Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Monday, April 12, 2010

எனக்குப் பிடித்த நடிகையர் 10/10 - பார்ட் 1























பிரிக்க முடியாததும், சேர்ந்தே இருப்பதுமாகிய தமிழும் திரையுலகமும் நம்மை என்றும் காப்பதாக!

"லாங்க் லாங்க் அகோ, சோ லாங்க் அகோ, நோ படி கேன் சே ஹவ் லாங்க் அகோ" என்ற ஆங்கிலப் பழமொழி(?!)க்கேற்ப என்றோ ஒரு காலத்தில் என்னை இந்தத் தொடருக்கு அழைத்த மாமனிதர் வாழ்க வளர்க!!

ஆனால் ஒன்று. என்னைப் போன்றவர்களிடம் உங்களுக்குப் பிடித்த பத்து நடிகைகளைப் பட்டியலிடுங்கள் என்று கேட்டால், என்ன செய்வது. இது நிச்சயமாக மாட்டிவிடும் வேலைதானே. பட்டியலில் இல்லாதவர்களிடம் திட்டு வாங்குவது நானா இவர்களா? பட்டியலில் இருப்பவர்களிடம் கூட எனக்கு ஏன் முதலிடம் தரவில்லை என்ற கேள்விக்கணைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் இருக்கிறதே, இதைப் பற்றியாவது சற்று சிந்தித்தார்களா? - என்றெல்லாம் கேட்கத் தோன்றினாலும், நமக்கு அவ்வளவு காட்சிமை (சீன்) இல்லை என்பதால், ஏதோ நம் பங்குக்கு பத்தைப் போட்டு ஒப்பேற்றுவோம்.

இதில் புதுமையைப் புகுத்தும் விதமாக நான்கு கால கட்டங்களாகப் பிரித்துக் கொண்டேன்.

ஒன்று 'ஓல்டு இஸ் கோல்டு',

இரண்டு 'கலர்ஃபுல் இஸ் சியர்ஃபுல்',

மூன்று 'சினிமாஸ்கோப் - லாட்ஸ் ஆஃப் ஸ்கூப்',

நான்கு - 'லேட்டஸ்ட் - டேஸ்டஸ்ட்'.


இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் " ஓல்டு இஸ் கோல்டு "

1. டி.ஆர்.ராஜகுமாரி


தமிழ்த் திரையுலகில் நம் பாட்டன், முப்பாட்டன்களைக் கட்டிப்போட்ட பெயர், டி.ஆர். ராஜகுமாரி. சந்திரலேகா ஒன்று போதும், இவர் பெயர் சொல்ல. எம்.கே.தியாகராஜ பாகவதரின் படங்கள் ஓடியதில் டி.ஆர். ராஜகுமாரிக்குப் பெரும் பங்குண்டு. இன்றளவும், நெம்பர் ஒன் வில்லி நடிகை டி.ஆர். ராஜகுமாரிதான்.

2. பத்மினி

நாட்டியப் பேரொளியின் பிற்காலப் படங்களில் அவ்வளவாக அவரால் ஜொலிக்க முடியாவிட்டாலும், அவரது முற்காலப் படங்கள் அவருக்கு நடிப்பில் அருமையான வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தன. வஞ்சிக்கோட்டை வாலிபனில் வைஜயந்தியுடன் ஆடும் ஆட்டமும் பி.எஸ். வீரப்பாவின் 'சபாஷ் சரியான போட்டி'யும் மறக்க முடியுமா?


3. விஜயகுமாரி

விஜயகுமாரியின் 'தமிழ்' முகமும் வசன உச்சரிப்பும், ஆழ்ந்த நடிப்பும், மிகவும் சிறப்பானவை. அவரது பல படங்கள் கிளாசிக் மூவீஸ் வகையைச் சேர்ந்தவை. நானும் ஒரு பெண்ணாகட்டும், வானம்பாடியாகட்டும் அல்லது பிற படங்களாகட்டும், தன் நடிப்புத் திறமையால் சவாலான பாத்திரங்களை இயல்பாக நடித்துக் கொடுத்தவர். எஸ்.எஸ்.ஆருடன் இணைந்து நடித்தவை கூடுதல் வெற்றி கண்ட படங்கள்.


4. அஞ்சலி தேவி

நன்றாகத் துவங்கிய அவரது கேரியர், சிறந்த அம்மா கேரக்டராக வந்து முடிந்தது. அடுத்த வீட்டுப் பெண் முதலான பல படங்கள் பேர் சொல்லும் படங்கள். உன்னைக் கண் தேடுதே, 'எக்' என்று சொல்லும் ஒரு 'எக்'கில் கிக் இருப்பதை அன்னாள் ரசிகர்கள் ஒப்புக் கொள்வார்கள்!


5. பானுமதி

லேடி சூப்பர்ஸ்டார், என்ற பெயருண்டு இவருக்கு. பற்பல கண்டிஷன்கள் போட்ட ஒரே நடிகை இவர்தான். இவரது டயலாக் டெலிவரியும் மேனரிசமும் இவரது தன்னம்பிக்கையை எடுத்துக் காட்டின.


6. சரோஜாதேவி

கீச்சுக்குயில் சரோஜாதேவியை பட்டியலில் சேர்க்க வேண்டுமேயென்று சேர்த்திருக்கிறேன். பற்பல படங்கள் நடித்திருந்தாலும், என்னைப் பொறுத்த வரை, அவரது பெர்ஃபார்மன்ஸ் இன்னும் சற்று பெட்டராக இருக்கலாம். வேறொன்றும் சொல்வதற்கில்லை.


7. சாவித்ரி

சரோஜா தேவிக்குப் போட்ட கமெண்டே இவருக்கும் போடலாம்.



8. ஈ.வி.சரோஜா

ஒரு திறமையான ஆனால் சரியாகக் கவனிக்கப்படாத நடிகை. என் தங்கையில் அறிமுகமாகி, வீரத்திருமகன், குலேபகாவலி, படிக்காத மேதை என்று பற்பல படங்களில் நடித்தவர். இயக்குனர் டி.ஆர்.ராமண்ணாவின் மனைவி.


9. சச்சு

மற்றுமொரு திறமையான நடிகை, தடம் புரண்டு காமெடி நடிகையானது வரலாற்றுச் சோகம்.


10. தேவிகா

நடையா இது நடையா ஒரு நாடகமன்றோ நடக்குது என்பது வரை சரி. இடையா இது இடையா அது இல்லாதது போல் இருக்குது என்பது எந்த ஊர் நியாயம் என்பது தெரியவில்லை. இருந்தாலும், ஆண்டவன் கட்டளை முதலான நல்ல படங்களில் நடித்துள்ளார்.



அடுத்த தலை முறை நடிகைகளைப் பற்றி, அடுத்த பதிவில்....

(மேற்கண்டவற்றில் ஏதேனும் தவறுகள் இருந்தால் சொல்லுங்கள். திருத்திக்கொள்கிறேன்.)



Thursday, December 31, 2009

பெருத்த சந்தேகம்.. 1000 பின்னூட்டம் பரிசு !!

வலையுலகப் பெருமக்களுக்கு ஓர் நற்செய்தி!

வலைத் திரைத் திலகங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!!

இளையபல்லவனாருக்கு 2009ல் வந்த தமிழ்த் திரைப்படங்களைப் பற்றி ஒரு பெருத்த்த்த்த்த்த்த்த்த சந்தேகம் எழுந்துள்ளது. அதைத் தீர்த்து வைப்போருக்கு ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆயிரம்ம்ம் பின்னூட்டங்கள் பரிசாக அளிக்கப் படும்.

சந்தேகம் இதோ.....


2009ல் வந்த படங்கள்??


1. பேட்டராசு

2. இரு நதிகள்

3. இன்னொருவன்

4. ஆடாத ஆட்டமெல்லாம்

5. எங்க ராசி நல்ல ராசி (முரளி ஹீரோ)

6. இளம்புயல்

7. மஞ்சள் வெயில்

8. ஒலியும் ஒளியும்

9. பொள்ளாச்சி மாப்பிள்ளை (சத்தியராஜ்)

10. நீ உன்னை அறிந்தால் (முரளி)

11. உன்னைக் கண் தேடுதே

12. தொட்டுச் செல்லும் தென்றல்

13. வைகை

14. புதிய பயணம்

15. தலையெழுத்து

16. கண்ணா நீ எனக்குத்தாண்டா

17. ஆறுமனமே

18. சாமி சொன்னா சரிதான்

19. நேசி

20. மாதவி

21. நேற்று போல் இன்று இல்லை ((புதுகை?)அப்துல்லா)

22. ஒரே மனசு

23. இரு விழிகள்

24. வேடப்பன்

25. ஓணான்

26. கரகம்

27. வைதேகி

28. தம்பிவுடையான்

29. ஸ்வேதா 5/10 வெலிங்க்டன் ரோடு

30. தமிழகம்

31. விழியிலே மலர்ந்தது

32. மீண்டும் மீண்டும் நீ

33. வைரம்

34. தோழி

35. பச்சையாபுரம்

36. பலம்

37. எனக்குள் ஒரு காதல்


(நன்றி: விக்கிப்பீடியா)



எவ்வளவோ மூளையைப் போட்டுக் கசக்கியும் இந்தப் பேரெல்லாம் கேட்டதாகவோ, பாத்ததாகவோ நினைவில் இல்லை.


