இந்தப் பதிவு ஐம்பதாவது பதிவு என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மிக மகிழ்ச்சியடைகிறேன். மற்றொரு மகிழ்ச்சியான விஷயம் இந்த ஐம்பதாவது பதிவு நட்சத்திர வாரத்தில் வெளிவருவது. இது இரட்டைச் சந்தோஷத்தைத் தருகிறது.சென்ற மாதம்தான் 25வது பதிவை முடித்து '3 மாதம் 25 பதிவுகள்' என்ற பதிவைப் போட்டேன்.
முதல் 25க்கு 3 மாதம். அடுத்த 25க்கு 30 நாட்கள். ஒரு ரிதமிக்காக இருக்கவேண்டுமென்பதற்காக 3 மாதம் 30 நாட்கள் என்று போட்டிருக்கிறேன். உண்மையில் சற்று அதிக நாட்கள்தான்:). வேகம் கூடியிருக்கிறது. இந்த வேகம் தொடருமா என்று தெரியவில்லை. ஆனால் பதிவுகள் நிச்சயம் தொடரும்.
அதிலும் இந்த நட்சத்திர வாரம் ஆரம்பித்த இரு நாட்களில் ஐந்து பதிவுகள். நடுவில் தினம் ஒரு பதிவென்று முடிவெடுத்து வழக்கம் போல் செயல்படுத்த முடியாமல் விட்டிருக்கிறேன்.
இடையிடையே சில மொக்கைப் பதிவுகள், (நானே ஒரு பதிவை அதிமொக்கையாக இருக்கிறதென்று நீக்கிவிட்டேன்:)..) இரு மீள்பதிவுகள் இருந்தாலும் பெரும்பாலும் மன நிறைவைத் தரும் பதிவுகளாகத் தான் இருக்கின்றன.
புள்ளியியல் அடிப்படையில் சக்கரவியூகம் இரட்டை இலக்கத்தை அடைந்திருக்கிறது. (இடையில் ஒரு மன்னிப்புப் பதிவு:(..).
ஐந்து கேள்விப்பதிவுகள் இட்டிருக்கிறேன். ஆடிட்டரல்லவா. நமக்கு கேட்பதுதான் அல்வா கொடுப்பது போலாயிற்றே!(இப்போதெல்லாம் அல்வா சாப்பிடுவது தவறாமே..)
மூன்று சிறுகதைகள் - நான்கு பதிவுகள் (டேய்.. நிஜமல்ல கதை - இரு பாகங்களாக வந்தது.)
வானவில் என்று வாராந்திரியை ஆரம்பித்தேன். அது தற்சமயம் குறைப் பிரசவமாக இருக்கிறது.
மற்றவை பொதுவானவை.
மாதவாரியாகப் பார்த்தால் ஆகஸ்டில் 4, செப்டம்பரில் 8, அக்டோபரில் 13, நவம்பரில் 14, டிசம்பரில் இதுவரை 11.
இதுவரை 6000 சொச்சம் முறை இந்தப் பதிவு பார்க்கப் பட்டிருக்கிறது. நானே 1000முறைக்கும் மேல் பார்த்திருக்கலாம்.
இது சாத்தியமானதற்கு உதவிய அனைவருக்கும் நன்றி.
Tuesday, December 9, 2008
விவசாய சி.பொ.ம (SEZ)
நேற்று ஒரு சொந்தப்பணி நிமித்தமாக சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்ல வேண்டி இருந்தது.
எப்பொழுதும் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்ல இரண்டிலிருந்து இரண்டரை மணி நேரம் ஆகி விடுகிறது.
சுமார் பத்தாண்டுகளுக்கு முன், கோயம்பேடு தாண்டிவிட்டாலே வயல்கள் தென்படும். செம்பரம் பாக்கம் ஏரி, ஸ்ரீ பெரும்பூதூர் ஏரி என்று பெரிய பெரிய ஏரிகளின் பாசனத்தில் நல்ல விளைச்சலைக் காணலாம்.
இப்போதோ, மருந்துக்குக் கூட ஒரு வயல் காடு கூட இல்லை.:-((
முதலில், ஹுன்டாய் வந்தது, பிறகு செயின்ட் கோபேய்ன். அதன் பின் நோக்கியா, மோட்டரோலா, ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், டெல், கபரோ என்று உலகத்தின் 'பெத்த' பேர்கள் எல்லாம் வரிசையாகத் தென் படத்துவங்கியது.
இதே நிலைதான் செங்கல்பட்டு வரையிலும்.:(இப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் எங்காவது விவசாயம் நடக்கிறதா என்றே தெரியவில்லை.
இது எங்கு சென்று விடும் என்பதும் புரிய வில்லை.இந்நிலையில் உணவுத் தன்னிறைவு இல்லாவிட்டால் முழுமையான வளர்ச்சி என்பது கடினமாகி விடும்.
நான் எதிர் பார்ப்பது எல்லாம் இதுதான்.
.
.
அக்ரிகல்சுரல் எஸ்.இ.இஜட் களை......
ஆம் விவசாய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்தான் வளர்ச்சியின் அடுத்த பரிணாமமாக இருக்கும்.
நாம் எல்லோரும் இதை வரவேற்கத் தயாராக இருப்போம்..
.
நீங்க என்ன சொல்றீங்க ! ! !
இது ஒரு மீள் பதிவு.
எப்பொழுதும் சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்ல இரண்டிலிருந்து இரண்டரை மணி நேரம் ஆகி விடுகிறது.
சுமார் பத்தாண்டுகளுக்கு முன், கோயம்பேடு தாண்டிவிட்டாலே வயல்கள் தென்படும். செம்பரம் பாக்கம் ஏரி, ஸ்ரீ பெரும்பூதூர் ஏரி என்று பெரிய பெரிய ஏரிகளின் பாசனத்தில் நல்ல விளைச்சலைக் காணலாம்.
