இந்தவாரம் டாக்டர் ப்ரூனோவின் கேள்விக்கணைகளுக்கான பதில்கள்!
1. பார்த்திபன் கனவு கதைக்கு ஆதாரம் வரலாற்றில் இருக்கிறதா ??
பார்த்திபன் கனவில் பல்லவ அரசர் முதலாம் நரசிம்மவர்மர் பார்த்திப சோழனை வெற்றி கொள்வதாகவும் அவன் மகன் விக்ரம சோழனுக்கு தன் மகள் குந்தவையை மணம் செய்து கொடுத்து அயல் நாட்டிற்கு மன்னனாக அனுப்புவதாகக் கதை.
நரசிம்ம வர்மருக்கு குந்தவை என்ற மகள் இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. மேலும் சோழ வம்சம் விஜயாலய சோழனுக்கு முன் எங்கே இருந்தார்கள் என்பதற்கான ஆதாரமும் இல்லை. ஆகவே இந்த நிகழ்வு கற்பனையாகப் படுகிறது.
2. வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முன்னர் ஆங்கிலேயரை எதிர்த்த மன்னர்கள் பற்றி குறிப்புகள் ஏதாவது இருந்தால் கூறவும்..
வீர பாண்டிய கட்டபொம்ம நாயகலு உட்பட பலர் பாளையக் காரர்கள். முதலில் மதுரை நாயக்கர்களின் 'ஏரியா ரெப்ரெசென்டேடிவ்'ஆக இருந்த இவர்கள் ஆற்காட்டு நவாபின் ஆட்சிக்குப் பின் அவர்கள் பிரதி நிதிகளாக அந்தந்த பகுதிகளில் ஆட்சி செய்து வரி வசூலித்து அதில் ஒரு பகுதியை நவாபுக்கு கிஸ்தியாக செலுத்தி வந்தனர்.
சற்று பின்னோக்கிப் பார்த்தால், நவாப் பதவிக்கு சந்தா சாகிப்பிற்கும், முகம்மது அலிக்கும் போட்டி. சந்தா சாகிப் ஃப்ரெஞ்சுக்காரர்களின் உதவியையும், முகம்மது அலி ஆங்கிலேயர்களின் உதவியையும் நாடினர். இவர்களின் பெயரால் ஆங்கிலேயர்களும், ஃப்ரெஞ்சுக்காரர்களும் தமிழகத்தில் 'கர்னாடிக் வார்ஸ்' என்றழைக்கப்படும் ஆங்கிலேய-ஃப்ரெஞ்சு போர்களில் ஈடுபட்டனர். முடிவில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெறவே, ஆங்கிலேயர்களின் தரப்பில் இருந்த முகம்மது அலி ஆற்காட்டு நவாப்பாக பதவியேற்றார்.
அவர் ஆங்கிலேயர்களின் வெற்றிக்கு சம்பளமாக தமிழகத்தின் திவானி உரிமையை விட்டுக்கொடுத்தார். அதாவது இதற்குப் பிறகு பாளையக்காரர்கள் முதலானோர் நவாப்பிற்குப் பதிலாக ஆங்கிலேயர்களுக்கு (ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு) கிஸ்தி செலுத்தவேண்டும்.
இதை ஆங்கிலேயர்கள் கேட்கவும், கட்டபொம்மு மறுக்கவும் நிகழ்ந்ததுதான் பாஞ்சாலங்குறிச்சிப் போர். இறுதியில் கட்டபொம்முவிற்குத் தூக்கு. இந்தப் பகுதியை நேரடியாக நிர்வாகம் செய்தது கம்பெனி (பழந்தமிழில் கும்பினி). இப்படித்தான் ஆரம்பித்தது, ஆங்கிலேயர்களின் ஆட்சி.
ஆகவே இதை ஒரு வகையில் கட்டபொம்மு 'சுதந்திர பாளையம்' அமைக்க மேற்கொண்ட முயற்சி என்று சொல்லலாம். ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் முயற்சி இதுவாகத்தான் இருக்கும்.
3. கிரேக்க இஸ்லாமிய படையெடுப்புகள் தமிழகம் வரை வராததன் காரணம் என்ன (என்னென்ன)?
தரை வழியாக வட இந்தியாவில் படையெடுப்புத்தவர்கள் கிரேக்கர்கள், மங்கோலியர்கள், இஸ்லாமியர்கள் எனப் பலர். இவர்கள் அனைவருக்கும் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பெரும்பாலும் கொள்ளை. அல்லது விஜய யாத்திரை.
இவர்கள் தென்னாடு வரை வர விந்தியாசலம் என்னும் விந்திய மலைகளைக் கடக்கவேண்டும். அந்த விந்தியாசலத்தில் இமய மலையைப் போல நல்ல கணவாய்கள் இல்லை. இதற்குமுன் வந்த சமுத்திர குப்தர் கலிங்கம் வழியாகவே தமிழகம் வந்துள்ளார். ஆகவே விந்தியாசலத்தைத் தாண்டும் இவர்கள் முயற்சிக்கு இயற்கை முதல் முட்டுக்கட்டை போட்டது.
பண்டைய புராண இதிகாசங்களில் விந்தியாசலம் தான் பாரதத்தின் தென் பகுதி என்று கருதப்பட்டு வந்தது. எனவே சிலர் அதற்கு மேல் வேறொரு தேசம் என்று நினைத்திருக்கலாம். இது வரலாறு போட்ட முட்டுக்கட்டை.
இமயமலை முதல் விந்தியம் வரை பல்வேறு அரசுகளின் தடுப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆகவே அவர்கள் பலம் குன்றியிருக்கவேண்டும். கிடைத்தவரை லாபம் என்று திரும்பியிருக்கவேண்டும். இது வட இந்திய அரசுகள் போட்ட முட்டுக்கட்டை.
இவ்வாறாக பல்வேறு முட்டுக்கட்டைகள் இந்தப் படையெடுப்புகளை விந்தியம் தாண்டி வரவிடாமல் செய்தன.
4. கிருஷ்ணதேவராயர் காலத்திற்கு பிறகு ஆதிக்கம் செலுத்திய தெலுங்கு அரசர்கள் / நாயக்கர்கள் (கட்டபொம்மன் உட்பட) ஆட்சியில் தமிழ் தப்பி பிழைத்தது எப்படி. அந்த நேரம் வேறு குறுநில தமிழ் மன்னர்கள் இருந்தார்களா?
உங்கள் கேள்விக்கு டாக்டர் மு.வரதராசனார், அவரது 'தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூலில் ஒரு அத்தியாயமே வழங்கியிருக்கிறார். அவரது வார்த்தைகளில் சொன்னால்,
'அதற்கு முன்பு பல நூற்றாண்டுகளாகத் தமிழிலக்கியம் தொடர்ந்து பெற்று வந்த வளர்ச்சியுடன் நன்கு வேரூன்றித் தழைத்திருந்த காரணத்தால், அந்தச் சில நூற்றாண்டுகளின் அரசியல் குழப்பம் அந்த இலக்கியச் சோலையைப் பெரிதும் தாக்கவில்லை. வழக்கம் போல் பூத்துக் குலிங்கிக் காய்த்துப் பெரும் பயன் தராவிட்டாலும், கோலையின் பசுமை அடியோடு மாறிப்போகவில்லை; புதி தளிர்கள் விட்டன. இலைகள் தழைத்தன; அரும்புகள் அரும்பின; சிற்சில பூக்களேனும் பூத்தன; சிறுசிறு அளவிலேனும் காய்களும் கனிகளும் காணப்பட்டன'.
மிக அழகாக எடுத்தியம்பியிருக்கிறார் மு.வ.!!
அருண்கிரி நாதர், வில்லிபுத்தூரார் (வில்லிபாரதம் இயற்றியவர்), காளமேகப் புலவர், குமர குருபரர் போன்ற பலர் இந்தக் காலத்தில் இருந்திருக்கிறார்கள்.
ஆகவே தமிழ் தன் இயல்பால் வாழ்ந்து கொண்டிருந்தது.
விஜய நகரப் பேரரசர்களும், நாயக்கர்களும், அவர்களுக்குப் பின் வந்த மராட்டியர்களும் தங்கள் மொழிகளோடு தமிழையும் வளர்த்தார்கள். என்ன வித்தியாசமென்றால், தமிழில் இந்தக் காலகட்டத்தில் சமயம் சார்ந்ததும் தனிமனிதப்புகழ் சார்ந்ததுமான நூல்கள் விரவிக்கிடப்பதைக் காணலாம்.
புதுக்கோட்டை, ராம நாதபுரம் தவிர்த்து தமிழைப் பின்புலமாகக் கொண்ட மன்னர்கள் / குறு நில மன்னர்கள் யாரும் இல்லை என்பதுதான் வருந்தத்தக்க செய்தி.
5. சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்களின் மொழி எது
இருவருக்குமே கன்னடம்தான் மொழி. தமிழிலிருந்து முதலில் பிரிந்து தனி மொழியாக மாறியது கன்னடம். அதனின்றும் பிரிந்தது தெலுங்கு. தமிழிலிருந்து பிற்காலத்தில் பிரிந்தது மலையாளம். ஆகவே தமிழின் முதல் தங்கை கன்னடம்தான்!.
====
இது தவிர நண்பர் வெங்கட்ராமன் இந்திய சுதந்திரம் பற்றியும், காந்தியின் பங்கு பற்றியும், மற்ற தலைவர்களின் செயல்கள் மறைக்கப்பட்டது பற்றியும் கேட்டுள்ளார். இது குறித்து தனிப் பதிவு எழுத எண்ணியுள்ளேன்.
உங்கள் கேள்விகளைத் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.
நன்றிகள் பல.
Showing posts with label கேள்வி-பதில். Show all posts
Showing posts with label கேள்வி-பதில். Show all posts
Thursday, January 15, 2009
Saturday, December 27, 2008
வரலாற்று கேள்வி-பதில்கள்
என்னுடைய சிறு முயற்சிக்கு முதல் ஆதரவுக்கரம் நீட்டி ஆதரித்த அன்பு அண்ணன் ஆதவன் அவர்களுக்கும், அன்பு அண்ணன் நாஞ்சில் பிரதாப் அவர்களுக்கும் முதற்கண் நன்றி கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன். (கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் !)