இந்தப் படங்களெல்லாம் 2009ல் ரிலீஸ் ஆனதா?

அப்படி ஆனால் அது எந்த தியேட்டரில்?

எத்தனை ஷோக்கள் ஓடியது?

இவற்றில் உலகத்தொலைக்காட்சிகளில் முதன் முறையாக 2009லேயே வந்தவை எவை?



என் சந்தேகங்களைத் தீர்த்து வைப்போருக்கு ஆயிரம் பின்னூட்டம் பரிசாக கி.பி.2100க்குள் வழங்கப்படும்

வருக! வருக!! வருக!!!

Thursday, August 6, 2009

திரைக் கலைஞன் (கதையல்ல, நிஜம்!)

சினிமா என்ற அதீதமான பொருள் அனைவரையும் ஈர்க்க வல்லது. அதன் கனபரிமாணங்கள் அளவிட முடியாதவை. சினிமா மின்சாரம் என்றால் மிகையல்ல. சிலருக்கு "பவர்". சிலருக்கு "ஷாக்". சிலருக்கு "நோ சப்ளை!". ஆனாலும் அதை நாடி, ஓடி நிதம் தேடி வருவோருக்குப் பஞ்சமில்லை.

எண்பதுகளின் இறுதிவரை சினிமா என்பது ஒரு மாயையாகவே இருந்து வந்தது. தொலைக்காட்சியின் வருகைக்குப் பின்னர் அதன் மாயை சற்று விலக, கேபிள் டிவி மற்றும் தனியார் தொலைக்காட்சிகளின் வருகை அதை மேலும் விலக்கியது. ஆயினும் என்ன பயன்? அதன் தாக்கம் அதிகரித்ததே தவிர குறையவில்லை. எல்லோருக்கும் சினிமா என்ற மோகம் ஆழ்மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கு யாரும் விதிவிலக்கல்ல.

ஒரு சிலர் தன் இயல்பு வாழ்க்கையை ஏற்கும் பொருட்டு சினிமா பற்றிய எண்ணங்களைத் தள்ளி வைக்கின்றனர். சிலரது அந்தராத்மா அதை அனுமதிப்பதில்லை. அவர்களுக்கு திரைத்துறையை விட்டு விலகி இருப்பது, இயல்பை மீறிய செயலாக இருக்கிறது. ஒரு மீனுக்குத் தண்ணீர் எவ்வளவு அவசியமோ அதைப் போன்றது கலைஞர்களுக்குச் சினிமா. அது உப்புத் தண்ணீரோ, நல்ல தண்ணீரோ, கூவம் நீரோ. அதைப்பற்றியெல்லாம் கவலையில்லை. ஆனால் அதற்குள்ளேதான் இருந்தாகவேண்டுமென்ற அவா. ஒரு உந்துதல். இந்த நிலையிலிருக்கும் ஆயிரக்கணக்கானோரை நாம் காணலாம். அனைவரின் தேடலும் ஒன்றுதான். அங்கீகாரம். அது கிடைத்துவிட்டால் மற்றதெல்லாம் தேடிவரும்.

அத்தகைய விடாமுயற்சியோடு போராடிக்கொண்டிருக்கும் பலரில் எனக்கு அறிமுகமான ஒருவரை இங்கே அறிமுகம் செய்கிறேன். இந்த அறிமுகம் அத்தகையோரது உள்ளக் கிடக்கையை நாம் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும். இங்கே நான் செய்ய இருப்பது, ஃப்ளாஷ்லைட்டை எதிர் பார்ப்பவருக்கு மெழுகுவத்தி வெளிச்சத்தைக் காண்பிப்பது போன்றது.

திரு. கார்த்திக் ராஜா. மூன்று மாதங்களுக்கு முன்னர் அறிமுகமானவர். எங்கள் நிறுவனத்தின் ஊழியர் தினத்தை முன்னிட்டு ஒரு மெல்லிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதில் எங்கள் ஊழியர்களே (என்னையும் சேர்த்து!) பாடவேண்டும் என்பது ஏற்பாடு. கார்த்திக் ராஜாவின் இன்னிசைக்குழுவை நாங்கள் புக் செய்திருந்தோம். எங்களுக்குப் பாட்டு சொல்லித்தரும் வேலையும் அவர் செய்ய வேண்டியிருந்தது. ஒரு வழியாக எங்களைத் தேற்றி பாடவும் வைத்துவிட்டார். எங்களுக்கே ஆச்சரியம். நாங்களும் பாட முடியும் என்ற எண்ணம் வந்த உடன், மேலும் ஒரு நிழச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அப்போதுதான் அவருடனான பழக்கம் அதிகமானது.

ஒரு நாள் ஒரு டி.வி.டி.யைக் கொண்டுவந்து என்னைப் பார்க்கச் சொன்னார். ஒரு குறும்படம். அவரது திரைக்கதை, வசனம் இயக்கத்தில். அப்போதுதான் அவரது திரைத்துறைப் பின்னணி குறித்து அறிந்து கொண்டேன்.


இசைப் பட்டதாரியான அவருக்கு இளையராஜா என்றால் உயிர் அல்லது அதைவிட மேல். மதுரையை அடுத்த மேலூரிலிருந்து இளையராஜாவின் இசையால் கவரப்பட்டு சென்னை வந்தவரை வழக்கம் போல் திரையுலகம் திருப்பியனுப்பியது. ஆனாலும் அயராமல், துவளாமல் மதுரை இசைக்கல்லூரியில் சேர்ந்து இசைப் பட்டம் பெற்று மீண்டும் சென்னை வந்தார். நோக்கம் ஒன்றுதான், இளையராஜாவைச் சந்திக்க வேண்டுமென்பது.

வழக்கம் போலவே அனைத்து விதமான இடர்களைச் சந்தித்தும் ஒன்றும் முடியவில்லை. இடையில் ஈரோடு சவுந்தருடன் ஏற்பட்ட நெருக்கம், இயக்கம் நோக்கி அவரைத் திருப்பியது. மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக ஏழு படங்களில் பணியாற்றிய அனுபவமும், கருத்துக் குவியல்களும் பின்புலமாக இருக்க இயக்குனருக்கான அங்கீகாரத்தை நோக்கித் தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்தக் குறும்படம், தன் நண்பருக்காக இயக்கியிருக்கிறார். புகைப்பழக்கத்தைப் பற்றி மிக மிக மிக வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருக்கிறார். அந்தக் குறும்படத்தைப் பற்றிய விமர்சனமும் அவருடனான என் கலந்துரையாடலின் தொகுப்பும் அடுத்த பதிவில்.


அவருடனான கலந்துரையாடலில் சினிமாக்காரர்களைப் பற்றிய எனது புரிதல்கள் தெளிவுபட்டன. இது வரை சினிமாத் துறைக்கும் எனக்கும் சம்பந்தமில்லாமல் இருந்தது என்ற என் நிலையில் ஒரு மாற்றம்! ஒரு வருங்கால இயக்குனர், இசையமைப்பாளருடனான பழக்கம் என்பது சினிமா என்ற ஊடகத்தை நோக்கிய எனது பார்வையை 'ஜூம்' செய்திருக்கிறது!.

இசையின் பயணம் இசையோடு இயக்கத்தை நோக்கி என்பதைப் புரிந்து கொண்டேன்.

(திரு கார்த்திக் ராஜாவுக்கு, தமிழ்ஸ்டூடியோ.காம் நடத்தும் குறும்பட வட்டம் குறித்துத் தெரிவித்திருந்தேன். அவர் 8.8.9 அன்று நடைபெறும் நிகழ்ச்சிக்குச் செல்வதாகக் கூறியுள்ளார்.)

Monday, July 20, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி . . . ௫

திரைக்கதை எழுதுவது என்பது வெறும் கதையை சொல்லும் விதத்தை வரையறுப்பது மட்டுமன்று. அதனோடு, காட்சியமைப்பு, அதன் பின்னணி, அதன் பிற தேவைகள் ஆகியவற்றையும் பட்டியலிடுவதாகும். நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம் எனினும், நாம் மெதுவாகவும், முழுமையாகவும் அந்தத் தூரத்தைக் கடப்போம்.

திரைக்கதை அமைப்பதன் அடிப்படை முறைகளைப் பற்றி பார்த்து வருகிறோம். இதுவரை, த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சர் முறையையும், கதா நாயகன் பயண முறையைப் பற்றியும் தெரிந்து கொண்டோம். புதிதாக வருபவர்கள் திரைக்கதை என்ற பிரிவில் கோர்க்கப்பட்டுள்ள இடுகைகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

இனி, சீக்வென்சிங் தியரியைப் பற்றி பார்ப்போம்.

இந்த முறையை ஃப்ராங்க் டேனியல் என்ற அமெரிக்க திரைக்கதை வல்லுனர் கண்டுபிடித்தார். எட்டு பிரிவுகளாகக் கதையைப் பிரித்து அலசும் முறையை சீக்வென்சிங்க் என்று அறிமுகப் படுத்தினார்.

