சென்னை மற்றும் வட மாவட்டங்களிலிருந்து விழுப்புரம் என்.எச்.45 வழியாக தென் மாவட்டங்களுக்கும் மேற்கு மாவட்டங்களுக்கும் செல்வோர் கண்டிப்பாகக் கடந்திருக்க வேண்டிய இடம் இந்த ஜானகிபுரம் ரயில்வே கேட். விழுப்புரம் தாண்டியதும் வரும் முதல் கேட் இது. விக்கிரவாண்டியிலிருந்து பண்ருட்டி வழியில் செல்பவர்கள் இந்த கேட்டிலிருந்து தப்பித்துவிடுவார்கள்.
சென்னை வரும் வாகனங்கள் பெரும்பாலான சமயம் இந்த கேட்டில் மாட்டிக் கொள்ளும். அரை மணி நேரம் முதல் அரை நாள் வரை ஜாம் ஆகிவிடும். இதற்குப் பிறகு உளுந்தூர்பேட்டை கேட் இருந்தாலும் இங்கே ஜாம் ஆகிறார்ப்போல் அங்கே ஆவதில்லை.
சில சமயம் பெரிய பெரிய வண்டிகள் கேட்டின் இரு புறமும் உள்ள தடுப்புகளில் மாட்டிக் கொண்டு வாகனங்களை மறைத்துவிடும்.
மொத்தத்தில் அனைத்து சாலை வாகனங்களுக்கும் பெரும் தலைவலியாக இருந்துவந்த இந்த கேட்டின் மேம்பாலப் பணிகள் கடந்த ஐந்து வருடங்களாக நடந்து வந்து ஒருவழியாக இப்போது பயன்பாட்டிற்குத் திறந்து விடப்பட்டிருக்கிறது.
இது மக்களுக்கு உண்மையிலேயே ஒரு மிகப் பெரிய விடுதலை என்பதில் சந்தேகமில்லை.
நான் அதிக பட்சமாக இரண்டு மணி நேரம் இந்த கேட்டில் மாட்டியிருக்கிறேன். உங்களுக்கு இந்த அனுபவம் ஏதாவது உண்டா?
Saturday, February 28, 2009
Friday, February 27, 2009
என்னுள் மறைந்த நான் - சிறப்பு கவிதைக் கொத்து
என் கவிதை புனையும் திறமையை வெளிப்படுத்தும் பொருட்டும், கவுஜ எழுதுவது எப்படி என்று சுட்டிக்காட்டியதற்காகவும் இந்தக் கவிதைகளை (அல்லது கவுஜகளை) ஆசிப் அண்ணாச்சிக்கு டெடிகேட் செய்கிறேன். இது கவிதையா, கவுஜையா என்பதை அவரது முடிவுக்கு விட்டுவிடுகிறேன்.
எண்ணங்களை
இயம்பும்
வார்த்தைகள்
இல்லை.
என்ன சொல்ல ?
மனத்தோப்பின்
உள்ளே
நின்றது
தனிமரம்.
உண்மை.
மறந்து போவதும்
மறத்துப் போவதும்
மறைந்து போவதும்
நினைவுகள்.
பார்த்தேன்.
பார்க்கிறேன்.
பார்ப்பேன்.
பார்வை.
புதுமை சேர்ந்து
வந்தது
பழையது.
நவீனம்.
முகமறியா
இருட்டின்
முகவரி.
வெளிச்சம்.
உள்ளும்
வெளியும்
சமமாய்.
தேடல்.
கேட்காமல்
தேடாமல்
கிடைக்குமா.
எதிர்பார்ப்பு.
கண்கள்
மூடினாலும்
காட்சிகள்
விரியும்.
கனவு.
என்னைப் பற்றிய
எண்ணத்தில்
மறைந்து
போகிறேன்.
நான்.
அவ்வளவுதாங்க
நம்மளால
முடிஞ்சது.
எதுனா
சொல்லிட்டுப்
போங்க.
ரொம்ப
ஃபீலிங்கா
இருக்கும்...
எண்ணங்களை
இயம்பும்
வார்த்தைகள்
இல்லை.
என்ன சொல்ல ?
மனத்தோப்பின்
உள்ளே
நின்றது
தனிமரம்.
உண்மை.
மறந்து போவதும்
மறத்துப் போவதும்
மறைந்து போவதும்
நினைவுகள்.
பார்த்தேன்.
பார்க்கிறேன்.