இப்போது கேள்வி பதில்கள்
நான்-ஆதவன்
1. பிருத்திவிராஜ் மற்றும் சம்யுக்தா இவர்கள் காதல் கதையை கேட்டிருந்தாலும் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. அவர்கள் காதல் கதையைப் பற்றி விளக்கவும். அவர்கள் கல்யாணம் செய்திருந்தால் ,அதற்கு பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸியமான சம்பவம் இருந்தாலும் தெரியப்படுத்தவும். (ஹி ஹி இது முதல் கேள்வியா, அதான் கொஞ்சம் ரொமாண்டிக்கா இருக்கட்டுமேன்னு :-)
ரொமான்டிக்காவே ஸ்டார்ட் பண்ணுவோம் சார். இவர்கள் காதல் கதை உண்மைதான். பெரும்பாலும் காணாமலே காதல் தான். ஆனால் வரைபடம் பார்த்து காதல். பிறகு களவுவழி காதல் (திருட்டுத்தனமாக சந்திப்பது). இது எப்படியோ சம்யுக்தாவின் தந்தைக்குத் தெரிந்து போய், சுயம்வரம் வைத்தவர் பிரிதிவிராஜுக்கு மட்டும் அழைப்பு அனுப்பவில்லை. ஆனால் அவனைப் போல் சிலை ஒன்றை மண்டபத்தில் வைத்துவிடுகிறான். சிலைக்கு மாலையிடச் சென்ற சம்யுக்தா சிலைக்குப் பின் நின்ற பிரிதிவிராஜுக்கு மாலையிடுகிறாள். அவன் அப்படியே அவளைக் கவர்ந்து சென்றுவிடுகிறான். இவ்வாறு கூறுகிறது 'ப்ரிதிவிராஜ் ரஸோ' என்ற பிரிதிவிராஜன் சரித்திரம்.
இவனது அவைப் புலவனும் நெருங்கிய நண்பனுமான சந்த் பர்தாய் என்பவன்தான்'ப்ரித்விராஜ் ரஸோ' என்ற இலக்கியத்தைப் படைத்தவன். இதை நம்மூர் கலிங்கத்துப் பரணி போன்று எடுத்துக் கொள்ளலாம். சம்யுக்தாவின் தந்தை ஜெய்சந்த். ஜெய்சந்தை டில்லிக்கு அரசனாக்காமல் பிரிதிவிராஜை அரசனாக்கியதில் ஜெய்சந்துக்கு முதலிலேயே ஏகப்பட்ட கடுப்பு. இப்போது மகளைக் கவர்ந்துவிட்டதில் அது இரட்டிப்பாகிவிட்டது.
வெறும் 24 வயது வரையே வாழ்ந்து மறைந்த காவியத் தலைவன் ப்ரிதிவிராஜ் சவுகான் என்னும் ப்ரிதிவிராஜ். ராஜ்புதன அரசர்களிலேயே இவனும் ராணா ப்ரதாப் சிங்கும் மிகப் பிரபலமானவர்கள். ப்ரிதிவிராஜ் டில்லியின் கடைசி வெற்றிகரமான ஹிந்து அரசன் என்று சொல்லலாம். இவனது தலை நகரம் டில்லி மற்றும் அஜ்மீர்.
பிரிதிவிராஜ் டில்லியை ஆண்ட போது பலப்பல தொல்லைகள் இருந்து வந்திருக்கின்றன. போரிடவே நேரம் சரியாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. திருமணத்திற்குப் பின் காதல் என்னவாயிற்று என்பதற்கான குறிப்புகள் குறைவே:((
2. காஷ்மீர் மக்களின் வரலாறு. முக்கியமாக எப்போது இருந்து அங்கு முஸ்ஸீம் இனத்தவர் வாழ்க்கின்றனர். அதற்கு முன் இருந்த மக்களை ஆண்டது யார். காஷ்மீர் பண்டித்துக்கள் இப்போது என்ன செய்கிறார்கள் என்பதையும் உங்களுக்கு தெரிந்தவற்றை விளக்கவும். (இந்த கேள்வி உண்மையில் எனக்கு காஷ்மீர் வரலாறு தெரியாத்தால் கேட்கப்பட்டது. தற்போதைய காசுமீர் நிலவரம் எனக்கு தெரியும் ஆனால் அதன் வரலாறு தெரியாது, பாடபுத்தகங்களில் படித்ததாகவும் ஞாபகம் இல்லை )
காஷ்மீர் பற்றிய முதல் குறிப்பு கல்ஹணர் என்பவர் எழுதிய 'ராஜதரங்கிணி' என்னும் சமஸ்கிருத வரலாற்று நூலில் கிடைக்கிறது. மவுரிய வம்சத்து அசோகர் ஆண்டபகுதியாக இருந்தது பின்னர் குஷாண வம்சத்திற்கு மாறியது. கனிஷ்கர் மிகப்ரபலமானவர். கி.பி.12ம் நூற்றாண்டுவரை தொடர்ந்த ஹிந்து அரசுகள் மற்ற இந்திய அரசுகளைப் போல் வீழ்ந்துவிட்டன.
பதினெட்டாம் நூற்றாண்டு வரை தொடர்ந்த முஸ்லீம் அரசுகள் பெரும்பாலும் ஆஃப்கன், துருக்கிய, முகலாய அரசுகள்தான். மக்கள் முஸ்லீம்களாக மாறினர். பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தப் பகுதி சீக்கியர் வசமானது. லாஹூரிலிருந்து மஹாராஜா ரஞ்சித் சிங் இந்தப் பகுதியைக் கைப்பற்றினார். பிறகு ஆங்கிலேயர்களுக்கும் சீக்கியர்களுக்கும் நடந்த போரில் இது ஆங்கிலேயர் வசமாகிவிட குலாப் சிங் என்பவர் ராவி நதிக்கு மேற்கிலுள்ள பகுதிகளையும் சிந்து நதிக்குக் கிழக்கிலுள்ள பகுதிகளையும் 1847ல் ரூ.75 லட்சத்திற்கு அவர்களிடமிருந்து வாங்கினார். பிறகு இவரது மகன் ரன்வீர் சிங் கில்கிட், ஹுன்ஸா, நகர் முதலிய பகுதிகளை இணைத்தார். இப்படியாக லடாக்கில் பௌத்தர்கள், காஷ்மீரில் முஸ்லீம்கள், ஜம்முவில் ஹிந்துக்கள் என காக்டெயில் நாடாக விளங்கியது காஷ்மீர். 1857க்குப் பிறகு ப்ரின்ஸ்லி ஸ்டேட் ஆக மாறியது. மொத்தத்தில் மக்கள் பெரும்பாலும் முஸ்லீம்கள். அந்தந்தப் பகுதியில் மற்றவர்கள் மெஜாரிடி. காஷ்மீரில் பண்டிட்டுகள் இருந்திருந்தாலும் அவர்கள் மைனாரிடிதான்.