இதுவரை கூறப்பட்டு வந்த கதா நாயகன் சார்ந்த திரைக்கதை அமைப்பிலிருந்து மாறுபட்டு கதா நாயகனுடன், இரண்டாவது முக்கிய கேரக்டரைச் சுற்றி கதையை அமைக்கும் முறைதான் இந்த சீக்வென்சிங் தியரி. இரண்டாவது கேரக்டரை அவர் "பாண்டிங் கேரக்டர்" (பிணைக்கும் பாத்திரம்) என்று அழைக்கிறார். அது கதா நாயகியாகவும் இருக்கலாம், வில்லனாகவும் இருக்கலாம். அவர்கள் பார்வையிலிருந்தும் கதையைக் கொண்டு செல்லும் போது அதன் விறுவிறுப்பு கூடும் என்பது அவர் கருத்து.

இனி இதன் பிரிவுகளைப் பார்ப்போம். இது மேலே சொன்னது போல் எட்டு பிரிவுகளாக உள்ளது. அமெரிக்க திரைக்கதையாசிரியர்கள் ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு ரீல் (10 முதல் 15 நிமிடங்கள்) ஒதுக்குவார்கள். அவர்களது படம் அதிக பட்சம் 100 நிமிடங்களைத் தாண்டாது. எனவே இந்த ஃபார்முலா அவர்களுக்கு ஒத்து வரும். நமது படங்கள் குறைந்த பட்சம் 150 நிமிடங்களாவது ஓடவேண்டும். அப்போதுதான் படம் பார்த்த திருப்தி ரசிகனுக்கு இருக்கும்!

1. செட் அப் (களப்படுத்துதல்):- த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சரில் முதல் பகுதியான செட்டிங் பகுதி என்று இதைக் கொள்ளலாம். களத்தைத் தெளிவாக விளக்குவது ஒரு படத்தை நன்கு புரிந்து கொண்டு அதில் ஈடுபட உதவுகிறது. கேரக்டர்களை அறிமுகப்படுத்துவது முதலானது இங்கு நிகழ்கிறது. உதாரணமாக, துடிக்கும் கரங்கள் படத்தில், ஜெய்சங்கரின் பிறந்த நாள் விழாவைக் காட்டுவார்கள். அவர் மேலே இருந்து பணத்தை அள்ளி வீச அதைப் பொறுக்க வரும் மக்கள் கூட்டத்தில் சிக்கி ஒரு சிறுவன் மரணமடைவதாக வரும். ஆனால் ஜெய்சங்கர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார். ரஜினியோ கொதித்துப் போய்விடுவார். ஆக இந்த ஒரு காட்சியில் வில்லனையும் ஹீரோவையும் களப்படுத்தி அதன் தாக்கத்தைப் படம் பார்ப்போர் மனதில் விதைத்து விடுகிறார், திரைக்கதை ஆசிரியர்.

2. பிணைக்கும் நிகழ்வு (பாண்டிங் இவண்ட்):- கதையின் போக்குக்கு அடிப்படையாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிகழ்வுகள் இருத்தல் வேண்டும். இந்த நிகழ்வு இல்லையெனில் கதை இல்லை. ராமன் வனவாசம் புறப்பட்டது அந்தக் கதையின் துவக்க நிகழ்வு. மஹாபாரதத்தில் அஸ்தினாபுரம் கட்டப்பட்டு அங்கு துரியோதனன் அவமானப்படுத்தப்பட்டது பிணைக்கும் நிகழ்வு. ஆக பிணைக்கும் நிகழ்வுகள், ஒரு கதையின் அடித்தளமாக இருக்கின்றன. அந்த நிகழ்வுகளை எந்த அளவுக்குத் தனிமைப்படுத்தி ஸ்பெஷலாகக் காட்டுகிறோமோ அந்த அளவுக்கு திரைக்கதை சிறப்பாக அமையும்.

3. எதிர் வினை:- கதா நாயகனின் இமேஜ் உயர வேண்டுமென்றால், வில்லனின் திறமையும் அதிகமாக இருக்க வேண்டும் என்று முன்னமே சொல்லியிருக்கிறேன். ஆக எதிர்வினை (அட்டாக்கிங் ஃபோர்ஸ்) பற்றிய பகுதி மிகத் தரமாகச் சொல்லப்பட்டிருத்தல் வேண்டும். பயங்கரமாக உருவகப் படுத்திக் காட்டுவதோ, கொலை, டார்ச்சர் போன்றவற்றைக் காட்டுவதோ அருவருப்பை ஏற்படுத்தலாம். கத்தியின்றி ரத்தமின்றி ஒரு வில்லனை கேரக்டரைஸ் செய்யலாம். ஒவ்வொரு படத்தின் கதைக்கேற்ப இதன் அளவை நிர்ணயிக்க வேண்டும்

4. மோதல் நிகழ்வு (லாக்கிங் இவண்ட் ):- மோதல் என்பது ஹீரோவுக்கும் இரண்டாம் கேரக்டருக்கும் இடையே ஏற்படும் மோதலாகக் கொள்ள வேண்டும். இங்குதான் முக்கியத் திருப்பம் ஏற்படுகிறது. அதுவரை அமைதியாகச் சென்று கொண்டிருந்த படம் இங்கே வேகமெடுக்கிறது. உதாரணமாக, வில்லனுடன் ஏற்படும் சவாலான நிகழ்வை சுட்டலாம்.

5. உச்ச நிகழ்வு (எஸ்கலேடிங் இவண்ட்):- பொறுத்தது போதும் பொங்கி எழு என்ற வசனத்தை வரவைக்கக் கூடியதான நிகழ்வாக இந்த நிகழ்வு இருக்க வேண்டும். ஹீரோ கேரக்டரைசேஷன், அவன் எதையும் தாங்குபவனாகவும், தனக்குக் கெடுதல் செய்பவரையும் மன்னித்தருள்பவனாகவும் இருக்குமாறு அமைக்க வேண்டும். அத்தகைய அமைதிப்பூங்காவே, எரிமலையாகக் குமுற வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுவதை இந்த நிகழ்வு எடுத்துக் காட்ட வேண்டும். இப்படியாக வரும் போது திரைக்கதை லாஜிக்கலாக அமைகிறது. உதாரணமாக, ராமாயணத்தில் சீதையை ராவணன் கவரவில்லை என்றால் அங்கே கதையில்லை. மஹாபாரதத்தில், சூதாடி வனவாசம் செய்த பின்பும் நிலம் திருப்பித்தராத நிகழ்வு இல்லையென்றால் மஹாபாரதப் போர் இல்லை.

6. போராட்டம்:- இது இறுதிப் போர். இதில் கதா நாயகன் முயற்சிகளும் அதைத் தடுக்கும் வில்லனின் செயல்களும் தெளிவாகக் காட்டப்பட வேண்டும். முதல் முயற்சியில் கதா நாயகன் தோற்பது போலவும், வில்லன் ஜெயிப்பது போலவும், அதன் பிறகு சுய பரிசோதனை செய்யும் கதா நாயகன் தன்னிடத்தில் இருக்கும் குறைக்களைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்து மீண்டும் மோதுவது போலவும், இறுதியில் வெற்றி பெறுவது போலவும் அமைப்பது சாலச் சிறந்தது.

7. வெற்றி:- போராட்டத்தில் வெற்றி முக்கியமானது. எல்லோருக்கும் ஹீரோதான் ஜெயிப்பான் என்று நன்றாகத் தெரியும். ஆனாலும் ஏன் படம் பார்க்க வருகிறார்கள்? அவன் மற்ற படங்களை விட இங்கே எப்படி வித்தியாசமாக வெற்றி பெறுகிறான் என்பதைப் பார்க்க வருகிறார்கள். அந்த வெற்றி பெறும் நிகழ்வை வித்தியாசமாகக் காட்டுவது அந்தப் படத்தின் வெற்றியையே நிர்ணயிக்கும் என்றால் மிகையல்ல.

8. பரிசு:- வெற்றி பெறுவதுடன் படம் முடிந்துவிட்டால் நன்றாக இருக்காது. அதன் பிறகு அவனுக்குக் கிடைக்கும் பரிசும் அந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக இருத்தல் வேண்டும். அந்த வெற்றிக்கு ஈடான பரிசே ரசிகனின் நெஞ்சில் நிலைத்திருக்கும். வில்லனைத் தோற்கடித்த பிறகு அவனது மகளை மணந்து கொள்ளுதல். அவனிடமிருந்த பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைத்து அவர்களது அன்புக்குப் பாத்திரமாதல், புதிய பதவி, அங்கீகாரம் ஆகியவை பரிசுகளாக இருக்கலாம்.

இப்படியாக கதையைத் துருவித் துருவி அலசி ஆராய்ந்து அக்கு வேறாகப் பிரித்து அமைக்கும் போது அது வெற்றிப்படத்துக்கான திரைக்கதை ஆகிறது.

இந்தப் பகுதி சற்றே தொழில் நுட்பம் சார்ந்தது. நாம் அடுத்த கட்டத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டுவது. ஆகவே, இதை நன்றாக நெஞ்சில் நிறுத்துங்கள். உங்கள் சந்தேகங்கள், கருத்துகள் ஆகியவற்றை பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.

நன்றி. மீண்டும் சந்திப்போம்.

Saturday, July 11, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி? . . .4

நண்பர்களே! சென்ற பதிவுகளில் திரைக்கதையைப் பற்றி ஓரளவு அறிமுகப்படுத்திக் கொண்டோம். இனி தொடர்ந்து பார்ப்போம்.

சென்ற பதிவில் காமெடி, டிராஜெடி என்று இரு பிரிவுகளைப்பற்றி பார்த்தோம். காமெடி என்றால் சினிமா வழக்கில் நாம் நினைக்கும் காமெடி அல்ல. பொதுவாக படம் ஆரம்பிக்கும் போது இருந்த நிலையை விட மேம்பட்ட நிலையில் கதா நாயகன் இருந்தால் அது காமெடி படம்!

படம் ஆரம்பிக்கும் போது இருந்த நிலையை விட கீழான நிலையில் அதாவது அவல நிலையில் படத்தின் முடிவில் இருந்தால் அது டிராஜெடி!

=====

சரி, சென்ற முறை த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சர் திரைக்கதை அமைப்பைப் பற்றி பார்த்தோம். இப்போது மற்ற முறைகளையும் பார்ப்போம்.

திரைக்கதை ஒரு ஹீரோவை மையமாக வைத்துத்தான் எழுதப்படுகிறது என்பதை நாம் நன்கு அறிவோமல்லவா? அந்த அடிப்படையில் கீழ்கண்ட திரைக்கதை அமைக்கும் முறைகள் உள்ளன.

1. கதா நாயகனின் பயணம்
2. சீக்வென்சிங்
3. ஸிட் ஃபீல்ட் மாடல்

இவையனைத்திற்கும் த்ரீ ஸ்ட்ரக்சர் தான் அடிப்படை. இனி இந்த திரைக்கதை அமைப்பு முறைகளைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

=====

1. கதா நாயகன் பயணம்.

நமது கதைகள் பெரும்பாலும் கதா நாயகன் சார்ந்துதான் அமையப்பெற்றிருக்கும். அவனது சாதனைகளும் சோதனைகளும்தான் கதையை ஏற்படுத்துகின்றன என்ற அடிப்படையில் இந்தத் திரைக்கதை அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.


இந்த மாதிரி திரைக்கதையை கீழ்கண்டவாறு பிரிக்கலாம்.

அ. கதா நாயகனை எதிர் கொள்ளும் சவால்: இந்த சவால் அவனாகவே ஏற்றுக்கொள்வதாகவும் இருக்கலாம். அல்லது அவன் மீது திணிக்கப் படலாம். எது எப்படி இருந்தாலும், அமைதியான வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தும் நிகழ்வை மையப்படுத்தும் பகுதி இது.


ஆ. அந்த சவாலை சமாளிக்கும் போது ஏதிர்படும் சங்கடங்கள்: சவாலை வென்றாக வேண்டிய சூழ்நிலையில் கதாநாயகன் என்னென்ன சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பது இந்தப் பகுதியில் தெரிவிக்கப் படும். சங்கடங்களின் தாக்கம் அதிகமாகும் போது ஹீரோ அதிக அளவில் மதிக்கப் பெறுகிறான்.


இ. இந்தப் பாதையில் கதா நாயகனுக்குக் கிடைக்கும் புதிய சக்தி அல்லது யுக்தி: சங்கடங்களை எதிர்கொள்ளத் தேவையான சக்தி சமயத்தில் கிடைக்கும் போது ஹீரோவின் பயணம் சற்று சுலபமாகிறது. இந்தப் பகுதி மிகஆழமாக அலசப்படும் போது ஹீரோவின் இமேஜ் அதிகரிக்கிறது. இந்தப் பகுதிதான் படம் பார்க்கும் மக்கள் தங்களை அந்தப் படத்துடன் ஒப்பிட்டுக்கொள்ள (ரிலேடிங் ஒன்செல்ஃப் டு தி மூவி) உதவுகிறது. எந்த அளவு ஒரு ரசிகன் தன்னைப் படத்துடன் ஒப்பிட்டுக் கொள்கிறானோ அந்த அளவு அவன் அந்தக் கதையுடன் ஒன்றி விடுகிறான். ரசிகர்கள் கதையுடன் ஒன்றும் போது திரைப்படம் இயல்பாகவே வெற்றியடைகிறது!!


ஈ. புதிய சக்தி கொண்டு சவாலை முறியடித்தல் அல்லது வெற்றி பெறுதல்: இது க்ளைமாக்ஸ் எனப்படுகிறது. தனது அடிப்படைத் திறமை, சவால் காரணமாக தான் அனுபவித்த துன்பங்கள், புதிய சக்தி கொடுத்த நம்பிக்கை ஆகியவற்றின் மூலம், அவனது திறமை வெளிப்பட்டு சவாலை முறியடித்து வெற்றி பெறும் பகுதி இது. இதன் மூலம் கதா நாயகனின் பயணம் நிறைவு பெறுகிறது. அத்துடன் கதையும் முடிவடைகிறது.

இதுதான் கதா நாயகன் பயணம் என்ற முறையில் அமைக்கப் படும் திரைக்கதைகளின் அமைப்பு. இந்த வகையிலும் படம் பார்த்த ஞாபகம் வருகிறதல்லவா? ஆனால் பெரும்பாலும் ஆங்கிலப் படங்கள் தான் நம் நெஞ்சில் நினைவாடும்!!!

===

இது த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சரில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது??

த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சரில், சூழ் நிலையைப் புரியவைப்பது ஒரு பெரும் பகுதி.

ஆனால், அப்படித் தேவையில்லை. கதையுடனான போக்கிலேயே சூழலைப் புரிய வைத்துவிடலாம் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் கதா நாயகனின் பயணம் என்ற முறை ஏற்பட்டது. சூழலை அதன் போக்கிலேயே காட்டி, மெல்ல மெல்ல நம்மை திரைக்கதைக்குள் இழுக்கும் முயற்சி இது.

த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சரில் ஹீரோ சவாலை நேரடியாக வெல்வதாகக் காட்டும் முயற்சி நடைபெறும். இங்கு அப்படியல்ல. ஹீரோ சாமானியமானவன். ஆனால் அவன் எதிர் கொள்ளும் சவாலைச் சமாளிக்க அவனுக்கு ஒரு புதிய சக்தி தேவைப் படுகிறது. அந்த புதிய சக்தி எப்படி அவனுக்குக் கிடைக்கிறது. அதை அவன் எப்படி பயன் படுத்துகிறான் என்பது போன்ற நிக்ழச்சிகள் விரிவாக அலசப்படும் போது அந்தத் திரைக்கதை லாஜிக்கலாக அமைகிறது.

இதுதான் த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சருக்கும் ஹீரோ ஜர்னிக்கும் உள்ள வேறு பாடு. இந்த மாதிரி திரைக்கதைகளில் லாஜிக் அதிகமாக இருக்க வேண்டும். இது சூப்பர் ஸ்டார்களுக்கும் சூப்பர் ஸ்டாராக நினைப்பவர்களுக்கும் ஒத்துவராத மாடல். அதனால்தான் இந்த மாதிரி படங்கள் அதிகம் தமிழில் வருவதில்லை.

===

இப்போது நாம் முதலில் பார்த்த கதையை இந்த முறையில் திரைக்கதையாக அமைத்துப்பார்த்தால்,

1. சவால் பகுதி: நேரடியாகவே கதா நாயகன் ஏமாற்றப்படும் காட்சிகளைக் காட்டிவிடலாம். அதன் ஊடாக களனை அவ்வப்போது அறிமுகப்படுத்தும் போது முடிச்சுகள் மெள்ள மெள்ள அவிழும்.

2. சங்கடங்கள் பகுதி: அந்த சவால் காரணமாக அவன் நகரம் நோக்கி வந்த காரியம் நிறைவேறாமல் போகிறது. அல்லது அவனுக்குக் கிடைக்க வேண்டியது கிடைக்காமல் போகிறது.

3. புதிய சக்தி: அந்த எதிரிகளை எதிர் கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்வது. (அவர்கள் தொழிலில் போட்டியாக வருவது போன்றவை). மேலே சொன்னது போல் இங்கே லாஜிக் இடித்தால் அது த்ரீ ஆக்ட் ஆகிவிடும். இது எந்த அளவுக்கு மக்களைக் கவர்கிறதோ அந்த அளவுக்குத் திரைக்கததை வெற்றி பெறும்.

4. சவாலை முறியடித்தல் வெற்றி பெறுதல்: இது இறுதியான தீர்வாக அமைந்து, கதா நாயகனின் வாழ்க்கைப்பயணத்தில் அமைந்த தடைக்கற்கள் தகர்த்தெறியப்பட்டு அவன் வெற்றியுடன் மேலும் முன்னேறுகிறான் என்று நிறைவு செய்யும் பகுதி. இதை க்ரிஸ்ப் ஆக வைத்துக் கொள்ள வேண்டும். வசனங்களால் இழுக்காமல், காட்சியமைப்புகளால் மெசேஜ் சொல்லும் போது ரீச் அதிகமாக இருக்கும்.

இப்படியாக ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தியுடன் ஒரு ரசிகன் திரையரங்கை விட்டு வெளியே வருவதோடு மட்டுமல்லாது மீண்டும் மீண்டும் அந்தப்படத்தைப் பார்க்கவும் செய்வான்.

===

சரி நண்பர்களே, அடுத்த பகுதியில் மற்ற திரைக்கதை முறைகளையும் அலசுவோம்.