பார்ப்பேன்.
பார்வை.
புதுமை சேர்ந்து
வந்தது
பழையது.
நவீனம்.
முகமறியா
இருட்டின்
முகவரி.
வெளிச்சம்.
உள்ளும்
வெளியும்
சமமாய்.
தேடல்.
கேட்காமல்
தேடாமல்
கிடைக்குமா.
எதிர்பார்ப்பு.
கண்கள்
மூடினாலும்
காட்சிகள்
விரியும்.
கனவு.
என்னைப் பற்றிய
எண்ணத்தில்
மறைந்து
போகிறேன்.
நான்.
அவ்வளவுதாங்க
நம்மளால
முடிஞ்சது.
எதுனா
சொல்லிட்டுப்
போங்க.
ரொம்ப
ஃபீலிங்கா
இருக்கும்...
சக்கர வியூகம் எட்டா(ம்) இடத்தை எட்டியது எப்படி?
என் இனிய வலையுலக மக்களே, தமிழ்மணம் விருதுகள் அறிவிக்கப் பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்களாயினும் இன்று வலைப்பூவைத் திறந்திட்ட பிறகுதான் நான் இந்த நிகழ்வை அறிய நேர்ந்தது.
யார் யார் வென்றுள்ளார் என்று பார்த்ததில் நல்ல பதிவுகளும் பதிவர்களுமே வெற்றி பெற்றுள்ளனவென்றுணர்ந்துகொண்டேன். அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் தமிழ்மண நிர்வாகிகளுக்கு உளமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வெய்துகிறேன்.
மேலும், முதற்கட்ட வாக்கெடுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட தலைசிறந்த பத்து பதிவுகளின் பட்டியலில் "தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்" பிரிவில் என் சக்கர வியூகமும் இருக்கக் கண்டு வியப்புற்றேன். இந்தப்பிரிவில் எட்டாவதாகக் காலடி எடுத்து வைத்துள்ளது சக்கர வியூகம்.
வாக்குகள் வழங்கி சிறப்புச் செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதை முதற்கண் கடமையாகக் கருதுகிறேன்.
=====
இப்ப பாருங்க எட்டாவது இடத்தை எட்டிப் பிடிச்சிருக்கு சக்கர வியூகம். எப்படி? இப்படித்தான். இவங்கல்லாம் முந்திகிட்டாங்க.
1. பயணங்கள் - புருனோ Brunoதமிழைக்கூட தமிழில் கற்பது கடினமா ?? எங்கே செல்லும் இந்த பாதை
2. பல்சுவை! - SP.VR. SUBBIAHStar Posting செட்டிநாட்டு வீடுகள்
3. முத்துச்சரம் - ராமலக்ஷ்மி‘திண்ணை நினைவுகள்’-கயல்விழி முத்துலெட்சுமிக்கு ராமலெட்சுமியின் கடிதம்
4. காலம் - கோவி.கண்ணன்இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?
5. விவசாயி - ILA(a)இளாஇந்த மொழித் திணிப்பை என்னான்னு சொல்ல?
6. இசை இன்பம் - ஜீவா (Jeeva Venkataraman)தமிழிசை வரலாறு - 1 : சங்க காலம்
7. வாழ்க்கைப் பயணம் - VIKNESHWARANஆண் விந்தில் எழுதப்பட்ட சரித்திரம்
இவங்களுக்கப்புறமா நான் எட்டாவதா வந்திருக்கேன். எனக்கப்புறம் இவங்க வந்திருக்காங்க.
9. தமிழரங்கம் - தமிழரங்கம் பெண் தன்னைச் சுற்றிக் கட்டும் பரிவட்டம்
10 ‘மரபூர்’ ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்! - ஜெய. சந்திரசேகரன்பண்டைய கோவில் ஓவியங்கள் அழிகின்றன
11. மறந்து போகாத சில - டொக்டர்.எம்.கே.முருகானந்தன்விஞ்ஞானப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் மருத்துவம்
12. பழமைபேசியின் பக்கம் - பழமைபேசி“தம்பிடி”, “வராகன்”ன்னா என்ன?
13. காலப்பெருங்களம் - ஆதித்தன்தடுமாறும் தமிழினம்!
மற்ற பிரிவுகளில் சேர்த்த பதிவுகள் என்னவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.