இப்போது பண்டிட்டுகள் பெரும்பாலும் ஜம்முவிலும், டில்லியிலும் வாழ்வதாகத் தெரிகிறது. இதைப் பற்றி பல்வேறு கருத்துகள் இருந்தாலும் உள் நாட்டில் புலம்பெயர்ந்தோர் என்பதை மறுக்க முடியாது. 1989க்குப் பிறகு கடந்த சில வருடங்களாக காஷ்மீரிலுள்ள சரஸ்வதி கோவிலுக்கு யாத்திரை சென்று வருகிறார்கள். மற்றபடி பண்டிட்டுகளுக்கும் முஸ்லீம்களுக்கும் 'சர் நேம்' பெரும்பாலும் ஒன்றாக இருக்கும்.
தற்போதைய காஷ்மீர் நிலவரம் பற்றியும் இதன் பின்புலம் பற்றியும் ஏதும் குறிப்பிடவில்லை. தேவையெனில் அதைப் பற்றி தனிப் பதிவாகவோ கேள்விபதிலாகவோ போடலாம்.
===
நாஞ்சில் பிரதாப்
3.அக்பருக்கு ஆயிரம் பொண்டாட்டியாம்ல...உண்மையா???எப்படிங்க???
என்னங்க அக்பர் சக்ரவர்த்திய குறைவா மதிப்பிட்டுட்டீங்க!?. பொதுவா பாதுஷாக்கள்லாம் இதுல கணக்கே வச்சிக்கறதில்லையே. அதுவும் அக்பர் இதை ஒரு தந்திரமாகவே கையாண்டவராச்சே. கணக்கு சொல்றவங்க 300லருந்து 5000 வரைக்கும் சொல்றாங்க.
ஜலாலுதீன் அக்பர், மொகலாயப் பேரரசர்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தவர். பல்வேறு கலைகள் தெரிந்தவர். ஒன்றைத் தவிர. அதாவது படிப்பு. எழுதப்படிக்கத் தெரியாதவர்.
ஹிந்துக்களைக் கவர நிறைய ராஜபுதன இளவரசிகளை மணந்தவர். எம்மதமும் சம்மதம் என்று மதத்திற்கு ஒரு முக்கிய அரசியை வைத்திருந்தார். இவையல்லாது போகும் போது வரும்போது பார்ப்பதையெல்லாம் அந்தப்புரத்தில் சேர்ப்பது பாதுஷாவுக்கு பொழுது போக்கு.
ஆகவே கணக்கு கேக்காதீங்க. உங்களுக்கு தோணின ஃபிகர (அதாவது நம்பர்) வச்சுக்கங்க ;-))
இவைதான் இந்த வார கேள்விகள். அடுத்த வார கேள்விகளுக்குக் காத்திருக்கிறேன்.
இப்போது கேள்வி பதில்கள்
நான்-ஆதவன்
1. பிருத்திவிராஜ் மற்றும் சம்யுக்தா இவர்கள் காதல் கதையை கேட்டிருந்தாலும் எந்தளவிற்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. அவர்கள் காதல் கதையைப் பற்றி விளக்கவும். அவர்கள் கல்யாணம் செய்திருந்தால் ,அதற்கு பிறகு அவர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரஸியமான சம்பவம் இருந்தாலும் தெரியப்படுத்தவும். (ஹி ஹி இது முதல் கேள்வியா, அதான் கொஞ்சம் ரொமாண்டிக்கா இருக்கட்டுமேன்னு :-)
ரொமான்டிக்காவே ஸ்டார்ட் பண்ணுவோம் சார். இவர்கள் காதல் கதை உண்மைதான். பெரும்பாலும் காணாமலே காதல் தான். ஆனால் வரைபடம் பார்த்து காதல். பிறகு களவுவழி காதல் (திருட்டுத்தனமாக சந்திப்பது). இது எப்படியோ சம்யுக்தாவின் தந்தைக்குத் தெரிந்து போய், சுயம்வரம் வைத்தவர் பிரிதிவிராஜுக்கு மட்டும் அழைப்பு அனுப்பவில்லை. ஆனால் அவனைப் போல் சிலை ஒன்றை மண்டபத்தில் வைத்துவிடுகிறான். சிலைக்கு மாலையிடச் சென்ற சம்யுக்தா சிலைக்குப் பின் நின்ற பிரிதிவிராஜுக்கு மாலையிடுகிறாள். அவன் அப்படியே அவளைக் கவர்ந்து சென்றுவிடுகிறான். இவ்வாறு கூறுகிறது 'ப்ரிதிவிராஜ் ரஸோ' என்ற பிரிதிவிராஜன் சரித்திரம்.
இவனது அவைப் புலவனும் நெருங்கிய நண்பனுமான சந்த் பர்தாய் என்பவன்தான்'ப்ரித்விராஜ் ரஸோ' என்ற இலக்கியத்தைப் படைத்தவன். இதை நம்மூர் கலிங்கத்துப் பரணி போன்று எடுத்துக் கொள்ளலாம். சம்யுக்தாவின் தந்தை ஜெய்சந்த். ஜெய்சந்தை டில்லிக்கு அரசனாக்காமல் பிரிதிவிராஜை அரசனாக்கியதில் ஜெய்சந்துக்கு முதலிலேயே ஏகப்பட்ட கடுப்பு. இப்போது மகளைக் கவர்ந்துவிட்டதில் அது இரட்டிப்பாகிவிட்டது.