இப்போதோ, மருந்துக்குக் கூட ஒரு வயல் காடு கூட இல்லை.:-((
முதலில், ஹுன்டாய் வந்தது, பிறகு செயின்ட் கோபேய்ன். அதன் பின் நோக்கியா, மோட்டரோலா, ஃப்ளெக்ஸ்ட்ரானிக்ஸ், டெல், கபரோ என்று உலகத்தின் 'பெத்த' பேர்கள் எல்லாம் வரிசையாகத் தென் படத்துவங்கியது.
இதே நிலைதான் செங்கல்பட்டு வரையிலும்.:(இப்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் எங்காவது விவசாயம் நடக்கிறதா என்றே தெரியவில்லை.
இது எங்கு சென்று விடும் என்பதும் புரிய வில்லை.இந்நிலையில் உணவுத் தன்னிறைவு இல்லாவிட்டால் முழுமையான வளர்ச்சி என்பது கடினமாகி விடும்.
நான் எதிர் பார்ப்பது எல்லாம் இதுதான்.
.
.
அக்ரிகல்சுரல் எஸ்.இ.இஜட் களை......
ஆம் விவசாய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்தான் வளர்ச்சியின் அடுத்த பரிணாமமாக இருக்கும்.
நாம் எல்லோரும் இதை வரவேற்கத் தயாராக இருப்போம்..
.
நீங்க என்ன சொல்றீங்க ! ! !
இது ஒரு மீள் பதிவு.
ஆர்.பி.ஐ. செய்தது - வங்கிகள் செய்யாதது
இந்தியாவின் பொருளாதார நிலை உலகப் பொருளாதார நிலையை விட சற்று மேம்பட்டதாகத்தான் இருக்கிறது. பாரத ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 'ஆர்.பி.ஐ'ஸ் க்ரோத் ஸ்டிமுலஸ்' என்ற அதிகார பூர்வ வெளியீடு, தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, யூரோ நாடுகள், ஜப்பான் ஆகிய நாடுகளின் பொருளாதாரம் அதிகார பூர்வ 'ரிசஷனில்' இருக்கின்றன என்று கூறுகிறது. இதிலிருந்து மீள்வதற்கு நெடுங்காலமாகலாம் என்றும் ஐ.எம்.எஃப். அடுத்த வருடத்தின் வளர்ச்சி 3% ஆக இருக்கும் என்று முதலில் கூறியிருந்தது. தற்போது 2.2%ஆக குறைத்து மதிப்பிட்டிருக்கிறது என்றும் தெரிவிக்கிறது.
முதலில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு இந்த ரிசஷன் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று கருதப்பட்டது. இப்போது அவ்வாறு இல்லை என்றும் வளரும் நாடுகளுக்கும் இந்தப் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
உலகளாவிய வகையில் மத்திய வங்கிகள் (ஆர்.பி.ஐ போன்றவை), இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் வணிக வங்கிகள் (கமர்ஷியல் பேங்க்ஸ்) இந்த நடவடிக்கைகளின் பலனை தொழில் துறையினருக்கு அளிப்பதாகத் தெரியவில்லை. வங்கிக் கடன் வழங்கலில் கடந்த ஒரு சில மாதங்களில் அதிக பட்ச சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.
உதாரணமாக, ரிவர்ஸ் ரெபோ என்ற ஒன்று இருக்கிறது. வங்கிகள் தங்களிடம் இருக்கும் சர்ப்ளஸ் நிதியை ஆர்.பி.ஐ. வசம் டெபாசிட் செய்யும். இதற்குப் பெயர் தான் ரிவர்ஸ் ரெபோ. கடந்த 4 மாதங்களுக்கு முன் இந்த ரிவர்ஸ் ரெபோ வெறும் 25 கோடிகள் தான். ஆனால் தற்போது இது கிட்டத்தட்ட 30000 கோடி ரூபாய்கள். சி.ஆர்.ஆர். குறைக்கப் பட்டதால் வங்கிகளுக்குக் கிடைத்த கூடுதல் நிதியை தொழில்துறைக்கு அளிக்காமல் அதை மீண்டும் ஆர்.பி.ஐ வசமே கொடுத்து விட்டன வங்கிகள்.
இவ்வாறு வங்கிகள் கடன் கொடுக்காத நிலை, 'க்ரெடிட் க்ரஞ்ச்' எனப்படுகிறது. இந்த க்ரெடிட் க்ரஞ் தேவை(டிமாண்ட்)யில் ஒரு மந்தத்தை ஏற்படுத்துகிறது. அதாவது உண்மையிலேயே தேவை இருக்கிறது. ஆனால் வங்கிகள் கடன் கொடுக்காததால் வாங்க முடிவதில்லை. ஆகவே உற்பத்தி குறைகிறது. இதனால் மந்த நிலை உருவாகிறது.
சி.ஆர்.ஆர். (கேஷ் ரிசர்வ் ரேஷியோ) என்றால் என்ன?
வங்கிகளின் முக்கியப் பணி, மக்களிடமிருந்து வட்டிக்குப் பணம் பெற்று தேவையானவர்களுக்கு வட்டிக்குக் கடன் அளிப்பது ஆகும். குறைந்த வட்டிக்கு வாங்கி அதிக வட்டிக்குக் கொடுத்து லாபம் பார்ப்பதுதான் வங்கித் தொழில். இந்த நிலையில், வட்டிக்கு டிபாசிட் செய்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தைத் திருப்பிக் கேட்கலாம் என்ற நிலையில், வங்கிகள் எல்லா டிபாசிட்களையும் கடன் கொடுத்துவிட முடியாது. அப்படிக் கொடுப்பதும் வங்கிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். எனவே, வங்கிகள் தாங்கள் வாங்கிய டிபாசிட்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஆர்.பி.ஐ.யிடம் கொடுத்து வைக்க வேண்டும். இது தான் கேஷ் ரிசர்வ் ரேஷியோ.
