முன்குறிப்பு:- என் பதிவை யாரும் 'ஹேக்' செய்யவில்லை. நான் தான் என் கம்பெனியால் ஹேக் செய்யப்பட்டுள்ளேன்! சில காலம் இந்த உப்புமா பதிவுகளைப் பொறுத்துக்கொள்ளுங்கள்!!
ரவை உப்புமா போன்ற செய்வதற்கு எளிமையான உணவு இதுவரை எதுவும் இல்லை. அதை டேஸ்டி (?!)யாக எப்படி செய்வதென்று பார்ப்போம்.
முதலில் ரவை உப்புமா செய்யத் தேவையான பாத்திரங்கள், உபகரணங்கள்.
1. வாணலி
2. கரண்டி
3. கத்தி (காய்கறிகளை நறுக்க)
4. காய்கறி நறுக்கும் பலகை
5. தட்டு - இரண்டு, மூன்று
இனி ரவை உப்புமா செய்யத் தேவையான பொருட்கள்.
1. பாம்பே ரவை - 200 கிராம்
2. வெங்காயம் - பெரியது 1
3. தக்காளி - மீடியம் 1
4. உருளைக்கிழங்கு - மீடியம் 1
5. கேரட் - சிறியது 1
6. பச்சைப் பட்டாணி - கொஞ்சம்.
7. பச்சை மிளகாய் - 2 - 3
8. இஞ்சி - 1 துண்டு
9. கருவேப்பிலை
10. கொத்தமல்லி
தாளிக்க
1. கடுகு
2. கடலை பருப்பு
3. உளுத்தம் பருப்பு
4. பெருங்காயம்
5. ரீஃபைண்டு ஆயில்
6. உப்பு - தேவையான அளவு
7. தண்ணீர் - ரவையின் அளவைப்போல் இரண்டிலிருந்து இரண்டரை பங்கு
செய்முறை.
பார்ட் 1.
1. வாணலியை அடுப்பில் வைக்கவும்.
2. அடுப்பைப் பற்ற வைக்கவும்.
3. சிறிதளவு எண்ணெயை விடவும்.
4. ரவையைக் கொட்டி கிளறி வறுக்கவும்.
5. சற்று சிவப்பாக வரும் போது அதை ஒரு தட்டில் ஆர வைக்கவும்.
6. அடுப்பை அணைக்கவும்.
பார்ட் 2
1. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. உருளைக்கிழங்கு, கேரட் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3. தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கவும்.
4. பச்சைப்பட்டாணியை உரித்து வைத்துக்கொள்ளவும்.
5. பச்சை மிளகாயை 'ஸ்லிட்' செய்து வைத்துக்கொள்ளவும்.
6. இஞ்சியை தோல் சீவி சிறிய சைசில் கட் செய்யவும். அல்லது 'கிரேட்' செய்யலாம்.
7. கருவேப்பிலை, கொத்தமல்லையை கிள்ளி வைத்துக் கொள்ளவும்.
பார்ட் 3
1. அடுப்பைப் பற்ற வைக்கவும்.
2. வாணலியை அடுப்பின் மேல் வைக்கவும்.
3. எண்ணெயை விடவும்.
4. எண்ணெய் சூடானவுடன் கீழ்கண்ட வரிசையில் பொருட்களை எண்ணெயில் போடவும்.
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, பெருங்காயம், வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு.
5. இவை சற்று பொன்னிறமாக வதங்கியபின், உருளைக்கிழங்கையும், கேரட்டையும் சேர்க்கவும்.
6. தண்ணீர் விடாமல் வதக்கவும்.
7. பட்டாணி சேர்க்கவும்.
8. தக்காளி சேர்த்து வதக்கவும்.
9. இவை அனைத்தும் ஒரு பதமாக திரண்டு வரும் போது, தண்ணீரை விடவும். கருவேப்பிலை, கொத்தமல்லியையும் சேர்க்கவும்.
10. தண்ணீர் கொதிக்கும் போது, ரவையை மெதுவாக விட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் கட்டி கட்டிவிடும்.
11. அடுப்பை சிம்மில் வைத்து மேலே ஒரு தட்டு போட்டு மூடி, ஆவியில் வேக வைக்கவும்.
இறக்கினால் சூடான ரவை உப்புமா தயார்.
இது கிச்சடி அல்ல. கிச்சடிக்கு, மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும். இது வெஜிடபுள் உப்புமா. இதற்கு சர்க்கரை தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும். ஊறுகாய், சட்னி, சாம்பார் என்ற ஆர்டரில் தொட்டுக்கொள்ளலாம்.
மிகவும் டேஸ்டியான ஐட்டம்!!
Monday, September 14, 2009
Tuesday, September 1, 2009
அரிசி உப்புமா - சமையல் குறிப்பு
இன்று தங்கமணி ஊரில் இல்லை. வழக்கமாக தங்க்ஸ் ஊரில் இல்லாத நாட்களில் காசிவினாயகாவுக்கு ஜூட் விட்டுவிடுவேன். இன்று வித்தியாசமாகச் செய்யலாம் என்று பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த, நான் செய்ததை நண்பர்கள் ரசித்துச் சாப்பிட்ட டிபன் அரிசி உப்புமா செய்வது என்று முடிவு செய்தேன். அதை நீங்களும் செய்து சுவைத்துப் பாருங்கள்.
சூடாகவும் சுவையாகவும் அரிசி உப்புமா செய்வது எப்படி என்று பார்ப்போமா? (நன்றி டாக்டர் மா.நன்னன்)
முதலில் உப்புமா செய்வதற்குத் தேவையான பாத்திரங்கள், உபகரணங்கள்.
1. மிக்ஸி (ஜார் அவசியம், மின்சாரம் மிக மிக அவசியம்)
2. வாணலி, அல்லது அடி கனமான பாத்திரம்
3. குக்கர், குக்கருக்குள் போடும் பிளேட், குக்கருக்குள் போடும் பாத்திரம், அதை மூட ஒரு தட்டு, குக்கர் மூடி, விசில்.
4. கரண்டி - ஜல்லிக் கரண்டி அல்லது சட்டுவம்.
5. அரிசி எடுக்க ஒரு பாத்திரம்.
6. கேஸ் அடுப்பு - கேஸ் இருக்க வேண்டும்., லைட்டர்
அடுத்து உப்புமா செய்வதற்குத் தேவையான பொருள்கள்
1. பச்சை அரிசி - 200 கிராம்
2. துவரம்பருப்பு - 20 கிராம்
3. மிளகு - 10 கிராம்
4. சீரகம் - 10 கிராம்
இந்தப் பொருட்களை ஒன்றாகக் கலந்து மிக்ஸி ஜாரில் போட்டு (ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ள வேண்டும்).
5. எண்ணெய் (நல்லெண்ணை பெஸ்ட், ரீஃபைண்ட் ஆயில் ஓக்கே, கடலை எண்ணை டேஸ்ட் நன்றாக இருக்கும்) - 15 மில்லி
6. கடுகு - சிறிதளவு
7. வெந்தயம் - சிறிதளவு
8. கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு - சிறிதளவு
9. பெருங்காயத்தூள் - சிறிதளவு
10. மிளகாய் வற்றல் - இரண்டு அல்லது மூன்று
11. கருவேப்பிலை - சிறிதளவு
இவை தாளிக்கத் தேவையான பொருட்கள் - இந்த வரிசையில்தான் தாளிக்க வேண்டும்.
இவற்றோடு முக்கியமாக உப்பு. உப்பு இல்லையேல் அது உப்புமா இல்லை, சப்புமா ??
தண்ணீர் - அரைத்துக்கொண்ட பொருட்களின் அளவுக்கு இரண்டு பங்கு (பழைய அரிசியாக இருந்தால் இரண்டரை பங்கு)
செய்முறை:-
ப்ராசஸ் 1:-
1. அடுப்பைப் பற்ற வைக்கவும்
2. வாணலி அல்லது அடி கனமான பாத்திரைத்தை அடுப்பின் மேல் வைக்கவும்
3. எண்ணையை விடவும்
4. எண்ணை காய்ந்ததும், கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றைப் போட்டு திருப்பவும்.
5. இவை சற்று பொன்னிறமாக வந்ததும், பெருங்காயத்தூள், மிளகாய்வற்றல் ஆகியவற்றைப் போடவும்.
6. கார நெடி சற்று குறைந்ததும் கருவேப்பிலையைப் போடவும்.
7.கருவேப்பிலை வெடித்தவுடன் தண்ணீர் ஒரு டம்ளர் ஊற்றவும்.
8. உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.
9. மீதியிருக்கும் தண்ணீரை ஊற்றவும்.
10. தண்ணீர் கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
ப்ராசஸ் 2:-
1. தண்ணீரை வாணலியில் ஊற்றிவிட்டு காத்திருக்கும் சமயத்தில் அடுத்த பர்னரை பற்ற வைக்கவும்.
2. குக்கரை அதன் மேல் ஏற்றவும். குக்கருக்குள் தண்ணீர் விடவும். மூடியில் கேஸ்கெட் போட்டு தயாராக வைக்கவும். விசில் தயாராக வைக்கவும்.
3. வாணலியில் தண்ணீர் கொதிக்கும் நிலைக்கு வந்ததும், சற்று சிம் செய்யவும்.
4. அரைத்து வைத்திருக்கும் அரிசி ஆகிய வற்றை மெதுவாகக் கொட்டிக்கொண்டே கிளறவும்.
5. இரண்டு மூன்று முறை கிளறியதும், குக்கருக்குள் வைக்கும் பாத்திரத்திற்கு இதை அப்படியே ட்ரான்ஸ்ஃபர் செய்யவும்.
6. குக்கருக்குள் குக்கர் பாத்திரத்தை இறக்கி, மூடி போட்டு, விசிலையும் போடவும்.
7. பர்னரை 'ஹை'யில் வைக்கவும்.
8. இரண்டு விசில் வந்ததும் 'சிம்' செய்யவும்.
9. இன்னும் இரண்டு விசில் வந்ததும் ஆஃப் செய்யவும்.
10. சிறிது நேரத்திற்குப் பிறகு ஸ்டீம் போன பின் குக்கரைத் திறந்தால் .....
ஆஹா.... நாவில் சுவையூற வைக்கும் அரிசி உப்புமா தயார். அதை ஒரு கிளறு நன்றாகக் கிளறவும். சூடாகப் பரிமாறவும்.
பெஸ்ட் சைட் டிஷ்:- எலுமிச்சங்காய் ஊறுகாய், அல்லது தக்காளி சாம்பார்.
செய்து பார்த்து சுவைத்து விட்டுச் சொல்லுங்கள்..
இன்னும் நிறைய ஐட்டங்கள் இருக்கின்றன!!!
சூடாகவும் சுவையாகவும் அரிசி உப்புமா செய்வது எப்படி என்று பார்ப்போமா? (நன்றி டாக்டர் மா.நன்னன்)
முதலில் உப்புமா செய்வதற்குத் தேவையான பாத்திரங்கள், உபகரணங்கள்.
1. மிக்ஸி (ஜார் அவசியம், மின்சாரம் மிக மிக அவசியம்)
2. வாணலி, அல்லது அடி கனமான பாத்திரம்
3. குக்கர், குக்கருக்குள் போடும் பிளேட், குக்கருக்குள் போடும் பாத்திரம், அதை மூட ஒரு தட்டு, குக்கர் மூடி, விசில்.
4. கரண்டி - ஜல்லிக் கரண்டி அல்லது சட்டுவம்.
5. அரிசி எடுக்க ஒரு பாத்திரம்.
6. கேஸ் அடுப்பு - கேஸ் இருக்க வேண்டும்., லைட்டர்
அடுத்து உப்புமா செய்வதற்குத் தேவையான பொருள்கள்
1. பச்சை அரிசி - 200 கிராம்
2. துவரம்பருப்பு - 20 கிராம்
3. மிளகு - 10 கிராம்
4. சீரகம் - 10 கிராம்
இந்தப் பொருட்களை ஒன்றாகக் கலந்து மிக்ஸி ஜாரில் போட்டு (ஒன்றும் பாதியுமாக அரைத்துக் கொள்ள வேண்டும்).
5. எண்ணெய் (நல்லெண்ணை பெஸ்ட், ரீஃபைண்ட் ஆயில் ஓக்கே, கடலை எண்ணை டேஸ்ட் நன்றாக இருக்கும்) - 15 மில்லி
6. கடுகு - சிறிதளவு
7. வெந்தயம் - சிறிதளவு
8. கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு - சிறிதளவு
9. பெருங்காயத்தூள் - சிறிதளவு
10. மிளகாய் வற்றல் - இரண்டு அல்லது மூன்று
11. கருவேப்பிலை - சிறிதளவு
இவை தாளிக்கத் தேவையான பொருட்கள் - இந்த வரிசையில்தான் தாளிக்க வேண்டும்.
இவற்றோடு முக்கியமாக உப்பு. உப்பு இல்லையேல் அது உப்புமா இல்லை, சப்புமா ??
தண்ணீர் - அரைத்துக்கொண்ட பொருட்களின் அளவுக்கு இரண்டு பங்கு (பழைய அரிசியாக இருந்தால் இரண்டரை பங்கு)
செய்முறை:-
ப்ராசஸ் 1:-
1. அடுப்பைப் பற்ற வைக்கவும்
2. வாணலி அல்லது அடி கனமான பாத்திரைத்தை அடுப்பின் மேல் வைக்கவும்
3. எண்ணையை விடவும்
4. எண்ணை காய்ந்ததும், கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றைப் போட்டு திருப்பவும்.
5. இவை சற்று பொன்னிறமாக வந்ததும், பெருங்காயத்தூள், மிளகாய்வற்றல் ஆகியவற்றைப் போடவும்.
6. கார நெடி சற்று குறைந்ததும் கருவேப்பிலையைப் போடவும்.
7.கருவேப்பிலை வெடித்தவுடன் தண்ணீர் ஒரு டம்ளர் ஊற்றவும்.
8. உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.
9. மீதியிருக்கும் தண்ணீரை ஊற்றவும்.
10. தண்ணீர் கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
ப்ராசஸ் 2:-
1. தண்ணீரை வாணலியில் ஊற்றிவிட்டு காத்திருக்கும் சமயத்தில் அடுத்த பர்னரை பற்ற வைக்கவும்.
2. குக்கரை அதன் மேல் ஏற்றவும். குக்கருக்குள் தண்ணீர் விடவும். மூடியில் கேஸ்கெட் போட்டு தயாராக வைக்கவும். விசில் தயாராக வைக்கவும்.
3. வாணலியில் தண்ணீர் கொதிக்கும் நிலைக்கு வந்ததும், சற்று சிம் செய்யவும்.
4. அரைத்து வைத்திருக்கும் அரிசி ஆகிய வற்றை மெதுவாகக் கொட்டிக்கொண்டே கிளறவும்.
5. இரண்டு மூன்று முறை கிளறியதும், குக்கருக்குள் வைக்கும் பாத்திரத்திற்கு இதை அப்படியே ட்ரான்ஸ்ஃபர் செய்யவும்.
6. குக்கருக்குள் குக்கர் பாத்திரத்தை இறக்கி, மூடி போட்டு, விசிலையும் போடவும்.
7. பர்னரை 'ஹை'யில் வைக்கவும்.
8. இரண்டு விசில் வந்ததும் 'சிம்' செய்யவும்.
9. இன்னும் இரண்டு விசில் வந்ததும் ஆஃப் செய்யவும்.
10. சிறிது நேரத்திற்குப் பிறகு ஸ்டீம் போன பின் குக்கரைத் திறந்தால் .....
ஆஹா.... நாவில் சுவையூற வைக்கும் அரிசி உப்புமா தயார். அதை ஒரு கிளறு நன்றாகக் கிளறவும். சூடாகப் பரிமாறவும்.
பெஸ்ட் சைட் டிஷ்:- எலுமிச்சங்காய் ஊறுகாய், அல்லது தக்காளி சாம்பார்.
செய்து பார்த்து சுவைத்து விட்டுச் சொல்லுங்கள்..
இன்னும் நிறைய ஐட்டங்கள் இருக்கின்றன!!!
Monday, August 31, 2009
காஞ்சித்தலைவனுக்கு வயது ஒன்று!
சரியாக கி.பி.2008, ஆகஸ்டு மாதம். சுக்கில பட்சத்து பவுர்ணமி நிலவு தன் கிரணங்களை வீசி இருட்டைப் போக்கும் முயற்சியில் வெற்றிபெற துடித்துக்கொண்டிருக்கும் போது, அந்த முயற்சியைத் தடுக்கும் விதமாக ஓங்கி அடர்ந்த மரங்கள் தங்கள் கரிய நிழலை படரவிட்டுக்கொண்டிருந்த ஓர் சோலையின் மூலையில் அமர்ந்திருந்தான் ஒருவன். அவன் சிந்தனையில் உதித்த எண்ணங்களின் வண்ணங்கள் அவன் முகத்தில் அந்தக் கும்மிருட்டிலும் தெளிவாகத் தெரிந்தன. முடிவு செய்துவிட்டான்.
எல்லோரும் குதித்து விட்டார்கள், நாம் குதிக்க யோசித்தால் எப்படி?? குதித்துவிட வேண்டியதுதான்...
மற்றொரு சுபயோக சுப நாளில் (யாருக்கு என்று கேட்டால், யாருக்கோ என்றுதான் பதில் வரும்!!) பிளாக்கர் வழங்கும் இலவச சேவையில் தன் பதிவைப்போட்டு. ஒரே பதிவை மூன்று முறை எழுதி தமிழ்மணத்தின் தேவையையும் பூர்த்தி செய்து தன் திறமையைக் காட்டினான்.
வந்தாரை வாழவைக்கும் வலைப்பூக்களம் இவனை வஞ்சிக்கவில்லை. பின்னூட்டங்களை வாரி வழங்காவிடினும், வயிற்றுக்குக் குறைவில்லாமல் தந்துகொண்டிருந்தது. நட்சத்திரம் என்று இடையில் மின்னி, பணிச்சுமையில் காணாமல் போய், தட்டுத்தடுமாறி, திக்கித் திணறி ஒர் ஆண்டை வெற்றிகரமாகக் கடந்துவிட்டான்.
ஆம் காஞ்சித்தலைவனுக்கு ஒரு வயது நிரம்பிவிட்டது.
இது நல்லதோ, கெட்டதோ, எல்லாவற்றுக்கும் காரணம் நீங்கள்தான்!!.
ஒரு வேளை அதிக பின்னூட்டங்கள் வந்தால் "ஆஹா, இவ்வளவு புகழறாங்களே, இவங்களுக்காக நெறய எழுதணும்"னு எழுதுவான்.
வழக்கம் போல் பின்னூட்டங்கள் வரவில்லையென்றால் "ஆஹா, நாம எழுதறது இவங்களுக்குப் பிடிக்கலையோ? மாத்தி எழுதணும்"னு எழுதுவான்.
உங்களோடு மேலும் வளர உங்கள் நல் ஆதரவை என்று நாடும்,
உங்கள்
காஞ்சித்தலைவனாகிய
இளையபல்லவன்..
பி.கு:- இந்தப் பதிவு போடக் காரணமாக இருந்த நான் ஆதவனுக்கு நன்றிகள் பல!!
Sunday, August 30, 2009
திரைக்கதை எழுதுவது எப்படி? - கந்தசாமி - காம்ப்ரமைஸ்? .. 6
ஒரு படம் எப்படியிருக்கும் என்ற சஸ்பென்ஸ் அதை முதலில் பார்க்கும் போதே உடைந்துவிடும். அல்லது அதைப்பற்றிய விமர்சனத்தைப்படிக்கும் போது கட்டுடைக்கப்பட்டு விடும். இதையும் மீறி அந்தத்திரைப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டுவது எது? அதுதான் திரைக்கதை..
ஜென்டில்மேன் சங்கரின் முதல் படம். அதுவும் ராபின் ஹூட் கதைதான். மலைக்கள்ளன் புரட்சித்தலைவரின் அதிரடிப்படம். அதுவும் ராபின் ஹூட் கதைதான். இவை தவிர நிறைய ராபின் ஹூட் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. சில வெற்றிகள். பல பிளாப்கள்.
வெற்றித் திரைக்கதை அமைப்பதற்கான சில அடிப்படை அமைப்புகளைப்பார்ப்போம். இது இன்க்விசிஷன் செஷன் என்று சொல்லலாம்.
1. நான் இந்தப்படத்தை ரசிகனாகப்பார்க்க நேர்ந்தால் என்ன செய்வேன்?
2. பணம் கொடுத்து சினிமாவிற்கு வரும் ரசிகனுக்கு நான் கொடுக்கும் 'வேல்யூ' என்ன?
3. இந்தப் படம் மூலம் நான் எந்த புதிய அனுபவத்தை ஏற்படுத்தப்போகிறேன்.
4. மெசேஜ் இருந்தால் அதன் 'டோசேஜ்' எவ்வளவு? மற்ற மசாலாக்களில் அது நீர்த்துப் போகுமா?
5. தயாரிப்பாளர், நடிகர்கள் முதலிய 'ஸ்டேக் ஹோல்டர்'களை என் திரைக்கதை பாதிக்கிறதா?
இந்தக் கேள்விகளை ஒரு திரைக்கதை ஸ்கெட்ச் அமைக்கும் போது கேட்டுக்கொள்ள வேண்டும். 100% சரியென்று வந்தால் அந்தப்படம் வெற்றியடையக் கூடிய வாய்ப்புகள் அதிகம். இல்லையென்றால் இல்லை.
இந்தக் கேள்விகளை அடிப்படையாக வைத்துத்தான் நம் அடுத்த பாடங்கள் அமைக்கப் பட்டிருக்கும்.
அதற்கு முன்னர் இப்போது பரபரப்பாக அடிபடும் கந்தசாமியைப் பற்றி பார்ப்போம்.
செலவைப் பற்றி கவலையே படாத தயாரிப்பாளர் - கலைப்புலி தாணு
வித்தியாசமான படங்களைத் தந்த இயக்குனர் - சுசி கணேசன்
சூப்பர் ஸ்டாருடன் ஏற்கனவே நடித்துவிட்ட நாயகி - ஸ்ரேயா
அடுத்த சூப்பர் ஸ்டாராக அடியெடுத்துக் கொண்டிருக்கும் - விக்ரம்
புதுமை ஒளிப்பதிவாளர் - ஏகாம்பரம்
சமீபகாலமாக கலக்கிவரும் இசையமைப்பாளர் - தேவி ஸ்ரீப்ரசாத்
மற்றும் வடிவேலு, பிரபு, ஆஷீஷ் வித்யார்த்தி, எக்ஸ், ஒய், இசட்...
வெரைட்டி லொக்கேஷன்கள்
இப்படி ஒரு மெகா கூட்டணியிருந்தும் மக்களுக்கு திருப்தியில்லாமல் போனது ஏன்?
பிரம்மாண்டத்தில் காணாமல் போன லாஜிக். அதனாலேயே அன்னியப்பட்டுவிட்ட காட்சியமைப்புகள்.
சிவாஜிக்கு அளிக்கப்பட்டதை விட கூடுதலாகக் கொடுத்து விட்டதால் ஸ்ரேயா கூடுதலாக குறைக்க வேண்டிய நிலை. அதனாலேயே முகத்தைச் சுளிக்கும் மக்கள்.
சம்பிரதாயத்திற்கு தலை காட்டுவது போல் வடிவேலு.
வலுவில்லாத வில்லன் ஆசீஷ் வித்யார்த்தி.
இத்தனைக்கும் படம் ஒடுவது மூன்று மணி நேரத்திற்கும் மேல்.
=====
என்னைப் பொறுத்தவரை இயக்குனர் பல இடங்களில் காம்ப்ரமைஸ் செய்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது.
கலைஞனுக்கு சுதந்திரம் முக்கியம். அவனது கிரியேட்டிவிட்டியில் மற்றவர்கள் கைவைத்தால் அவ்வளவுதான். அன்ஃபார்ச்சுனேட்லி, இன்றைய தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் நிலை இதுதான்.
====
சரி ஒரு சிறு எக்சர்சைஸ் செய்யலாமா? கந்தசாமி படத்திலுள்ள உங்களுக்குப் பிடிக்காமல் போன இடங்களையும், அது எப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கிறீர்களா?
ஜென்டில்மேன் சங்கரின் முதல் படம். அதுவும் ராபின் ஹூட் கதைதான். மலைக்கள்ளன் புரட்சித்தலைவரின் அதிரடிப்படம். அதுவும் ராபின் ஹூட் கதைதான். இவை தவிர நிறைய ராபின் ஹூட் திரைப்படங்கள் வந்திருக்கின்றன. சில வெற்றிகள். பல பிளாப்கள்.
வெற்றித் திரைக்கதை அமைப்பதற்கான சில அடிப்படை அமைப்புகளைப்பார்ப்போம். இது இன்க்விசிஷன் செஷன் என்று சொல்லலாம்.
1. நான் இந்தப்படத்தை ரசிகனாகப்பார்க்க நேர்ந்தால் என்ன செய்வேன்?
2. பணம் கொடுத்து சினிமாவிற்கு வரும் ரசிகனுக்கு நான் கொடுக்கும் 'வேல்யூ' என்ன?
3. இந்தப் படம் மூலம் நான் எந்த புதிய அனுபவத்தை ஏற்படுத்தப்போகிறேன்.
4. மெசேஜ் இருந்தால் அதன் 'டோசேஜ்' எவ்வளவு? மற்ற மசாலாக்களில் அது நீர்த்துப் போகுமா?
5. தயாரிப்பாளர், நடிகர்கள் முதலிய 'ஸ்டேக் ஹோல்டர்'களை என் திரைக்கதை பாதிக்கிறதா?
இந்தக் கேள்விகளை ஒரு திரைக்கதை ஸ்கெட்ச் அமைக்கும் போது கேட்டுக்கொள்ள வேண்டும். 100% சரியென்று வந்தால் அந்தப்படம் வெற்றியடையக் கூடிய வாய்ப்புகள் அதிகம். இல்லையென்றால் இல்லை.
இந்தக் கேள்விகளை அடிப்படையாக வைத்துத்தான் நம் அடுத்த பாடங்கள் அமைக்கப் பட்டிருக்கும்.
அதற்கு முன்னர் இப்போது பரபரப்பாக அடிபடும் கந்தசாமியைப் பற்றி பார்ப்போம்.
செலவைப் பற்றி கவலையே படாத தயாரிப்பாளர் - கலைப்புலி தாணு
வித்தியாசமான படங்களைத் தந்த இயக்குனர் - சுசி கணேசன்
சூப்பர் ஸ்டாருடன் ஏற்கனவே நடித்துவிட்ட நாயகி - ஸ்ரேயா
அடுத்த சூப்பர் ஸ்டாராக அடியெடுத்துக் கொண்டிருக்கும் - விக்ரம்
புதுமை ஒளிப்பதிவாளர் - ஏகாம்பரம்
சமீபகாலமாக கலக்கிவரும் இசையமைப்பாளர் - தேவி ஸ்ரீப்ரசாத்
மற்றும் வடிவேலு, பிரபு, ஆஷீஷ் வித்யார்த்தி, எக்ஸ், ஒய், இசட்...
வெரைட்டி லொக்கேஷன்கள்
இப்படி ஒரு மெகா கூட்டணியிருந்தும் மக்களுக்கு திருப்தியில்லாமல் போனது ஏன்?
பிரம்மாண்டத்தில் காணாமல் போன லாஜிக். அதனாலேயே அன்னியப்பட்டுவிட்ட காட்சியமைப்புகள்.
சிவாஜிக்கு அளிக்கப்பட்டதை விட கூடுதலாகக் கொடுத்து விட்டதால் ஸ்ரேயா கூடுதலாக குறைக்க வேண்டிய நிலை. அதனாலேயே முகத்தைச் சுளிக்கும் மக்கள்.
சம்பிரதாயத்திற்கு தலை காட்டுவது போல் வடிவேலு.
வலுவில்லாத வில்லன் ஆசீஷ் வித்யார்த்தி.
இத்தனைக்கும் படம் ஒடுவது மூன்று மணி நேரத்திற்கும் மேல்.
=====
என்னைப் பொறுத்தவரை இயக்குனர் பல இடங்களில் காம்ப்ரமைஸ் செய்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது.
கலைஞனுக்கு சுதந்திரம் முக்கியம். அவனது கிரியேட்டிவிட்டியில் மற்றவர்கள் கைவைத்தால் அவ்வளவுதான். அன்ஃபார்ச்சுனேட்லி, இன்றைய தமிழ் சினிமாவில் இயக்குனர்களின் நிலை இதுதான்.
====
சரி ஒரு சிறு எக்சர்சைஸ் செய்யலாமா? கந்தசாமி படத்திலுள்ள உங்களுக்குப் பிடிக்காமல் போன இடங்களையும், அது எப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பதையும் பின்னூட்டத்தில் தெரிவிக்கிறீர்களா?
Sunday, August 23, 2009
காசி வினாயகா மெஸ்
சாப்பிட டோக்கன் வாங்குவதற்காக அரை மணி நேரம் ஒரு மணி நேரம் கியூவில் நிற்பதை எங்காவது பார்த்திருக்கிறீர்களா?
அப்படி கூட்டம் வந்தாலும் இருக்கும் 40 சீட்களுக்கு மேல் கூட்ட மாட்டேன் என்று சொல்லும் மெஸ் ஏதாவது இருக்கிறதா?
ஞாயிறு இரவு, தீபாவளி / பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் ஒரு வாரம் என்று கடையை மூடும் மெஸ் ஏதாவது இருக்கிறதா?
ஒரே சாப்பாட்டையே பல விதமான காம்பினேஷன்களில் கொடுக்கும் இடம் ஏதாவது இருக்கிறதா?
இப்படிப்பட்ட 'இருக்கிறதா'க்களுக்கு ஒரு (ஒரே?) பதில்தான் 'காசி வினாயகா மெஸ்'. சென்னையில் பேச்சுலராக இருந்திருக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் வாய்ப்பு இருக்கிற ஒரு மெஸ். பேச்சுலர்ஸ் பேரடைஸ் என்று அழைக்கப்படும் திருவல்லிக்கேணியில் அக்பர் தெருவில் இருக்கிறது இந்த மெஸ்.
எனக்கு சற்றேறக்குறைய 15 ஆண்டுகளாகப் பழக்கம். அன்றிலிருந்து இன்று வரை ஒரே மாதிரியான சுவை, அளவு மற்றும் அமைப்புதான் அந்த மெஸ்ஸின் ஸ்பெஷாலிட்டி.
அந்த மெஸ்ஸைப் பற்றி ஒரு அறிமுகம்.
அக்பர் தெரு ஒரு சிறிய சந்து. அதில் ஒரு வீடு மாதிரியான இடத்தில்தான் இந்த மெஸ் இருக்கிறது. மதியம் சாப்பாடு, இரவு சாப்பாடு மட்டும்தான். டிஃபன் காபி போன்றவை இல்லை. மதியமென்றால் 1 மணி முதல் கியூ சேர்ந்து விடும். இரவென்றால் 8 மணி முதல் கியூ இருக்கும்.
மொத்தம் 40 சீட்கள். நான்கு வரிசையாக இருக்கும். முதல் இரண்டு வரிசை ஒரு பேட்ச் ஆகவும் அடுத்த இரண்டு வரிசை மற்றொரு பேட்ச் ஆகவும் பரிமாறுவார்கள். முதல் வரிசை 'யெல்லோ டோக்கன்' என்று சொல்வார்கள். அடுத்த வரிசை, 'ஒயிட் டோக்கன்'.
முதலில் டோக்கன் வாங்க வரிசையில் நிற்க வேண்டும். 20 பேருக்குத்தான் டோக்கன். அவர்கள் சாப்பிட்டு முடித்தஉடன் அடுத்த 20 பேருக்கு சாப்பாடு. இப்படித்தான் போகும்.
அளவு சாப்பாட்டிலேயே இரண்டு வகை உண்டு. சாதா, லிமிட்(!). சாதாவில் ரெகுலர் 'பட்டை'யும் லிமிட்டில் சிறிய பட்டையும் இருக்கும். அதற்கு ஒரு டோக்கன் உண்டு!.
தயிர் வேண்டுமென்றால் அதற்கு ஒரு டோக்கன்.
மதியம் பருப்பு நெய், இரவு பருப்பு பொடி நெய் ஸ்பெஷல் உண்டு. இது வேண்டாம் என்பவர்களுக்கு 2 ரூபாய் ரிட்டர்ன் உண்டு.
அதே போல் அப்பளம் வேண்டாம் என்பவர்களுக்கு 1 ரூபாய் ரிட்டர்ன் உண்டு.
இவை வேண்டாம் என்றால் சர்வரிடம் சொல்ல வேண்டும். அவர் ஒரு டோக்கன் தருவார். அதை கல்லாவில் கொடுத்தால் அங்கே பணம் ரிட்டர்ன் கிடைக்கும்.
வேகமாக சாப்பிட வேண்டும். இல்லையென்றால் அடுத்த செட் வந்து விடும். பரிமாறல்கள் எல்லாம் வரிசையாக வருவார்கள். பொரியலும், கூட்டும் இரண்டாவது முறை உண்டு.
உணவு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாததுதான் இந்த மெஸ்ஸின் ஸ்பெஷாலிட்டி. வேறு சில மெஸ்களில் சாப்பிட்டிருக்கிறேன். அங்கேயெல்லாம் சாதத்தில் சுண்ணாம்பு போடுவார்கள். அது அசிடிட்டியை உருவாக்கும். இங்கே அப்படியில்லை.
இந்த மெஸ்சுக்கு பல 'வருடக்கணக்கான' வாடிக்கையாளர்கள் உண்டு.
திருமணத்திற்குப் பிறகு இந்த மெஸ்சுக்குப் போக முடியவில்லை :(.
ஆனாலும் வீட்டில் எப்போதாவது ஊருக்குப் போனால் திருவல்லிக்கேணிக்கு இங்கு சாப்பிடுவதற்காகவே செல்வேன்.
தி பெஸ்ட் மெஸ், திருவல்லிக்கேணி - காசி வினாயகா மெஸ்...
அப்படி கூட்டம் வந்தாலும் இருக்கும் 40 சீட்களுக்கு மேல் கூட்ட மாட்டேன் என்று சொல்லும் மெஸ் ஏதாவது இருக்கிறதா?
ஞாயிறு இரவு, தீபாவளி / பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் ஒரு வாரம் என்று கடையை மூடும் மெஸ் ஏதாவது இருக்கிறதா?
ஒரே சாப்பாட்டையே பல விதமான காம்பினேஷன்களில் கொடுக்கும் இடம் ஏதாவது இருக்கிறதா?
இப்படிப்பட்ட 'இருக்கிறதா'க்களுக்கு ஒரு (ஒரே?) பதில்தான் 'காசி வினாயகா மெஸ்'. சென்னையில் பேச்சுலராக இருந்திருக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும் வாய்ப்பு இருக்கிற ஒரு மெஸ். பேச்சுலர்ஸ் பேரடைஸ் என்று அழைக்கப்படும் திருவல்லிக்கேணியில் அக்பர் தெருவில் இருக்கிறது இந்த மெஸ்.
எனக்கு சற்றேறக்குறைய 15 ஆண்டுகளாகப் பழக்கம். அன்றிலிருந்து இன்று வரை ஒரே மாதிரியான சுவை, அளவு மற்றும் அமைப்புதான் அந்த மெஸ்ஸின் ஸ்பெஷாலிட்டி.
அந்த மெஸ்ஸைப் பற்றி ஒரு அறிமுகம்.
அக்பர் தெரு ஒரு சிறிய சந்து. அதில் ஒரு வீடு மாதிரியான இடத்தில்தான் இந்த மெஸ் இருக்கிறது. மதியம் சாப்பாடு, இரவு சாப்பாடு மட்டும்தான். டிஃபன் காபி போன்றவை இல்லை. மதியமென்றால் 1 மணி முதல் கியூ சேர்ந்து விடும். இரவென்றால் 8 மணி முதல் கியூ இருக்கும்.
மொத்தம் 40 சீட்கள். நான்கு வரிசையாக இருக்கும். முதல் இரண்டு வரிசை ஒரு பேட்ச் ஆகவும் அடுத்த இரண்டு வரிசை மற்றொரு பேட்ச் ஆகவும் பரிமாறுவார்கள். முதல் வரிசை 'யெல்லோ டோக்கன்' என்று சொல்வார்கள். அடுத்த வரிசை, 'ஒயிட் டோக்கன்'.
முதலில் டோக்கன் வாங்க வரிசையில் நிற்க வேண்டும். 20 பேருக்குத்தான் டோக்கன். அவர்கள் சாப்பிட்டு முடித்தஉடன் அடுத்த 20 பேருக்கு சாப்பாடு. இப்படித்தான் போகும்.
அளவு சாப்பாட்டிலேயே இரண்டு வகை உண்டு. சாதா, லிமிட்(!). சாதாவில் ரெகுலர் 'பட்டை'யும் லிமிட்டில் சிறிய பட்டையும் இருக்கும். அதற்கு ஒரு டோக்கன் உண்டு!.
தயிர் வேண்டுமென்றால் அதற்கு ஒரு டோக்கன்.
மதியம் பருப்பு நெய், இரவு பருப்பு பொடி நெய் ஸ்பெஷல் உண்டு. இது வேண்டாம் என்பவர்களுக்கு 2 ரூபாய் ரிட்டர்ன் உண்டு.
அதே போல் அப்பளம் வேண்டாம் என்பவர்களுக்கு 1 ரூபாய் ரிட்டர்ன் உண்டு.
இவை வேண்டாம் என்றால் சர்வரிடம் சொல்ல வேண்டும். அவர் ஒரு டோக்கன் தருவார். அதை கல்லாவில் கொடுத்தால் அங்கே பணம் ரிட்டர்ன் கிடைக்கும்.
வேகமாக சாப்பிட வேண்டும். இல்லையென்றால் அடுத்த செட் வந்து விடும். பரிமாறல்கள் எல்லாம் வரிசையாக வருவார்கள். பொரியலும், கூட்டும் இரண்டாவது முறை உண்டு.
உணவு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாததுதான் இந்த மெஸ்ஸின் ஸ்பெஷாலிட்டி. வேறு சில மெஸ்களில் சாப்பிட்டிருக்கிறேன். அங்கேயெல்லாம் சாதத்தில் சுண்ணாம்பு போடுவார்கள். அது அசிடிட்டியை உருவாக்கும். இங்கே அப்படியில்லை.
இந்த மெஸ்சுக்கு பல 'வருடக்கணக்கான' வாடிக்கையாளர்கள் உண்டு.
திருமணத்திற்குப் பிறகு இந்த மெஸ்சுக்குப் போக முடியவில்லை :(.
ஆனாலும் வீட்டில் எப்போதாவது ஊருக்குப் போனால் திருவல்லிக்கேணிக்கு இங்கு சாப்பிடுவதற்காகவே செல்வேன்.
தி பெஸ்ட் மெஸ், திருவல்லிக்கேணி - காசி வினாயகா மெஸ்...
Thursday, August 20, 2009
சக்கர வியூகம் - இரண்டாம் பாகம் . . . 14
அத்தியாயம் 14: குவலாலா. . கோட்டைத்தலைவன்..
ஹொய்சள வம்சத்தின் கடைசி மன்னனான வீர வல்லாளன் தன் சாம்ராஜ்யத்தை விரிவாக்கும் திட்டத்தை மிகச்சிறப்பாகவே தயாரித்திருந்தான். படைகள் நகர வேண்டிய முறை முதற்கொண்டு வியூகம் அமைத்து முன்னேற வேண்டிய விதம் வரை தெளிவாகத் திட்டமிருந்தது அனைவரையும் கவர்ந்ததென்றே சொல்லவேண்டும். இதை ஒரு சிலர் தலையசைத்தும், புன்னகை கூட்டியும் ஆமோதித்தனர். என்றும் சற்று சந்தேகத்துடனேயே வல்லாளனை அணுகும் மகாமாத்யருக்கும் அந்தத்திட்டம் மிகச் சிறப்பானதொன்றாகவே தோன்றியது. அதன் பிறகு போர் சன்னத்தத்திற்கு வேண்டிய சாமக்ரியைகளை (பொருட்களை) ஏற்பாடு செய்து அதையும் தென் எல்லைக்கு அனுப்பிவிடுமாறு கட்டளையிட்ட மன்னவன், இனி தினமும் இந்த அவை கூடும் என்றும் அடுத்த நடவடிக்கைகளை ஆலோசித்து பணியாற்றவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தான்.
அன்றைய கூட்டம் மிகச்சிறப்பாகவே நடைபெற்றதாக அனைவரும் கருதினர். அன்று முதல் ஹொய்சள ராஜ்ஜியத்தில் அங்கங்கே சிற்சில வியத்தகு நிகழ்ச்சிகள் அரங்கேறின. மக்கள் என்ன நடக்கிறது என்றே தெரியாதவாறு மின்னல் வேகத்தில் தோன்றி மறைந்தன. வர்த்தகம், மக்கள் நடமாட்டம் ஆகியவை நன்றாக நடந்து கொண்டிருந்தாலும், ஏதோ ஒரு மாற்றம் தோன்றவே செய்தது.
====
அன்றைய அரசவைக்கூட்டத்திற்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப்பிறகு ஹொய்சள தேசத்தின் தென் எல்லையில் நாம் இருக்கிறோம். அதன் முக்கிய நகரம் குவலாலா (இன்றைய கோலார்). அதற்கு நேர் மேற்கே மற்றொரு முக்கிய நகரமான தலைக்காடு (மைசூர்) இருந்தது என்றாலும், ஹொய்சள தேசத்திற்கும் பாண்டிய, தொண்டை மண்டலங்களுக்குமிடையேயான ராஜபாட்டையும், சகடப்பெருவழியும் குவலாலாவை மையம் கொண்டே சென்றன. ஆகவே அது முக்கிய கேந்திர நகரமாக விளங்கியது.(முன்னர் கூறியது போல் ராஜபாட்டையில் அரசர்களும், அரசப் பிரதிநிதிகளும், படைகளும், முக்கிய வணிக வேளாளர் குழுக்களும் பயணித்தன. ராஜபாட்டையில் ஆங்காங்கே சத்திரங்களும் சாவடிகளும் நிறைந்திருந்தன. முக்கியமானவர்கள் பிரயாணம் செய்வதால் பாதுகாப்பும் அதிகமாக இருந்தன. இந்தப் பாதையில் பொதுமக்கள் முக்கிய விழாக்காலங்கள் தவிர பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. சகடப்பெருவழி என்பது சரக்குப் போக்குவரத்துக்காகவே பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட வழியாகும். இந்த வழியாகத்தான் விளை பொருட்கள், வாணிபப் பொதிகள் ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக்குச் சென்று வந்தன. இந்தப் பெருவழிகளில் முக்கிய நகருக்கு இடைத்தூரம் குறிக்கும் கற்களும் (மைல் கல்) இடம்பெற்றிருந்தன. )
[தருமபுரிக்கு அருகில் மாட்டலாம் பட்டியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்லில் 'அதியமான் பெருவழி' என்று பொறிக்கப்பட்டு "நாவற்தாவளத்துக்கு 27 காதம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாவற்தாவளம் ஒரு முக்கியச்சந்தையாகும்.]"
கி.பி. நான்காம் நூற்றாண்டில் கங்கர்களின் தலை நகரமாக விளங்கியதை பல்லவர்கள் கைப்பற்றினர். பிறகு சில காலம் ராஷ்டிரகூடர்களின் வசத்திலிருந்ததை, முதலாம் ராஜராஜ சோழர் தன் வசம் கொண்டு வந்தார். சோழர்கள் வீழ்ந்த பிறகு ஹொய்சளர்களின் முக்கிய நகரமானது இந்தக் குவலாலா. பிற்காலத்தில் விஜய நகர சாம்ராஜ்யத்தின் முக்கிய நகரமாகவும், பிறகு ஹைதர் அலியின் முதல் தலை நகரமாகவும் விளங்கியது கோலார் என்று இன்று அழைக்கப்படுகிற குவலாலா. இந்த நகரின் அருகே இரு பெரும் ஏரிகள் அதன் அரணாகவும், நீர் நிலைகளாகவும் செயல்பட்டு வந்தன.
=====
குவலாலாவின் கோட்டை மதிள்களின் மேல் வீரர்களின் நடமாட்டம் மிகுந்திருந்தது. அந்த நகருக்குள் கடந்த ஒரு மாத காலத்தில் பற்பல மனிதர்கள் வந்து குவிந்தவண்ணம் இருந்தனர். உணவுப் பொதிகளும், தளவாட வண்டிகளும் வந்த வண்ணம் இருந்தன. அவற்றையெல்லாம் நகரின் கிழக்குப்பகுதியிலுள்ள ஏரியின் கரையில் அமைந்திருந்த பெரிய தோப்பிற்குத் திருப்பி விட்டுக்கொண்டிருந்தனர் காவல் வீரர்கள். புதிதாக வந்த வீரர்கள் நகரில் நுழைந்தவுடன் அவர்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு அந்நகரை ஒட்டியுள்ள மலையடிவாரத்திற்கு அனுப்பப்பட்டனர். ஆகவே நகரில் நடமாட்டம் இருந்ததே ஒழிய அங்கே யாரும் அதிக நேரம் தங்கவில்லை. இவ்வாறின்றி புதிய மனிதர்கள் யாரேனும் தென்பட்டால் உடனே அழைத்து விசாரிக்கவும் தேவைப்பட்டால் அவர்களைச் சிறையில் அடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்படியான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க அன்று வடக்கு வாசல் வழக்கத்தை விட அதிக பரபரப்புடன் காணப்பட்டது. வீரர்கள் அந்த் வழியே வருவோரைத் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தனர். கோட்டையிலிருந்து வடக்குவாசல் வழியாக வெளியே செல்லவோ, கோட்டைக்கு உள்ளே நுழையவோ அன்று அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தென்திசை மாதண்ட நாயகமும், அந்தக் கோட்டைத் தலைவனும் வடக்குவாசலின் மேல் விதானத்தில் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் பார்வை அந்த வடக்குவாசலை அடைந்த ராஜபாட்டையிலேயே நிலைத்திருந்தது. இருவர் முகத்திலும் கவலைகளின் ரேகைகள் படர்ந்திருந்தன. அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாலும், எதுவும் பேசாமலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமலும் இருந்தனர். அவர்களின் முகச்சாயலிலிருந்து யாரோ முக்கியமான ஒருவரை அல்லது முக்கியச் செய்தியை எதிர்ப்பார்ப்பது போல் தோன்றியது.
குவலாலாவின் கோட்டைத்தலைவன் பணிக்குப் புதியவன். இளைஞன். கடந்த பல ஆண்டுகளாக அந்தக் கோட்டை பேருக்குத்தான் கோட்டையாக இருந்து வந்தது. போர் என்ற ஒன்று நடைபெற்று பல்லாண்டுகள் ஆன காரணத்தால் அங்கே போர் சன்னத்தங்கள் குறைந்து வணிக ரீதியான முக்கியத்துவம் அதிகரித்திருந்தது. அவனது தந்தையிடமிருந்து அந்தப்பதவி அவனுக்கு வந்திருந்தது. அந்த வகையில் கோட்டைத்தலைவன் வணிகனாகவே மாறிவிட்டிருந்தான். வணிக சம்பந்தமான காரியங்களைத் திறம்பட நடத்திக்கொண்டிருந்தான். அவனது கவனமின்றி ஒரு சிறு துரும்பு கூட நாட்டின் எல்லையைத்தாண்டாது என்பது பிரசித்தமாக இருந்தது.
திடீரென்று தென் திசை மாதண்ட நாயகம் வந்து போர் குறித்து அறிவித்தவுடன் செய்வதறியாது திகைத்தான். நல்லவேளையாக மாதண்ட நாயகமே கோட்டைக் காவலை பலப்படுத்தும் வேலையில் இறங்கிவிட்டதால் அவன் நிம்மதியடைந்தான். ஆனாலும் அவனது வணிகப் பணிகள் பாதிப்படைந்ததால் சொல்லவொணாத்துயரமும் கோபமும் அடைந்தான். ஆனால் இரு நாட்களுக்கு முன் மாதண்ட நாயகம் சொன்ன செய்தி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரசர் வீர வல்லாளரே நேரடியாகக்கோட்டைக்கு வந்து அங்கேயே தண்டு இறங்கி போர்ப்பணிகளைக் கவனிக்கப்போகிறார் என்பதே அது.
அந்த செய்தியைக் கேட்டவுடன், அரசனுக்கு நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டுமே என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. என்ன செய்தால் நல்லபலன் கிடைக்கும் என்று குழம்பிக்கொண்டிருந்தான். அப்போதுதான் மீண்டும் மாதண்ட நாயகம் அழைப்பதாகவும் இம்முறை வடக்கு வாசலுக்கு வந்து சேரும்படியும் தகவல் வந்தது. தன் தலைவிதியை நொந்து கொண்டு மதிய ஆகாரம் கூட சரியாக உண்ணாமல் உடனே புறப்பட்டான் கோட்டைத்தலைவன். வடக்கு வாசலை அடைந்த போது அங்கு நிலவிய பரபரப்பு அவனது குழப்பத்தை அதிகரித்தது.
"வருக வருக கோட்டைத்தலைவரே, உங்களிடம் முக்கியமாகப் பேச வேண்டியிருந்ததால் உங்களை இங்கேயே வரவழைத்துவிட்டேன். நானும் இங்கே இருந்தாக வேண்டிய சூழ் நிலை. பொருட்படுத்தமாட்டீர்கள் என்று நம்புகிறேன்" என்று பவ்யமாகப் பேச்சை ஆரம்பித்தார் மாதண்ட நாயகம். பேச்சில் சிறிது நகைச்சுவை இழையோடினாலும், அவரது மனம் தெளிவாக இல்லை என்பதை வதனம் தெள்ளென எடுத்தியம்பியது.
"அய்யா, அதை ஒன்றும் பொருட்படுத்த மாட்டேன். ஆனால் தயவு செய்து என்னை மரியாதையாக அழைப்பதைத் தவிர்க்க வேண்டுகிறேன். நான் உங்களை விட வயதில் மிகச் சிறியவன். தங்கள் மகனுக்கொப்பானவன். என்னைப்பெயரிட்டே அழைக்கலாம்" என்றான் கோட்டைத்தலைவன். அவனை மரியாதையாக அழைப்பது சங்கடத்திலாழ்த்தியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட மாதண்ட நாயகம்,
"சரி அப்படியே அழைக்கிறேன். இன்று மன்னர் வருவதாகத் தெரிவித்தேன் அல்லவா? மற்றொரு தகவல் வந்திருக்கிறது. வழியில் வந்து கொண்டிருந்த மன்னர் சட்டென்று மறைந்து விட்டதாகவும், அவர் இறுதியாகத் தங்கியிருந்த சத்திரத்தில் ஒரு ஓலை கிடைத்திருப்பதாகவும் அதை எடுத்துக் கொண்டு ஒரு வீரன் வருவதாகவும் செய்திகள் வந்தன. அந்த வீரனை எதிர் பார்த்தே நான் இங்கே காத்திருக்கிறேன். வந்த தகவலின் படி அந்த வீரனும் மதியத்திற்குள் இங்கு வந்திருக்க வேண்டும். இப்போதோ மாலை நெருங்கப்போகிறது. இன்னும் வந்தபாடில்லை. அதைப்பற்றி யோசிக்கவே உன்னை அழைத்தேன்" என்றார்.
"வீரன் வருவதாக வந்தத்தகவல் எப்போது வந்தது?"
"இன்று காலை தான் வந்தது. அரசனது ஓலையைக் கொண்டு வரும் வீரன் சற்று தாமதித்து வருவதாகவும், இந்தத் தகவலைச்சொல்லும் படியாகச் சொன்னதாகவும்
காலை வந்தவன் சொல்கிறான். தகவல் கொண்டு வந்தவன் நம்பத்தகுந்தவன்தான். ஆனாலும் ஓலை வராததால் சற்று கவலை உண்டாகியிருக்கிறது"
"கவலை வேண்டாம் மாதண்ட நாயகரே, எப்படியும் வீரன் விரைவில் வந்து விடுவான் அதற்காகத்தானே இந்த வழியில் போக்குவரத்தை நிறுத்தி விட்டீர்கள். சற்று கவனிப்போம்." என்று கூறிய கோட்டைத்தலைவன், மாதண்ட நாயகத்துடன் சேர்ந்து வடக்கிலிருந்து வரும் ராஜபாட்டையைக் கவனிக்கத் தொடங்கினான்.
அப்படித் தொடங்கி மூன்று நாழிகைகளுக்கும் மேலாயிற்றே ஒழிய ஒருவரும் வந்த பாடில்லை. இருவருக்கும் இருப்புக் கொள்ளவில்லை. நான்கு கண்களும் அந்தப்பாதையையே உற்று நோக்கிக்கொண்டிருந்தன. சட்டென்று மாதண்ட நாயகத்தின் முகத்தில் ஒரு மலர்ச்சி.
"ஆதவா, அங்கே பார்" என்று கோட்டைத்தலைவனை அழைத்தார் மாதண்ட நாயகம். தூரத்தே சிறு புழுதிப்படலம்.
(தொடரும்)
ஹொய்சள வம்சத்தின் கடைசி மன்னனான வீர வல்லாளன் தன் சாம்ராஜ்யத்தை விரிவாக்கும் திட்டத்தை மிகச்சிறப்பாகவே தயாரித்திருந்தான். படைகள் நகர வேண்டிய முறை முதற்கொண்டு வியூகம் அமைத்து முன்னேற வேண்டிய விதம் வரை தெளிவாகத் திட்டமிருந்தது அனைவரையும் கவர்ந்ததென்றே சொல்லவேண்டும். இதை ஒரு சிலர் தலையசைத்தும், புன்னகை கூட்டியும் ஆமோதித்தனர். என்றும் சற்று சந்தேகத்துடனேயே வல்லாளனை அணுகும் மகாமாத்யருக்கும் அந்தத்திட்டம் மிகச் சிறப்பானதொன்றாகவே தோன்றியது. அதன் பிறகு போர் சன்னத்தத்திற்கு வேண்டிய சாமக்ரியைகளை (பொருட்களை) ஏற்பாடு செய்து அதையும் தென் எல்லைக்கு அனுப்பிவிடுமாறு கட்டளையிட்ட மன்னவன், இனி தினமும் இந்த அவை கூடும் என்றும் அடுத்த நடவடிக்கைகளை ஆலோசித்து பணியாற்றவேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தான்.
அன்றைய கூட்டம் மிகச்சிறப்பாகவே நடைபெற்றதாக அனைவரும் கருதினர். அன்று முதல் ஹொய்சள ராஜ்ஜியத்தில் அங்கங்கே சிற்சில வியத்தகு நிகழ்ச்சிகள் அரங்கேறின. மக்கள் என்ன நடக்கிறது என்றே தெரியாதவாறு மின்னல் வேகத்தில் தோன்றி மறைந்தன. வர்த்தகம், மக்கள் நடமாட்டம் ஆகியவை நன்றாக நடந்து கொண்டிருந்தாலும், ஏதோ ஒரு மாற்றம் தோன்றவே செய்தது.
====
அன்றைய அரசவைக்கூட்டத்திற்கு ஏறக்குறைய ஒரு மாதத்திற்குப்பிறகு ஹொய்சள தேசத்தின் தென் எல்லையில் நாம் இருக்கிறோம். அதன் முக்கிய நகரம் குவலாலா (இன்றைய கோலார்). அதற்கு நேர் மேற்கே மற்றொரு முக்கிய நகரமான தலைக்காடு (மைசூர்) இருந்தது என்றாலும், ஹொய்சள தேசத்திற்கும் பாண்டிய, தொண்டை மண்டலங்களுக்குமிடையேயான ராஜபாட்டையும், சகடப்பெருவழியும் குவலாலாவை மையம் கொண்டே சென்றன. ஆகவே அது முக்கிய கேந்திர நகரமாக விளங்கியது.(முன்னர் கூறியது போல் ராஜபாட்டையில் அரசர்களும், அரசப் பிரதிநிதிகளும், படைகளும், முக்கிய வணிக வேளாளர் குழுக்களும் பயணித்தன. ராஜபாட்டையில் ஆங்காங்கே சத்திரங்களும் சாவடிகளும் நிறைந்திருந்தன. முக்கியமானவர்கள் பிரயாணம் செய்வதால் பாதுகாப்பும் அதிகமாக இருந்தன. இந்தப் பாதையில் பொதுமக்கள் முக்கிய விழாக்காலங்கள் தவிர பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. சகடப்பெருவழி என்பது சரக்குப் போக்குவரத்துக்காகவே பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்ட வழியாகும். இந்த வழியாகத்தான் விளை பொருட்கள், வாணிபப் பொதிகள் ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக்குச் சென்று வந்தன. இந்தப் பெருவழிகளில் முக்கிய நகருக்கு இடைத்தூரம் குறிக்கும் கற்களும் (மைல் கல்) இடம்பெற்றிருந்தன. )
[தருமபுரிக்கு அருகில் மாட்டலாம் பட்டியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு கல்லில் 'அதியமான் பெருவழி' என்று பொறிக்கப்பட்டு "நாவற்தாவளத்துக்கு 27 காதம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாவற்தாவளம் ஒரு முக்கியச்சந்தையாகும்.]"
கி.பி. நான்காம் நூற்றாண்டில் கங்கர்களின் தலை நகரமாக விளங்கியதை பல்லவர்கள் கைப்பற்றினர். பிறகு சில காலம் ராஷ்டிரகூடர்களின் வசத்திலிருந்ததை, முதலாம் ராஜராஜ சோழர் தன் வசம் கொண்டு வந்தார். சோழர்கள் வீழ்ந்த பிறகு ஹொய்சளர்களின் முக்கிய நகரமானது இந்தக் குவலாலா. பிற்காலத்தில் விஜய நகர சாம்ராஜ்யத்தின் முக்கிய நகரமாகவும், பிறகு ஹைதர் அலியின் முதல் தலை நகரமாகவும் விளங்கியது கோலார் என்று இன்று அழைக்கப்படுகிற குவலாலா. இந்த நகரின் அருகே இரு பெரும் ஏரிகள் அதன் அரணாகவும், நீர் நிலைகளாகவும் செயல்பட்டு வந்தன.
=====
குவலாலாவின் கோட்டை மதிள்களின் மேல் வீரர்களின் நடமாட்டம் மிகுந்திருந்தது. அந்த நகருக்குள் கடந்த ஒரு மாத காலத்தில் பற்பல மனிதர்கள் வந்து குவிந்தவண்ணம் இருந்தனர். உணவுப் பொதிகளும், தளவாட வண்டிகளும் வந்த வண்ணம் இருந்தன. அவற்றையெல்லாம் நகரின் கிழக்குப்பகுதியிலுள்ள ஏரியின் கரையில் அமைந்திருந்த பெரிய தோப்பிற்குத் திருப்பி விட்டுக்கொண்டிருந்தனர் காவல் வீரர்கள். புதிதாக வந்த வீரர்கள் நகரில் நுழைந்தவுடன் அவர்களைப்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு அந்நகரை ஒட்டியுள்ள மலையடிவாரத்திற்கு அனுப்பப்பட்டனர். ஆகவே நகரில் நடமாட்டம் இருந்ததே ஒழிய அங்கே யாரும் அதிக நேரம் தங்கவில்லை. இவ்வாறின்றி புதிய மனிதர்கள் யாரேனும் தென்பட்டால் உடனே அழைத்து விசாரிக்கவும் தேவைப்பட்டால் அவர்களைச் சிறையில் அடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப்படியான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்க அன்று வடக்கு வாசல் வழக்கத்தை விட அதிக பரபரப்புடன் காணப்பட்டது. வீரர்கள் அந்த் வழியே வருவோரைத் திருப்பி அனுப்பிக்கொண்டிருந்தனர். கோட்டையிலிருந்து வடக்குவாசல் வழியாக வெளியே செல்லவோ, கோட்டைக்கு உள்ளே நுழையவோ அன்று அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தென்திசை மாதண்ட நாயகமும், அந்தக் கோட்டைத் தலைவனும் வடக்குவாசலின் மேல் விதானத்தில் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் பார்வை அந்த வடக்குவாசலை அடைந்த ராஜபாட்டையிலேயே நிலைத்திருந்தது. இருவர் முகத்திலும் கவலைகளின் ரேகைகள் படர்ந்திருந்தன. அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாலும், எதுவும் பேசாமலும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமலும் இருந்தனர். அவர்களின் முகச்சாயலிலிருந்து யாரோ முக்கியமான ஒருவரை அல்லது முக்கியச் செய்தியை எதிர்ப்பார்ப்பது போல் தோன்றியது.
குவலாலாவின் கோட்டைத்தலைவன் பணிக்குப் புதியவன். இளைஞன். கடந்த பல ஆண்டுகளாக அந்தக் கோட்டை பேருக்குத்தான் கோட்டையாக இருந்து வந்தது. போர் என்ற ஒன்று நடைபெற்று பல்லாண்டுகள் ஆன காரணத்தால் அங்கே போர் சன்னத்தங்கள் குறைந்து வணிக ரீதியான முக்கியத்துவம் அதிகரித்திருந்தது. அவனது தந்தையிடமிருந்து அந்தப்பதவி அவனுக்கு வந்திருந்தது. அந்த வகையில் கோட்டைத்தலைவன் வணிகனாகவே மாறிவிட்டிருந்தான். வணிக சம்பந்தமான காரியங்களைத் திறம்பட நடத்திக்கொண்டிருந்தான். அவனது கவனமின்றி ஒரு சிறு துரும்பு கூட நாட்டின் எல்லையைத்தாண்டாது என்பது பிரசித்தமாக இருந்தது.
திடீரென்று தென் திசை மாதண்ட நாயகம் வந்து போர் குறித்து அறிவித்தவுடன் செய்வதறியாது திகைத்தான். நல்லவேளையாக மாதண்ட நாயகமே கோட்டைக் காவலை பலப்படுத்தும் வேலையில் இறங்கிவிட்டதால் அவன் நிம்மதியடைந்தான். ஆனாலும் அவனது வணிகப் பணிகள் பாதிப்படைந்ததால் சொல்லவொணாத்துயரமும் கோபமும் அடைந்தான். ஆனால் இரு நாட்களுக்கு முன் மாதண்ட நாயகம் சொன்ன செய்தி அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரசர் வீர வல்லாளரே நேரடியாகக்கோட்டைக்கு வந்து அங்கேயே தண்டு இறங்கி போர்ப்பணிகளைக் கவனிக்கப்போகிறார் என்பதே அது.
அந்த செய்தியைக் கேட்டவுடன், அரசனுக்கு நல்லெண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டுமே என்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. என்ன செய்தால் நல்லபலன் கிடைக்கும் என்று குழம்பிக்கொண்டிருந்தான். அப்போதுதான் மீண்டும் மாதண்ட நாயகம் அழைப்பதாகவும் இம்முறை வடக்கு வாசலுக்கு வந்து சேரும்படியும் தகவல் வந்தது. தன் தலைவிதியை நொந்து கொண்டு மதிய ஆகாரம் கூட சரியாக உண்ணாமல் உடனே புறப்பட்டான் கோட்டைத்தலைவன். வடக்கு வாசலை அடைந்த போது அங்கு நிலவிய பரபரப்பு அவனது குழப்பத்தை அதிகரித்தது.
"வருக வருக கோட்டைத்தலைவரே, உங்களிடம் முக்கியமாகப் பேச வேண்டியிருந்ததால் உங்களை இங்கேயே வரவழைத்துவிட்டேன். நானும் இங்கே இருந்தாக வேண்டிய சூழ் நிலை. பொருட்படுத்தமாட்டீர்கள் என்று நம்புகிறேன்" என்று பவ்யமாகப் பேச்சை ஆரம்பித்தார் மாதண்ட நாயகம். பேச்சில் சிறிது நகைச்சுவை இழையோடினாலும், அவரது மனம் தெளிவாக இல்லை என்பதை வதனம் தெள்ளென எடுத்தியம்பியது.
"அய்யா, அதை ஒன்றும் பொருட்படுத்த மாட்டேன். ஆனால் தயவு செய்து என்னை மரியாதையாக அழைப்பதைத் தவிர்க்க வேண்டுகிறேன். நான் உங்களை விட வயதில் மிகச் சிறியவன். தங்கள் மகனுக்கொப்பானவன். என்னைப்பெயரிட்டே அழைக்கலாம்" என்றான் கோட்டைத்தலைவன். அவனை மரியாதையாக அழைப்பது சங்கடத்திலாழ்த்தியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்ட மாதண்ட நாயகம்,
"சரி அப்படியே அழைக்கிறேன். இன்று மன்னர் வருவதாகத் தெரிவித்தேன் அல்லவா? மற்றொரு தகவல் வந்திருக்கிறது. வழியில் வந்து கொண்டிருந்த மன்னர் சட்டென்று மறைந்து விட்டதாகவும், அவர் இறுதியாகத் தங்கியிருந்த சத்திரத்தில் ஒரு ஓலை கிடைத்திருப்பதாகவும் அதை எடுத்துக் கொண்டு ஒரு வீரன் வருவதாகவும் செய்திகள் வந்தன. அந்த வீரனை எதிர் பார்த்தே நான் இங்கே காத்திருக்கிறேன். வந்த தகவலின் படி அந்த வீரனும் மதியத்திற்குள் இங்கு வந்திருக்க வேண்டும். இப்போதோ மாலை நெருங்கப்போகிறது. இன்னும் வந்தபாடில்லை. அதைப்பற்றி யோசிக்கவே உன்னை அழைத்தேன்" என்றார்.
"வீரன் வருவதாக வந்தத்தகவல் எப்போது வந்தது?"
"இன்று காலை தான் வந்தது. அரசனது ஓலையைக் கொண்டு வரும் வீரன் சற்று தாமதித்து வருவதாகவும், இந்தத் தகவலைச்சொல்லும் படியாகச் சொன்னதாகவும்
காலை வந்தவன் சொல்கிறான். தகவல் கொண்டு வந்தவன் நம்பத்தகுந்தவன்தான். ஆனாலும் ஓலை வராததால் சற்று கவலை உண்டாகியிருக்கிறது"
"கவலை வேண்டாம் மாதண்ட நாயகரே, எப்படியும் வீரன் விரைவில் வந்து விடுவான் அதற்காகத்தானே இந்த வழியில் போக்குவரத்தை நிறுத்தி விட்டீர்கள். சற்று கவனிப்போம்." என்று கூறிய கோட்டைத்தலைவன், மாதண்ட நாயகத்துடன் சேர்ந்து வடக்கிலிருந்து வரும் ராஜபாட்டையைக் கவனிக்கத் தொடங்கினான்.
அப்படித் தொடங்கி மூன்று நாழிகைகளுக்கும் மேலாயிற்றே ஒழிய ஒருவரும் வந்த பாடில்லை. இருவருக்கும் இருப்புக் கொள்ளவில்லை. நான்கு கண்களும் அந்தப்பாதையையே உற்று நோக்கிக்கொண்டிருந்தன. சட்டென்று மாதண்ட நாயகத்தின் முகத்தில் ஒரு மலர்ச்சி.
"ஆதவா, அங்கே பார்" என்று கோட்டைத்தலைவனை அழைத்தார் மாதண்ட நாயகம். தூரத்தே சிறு புழுதிப்படலம்.
(தொடரும்)