இப்பதிவினை இட வாய்ப்பளித்த தமிழ்மணம் மற்றும் ரசிகக் கண்மணிகளுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக்கொண்டு இப்போதைக்கு விடை பெறுவது உங்கள் 'இளைய பல்லவன்'
யார் யார் வென்றுள்ளார் என்று பார்த்ததில் நல்ல பதிவுகளும் பதிவர்களுமே வெற்றி பெற்றுள்ளனவென்றுணர்ந்துகொண்டேன். அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன் தமிழ்மண நிர்வாகிகளுக்கு உளமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்வெய்துகிறேன்.
மேலும், முதற்கட்ட வாக்கெடுப்பில் முன்னிலைப்படுத்தப்பட்ட தலைசிறந்த பத்து பதிவுகளின் பட்டியலில் "தமிழ் மொழி, கலாச்சாரம், வரலாறு, தொல்லியல்" பிரிவில் என் சக்கர வியூகமும் இருக்கக் கண்டு வியப்புற்றேன். இந்தப்பிரிவில் எட்டாவதாகக் காலடி எடுத்து வைத்துள்ளது சக்கர வியூகம்.
வாக்குகள் வழங்கி சிறப்புச் செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதை முதற்கண் கடமையாகக் கருதுகிறேன்.
=====
இப்ப பாருங்க எட்டாவது இடத்தை எட்டிப் பிடிச்சிருக்கு சக்கர வியூகம். எப்படி? இப்படித்தான். இவங்கல்லாம் முந்திகிட்டாங்க.
1. பயணங்கள் - புருனோ Brunoதமிழைக்கூட தமிழில் கற்பது கடினமா ?? எங்கே செல்லும் இந்த பாதை
2. பல்சுவை! - SP.VR. SUBBIAHStar Posting செட்டிநாட்டு வீடுகள்
3. முத்துச்சரம் - ராமலக்ஷ்மி‘திண்ணை நினைவுகள்’-கயல்விழி முத்துலெட்சுமிக்கு ராமலெட்சுமியின் கடிதம்
4. காலம் - கோவி.கண்ணன்இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?
5. விவசாயி - ILA(a)இளாஇந்த மொழித் திணிப்பை என்னான்னு சொல்ல?
6. இசை இன்பம் - ஜீவா (Jeeva Venkataraman)தமிழிசை வரலாறு - 1 : சங்க காலம்
7. வாழ்க்கைப் பயணம் - VIKNESHWARANஆண் விந்தில் எழுதப்பட்ட சரித்திரம்
இவங்களுக்கப்புறமா நான் எட்டாவதா வந்திருக்கேன். எனக்கப்புறம் இவங்க வந்திருக்காங்க.
9. தமிழரங்கம் - தமிழரங்கம் பெண் தன்னைச் சுற்றிக் கட்டும் பரிவட்டம்
10 ‘மரபூர்’ ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்! - ஜெய. சந்திரசேகரன்பண்டைய கோவில் ஓவியங்கள் அழிகின்றன
11. மறந்து போகாத சில - டொக்டர்.எம்.கே.முருகானந்தன்விஞ்ஞானப் பாதையில் செல்ல வேண்டிய தமிழ் மருத்துவம்
12. பழமைபேசியின் பக்கம் - பழமைபேசி“தம்பிடி”, “வராகன்”ன்னா என்ன?
13. காலப்பெருங்களம் - ஆதித்தன்தடுமாறும் தமிழினம்!
மற்ற பிரிவுகளில் சேர்த்த பதிவுகள் என்னவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை.
இப்பதிவினை இட வாய்ப்பளித்த தமிழ்மணம் மற்றும் ரசிகக் கண்மணிகளுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக்கொண்டு இப்போதைக்கு விடை பெறுவது உங்கள் 'இளைய பல்லவன்'
Wednesday, February 25, 2009
சக்கர வியூகம் - சரித்திரத் தொடர் - முதல் பாகம்
முதல் பாகம் - திரும்பிப் பார்க்கிறோம்:
தமிழகத்தில் 700 ஆண்டுகளுக்கு முன்னால் முடிவுக்கு வந்த தமிழரசர்களின் ஆட்சி, தமிழகம் விஜய நகர சாம்ராஜ்யத்தின் பிடியில் வீழ்ந்தது, அன்றிலிருந்து இன்று வரை தமிழகம் தமிழர்களால் ஆளப்படாத நிலை, இடையே தில்லி சுல்தானின் பிரதி நிதியான மாலிக் கஃபூரின் படையெடுப்பு, ஆகிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்த சரித்திரத் தொடர். இது வரை வந்த பகுதிகளின் சுருக்கம் கீழே தரப் பட்டுள்ளது.