வெறும் 24 வயது வரையே வாழ்ந்து மறைந்த காவியத் தலைவன் ப்ரிதிவிராஜ் சவுகான் என்னும் ப்ரிதிவிராஜ். ராஜ்புதன அரசர்களிலேயே இவனும் ராணா ப்ரதாப் சிங்கும் மிகப் பிரபலமானவர்கள். ப்ரிதிவிராஜ் டில்லியின் கடைசி வெற்றிகரமான ஹிந்து அரசன் என்று சொல்லலாம். இவனது தலை நகரம் டில்லி மற்றும் அஜ்மீர்.
பிரிதிவிராஜ் டில்லியை ஆண்ட போது பலப்பல தொல்லைகள் இருந்து வந்திருக்கின்றன. போரிடவே நேரம் சரியாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. திருமணத்திற்குப் பின் காதல் என்னவாயிற்று என்பதற்கான குறிப்புகள் குறைவே:((
2. காஷ்மீர் மக்களின் வரலாறு. முக்கியமாக எப்போது இருந்து அங்கு முஸ்ஸீம் இனத்தவர் வாழ்க்கின்றனர். அதற்கு முன் இருந்த மக்களை ஆண்டது யார். காஷ்மீர் பண்டித்துக்கள் இப்போது என்ன செய்கிறார்கள் என்பதையும் உங்களுக்கு தெரிந்தவற்றை விளக்கவும். (இந்த கேள்வி உண்மையில் எனக்கு காஷ்மீர் வரலாறு தெரியாத்தால் கேட்கப்பட்டது. தற்போதைய காசுமீர் நிலவரம் எனக்கு தெரியும் ஆனால் அதன் வரலாறு தெரியாது, பாடபுத்தகங்களில் படித்ததாகவும் ஞாபகம் இல்லை )
காஷ்மீர் பற்றிய முதல் குறிப்பு கல்ஹணர் என்பவர் எழுதிய 'ராஜதரங்கிணி' என்னும் சமஸ்கிருத வரலாற்று நூலில் கிடைக்கிறது. மவுரிய வம்சத்து அசோகர் ஆண்டபகுதியாக இருந்தது பின்னர் குஷாண வம்சத்திற்கு மாறியது. கனிஷ்கர் மிகப்ரபலமானவர். கி.பி.12ம் நூற்றாண்டுவரை தொடர்ந்த ஹிந்து அரசுகள் மற்ற இந்திய அரசுகளைப் போல் வீழ்ந்துவிட்டன.
பதினெட்டாம் நூற்றாண்டு வரை தொடர்ந்த முஸ்லீம் அரசுகள் பெரும்பாலும் ஆஃப்கன், துருக்கிய, முகலாய அரசுகள்தான். மக்கள் முஸ்லீம்களாக மாறினர். பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தப் பகுதி சீக்கியர் வசமானது. லாஹூரிலிருந்து மஹாராஜா ரஞ்சித் சிங் இந்தப் பகுதியைக் கைப்பற்றினார். பிறகு ஆங்கிலேயர்களுக்கும் சீக்கியர்களுக்கும் நடந்த போரில் இது ஆங்கிலேயர் வசமாகிவிட குலாப் சிங் என்பவர் ராவி நதிக்கு மேற்கிலுள்ள பகுதிகளையும் சிந்து நதிக்குக் கிழக்கிலுள்ள பகுதிகளையும் 1847ல் ரூ.75 லட்சத்திற்கு அவர்களிடமிருந்து வாங்கினார். பிறகு இவரது மகன் ரன்வீர் சிங் கில்கிட், ஹுன்ஸா, நகர் முதலிய பகுதிகளை இணைத்தார். இப்படியாக லடாக்கில் பௌத்தர்கள், காஷ்மீரில் முஸ்லீம்கள், ஜம்முவில் ஹிந்துக்கள் என காக்டெயில் நாடாக விளங்கியது காஷ்மீர். 1857க்குப் பிறகு ப்ரின்ஸ்லி ஸ்டேட் ஆக மாறியது. மொத்தத்தில் மக்கள் பெரும்பாலும் முஸ்லீம்கள். அந்தந்தப் பகுதியில் மற்றவர்கள் மெஜாரிடி. காஷ்மீரில் பண்டிட்டுகள் இருந்திருந்தாலும் அவர்கள் மைனாரிடிதான்.
இப்போது பண்டிட்டுகள் பெரும்பாலும் ஜம்முவிலும், டில்லியிலும் வாழ்வதாகத் தெரிகிறது. இதைப் பற்றி பல்வேறு கருத்துகள் இருந்தாலும் உள் நாட்டில் புலம்பெயர்ந்தோர் என்பதை மறுக்க முடியாது. 1989க்குப் பிறகு கடந்த சில வருடங்களாக காஷ்மீரிலுள்ள சரஸ்வதி கோவிலுக்கு யாத்திரை சென்று வருகிறார்கள். மற்றபடி பண்டிட்டுகளுக்கும் முஸ்லீம்களுக்கும் 'சர் நேம்' பெரும்பாலும் ஒன்றாக இருக்கும்.
தற்போதைய காஷ்மீர் நிலவரம் பற்றியும் இதன் பின்புலம் பற்றியும் ஏதும் குறிப்பிடவில்லை. தேவையெனில் அதைப் பற்றி தனிப் பதிவாகவோ கேள்விபதிலாகவோ போடலாம்.
