்றுகொண்டிருந்தன. சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே சென்றான். ஒவ்வொரு இடமாக செல்லும் போதும் பழைய நினைவுகள் அவனை ஆட்கொண்டன. பள்ளிக்காலத்தில் ஆண்டர்சனிலிருந்து அவன் வீட்டுக்கு நேரடியாகச் செல்லலாம். ஆனால் கைலாச நாதரை விசிட் செய்வது வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் இருக்கும். தனிமை தந்த சுகம் அது. அருகிலேயே பள்ளி விளையாட்டு மைதானம் இருந்ததும் ஒரு காரணம்.
அப்படித்தான் ஒரு முறை ஹோம் ஒர்க் செய்யவில்லை. மதியானம் சாப்பிட்டவுடன் சரவணனுடன் கோவிலுக்கு வந்துவிட்டான். மாலை வழக்கம் போல் வீடு. சில காலத்திற்கு இது வழக்கமானது. பிறகு வீட்டிலும் பள்ளியிலும் தெரிந்த போது நல்ல உதை. இப்போது அவன் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு. நண்பர்களின் தொடர்பும் அற்றுப் போய் விட்டது. அமெரிக்காவிலிருந்து அய்யம்பேட்டை வரை பிரிந்திருந்தனர் நண்பர்கள். டாக்டர், இஞ்சினியர், சார்டர்ட் அக்கவுன்டன்ட், க்ளெர்க், கடை முதலாளி, தொழிலாளி, பட்டு நெசவாளி என பல வண்ணங்கள்.
கோவில் ப்ரகாரத்தில் ஓடி விழுந்த குழந்தையின் அழுகை அவனை இன்றைக்கு இழுத்துக் கொண்டு வந்தது.
வெளியே வந்தவன் பிள்ளையார் பாளையத்திற்குச் சென்றான். அங்குதான் அவன் நண்பன் சரவணனின் வீடு இருக்கிறது. அவனொருவன்தான் பள்ளிப்பருவ நினைவுகளின் நிஜம். அதுவும் இப்போது இல்லை என்ற நினைப்பே ஆயாசத்தைத் தந்தது.அவன் வீடு இருக்கிறது. அவன் இல்லை இப்போது. ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது எல்லாம் முடிந்து.
அந்தத் தகவல் கேட்டுதான் வந்திருக்கிறான் இவன். சரவணனின் வீட்டில் இயல்பு நிலை திரும்பியது போல் காணப்பட்டது. நடு நடுத்தரக் குடும்பம்தான். பட்டு நெசவுடன் அருகிலுள்ள ஒரு கிராமத்தில் விவசாயமும் நடந்து வந்தது. அவனுக்கு அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று அனைவரும் இருக்கிறார்கள். தந்தையும் தாயும் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள் என்று கூறியிருக்கிறான்.
'வாப்பா. அவன் இப்பிடி பண்ட்டு போவான்னு யாருமே நெனக்கிலியே. சொல்லாம பூட்டானே.' என்று கூறினார்கள் அவன் தாய். அழுதழுது கண்ணீர் வற்றிவிட்டிருக்கும் போல. அவன் சகோதரி 'காப்பித்தண்ணி சாப்புடுண்ணா' என்று கொடுத்தாள். ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் கல்யாணமாகி இப்போது பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு வந்திருக்கிறாள்.
'என்ன ஆச்சி' சம்பிரதாயமாகக் கேட்டான்.
'மலைக்கு போய்ட்டு வந்தாம்பா. நல்லாதான் இருந்தான். சக்தியோட கோவிலுக்கு(கைலாச நாதர் கோவில்)ப் போய்ட்டு வரேன். நல்லா சமச்சி வைய்யின்னு சொல்ட்டு போனான். கோவில்லயே நெஞ்சுவலி வந்துட்ச்சி போல. சக்தி அங்கருந்து ஆட்டோல பெரியாஸ்பத்திரிக்கி தூக்கினு போச்சி. அங்கருந்துதான் பெரியவனுக்கு தகவல் வந்துச்சி. அங்க போறதுக்குள்ள அல்லாம் முட்ஞ்சிரிச்சி. மொதல்லயே நெஞ்சுல கோளாறு போல. ஒண்ணுமே சொல்லாம இருந்துட்டாம்பா. இல்லன்னா இப்படி வுட்ருப்போமா? ' என்று சொல்லி முடித்தார்கள். எத்தனையாவது முறையாக சொல்லியிருப்பார்களோ.
'உடும்மா. அண்ணன் என் வயத்தல வந்து பொறக்கும். அப்ப மறுபடியும் வளத்துக்கோ.' அவள் அம்மாவை தேற்றியவள் 'ஆமாண்ணா, ஏன் ஊரு பக்கமே வர்றதில்ல. என்னாச்சி? நீ இருந்திருந்தின்னா அண்ணன் இப்பிடி போயிருக்காதோ என்னமோ. அதுக்கு இன்னான்னு உங்கிட்டயாவது சொல்லியிருக்கும்'
'இல்லமா. வரக்கூடாதுண்ட்டுல்லாம் இல்ல. வேல அப்பிடி. இப்ப கூட சரவணனுக்கோசரந்தான் வந்தேன். ஃபோன்ல பேசறப்பகூட எதுவுமே சொல்லலயே. உன் கல்யாணம். விவசாயம் பத்தில்லாம் பேசுனான். இதப்பத்தி வாயே தெறக்கல. அவனுக்கே தெரீல போல. கவலப்படாதீங்க. மனசத் தேத்திக்கிங்க. வேறென்ன சொல்றது.'
'பரவால்லபா. இதுக்கோசரம் இம்மாந்தூரம் வந்தியே. நீயாவது ஒடம்ப பாத்துக்க. ஏதாவதுன்னா ஒடனே டாக்டர் கிட்ட காட்டிடு.' என்றார்கள் சரவணின் தாய்
'சரிங்க. நீங்களும் உங்க ஒடம்ப பாத்துக்குங்க. எனக்கு அப்பப்ப ஃபோன் பண்ணுங்க.'
அவர்கள் சொன்ன அடுத்த வார்த்தைகள் அவனை சிலையாக்கின.
'சரிப்பா. ஆனா ஒண்ணு. அன்னிக்கி யாருமே ஒரு நெலமைல இல்ல. அப்பறந்தான் தோணிச்சி, அதுங்கண்ணுங்களையாவது குட்துருக்கலாமேன்னு.'
Friday, January 2, 2009
டேய்ய்ய்....
எழும்பூர்... மதியம் 3.25.
அடித்து பிடித்து, முட்டி மோதி, விழுந்து எழுந்து ஒரு வழியாக பல்லவன் எக்ஸ்ப்ரசில் ஏறியாகிவிட்டது. அப்பாடா.
இ-டிக்கட் இருப்பதால் டிக்கட் எடுக்க க்யூவில் நிற்க வேண்டியதில்லை. விண்டோ சீட் செலக்ட் செய்தால் பெரும்பாலும் கிடைத்து விடுகிறது. ஆனால் யாராவது குடும்பத்தோடு வந்து விட்டால் முதலில் நமது விண்டோ சீட்டுக்குத்தான் ஆபத்து. எனக்கு பெரும்பாலும் இது நேர்ந்திருக்கிறது.
அன்றும் அப்படித்தான். குடும்பத்தோடு யாரும் இல்லை. ஆனால் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். ஹூம் என்று நினைத்துக் கொண்டேன். அவள் நிலையைப் பார்த்து சிறு சங்கடப் பட்டாலும்,
'எக்ஸ்கியூஸ் மீ, இது என் சீட்' என்றேன்.
'சாரி சார். எனதும் வின்டோதான். எதிர் சீட். எனக்கு எதிர் காத்து ஒத்துக்காது. ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. தாங்க்ஸ்.'...
பல்லவனை (எக்ஸ்ப்ரஸ்) விட வேகமாகப் பேசிவிட்டு புத்தகத்தில் ஆழ்ந்து விட்டாள்.
'அடிப்பாவி, நான் மட்டும் எதிர் காற்றுக்கு பிரண்டா, என்ன கொடுமை சார் இது.' - மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் ஓகே என்று எதிர் சீட்டில் அமர்ந்து கொண்டேன்.
'இதுவே ஒரு பையனா இருந்தா இப்படி விட்டு கொடுத்திருப்பியா?' - மிஸ்டர் மனசாட்சியின் குரல் கேட்டது.
'அந்தப் பெண்ணின் நிலையில் யார் இருந்தாலும் விட்டு கொடுத்திருப்பேன், மிஸ்டர் மனசாட்சி..' என்று பதில் சொல்லி அடக்கினேன்.
வண்டி புறப்படுவதற்கான அறிவிப்பு வந்தது. அந்தப்பெண் யாரையோ எதிர் பார்த்து டென்ஷனாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிறகு கை பேசியை எடுத்து, ஒரு நம்பரை அழுத்தி.....
'டேய் ய் ய் ய்.... எங்கடா இருக்கே' என்று சத்தமாகக் கேட்ட போது நான் உட்பட அருகில் இருந்தவர்கள் சற்று ஆடித்தான் போனார்கள்.
அவள் பின்னாலிருந்து ஒரு பையன் ..'இதோ வந்துட்டேன்' என்றான்.
'ஏன்டா டென்ஷன் பன்ற.. ஒவ்வொரு தடவையும் ஒன்னோட இதே தொல்லையா போச்சுடா...' அலுத்துக் கொண்டாள்.
பல்லவன் ஒரு வழியாக கிளம்பியது...
இப்போதுதான் அவர்களிருவரையும் கவனிக்க ஆரம்பித்தேன். இருவரும் ஒரே வயதுடையவர்களாக காணப்பட்டார்கள். பேச்சுக் கொடுத்த போது, இருவரும் ஒரே காலேஜில் இஞ்சினீரிங் படிக்கிறார்கள். அவனுக்கு துப்பாக்கி, அவளுக்கு பாய்லர். (திருச்சியில் பாய்லர் என்பது பி ஹெச் இ எல், துப்பாக்கி என்பது எச் ஏ பி பி என்னும் தொழிற்சாலையை குறிக்கும்). இருவரும் கே வி யில் படித்திருக்கிறார்கள். இங்கேயும் கன்டினியூ ஆகிக் கொண்டிருக்கிறது.
எதோ பாட சம்பந்தமாக பேசிக்கொண்டே வந்தார்கள். அடிக்கடி டேய் என்ற சொல் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. நமது துறை வேறாதலால் ஒன்றும் புரிய வில்லை. அப்படியே அசந்து விட்டேன்.
விக்கரவாண்டியின் சர்க்கரை ஆலை வாசனை என்னை பலவந்தமாக எழுப்பியது. விழுப்புரத்தில் இறங்கி ஏதாவது சாப்பிடத் தயாரானேன்.
'டேய்.. நல்லா பசிக்குது. ஏதாவது வாங்கிட்டு வா. போன தடவை என்னவோ வாங்கிட்டு வந்த. வாயில வைக்க முடியல. ஒழுங்கா வாங்கிட்டு வா..' என்றாள்.
'சரி சரி சும்மா வா. எது கெடைக்குதோ அத வாங்கிட்டு வரேன்.' அவன் விட வில்லை.
'தம்பி, விழுப்புரத்தில் உப்புமா சாப்பிட்டு இருக்கிறீர்களா, ட்ரை பண்ணி பாக்கரதுதானே. சூடா நல்லா இருக்கும்.' நான் நடுவில் புகுந்தேன்.
'அத தான் வாங்கிட்டு வாயேண்டா..'
அவனும் வாங்கிட்டு வந்தான். அவளுக்கு பிடித்து இருந்தது போல.
'தாங்க்ஸ் சார்.' என்றாள்.
மீண்டும் பல்லவன் கிளம்பியது. மீண்டும் அசர ஆரம்பித்தேன்.
முதலில் எல்லாம், ரயிலில் பயணம் செய்வதென்றால் இரவில் கூட தூங்க மாட்டேன். வேடிக்கை பார்ப்பதும், வழியில் வரும் ஸ்டேஷன்களின் பெயரைப் படிப்பதுமாக இருப்பேன். இது வாரம் ஒரு முறை வந்து செல்வதால் பார்த்து ரசிப்பதற்கு புதிதாக ஒன்றும் இல்லை என்பதால் நன்றாகத் தூங்கி விடுகிறேன்.