===
காஞ்சிக் கடிகையில் பயின்ற மாணாக்கர்கள் பாண்டிய இளவல் வீர பாண்டியன், திருவெள்ளரையைச் சேர்ந்த இளவழுதி, ஹொய்சள நாட்டு இளவரசன் வல்லாளன், காடவ வமிசத்து கோப்பெருஞ்சிங்கன் மற்றும் ஹரிஹர ராயன், புக்க ராயன் ஆகியோர். கடிகையின் ப்ரதானாசாரியார் பாஸ்கராசாரியார். மாதவன் என்பவன் அங்கு துணை ஆசானாக இருந்து வந்தான். இவர்களுடைய வித்யாப்பியாச முடிவில் சக்கர வியூகத்தைப் பற்றி சொல்ல வந்த ஆசாரியார் பாதியிலேயே நிறுத்திக் கொள்கிறார். குழம்பிய மாணாக்கர்களுக்கு தில்லையில் இதைப் பற்றி சொல்வதாகக் கூறுகிறான் மாதவன்.
மதுரையில் குலசேகரப் பாண்டியரின் மகன்களான வீரபாண்டியனுக்கும் சுந்தர பாண்டியனுக்கும் அரியணைப் போட்டி இருந்து வருகிறது. அங்கு செல்ல விருப்பமில்லாத வீர பாண்டியன் இளவழுதியுடன் திருவெள்ளரை செல்கிறான். அங்கு இளவழுதியின் தந்தை மாராயர் மூலமாக சுந்தர பாண்டியன் மாலிக் கஃபூருடன் இணைந்து மதுரையைக் கைப்பற்ற திட்டம் தீட்டியிருந்ததைத் தெரிந்து கொள்கிறான். இடையில் இளவழுதியின் தங்கை கயல்விழியுடன் காதல் அரும்புகிறது. வீர பாண்டியனும் கயல்விழியும் மதுரை செல்கின்றனர். இளவழுதியும் தன் மாமன் மகள் தேன்மொழியின் காதல் வலையில் விழுந்துவிடுகிறான். தேன்மொழியின் மூலம்தான் சுந்தர பாண்டியன் மற்றும் மாலிக் கஃபூரின் சதி அம்பலமாகிறது.
மாராயர் இளவழுதியை திருவரங்கத்திற்கு அனுப்பி வல்லாளனைச் சந்திக்கும்படியும் அவனது உதவியை வீரபாண்டியனுக்காகக் கேட்கும் படியும் சொல்கிறார். அங்கு வேதாந்த தேசிகரது மடத்தில் , வல்லாளன் வீர பாண்டியனுக்கு உதவுவதாகக் கூறுகிறான். ஆனால் வல்லாளனை நம்ப வேண்டாமென்று தேசிகர் கூறுகிறார். இளவழுதியைக்கு மிக முக்கியமான பணி இருப்பதாகத் தெரிவிக்கிறார் தேசிகர்.
மாராயர் கொல்லிமலையில் ஒரு ரகசியப் படையைத் திரட்டி பயிற்சியளித்து வருகிறார். அந்தப் படைக்கு பயிற்சியளிப்பது தேன்மொழிதான் என்ற உண்மை இளவழுதிக்குத் தெரியவருகிறது. அங்கு சென்ற இளவழுதி படைக்கு மேலும் பயிற்சியளிப்பதுடன் தேன்மொழியுடனும் உல்லாசமாக இருக்கிறான்.
மதுரை சென்ற வீர பாண்டியன், குலசேகர பாண்டியரைச் சந்திக்கிறான். அவனது சகோதரன் சுந்தர பாண்டியன் மற்றும் மாமன் விக்ரம பாண்டியன் ஆகியோரோடு தற்காலிக சமரசம் ஏற்படுகிறது. மதுரைக்கு வந்த மாலிக் கஃபூரைத் திரும்பிச் செல்லுமாறு கூறிவிடுகிறான் சுந்தர பாண்டியன்.
மார்கழித் திருவாதிரை அன்று வீர பாண்டியன் இளவழுதி, கோப்பெருஞ்சிங்கன் மற்றும் வல்லாளன் ஆகியோர் தில்லையில் மாதவனைச் சந்திக்கின்றனர். மாதவன் போர் முறைச் சக்கர வியூகம் குறித்து மிக விளக்கமாகத் தெரிவிக்கிறான்.