===
நாஞ்சில் பிரதாப்
3.அக்பருக்கு ஆயிரம் பொண்டாட்டியாம்ல...உண்மையா???எப்படிங்க???
என்னங்க அக்பர் சக்ரவர்த்திய குறைவா மதிப்பிட்டுட்டீங்க!?. பொதுவா பாதுஷாக்கள்லாம் இதுல கணக்கே வச்சிக்கறதில்லையே. அதுவும் அக்பர் இதை ஒரு தந்திரமாகவே கையாண்டவராச்சே. கணக்கு சொல்றவங்க 300லருந்து 5000 வரைக்கும் சொல்றாங்க.
ஜலாலுதீன் அக்பர், மொகலாயப் பேரரசர்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தவர். பல்வேறு கலைகள் தெரிந்தவர். ஒன்றைத் தவிர. அதாவது படிப்பு. எழுதப்படிக்கத் தெரியாதவர்.
ஹிந்துக்களைக் கவர நிறைய ராஜபுதன இளவரசிகளை மணந்தவர். எம்மதமும் சம்மதம் என்று மதத்திற்கு ஒரு முக்கிய அரசியை வைத்திருந்தார். இவையல்லாது போகும் போது வரும்போது பார்ப்பதையெல்லாம் அந்தப்புரத்தில் சேர்ப்பது பாதுஷாவுக்கு பொழுது போக்கு.
ஆகவே கணக்கு கேக்காதீங்க. உங்களுக்கு தோணின ஃபிகர (அதாவது நம்பர்) வச்சுக்கங்க ;-))
இவைதான் இந்த வார கேள்விகள். அடுத்த வார கேள்விகளுக்குக் காத்திருக்கிறேன்.
Monday, December 22, 2008
வேண்டாம் வரலாறு
வரலாறு என்ற பாடம் பள்ளிகளிலிருந்து நீக்கப் படவேண்டும். வாழ்க்கைக்கு உதவாத ஒரு பாடம் உண்டென்றால் அது வரலாறுதான். மற்ற பாடங்களிலாவது நமக்குத் தேவையானவை இருக்கிறது. அசோகர் மரம் நட்டார். அவர் குளம் வெட்டினார். இவர் கால்வாய் கட்டினார். இவர் அவரை வென்றார். அவர் இவரை கொன்றார் என்பதெல்லாம் படிப்பதால் என்ன லாபம்?
மேலே சொன்னவை என் நண்பர் ஒருவரின் கருத்துகள். அவர் மிகத் தீவிரமாக வரலாற்றை எதிர்த்தவர்.
சிலர் படிக்கும் போது பாஸ் செய்யவேண்டிய அளவுக்கு வரலாற்றைத் தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால், வரலாறு மிக முக்கியமானது (நன்றி:இ.அ.இ.மூ.புலிகேசி). ஏனென்றால் இப்போது நாம் ஓரிடத்தில் இருக்கின்றோம், ஓர் திக்கை நோக்கிப் பயணிக்கின்றோம் என்றால், எங்கிருந்து வந்தோம் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.
வரலாற்றைத் தெரிந்து கொள்வதில் பலருக்கு ஆர்வம் இருக்கலாம். அந்த ஆர்வத்திற்கு தூபம் போடும் விதமாக ஒரு முயற்சியில் இறங்கியுள்ளேன். அதாவது வரலாறு கேள்வி-பதில் தொடங்கியிருக்கிறேன். தமிழக / இந்திய / உலக வரலாற்றில் ஏதேனும் கேள்விகளோ, சந்தேகங்களோ இருந்தால், ஏதோ ஒருவிதமாகத் தேடிப்பிடித்து பதில் சொல்ல முயற்சிக்கிறேன். இது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையலாம்.
===
முதல் பகுதியானதால் நானே கேள்வி, நானே பதில்.
1. இதைத் துவக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது? இதற்கு வரவேற்பு எவ்வாறு இருக்கும் என்று கருதுகிறீர்கள்?
வரலாற்றின் பால் பெரும்பான்மையோருக்கு ஒரு வித ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதை மறுக்கவியலாது. ஆயினும், வரலாற்றை அறிந்து கொள்வதை மக்களிடம் பரவலாக்கி அதன் மூலம் நம் பெருமை அருமைகளை அனைவரும் அறிந்திடல் வேண்டும் என்ற அவாவின் வெளிப்பாடே இந்தச் சிறு முயற்சி.
நன்முயற்சிகள் யாவிற்கும் வரவேற்பில் எவ்விதக் குறைவுமிராது என்ற நம்பிக்கையே இந்த முயற்சியின் அடித்தளம்.
2. வரலாறு என்றால் என்ன?
வரலாறு என்பது அரசுகள், வம்சங்கள் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற ஓயாப் பெரும்போர்களின் நாட்குறிப்பே என்ற தவறான புரிதல் அனைவருக்கும் உண்டு. புவியியல் சார்ந்த அரசியல் நிலப்பகுப்பில் இருந்த அரசுகள், மக்கள், பழக்க வழக்கங்கள், வணிகம், இலக்கியம், கலை மற்றும் பல விடயங்கள் அனைத்தும் வரலாறுதான். இங்கு புவியியலுக்கும், அரசியலுக்கும் வரலாற்றில் முக்கியப்பங்குண்டு. ஏனெனில் மேற்சொன்னவற்றின் வளர்ச்சி வீழ்ச்சிகளில் அரசியல் மற்றும் புவியியலின் தாக்கம் பெரும்பான்மையினது. ஆகவே அரசியல் முக்கியமாகவும் மற்றவை அதன் அடியொற்றியும் விவரிக்கப் படுகின்றன.