உங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதுடன், தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டுப் போடுவதன் மூலம் இந்தப் பதிவுத் தொடரை அனைவரும் படித்துப் பயனடையுமாறு செய்யலாம்.

நன்றி...

(தொடரும்...)

Saturday, July 4, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி? . . .3

சென்ற பதிவில், த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சர் பற்றி தெரிந்து கொண்டோம். முதல் பகுதியில் சொன்ன கதைக்கு திரைக்கதை அமைக்குமாறும் கேட்டிருந்தேன். இப்போது த்ரீ ஆக்ட் திரைக்கதை (அவுட்லைன்) எப்படியிருக்கும் என்று பார்ப்போம்.


கதை:

ஒரு கிராமத்து இளைஞன். நகரத்திற்கு வரும்போது ஏமாற்றப் படுகிறான். கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி ஏமாற்றியவர்களை திருத்துகிறான். இந்தக் கதைக்கு ஒரு திரைக்கதை அமைத்துத்தாருங்கள். ஆறு முதல் பத்து வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.


இதற்கான த்ரீ - ஆக்ட் ஸ்ட்ரக்சர்.

1. செட்டிங் (சூழல்)

கிராமத்து இளைஞன், கிராமம், நகரம், நகர மாந்தர் இயல்பு இவை அடிப்படை சூழல்கள்

2. பிரச்சனை, போராட்டம் (சிக்கல்)

ஏமாற்றப்படுதல், தெளிவு பெறுதல், முன்னேறுதல்

3. தீர்வு

ஏமாற்றியவர்களைக் காப்பாற்றுவது, திருந்தச் செய்வது, வெற்றி பெறுவது.

இப்படி பார்ட் பார்ட் ஆக எடுத்துக் கொள்ளலாம். இதையே திரைக்கதை அவுட்லைன் ஆக சொல்லும் போது இப்படிச் சொல்லலாம்.

1. கிராமத்து சூழலையும், கள்ளம் கபடமற்ற மக்களையும், ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு, நம்பி வாழ்வதையும் இத்தகைய சூழலில் வளரும் இளைஞன் அவர்களின் அன்புக்குப் பாத்திரமாவதையும் சொல்ல (காட்ட) வேண்டும்.

2. அத்தகைய இளைஞன் தவிர்க்க முடியாத சூழலில் நகரத்திற்கு வருவதைக் காட்ட வேண்டும்.

3. நகரத்து சூழலையும், இளைஞனை ஏமாற்றப் போகும் மனிதர்களின் இயற்கை அராஜக நிகழ்வுகளையும், நகரில் இதெல்லாம் சாதாரணம் என்பதான தோற்றத்தை ஏற்படுத்தக் கூடிய காட்சிகளையும் காட்ட வேண்டும்.

இது செட்டிங் (சூழல்) பார்ட். ஸ்டார்டர் மாதிரி. இப்படிப்பட்ட சூழலில் நகருக்கு வரும் இளைஞன் என்ன பாடு படப்போகிறானோ என்ற எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்க வேண்டும். இதுதான் இந்தப் பகுதியின் அப்ஜெக்டிவ்.



4. நகரத்தில் மனிதர்களை நம்புவதையும், அதனால் ஏமாற்றப்பட்டு இருக்கும் உடைமைகளை இழப்பதையும் காட்ட வேண்டும். (இங்கே, கிராமத்து நிகழ்வையும், அதே போன்று நகரத்தில் மாறுபட்ட நிகழ்வையும் காட்டலாம்)

5. மேலும் திரைக்கதைக்கு வலு சேர்க்க, இரண்டாவது முறையும் ஏமாற்றப்படுவதாகக் காட்டலாம். ஆனால் ஓவர்டோஸ் ஆகிவிடாமல் இருக்க வேண்டும்.

6. இதிலிருந்து பாடம் கற்பதாகவும், உழைக்கும் வழி கிடைப்பதாகவும் காட்டவேண்டும்.

7. அந்த உழைப்பிலிருந்து முன்னேறும் நிகழ்வுகள் படிப்படியாகக் காட்டப்பட வேண்டும். (இங்கேதான் லாஜிக் முக்கியம். பெரும்பாலான படங்களில் ஒரு பாட்டில் நாயகன் உயரத்திற்குச் சென்றுவிடுவான்.)

8. அப்படி வளரும் இளைஞன் ஏமாற்றியவர்களுக்கு சிறு சிறு இடைஞ்சல்கள் தருவதாகக் காட்டுவது இளைஞன் வெற்றிப்பாதையை நோக்கிச் செல்வதாகக் காட்டும்.


இது சிக்கல் பகுதி. மெயின் கோர்ஸ். விஸ்தாரமாகவும், காரசாரமாகவும் இருக்கவேண்டும். பாசிடிவ் திங்கிங் இருந்தால் எப்படி ஒருவன் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தை விதைக்கக்கூடிய அளவுக்கு இருத்தல் அவசியம்.


9. இறுதியில் ஏமாற்றியவர்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டு முழிக்க, இளைஞன் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற வகையில் நிகழ்வை ஏற்படுத்த வேண்டும்.

10. ஏமாற்றியவர்கள் செய்வதறியாது நிற்க, இளைஞன் தானாகவே சென்று உதவி செய்து அவர்களை மீட்பது போலவும், அதற்கு அவர்கள் நன்றிக்கடன் பட்டு திருந்துவது போலவும் காட்சியமைப்பு வேண்டும்.

11. இறுதியில் உண்மையே வெல்லும் என்ற மெசேஜுடன் திரைப்படம் முடியவேண்டும்.

இது தீர்வுப்பகுதி. டெஸர்ட். சுவீட்டாகவும், ஹாட்டாகவும், கூலாகவும் இருக்க வேண்டும். குலாப்ஜாமூன் வித் ஐஸ்க்ரீம் காம்பினேஷன் போல.

என்ன படித்து விட்டீர்களா??? படிக்கும் போதே பல்வேறு திரைப்படங்களின் காட்சிகள் கண்முன் நிழலாடியிருக்குமே!!!

இந்த அடிப்படையில்தானே பெரும்பாலான படங்கள் வருகின்றன? ஆனால் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதது போல் வெற்றிபெறச் செய்வதில்தான் திரைக்கதை அமைப்பாளரின் கைவண்ணம் இருக்கிறது.


இது அடிப்படை திரைக்கதை அமைப்பு முறை. இதே முறையில் எந்தக் கதையையும் திரைக்கதையாக மாற்றி விடலாம்.

இவ்வளவுதானா?

இல்லை. இனிமேல்தான் எல்லாம்....

இப்படி அமைக்கப் பட்ட திரைக்கதை ப்ளெயின் ரைஸ் போன்றது. இதனுடன், காதல், டூயட், காமெடி, சென்டிமென்ட் போன்ற மசாலாக்களை சேர்த்து, நமக்கு பிரியாணியாக வழங்குகிறார்கள். ஒரே பிரியாணியை மீண்டும் மீண்டும் கொடுத்தால் அரைத்த மாவையே அரைக்கிறார்கள் என்பார்கள்.

உண்மையில் எல்லோரும் அரைத்த மாவைத்தான் அரைக்கிறார்கள். ஆனால் அது வெளியே தெரியாத அளவிற்கு அரைப்பதில்தான் இருக்கிறது திறமை.

====

இதுவரை அடிப்படை திரைக்கதை அமைக்கும் முறையைத் தெரிந்து கொண்டோம். மேலும் சில வகைகள், காமெடி, டிராஜெடி போன்றவற்றைத் தெரிந்து கொள்வோம்.

தொடர்ந்து வாருங்கள்...

எக்சர்சைஸ்: மேலே சொன்ன திரைக்கதையை மையமாகக் கொண்டு நீங்கள் பார்த்த வெற்றிப் படங்கள் என்னென்ன? தோல்விப்படங்கள் ஏதேனும் உண்டா?? பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.

(தொடரும்)

தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டுப்ப்போடுவது, இந்தப்பதிவைப் பலரும் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தும்.

Tuesday, June 30, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி . . . 2

சென்ற பகுதியில் தமிழ் சினிமாவின் ஒரு அறிமுகத்தையும், திரைக்கதையின் முக்கியத்துவத்தையும் பார்த்தோம். ஒரு கதையைக் கொடுத்து அதற்கான திரைக்கதையை அமைக்குமாறும் கேட்டுக்கொண்டேன். நண்பர் சுரேஷ், உடனடியாக ஒரு திரைக்கதையை எழுதி அசத்திவிட்டார். அதை இங்கே பார்க்கலாம்.

இப்போது திரைக்கதையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.


திரைக்கதை என்றால் என்ன?

ஒரு கதையை திரைப்படமாக எடுப்பதற்காக மாற்றப்படுவது திரைக்கதை எனப்படுகிறது. கதை என்பது நாம் படித்துத் தெரிந்து கொள்வது. அதில் படிப்பவரின் கற்பனைக்குத்தான் முதலிடம். ஆனால் திரைப்படம் அப்படியல்ல. பார்ப்பவரை நம் பார்வைக்குத் திருப்ப வேண்டும். அப்படி திருப்பும் முயற்சிதான் திரைக்கதை. இது சரியாக இருக்கும் போது படம் வெற்றியடைகிறது. இல்லாவிட்டால் தோல்வி.


கதைக்கும் திரைக்கதைக்கும் என்ன வித்தியாசம் ?