நாட்டில் வளர்ச்சி அதிகரிக்கும் போது, கடன்கள் அதிகரிக்கின்றன. வங்கிகள் இஷ்டத்திற்குக் கடன் அளிக்கின்றன. இதைத் தடுக்க அல்லது குறைக்க ஆர்.பி.ஐ. சி.ஆர்.ஆர்-ஐ அதிகப் படுத்துகிறது. இதன் மூலம் நாட்டின் பணப்புழக்கத்தைக் குறைக்கிறது ஆர்.பி.ஐ.
ஆர்.பி.ஐ. முதன் முதலில், அதாவது கடந்த செப்டம்பரில், சி.ஆர்.ஆர்-ஐ குறைத்த போது உண்மையிலேயே வங்கிகளிடத்தில் பணமில்லை. உதாரணமாக, ஒரு வங்கி வார இறுதியில் ஆர்.பி.ஐ.யிடம் கேஷ் ரிசர்வ்-ஆக 1000 கோடி ரூபாயை இருப்பு வைக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இது அந்த வங்கியின் மொத்த டிபாசிட் தொகையில் 8 % என்று வைத்துக் கொள்வோம். அந்த வங்கியிடம் வார இறுதியில் ரூ.875 கோடிகள் தான் இருக்கிறது. ஆகவே, ஆர்.பி.ஐ. வேறு வழியின்றி, சி.ஆர்.ஆர்-ஐ 8%லிருந்து 7%வீதமாகக் குறைத்தது. அதாவது அந்த வங்கி ரூ.875 கோடியை இருப்பு வைத்தால் போதும். அவ்வளவுதானே அந்த வங்கியிடம் இருக்கிறது.
வங்கிகள் அதிகப் பணத்தை ஆர்.பி.ஐ.யிடம் வைக்கும் போது அவற்றிற்குக் குறைவான வட்டி கிடைக்கிறது. எனவே, சி.ஆர்.ஆர். ஏறும் போதெல்லாம் வங்கிகள் தாங்கள் வாங்கிய டிபாசிட்களுக்கு கொடுக்க வேண்டிய வட்டிக்காக, கடன்கள் மீதான வட்டியை ஏற்றுகின்றன. மொத்தத்தில், பணப்புழக்கம் குறைகிறது. வட்டி வீதம் ஏறுகிறது. ஆகவே, வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் வேகம் குறைகிறது.
மொத்தத்தில் சி.ஆர்.ஆர். என்பது ஆர்.பி.ஐ-யிடம் உள்ள கடிவாளம் போன்றது. தேவைப் படும் போது தளர்த்தியும், இறுக்கியும் பொருளாதாரத்தை நடத்திச் செல்கிறது ஆர்.பி.ஐ.
தற்போது நடப்பது என்ன?
தற்போது, ஆர்.பி.ஐ. மிக அதிக அளவில் சி.ஆர்.ஆர்-ஐக் குறைத்த பிறகும் வங்கிகள் கடன் கொடுக்கத் தயங்குகின்றன. தற்போது அதிகமான கடன் தேவைப்படும் துறை, ரியல் எஸ்டேட். ஆனால் இதிலிருந்து பணம் திரும்ப வருவதற்கு அதிகக் காலம் ஆகும். சில சமயம் பணம் வருவது கூட கடினம்தான். எனவே, வங்கிகள் இந்தத் துறைக்குக் கடன் கொடுக்க மறுக்கின்றன அல்லது தயங்குகின்றன.
ரியல் எஸ்டேட் துறை தான் இரும்பு போன்றவற்றை அதிக அளவில் பயன் படுத்தி வந்தன. தற்போது ஏற்பட்டிருக்கும் சுணக்கத்தால் இரும்பின் பயன்பாடு குறைந்து விலை ஏறக்குறைய பாதியாகக் குறைந்து விட்டது. கடந்த ஆகஸ்டில் ரூ.55க்கு விற்ற ஒரு கிலோ இரும்பு தற்போது ரூ.35க்குக் கிடைக்கிறது. ஆனால் வாங்குவார்தான் இல்லை:).
இந்த சூழல் அப்படியே செயின் ரியாக்ஷனாக மற்ற துறைகளையும் பாதிக்கிறது. இது வேலையில்லாத் திண்டாட்டம், கதவடைப்பு என்று நீண்டு கொண்டே போகும்.
ஆகவே தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டியது வங்கிகள்தான். ஆனால் இது வரை வங்கிகள் பாசிடிவ்-ஆக ஒன்றும் செய்யவில்லை. திரு. ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தவரை, வங்கிகள் சுதந்திரம் என்ற பெயரில் தான் தோன்றித்தனமாக இயங்கி வந்தன. தேவையில்லாத போது அளவிற்கதிகமாகக் கடன் கொடுப்பது. தேவையான போது ஒன்றும் செய்யாமல் விடுவது என்று இருந்து வந்தன. தற்போது திரு. மன்மோகன் சிங் நிதியமைச்சரான நிலையில் இந்த நிலை மாறும் என்று நிச்சயமாக நம்பலாம்.
முதலில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு இந்த ரிசஷன் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்று கருதப்பட்டது. இப்போது அவ்வாறு இல்லை என்றும் வளரும் நாடுகளுக்கும் இந்தப் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
உலகளாவிய வகையில் மத்திய வங்கிகள் (ஆர்.பி.ஐ போன்றவை), இந்தப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் வணிக வங்கிகள் (கமர்ஷியல் பேங்க்ஸ்) இந்த நடவடிக்கைகளின் பலனை தொழில் துறையினருக்கு அளிப்பதாகத் தெரியவில்லை. வங்கிக் கடன் வழங்கலில் கடந்த ஒரு சில மாதங்களில் அதிக பட்ச சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.
