Monday, August 16, 2010

வானவில் 16.08.2010

நம் நாடு:-

இந்தியாவின் 64வது சுதந்திர தினம் வழக்கம் போல் வரலாறு காணாத பாதுகாப்புடன் கொண்டாடப்பட்டது. காஷ்மீரில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இங்கு சுதந்திரம் யாருக்கு? யாருக்கோ...

===

சவால்:-

இலவச பம்புசெட் வழங்கப்போவதாக வந்த புதிய அறிவிப்பு நிச்சயம் 14ம் தேதி அம்மையார் திருச்சியில் நிகழ்த்திய உரையின் எதிரொலிதான் என்பதில் சந்தேகமில்லை. இதே போக்கில் போனால் மக்கள் அம்மையாரை எதிர்க்கட்சியாகவே இருக்க வைத்து தேவையானதைப் பெற்றுக் கொள்வார்கள் போலிருக்கிறது! எதற்கும் அ.தி.மு.க. சற்று முன் சாக்கிரதையுடன் செயல்படுவது நல்லது.


===


காமன்வெல்த் போட்டிகள் துவங்குவது சந்தேகமே. அப்படியே துவங்கினாலும் நல்ல விதமாக நடைபெறுவது சற்று சிரமம்தான். கட்டுமானத்துறையில் பணிபுரியும் நான், தற்போது வெளியாகும் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, புதிய தலைமைச் செயலகப் பாணியில் ஒப்பேற்றலாமே ஒழிய முழு அளவில் விளையாட்டுக்களை நடத்தத் தகுதியற்றவையாகவே காட்சியளிக்கின்றன இந்த மைதானங்களும் விளையாட்டரங்கங்களும். எந்நேரத்திலும் மாற்றுத் தகவல் வரலாம்!

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே...

===


ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்:-

இலங்கைக்குத் கருணாஸ் செல்வதைத் தடுத்தவர்கள், இலங்கையில் நடக்கும் துடுப்பாட்டப் போட்டியை தடுக்காதது ஏனோ? அதில் பங்கு பெறும் முரளி விஜயைக் கூட கண்டிக்கவில்லையே? குறைந்த பட்சம் அந்தத் தொடரை ஒளிபரப்பும் தொலைக்காட்சி அலைவரிசையைக் கூட கண்டிக்கவில்லையே என்று அடுக்கடுக்காகக் கேள்வி கேட்க நான் ஒன்றும் கே.. அல்ல. ஆகவே நான் என் வழியில் போகின்றேன்!


===



வலையுலகில் அவ்வப்போது நடக்கும் பதிவர்களுக்கிடையேயான மோதல்கள் எள்ளளவும் யாருக்கும் நன்மை பயப்பதில்லை. இது மிக அதிக எதிர் விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளது. பதிவர்கள் இப்போது ஒருவரை ஒருவர் முழுமையாக நம்புவதில்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை.

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது...

===


மெக்சிகோ கடலில் ஏற்பட்ட எண்ணெய்க்கசிவு அடங்குவதற்குள் மும்பைத் துறைமுகத்தை ஒட்டியே இரு கப்பல்களும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில் நிகழ்ந்த எண்ணெய்க்கசிவு அந்தப் பகுதியின் இயற்கை வளத்தைப் பாதித்துள்ளதாகச் சிலரும் அப்படியொன்றும் பாதிப்பில்லையென்று அமைச்சரும் அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒருதுளியானாலும் பெருவெள்ளமானாலும், விஷம் விஷமே.

உலகை அழிக்க யாரும் புதிதாய் இனி பிறக்கத் தேவையில்லை.


===

கொள்ளையிலும் கொள்ளை பகல் கொள்ளை!


சென்னையில் உள்ள ஹோட்டல்களைப் போல் கொள்ளையடிக்கும் கும்பல் வேறு எந்த ஊரிலாவது இருக்கிறதா என்பது சந்தேகமே. நேற்று (15.08.2010) அன்று மாலை வடபழனி பேருந்து நிலையம் அருகே உள்ள நம்மவீடு வசந்த பவனுக்கு சென்றோம். மாஸ்டர் இல்லாததால் சில உணவு வகைகள் இல்லை என்றார்கள். ரவா தோசை கேட்டால் வீட்டில் செய்யும் மைதா தோசையை எண்ணை வழிய கொண்டுவந்து கொடுக்கிறார்கள். பூரி கேட்டல் அதுவும் அப்பளம் போல் இருக்கிறது ஆனால் மிகவும் சிறிய வடிவில்!. விலை என்னவோ 35 ரூபாய், 40 ரூபாய் என்று பட்டப் பகல் கொள்ளை. புகார் அளிக்கலாம் என்று மேனேஜரைப் பார்க்கச் சென்றால் அவர் இல்லையாம்! வெறும் சேர் டேபிள்தான்.

இங்கு மட்டுமல்ல அனைத்து இடங்களுமே இப்படித்தான். அட பணத்தை வாங்குகிறீர்களே அதற்கு ஒழுங்காக ஏதாவது போடவேண்டாமா? இப்படி வரும் பணம் உங்களிடத்தில் நிலைக்குமா? எப்படி வந்ததோ அப்படியே போய்விடும். இன்றைய தேதியில் சென்னையில் ஓட்டலுக்குச் செல்லும் அனைவரின் மனமும் இப்படித்தான் சாபமிடும். இதை உணர்ந்து திருந்துவார்களா??

4 comments:

மதுரை சரவணன் said...

அத்தனையும் புதுமை... வாழ்த்துக்கள்

CA Venkatesh Krishnan said...

வருகைக்கும் உடனடி கருத்துப்பதிவுக்கும் நன்றி சரவணன்!

☀நான் ஆதவன்☀ said...

சமூக பொறுப்பு வானவில்ல அதிகம் இருக்கே தலைவா :)

அடுத்தடுத்து உங்க ஸ்டைல் பதிவுகளை பார்க்க மீ த வெயிட்டிங். மருவாதையா போடுங்க ஆமா :)

saravanan said...

sakkara viewgam enna aachu