குண்டு வெடிப்புகளும் தீவிரவாதத் தாக்குதல்களும் தொடர்கதையாகிவிட்ட இன்றைய நிலை மிக மிக கவலைக்கிடமானது. இது எந்த விதத்திலும் நம்மைப் போன்ற வளரும் நாட்டிற்கு அதுவும் சீனா போன்ற மிகப் பெரிய சக்தியோடு போட்டியிடும் நாட்டிற்கு நல்லதல்ல.
கடந்த வாரம் தான் அமெரிக்காவின் உளவுத் துறை 2030ல் இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மிகப் பெரிய சக்திகளாக உருவெடுக்கும் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் இத்தகைய தீவிரவாதத் தாக்குதல் பல்வேறு ஊகங்களுக்கு இடம் கொடுக்கிறது.
தாக்கப்பட்ட இடம் பொது மக்கள் கூடும் இடம் அல்ல. வெளி நாட்டினரும், உயர் வர்க்கத்தினரும் உலாவும் இடம்.
மும்பையின் முக்கியச் சின்னங்களாகத் திகழ்கின்ற இடங்கள். இதே போன்று சில மாதங்களுக்கு முன்பு, இஸ்லாமாபாத்தில் ஒரு ஹோட்டல் தகர்க்கப் பட்டது நினைவிருக்கலாம்.
இத்தகைய பாதுகாப்பற்ற சூழல் 'பாரதம் தன்னையே காத்துக் கொள்ளத் தெரியவில்லை' என்ற அவப் பெயர் ஏற்படக் காரணமாகிறது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர தரம் வாய்ந்த வல்லுனர்கள் இருந்தால் மட்டும் போதாது. மலிவான விலை இருந்தால் மட்டும் போதாது. பாதுகாப்பும் நிம்மதியும் வேண்டும்.
இது தான் இன்றைய முக்கியமான தேவை. இதற்கு எத்தகைய ஏற்பாடுகளையும், செக்யூரிடி செக் முதலிய சிறு சிறு சிரமங்களையும் ஏற்றுக் கொள்ளலாம்.
இந்த நேரத்தில் அருமையாகச் செயல் பட்டுக்கொண்டிருக்கும் மும்பை காவல்துறையினருக்கும், கமாண்டோக்களுக்கும், இராணுவ வீரர்களுக்கும் நன்றிகளும், பாராட்டுகளும் உரித்தாகும்.
ஆகவே, இந்தியர் அனைவருக்கும் தேவையானது - 'பாதுகாப்பான பாரதம் - வலிமையான பாரதம்'
ஜெய் ஹிந்த்.
Friday, November 28, 2008
Wednesday, November 26, 2008
சக்கர வியூகம் - சரித்திரத் தொடர்...7
அத்தியாயம் 7 - திட்டம்
மாலிக் கஃபூர் என்ற பெயரைக் கேட்டதும் இளவழுதியும், வீரபாண்டியனும் வாயைப் பிளக்கக் காரணமிருந்தது. அந்தக் காலத்தில் தில்லி சுல்தானின் படைத்தளபதியான மாலிக் கஃபூர் ஏற்கனவே ஒரு முறை தேவகிரி யாதவர்களைச் சிறை பிடித்துச் சென்றவன். ஆகவே அனைத்துத் தென்னிந்திய அரசுகளுக்கும் அவனிடம் ஒரு வித வெறுப்பும் எதிர்ப்பும் நிறைந்திருந்தன. அத்தகைய வேண்டா விருந்தாளி ஏன் இங்கு வரவேண்டும்? அதுவும் சுந்தர பாண்டியனுடன் ஏன் வரவேண்டும் என்ற கேள்வி இருவர் மனதிலும் எழுந்தது.
மேலும் தொடர்ந்த மாராயர், 'அவர்கள் இருவரும் இந்தப் பக்கம் வந்ததோடல்லாமல் எங்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர்' என்று அன்று நடந்த நிகழ்ச்சியை அசை போடலானார்.
=====
அங்கு அழைத்து வரப்பட்ட இருவரிடம் தென்பட்ட களைப்பும், அவர்களின் கிழிந்த உடையும் பல நாட்கள் சரியான உணவு உட்கொள்ளாமலும், வேறு உடை தரிக்காமலும் இருந்திருக்க வேண்டும் என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கியது.
மாலிக் கஃபூர் நல்ல தேகக்கட்டுடன் இருந்தாலும் அவனது உயரம் அவனை ஒல்லியாகக் காட்டியது. முகத்தில் கடுமையைத் தேக்கி நின்றாலும் பெண்மையின் நளினம் அவன் முகத்தில் அவ்வப் போது தாண்டவமாடியது. (மாலிக் கஃபூர் ஒரு திரு நங்கை). அவன் பிறப்பால் இந்து. தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் அடிமையாகச் சேர்ந்து அவரது நேசத்தைப் பெற்று இஸ்லாத்தைத் தழுவியவன். மாலிக் கஃபூரின் திறமையைக் கண்ட அலாவுதீன் கில்ஜி அவனை படைத் தளபதியாக நியமித்து தக்காணத்தைப் பிடிக்க ஆணையிட்டார். அதைச் சிரமேற்கொண்டு தேவகிரியை அப்போதுதான் பிடித்திருந்தான் மாலிக் கஃபூர்.