உதாரணமாக, ரிவர்ஸ் ரெபோ என்ற ஒன்று இருக்கிறது. வங்கிகள் தங்களிடம் இருக்கும் சர்ப்ளஸ் நிதியை ஆர்.பி.ஐ. வசம் டெபாசிட் செய்யும். இதற்குப் பெயர் தான் ரிவர்ஸ் ரெபோ. கடந்த 4 மாதங்களுக்கு முன் இந்த ரிவர்ஸ் ரெபோ வெறும் 25 கோடிகள் தான். ஆனால் தற்போது இது கிட்டத்தட்ட 30000 கோடி ரூபாய்கள். சி.ஆர்.ஆர். குறைக்கப் பட்டதால் வங்கிகளுக்குக் கிடைத்த கூடுதல் நிதியை தொழில்துறைக்கு அளிக்காமல் அதை மீண்டும் ஆர்.பி.ஐ வசமே கொடுத்து விட்டன வங்கிகள்.
இவ்வாறு வங்கிகள் கடன் கொடுக்காத நிலை, 'க்ரெடிட் க்ரஞ்ச்' எனப்படுகிறது. இந்த க்ரெடிட் க்ரஞ் தேவை(டிமாண்ட்)யில் ஒரு மந்தத்தை ஏற்படுத்துகிறது. அதாவது உண்மையிலேயே தேவை இருக்கிறது. ஆனால் வங்கிகள் கடன் கொடுக்காததால் வாங்க முடிவதில்லை. ஆகவே உற்பத்தி குறைகிறது. இதனால் மந்த நிலை உருவாகிறது.
சி.ஆர்.ஆர். (கேஷ் ரிசர்வ் ரேஷியோ) என்றால் என்ன?
வங்கிகளின் முக்கியப் பணி, மக்களிடமிருந்து வட்டிக்குப் பணம் பெற்று தேவையானவர்களுக்கு வட்டிக்குக் கடன் அளிப்பது ஆகும். குறைந்த வட்டிக்கு வாங்கி அதிக வட்டிக்குக் கொடுத்து லாபம் பார்ப்பதுதான் வங்கித் தொழில். இந்த நிலையில், வட்டிக்கு டிபாசிட் செய்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தைத் திருப்பிக் கேட்கலாம் என்ற நிலையில், வங்கிகள் எல்லா டிபாசிட்களையும் கடன் கொடுத்துவிட முடியாது. அப்படிக் கொடுப்பதும் வங்கிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தும். எனவே, வங்கிகள் தாங்கள் வாங்கிய டிபாசிட்களில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை ஆர்.பி.ஐ.யிடம் கொடுத்து வைக்க வேண்டும். இது தான் கேஷ் ரிசர்வ் ரேஷியோ.
நாட்டில் வளர்ச்சி அதிகரிக்கும் போது, கடன்கள் அதிகரிக்கின்றன. வங்கிகள் இஷ்டத்திற்குக் கடன் அளிக்கின்றன. இதைத் தடுக்க அல்லது குறைக்க ஆர்.பி.ஐ. சி.ஆர்.ஆர்-ஐ அதிகப் படுத்துகிறது. இதன் மூலம் நாட்டின் பணப்புழக்கத்தைக் குறைக்கிறது ஆர்.பி.ஐ.
ஆர்.பி.ஐ. முதன் முதலில், அதாவது கடந்த செப்டம்பரில், சி.ஆர்.ஆர்-ஐ குறைத்த போது உண்மையிலேயே வங்கிகளிடத்தில் பணமில்லை. உதாரணமாக, ஒரு வங்கி வார இறுதியில் ஆர்.பி.ஐ.யிடம் கேஷ் ரிசர்வ்-ஆக 1000 கோடி ரூபாயை இருப்பு வைக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். இது அந்த வங்கியின் மொத்த டிபாசிட் தொகையில் 8 % என்று வைத்துக் கொள்வோம். அந்த வங்கியிடம் வார இறுதியில் ரூ.875 கோடிகள் தான் இருக்கிறது. ஆகவே, ஆர்.பி.ஐ. வேறு வழியின்றி, சி.ஆர்.ஆர்-ஐ 8%லிருந்து 7%வீதமாகக் குறைத்தது. அதாவது அந்த வங்கி ரூ.875 கோடியை இருப்பு வைத்தால் போதும். அவ்வளவுதானே அந்த வங்கியிடம் இருக்கிறது.
வங்கிகள் அதிகப் பணத்தை ஆர்.பி.ஐ.யிடம் வைக்கும் போது அவற்றிற்குக் குறைவான வட்டி கிடைக்கிறது. எனவே, சி.ஆர்.ஆர். ஏறும் போதெல்லாம் வங்கிகள் தாங்கள் வாங்கிய டிபாசிட்களுக்கு கொடுக்க வேண்டிய வட்டிக்காக, கடன்கள் மீதான வட்டியை ஏற்றுகின்றன. மொத்தத்தில், பணப்புழக்கம் குறைகிறது. வட்டி வீதம் ஏறுகிறது. ஆகவே, வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் வேகம் குறைகிறது.
மொத்தத்தில் சி.ஆர்.ஆர். என்பது ஆர்.பி.ஐ-யிடம் உள்ள கடிவாளம் போன்றது. தேவைப் படும் போது தளர்த்தியும், இறுக்கியும் பொருளாதாரத்தை நடத்திச் செல்கிறது ஆர்.பி.ஐ.
தற்போது நடப்பது என்ன?
தற்போது, ஆர்.பி.ஐ. மிக அதிக அளவில் சி.ஆர்.ஆர்-ஐக் குறைத்த பிறகும் வங்கிகள் கடன் கொடுக்கத் தயங்குகின்றன. தற்போது அதிகமான கடன் தேவைப்படும் துறை, ரியல் எஸ்டேட். ஆனால் இதிலிருந்து பணம் திரும்ப வருவதற்கு அதிகக் காலம் ஆகும். சில சமயம் பணம் வருவது கூட கடினம்தான். எனவே, வங்கிகள் இந்தத் துறைக்குக் கடன் கொடுக்க மறுக்கின்றன அல்லது தயங்குகின்றன.