அஃதாவது சுருங்கக் கூறின், இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு.
3. வரலாறு எவ்வாறு அறியப்படுகின்றது?
வரலாறு இலக்கியங்கள் வாயிலாகவும், அரசு சாசனங்கள் வாயிலாகவும், பயணக்குறிப்புகள் வாயிலாகவும், கல்வெட்டுகள் வாயிலாகவும் அறியப் படுகின்றது. ஆகவே தற்போது நமக்குக் கிடைக்கும் வரலாறு ஒரு சராசரியே தவிர சரியானதன்று.
மேலும் இவற்றில் கிடைக்கும் தகவல்கள் மற்ற தகவல்களுடன் ஒத்துப் போகின்றனவா என்ற நோக்கிலும் சரிபார்க்கப் படுகிறது. ஒரே தகவல் பல்வேறு தரவுகளிலிருந்து கிடைக்குமாயின் அத்தகவல் உண்மைதான் என்று உறுதிப்படுத்தப் படுகிறது.
4. வரலாறு உண்மையானதா? புனைந்துரைத்ததா?
வரலாறு என்பது நிகழ்வுகளின் பதிவுகளன்று. அது வரலாற்றைப் புனைபவரின் பார்வையும் கருத்துமாகும் (History is not the listing of facts. It is full of reporter's views and perspectives).
ஆகவே வரலாறு எப்போதுமே ஒரு பக்கத்தைத் தாழ்த்தியும் மறு பக்கத்தை உயர்த்தியும் காட்டும். இதைச் சமன் செய்து பார்க்கவேண்டியது பயனீட்டாளர்களின் பணியாகிறது.
இவ்வகையில் நோக்குங்கால் வரலாறு பெரும்பாலும் புனைவேயென்பதும், அன்னப்பறவை நீர் விடுத்து பாலருந்தும் விதமாய் புனைவு நீக்கி உண்மை அறிதல் தேவையென்பதும் தெள்ளென விளங்கும்.
5. வரலாற்றைப் படிப்பதால் பயன் என்ன?
ஒரு நாகரீகமோ, ஒரு குறிப்பிட்ட சமுதாயமோ செயல் படும் போக்கானது அதன் வரலாற்றைச் சார்ந்தே உருவாகிறது. உதாரணத்திற்கு, தமிழகத்தில் தமிழரல்லாத தலைவர்கள் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். மற்றவிடங்களில் அவ்வாறன்றி பிற மொழியாளர்கள் சற்றும் மேலே வருவது காண்பதரிதாயிருக்கின்றது. இதன் காரணத்தை ஆய்வோமெனில் கடந்த 7 நூற்றாண்டுகளாக தமிழகத்தின் ஆட்சி தமிழரல்லாதோர் வசம் இருத்தல் காணலாம். இதனடிப்படையிலமைந்ததே நம் சக்கரவியூகம்.
இவ்வாறாக வரலாற்றைப் படிப்பதன் மூலம் பல பிரச்சனைகளுக்குக் குறிப்பான தீர்வு காணுதல் இயலுமென்பதை சுட்டிக்காட்டிட விரும்புகின்றேன்.
====
இப்படிதாங்க. பொதுவா கேக்கலாம். குறிப்பா கேக்கலாம். வரலாறு சம்பந்தமா இருக்கணும் அவ்வளவுதான். இனி நீங்க கேளுங்க, கேளுங்க கேட்டுகிட்டே இருங்க..
சரி இந்த நடை எப்படி இருக்கு? அதையும் சொல்லிட்டு போங்க.
தம்ஸ் அப்ல குத்துங்க. அப்பதான் எல்லாரும் வந்து கேள்விக்கணைகளத் தொடுக்கறதுக்கு வசதியா இருக்கும். என்ன நாஞ்சொல்றது?
மேலே சொன்னவை என் நண்பர் ஒருவரின் கருத்துகள். அவர் மிகத் தீவிரமாக வரலாற்றை எதிர்த்தவர்.
சிலர் படிக்கும் போது பாஸ் செய்யவேண்டிய அளவுக்கு வரலாற்றைத் தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால், வரலாறு மிக முக்கியமானது (நன்றி:இ.அ.இ.மூ.புலிகேசி). ஏனென்றால் இப்போது நாம் ஓரிடத்தில் இருக்கின்றோம், ஓர் திக்கை நோக்கிப் பயணிக்கின்றோம் என்றால், எங்கிருந்து வந்தோம் என்பது நமக்குத் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.
வரலாற்றைத் தெரிந்து கொள்வதில் பலருக்கு ஆர்வம் இருக்கலாம். அந்த ஆர்வத்திற்கு தூபம் போடும் விதமாக ஒரு முயற்சியில் இறங்கியுள்ளேன். அதாவது வரலாறு கேள்வி-பதில் தொடங்கியிருக்கிறேன். தமிழக / இந்திய / உலக வரலாற்றில் ஏதேனும் கேள்விகளோ, சந்தேகங்களோ இருந்தால், ஏதோ ஒருவிதமாகத் தேடிப்பிடித்து பதில் சொல்ல முயற்சிக்கிறேன். இது அனைவருக்கும் பயனுள்ளதாக அமையலாம்.
===
முதல் பகுதியானதால் நானே கேள்வி, நானே பதில்.
1. இதைத் துவக்க வேண்டும் என்ற எண்ணம் ஏன் ஏற்பட்டது? இதற்கு வரவேற்பு எவ்வாறு இருக்கும் என்று கருதுகிறீர்கள்?
