Friday, April 9, 2010

பார்வை



காற்றின் மெல்லசைவும்
கடலின் நல்லலையும்
சங்கின் வெண்ணிறமும்
சலங்கை ஒலிக்குரலும்

தேனின் தீஞ்சுவையும்
தீயின் தண்ணொளியும்
நிலவின் தண் பொழிவும்
நீரின் இன் சுவையும்

பனியின் இளங்குளிரும்
பாலின் நறுசுவையும்
மானின் மருள்விழியும்
மயிலின் சிறு நடையும்

மழையின் சிறுதுளியும்
மலையின் பெருவெளியும்
யாழைப் பழித்த மொழியும்
வாளைப் பழித்த விழியும்


ஆஹா...



கண்ணே...



உன்னை உலகிலுள்ள அத்துணை

பொருளாகவும் பார்க்கக்

கற்றுக் கொடுத்து விட்டார்கள்...



.




.





.



.




.




.








பெண்
ணாகத் தவிர...

7 comments:

☀நான் ஆதவன்☀ said...

ஆகா கவிஞரே :))

வெல்கம் பேக் தலைவரே

☀நான் ஆதவன்☀ said...

மார்ச் முடிஞ்சிருச்சு.... சும்மா உங்களுக்கு நியாபகப்படுத்துறேன்

CA Venkatesh Krishnan said...

ஆதவன் !

எப்படி போயிட்டிருக்கு பிளாக் உலகமெல்லாம்.

மார்ச் முடிஞ்சிருக்கலாம்.

ஆனா மார்ச் முடியல..

ரேஷன் ஆபீசர் said...

ஆஹா!
அருமையான பதிவு!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இது இந்த மாத கோட்டாவா?

CA Venkatesh Krishnan said...

நன்றி ரேஷன் ஆபீசர்!

CA Venkatesh Krishnan said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

இது இந்த மாத கோட்டாவா?
///

நச்சுன்னு அடிச்சிட்டீங்க தல!!!