ரியல் எஸ்டேட் துறை தான் இரும்பு போன்றவற்றை அதிக அளவில் பயன் படுத்தி வந்தன. தற்போது ஏற்பட்டிருக்கும் சுணக்கத்தால் இரும்பின் பயன்பாடு குறைந்து விலை ஏறக்குறைய பாதியாகக் குறைந்து விட்டது. கடந்த ஆகஸ்டில் ரூ.55க்கு விற்ற ஒரு கிலோ இரும்பு தற்போது ரூ.35க்குக் கிடைக்கிறது. ஆனால் வாங்குவார்தான் இல்லை:).
இந்த சூழல் அப்படியே செயின் ரியாக்ஷனாக மற்ற துறைகளையும் பாதிக்கிறது. இது வேலையில்லாத் திண்டாட்டம், கதவடைப்பு என்று நீண்டு கொண்டே போகும்.
ஆகவே தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டியது வங்கிகள்தான். ஆனால் இது வரை வங்கிகள் பாசிடிவ்-ஆக ஒன்றும் செய்யவில்லை. திரு. ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தவரை, வங்கிகள் சுதந்திரம் என்ற பெயரில் தான் தோன்றித்தனமாக இயங்கி வந்தன. தேவையில்லாத போது அளவிற்கதிகமாகக் கடன் கொடுப்பது. தேவையான போது ஒன்றும் செய்யாமல் விடுவது என்று இருந்து வந்தன. தற்போது திரு. மன்மோகன் சிங் நிதியமைச்சரான நிலையில் இந்த நிலை மாறும் என்று நிச்சயமாக நம்பலாம்.
Monday, December 8, 2008
தல
நாம் ஏன் பதிவெழுதுகிறோம்? நமது எண்ணத்தைப் பதிவு செய்கிறோம். நமது கருத்துச் சுதந்திரத்தைப் பயன் படுத்துகிறோம். சரி நாம் எழுதிவிட்டோம். அதனால் என்ன பயன்? நான்கு பேர் படித்தார்களா? அவர்கள் நமது கருத்துடன் ஒத்துப் போகிறார்களா? நமது பார்வையும் சிந்தனையும் அனைவருக்கும் பிடித்திருக்கிறதா? இதையெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சரி இதெல்லாம் எப்போது தெரியும். நாலு பேர் இந்தப் பக்கம் வர வேண்டும். வந்து படிக்க வேண்டும். படித்து பதில் சொல்ல வேண்டும். அப்போதுதான் நம் சிந்தனை சரியா இல்லையா என்பது தெரிய வரும்.
இன்றைய தமிழ்மணத் தகவலின் படி,
மொத்தப் பதிவுகள் : 4000
ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள் : 159
ஒரு நாளில் சராசரியாக இடப்படும் பின்னூட்டங்கள் : 1643
ஆக நாலாயிரம் பேர் எழுதுவதற்கு இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 159 பதிவுகள் வெளி வருகின்றன. அதாவது ஒரு மணி நேரத்திற்கு சரா சரியாக, 6.67 பதிவுகள். இது இந்தியப் பகலில் அதிகமாகவும் இரவில் குறைவாகவும் இருக்கும்.
இப்படி இருக்கும் போது நமக்குத் தேவை நம் பதிவைப் பார்த்து மக்கள் கருத்துக் கூற வேண்டும். கருத்து தெரிவிக்காவிட்டாலும் எட்டியாவது பார்க்க வேண்டும். இதற்குத் தேவை அருமையான தலைப்பு.
அவ்வைப் பிராட்டியார் இப்பொழுது தமிழ்ப்பதிவுலகத்தில் இருந்திருந்தால் இவ்வாறு பாடியிருப்பார்.
பெரியது கேட்கின் வரிவடிவேலோய், பெரிது பெரிது பதிவுலகம் பெரிது.
அதனினும் பெரிது, தமிழ்மணத் திரட்டி.
அதனினும் பெரிது அவற்றில் பதிவுகள்.
பதிவுகள் வாழ்வது அதன் தலைப்பாலே.
(கொஞ்சம் முன்ன பின்ன இருந்தா அட்ஜஸ் பண்ணிக்குங்க:) )
நாம் என்ன எழுதுகிறோம் என்பது பெரிய விஷயமில்லை. எதைப் பற்றி எழுதுகிறீர்கள் என்பதும் முக்கியமில்லை. ஆனால் மிக முக்கியமானது எழுதுவதற்கு வைக்கப் படும் தலைப்புதான்.
எண் சாண் உடம்பிற்கு சிரசே ப்ரதானம் என்பது - பழமொழி.
எவ்வளவு எழுதினாலும் தலைப்பே முக்கியம் - இது பதிவுலக மொழி
நல்ல பதிவுகளெல்லாம் சூடாவதில்லை. ஆனால் நல்ல தலைப்புகள் நிச்சயம் சூடாகி விடும்.
தலைப்பின் வகைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
வித்தியாசமான தலைப்பு
உதாரணத்திற்கு, தற்போது கார்க்கி 'டப் டிப் டமால் டொக் தடால் டங் @#$%^&*@#$$%!@#$%^&*^' இப்படி ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.
உள்ளே போய்ப் படித்தால் அவருக்கும் ஆசிரியருக்கும் நடந்த மேட்டரை எழுதியிருக்கிறார்.
இதற்கு 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்றோ,
'இலக்கு' என்றோ,
'நானும் ஆசிரியரும்' என்றோ,
'அடிக்காத வாத்தியார் அடித்த கதை' என்றோ தலைப்பு வைத்திருக்கலாம்.
ஆனால் இவையெல்லாவற்றையும் விட இந்தத் தலைப்பு வித்தியாசமாக இருக்கவே, 'அட என்னமோ இருக்கு போல இருக்கே' என்று எட்டிப் பார்க்கத் தூண்டும்.
இப்படி நிறைய வித்தியாசமான தலைப்புகளை யோசிக்க வேண்டும். சம்பந்தம் இருக்க வேண்டும் என்பதில்லை. கடைசியில் ஒரு வரியில் சேர்த்து விடலாம்.
