Monday, August 9, 2010

புதியது: இளையபல்லவன்.காம்

என் இனிய வலையுலக மக்களே! உங்கள் அனைவருக்கும் இனிய ஆகஸ்டு 9ம் நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் வாழ்க.

Welcome to the new http://www.ilayapallavan.com


தொட்டணைத்தூறும் மணற்கேணி என்றார் திருவள்ளுவர். எவ்வளவு எடுக்கின்றோமோ அவ்வளவும் சுரக்கும். கடந்த சிலமாதங்களாகவே என் அறிவின் ஊற்று தூர்க்கப்படாமல் மூடிவிட்டது! இப்போதுதான் தூர் வாரிக்கொண்டிருக்கிறேன்.

இதை மேலும் துரிதப்படுத்தும் பொருட்டும், மீண்டும் எழுத வரும் ஒரு முயற்சியின் முதற்கட்டமாகவும், என் வலைத்தளத்தை பிளாக்கரிலிருந்து, டாட் காம் ஆக மாற்றியிருக்கிறேன். டாட் காமிற்கு மாற்ற செலவு செய்துவிட்டதால் அதற்காகவாவது எழுதுவேன் என்று நினைக்கிறேன் (கணக்காளன் அல்லவா !)

என் அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு நண்பர் டெம்ப்ளேட் முதலியவைகளை மாற்றியமைத்துத்தருவதாகக் கூறியிருக்கிறார். ஆக சீவி முடித்து சிங்காரித்து சிவந்த நெற்றியில் பொட்டும் வைத்து உங்கள் முன்னால் வருவதற்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது இளையபல்லவனின் காஞ்சித்தலைவன் தளம்.


மீண்டும் வலையில் என் எழுத்துக்கள் நிறைய சிக்க வேண்டுமென்பதே என் அவா. தொடர்ந்து எழுதுவேன் என்று நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை!!

என்றும் மாறா நன்றிகளுடன்,
இளைய பல்லவன்.

7 comments:

CA Venkatesh Krishnan said...

test

Sathis Kumar said...

Congratz!!

☀நான் ஆதவன்☀ said...

சூப்பர் :))) வாழ்த்துகள் (உங்களை எழுத வைக்க எம்புட்டு செலவு செய்ய வேண்டியதா இருக்கு!)

☀நான் ஆதவன்☀ said...

சூப்பர் :))) வாழ்த்துகள் (உங்களை எழுத வைக்க எம்புட்டு செலவு செய்ய வேண்டியதா இருக்கு!)

Cable சங்கர் said...

வெல்கம் பேக்

CA Venkatesh Krishnan said...

நன்றி ஒற்றன் சார்!

நன்றி ஆதவன்

நன்றி கேபிள்ஜி, கல்கியில் வந்த உங்கள் கதை நன்றாக உள்ளது

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ப்ளாக்ஸ்பாட்டிலேயே டெம்பிளேட் சூப்பராக கிடைக்கின்றன