அதைக் கேட்டு வீர பாண்டியன், வல்லாளன் மற்றும் கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் மிக்க மகிழ்ச்சியடைந்து அவ்விடத்தை விட்டு அகல்கின்றனர். இளவழுதிக்கு மட்டும் ஆசாரியார் சொன்ன சக்கர வியூகம் அதுவல்ல என்ற எண்ணம் மேலோங்குகிறது. அதைத் தெரிந்து கொண்ட மாதவன் இளவழுதிக்கு சக்கர வியூகத்தைப் பற்றி முழுமையாக விளக்குகிறான்.
மதுரையில் குலசேகரப் பாண்டியருடைய உடல் நிலை திடீரென மோசமாகிறது. வீர பாண்டியன், சுந்தர பாண்டியன் மற்றும் விக்ரம பாண்டியன் ஆகியோரை அழைத்து அடுத்து வீர பாண்டியனே அரசாள வேண்டும் என்று கூறி உயிர் துறக்கிறார் குலசேகர பாண்டியர். ஆனால் சுந்தர பாண்டியன் மற்றவர்களை சரிக்கட்டி அவனே அடுத்த வாரிசு என்று எல்லோரையும் கூறும்படி செய்து விடுகிறான். ஒன்றும் செய்யவியலாத வீர பாண்டியனும், விக்ரம பாண்டியனும் அங்கிருந்து வெளியேறுகிறார்கள்.
=====
இத்துடன் சக்கர வியூகத்தின் முதல் பாகம் நிறைவுறுகிறது. இரண்டாம் பாகம் அடுத்த வாரத்திலிருந்து.... மாலிக் கஃபூரின் அதிரடிகளுடன்
=====
இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட சுவையாகவும் விறுவிறுப்பாகவும் அமையும் என்று உறுதியளிக்கிறேன்.
=====
தமிழகத்தில் 700 ஆண்டுகளுக்கு முன்னால் முடிவுக்கு வந்த தமிழரசர்களின் ஆட்சி, தமிழகம் விஜய நகர சாம்ராஜ்யத்தின் பிடியில் வீழ்ந்தது, அன்றிலிருந்து இன்று வரை தமிழகம் தமிழர்களால் ஆளப்படாத நிலை, இடையே தில்லி சுல்தானின் பிரதி நிதியான மாலிக் கஃபூரின் படையெடுப்பு, ஆகிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இந்த சரித்திரத் தொடர். இது வரை வந்த பகுதிகளின் சுருக்கம் கீழே தரப் பட்டுள்ளது.
===
காஞ்சிக் கடிகையில் பயின்ற மாணாக்கர்கள் பாண்டிய இளவல் வீர பாண்டியன், திருவெள்ளரையைச் சேர்ந்த இளவழுதி, ஹொய்சள நாட்டு இளவரசன் வல்லாளன், காடவ வமிசத்து கோப்பெருஞ்சிங்கன் மற்றும் ஹரிஹர ராயன், புக்க ராயன் ஆகியோர். கடிகையின் ப்ரதானாசாரியார் பாஸ்கராசாரியார். மாதவன் என்பவன் அங்கு துணை ஆசானாக இருந்து வந்தான். இவர்களுடைய வித்யாப்பியாச முடிவில் சக்கர வியூகத்தைப் பற்றி சொல்ல வந்த ஆசாரியார் பாதியிலேயே நிறுத்திக் கொள்கிறார். குழம்பிய மாணாக்கர்களுக்கு தில்லையில் இதைப் பற்றி சொல்வதாகக் கூறுகிறான் மாதவன்.
மதுரையில் குலசேகரப் பாண்டியரின் மகன்களான வீரபாண்டியனுக்கும் சுந்தர பாண்டியனுக்கும் அரியணைப் போட்டி இருந்து வருகிறது. அங்கு செல்ல விருப்பமில்லாத வீர பாண்டியன் இளவழுதியுடன் திருவெள்ளரை செல்கிறான். அங்கு இளவழுதியின் தந்தை மாராயர் மூலமாக சுந்தர பாண்டியன் மாலிக் கஃபூருடன் இணைந்து மதுரையைக் கைப்பற்ற திட்டம் தீட்டியிருந்ததைத் தெரிந்து கொள்கிறான். இடையில் இளவழுதியின் தங்கை கயல்விழியுடன் காதல் அரும்புகிறது. வீர பாண்டியனும் கயல்விழியும் மதுரை செல்கின்றனர். இளவழுதியும் தன் மாமன் மகள் தேன்மொழியின் காதல் வலையில் விழுந்துவிடுகிறான். தேன்மொழியின் மூலம்தான் சுந்தர பாண்டியன் மற்றும் மாலிக் கஃபூரின் சதி அம்பலமாகிறது.
மாராயர் இளவழுதியை திருவரங்கத்திற்கு அனுப்பி வல்லாளனைச் சந்திக்கும்படியும் அவனது உதவியை வீரபாண்டியனுக்காகக் கேட்கும் படியும் சொல்கிறார். அங்கு வேதாந்த தேசிகரது மடத்தில் , வல்லாளன் வீர பாண்டியனுக்கு உதவுவதாகக் கூறுகிறான். ஆனால் வல்லாளனை நம்ப வேண்டாமென்று தேசிகர் கூறுகிறார். இளவழுதியைக்கு மிக முக்கியமான பணி இருப்பதாகத் தெரிவிக்கிறார் தேசிகர்.
மாராயர் கொல்லிமலையில் ஒரு ரகசியப் படையைத் திரட்டி பயிற்சியளித்து வருகிறார். அந்தப் படைக்கு பயிற்சியளிப்பது தேன்மொழிதான் என்ற உண்மை இளவழுதிக்குத் தெரியவருகிறது. அங்கு சென்ற இளவழுதி படைக்கு மேலும் பயிற்சியளிப்பதுடன் தேன்மொழியுடனும் உல்லாசமாக இருக்கிறான்.
மதுரை சென்ற வீர பாண்டியன், குலசேகர பாண்டியரைச் சந்திக்கிறான். அவனது சகோதரன் சுந்தர பாண்டியன் மற்றும் மாமன் விக்ரம பாண்டியன் ஆகியோரோடு தற்காலிக சமரசம் ஏற்படுகிறது. மதுரைக்கு வந்த மாலிக் கஃபூரைத் திரும்பிச் செல்லுமாறு கூறிவிடுகிறான் சுந்தர பாண்டியன்.
மார்கழித் திருவாதிரை அன்று வீர பாண்டியன் இளவழுதி, கோப்பெருஞ்சிங்கன் மற்றும் வல்லாளன் ஆகியோர் தில்லையில் மாதவனைச் சந்திக்கின்றனர். மாதவன் போர் முறைச் சக்கர வியூகம் குறித்து மிக விளக்கமாகத் தெரிவிக்கிறான்.
அதைக் கேட்டு வீர பாண்டியன், வல்லாளன் மற்றும் கோப்பெருஞ்சிங்கன் ஆகியோர் மிக்க மகிழ்ச்சியடைந்து அவ்விடத்தை விட்டு அகல்கின்றனர். இளவழுதிக்கு மட்டும் ஆசாரியார் சொன்ன சக்கர வியூகம் அதுவல்ல என்ற எண்ணம் மேலோங்குகிறது. அதைத் தெரிந்து கொண்ட மாதவன் இளவழுதிக்கு சக்கர வியூகத்தைப் பற்றி முழுமையாக விளக்குகிறான்.
மதுரையில் குலசேகரப் பாண்டியருடைய உடல் நிலை திடீரென மோசமாகிறது. வீர பாண்டியன், சுந்தர பாண்டியன் மற்றும் விக்ரம பாண்டியன் ஆகியோரை அழைத்து அடுத்து வீர பாண்டியனே அரசாள வேண்டும் என்று கூறி உயிர் துறக்கிறார் குலசேகர பாண்டியர். ஆனால் சுந்தர பாண்டியன் மற்றவர்களை சரிக்கட்டி அவனே அடுத்த வாரிசு என்று எல்லோரையும் கூறும்படி செய்து விடுகிறான். ஒன்றும் செய்யவியலாத வீர பாண்டியனும், விக்ரம பாண்டியனும் அங்கிருந்து வெளியேறுகிறார்கள்.
=====
இத்துடன் சக்கர வியூகத்தின் முதல் பாகம் நிறைவுறுகிறது. இரண்டாம் பாகம் அடுத்த வாரத்திலிருந்து.... மாலிக் கஃபூரின் அதிரடிகளுடன்
=====
இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட சுவையாகவும் விறுவிறுப்பாகவும் அமையும் என்று உறுதியளிக்கிறேன்.