வரலாற்றின் பால் பெரும்பான்மையோருக்கு ஒரு வித ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதை மறுக்கவியலாது. ஆயினும், வரலாற்றை அறிந்து கொள்வதை மக்களிடம் பரவலாக்கி அதன் மூலம் நம் பெருமை அருமைகளை அனைவரும் அறிந்திடல் வேண்டும் என்ற அவாவின் வெளிப்பாடே இந்தச் சிறு முயற்சி.
நன்முயற்சிகள் யாவிற்கும் வரவேற்பில் எவ்விதக் குறைவுமிராது என்ற நம்பிக்கையே இந்த முயற்சியின் அடித்தளம்.
2. வரலாறு என்றால் என்ன?
வரலாறு என்பது அரசுகள், வம்சங்கள் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற ஓயாப் பெரும்போர்களின் நாட்குறிப்பே என்ற தவறான புரிதல் அனைவருக்கும் உண்டு. புவியியல் சார்ந்த அரசியல் நிலப்பகுப்பில் இருந்த அரசுகள், மக்கள், பழக்க வழக்கங்கள், வணிகம், இலக்கியம், கலை மற்றும் பல விடயங்கள் அனைத்தும் வரலாறுதான். இங்கு புவியியலுக்கும், அரசியலுக்கும் வரலாற்றில் முக்கியப்பங்குண்டு. ஏனெனில் மேற்சொன்னவற்றின் வளர்ச்சி வீழ்ச்சிகளில் அரசியல் மற்றும் புவியியலின் தாக்கம் பெரும்பான்மையினது. ஆகவே அரசியல் முக்கியமாகவும் மற்றவை அதன் அடியொற்றியும் விவரிக்கப் படுகின்றன.
அஃதாவது சுருங்கக் கூறின், இன்றைய நிகழ்வு நாளைய வரலாறு.
3. வரலாறு எவ்வாறு அறியப்படுகின்றது?
வரலாறு இலக்கியங்கள் வாயிலாகவும், அரசு சாசனங்கள் வாயிலாகவும், பயணக்குறிப்புகள் வாயிலாகவும், கல்வெட்டுகள் வாயிலாகவும் அறியப் படுகின்றது. ஆகவே தற்போது நமக்குக் கிடைக்கும் வரலாறு ஒரு சராசரியே தவிர சரியானதன்று.
மேலும் இவற்றில் கிடைக்கும் தகவல்கள் மற்ற தகவல்களுடன் ஒத்துப் போகின்றனவா என்ற நோக்கிலும் சரிபார்க்கப் படுகிறது. ஒரே தகவல் பல்வேறு தரவுகளிலிருந்து கிடைக்குமாயின் அத்தகவல் உண்மைதான் என்று உறுதிப்படுத்தப் படுகிறது.
4. வரலாறு உண்மையானதா? புனைந்துரைத்ததா?
வரலாறு என்பது நிகழ்வுகளின் பதிவுகளன்று. அது வரலாற்றைப் புனைபவரின் பார்வையும் கருத்துமாகும் (History is not the listing of facts. It is full of reporter's views and perspectives).
ஆகவே வரலாறு எப்போதுமே ஒரு பக்கத்தைத் தாழ்த்தியும் மறு பக்கத்தை உயர்த்தியும் காட்டும். இதைச் சமன் செய்து பார்க்கவேண்டியது பயனீட்டாளர்களின் பணியாகிறது.
இவ்வகையில் நோக்குங்கால் வரலாறு பெரும்பாலும் புனைவேயென்பதும், அன்னப்பறவை நீர் விடுத்து பாலருந்தும் விதமாய் புனைவு நீக்கி உண்மை அறிதல் தேவையென்பதும் தெள்ளென விளங்கும்.
5. வரலாற்றைப் படிப்பதால் பயன் என்ன?
ஒரு நாகரீகமோ, ஒரு குறிப்பிட்ட சமுதாயமோ செயல் படும் போக்கானது அதன் வரலாற்றைச் சார்ந்தே உருவாகிறது. உதாரணத்திற்கு, தமிழகத்தில் தமிழரல்லாத தலைவர்கள் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். மற்றவிடங்களில் அவ்வாறன்றி பிற மொழியாளர்கள் சற்றும் மேலே வருவது காண்பதரிதாயிருக்கின்றது. இதன் காரணத்தை ஆய்வோமெனில் கடந்த 7 நூற்றாண்டுகளாக தமிழகத்தின் ஆட்சி தமிழரல்லாதோர் வசம் இருத்தல் காணலாம். இதனடிப்படையிலமைந்ததே நம் சக்கரவியூகம்.
இவ்வாறாக வரலாற்றைப் படிப்பதன் மூலம் பல பிரச்சனைகளுக்குக் குறிப்பான தீர்வு காணுதல் இயலுமென்பதை சுட்டிக்காட்டிட விரும்புகின்றேன்.
====
இப்படிதாங்க. பொதுவா கேக்கலாம். குறிப்பா கேக்கலாம். வரலாறு சம்பந்தமா இருக்கணும் அவ்வளவுதான். இனி நீங்க கேளுங்க, கேளுங்க கேட்டுகிட்டே இருங்க..
சரி இந்த நடை எப்படி இருக்கு? அதையும் சொல்லிட்டு போங்க.
தம்ஸ் அப்ல குத்துங்க. அப்பதான் எல்லாரும் வந்து கேள்விக்கணைகளத் தொடுக்கறதுக்கு வசதியா இருக்கும். என்ன நாஞ்சொல்றது?