காரசாரமான தலைப்பு
இன்றைக்கு நிறைய 'கல்லா கட்டும்' (விளக்கத்திற்கு பழமை பேசியைத் தொடர்பு கொள்ளவும்) தலைப்பு இந்த வகையைச் சார்ந்ததுதான். உதாரணத்திற்கு அதிஷாவின் 'முஸ்லீம்கள் குறித்த பதிவு. அதுவும் டிசம்பர் ஆறாம் தேதி.
சட்டக் கல்லூரி வன்முறை, மும்பாய் பயங்கரம் ஆகிய நாட்டு நடப்புகளை பற்றி, கார சாரமான உணர்ச்சி மயமான தலைப்பு வைக்க வேண்டும். உள்ளேயும் ஓரிரு இடங்களில் அவ்வாறு எழுத வேண்டும்.
நீங்கல்லாம் ***க்குப் பொறந்தவங்களா? என்று ஒரு பதிவர் கேட்டிருந்தார். வாடா, போடா, *&^%#@! போன்ற வார்த்தைகள் காரத்தைக் கூட்டும்.
நான் இதே மும்பை பயங்கரத்திற்கு ஒரு பதிவிட்டேன். தலைப்பு 'தேவை - பாதுகாப்பான பாரதம், வலிமையான பாரதம்'. எவ்வளவு உப்பு சப்பில்லாமல் இருக்கிறது பார்த்தீர்களா.
கேள்வித் தலைப்பு
இது தான் மிக முக்கியமான வகைத் தலைப்பு. பெரும்பாலான இடுகைகள் இந்த வகையைச் சார்ந்தவை. நாம்தான் தருமி (பதிவர் அல்ல, திருவிளையாடல் தருமி) வகையினராயிற்றே. நமக்குத்தான் கேள்வி கேட்கவும் தெரியும். கேள்வி கேட்பவர்களையும் பிடிக்குமே. ஆகவே, சரியான கேள்விப் பதிவு நிறைய போக்குவரத்துக்கு வழி செய்யும்.
உதாரணமாக இட்லி வடை யார்? என்ற பதிவு. இது பதிவுலகத்திற்கு மிகத் தேவையான பதிவு. அதே போல், சாரு மறை கழன்றவரா? இந்து மதம் எங்கிருந்து வந்தது? போன்ற கேள்விப் பதிவுகள் நல்ல வரவேற்பைப் பெரும்.
நான் கூட 'ஐ.டி. துறையில் தொழிற்சங்கங்கள் ஏன் இல்லை?' என்ற ஒரு பதிவை எழுதினேன். நல்ல ரெஸ்பான்ஸ்.
இதைப் போல் நிறைய உள்ளது. போகப் போகத்தான் தெரியும். நான் ஒரு குழந்தைப் பதிவன். ஆகவே, சீக்கிரம் கற்றுக் கொண்டு விடுவேன். நீங்களும் அப்படித்தானே?
இப்போது எல்லாரும் கேட்பதைப் போல் தம்ஸ் அப்பில் ஒரு குத்து எலியை வைத்து குத்துங்க என்று கேட்டுக் கொண்டு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.
இப்ப நீங்க சொல்லுங்க. நான் இந்தப் பதிவிற்கு வைத்திருக்கும் தலைப்பு சரியா? இல்லைன்னா இன்னும் கொஞ்சம் வித்தியாசமா வைத்திருக்கலாமா?
மேற்கொண்டு பின்னூட்டத்தில் தொடர உங்களை அழைக்கிறேன். நன்றி. நன்றி. நன்றி.
சரி இதெல்லாம் எப்போது தெரியும். நாலு பேர் இந்தப் பக்கம் வர வேண்டும். வந்து படிக்க வேண்டும். படித்து பதில் சொல்ல வேண்டும். அப்போதுதான் நம் சிந்தனை சரியா இல்லையா என்பது தெரிய வரும்.
இன்றைய தமிழ்மணத் தகவலின் படி,
மொத்தப் பதிவுகள் : 4000
ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள் : 159
ஒரு நாளில் சராசரியாக இடப்படும் பின்னூட்டங்கள் : 1643
ஆக நாலாயிரம் பேர் எழுதுவதற்கு இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 159 பதிவுகள் வெளி வருகின்றன. அதாவது ஒரு மணி நேரத்திற்கு சரா சரியாக, 6.67 பதிவுகள். இது இந்தியப் பகலில் அதிகமாகவும் இரவில் குறைவாகவும் இருக்கும்.
இப்படி இருக்கும் போது நமக்குத் தேவை நம் பதிவைப் பார்த்து மக்கள் கருத்துக் கூற வேண்டும். கருத்து தெரிவிக்காவிட்டாலும் எட்டியாவது பார்க்க வேண்டும். இதற்குத் தேவை அருமையான தலைப்பு.
அவ்வைப் பிராட்டியார் இப்பொழுது தமிழ்ப்பதிவுலகத்தில் இருந்திருந்தால் இவ்வாறு பாடியிருப்பார்.
பெரியது கேட்கின் வரிவடிவேலோய், பெரிது பெரிது பதிவுலகம் பெரிது.
அதனினும் பெரிது, தமிழ்மணத் திரட்டி.
அதனினும் பெரிது அவற்றில் பதிவுகள்.
பதிவுகள் வாழ்வது அதன் தலைப்பாலே.
(கொஞ்சம் முன்ன பின்ன இருந்தா அட்ஜஸ் பண்ணிக்குங்க:) )
நாம் என்ன எழுதுகிறோம் என்பது பெரிய விஷயமில்லை. எதைப் பற்றி எழுதுகிறீர்கள் என்பதும் முக்கியமில்லை. ஆனால் மிக முக்கியமானது எழுதுவதற்கு வைக்கப் படும் தலைப்புதான்.
எண் சாண் உடம்பிற்கு சிரசே ப்ரதானம் என்பது - பழமொழி.
எவ்வளவு எழுதினாலும் தலைப்பே முக்கியம் - இது பதிவுலக மொழி
நல்ல பதிவுகளெல்லாம் சூடாவதில்லை. ஆனால் நல்ல தலைப்புகள் நிச்சயம் சூடாகி விடும்.
தலைப்பின் வகைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
வித்தியாசமான தலைப்பு
உதாரணத்திற்கு, தற்போது கார்க்கி 'டப் டிப் டமால் டொக் தடால் டங் @#$%^&*@#$$%!@#$%^&*^' இப்படி ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.
உள்ளே போய்ப் படித்தால் அவருக்கும் ஆசிரியருக்கும் நடந்த மேட்டரை எழுதியிருக்கிறார்.
இதற்கு 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்றோ,
'இலக்கு' என்றோ,
'நானும் ஆசிரியரும்' என்றோ,
'அடிக்காத வாத்தியார் அடித்த கதை' என்றோ தலைப்பு வைத்திருக்கலாம்.
ஆனால் இவையெல்லாவற்றையும் விட இந்தத் தலைப்பு வித்தியாசமாக இருக்கவே, 'அட என்னமோ இருக்கு போல இருக்கே' என்று எட்டிப் பார்க்கத் தூண்டும்.
இப்படி நிறைய வித்தியாசமான தலைப்புகளை யோசிக்க வேண்டும். சம்பந்தம் இருக்க வேண்டும் என்பதில்லை. கடைசியில் ஒரு வரியில் சேர்த்து விடலாம்.
காரசாரமான தலைப்பு
இன்றைக்கு நிறைய 'கல்லா கட்டும்' (விளக்கத்திற்கு பழமை பேசியைத் தொடர்பு கொள்ளவும்) தலைப்பு இந்த வகையைச் சார்ந்ததுதான். உதாரணத்திற்கு அதிஷாவின் 'முஸ்லீம்கள் குறித்த பதிவு. அதுவும் டிசம்பர் ஆறாம் தேதி.
சட்டக் கல்லூரி வன்முறை, மும்பாய் பயங்கரம் ஆகிய நாட்டு நடப்புகளை பற்றி, கார சாரமான உணர்ச்சி மயமான தலைப்பு வைக்க வேண்டும். உள்ளேயும் ஓரிரு இடங்களில் அவ்வாறு எழுத வேண்டும்.
நீங்கல்லாம் ***க்குப் பொறந்தவங்களா? என்று ஒரு பதிவர் கேட்டிருந்தார். வாடா, போடா, *&^%#@! போன்ற வார்த்தைகள் காரத்தைக் கூட்டும்.
நான் இதே மும்பை பயங்கரத்திற்கு ஒரு பதிவிட்டேன். தலைப்பு 'தேவை - பாதுகாப்பான பாரதம், வலிமையான பாரதம்'. எவ்வளவு உப்பு சப்பில்லாமல் இருக்கிறது பார்த்தீர்களா.
கேள்வித் தலைப்பு
இது தான் மிக முக்கியமான வகைத் தலைப்பு. பெரும்பாலான இடுகைகள் இந்த வகையைச் சார்ந்தவை. நாம்தான் தருமி (பதிவர் அல்ல, திருவிளையாடல் தருமி) வகையினராயிற்றே. நமக்குத்தான் கேள்வி கேட்கவும் தெரியும். கேள்வி கேட்பவர்களையும் பிடிக்குமே. ஆகவே, சரியான கேள்விப் பதிவு நிறைய போக்குவரத்துக்கு வழி செய்யும்.
உதாரணமாக இட்லி வடை யார்? என்ற பதிவு. இது பதிவுலகத்திற்கு மிகத் தேவையான பதிவு. அதே போல், சாரு மறை கழன்றவரா? இந்து மதம் எங்கிருந்து வந்தது? போன்ற கேள்விப் பதிவுகள் நல்ல வரவேற்பைப் பெரும்.
நான் கூட 'ஐ.டி. துறையில் தொழிற்சங்கங்கள் ஏன் இல்லை?' என்ற ஒரு பதிவை எழுதினேன். நல்ல ரெஸ்பான்ஸ்.
இதைப் போல் நிறைய உள்ளது. போகப் போகத்தான் தெரியும். நான் ஒரு குழந்தைப் பதிவன். ஆகவே, சீக்கிரம் கற்றுக் கொண்டு விடுவேன். நீங்களும் அப்படித்தானே?
இப்போது எல்லாரும் கேட்பதைப் போல் தம்ஸ் அப்பில் ஒரு குத்து எலியை வைத்து குத்துங்க என்று கேட்டுக் கொண்டு இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.
இப்ப நீங்க சொல்லுங்க. நான் இந்தப் பதிவிற்கு வைத்திருக்கும் தலைப்பு சரியா? இல்லைன்னா இன்னும் கொஞ்சம் வித்தியாசமா வைத்திருக்கலாமா?
மேற்கொண்டு பின்னூட்டத்தில் தொடர உங்களை அழைக்கிறேன். நன்றி. நன்றி. நன்றி.
நட்சத்திரக் கூத்து
சற்றேறக்குறைய நான்கு மாதங்கள். நாற்பது சொச்சப் பதிவுகள். எட்டு பின் தொடர்வோர். வழக்கமாக தளத்திற்கு வருவோர் அதைப்போல் இரண்டு மூன்று மடங்கு. பெயர் சொல்ல ஒரு சரித்திரத் தொடர். இவ்வளவுதான் பதிவுலகில் என் பின்புலம். இதற்குத்தான் தமிழ்மணத்தின் நட்சத்திரப் பதிவராக அழைப்பு. ஆகவே பதிவுலகில் நான் ஒரு குழந்தை. இது எனக்குத் தமிழால் கிடைத்த பெருமையே அன்றி வேறில்லை.
என்றேனும் ஒரு நாள் நட்சத்திரப் பதிவராவோம் என்ற எண்ணம் அனைத்துப் பதிவர்களைப் போல் எனக்கும் உண்டு. ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் இது நடைபெறும் என்பது எதிர்பாராதது. ஆகவே தற்போது நடப்பது நான் எதிர் பார்த்தது. ஆனால் இவ்வளவு விரைவில் நடைபெறும் என்பது எதிர் பாராதது :).