பெண்ணாடம் சர்க்கரை ஆலையின் வாசனையோ, அரியலூரில் அடித்து பிடித்து இறங்கும் தஞ்சாவூர் காரர்களின் ஓசையோ என்னை எழுப்பவில்லை. லால்குடியில் ஒரு வழியாக முழித்துக் கொண்டேன். எல்லாம் பழக்க தோஷம்.
அவர்களும் எல்லாவற்றையும் எடுத்து வைத்து இறங்கத் தயாரானார்கள். ஸ்ரீரங்கமா எனக் கேட்டேன்.
'ஆமாம் சார். இந்த வண்டி ஸ்ரீ ரங்கத்திலிருந்து ஜங்க்ஷன் போறதுக்குள்ள நாங்க வீட்டுக்கே போய் சேர்ந்துடுவோம்'.. அவள் என்னிடம் சொல்லிக் கொண்டே அவனை,
'டேய் எல்லாத்தையும் சரியா எடுத்து வச்சிட்டியா.. என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே,
கொள்ளிடக்காற்று அள்ளிக்கொண்டு போனது.
நானும் ஸ்ரீ ரங்கத்தில் இறங்க வேண்டும் என்பதால் அவர்களிடம் 'ஓ கே, சீ யூ, பை' என்று சொல்லி விட்டு வேறு வாசலுக்கு விரைந்தேன்.
அந்தப் பையன் அனைத்து ல்க்கேஜையும் தூக்கிக் கொள்ள,
அவள் அவளது ஊன்று கோலின் உதவியுடன் பெட்டியின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகும் எனக்கு அந்த வார்த்தை கேட்டுக் கொண்டே இருந்தது.
டேய்ய்ய்....
அடித்து பிடித்து, முட்டி மோதி, விழுந்து எழுந்து ஒரு வழியாக பல்லவன் எக்ஸ்ப்ரசில் ஏறியாகிவிட்டது. அப்பாடா.
இ-டிக்கட் இருப்பதால் டிக்கட் எடுக்க க்யூவில் நிற்க வேண்டியதில்லை. விண்டோ சீட் செலக்ட் செய்தால் பெரும்பாலும் கிடைத்து விடுகிறது. ஆனால் யாராவது குடும்பத்தோடு வந்து விட்டால் முதலில் நமது விண்டோ சீட்டுக்குத்தான் ஆபத்து. எனக்கு பெரும்பாலும் இது நேர்ந்திருக்கிறது.
அன்றும் அப்படித்தான். குடும்பத்தோடு யாரும் இல்லை. ஆனால் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். ஹூம் என்று நினைத்துக் கொண்டேன். அவள் நிலையைப் பார்த்து சிறு சங்கடப் பட்டாலும்,
'எக்ஸ்கியூஸ் மீ, இது என் சீட்' என்றேன்.
'சாரி சார். எனதும் வின்டோதான். எதிர் சீட். எனக்கு எதிர் காத்து ஒத்துக்காது. ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. தாங்க்ஸ்.'...
பல்லவனை (எக்ஸ்ப்ரஸ்) விட வேகமாகப் பேசிவிட்டு புத்தகத்தில் ஆழ்ந்து விட்டாள்.
'அடிப்பாவி, நான் மட்டும் எதிர் காற்றுக்கு பிரண்டா, என்ன கொடுமை சார் இது.' - மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் ஓகே என்று எதிர் சீட்டில் அமர்ந்து கொண்டேன்.
'இதுவே ஒரு பையனா இருந்தா இப்படி விட்டு கொடுத்திருப்பியா?' - மிஸ்டர் மனசாட்சியின் குரல் கேட்டது.
'அந்தப் பெண்ணின் நிலையில் யார் இருந்தாலும் விட்டு கொடுத்திருப்பேன், மிஸ்டர் மனசாட்சி..' என்று பதில் சொல்லி அடக்கினேன்.
வண்டி புறப்படுவதற்கான அறிவிப்பு வந்தது. அந்தப்பெண் யாரையோ எதிர் பார்த்து டென்ஷனாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிறகு கை பேசியை எடுத்து, ஒரு நம்பரை அழுத்தி.....
'டேய் ய் ய் ய்.... எங்கடா இருக்கே' என்று சத்தமாகக் கேட்ட போது நான் உட்பட அருகில் இருந்தவர்கள் சற்று ஆடித்தான் போனார்கள்.
அவள் பின்னாலிருந்து ஒரு பையன் ..'இதோ வந்துட்டேன்' என்றான்.
'ஏன்டா டென்ஷன் பன்ற.. ஒவ்வொரு தடவையும் ஒன்னோட இதே தொல்லையா போச்சுடா...' அலுத்துக் கொண்டாள்.
பல்லவன் ஒரு வழியாக கிளம்பியது...
இப்போதுதான் அவர்களிருவரையும் கவனிக்க ஆரம்பித்தேன். இருவரும் ஒரே வயதுடையவர்களாக காணப்பட்டார்கள். பேச்சுக் கொடுத்த போது, இருவரும் ஒரே காலேஜில் இஞ்சினீரிங் படிக்கிறார்கள். அவனுக்கு துப்பாக்கி, அவளுக்கு பாய்லர். (திருச்சியில் பாய்லர் என்பது பி ஹெச் இ எல், துப்பாக்கி என்பது எச் ஏ பி பி என்னும் தொழிற்சாலையை குறிக்கும்). இருவரும் கே வி யில் படித்திருக்கிறார்கள். இங்கேயும் கன்டினியூ ஆகிக் கொண்டிருக்கிறது.
எதோ பாட சம்பந்தமாக பேசிக்கொண்டே வந்தார்கள். அடிக்கடி டேய் என்ற சொல் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. நமது துறை வேறாதலால் ஒன்றும் புரிய வில்லை. அப்படியே அசந்து விட்டேன்.
விக்கரவாண்டியின் சர்க்கரை ஆலை வாசனை என்னை பலவந்தமாக எழுப்பியது. விழுப்புரத்தில் இறங்கி ஏதாவது சாப்பிடத் தயாரானேன்.
'டேய்.. நல்லா பசிக்குது. ஏதாவது வாங்கிட்டு வா. போன தடவை என்னவோ வாங்கிட்டு வந்த. வாயில வைக்க முடியல. ஒழுங்கா வாங்கிட்டு வா..' என்றாள்.
'சரி சரி சும்மா வா. எது கெடைக்குதோ அத வாங்கிட்டு வரேன்.' அவன் விட வில்லை.
'தம்பி, விழுப்புரத்தில் உப்புமா சாப்பிட்டு இருக்கிறீர்களா, ட்ரை பண்ணி பாக்கரதுதானே. சூடா நல்லா இருக்கும்.' நான் நடுவில் புகுந்தேன்.
'அத தான் வாங்கிட்டு வாயேண்டா..'
அவனும் வாங்கிட்டு வந்தான். அவளுக்கு பிடித்து இருந்தது போல.
'தாங்க்ஸ் சார்.' என்றாள்.
மீண்டும் பல்லவன் கிளம்பியது. மீண்டும் அசர ஆரம்பித்தேன்.
முதலில் எல்லாம், ரயிலில் பயணம் செய்வதென்றால் இரவில் கூட தூங்க மாட்டேன். வேடிக்கை பார்ப்பதும், வழியில் வரும் ஸ்டேஷன்களின் பெயரைப் படிப்பதுமாக இருப்பேன். இது வாரம் ஒரு முறை வந்து செல்வதால் பார்த்து ரசிப்பதற்கு புதிதாக ஒன்றும் இல்லை என்பதால் நன்றாகத் தூங்கி விடுகிறேன்.
பெண்ணாடம் சர்க்கரை ஆலையின் வாசனையோ, அரியலூரில் அடித்து பிடித்து இறங்கும் தஞ்சாவூர் காரர்களின் ஓசையோ என்னை எழுப்பவில்லை. லால்குடியில் ஒரு வழியாக முழித்துக் கொண்டேன். எல்லாம் பழக்க தோஷம்.
அவர்களும் எல்லாவற்றையும் எடுத்து வைத்து இறங்கத் தயாரானார்கள். ஸ்ரீரங்கமா எனக் கேட்டேன்.
'ஆமாம் சார். இந்த வண்டி ஸ்ரீ ரங்கத்திலிருந்து ஜங்க்ஷன் போறதுக்குள்ள நாங்க வீட்டுக்கே போய் சேர்ந்துடுவோம்'.. அவள் என்னிடம் சொல்லிக் கொண்டே அவனை,
'டேய் எல்லாத்தையும் சரியா எடுத்து வச்சிட்டியா.. என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே,
கொள்ளிடக்காற்று அள்ளிக்கொண்டு போனது.
நானும் ஸ்ரீ ரங்கத்தில் இறங்க வேண்டும் என்பதால் அவர்களிடம் 'ஓ கே, சீ யூ, பை' என்று சொல்லி விட்டு வேறு வாசலுக்கு விரைந்தேன்.
அந்தப் பையன் அனைத்து ல்க்கேஜையும் தூக்கிக் கொள்ள,
அவள் அவளது ஊன்று கோலின் உதவியுடன் பெட்டியின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகும் எனக்கு அந்த வார்த்தை கேட்டுக் கொண்டே இருந்தது.
டேய்ய்ய்....
Friday, December 12, 2008
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் - நிறைவுப் பகுதி
முதல் பகுதி
முதலில் இருந்த ஒரு இறுக்கமான சூழ நிலை இப்போது இல்லை. மிஷின் விவகாரத்தில் ஐஸ் ப்ரேக் ஆகி விட்டிருந்தது. அவள் மற்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தாள். தினமும் லேட்டாகத் தான் கிளம்புவாள். அவள் வீடும் என் வீடும் ஒரே பகுதி என்பதால் என் வண்டியிலேயே ட்ராப் செய்து கொண்டிருந்தேன். கம்பெனியில் வேலை செய்யும் மற்ற மேனேஜர்களின் வீடு நேரெதிர் பகுதி என்பதால் என்னைத்தான் நம்பியிருந்தாள்.
அது ஃபாக்டரி. ஐ.டி. கம்பெனி அல்ல. ஃபாக்டரியில் பெண்கள் மிகக் குறைவாக இருப்பார்கள். அக்கவுன்ட்ஸ், பில்லிங், கமர்ஷியல் ஆகிய துறைகளில்தான் பெண்களைப் பார்க்க முடியும். அதுவும் அவர்களுடைய ட்ரஸ் சென்சைப் பார்த்தால் 70ஸ் 80ஸ் தான் ஞாபகத்திற்கு வரும். பெண்களுடன் பேசுவதே ஒரு டபூ. இந்த சூழலில் சுவேதா என்னுடன் பழகுவதை மற்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தாலும், அவள் ஐ.டி. கம்பெனியிலிருந்து வந்திருக்கிறாள் (அப்படித்தான் எல்லாரிடமும் சொல்லியிருக்கிறாள்) என்பதால் தவறாக எண்ணவில்லை.
திடீரென்று ஒரு நாள் எனக்குப் பார்ட்டி கொடுக்கிறேன். நாளை அடையார் பார்க் போகலாம் என்று கூறினாள்.
===
ஏன் அடையார் பார்க்கிற்கு வந்தோம் என்று ஆகிவிட்டது. நானும் சைவம். அவனும் சைவம். பேசாமல் ஒரு நல்ல உடுப்பி ஹோட்டலுக்கு சென்றிருக்கலாம் என்று வாய் வரை வந்ததை விழுங்கிவிட்டேன். ஒருவேளை திண்ணிப் பண்டாரம் என்று நினைத்துவிட்டால்.
பல்வேறு நிகழ்வுகளைப் பற்றி பேசினோம். பிடித்தது, பிடிக்காதது, பார்த்தது, பார்க்காதது, கேட்டது கேட்காதது, தெரிந்தது தெரியாதது எல்லாம் தெரிந்து கொண்டோம்.
முதலில் பிடிக்காமல் வேலைக்குச் சேர்ந்த நான், இப்போதெல்லாம் எப்பொழுது ஃபாக்டரிக்குச் செல்லலாம் என்று அலைந்து கொண்டிருக்கிறேன். ஏன். எனக்கே தெரியவில்லை.