=====
Monday, February 23, 2009
எல்லாப் புகழும் இறைவனுக்கே + நான் கடவுள் = ?!?!
எல்லாப் புகழும் இறைவனுக்கே என்ற அர்ப்பணிப்பு மனதுடனும், இறைவன் வேறு நாம் வேறு இல்லை என்ற தெளிவுடனும், எந்தப் பணியைச் செய்தாலும் வெற்றி நிச்சயம் என்பது ஏ.ஆர்.ரஹ்மானின் இரு ஆஸ்கார் பரிசுகளால் தெள்ளத் தெளிவாகிறது.
ஆக இறைவனுக்குச் சேரும் புகழ் நம்மையே சேர்கிறது. நமக்குள்ளிருந்து நம்மை வழி நடத்திச் செல்லும் இறைவன் நன்மையே செய்வான் என்பது உண்மையாக்கப் பட்டிருக்கிறது
பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேறியிருந்தாலும், பரிசுகள் கிடைத்திருந்தாலும் ஆஸ்கார் கனவு மிக நெடியதாக இருந்து வந்துள்ளது. அந்த நீண்ட காத்திருப்பின் முடிவில் நமக்குக் கிடைத்தது மூன்று பரிசுகள். ரஹ்மானுக்கு இரண்டு, பூக்குட்டிக்கு ஒன்று.
வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பாவிக்கக் கூடியவர்களில் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முன்னோடியாகத் தெரிகிறார். அவர் அலட்டிக் கொண்டு நான் பார்த்ததில்லை. எளிமையும் தன்னடக்கமும் என்றும் ஏற்றத்தைத் தரும் என்ற அரிய கருத்தின் வெளிப்பாடாக இருக்கிறார். அவர் முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டுக்கள். இவை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
வாழ்க ! வளர்க ! !
ஆக இறைவனுக்குச் சேரும் புகழ் நம்மையே சேர்கிறது. நமக்குள்ளிருந்து நம்மை வழி நடத்திச் செல்லும் இறைவன் நன்மையே செய்வான் என்பது உண்மையாக்கப் பட்டிருக்கிறது
பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேறியிருந்தாலும், பரிசுகள் கிடைத்திருந்தாலும் ஆஸ்கார் கனவு மிக நெடியதாக இருந்து வந்துள்ளது. அந்த நீண்ட காத்திருப்பின் முடிவில் நமக்குக் கிடைத்தது மூன்று பரிசுகள். ரஹ்மானுக்கு இரண்டு, பூக்குட்டிக்கு ஒன்று.
வெற்றியையும் தோல்வியையும் சமமாகப் பாவிக்கக் கூடியவர்களில் ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முன்னோடியாகத் தெரிகிறார். அவர் அலட்டிக் கொண்டு நான் பார்த்ததில்லை. எளிமையும் தன்னடக்கமும் என்றும் ஏற்றத்தைத் தரும் என்ற அரிய கருத்தின் வெளிப்பாடாக இருக்கிறார். அவர் முயற்சிக்கும் உழைப்புக்கும் பாராட்டுக்கள். இவை மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.
வாழ்க ! வளர்க ! !
Friday, February 20, 2009
பத்து கேள்விகள் கேட்பவர்களிடம் பத்து கேள்விகள்..
தொற்று வியாதி மற்ற இடங்களில் பரவுகிறதோ இல்லையோ, வலையுலகில், பதிவுலகில் அதிவேகமாகப் பரவி விடுகிறது. பத்து கேள்விகள் போடாவிட்டால் நாம் நம் இமாலயக் கடமையிலிருந்து தவறிவிடுகிறோமோ என்ற அச்சம் எழுந்துவிடுகிறது. ஆகவே நாமும் ஜோதியில் ஐக்கியமாகிவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் வந்தவை இந்தக் கேள்விக்கணைகள்.
கேள்வி கேட்பது என்று முடிவு செய்தவுடந்தான் இந்த கஷ்டம் தெரிந்தது யாரிடம் கேட்பது. எல்லோரும் எல்லாரிடமும் கேட்டுவிட்டார்களே. அடடடடடா.. தலையைப் பிய்த்துக் கொண்டு நான் கடவுள் ஆர்யா போசில் யோசித்ததில் உதயமானதுதான் கேள்வி கேட்பவரிடமே கேள்வி கேட்பது என்ற ஐடியா..