இந்த நட்சத்திர வாரத்தில் வழக்கமான சக்கர வியூகத்துடன் பல்வேறு விஷயங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
இந்த நட்சத்திர வாரத்தின் மூலம் நான் அடைய விரும்புவது, அதிக அளவிலான 'ரீச்'. மேலும் பல நண்பர்கள். அதன் மூலம் எனது எழுத்தில் ஏற்பட வேண்டிய முன்னேற்றம். உங்கள் ஒத்துழைப்பு. இவை நிச்சயம் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை.
இடையிடையே என் எழுத்தில் ஏற்பட்ட தொய்வினைச் சரிகட்டியும் என்னுடைய பதிவிற்குத் தொடர்ந்து வந்து பின்னூட்டமிட்டும் என்னை ஊக்கப் படுத்தி வரும் அணிமா, சதீசு குமார், சுரேஷ், குடுகுடுப்பை, ஆதவன் மற்றும் பலருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. என்னை நட்சத்திரமாகத் தேர்ந்தெடுத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மேல் இந்தப் பெருமையை எனக்களித்த தமிழுக்கு நன்றி.
தங்கள் மேலாதரவான ஆதரவை எப்போதும் போல் எதிர்பார்க்கும்,
உங்கள்
இளைய பல்லவன்.
பின் குறிப்பு:- இந்தப் பதிவை நேற்று ட்ராஃப்டாக வைத்திருந்து இன்று பப்ளிஷ் செய்தேன். ஆனால் நேற்றைய தேதியிலேயே இது வெளி வந்துவிட்டது. ஆகவே தமிழ்மண முகப்பில் தெரியவில்லை போலிருக்கிறது. ஆகவே, ரீ பப்ளிஷ் செய்யப் படுகிறது.
என்றேனும் ஒரு நாள் நட்சத்திரப் பதிவராவோம் என்ற எண்ணம் அனைத்துப் பதிவர்களைப் போல் எனக்கும் உண்டு. ஆனால் இவ்வளவு சீக்கிரத்தில் இது நடைபெறும் என்பது எதிர்பாராதது. ஆகவே தற்போது நடப்பது நான் எதிர் பார்த்தது. ஆனால் இவ்வளவு விரைவில் நடைபெறும் என்பது எதிர் பாராதது :).
இந்த நட்சத்திர வாரத்தில் வழக்கமான சக்கர வியூகத்துடன் பல்வேறு விஷயங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
இந்த நட்சத்திர வாரத்தின் மூலம் நான் அடைய விரும்புவது, அதிக அளவிலான 'ரீச்'. மேலும் பல நண்பர்கள். அதன் மூலம் எனது எழுத்தில் ஏற்பட வேண்டிய முன்னேற்றம். உங்கள் ஒத்துழைப்பு. இவை நிச்சயம் கிடைக்கும் என்பது என் நம்பிக்கை.
இடையிடையே என் எழுத்தில் ஏற்பட்ட தொய்வினைச் சரிகட்டியும் என்னுடைய பதிவிற்குத் தொடர்ந்து வந்து பின்னூட்டமிட்டும் என்னை ஊக்கப் படுத்தி வரும் அணிமா, சதீசு குமார், சுரேஷ், குடுகுடுப்பை, ஆதவன் மற்றும் பலருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. என்னை நட்சத்திரமாகத் தேர்ந்தெடுத்த தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி. எல்லாவற்றிற்கும் மேல் இந்தப் பெருமையை எனக்களித்த தமிழுக்கு நன்றி.
தங்கள் மேலாதரவான ஆதரவை எப்போதும் போல் எதிர்பார்க்கும்,
உங்கள்
இளைய பல்லவன்.
பின் குறிப்பு:- இந்தப் பதிவை நேற்று ட்ராஃப்டாக வைத்திருந்து இன்று பப்ளிஷ் செய்தேன். ஆனால் நேற்றைய தேதியிலேயே இது வெளி வந்துவிட்டது. ஆகவே தமிழ்மண முகப்பில் தெரியவில்லை போலிருக்கிறது. ஆகவே, ரீ பப்ளிஷ் செய்யப் படுகிறது.
Sunday, December 7, 2008
மீள்பதிவு எப்படி இடுவது மற்றும் பிற சந்தேகங்கள்
பதிவுலக நண்பர்களே, எனக்கு மீண்டும் ஒரு சந்தேகம். சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவர்களுக்கு 1000 பொன்-நன்றிகள் பரிசு.
சந்தேகம் இதுதான்.
மீள் பதிவு எவ்வாறு இடுவது? தயவு செய்து விளக்கினால் நான் மீள்பதிவு இடுவதற்கு வசதியாக இருக்கும்.
மற்றொரு ஆலோசனை.
எனக்குத்தான் இவ்வாறு சந்தேகம் வருகிறதா அல்லது எல்லாருக்கும் இதைப் போல் சந்தேகம் வருமா. இது போல் பதிவுலகில் வேறென்னென்ன சந்தேகங்கள் வரலாம். இதையெல்லாம் பின்னூட்டத்தில் தெரிவித்தால் இந்தப் பதிவில் சேர்த்து விடுகிறேன்.
உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.
சந்தேகம் இதுதான்.
மீள் பதிவு எவ்வாறு இடுவது? தயவு செய்து விளக்கினால் நான் மீள்பதிவு இடுவதற்கு வசதியாக இருக்கும்.
மற்றொரு ஆலோசனை.
எனக்குத்தான் இவ்வாறு சந்தேகம் வருகிறதா அல்லது எல்லாருக்கும் இதைப் போல் சந்தேகம் வருமா. இது போல் பதிவுலகில் வேறென்னென்ன சந்தேகங்கள் வரலாம். இதையெல்லாம் பின்னூட்டத்தில் தெரிவித்தால் இந்தப் பதிவில் சேர்த்து விடுகிறேன்.
உங்கள் உதவிக்கு மிக்க நன்றி.