===
சி.டபள்யூ.ஏ. பரிட்சை நெருங்கிக் கொண்டிருந்தது. நான் இதை முடித்து விட்டால் நேரடியாக மேனேஜராக ப்ரமோஷன் கொடுப்பதாக உறுதியளித்துவிட்டார் ஜி.எம். ஆனால் என்னால்தான் படிக்க முடிவதில்லை.ஏனென்று புரியவில்லை. எப்படியாவது முடித்துவிட வேண்டுமென்று கஷ்டப்பட்டு படித்தும் பாதிதான் ஏறுகிறது. என்ன செய்வது. சுவேதாவைக் கேட்கலாம்.
===
எனக்கு சஜஷன் சொன்னவன் என்னிடமே கேட்கிறான். என்ன சொல்வது. அவன் மனது அலைபாய்வது எனக்கு நன்றாகத் தெரிந்தது. என் மேல் ஏதாவது ஈடுபாடு இருக்கலாமோ? இருந்தால் நேரடியாகச் சொல்ல வேண்டியது தானே. ஏன் இப்படி செய்கிறான். மனதிற்குள் நன்றாகத் திட்டினேன். சரி நாமே ப்ரபோஸ் செய்யலாம். அதையும் அவன் பாஸ் செய்தவுடன் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தேன். நிச்சயமாக மறுக்க மாட்டான். தேவையான இன்டிகேஷன்கள் கிடைத்துவிட்டன.
பாஸ் செய்தால் அவன் எதிர்பார்க்காத ஒரு ட்ரீட் தருவதாக ப்ராமிஸ் செய்தேன். என்ன ட்ரீட் என்று முடிவும் செய்துவிட்டேன்.
===
என்ன ட்ரீட் ஆக இருக்கும். ஏற்கனவே பெரிய ஹோட்டலில் பார்ட்டி கொடுத்து விட்டாள். அதைவிட பெரிய ட்ரீட் இருக்க முடியாது. ஏதாவது வாங்கித் தரப் போகிறாளா? அவளைச் சுற்றியே மனம் திரிகிறதே. ஒரு வேளை... அது தானா இல்லையா. கேட்டுப் பார்க்கலாமா? கேட்டு ஏதாவது ஏடாகூடமாகப் போய்விட்டால்? இருப்பதும் போய்விட்டால்...
குழப்பமாக இருந்தது. சரவணா.. மனதை ஒருமுகப் படுத்து. படி. பாஸ் செய். பிறகு உனக்கே தெரிந்து விடுகிறது. எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
ஜி.எம். கூடுதல் லீவும் கொடுத்து விட்டார். மொத்தமாக 25 நாட்கள். தேர்வு நாட்களையும் சேர்த்து. செல்ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு ஃப்ரென்ட் வீட்டிற்குப் படிக்கப் போய்விட்டேன். அங்கிருந்தே எக்சாம் எழுதினேன். நன்றாக எழுதி முடித்துவிட்டேன்.
சுவேதா கேட்ட போது, சுமார்தான் என்று உதட்டைப் பிதுக்கினேன். நல்ல ரிசல்ட் வந்தால் சர்ப்ரைசாக இருக்கட்டும் என்று.
===
சரவணன் தேர்வெழுத லீவ் போட்டிருக்கும் போது என்னைப் பெண் பார்க்க வந்தார்கள். அவர்களுக்கு என்னைப் பிடித்து விட்டது. பையன் யு.எஸ்.-ல் இருக்கிறான். நான் அங்கே சென்ற பிறகு இன்ஸ்ட்ருமென்டேஷனிலேயே வேலை செய்யலாம்.
யாரும் என்னைக் கேட்கவில்லை. சம்பிரதாயத்திற்குக் கேட்ட போது மவுனமாக இருந்தேன். சம்மதம் என்று எடுத்துக் கொண்டார்கள்.
என்ன முடிவு செய்வது. சரவணனுக்குக் கொடுப்பதாகச் சொல்லியிருந்த ட்ரீட் என்னாவது. அவனே சுமாராக எழுதியிருக்கிறேன் என்று சோகமாகச் சொன்னானே. பிறகு எப்படி ப்ரபோஸ் செய்வது? அப்பா வேறு நிறைய ஆசை வைத்திருக்கிறார். தங்கை வேறு இருக்கிறாள். எனக்குத் தெரிந்து எங்கள் குடும்பத்தில் இது போல் எதுவும் நிகழ்ந்ததில்லை. இப்படி ஏதாவது செய்து ஏடாகூடமாக ஆகி விட்டால்? நினைக்கவே பயங்கரமாக இருந்தது.
அவன் நன்றாக எழுதவில்லை என்று சொன்னது ஆறுதலைத் தந்தது. ஃபெயிலாகிவிட்டால் ட்ரீட் என்று ப்ரபோஸ் செய்ய முடியாது.
அப்பாவின் முடிவுக்குக் கட்டுப்படுவது என்று முடிவெடுத்தேன்.
===
சுவேதா திருமணத் தகவலைச் சொன்ன போது என்ன செய்வதென்றே தோன்றவில்லை. இப்போது சொல்லிவிடலாமா? வேண்டாம் என்று முடிவெடுத்தேன். திருமண நாளன்றுதான் எனக்கு ரிசல்ட் வருகிறது. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என்றேன்.
===
திருமணத்திற்கு முன் வேலையை ரிசைன் செய்துவிட்டேன். மணப்பெண் கலராகவும், பூசினாற்போலவும் இருக்கவேண்டுமாம். ஆகவே வீட்டிலேயே ஈட்டிங் ட்ரீட்மென்ட்.
திருமணம் காலையில் முடிந்தது. மாலையில் ரிசப்ஷன். பரிசுடன் வந்திருந்தான் சரவணன்.
===
மேரேஜ் கிஃப்டைக் கொடுத்துவிட்டு பாஸ் ஆன செய்தியையும் தெரிவித்துவிட்டு, உங்கள் மனைவி நான் பாஸ் செய்தால் ஒரு ட்ரீட் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று சுவேதாவின் கணவனிடம் கூறினேன். அவன் மையமாகச் சிரித்தான். சுவேதாவிடமிருந்து வந்த ரியாக்ஷன் என்ன என்று என்னால் கணிக்க முடியவில்லை. கிஃப்ட் கொடுப்பதற்காக மற்றவர்கள் அவசரப் படுத்தினார்கள். சாப்டுட்டு போங்க என்றான் மணப்பையன்.
(முடிந்தது)
* * * * *
இது ஃபர்ஸ்ட் பெர்சன் நேரேடிவ் ஸ்டைலில் எழுதப்பட்டது. உரையாடல்களே இருக்காது. நடை எப்படி இருக்கிறது என்பதையும் சற்றுத் தெரிவியுங்கள்.
முதலில் இருந்த ஒரு இறுக்கமான சூழ நிலை இப்போது இல்லை. மிஷின் விவகாரத்தில் ஐஸ் ப்ரேக் ஆகி விட்டிருந்தது. அவள் மற்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்திருந்தாள். தினமும் லேட்டாகத் தான் கிளம்புவாள். அவள் வீடும் என் வீடும் ஒரே பகுதி என்பதால் என் வண்டியிலேயே ட்ராப் செய்து கொண்டிருந்தேன். கம்பெனியில் வேலை செய்யும் மற்ற மேனேஜர்களின் வீடு நேரெதிர் பகுதி என்பதால் என்னைத்தான் நம்பியிருந்தாள்.
அது ஃபாக்டரி. ஐ.டி. கம்பெனி அல்ல. ஃபாக்டரியில் பெண்கள் மிகக் குறைவாக இருப்பார்கள். அக்கவுன்ட்ஸ், பில்லிங், கமர்ஷியல் ஆகிய துறைகளில்தான் பெண்களைப் பார்க்க முடியும். அதுவும் அவர்களுடைய ட்ரஸ் சென்சைப் பார்த்தால் 70ஸ் 80ஸ் தான் ஞாபகத்திற்கு வரும். பெண்களுடன் பேசுவதே ஒரு டபூ. இந்த சூழலில் சுவேதா என்னுடன் பழகுவதை மற்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தாலும், அவள் ஐ.டி. கம்பெனியிலிருந்து வந்திருக்கிறாள் (அப்படித்தான் எல்லாரிடமும் சொல்லியிருக்கிறாள்) என்பதால் தவறாக எண்ணவில்லை.
திடீரென்று ஒரு நாள் எனக்குப் பார்ட்டி கொடுக்கிறேன். நாளை அடையார் பார்க் போகலாம் என்று கூறினாள்.
===
ஏன் அடையார் பார்க்கிற்கு வந்தோம் என்று ஆகிவிட்டது. நானும் சைவம். அவனும் சைவம். பேசாமல் ஒரு நல்ல உடுப்பி ஹோட்டலுக்கு சென்றிருக்கலாம் என்று வாய் வரை வந்ததை விழுங்கிவிட்டேன். ஒருவேளை திண்ணிப் பண்டாரம் என்று நினைத்துவிட்டால்.
பல்வேறு நிகழ்வுகளைப் பற்றி பேசினோம். பிடித்தது, பிடிக்காதது, பார்த்தது, பார்க்காதது, கேட்டது கேட்காதது, தெரிந்தது தெரியாதது எல்லாம் தெரிந்து கொண்டோம்.
முதலில் பிடிக்காமல் வேலைக்குச் சேர்ந்த நான், இப்போதெல்லாம் எப்பொழுது ஃபாக்டரிக்குச் செல்லலாம் என்று அலைந்து கொண்டிருக்கிறேன். ஏன். எனக்கே தெரியவில்லை.
===
சி.டபள்யூ.ஏ. பரிட்சை நெருங்கிக் கொண்டிருந்தது. நான் இதை முடித்து விட்டால் நேரடியாக மேனேஜராக ப்ரமோஷன் கொடுப்பதாக உறுதியளித்துவிட்டார் ஜி.எம். ஆனால் என்னால்தான் படிக்க முடிவதில்லை.ஏனென்று புரியவில்லை. எப்படியாவது முடித்துவிட வேண்டுமென்று கஷ்டப்பட்டு படித்தும் பாதிதான் ஏறுகிறது. என்ன செய்வது. சுவேதாவைக் கேட்கலாம்.
===
எனக்கு சஜஷன் சொன்னவன் என்னிடமே கேட்கிறான். என்ன சொல்வது. அவன் மனது அலைபாய்வது எனக்கு நன்றாகத் தெரிந்தது. என் மேல் ஏதாவது ஈடுபாடு இருக்கலாமோ? இருந்தால் நேரடியாகச் சொல்ல வேண்டியது தானே. ஏன் இப்படி செய்கிறான். மனதிற்குள் நன்றாகத் திட்டினேன். சரி நாமே ப்ரபோஸ் செய்யலாம். அதையும் அவன் பாஸ் செய்தவுடன் செய்யலாம் என்று முடிவுக்கு வந்தேன். நிச்சயமாக மறுக்க மாட்டான். தேவையான இன்டிகேஷன்கள் கிடைத்துவிட்டன.
பாஸ் செய்தால் அவன் எதிர்பார்க்காத ஒரு ட்ரீட் தருவதாக ப்ராமிஸ் செய்தேன். என்ன ட்ரீட் என்று முடிவும் செய்துவிட்டேன்.
===
என்ன ட்ரீட் ஆக இருக்கும். ஏற்கனவே பெரிய ஹோட்டலில் பார்ட்டி கொடுத்து விட்டாள். அதைவிட பெரிய ட்ரீட் இருக்க முடியாது. ஏதாவது வாங்கித் தரப் போகிறாளா? அவளைச் சுற்றியே மனம் திரிகிறதே. ஒரு வேளை... அது தானா இல்லையா. கேட்டுப் பார்க்கலாமா? கேட்டு ஏதாவது ஏடாகூடமாகப் போய்விட்டால்? இருப்பதும் போய்விட்டால்...
குழப்பமாக இருந்தது. சரவணா.. மனதை ஒருமுகப் படுத்து. படி. பாஸ் செய். பிறகு உனக்கே தெரிந்து விடுகிறது. எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
ஜி.எம். கூடுதல் லீவும் கொடுத்து விட்டார். மொத்தமாக 25 நாட்கள். தேர்வு நாட்களையும் சேர்த்து. செல்ஃபோனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு ஃப்ரென்ட் வீட்டிற்குப் படிக்கப் போய்விட்டேன். அங்கிருந்தே எக்சாம் எழுதினேன். நன்றாக எழுதி முடித்துவிட்டேன்.
சுவேதா கேட்ட போது, சுமார்தான் என்று உதட்டைப் பிதுக்கினேன். நல்ல ரிசல்ட் வந்தால் சர்ப்ரைசாக இருக்கட்டும் என்று.
===
சரவணன் தேர்வெழுத லீவ் போட்டிருக்கும் போது என்னைப் பெண் பார்க்க வந்தார்கள். அவர்களுக்கு என்னைப் பிடித்து விட்டது. பையன் யு.எஸ்.-ல் இருக்கிறான். நான் அங்கே சென்ற பிறகு இன்ஸ்ட்ருமென்டேஷனிலேயே வேலை செய்யலாம்.
யாரும் என்னைக் கேட்கவில்லை. சம்பிரதாயத்திற்குக் கேட்ட போது மவுனமாக இருந்தேன். சம்மதம் என்று எடுத்துக் கொண்டார்கள்.
என்ன முடிவு செய்வது. சரவணனுக்குக் கொடுப்பதாகச் சொல்லியிருந்த ட்ரீட் என்னாவது. அவனே சுமாராக எழுதியிருக்கிறேன் என்று சோகமாகச் சொன்னானே. பிறகு எப்படி ப்ரபோஸ் செய்வது? அப்பா வேறு நிறைய ஆசை வைத்திருக்கிறார். தங்கை வேறு இருக்கிறாள். எனக்குத் தெரிந்து எங்கள் குடும்பத்தில் இது போல் எதுவும் நிகழ்ந்ததில்லை. இப்படி ஏதாவது செய்து ஏடாகூடமாக ஆகி விட்டால்? நினைக்கவே பயங்கரமாக இருந்தது.
அவன் நன்றாக எழுதவில்லை என்று சொன்னது ஆறுதலைத் தந்தது. ஃபெயிலாகிவிட்டால் ட்ரீட் என்று ப்ரபோஸ் செய்ய முடியாது.
அப்பாவின் முடிவுக்குக் கட்டுப்படுவது என்று முடிவெடுத்தேன்.
===
சுவேதா திருமணத் தகவலைச் சொன்ன போது என்ன செய்வதென்றே தோன்றவில்லை. இப்போது சொல்லிவிடலாமா? வேண்டாம் என்று முடிவெடுத்தேன். திருமண நாளன்றுதான் எனக்கு ரிசல்ட் வருகிறது. அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என்றேன்.
===
திருமணத்திற்கு முன் வேலையை ரிசைன் செய்துவிட்டேன். மணப்பெண் கலராகவும், பூசினாற்போலவும் இருக்கவேண்டுமாம். ஆகவே வீட்டிலேயே ஈட்டிங் ட்ரீட்மென்ட்.
திருமணம் காலையில் முடிந்தது. மாலையில் ரிசப்ஷன். பரிசுடன் வந்திருந்தான் சரவணன்.
===
மேரேஜ் கிஃப்டைக் கொடுத்துவிட்டு பாஸ் ஆன செய்தியையும் தெரிவித்துவிட்டு, உங்கள் மனைவி நான் பாஸ் செய்தால் ஒரு ட்ரீட் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று சுவேதாவின் கணவனிடம் கூறினேன். அவன் மையமாகச் சிரித்தான். சுவேதாவிடமிருந்து வந்த ரியாக்ஷன் என்ன என்று என்னால் கணிக்க முடியவில்லை. கிஃப்ட் கொடுப்பதற்காக மற்றவர்கள் அவசரப் படுத்தினார்கள். சாப்டுட்டு போங்க என்றான் மணப்பையன்.
(முடிந்தது)
* * * * *
இது ஃபர்ஸ்ட் பெர்சன் நேரேடிவ் ஸ்டைலில் எழுதப்பட்டது. உரையாடல்களே இருக்காது. நடை எப்படி இருக்கிறது என்பதையும் சற்றுத் தெரிவியுங்கள்.
Thursday, December 11, 2008
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
வணக்கம். என் பெயர் சரவண முத்துக் குமார். சுருக்கமாக சரவணன். எம்.காம் வரை படித்து விட்டு, ஒரு ஆட்டோமொபைல் ஒ.இ.எம். கம்பெனியில் அக்கவுன்ட்ஸ் ஆபீசராகக் கடந்த 6 வருடங்களாகப் பணிபுரிகிறேன். இடையே ஐ.சி.டபள்யூ.ஏ. வுக்கும் படித்துத் தேர்வெழுதி வருகிறேன். இது முடித்தால் மேனேஜராகப் பதவி உயர்வு கிடைக்கும்.
நான் இதுவரை ஃபெயிலானதில்லை. இதை வைத்து என் வயதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமில்லையல்லவா?. வீட்டில் நான் இரண்டாவது பிள்ளை. அக்காவுக்குத் திருமணமாகி விட்டது. தந்தை அரசாங்க அதிகாரி. தாய் ஹோம் மேக்கர். எந்த பிக்கலும் பிடுங்கலும் இல்லை. தற்போது இந்த விவரங்கள் போதும் என்று நினைக்கிறேன்.
என் நிறுவனம் ஒரு வெளி நாட்டுக் கார் கம்பெனிக்கு உதிரி பாகங்கள் தயாரித்துக் கொடுக்கிறது. இந்த பாகங்கள் ஃபாக்டரிக்கு சப்ளை செய்வதுடன், இந்தியா முழுவதிலும் உள்ள சர்வீஸ் சென்டர்களுக்கும் சப்ளை ஆகிறது.
ஆனால் நாங்கள் பில்லிங் செய்வது அந்தக் கார் கம்பெனியின் சர்வீஸ் விங்கிற்குத்தான். இது போக வெளி நாட்டிலுள்ள இந்தக் கம்பெனியின் ஃபாக்டரிகளுக்கும் சர்வீஸ் சென்டர்களுக்கும் சப்ளை ஆகிறது.
நன்றாகப் போய்க் கொண்டிருந்த கம்பெனிப் பொருட்களில் கடந்த மூன்று மாதங்களாக குவாலிடி பிரச்சனைகள் அதிகரித்து விட்டன. ரிஜக்ஷன், ரீ-வொர்க் என வேலைப்பளு அதிகமாகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இது நான் பணிபுரியும் நிறுவனத்தின் இமேஜையே பாதித்து விட்டது.
நான் காஸ்ட் அக்கவுண்டன்சி படித்து வருவதால், ஒரு பெரிய அனலசிஸ் செய்து குவாலிடி பிரச்சனையால் லாபம் 35% வரை குறையும் என்று ஒரு விரிவான அறிக்கை அளித்திருந்தேன். இந்த அறிக்கை என் வாழ்வின் போக்கையே மாற்றும் என்று தெரிந்திருந்தால் இதை தயாரித்திருப்பேனா என்பது சந்தேகம் தான்.
=====
வணக்கம். என் பெயர் சுவேதா. படித்தது பி.இ. இன்ஸ்ட்ருமென்டேஷன். எனது ஃபேவரிட் கல்லூரியில் ட்ரிபிள் ஈ யோ, சி.எஸ்-சோ. கிடைக்காததால் கிடைத்த இன்ஸ் ட்ருமென்டேஷனில் சேர்ந்து விட்டேன். என்னுடன் கல்லூரியில் ட்ரிபிள் ஈ, சி.எஸ் சேர்ந்தவர்களுக்கு மூன்றாமாண்டே கேம்பசில் ப்ளேஸ்மென்ட் ஆகிவிட, அப்போதுதான் ஏண்டா இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்தோம் என்று வேதனைப் பட்டேன்.
நல்ல வேளையாக படித்து முடித்தவுடன், உலகின் மிகப் பெரிய இன்ஸ் ட்ருமென்டேஷன் கம்பெனியில் பூனாவில் வேலை கிடைத்தது. எல்லோருக்கும் ட்ரீம் ஜாப்-ஆக இருக்கும் இந்தக் கம்பெனியில் வேலை கிடைத்தது மிகப் பெரிய சந்தோஷத்தை அளித்தது. இப்போது வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடம் முடிந்து விட்டது.
சேர்ந்தது முதல் டூர் தான். இந்தியா, ஜெர்மனி, யு.எஸ்., சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என கோபால் பல்பொடி கணக்காக உலகம் சுற்றும் வாலிபி ஆகிவிட்டேன். இதுதான் பிரச்சனையாக முடிந்திருக்கிறது.
வீட்டில் நான் தான் முதல் பெண். தங்கை ஐ.டி. ஃபைனல் இயர் படிக்கிறாள். எனக்குத் திருமணம் செய்து விட வேண்டும் என்பது அப்பாவின் எண்ணம். இப்படி ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் எங்கே பெண் பார்ப்பது?
ஆகவே, சென்னைக்கே மாற்றல் வாங்கிக் கொண்டு வந்து விடு என்று தொந்தரவு செய்து கொண்டிருந்தார். இங்கே அனுப்பமாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள். இத்தனைக்கும் அந்தக் கம்பெனிக்கு சென்னையில் மிகப் பெரிய கிளை உள்ளது.
நான் வராமல் போகவே, அப்பாவே சென்னையில் அவருடைய நண்பர் ஜி.எம்.ஆக இருக்கும் ஒரு கம்பெனியில் வேலை வாங்கிக் கொடுத்து விட்டார்.உடனே ஜாயின் செய்ய வேண்டுமாம். நேரில் தகவல் சொல்கிறாராம். இங்கே, பேப்பர் போட்டுவிட்டு, உடனே ஃப்ளைட் பிடித்து சென்னை வந்து சேர்ந்தேன். வேலையைப் பற்றி விசாரித்தேன்.
அடக் கடவுளே, ஒரு ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஓ.இ.எம். கம்பெனியில் குவாலிடி பிரச்சனையாம். ஆகவே என்னை குவாலிடி மேனேஜராகப் போட்டிருக்கிறார்களாம். என்ன கொடுமை சரவணன் இது, என்று கேட்டேன் அப்பாவிடம். அவர் பெயர் சரவணன் இல்லை. ஆனால் இதே பெயரை தினமும் உச்சரிப்பேன் என்று எனக்கு அப்போது தெரியாது.
===
எனது அறிக்கை நன்றாக வேலை செய்தது. குவாலிடியில் எப்படி பாகங்கள் க்ளியர் ஆகிறது என்று யாருக்கும் புரிய வில்லை. குவாலிடி மேனேஜர் ஒரு பெருசு (பெரியவர்கள் மன்னிப்பார்களாக). அவர் முதலில் ஒரு பட்டறையில் டீ வாங்கிக் கொடுத்து தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர்.
படிப்படியாக முன்னேறி தற்போது குவாலிடி மேனேஜராக உள்ளார். வண்டியைப் பற்றி நல்ல அனுபவம் உண்டு. ஒரு வண்டியை பிரித்து மீண்டும் கட்டி விடுவார். ஆனால் குவாலிடி என்பது அவருடைய சிலபசில் இல்லை. ஆனாலும் ஜி.எம். சொல்லைத் தட்டாமல் குவாலிடியில் வேலை செய்து கொண்டிருந்தார்.
இந்தப் பிரச்சனைக்கு என்ன காரணம் என்று அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆட்டோ குவாலிடி மிஷின் சரியாக வேலை செய்யவில்லை என்று ரிப்போர்ட் கொடுத்தார். அந்த மிஷினின் விலை 150 லட்ச ரூபாய். அந்த மெஷினைத் தயாரித்த கம்பெனியிடம் கேட்ட போது அவர்களும் இதை மாற்ற வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.
உடனே மிஷினை மாற்ற விரும்பவில்லை நிர்வாகம். எனவே, குவாலிடிக்கு ஒரு புது ஆளைப் போட்டிருக்கிறார்களாம். அதுவும் ஒரு பெண்ணாம். ஃபாக்டரி ஹெட்டிற்கு ப்ரொடக்ஷன் ப்ரச்சனையைக் கவனிப்பதற்கே நேரம் போதவில்லை. மேலும் இன்னொரு ஃபாக்டரியையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
நான் குவாலிடி பற்றி ஒரு ரிப்போர்ட் கொடுத்ததால் அந்தப் பெண்ணை எனக்கு ரிப்போர்ட் செய்யச் சொல்லிவிட்டார். அவள் குவாலிடி மேனேஜரிடமிருந்து இன்டிபென்டன்டாக இருக்க வேண்டுமாம். என்ன கொடுமை சரவணா இது என்று என்னையே கேட்டுக் கொண்டேன்.
===
அந்தக் கம்பெனி நகரத்திலிருந்து மிகத் தள்ளி இருந்தது. கம்பெனி வாகனம் குறிப்பிட்ட நேரத்திற்குத் தான் வரும். வேலை அப்படியில்லையே. ஒரு எம்.என்.சி.யில் வேலை செய்துவிட்டு இங்கு எதுவுமே பிடிக்க வில்லை. போதாதற்கு ஒரு அக்கவுன்ட்ஸ் ஆபீசருக்கு ரிப்போர்ட் செய்யவேண்டுமாம். அவனுக்கு என்ன தெரியும் நான் அவனிடம் ரிப்போர்ட் செய்ய. என்ன செய்வது. எல்லாம் நேரம் என்று அவனிடம் சென்றேன்.
===
பழைய குவாலிடி மேனேஜர் மெஷினை மாற்ற வேண்டும் என்று சொன்னதால், முதலில் மெஷினை செக் செய்யுமாறு சுவேதாவிடம் சொன்னேன். ஏதாவது உள்ளே பழுதடைந்து இருக்கலாம் என்ற என் சந்தேகத்தையும் சொன்னேன். அவள் சரியாகக் கேட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.
இவன் என்ன சொல்வது, நாம் எஞ்சினியர் என்ன கேட்பது என்ற நிலையில் முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள். இதெல்லாம் நடக்காதுமா என்று நினைத்துக் கொண்டு, மாலை ரிவியூ செய்யலாம் என்று சொல்லி வெளியில் சென்றுவிட்டேன்.
===
முதலில் வேறு விதமாக ட்ரை செய்து பார்த்தேன். சென்சார், ப்ரோக்ராம் என்று எல்லாவற்றையும் செக் செய்தும் பேக் டு ஸ்கொயர் ஒன் தான். சரி சரவணன் சொன்னதை ட்ரை செய்து பார்க்கலாம் என்று மிஷினை ஆராய்ந்தேன். என்னுடைய பழைய கம்பெனியின் இன்ஸ்ட்ருமென்டேஷன் பாகங்கள் தான் பொருத்தப்பட்டிருந்தன.
ஒவ்வொன்றாக ஆராய்ந்த போது, ஹுர்ரே!! டக்கென்று அந்த ஃப்ளா பிடிபட்டது. எர்ரர் வேல்யூ டிடெக்ட் செய்யும் சர்க்யூட் ஷார்ட் ஆகி பைபாஸ் ஆகி விட்டிருக்கிறது. எனவே, எர்ரர் வேல்யூ வந்தாலும் பைபாஸ் ஆகி விடுவதால் குவாலிடி ஓக்கே என்று வந்து விடுகிறது.
இதைக் கண்டு பிடித்து ரிப்போர்ட் கொடுத்தவுடன் நான் நோபல் பரிசுக்குத் தகுதியானவள் போல் எல்லோரும் என்னைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். ஓவர் நைட் என்னுடைய வேல்யூ எகிறிவிட்டது. என் அப்பாவிற்கே ஜி.எம் ஃபோன் செய்து, உன் பெண் ஒரு ஜீனியஸ் என்று சர்டிஃபிகேட் கொடுத்து விட்டார். சி.டி.சி.யில் 50% இன்சென்டிவும் கொடுத்து விட்டார்
இதற்கெல்லாம் காரணம் சரவணனின் சஜஷன் தான் என்று எனக்கு தோன்றிக்கொண்டே இருந்தது. அவனுக்கு ஒரு பார்ட்டி கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.
(தொடரும்)
நான் இதுவரை ஃபெயிலானதில்லை. இதை வைத்து என் வயதைக் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமில்லையல்லவா?. வீட்டில் நான் இரண்டாவது பிள்ளை. அக்காவுக்குத் திருமணமாகி விட்டது. தந்தை அரசாங்க அதிகாரி. தாய் ஹோம் மேக்கர். எந்த பிக்கலும் பிடுங்கலும் இல்லை. தற்போது இந்த விவரங்கள் போதும் என்று நினைக்கிறேன்.
என் நிறுவனம் ஒரு வெளி நாட்டுக் கார் கம்பெனிக்கு உதிரி பாகங்கள் தயாரித்துக் கொடுக்கிறது. இந்த பாகங்கள் ஃபாக்டரிக்கு சப்ளை செய்வதுடன், இந்தியா முழுவதிலும் உள்ள சர்வீஸ் சென்டர்களுக்கும் சப்ளை ஆகிறது.
ஆனால் நாங்கள் பில்லிங் செய்வது அந்தக் கார் கம்பெனியின் சர்வீஸ் விங்கிற்குத்தான். இது போக வெளி நாட்டிலுள்ள இந்தக் கம்பெனியின் ஃபாக்டரிகளுக்கும் சர்வீஸ் சென்டர்களுக்கும் சப்ளை ஆகிறது.
நன்றாகப் போய்க் கொண்டிருந்த கம்பெனிப் பொருட்களில் கடந்த மூன்று மாதங்களாக குவாலிடி பிரச்சனைகள் அதிகரித்து விட்டன. ரிஜக்ஷன், ரீ-வொர்க் என வேலைப்பளு அதிகமாகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இது நான் பணிபுரியும் நிறுவனத்தின் இமேஜையே பாதித்து விட்டது.
நான் காஸ்ட் அக்கவுண்டன்சி படித்து வருவதால், ஒரு பெரிய அனலசிஸ் செய்து குவாலிடி பிரச்சனையால் லாபம் 35% வரை குறையும் என்று ஒரு விரிவான அறிக்கை அளித்திருந்தேன். இந்த அறிக்கை என் வாழ்வின் போக்கையே மாற்றும் என்று தெரிந்திருந்தால் இதை தயாரித்திருப்பேனா என்பது சந்தேகம் தான்.
=====
வணக்கம். என் பெயர் சுவேதா. படித்தது பி.இ. இன்ஸ்ட்ருமென்டேஷன். எனது ஃபேவரிட் கல்லூரியில் ட்ரிபிள் ஈ யோ, சி.எஸ்-சோ. கிடைக்காததால் கிடைத்த இன்ஸ் ட்ருமென்டேஷனில் சேர்ந்து விட்டேன். என்னுடன் கல்லூரியில் ட்ரிபிள் ஈ, சி.எஸ் சேர்ந்தவர்களுக்கு மூன்றாமாண்டே கேம்பசில் ப்ளேஸ்மென்ட் ஆகிவிட, அப்போதுதான் ஏண்டா இந்தப் பிரிவைத் தேர்ந்தெடுத்தோம் என்று வேதனைப் பட்டேன்.
நல்ல வேளையாக படித்து முடித்தவுடன், உலகின் மிகப் பெரிய இன்ஸ் ட்ருமென்டேஷன் கம்பெனியில் பூனாவில் வேலை கிடைத்தது. எல்லோருக்கும் ட்ரீம் ஜாப்-ஆக இருக்கும் இந்தக் கம்பெனியில் வேலை கிடைத்தது மிகப் பெரிய சந்தோஷத்தை அளித்தது. இப்போது வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடம் முடிந்து விட்டது.
சேர்ந்தது முதல் டூர் தான். இந்தியா, ஜெர்மனி, யு.எஸ்., சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என கோபால் பல்பொடி கணக்காக உலகம் சுற்றும் வாலிபி ஆகிவிட்டேன். இதுதான் பிரச்சனையாக முடிந்திருக்கிறது.
வீட்டில் நான் தான் முதல் பெண். தங்கை ஐ.டி. ஃபைனல் இயர் படிக்கிறாள். எனக்குத் திருமணம் செய்து விட வேண்டும் என்பது அப்பாவின் எண்ணம். இப்படி ஊர் சுற்றிக் கொண்டிருந்தால் எங்கே பெண் பார்ப்பது?
ஆகவே, சென்னைக்கே மாற்றல் வாங்கிக் கொண்டு வந்து விடு என்று தொந்தரவு செய்து கொண்டிருந்தார். இங்கே அனுப்பமாட்டோம் என்று அடம் பிடிக்கிறார்கள். இத்தனைக்கும் அந்தக் கம்பெனிக்கு சென்னையில் மிகப் பெரிய கிளை உள்ளது.
நான் வராமல் போகவே, அப்பாவே சென்னையில் அவருடைய நண்பர் ஜி.எம்.ஆக இருக்கும் ஒரு கம்பெனியில் வேலை வாங்கிக் கொடுத்து விட்டார்.உடனே ஜாயின் செய்ய வேண்டுமாம். நேரில் தகவல் சொல்கிறாராம். இங்கே, பேப்பர் போட்டுவிட்டு, உடனே ஃப்ளைட் பிடித்து சென்னை வந்து சேர்ந்தேன். வேலையைப் பற்றி விசாரித்தேன்.
அடக் கடவுளே, ஒரு ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஓ.இ.எம். கம்பெனியில் குவாலிடி பிரச்சனையாம். ஆகவே என்னை குவாலிடி மேனேஜராகப் போட்டிருக்கிறார்களாம். என்ன கொடுமை சரவணன் இது, என்று கேட்டேன் அப்பாவிடம். அவர் பெயர் சரவணன் இல்லை. ஆனால் இதே பெயரை தினமும் உச்சரிப்பேன் என்று எனக்கு அப்போது தெரியாது.
===
எனது அறிக்கை நன்றாக வேலை செய்தது. குவாலிடியில் எப்படி பாகங்கள் க்ளியர் ஆகிறது என்று யாருக்கும் புரிய வில்லை. குவாலிடி மேனேஜர் ஒரு பெருசு (பெரியவர்கள் மன்னிப்பார்களாக). அவர் முதலில் ஒரு பட்டறையில் டீ வாங்கிக் கொடுத்து தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர்.
படிப்படியாக முன்னேறி தற்போது குவாலிடி மேனேஜராக உள்ளார். வண்டியைப் பற்றி நல்ல அனுபவம் உண்டு. ஒரு வண்டியை பிரித்து மீண்டும் கட்டி விடுவார். ஆனால் குவாலிடி என்பது அவருடைய சிலபசில் இல்லை. ஆனாலும் ஜி.எம். சொல்லைத் தட்டாமல் குவாலிடியில் வேலை செய்து கொண்டிருந்தார்.
இந்தப் பிரச்சனைக்கு என்ன காரணம் என்று அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை. ஆட்டோ குவாலிடி மிஷின் சரியாக வேலை செய்யவில்லை என்று ரிப்போர்ட் கொடுத்தார். அந்த மிஷினின் விலை 150 லட்ச ரூபாய். அந்த மெஷினைத் தயாரித்த கம்பெனியிடம் கேட்ட போது அவர்களும் இதை மாற்ற வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.
உடனே மிஷினை மாற்ற விரும்பவில்லை நிர்வாகம். எனவே, குவாலிடிக்கு ஒரு புது ஆளைப் போட்டிருக்கிறார்களாம். அதுவும் ஒரு பெண்ணாம். ஃபாக்டரி ஹெட்டிற்கு ப்ரொடக்ஷன் ப்ரச்சனையைக் கவனிப்பதற்கே நேரம் போதவில்லை. மேலும் இன்னொரு ஃபாக்டரியையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
நான் குவாலிடி பற்றி ஒரு ரிப்போர்ட் கொடுத்ததால் அந்தப் பெண்ணை எனக்கு ரிப்போர்ட் செய்யச் சொல்லிவிட்டார். அவள் குவாலிடி மேனேஜரிடமிருந்து இன்டிபென்டன்டாக இருக்க வேண்டுமாம். என்ன கொடுமை சரவணா இது என்று என்னையே கேட்டுக் கொண்டேன்.
===
அந்தக் கம்பெனி நகரத்திலிருந்து மிகத் தள்ளி இருந்தது. கம்பெனி வாகனம் குறிப்பிட்ட நேரத்திற்குத் தான் வரும். வேலை அப்படியில்லையே. ஒரு எம்.என்.சி.யில் வேலை செய்துவிட்டு இங்கு எதுவுமே பிடிக்க வில்லை. போதாதற்கு ஒரு அக்கவுன்ட்ஸ் ஆபீசருக்கு ரிப்போர்ட் செய்யவேண்டுமாம். அவனுக்கு என்ன தெரியும் நான் அவனிடம் ரிப்போர்ட் செய்ய. என்ன செய்வது. எல்லாம் நேரம் என்று அவனிடம் சென்றேன்.
===
பழைய குவாலிடி மேனேஜர் மெஷினை மாற்ற வேண்டும் என்று சொன்னதால், முதலில் மெஷினை செக் செய்யுமாறு சுவேதாவிடம் சொன்னேன். ஏதாவது உள்ளே பழுதடைந்து இருக்கலாம் என்ற என் சந்தேகத்தையும் சொன்னேன். அவள் சரியாகக் கேட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை.
இவன் என்ன சொல்வது, நாம் எஞ்சினியர் என்ன கேட்பது என்ற நிலையில் முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள். இதெல்லாம் நடக்காதுமா என்று நினைத்துக் கொண்டு, மாலை ரிவியூ செய்யலாம் என்று சொல்லி வெளியில் சென்றுவிட்டேன்.
===
முதலில் வேறு விதமாக ட்ரை செய்து பார்த்தேன். சென்சார், ப்ரோக்ராம் என்று எல்லாவற்றையும் செக் செய்தும் பேக் டு ஸ்கொயர் ஒன் தான். சரி சரவணன் சொன்னதை ட்ரை செய்து பார்க்கலாம் என்று மிஷினை ஆராய்ந்தேன். என்னுடைய பழைய கம்பெனியின் இன்ஸ்ட்ருமென்டேஷன் பாகங்கள் தான் பொருத்தப்பட்டிருந்தன.
ஒவ்வொன்றாக ஆராய்ந்த போது, ஹுர்ரே!! டக்கென்று அந்த ஃப்ளா பிடிபட்டது. எர்ரர் வேல்யூ டிடெக்ட் செய்யும் சர்க்யூட் ஷார்ட் ஆகி பைபாஸ் ஆகி விட்டிருக்கிறது. எனவே, எர்ரர் வேல்யூ வந்தாலும் பைபாஸ் ஆகி விடுவதால் குவாலிடி ஓக்கே என்று வந்து விடுகிறது.
இதைக் கண்டு பிடித்து ரிப்போர்ட் கொடுத்தவுடன் நான் நோபல் பரிசுக்குத் தகுதியானவள் போல் எல்லோரும் என்னைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். ஓவர் நைட் என்னுடைய வேல்யூ எகிறிவிட்டது. என் அப்பாவிற்கே ஜி.எம் ஃபோன் செய்து, உன் பெண் ஒரு ஜீனியஸ் என்று சர்டிஃபிகேட் கொடுத்து விட்டார். சி.டி.சி.யில் 50% இன்சென்டிவும் கொடுத்து விட்டார்
இதற்கெல்லாம் காரணம் சரவணனின் சஜஷன் தான் என்று எனக்கு தோன்றிக்கொண்டே இருந்தது. அவனுக்கு ஒரு பார்ட்டி கொடுக்கலாம் என்று முடிவு செய்தேன்.
(தொடரும்)
Thursday, September 25, 2008
ஃபைனல் இன்டர்வியூ
கடந்த ஆறு மாதமாக முயற்சித்தும் ஒன்றும் சரியாக அமையவில்லை. இந்த முறைதான் ஃபைனல் இன்டர்வியூ வரை வந்திருக்கிறது. இப்போதும் முழுமையான திருப்தி இல்லைதான் என்றாலும் இது வரை வந்ததிலேயே இதுதான் பெஸ்ட் என்று சொல்லக்கூடியவாறு இருப்பதுதான் ஹை லைட். சம்பள விவகாரம்தான் இழுத்தடிக்கிறது.
'கூடவோ குறைச்சலோ, இதயே முடிக்கப் பாருங்க. எத்தனை நாள்தான் இப்படி தேடிக்கிட்டே இருக்கப் போறீங்க' என்று, தங்கமணி காலையில் சொன்னது நினைவில் வந்தது. எனக்கும் சரியாகப் பட்டது.
தங்கமணியின் சப்போர்ட்டால்தான் இத்தனை நாள் தள்ள முடிந்தது. இது போன்று எல்லோருக்கும் அமைவது கடினம்தான்.
அதை நினைத்துத்தான் இந்த முறை எப்படியும் முடித்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எல்லாம் முதல் ரவுண்ட் இன்டர்வியூவிலேயே பேசியாகிவிட்டது. சி.டி.சி. விவகாரம் தான் இழுத்தடிக்கிறது. அதற்காகத்தான் இந்த இன்டர்வியூ.
விரைவாகவே அலுவலகம் சென்று காத்திருக்க ஆரம்பித்தேன். இப்படி காத்திருக்க வேண்டியிருக்கிறதே என்றும் நினைத்துக் கொண்டேன். என்ன செய்வது. நேரம் அவ்வளவுதான்.
அவர் வந்துவிட்டதாக ஆபீஸ் பாய் வந்து சொன்னான். சந்திப்பு அறையில் காத்திருப்பதாகவும் சொன்னான்.
அந்த அறை நோக்கி நடந்தேன். முருகா என்று நினைத்தது மனம்.
'குட் மார்னிங்க்' என்றேன்.
'வெரி குட் மார்னிங்க்' என்றார் அவரும்.
சிறிது ஆசுவாசத்திற்குப் பிறகு,
'சொல்லுங்க.. ' என்றார்.
'நீங்கதான் சொல்லணும்' - நான்.
'நேரடியாகவே விஷயத்துக்கு வர்றேன். நீங்க சொல்ற சி.டி.சி. மார்கெட் நிலவரத்திற்கு சற்றும் பொருத்தமில்லாமல் இருக்கிறது. நீங்க வேணும்னா நாலு எடத்துல விசாரிக்கலாம். மத்ததெல்லாம் முடிந்து விட்ட நிலையில், இந்த விஷயத்திற்காக இழுத்தடிப்பது எனக்கும் நன்றாகப் படவில்லை.' என்ற ரீதியில் பேசிய அவர்,
'கூட்டி கழிச்சி பாத்தா எல்லாம் சரியாகத்தான் வரும்' என்று அண்ணாமலை ராதாரவியானார்.
'மீண்டும் ஒரு முறை யோசித்தேன். தங்கமணி சொன்னது ஞாபகம் வந்தது. முடிவெடுத்துவிட்டேன்'.
'ஓ கே. நீங்க சொல்றதுக்கே ஒத்துக்கிறேன். மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாமா?'
'குட். தாங்க்ஸ். இட்ஸ் ஃபைன் வித் மீ' என்று சொன்னார்.
'சரி வாங்க. எங்க ஜி. எம். ஐ மீட் பண்ணிட்டு, ஹெச். ஆர்.ல போய் அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் வாங்கிக்கலாம்' என்றேன்.
ஒரு வழியாக ஆறு மாதமாக காலியாக இருந்த என்னுடைய சபார்டினேட் போஸ்டுக்கு இன்று ஆள் எடுத்துவிட்ட மகிழ்ச்சியில், ஜி.எம். ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
இந்த்க்காலத்தில் தகுதி, திறமை, அனுபவத்தோடு ஆள் கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது பட்டால்தான் புரிகிறது.
மிஸ்டர். தங்கமணி, எம்.டெக்., எம்.பி.ஏ., ஜி.எம். என்று பெயர்ப் பலகை போட்ட ரூம் கதவு எங்களை வரவேற்றது.
'கூடவோ குறைச்சலோ, இதயே முடிக்கப் பாருங்க. எத்தனை நாள்தான் இப்படி தேடிக்கிட்டே இருக்கப் போறீங்க' என்று, தங்கமணி காலையில் சொன்னது நினைவில் வந்தது. எனக்கும் சரியாகப் பட்டது.
தங்கமணியின் சப்போர்ட்டால்தான் இத்தனை நாள் தள்ள முடிந்தது. இது போன்று எல்லோருக்கும் அமைவது கடினம்தான்.
அதை நினைத்துத்தான் இந்த முறை எப்படியும் முடித்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எல்லாம் முதல் ரவுண்ட் இன்டர்வியூவிலேயே பேசியாகிவிட்டது. சி.டி.சி. விவகாரம் தான் இழுத்தடிக்கிறது. அதற்காகத்தான் இந்த இன்டர்வியூ.
விரைவாகவே அலுவலகம் சென்று காத்திருக்க ஆரம்பித்தேன். இப்படி காத்திருக்க வேண்டியிருக்கிறதே என்றும் நினைத்துக் கொண்டேன். என்ன செய்வது. நேரம் அவ்வளவுதான்.
அவர் வந்துவிட்டதாக ஆபீஸ் பாய் வந்து சொன்னான். சந்திப்பு அறையில் காத்திருப்பதாகவும் சொன்னான்.
அந்த அறை நோக்கி நடந்தேன். முருகா என்று நினைத்தது மனம்.
'குட் மார்னிங்க்' என்றேன்.
'வெரி குட் மார்னிங்க்' என்றார் அவரும்.
சிறிது ஆசுவாசத்திற்குப் பிறகு,
'சொல்லுங்க.. ' என்றார்.
'நீங்கதான் சொல்லணும்' - நான்.
'நேரடியாகவே விஷயத்துக்கு வர்றேன். நீங்க சொல்ற சி.டி.சி. மார்கெட் நிலவரத்திற்கு சற்றும் பொருத்தமில்லாமல் இருக்கிறது. நீங்க வேணும்னா நாலு எடத்துல விசாரிக்கலாம். மத்ததெல்லாம் முடிந்து விட்ட நிலையில், இந்த விஷயத்திற்காக இழுத்தடிப்பது எனக்கும் நன்றாகப் படவில்லை.' என்ற ரீதியில் பேசிய அவர்,
'கூட்டி கழிச்சி பாத்தா எல்லாம் சரியாகத்தான் வரும்' என்று அண்ணாமலை ராதாரவியானார்.
'மீண்டும் ஒரு முறை யோசித்தேன். தங்கமணி சொன்னது ஞாபகம் வந்தது. முடிவெடுத்துவிட்டேன்'.
'ஓ கே. நீங்க சொல்றதுக்கே ஒத்துக்கிறேன். மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாமா?'
'குட். தாங்க்ஸ். இட்ஸ் ஃபைன் வித் மீ' என்று சொன்னார்.
'சரி வாங்க. எங்க ஜி. எம். ஐ மீட் பண்ணிட்டு, ஹெச். ஆர்.ல போய் அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் வாங்கிக்கலாம்' என்றேன்.
ஒரு வழியாக ஆறு மாதமாக காலியாக இருந்த என்னுடைய சபார்டினேட் போஸ்டுக்கு இன்று ஆள் எடுத்துவிட்ட மகிழ்ச்சியில், ஜி.எம். ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.
இந்த்க்காலத்தில் தகுதி, திறமை, அனுபவத்தோடு ஆள் கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது பட்டால்தான் புரிகிறது.
மிஸ்டர். தங்கமணி, எம்.டெக்., எம்.பி.ஏ., ஜி.எம். என்று பெயர்ப் பலகை போட்ட ரூம் கதவு எங்களை வரவேற்றது.
Wednesday, September 24, 2008
ஆர்டிகிள்ஸ் கழிஞ்ஞு . .(உனக்கு 24, எனக்கு 21)
சி. ஏ. முடிக்க வேண்டும் என்றால், ஒரு ஆடிட்டரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டே தேர்வையும் எழுத வேண்டும். இந்தப் பயிற்சிக்குப் பெயர்தான் ஆர்டிகிள்ஸ் ஷிப். சுருக்கமாக ஆர்டிகிள்ஸ்.
இந்தக் கதைக்கான காலம் 90களின் பிற்பகுதியின் முற்பகுதி ! ! !
அப்போது +2 முடித்து விட்டு நேரடியாக சி.ஏ. சேரலாம் (ஃபவுன்டேஷன் என்று பெயர்)என்றிருந்தாலும் பெரும்பாலும் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டுத்தான் சி.ஏ. வில் சேர்வார்கள். சேரும் போது 20 - 21 வயது என்றால், ஆர்டிகிள்ஸ் முடிக்கும் போது 23-24 வயது இருக்கும். சி.ஏ. முடிப்பது அவரவர் திறமை மற்றும் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.
சி.ஏ. படிக்க சிறந்த பயிற்சிப் பள்ளிகள் தென்னிந்தியாவில் சென்னையில்தான் உள்ளன. இங்கு பயிற்சி எடுக்க தங்கத்தமிழ் மகன்கள் மட்டுமின்றி, மனவாடுலு, சேட்டன்கள், கன்னடர்களோடு (இவர்களை எப்படி அன்புடன் விளிப்பது?), ஒரிசாவில் இருந்தும் மக்கள் வருவார்கள்.
அதே போல, தமிழ் நாட்டுத் தேவதைகள், சுந்தரத் தெலுங்குக் குயில்கள், சேர நன்னாட்டிளம் பெண்கள் மற்றும் கன்னடத்துப் பைங்கிளிகளும் உலா வருவார்கள். இவற்றிலெல்லாம் கவனம் செலுத்தினால் கொஞ்ச நஞ்ச சி.ஏ. பாஸும் ஃபணால் தான் என்பதால் மக்களும் சைடு கேப்பில் ஒரு லுக் விட்டு விட்டு பாடத்தைத் தொடர்வார்கள்.
எங்களது குழுவில் ஒருவன் (நான் அல்ல) அப்படிப்பட்ட பயிற்சிப் பள்ளியில் நாங்கள் படிக்கும் போது, ஒரு சேச்சியை மானசீகமாகக் காதலித்தான். அவன் அந்த வருடம் தான் காலேஜ் பாஸ் அவுட். இத்தனைக்கும் போகும் போதும் வரும் போதும் ஒரு புன்னகை ஃப்ரம் சேச்சி. அவ்வளவே.
'டேய் மச்சான், இன்னிக்கி எப்படியாவது டாபிக்கை ஓப்பன் பண்ணிரனும்டா' - நன்பண் (ந)
'இது வரைக்கும் ஒரு ஹலோவாவது சொல்லியிருக்கியா? இப்படி நேரடியா ஓப்பன் பண்ணா, இமேஜ் என்னடா ஆகும்?' - நண்பனின் நண்பர்கள் (ந ந).
'அப்போ ஏதாவது ஒரு வழி சொல்லுங்களேண்டா' - ந
'மொதல்ல போய் இன்ட்ரொடியூஸ் ஆயிக்க. அப்பறமா பில்டப் பண்ணு.' - ந. ந.
'சரி பாக்கலாம். குருவாயூரப்பா, காப்பாத்தப்பா' - ந.
நண்பன் ஒரு வழியாக சேச்சியிடம் சென்று கனெக்ஷன் செட் செய்து விட்டான்.
சேச்சிக்கு எர்ணாகுளம். என்பது முதல் தகவல்.
அடுத்த நாள் நண்பன் அவசரமாக ஊருக்குச் சென்று விட்டு, ஒரு வாரம் கழித்து தான் வந்தான்.
'மச்சான், என் ஆளு கிட்ட நோட்ஸ் வாங்கப் போறேன்டா' - ந.
'டேய். அவள விட நான் நல்ல நோட்ஸ் வச்சிருக்கண்டா' - நான்.
'இதெல்லாம் ஒரு பில்டப் டெக்னிக்குடா' - ந.
'ஓ கே, ஓ கே, கேரி ஆன்' - ந.ந.
சேச்சி வந்ததும்,
'ஹாய். குட் மார்னிங்க்' - ந.
'ஹாய். குட் மார்னிங்க்' - சே.
'க்ளாசெல்லாம் நல்லா போயிட்டிருக்கில்ல. ஒரு அர்ஜன்ட் வேலையா ஊருக்குப் போயிட்டதனால க்ளாசுக்கு வரமுடியல. உங்க நோட்ஸ தர்ரீங்களா? காபி பண்ணிட்டு குடுத்துர்றேன்?'. - ந.
'ஓ கே. இன்னிக்கு க்ளாஸ் முடிஞ்சதும் வாங்கிக்கங்க' - சே.
'ரெம்ப தேங்க்ஸ். நீங்க ரொம்ப யங்கா இருக்கீங்க. ஃபவுன்டேஷனா? ஆர்டிகிள்ஸ் சேர்ந்துட்டீங்களா?' - ந.
'நோ நோ. ஞான் எம்.காம் - ஆணு. எனக்கு ஆர்டிகிள்ஸ் கழிஞ்ஞு' - சே
மீ த எஸ்கேஏஏஏஏப்ப்ப்ப்ப் (மனசுக்குள் நண்பன்)
'ஓ. ..ஓ... ஓ...' - ந.
'ஓ. . . ஹோ. . .' - ந.ந.
இந்தக் கதைக்கான காலம் 90களின் பிற்பகுதியின் முற்பகுதி ! ! !
அப்போது +2 முடித்து விட்டு நேரடியாக சி.ஏ. சேரலாம் (ஃபவுன்டேஷன் என்று பெயர்)என்றிருந்தாலும் பெரும்பாலும் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டுத்தான் சி.ஏ. வில் சேர்வார்கள். சேரும் போது 20 - 21 வயது என்றால், ஆர்டிகிள்ஸ் முடிக்கும் போது 23-24 வயது இருக்கும். சி.ஏ. முடிப்பது அவரவர் திறமை மற்றும் அதிர்ஷ்டத்தைப் பொறுத்தது.
சி.ஏ. படிக்க சிறந்த பயிற்சிப் பள்ளிகள் தென்னிந்தியாவில் சென்னையில்தான் உள்ளன. இங்கு பயிற்சி எடுக்க தங்கத்தமிழ் மகன்கள் மட்டுமின்றி, மனவாடுலு, சேட்டன்கள், கன்னடர்களோடு (இவர்களை எப்படி அன்புடன் விளிப்பது?), ஒரிசாவில் இருந்தும் மக்கள் வருவார்கள்.
அதே போல, தமிழ் நாட்டுத் தேவதைகள், சுந்தரத் தெலுங்குக் குயில்கள், சேர நன்னாட்டிளம் பெண்கள் மற்றும் கன்னடத்துப் பைங்கிளிகளும் உலா வருவார்கள். இவற்றிலெல்லாம் கவனம் செலுத்தினால் கொஞ்ச நஞ்ச சி.ஏ. பாஸும் ஃபணால் தான் என்பதால் மக்களும் சைடு கேப்பில் ஒரு லுக் விட்டு விட்டு பாடத்தைத் தொடர்வார்கள்.
எங்களது குழுவில் ஒருவன் (நான் அல்ல) அப்படிப்பட்ட பயிற்சிப் பள்ளியில் நாங்கள் படிக்கும் போது, ஒரு சேச்சியை மானசீகமாகக் காதலித்தான். அவன் அந்த வருடம் தான் காலேஜ் பாஸ் அவுட். இத்தனைக்கும் போகும் போதும் வரும் போதும் ஒரு புன்னகை ஃப்ரம் சேச்சி. அவ்வளவே.
'டேய் மச்சான், இன்னிக்கி எப்படியாவது டாபிக்கை ஓப்பன் பண்ணிரனும்டா' - நன்பண் (ந)
'இது வரைக்கும் ஒரு ஹலோவாவது சொல்லியிருக்கியா? இப்படி நேரடியா ஓப்பன் பண்ணா, இமேஜ் என்னடா ஆகும்?' - நண்பனின் நண்பர்கள் (ந ந).
'அப்போ ஏதாவது ஒரு வழி சொல்லுங்களேண்டா' - ந
'மொதல்ல போய் இன்ட்ரொடியூஸ் ஆயிக்க. அப்பறமா பில்டப் பண்ணு.' - ந. ந.
'சரி பாக்கலாம். குருவாயூரப்பா, காப்பாத்தப்பா' - ந.
நண்பன் ஒரு வழியாக சேச்சியிடம் சென்று கனெக்ஷன் செட் செய்து விட்டான்.
சேச்சிக்கு எர்ணாகுளம். என்பது முதல் தகவல்.
அடுத்த நாள் நண்பன் அவசரமாக ஊருக்குச் சென்று விட்டு, ஒரு வாரம் கழித்து தான் வந்தான்.
'மச்சான், என் ஆளு கிட்ட நோட்ஸ் வாங்கப் போறேன்டா' - ந.
'டேய். அவள விட நான் நல்ல நோட்ஸ் வச்சிருக்கண்டா' - நான்.
'இதெல்லாம் ஒரு பில்டப் டெக்னிக்குடா' - ந.
'ஓ கே, ஓ கே, கேரி ஆன்' - ந.ந.
சேச்சி வந்ததும்,
'ஹாய். குட் மார்னிங்க்' - ந.
'ஹாய். குட் மார்னிங்க்' - சே.
'க்ளாசெல்லாம் நல்லா போயிட்டிருக்கில்ல. ஒரு அர்ஜன்ட் வேலையா ஊருக்குப் போயிட்டதனால க்ளாசுக்கு வரமுடியல. உங்க நோட்ஸ தர்ரீங்களா? காபி பண்ணிட்டு குடுத்துர்றேன்?'. - ந.
'ஓ கே. இன்னிக்கு க்ளாஸ் முடிஞ்சதும் வாங்கிக்கங்க' - சே.
'ரெம்ப தேங்க்ஸ். நீங்க ரொம்ப யங்கா இருக்கீங்க. ஃபவுன்டேஷனா? ஆர்டிகிள்ஸ் சேர்ந்துட்டீங்களா?' - ந.
'நோ நோ. ஞான் எம்.காம் - ஆணு. எனக்கு ஆர்டிகிள்ஸ் கழிஞ்ஞு' - சே
மீ த எஸ்கேஏஏஏஏப்ப்ப்ப்ப் (மனசுக்குள் நண்பன்)
'ஓ. ..ஓ... ஓ...' - ந.
'ஓ. . . ஹோ. . .' - ந.ந.
Friday, September 19, 2008
டேய் ! ! ! (நிஜமல்ல கதை) (2)
இப்போதுதான் அவர்களிருவரையும் கவனிக்க ஆரம்பித்தேன். இருவரும் ஒரே வயதுடையவர்களாக காணப்பட்டார்கள். பேச்சுக் கொடுத்த போது, இருவரும் ஒரே காலேஜில் இஞ்சினீரிங் படிக்கிறார்கள்.
அவனுக்கு துப்பாக்கி, அவளுக்கு பாய்லர். (திருச்சியில் பாய்லர் என்பது பி ஹெச் இ எல், துப்பாக்கி என்பது எச் ஏ பி பி என்னும் தொழிற்சாலையை குறிக்கும்). இருவரும் கே வி யில் படித்திருக்கிறார்கள். இங்கேயும் கன்டினியூ ஆகிக் கொண்டிருக்கிறது.
எதோ பாட சம்பந்தமாக பேசிக்கொண்டே வந்தார்கள். அடிக்கடி டேய் என்ற சொல் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. நமது துறை வேறாதலால் ஒன்றும் புரிய வில்லை. அப்படியே அசந்து விட்டேன்.
விக்கரவாண்டியின் சர்க்கரை ஆலை வாசனை என்னை பலவந்தமாக எழுப்பியது. விழுப்புரத்தில் இறங்கி ஏதாவது சாப்பிடத் தயாரானேன்.
'டேய்.. நல்லா பசிக்குது. ஏதாவது வாங்கிட்டு வா. போன தடவை என்னவோ வாங்கிட்டு வந்த. வாயில வைக்க முடியல. ஒழுங்கா வாங்கிட்டு வா..' என்றாள்.
'சரி சரி சும்மா வா. எது கெடைக்குதோ அத வாங்கிட்டு வரேன்.' அவன் விட வில்லை.
'தம்பி, விழுப்புரத்தில் உப்புமா சாப்பிட்டு இருக்கிறீர்களா, ட்ரை பண்ணி பாக்கரதுதானே. சூடா நல்லா இருக்கும்.' நான் நடுவில் புகுந்தேன்.
'அத தான் வாங்கிட்டு வாயேண்டா..'
அவனும் வாங்கிட்டு வந்தான். அவளுக்கு பிடித்து இருந்தது போல.
'தாங்க்ஸ் சார்.' என்றாள்.
மீண்டும் பல்லவன் கிளம்பியது. மீண்டும் அசர ஆரம்பித்தேன்.
முதலில் எல்லாம், ரயிலில் பயணம் செய்வதென்றால் இரவில் கூட தூங்க மாட்டேன். வேடிக்கை பார்ப்பதும், வழியில் வரும் ஸ்டேஷன்களின் பெயரைப் படிப்பதுமாக இருப்பேன். இது வாரம் ஒரு முறை வந்து செல்வதால் பார்த்து ரசிப்பதற்கு புதிதாக ஒன்றும் இல்லை என்பதால் நன்றாகத் தூங்கி விடுகிறேன்.
பெண்ணாடம் சர்க்கரை ஆலையின் வாசனையோ, அரியலூரில் அடித்து பிடித்து இறங்கும் தஞ்சாவூர் காரர்களின் ஓசையோ என்னை எழுப்பவில்லை. லால்குடியில் ஒரு வழியாக முழித்துக் கொண்டேன். எல்லாம் பழக்க தோஷம்.
அவர்களும் எல்லாவற்றையும் எடுத்து வைத்து இறங்கத் தயாரானார்கள். ஸ்ரீரங்கமா எனக் கேட்டேன்.
'ஆமாம் சார். இந்த வண்டி ஸ்ரீ ரங்கத்திலிருந்து ஜங்க்ஷன் போறதுக்குள்ள நாங்க வீட்டுக்கே போய் சேர்ந்துடுவோம்'.. அவள் என்னிடம் சொல்லிக் கொண்டே அவனை,
'டேய் எல்லாத்தையும் சரியா எடுத்து வச்சிட்டியா.. என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே,
கொள்ளிடக்காற்று அள்ளிக்கொண்டு போனது.
நானும் ஸ்ரீ ரங்கத்தில் இறங்க வேண்டும் என்பதால் அவர்களிடம் 'ஓ கே, சீ யூ, பை' என்று சொல்லி விட்டு வேறு வாசலுக்கு விரைந்தேன்.
அந்தப் பையன் அனைத்து ல்க்கேஜையும் தூக்கிக் கொள்ள,
அவள் அவளது ஊன்று கோலின் உதவியுடன் பெட்டியின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகும் எனக்கு அந்த வார்த்தை கேட்டுக் கொண்டே இருந்தது.
டேய்ய்ய்....
அவனுக்கு துப்பாக்கி, அவளுக்கு பாய்லர். (திருச்சியில் பாய்லர் என்பது பி ஹெச் இ எல், துப்பாக்கி என்பது எச் ஏ பி பி என்னும் தொழிற்சாலையை குறிக்கும்). இருவரும் கே வி யில் படித்திருக்கிறார்கள். இங்கேயும் கன்டினியூ ஆகிக் கொண்டிருக்கிறது.
எதோ பாட சம்பந்தமாக பேசிக்கொண்டே வந்தார்கள். அடிக்கடி டேய் என்ற சொல் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது. நமது துறை வேறாதலால் ஒன்றும் புரிய வில்லை. அப்படியே அசந்து விட்டேன்.
விக்கரவாண்டியின் சர்க்கரை ஆலை வாசனை என்னை பலவந்தமாக எழுப்பியது. விழுப்புரத்தில் இறங்கி ஏதாவது சாப்பிடத் தயாரானேன்.
'டேய்.. நல்லா பசிக்குது. ஏதாவது வாங்கிட்டு வா. போன தடவை என்னவோ வாங்கிட்டு வந்த. வாயில வைக்க முடியல. ஒழுங்கா வாங்கிட்டு வா..' என்றாள்.
'சரி சரி சும்மா வா. எது கெடைக்குதோ அத வாங்கிட்டு வரேன்.' அவன் விட வில்லை.
'தம்பி, விழுப்புரத்தில் உப்புமா சாப்பிட்டு இருக்கிறீர்களா, ட்ரை பண்ணி பாக்கரதுதானே. சூடா நல்லா இருக்கும்.' நான் நடுவில் புகுந்தேன்.
'அத தான் வாங்கிட்டு வாயேண்டா..'
அவனும் வாங்கிட்டு வந்தான். அவளுக்கு பிடித்து இருந்தது போல.
'தாங்க்ஸ் சார்.' என்றாள்.
மீண்டும் பல்லவன் கிளம்பியது. மீண்டும் அசர ஆரம்பித்தேன்.
முதலில் எல்லாம், ரயிலில் பயணம் செய்வதென்றால் இரவில் கூட தூங்க மாட்டேன். வேடிக்கை பார்ப்பதும், வழியில் வரும் ஸ்டேஷன்களின் பெயரைப் படிப்பதுமாக இருப்பேன். இது வாரம் ஒரு முறை வந்து செல்வதால் பார்த்து ரசிப்பதற்கு புதிதாக ஒன்றும் இல்லை என்பதால் நன்றாகத் தூங்கி விடுகிறேன்.
பெண்ணாடம் சர்க்கரை ஆலையின் வாசனையோ, அரியலூரில் அடித்து பிடித்து இறங்கும் தஞ்சாவூர் காரர்களின் ஓசையோ என்னை எழுப்பவில்லை. லால்குடியில் ஒரு வழியாக முழித்துக் கொண்டேன். எல்லாம் பழக்க தோஷம்.
அவர்களும் எல்லாவற்றையும் எடுத்து வைத்து இறங்கத் தயாரானார்கள். ஸ்ரீரங்கமா எனக் கேட்டேன்.
'ஆமாம் சார். இந்த வண்டி ஸ்ரீ ரங்கத்திலிருந்து ஜங்க்ஷன் போறதுக்குள்ள நாங்க வீட்டுக்கே போய் சேர்ந்துடுவோம்'.. அவள் என்னிடம் சொல்லிக் கொண்டே அவனை,
'டேய் எல்லாத்தையும் சரியா எடுத்து வச்சிட்டியா.. என்று கேட்டுக்கொண்டிருக்கும் போதே,
கொள்ளிடக்காற்று அள்ளிக்கொண்டு போனது.
நானும் ஸ்ரீ ரங்கத்தில் இறங்க வேண்டும் என்பதால் அவர்களிடம் 'ஓ கே, சீ யூ, பை' என்று சொல்லி விட்டு வேறு வாசலுக்கு விரைந்தேன்.
அந்தப் பையன் அனைத்து ல்க்கேஜையும் தூக்கிக் கொள்ள,
அவள் அவளது ஊன்று கோலின் உதவியுடன் பெட்டியின் வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
சிறிது நேரத்திற்குப் பிறகும் எனக்கு அந்த வார்த்தை கேட்டுக் கொண்டே இருந்தது.
டேய்ய்ய்....
டேய் ! ! ! (நிஜமல்ல கதை) ... ... (1)
எழும்பூர்... மதியம் 3.25.
அடித்து பிடித்து, முட்டி மோதி, விழுந்து எழுந்து ஒரு வழியாக பல்லவன் எக்ஸ்ப்ரசில் ஏறியாகிவிட்டது. அப்பாடா.
இ-டிக்கட் இருப்பதால் டிக்கட் எடுக்க க்யூவில் நிற்க வேண்டியதில்லை. விண்டோ சீட் செலக்ட் செய்தால் பெரும்பாலும் கிடைத்து விடுகிறது. ஆனால் யாராவது குடும்பத்தோடு வந்து விட்டால் முதலில் நமது விண்டோ சீட்டுக்குத்தான் ஆபத்து. எனக்கு பெரும்பாலும் இது நேர்ந்திருக்கிறது.
அன்றும் அப்படித்தான். குடும்பத்தோடு யாரும் இல்லை. ஆனால் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். ஹூம் என்று நினைத்துக் கொண்டேன். அவள் நிலையைப் பார்த்து சிறு சங்கடப் பட்டாலும்,
'எக்ஸ்கியூஸ் மீ, இது என் சீட்' என்றேன்.
'சாரி சார். எனதும் வின்டோதான். எதிர் சீட். எனக்கு எதிர் காத்து ஒத்துக்காது. ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. தாங்க்ஸ்.'...
பல்லவனை (எக்ஸ்ப்ரஸ்) விட வேகமாகப் பேசிவிட்டு புத்தகத்தில் ஆழ்ந்து விட்டாள்.
'அடிப்பாவி, நான் மட்டும் எதிர் காற்றுக்கு பிரண்டா, என்ன கொடுமை சார் இது.' - மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் ஓகே என்று எதிர் சீட்டில் அமர்ந்து கொண்டேன்.
'இதுவே ஒரு பையனா இருந்தா இப்படி விட்டு கொடுத்திருப்பியா?' - மிஸ்டர் மனசாட்சியின் குரல் கேட்டது.
'அந்தப் பெண்ணின் நிலையில் யார் இருந்தாலும் விட்டு கொடுத்திருப்பேன், மிஸ்டர் மனசாட்சி..' என்று பதில் சொல்லி அடக்கினேன்.
வண்டி புறப்படுவதற்கான அறிவிப்பு வந்தது. அந்தப்பெண் யாரையோ எதிர் பார்த்து டென்ஷனாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிறகு கை பேசியை எடுத்து, ஒரு நம்பரை அழுத்தி.....
'டேய் ய் ய் ய்.... எங்கடா இருக்கே' என்று சத்தமாகக் கேட்ட போது நான் உட்பட அருகில் இருந்தவர்கள் சற்று ஆடித்தான் போனார்கள்.
அவள் பின்னாலிருந்து ஒரு பையன் ..'இதோ வந்துட்டேன்' என்றான்.
'ஏன்டா டென்ஷன் பன்ற.. ஒவ்வொரு தடவையும் ஒன்னோட இதே தொல்லையா போச்சுடா...' அலுத்துக் கொண்டாள்.
பல்லவன் ஒரு வழியாக கிளம்பியது...
(தொடரும்)
அடித்து பிடித்து, முட்டி மோதி, விழுந்து எழுந்து ஒரு வழியாக பல்லவன் எக்ஸ்ப்ரசில் ஏறியாகிவிட்டது. அப்பாடா.
இ-டிக்கட் இருப்பதால் டிக்கட் எடுக்க க்யூவில் நிற்க வேண்டியதில்லை. விண்டோ சீட் செலக்ட் செய்தால் பெரும்பாலும் கிடைத்து விடுகிறது. ஆனால் யாராவது குடும்பத்தோடு வந்து விட்டால் முதலில் நமது விண்டோ சீட்டுக்குத்தான் ஆபத்து. எனக்கு பெரும்பாலும் இது நேர்ந்திருக்கிறது.
அன்றும் அப்படித்தான். குடும்பத்தோடு யாரும் இல்லை. ஆனால் ஒரு பெண் அமர்ந்திருந்தாள். ஹூம் என்று நினைத்துக் கொண்டேன். அவள் நிலையைப் பார்த்து சிறு சங்கடப் பட்டாலும்,
'எக்ஸ்கியூஸ் மீ, இது என் சீட்' என்றேன்.
'சாரி சார். எனதும் வின்டோதான். எதிர் சீட். எனக்கு எதிர் காத்து ஒத்துக்காது. ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. தாங்க்ஸ்.'...
பல்லவனை (எக்ஸ்ப்ரஸ்) விட வேகமாகப் பேசிவிட்டு புத்தகத்தில் ஆழ்ந்து விட்டாள்.
'அடிப்பாவி, நான் மட்டும் எதிர் காற்றுக்கு பிரண்டா, என்ன கொடுமை சார் இது.' - மனதுக்குள் நினைத்துக் கொண்டாலும் ஓகே என்று எதிர் சீட்டில் அமர்ந்து கொண்டேன்.
'இதுவே ஒரு பையனா இருந்தா இப்படி விட்டு கொடுத்திருப்பியா?' - மிஸ்டர் மனசாட்சியின் குரல் கேட்டது.
'அந்தப் பெண்ணின் நிலையில் யார் இருந்தாலும் விட்டு கொடுத்திருப்பேன், மிஸ்டர் மனசாட்சி..' என்று பதில் சொல்லி அடக்கினேன்.
வண்டி புறப்படுவதற்கான அறிவிப்பு வந்தது. அந்தப்பெண் யாரையோ எதிர் பார்த்து டென்ஷனாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
பிறகு கை பேசியை எடுத்து, ஒரு நம்பரை அழுத்தி.....
'டேய் ய் ய் ய்.... எங்கடா இருக்கே' என்று சத்தமாகக் கேட்ட போது நான் உட்பட அருகில் இருந்தவர்கள் சற்று ஆடித்தான் போனார்கள்.
அவள் பின்னாலிருந்து ஒரு பையன் ..'இதோ வந்துட்டேன்' என்றான்.
'ஏன்டா டென்ஷன் பன்ற.. ஒவ்வொரு தடவையும் ஒன்னோட இதே தொல்லையா போச்சுடா...' அலுத்துக் கொண்டாள்.
பல்லவன் ஒரு வழியாக கிளம்பியது...
(தொடரும்)