கதையில் வர்ணனைகளும் காட்சியமைப்பும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும். திரைக்கதையில் அதை விஷுவலாகக் காட்ட முயற்சி செய்வார்கள். உதாரணமாக ஒரு கிராமத்தைப் பற்றி விளக்க கதையில் இரண்டு பக்கங்களில் விவரிக்க வேண்டியிருக்கும். ஆனால் ஒரு காட்சியில் அத்தனையையும் பார்ப்பவருக்கு விளக்கிவிடலாம். கூட ஒரு பின்னணி இசை சேரும்போது அதன் எஃபெக்ட் உச்சமாகும்.

ஆனால் கதையில் கிராமத்து வர்ணனையை நான் படிக்கும் போது நான் பார்த்த கிராமத்தை உருவகப்படுத்திக் கொள்வேன். நீங்கள் படிக்கும் போது உங்களுக்குத் தெரிந்த கிராமத்தை உருவகப்படுத்திக் கொள்வீர்கள்.

ஆனால் திரையில் தோன்றுவது ஒரு கிராமம்!. நம் அனைவரையும் அதையே உருவகப்படுத்தச் சொல்லி கட்டாயப்படுத்தும். அதை நாம் விரும்புவதும் விரும்பாததும் படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். திரைக்கதை என்பது ஒரு நேர்த்தியான மாஸ்டர் ப்ளான் போல இருக்க வேண்டும். டெக்னிகலான மேட்டர்களைப் பிறகு பார்ப்போம்.

திரைக்கதையால் என்ன பயன்?

இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன், ஒருவன் அல்லது ஒருத்தி எதற்காகத் திரைப்படம் பார்க்க வருகிறார்கள் என்று யோசிக்க வேண்டும்? நான் எதற்காக திரைப்படம் பார்க்கச் செல்கிறேன்?

1. எனக்கு ஒரு என்டெர்டெய்ன்மென்ட் தேவைப்படுகிறது.
2. எனக்கு ஒரு புதிய அனுபவம் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பு இருக்கிறது
3. கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு கிடைக்க வேண்டும். (வேல்யூ ஃபார் மனி)
4. என் நேரம் வேஸ்ட் ஆகிவிட்டது என்று நான் எண்ணக்கூடாது.

இந்த எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் எந்தத் திரைக்கதையும் வெற்றித் திரைக்கதைதான்!!


சரி இனி முக்கிய மேட்டருக்குச் செல்வோம்...

நீங்கள் நிறைய திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். அவற்றின் ஒற்றுமையை சற்று அலசுவோமா?

1. முதலில் இனிமையாகத் துவங்கும். கதாபாத்திரங்கள் (நாயகன், நாயகி, வில்லன் போன்றோர்), கதைக்களம் ஆகியவற்றின் அறிமுகம்

2. பிரச்சனை உருவாதல். போராட்டம்.

3. முடிவு.

99.99% படங்களின் அமைப்பு இவ்வாறு இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இதைத்தான் த்ரீ-ஆக்ட்-ஸ்ட்ரக்சர் என்று சொல்வார்கள். புராண இதிகாசங்கள் முதல் புதுப்படங்கள் வரை இந்த ஸ்ட்ரக்சர் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

இப்படிச் சொல்வது, அடுப்பில் பாத்திரத்தை வைத்து சமைத்துப் பரிமாறுவதுதான் சமையல் கலை என்று சொல்வதற்கு ஒப்பாகும். அல்லது, புத்தகத்தில் கணக்கெழுதி, வருடத்திற்கு ஒருமுறை ஆடிட் செய்து டாக்ஸ் கட்டுவதுதான் கணக்குப் பதிவியல் என்று சொல்வதற்கு ஒப்பாகும்.

இது உண்மைதான் என்றாலும், இது மட்டுமே உண்மையல்ல....


மேற்கொண்டு தொடர்வோம்...

எக்சர்சைஸ் 2: இந்த த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சர் அடிப்படையில் முதல் பகுதியில் சொன்ன கதைக்கு திரைக்கதை அமைத்துத்தாருங்கள்.

(தொடரும்)..

தமிழ்மணத்திலும் தமிழிஷிலும் ஓட்டுப்போடுவது, இந்தப்பதிவு பலரையும் சென்றடைய உதவி செய்வதாக இருக்கும்.

Sunday, June 28, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி? . . . 1

ஸ்கிரீன் ப்ளே என்பதன் நேரடித்தமிழாக்கம்தான் திரைக்கதை என்றாலும், காட்சியாக்கம் என்பதுதான் சரியான வார்த்தையாக இருக்கும். ஒரு திரைப்படம் வெற்றிபெற இன்னின்ன காரணிகள்தான் வேண்டும் என்ற ஃபார்முலா, அதாவது சக்சஸ் ஃபார்முலா எதுவும் இல்லை.

அப்படி இருந்திருந்தால் தோல்விப்படங்களே இருக்காது. ஆனால் எது இருக்கிறதோ இல்லையோ திரைக்கதை சரியாக இல்லாவிட்டால் அந்தப் படம் நிச்சயம் ஓடாது. பாடல்கள் தனியே ஹிட்டாகலாம், காமெடி ஹிட்டாகலாம் ஆனால் வலுவான திரைக்கதை மட்டுமே ஒரு படத்தின் வெற்றிக்கு அடித்தளம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

பாக்யராஜ், டி.ராஜேந்தர் போன்ற இயக்குனர்கள் திரைக்கதையில் மிக்க கவனம் கொண்டிருந்தனர். ஆனாலும், பிற்காலத்தில் அவர்கள் படம் வெற்றி பெறவில்லை. இதற்கான காரணத்தைப் பின்னர் ஆராய்வோம்.

பதிவின் உள்ளே செல்லும் முன் ஒன்றை தெளிவு படுத்திவிட விரும்புகிறேன். திரைப்படம் பார்ப்பதைத் தவிர திரைத்துறைக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனினும் ஒரு ரசிகனின் பார்வையில் அல்லது ஒரு வருங்கால இயக்குனரின் (?!) பார்வையில் திரைக்கதை எழுதுவதைப் பற்றிய கருத்துதான் இது.


திரைக்கதைக்கு அடித்தளம்

திரைக்கதைக்கு அடித்தளம் கதைதான். 99.99% கதைகள் நல்லவர்கள் முதலில் கஷ்டப்படுவதும் தீயவர்கள் அதிக சக்தியுடன் இருப்பதும், இறுதியில் நன்மையே வெல்வதும் என்ற பாணியில் அமைக்கப்பட்டிருக்கும். ஆக அடிப்படையில் நன்மையே வெல்லும் என்ற 'மெசேஜ்' அனைத்துக் கதைகளிலும் இருக்கிறது. ஆனால் சில வெற்றி பெறுகின்றன. மற்றவை தோல்வியடைகின்றன.

ஆக நல்ல கதை, சுமாரான கதை என்றெல்லாம் இல்லை. வெற்றி பெற்றால் நல்ல கதை. தோல்வியடைந்தால் கதை நன்றாக இருந்தாலும் 'ப்ச்'தான். எதுவாயினும் ஒரு கதை வேண்டும்.

மற்ற காரணிகள்.


1. மக்கள் ரசனை


சினிமா துவங்கப்பட்டது முதல் 1950கள் பெரும்பாலான படங்கள் புராணப் படங்கள். 2000க்குப் பிறகு புராணப் படங்கள் அரிதாகி விட்டது. புராணப் படங்களே இல்லை எனலாம்.

60களில் பிழியப்பிழிய அழ வைக்கும் சென்டிமென்ட் படங்கள் சக்கைப் போடு போட்டன. இப்போது வரும் படங்களில் உள்ள ஒன்றிரண்டு சென்டிமென்ட் சீன்களில் கூட விசில் பறப்பதைப் பார்த்திருக்கலாம்.

70களில் புரட்சிகரமான கருத்துக்களுடன் படங்கள் வெளிவந்தன. ருத்ரய்யா, பாலச்சந்தர் போன்றோர் சமூகக்கட்டமைப்பை உடைத்தெறியும் முயற்சியில் பெரிதும் வெற்றி பெற்றனர். இப்போது அத்தகைய படங்கள் (உதாரணம்: தனம்) வரவேற்கப் படுவதில்லை.

80களில் காதலை மையமாக வைத்துப் படங்கள் பெருவெற்றி பெற்றன. இன்னிசை படத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. இப்போதும் காதல் படங்கள் வந்தாலும் அந்த அளவுக்கு வெற்றி பெறுவது குறைவுதான்.

90களில் கிராமத்தை மையமாகக் கொண்ட படங்கள் பெரிதும் வெற்றி பெற்றன. இப்போது ராஜ்கிரண், , ராமராஜன் போன்றோரின் நிலைமையைச் சொல்லத் தேவையில்லை.

புதிய நூற்றாண்டில் இப்படி எந்த ஒரு லாஜிக்கும் இல்லை.

ஏன்?? மக்கள் ரசனை மாறுகிறதா?

இல்லை என்பதே என் பதில். இதற்கான காரணம் பின்னர்...


2. தொழில் நுட்பம்.