இப்போ ஸ்ட்ரெயிட்டா கேள்விக்கு போகலாம்
1. உங்க கேள்விகளெல்லாம் 10க்குள்ளயே முடிச்சுக்கிறீங்களே அதுக்கு மேல இல்லையா?
2. அப்படி இருக்குதுன்னு சொன்னா அதை ஏன் டிஸ்கில போட மாட்டேன்றீங்க?
3. ஏன் மனுஷங்களையே கேள்வி கேக்கறீங்க. ஆடு மாடு, மெஷின் ரயில் பஸ்னு நெறய இருக்கே இவங்களப்பாத்து கேக்க மாட்டீங்களா?
4. பதில் சொல்றவங்களுக்கு ஏன் பரிசு குடுக்க மாட்டேன்றீங்க? உங்களுக்கு பதில் வேணாமா?
5. எப்படி யோசிச்சு யோசிச்சு கேள்வி கேக்கறீங்க?
6. ஒரே கேள்வியே மாத்தி மாத்தி கேக்கறா மாதிரியிருக்கே ஏன்?
7. கேள்வியெல்லாம் மொக்கையாவே இருக்கே ஏன்?
8. எனக்கு கேள்வி கேக்குற உரிமையிருக்கா?
9. நான் ஜோதியில ஐக்கியமாகிட்டேனா?
10. இந்த பதிவு போட்டதுனால இந்த கேள்விய நான் என்னையே கேட்டுக்கிட்டதா ஆகுமா?
நான் கேள்வியோட நிக்க மாட்டேன்.
பதில் எதிர்பார்ப்பேன்.
தயவு செய்து பதில் சொல்லுங்க.
பதில் சொல்லுங்க.
பதில் சொல்லுங்க.
(நம்ம சோலி முடிஞ்சுது. எங்கப்பா கோலி சோடா? (இது கேள்வில வராது. ஒரு ரைமிங்கா இருக்கட்டுமேன்னு போட்டது)
கேள்வி கேட்பது என்று முடிவு செய்தவுடந்தான் இந்த கஷ்டம் தெரிந்தது யாரிடம் கேட்பது. எல்லோரும் எல்லாரிடமும் கேட்டுவிட்டார்களே. அடடடடடா.. தலையைப் பிய்த்துக் கொண்டு நான் கடவுள் ஆர்யா போசில் யோசித்ததில் உதயமானதுதான் கேள்வி கேட்பவரிடமே கேள்வி கேட்பது என்ற ஐடியா..
இப்போ ஸ்ட்ரெயிட்டா கேள்விக்கு போகலாம்
1. உங்க கேள்விகளெல்லாம் 10க்குள்ளயே முடிச்சுக்கிறீங்களே அதுக்கு மேல இல்லையா?
2. அப்படி இருக்குதுன்னு சொன்னா அதை ஏன் டிஸ்கில போட மாட்டேன்றீங்க?
3. ஏன் மனுஷங்களையே கேள்வி கேக்கறீங்க. ஆடு மாடு, மெஷின் ரயில் பஸ்னு நெறய இருக்கே இவங்களப்பாத்து கேக்க மாட்டீங்களா?
4. பதில் சொல்றவங்களுக்கு ஏன் பரிசு குடுக்க மாட்டேன்றீங்க? உங்களுக்கு பதில் வேணாமா?
5. எப்படி யோசிச்சு யோசிச்சு கேள்வி கேக்கறீங்க?
6. ஒரே கேள்வியே மாத்தி மாத்தி கேக்கறா மாதிரியிருக்கே ஏன்?
7. கேள்வியெல்லாம் மொக்கையாவே இருக்கே ஏன்?
8. எனக்கு கேள்வி கேக்குற உரிமையிருக்கா?
9. நான் ஜோதியில ஐக்கியமாகிட்டேனா?
10. இந்த பதிவு போட்டதுனால இந்த கேள்விய நான் என்னையே கேட்டுக்கிட்டதா ஆகுமா?
நான் கேள்வியோட நிக்க மாட்டேன்.
பதில் எதிர்பார்ப்பேன்.
தயவு செய்து பதில் சொல்லுங்க.
பதில் சொல்லுங்க.
பதில் சொல்லுங்க.
(நம்ம சோலி முடிஞ்சுது. எங்கப்பா கோலி சோடா? (இது கேள்வில வராது. ஒரு ரைமிங்கா இருக்கட்டுமேன்னு போட்டது)