Friday, November 6, 2009

தொடர் பதிவுகள் ஏன்?

தீபாவளிக்கான தொடர் பதிவு என்னை அடைந்த போது தீபாவளி முடிந்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டிருந்தது. நேற்றுதான் நண்பர் ஆதிமூலகிருஷ்ணன் அந்தத் தொடர் பதிவை அஃபீஷியலாகத் துண்டித்தார். ஏதோ ஒரு இடத்தில் ஒரு காரணத்துக்காகத் துவக்கப் படும் தொடர் பதிவுகள் சில சமயம் திரட்டிகளின் முகப்பை முழுவதுமாக மறைத்துவிடுகின்றன. இந்தத் தொடர் பதிவுகள் ஏன் ஏற்படுகிறது என்பதற்கான என் ஆராய்ச்சியின் விளைவுதான் இந்தப் பதிவு!

தொடர்பதிவுகளில் ஒற்றுமைகள்.

1. கேள்விகள் பொதுவாக ஒருவரது கருத்தைக் கேட்கும் வகையில் அமைக்கப் படுகின்றன. இதன் மூலம் ஒரு பதிவர் தன் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.

2. பெரும்பாலும், அனைவரும் விரும்பும் வகையில் கவர்ச்சிகரமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. சினிமா, பிடித்தவை பிடிக்காதவை, வாசித்தல் அனுபவம் போன்றவை இயல்பாகவே வசீகரிக்கும் தன்மையுடையன.

3. பதிவர் பதில் சொல்லும் போது தன்னை ஒரு 'அரசு / மதன் / தராசு / குருவியார்' போல நினைத்துக் கொண்டு பதில் சொல்ல வாய்ப்பாக அமைகிறது. இங்கே பதிவரின் 'ஈகோ' திருப்திப் படுத்தப் படுகிறது.

4. தன்னைப் பற்றி நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகச் சொல்வதும், தன்னைப் பற்றிய பெருமையான விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதும் அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது.

5. நமக்குத் தெரிந்தவர் அழைக்கும் போது மறுக்கமுடியாத மறைமுக நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. தொடர்ந்தே ஆக வேண்டிய கட்டாயம். தான் தொடர்வதோடு தமக்குத் தெரிந்த சிலரையும் அழைக்கின்றனர். அப்படியே சங்கிலியாகச் செல்கிறது. ஒரு சிலர் மட்டும் இதில் விதி விலக்கு.

6. கடைசியாக என்னைப் போன்றவர்களுக்கு தொடர் பதிவு ஒரு வரப்பிரசாதம். என்ன எழுதுவது என்று தெரியாமல் இருப்போருக்கு 'லட்டு' போல் ஒரு மேட்டர் கிடைத்தால் நழுவ விட மாட்டார்கள் அல்லவா?!!


அப்படி எனக்கு 'லட்டு' கொடுத்தவர் சுரேஷ் (பழனியிலிருந்து). இதோ நான் தொடரும் அந்தப் பத்து

இத் தொடர் இடுகையின் விதிகள்:
1. நம் பிடித்தவர், பிடிக்காதவர் பட்டியலில் வருபவர் தமிழகத்தைச் சார்ந்த, பிரபலமாக (பிராபளமாகக்கூட) இருக்க வேண்டும்
2. இதைத் தொடர இரண்டு முதல் ஐந்து பதிவர்களை அழைக்க வேண்டும்
3. ஏழு முதல் பத்துக் கேள்விகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

1. அரசியல்வாதி
பிடித்தவர் : ஜி.கே.வாசன்
பிடிக்காதவர் : மரு. இராமதாசு

2. எழுத்தாளர்
பிடித்தவர் :
பிடிக்காதவர் : பாலகுமாரன்

3. கவிஞர்
பிடித்தவர் : வைரமுத்து
பிடிக்காதவர் :

4. இயக்குனர்
பிடித்தவர் : சங்கர்
பிடிக்காதவர் : பேரரசு

5. நடிகர்
பிடித்தவர் : நாசர்
பிடிக்காதவர் :

6. நடிகை
பிடித்தவர் :
பிடிக்காதவர் : நமீதா

7. இசையமைப்பாளர்
பிடித்தவர் : இளையராஜா
பிடிக்காதவர் : விஜய் ஆண்டனி

8. நகைச்சுவை நடிகர்
பிடித்தவர் : வடிவேலு
பிடிக்காதவர் : விவேக்

9. தொழிலதிபர்
பிடித்தவர் : நா. மகாலிங்கம்
பிடிக்காதவர் : சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள்

10. விஞ்ஞானி
பிடித்தவர் : அப்துல் கலாம்
பிடிக்காதவர் :

இங்கே விடுபட்டவைகள், என்னால் நிரப்பப்பட முடியாதவைகள். அந்த கேட்டகிரியில், நன்றாக யோசித்தும் எந்தப் பெயரும் பொருந்தவில்லை.

இனி இப்பதிவைத் தொடர நான் அழைப்பவர்கள்.

1. அமீரக அமைதிப்புயல் "நான் ஆதவன்"

2. நைஜீரிய நைல் நதி "இராகவன், நைஜீரியா"

3. வகுப்பறை வாத்தியார், "சுப்பையா" அவர்கள்


4. சிங்கைக்கரை கங்கை, "கோவி. கண்ணன்"


வாங்க, வாங்க, இனி உங்கள் பணி...

3 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//சிங்கைக்கரை கங்கை, //

அடடே..,

பின்னோக்கி said...

புடிச்சிருக்கு.
எனக்கு புடிச்சிருக்கு.
எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சுருக்கு.
அந்த 6 வது மேட்டர் :)

☀நான் ஆதவன்☀ said...

அவ்வ்வ்வ்வ்வ் தொடர் பதிவு மாசமா தலைவரே இது :) இப்பெல்லாம் உங்களை தொடர்பதிவுல மட்டும் தான் பார்க்க முடியுது.

ரைட்டு கூடிய சீக்கிரம் போட்டுறேன் :)