கருப்பு வெள்ளை, ஈஸ்ட்மென் கலர், கலர், சினிமாஸ்கோப், 70 எம்.எம்., டி.டி.எஸ்., டிஜிடல் சினிமா என்று தொழில் நுட்பத்தில் பரிணாமித்திருக்கிறது சினிமா. எடிட்டிங், சவுண்ட் மிக்சிங், கிராஃபிக்ஸ் என்று மற்ற துறைகளிலும் பெருமளவில் மாற்றம் கண்டிருக்கிறது.

இந்தத் தொழில் நுட்பங்கள் ஒரு பண்டத்தை எவ்வளவு நன்றாக ப்ரெசன்ட் செய்ய வேண்டிய அளவுக்குப் பயன் படுத்த வேண்டும். இவை நன்றாக இருப்பது திரைக்கதைக்கு மேலும் வலுவூட்டும்.


3. நடிகர்கள்

எம்.ஜி.ஆர், சிவாஜிக்குப் பிறகு ரஜினி கமல் படங்கள் அபவ் ஆவரேஜ் வெற்றியைத் தந்தன. அதே போன்று விஜய் அஜித் வருவார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் இவர்கள் படம் கூட வெற்றி பெறாமல் போய்விடுகிறது. புது முகங்கள் நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்று விடுகின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த கதா நாயகிகள் அருகிக் கொண்டே வருகின்றனர். மொத்தமும் இறக்குமதிதான். மற்ற கலைஞர்களின் பங்களிப்பு ஓரளவுக்கு இருக்கும்.

ஆக கலைஞர்கள் தேர்வு முக்கியமானதல்ல.


4. இசை

இசையைப் பொறுத்தவரை மிக அடிப்படையான வாதம் இதுதான். வெற்றி பெற்ற படங்களின் இசை தானாக வெற்றி பெற்று விடும். இசை மிகப் பிரமாதமாக இருந்தாலும் படம் தோல்விடையலாம். ஆகவே இசை என்பது இரண்டாம் பட்சம்தான். ஆனாலும் படம் வெற்றி பெற கூடுதல் உந்து சக்தி அளிக்கும்.

மற்றவற்றை அவ்வப்போது பார்ப்போம்.


இப்போது ரசனையைப் பற்றிய எனது கருத்து:

மக்கள் ரசனை மாறிவிட்டது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவியலாது. Human beings are emotionally charged animals. காலங்கள் மாறினாலும், நமது அடிப்படை என்றுமே மாறாது. பிறகு ஏன் புராண, சென்டிமென்ட், கிராமப் படங்கள் இப்போது வெற்றி பெறுவதில்லை? ஏனென்றால் நம்மிடையே இவை ஏற்கனவே இருக்கின்றன.

சென்டிமென்டிற்கு ஒரு பாசமலர் ஏற்கனவே இருக்கும் போது மீண்டும் எதற்கு ஒரு சென்டிமென்ட் படத்தைப் பார்க்க வேண்டும்? சம்பூர்ண ராமாயணம், திருவிளையாடல், போன்ற படங்கள் இருக்க ஏன் மீண்டும் நான் ஒரு புது புராண படத்தைப் பார்க்க வேண்டும்? கரகாட்டக்காரனும், சேரன் பாண்டியனும் இருக்க நான் ஏன் மீண்டும் ஒரு கிராமத்துக் கதையைப் பார்க்க வேண்டும்?

இவை அனைத்தும் நம்மிடையே ஆர்கைவ் ஆக இருக்கின்றன. ஆகவே இப்போது தேவைப் படுவது வேறு. இதே காரணம் தான் இயக்குனர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும். ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர் ஆகியோர் பிறகு என்ன ஆனார்கள்?. பாக்யராஜ், பாலச்சந்தர், பாரதிராஜா போன்றோரின் நிலைமை என்ன? இவர்களின் படங்கள் பிற்காலத்தில் ஏன் தோல்வியடைந்தன? ஆனால் இவர்களது பழைய படங்களை மக்கள் இன்னும் ரசித்துப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்கள்?

எம்.எஸ்.விஸ்வனாதனுக்கு என்னவாயிற்று? இளையராஜாவால் இப்போது மக்களை மயக்கமுடியவில்லையே? ஆனால் இவர்களது பழையபாடல்களை விரும்பாதார் யார்?

இப்போது புரிகிறதா?. . . தொடர்வோமா??

எக்சர்சைஸ்:
ஒரு கிராமத்து இளைஞன். நகரத்திற்கு வரும்போது ஏமாற்றப் படுகிறான். கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி ஏமாற்றியவர்களை திருத்துகிறான். இந்தக் கதைக்கு ஒரு திரைக்கதை அமைத்துத்தாருங்கள். ஆறு முதல் பத்து வரிகளுக்கு மேல் இருக்கக் கூடாது.


பின்குறிப்பு:- தமிழ்மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டைப் போடுங்கள். அது இந்தப் பதிவுத்தொடரைப் பலரிடமும் கொண்டு செல்ல உதவியாக இருக்கும்.

Saturday, January 17, 2009

எந்திரன் - தி ரோபோ - கதை

தலைவர் ஒரு ரோபோடிக் விஞ்ஞானி. ரொம்ப கஷ்டப்பட்டு தெருவிளக்குல எல்லாம் படிச்சு, நாசாவில வேல செய்யறார். கூடவே தனியா ஒரு ஆராய்ச்சியும் செய்யறார். அதாவது காலச்சக்கரம் மாதிரி கால இயந்திரனை உருவாக்கி, அப்படியே பின்னாடி (அதாவது பழங்காலத்துக்குப் போய்) அப்போ நடக்குற குளறுபடிகளை மாத்தி வரலாற்றைத் திருத்தப்பார்க்குறார். இந்த கால இயந்திரனுக்குள்ள சிக்ஸ்த் சென்ஸ புகுத்திடறார். ஆனா அத இயக்குற பாஸ்வேர்ட் தலைவர் மட்டுமே ஞாபகம் வச்சிக்கிறார்.

இந்த மேட்டர் எப்படியோ லீக் ஆகி வில்லன் க்ரூப்புக்கு தெரிஞ்சிபோயிடுது. அவங்க இந்த ரோபோவை வச்சி அந்த காலத்துக்கு போய் புதையல்லாம் எங்க வச்சிருக்காங்கன்னு கண்டுபுடிச்சி இப்ப எடுத்துரலாம்னு ப்ளான் பண்றாங்க.

ரோபோவ தன்ன மாதிரியே வடிவமைச்சிடறார் தலைவர். ஒரு கட்டத்துல சிக்ஸ்த் சென்ஸ் ஆக்டிவேட் பண்ணிடறார் தலைவர். எது ரோபோ, எது தலைவர்னு தெரியாம போயிடுது. இங்கதான் இடைவேளை.

ஐஸ்வரியா ராய் வரலயேன்னுதானே கேக்கறீங்க. படம் ரொம்ப விறுவிறுப்பா போணும்கறதுக்காக முக்கா மணி நேரத்திலேயே இன்டர்வல் விட்டுர்றோம். பாக்கறவங்களும் அதுக்குள்ள இன்டர்வல் வந்துருச்சே, கத சூப்பர் போலன்னு யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க.

இடைவேளைக்கப்பறம் ரோபோவையும், தலைவரையும் வில்லன் பிடிச்சிகிட்டு முதல்ல ராஜராஜன் காலத்துக்கு போவாங்க. அங்க பாத்தீங்கன்னா ராஜராஜனோட பொண்ணா இருப்பாங்க ஐஸ். அங்க இருக்குற ரகசியங்களைத் தெரிஞ்சிக்கிட்டு மலேயாவுல இருக்குற ஒரு குட்டித் தீவுல பெரிய புதையல் இருக்குன்னு கண்டுபிடிப்பாங்க.

மறுபடியும் இங்க வந்து அந்த தீவுக்கு போவாங்க. அப்ப ரோபோ வில்லனோட சேந்துகிட்டு தலைவர கடல்ல தள்ளிவிட்டுடும். தலைவர் நீந்தி நீந்தியே மலேயாதீவுக்குப் போய் சேந்துடறார். அங்கே தலைவர காப்பாத்தறாங்க ஒரு பொண்ணு. கரெக்ட் அவங்கதான் ஐஸ்.

அந்த ஐஸோட அப்பாவைப்பாத்தா அப்படியே ராஜராஜன் மாதிரியே இருக்கு. அவங்கதான் ஒரு கோவில பாத்துக்குறாங்க. அங்கதான் அந்தப் புதையல் இருக்கு. அதத் தேடி வில்லனும் ரோபோவும் வர்றாங்க. இந்தப்பக்கம் தலைவரும் ஐசும் ராஜராஜனும்.

ரோபோ சிக்ஸ்த் சென்ஸ் எஃபெக்டால வில்லனா மாறி, ஐஸ லவ் பண்றாரு. தலைவர் ஒரு வழியா ரோபோவோட சிஸ்டத்துல டகால்டி வேல செஞ்சி ரோபோவ நல்லவனா மாத்திடறாரு.

புதையல கண்டுபிடிச்சாங்களா? யாருக்குக் கெடச்சதுன்றது கதை.

கடைசி ட்விஸ்டா. ரோபோவுக்கு ஒரு ஐஸ் ரோபோவை பரிசா குடுக்குறாரு தலைவர். அந்த தீவிலேயே ரெண்டு ரோபோக்களையும் விட்டுட்டு நாட்டுக்கு திரும்புறாங்க தலைவரும் ஐசும்.

