Friday, October 3, 2008

வானவில் 03-10-2008

வருக வருக நண்பர்களே. இது என் எண்ணங்களின் வண்ணங்கள்.

காஞ்சிபுரத்திற்குச் சிறந்த வண்டி, 76 பி என்னும் பேருந்து. கோயம்பேட்டிலிருந்து மதுரவாயல் வழியாகப் பூந்தமல்லியை அடைந்து அங்கிருந்து ஒரு மணி நேரத்திற்குள் காஞ்சிபுரம் சேர்ந்து விடலாம். 76 சி என்று ஒரு ரூட் இருக்கிறது. இது கோயம்பேட்டிலிருந்து 100 அடி சாலை வழியாக மவுன்ட், போரூர் என்று சுற்றி பூந்தமல்லிக்கு செல்கிறது. மூன்றாவது ரூட் 79. இது தாம்பரம் சென்று அங்கிருந்து வண்டலூர் வழியாகவோ, முடிச்சூர் வழியாகவோ படப்பை, வாலாஜாபாத் என்று சுற்றிக்கொண்டு காஞ்சிபுரம் சேரும். ஒவ்வொரு ரூட்டிற்கும் ஒவ்வொரு பயன். எனவே, நமது தேவையைப் பொறுத்து ரூட் செலக்ட் செய்து கொள்ளலாம். பெரும்பாலான மக்கள் நாடுவது 76 பி-யைத்தான். இந்த ரூட்டில் தான் சர்வீஸ் அதிகம்.

***********

சமீபத்தில் (1960களில் அல்ல), அதாவது கடந்த இரண்டு - மூன்று மாதங்களில் எங்காவது ஓட்டலில் சாப்பிட்டிருக்கிறீர்களா? அப்படி ஓட்டலுக்குப் போனால் சுற்றி முற்றிப் பார்க்கும் வழமை உண்டா? ஏதாவது மாற்றத்தைப் பார்த்தீர்களா..

நான் ஒரு மாற்றத்தைக் கவனித்தேன். பெரும்பாலான ஓட்டல்களில் விலைப் பட்டியலை நிரந்தரமாக எடுத்து விட்டார்கள். சில ஓட்டல்களில் அயிட்டங்களின் பெயர் மட்டுமே இருக்கிறது. விலை இல்லை.

பொருட்களின் விலையோ ஒவ்வொரு வாரமும் ஏறிக் கொண்டே இருக்கிறது.

*********

சென்னையின் போக்குவரத்தில் டூ வீலர் ஓட்டுவது என்பது, 'ரோட் ரேஷ்' கணிணி விளையாட்டு விளையாடுவது போல உள்ளது. சிக்னல் போடாவிட்டாலும் டுர் ர் ர் ர் என்று அனைத்து டூ வீலர்களும் பறக்கின்றன.
100 அடி சாலையில் அசென்டாஸ், காசி தியேட்டர், அஷோக் பில்லர் ஆகிய இடங்களில் பாதசாரிகள் கடப்பதற்காக சிக்னல் போடுகிறார்கள். இதனால் டிராபிக் ஜாம் ஏற்படுவது ஒரு புறம் இருக்க, எக்கச்சக்கமான எரிபொருள் வீணாகிறது. இந்த வீணாகும் எரிபொருளைக் கணக்கிட்டால் இந்த இடங்களில் எஸ்கலேட்டருடன் கூடிய மேம்பாலங்களை அமைக்கலாம். இதனால் எரி பொருளும், நேரமும் மிச்சமாகும்.

உங்கள் கருத்தென்ன.

*******

No comments: