Wednesday, December 23, 2009

சுய தேடல் . . .

தூரத்தே தெரியும் மலைகள்
அருகே விரியும் வயல்கள்
சற்றே நெளியும் ஓடை - அவை
யாவிலும் இல்லை கவனம்

செவியில் கேட்கும் மழலை
ஆசையாய் பேசும் மனைவி
காலைச் சுற்றும் பூனை - எதுவும்
தொடவில்லை என்னை

இருந்தும் இல்லாமல் இருக்கும்
இன்றைய வாழ்வின் நிலைக்கும்
நேற்றைய பொழுதின் சிந்தனை - அதுவும்
அண்டவில்லை என்னை

இன்பம் இல்லா வாழ்வென
துன்பத்தில் மனம் தினம் வாட
கண்ணெதிரே இருக்கும் நீரை மறுத்து
கானலுக்கேங்கும் மனிதா

உன்னுள் தேடு
உண்மை தேடு
உன்னைத் தேடு

8 comments:

தர்ஷன் said...

அருமை நண்பரே

உமா said...

நல்ல கவிதைங்க...அழகான வரிகள்...

CA Venkatesh Krishnan said...

நன்றி தர்ஷன்!

CA Venkatesh Krishnan said...

நன்றி உமா!!

Prabhu said...

என்னங்க ரெண்டு பேரும் ஒரே(ஒரு) மாதிரியான கவிதையா எழுதிருக்கோம். சியர்ஸ்!

நல்லாருக்கு!

☀நான் ஆதவன்☀ said...

பேக் டூ த பாஃம் :)

உரையாடல் கவிதை போட்டி நடக்குது. தெரியும்ல தலைவரே?

CA Venkatesh Krishnan said...

அட ஆச்சரியமா இருக்கே பப்பு! !

சியர்ஸ் டூ..

CA Venkatesh Krishnan said...

வாங்க ஆதவன்

உரையாடல் கவிதைப் போட்டியா???

அது என்ன தெரியாதே...