நடுவுல பாட்டு, ஃபைட்டு, சென்டிமென்டுன்னு நெறய ஐட்டங்கள் இருக்கு. காமெடிக்கு விவேக், வடிவேலு, கவுண்டமணி கூட்டணி, சென்டிமென்டுக்கு விஜயகுமார், சுஜாதா கூட்டணி. வில்லனா அறிமுகமாறார் ஒரு வேற்றுமொழி பிரபல கதா நாயகர்.



இதாங்க ரோபோ கதை. படிச்சிட்டு ஒரு கருத்தையும் சொல்லிட்டு போங்க.

Monday, December 29, 2008

2008ல் வந்த தமிழ்ப் படங்கள் ?

இந்த படமெல்லாம் 2008ல வந்ததா சொல்றாங்க. உங்களுக்குத் தெரியுமா?



1. ஆறு மனமே

2. ஆட்ட நாயகன்

3. அயன்

4. ஆதிவாசியும் அதிசயப்பேசியும்

5. ஆனந்த தாண்டவம்

6. அசோகா

7. பலம்

8. இன்னொருவன்

9. ஜெயலக்ஷ்மி

10. கண்களும் கவிபாடுதே

11. குளிர்

12. காதலர் கதை

13. பார்க்கலாம் பழகலாம்

14. பொக்கிஷம்

15. புலி வருது

16. சரித்திரம்

17. சில நேரங்களில்

18. தங்கம்

19. தித்திக்கும் இளமை

20. தாவணி போட்ட தீபாவளி

21. திரு.கவுதம் எஸ்.எஸ்.எல்.சி

22. வாடா

23. வம்புசண்டை

24. வர்ணம்

25. வாழ்த்துக்கள்

26. வேள்வி

27. வள்ளுவன் வாசுகி

28. வசூல்

29. யாருக்கு யாரோ

30. என்னைத் தெரியுமா



இந்த முப்பதுல உங்களுக்கு எத்தனைப் படம் தெரியும்னும் எத்தனை படம் பாத்தீங்கன்னும் கொஞ்சம் சொன்னீங்கன்னா என்னுடைய சினிமா அறிவை வளத்துக்குவேன்.

Thursday, October 16, 2008

சினிமா - கேள்வி பதில் தொடர்


என்னை இந்த ஆட்டத்திற்குள் சேர்த்த அணிமாவுக்கு நன்றிகள் பல. இந்த நேரத்தில் என்னுடைய சினிமா பற்றிய ஒரு தொடர் அதாவது 'பழைய படம் - புதிய பார்வை' பற்றிய அறிவிப்பைச் செய்வதில் மகிழ்ச்சி.இனி நேரடியாகக் கேள்வி பதில்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயது என்பது ஞாபகம் இல்லை. ஆனால் நினைவு தெரிந்து பார்த்தது புரட்சித் தலைவரின் முகராசி. வந்தவாசி பாலன் திரையரங்கம் என்று நினைக்கிறேன்.
எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளைக் கைத்தட்டி ரசித்தது நினைவில் இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா டூயட்டை அதிசயமாகப் பார்த்ததாக நினைவு.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

தசாவதாரம். சத்யம் திரையரங்கில் பார்க்க வேண்டுமென்பதற்காக இ-புக்கிங் செய்து பார்த்தேன். செலவுதான் கையைக் கடித்து விட்டது :((

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?


என்னுடைய மடிக் கணினியில், ஸ்ரீதர் இயக்கிய சிவந்த மண் பார்த்தேன். ஐரோப்பாவில் எடுக்கப் பட்ட முதல் படம் என்று நினைக்கிறேன். அருமையான கதை. ஆனால் தவறான கதா நாயகன். எம்.ஜி.ஆர் நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

இதைப் பற்றி ஒரு பதிவு எழுதலாம் என்ற எண்ணம் உள்ளது.


4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

சட்டென்று நினைவிற்கு வருவது உன்னால் முடியும் தம்பி.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

என்னை நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த தமிழ்ச் சினிமா-அரசியல் சம்பவமும் தாக்கியதாகத் தெரியவில்லை. உலகம் சுற்றும் வாலிபன், அண்ணாமலை, பாபா முதலியவை காலம் காலமாக நடந்து வருபவை. அவை மேலும் தொடரக் கூடும் என்றுதான் நினைக்கிறேன்.

திருவிளையாடல் தருமியைப் போல் சொன்னால் சேர்ந்தே இருப்பது, தமிழ் சினிமாவும் அரசியலும். ;-))

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

தொழில் நுட்பம் என்பது 'ரிலேடிவிடி தியரி' அல்லது 'இரு கோடுகள்' தத்துவம் போன்றது.

சரியான தொழில் நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்தில் வந்த கர்ணனின் படங்கள் மிகச் சிறந்த தொழில் நுட்பத்துடன் இருப்பதாக நினைக்கிறேன். கர்ணனின் ஒளிப்பதிவுத் திறமை என்று சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் :0). ஜம்பு, எங்க பாட்டன் சொத்து முதலிய படங்கள் சினிமாஸ்கோப்பில் எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.


6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா


வண்ணத்திரை, சினிமா எக்ஸ்ப்ரஸ் ஆகிய சினிமா சம்பந்தப் பட்ட பத்திரிகைகளை வாசிக்காவிட்டாலும், எங்கே எப்போது சினிமா பற்றிய செய்தி வந்தாலும் வாசிக்கத் தவறுவதில்லை. அது, கிசுகிசுவாகட்டும் அல்லது புதுப்படம் பற்றிய தகவலாகட்டும்.

7.தமிழ்ச்சினிமா இசை?


நிச்சயமாக இளையராஜா.
தமிழ்ச் சினிமா இசை என்றாலே நம் நினைவுக்கு வருவது பாடல்கள்தான். அதையும் தாண்டி, பின்னணி என்று ஒன்று இருப்பதைக் காட்டியவர் இளையராஜாதான். இசையின் அனைத்துப் பரிமாணங்களையும் பாமரனும் ரசிக்கும் வண்ணம் காட்டியதில் அவருக்கு நிகர் அவர்தான்.
ஒரு பார்த்திபன் படத்தில் 'இசை அலயஸ் இளையராஜா' என்று போட்டிருப்பார்கள். இது உண்மை.
மற்றபடி தமிழ்ச் சினிமாவும், தமிழ்ச்சினிமா இசையில் ஏற்பட்ட மாற்றமும் ஒரு மிகச் சிறந்த பரிணாம வளர்ச்சிக்கான எடுத்துக்காட்டுகள்.
60-70 பாடல்களாக இருந்தது, 10-12 பாடல்களாகக் குறைந்து, இப்பொழுது 5 பாடல்கள் இருந்தாலே அதிகம் என்ற நிலையில் இருக்கிறது.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஆந்திராவில் இருந்த போது அதிகமாகத் தெலுங்குப் படங்கள் பார்த்திருக்கிறேன். சி.ஏ. படிக்கும் போது தில்வாலே துலனியா லே ஜாயேங்கே மொழியே தெரியாமல் 6 முறை பார்த்திருக்கிறேன் :)
உலகச் சினிமாக்கள் என்ற வரிசையில் பார்க்க ஆரம்பித்தது குங்க் ஃபூ படங்களைத்தான்.

சமீபத்தில் வேர்ல்ட் சினிமா சேனலில் தி வொயிட் பலூன் என்ற ஈரானிய மொழிப்படம் பார்த்தேன். என்னை மிகவும் பாதித்த படம். இதைப் பற்றி தனியாக ஒரு பதிவு நிச்சயம் உண்டு.



9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

எங்கள் ஊரில் நடைபெற்ற வைதேகி காத்திருந்தாள் ஷூட்டிங்கை எட்டி நின்று வேடிக்கை பார்த்திருக்கிறேன். பிறகு ஏகாம்பர நாதர் கோவிலில் நடைபெற்ற இன்னொரு விஜயகாந்த் ஷூட்டிங்கையும் பார்த்திருக்கிறேன். விசாகப் பட்டினத்தில் நடைபெற்ற ரமணா ஷூட்டிங்கின் ஃபைட் காட்சியை பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். (அட. எல்லாமே விஜயகாந்த் படங்கள்.;-))
மீண்டும் ஷூட்டிங்க் பார்க்க வாய்ப்புக் கிடைத்தால் நேரமிருந்தால் செய்யலாம்.

தமிழ் சினிமா மேம்பட இது உதவுமா என்று நீங்கள் தான் கூற வேண்டும்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஒன்றும் தோன்ற வில்லை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு பெரிதாக ஒன்றும் நேராது. சன் டிவிக்கு மகிழ்ச்சியாக இருக்கும் (கலைஞர் டி விக்கு புதுப்படம் கிடைக்காதே). நாடகத்துறை வளர்ச்சியுறும் என்று நினைக்கிறேன். மாறாக 24 மணி நேர மெகா சீரியல் சேனல்கள் வர வாய்ப்புள்ளது.


இந்தச் சங்கிலியைத் தொடர இவர்களை அழைக்கிறேன்.

1. நான் ஆதவன்

2. வெங்கடராமன்

3. டாக்டர் ப்ரூனோ

4. கோவியார்

5. வாத்தியார்

நன்றி ! ! !