சரியான உயரமும் அருமையான தேகக் கட்டும் படைத்த சுந்தர பாண்டியன் பெயருக்கேற்றார் போல் நன்றாகவே இருந்தான். மேலுக்குப் புன்முறுவலோடு அமைந்திருந்த அவன் முகத்தில் ஒருவித அமைதியின்மையும், குரோதமும் தாண்டவமாடியதைக் கவனிக்கத் தவறவில்லை மாராயர். கொல்லிமலை எல்லையில் வழி தெரியாமல் இருந்த இவர்களை இங்கு அழைத்து வந்தனர் மலை மக்கள். அவர்களுக்கு மாராயர் என்றால் நல்ல மரியாதை. ஆனால் இவர்கள் தான் மாலிக் கஃபூர் மற்றும் சுந்தர பாண்டியன் என்பது அப்போது யாருக்குமே தெரியாது.
'தங்களைப் பார்த்தால் வடதேசத்தவர் போல் தெரிகிறதே' என்று வினவினார் மாராயர்.
'ஆம் நான் வட தேசத்தவன் தான்' என்றான் மாலிக் சுத்தத்தமிழில்.
'நான் வட தேச யாத்திரை செய்து விட்டு வரும் வழியில் இவரை சந்தித்தேன். இவர் தென் தேச யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். நாங்கள் இருவரும் சில காலம் பழகியதில் என் மொழி அவருக்கும் அவர் மொழி எனக்கும் பழகி விட்டது. நாங்கள் மதுரை செல்ல எண்ணியிருந்தோம். நானும் இவரும் கொல்லிமலை வழியாக வரும் பொழுது வழி தவறி விட்டோம். ஒரு நாள் எங்கள் குதிரைகளும் எங்களை விட்டு விட்டுப் போய்விட்டன. ஒரு வாரமாக மலையில் திரிந்த பின் இந்த மலை மக்கள் உங்களிடம் எங்களைச் சேர்த்தனர். தற்போது மிக அவசரமாக நாங்கள் மதுரைக்குச் செல்ல வேண்டும். எங்களுக்கு மாற்று உடைகளும் குதிரைகளும் ஏற்பாடு செய்ய வேண்டும். பணத்தைப் பற்றிக் கவலையில்லை' என்றான் சுந்தர பாண்டியன் அதிகார தோரணையோடு.
கேட்பது உதவியாயினும் இப்படி அதிகாரமாகக் கேட்டது மாராயருக்குப் பிடிக்கவில்லை. மனதிற்குள் கருவிக்கொண்டே, 'அதனாலென்ன. அப்படியே செய்து விடலாம். இருவரும் மிகவும் களைத்திருக்கிறீர்கள். சற்று ஓய்வெடுத்துக் கொண்டு செல்லலாமே.' என்றார்.
அனைவரும் அவ்வாறு கூறவே, பாண்டிய இளவலுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. அவ்வூரின் முக்கியச் சத்திரத்தில் ஸ்நானபானங்களை முடித்துக் கொண்டு குதிரைக்காகக் காத்திருந்தனர் இருவரும். அவர்களுக்கு வேறு ஏதாவது தேவையிருக்குமா என்று அறிந்துவர தேன்மொழியை அனுப்பினார் மாராயர். அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்த தேன்மொழி, உள்ளிருந்து வந்த பேச்சுச் சத்தத்தில் மாலிக், மதுரை, சுந்தரன் என்ற பெயர் அடிபடவே சற்று நிதானித்தாள். அவர்கள் பேசுவதைக் கேட்கக் கேட்க அடக் கடவுளே, இது என்ன சோதனை என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். அவர்கள் பேசியது இது தான்.
'சுந்தரா, இப்போது கிளம்பினால் மதுரையை எப்போது அடையலாம்?'
'எங்கும் நிறுத்தாமல் சென்றால், ஐந்து ஜாமத்திற்குள் சேர்ந்து விடலாம்'
'மதுரையில் அதிக காலம் தங்க முடியாது சுந்தரா. இங்கு கொல்லி மலையில் சுற்றியதில் நமது திட்டத்தையெல்லாம் மாற்றவேண்டும் போலிருக்கிறதே.'
'கொல்லிமலை விஜயம் ஒருவிதத்தில் நன்மை என்றுதான் சொல்லவேண்டும் மாலிக். இது போன்ற ஒரு இடம் நமக்கு கடவுளாக அமைத்துக் கொடுத்தது. ஒரு வேளை நமது திட்டம் பாழ்பட்டால், நாம் வர வேண்டிய இடம் இதுதான்'
'உன் சகோதரன் எப்போது மதுரை வருகிறான்? அதற்குமுன் நம் காரியம் முடிய வேண்டும்'
'அவன் விஜயதசமிக்குப் பின்னர்தான் வருவான். அதற்குத்தான் இன்னும் ஒரு மாதம் இருக்கிறதே. ஏன் வீணில் அவசரப் படுகிறாய்?'
'இது அவசரப் படுவதல்ல சுந்தரா, சொல்லி முடிப்பதற்குள் செய்து முடித்துவிடவேண்டும் என்பதுதான் என் கொள்கை. காலம் இருக்கிறதே என்று நினைத்தால் மேலும் பல தடங்கல்கள் வரலாம். நாம் இப்போது இங்கு வந்ததே ஒரு தடங்கலாகப் படுகிறது. இதனால் நமது திட்டத்தில் தோல்வி ஏற்படலாம்'
'நீ வீணில் கற்பனை செய்கிறாய் மாலிக். இங்கிருப்பவர்கள் வட நாட்டவர் போல் அல்ல. இங்கு எண்ணித் துணிக கருமம் என்பதில் எண்ணுவதிலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டுவிடுவார்கள். நான் தான் சற்று வேறு பட்டவன்'
'சரி, மொத்தத்தில் நமது திட்டத்தை மீண்டும் ஒருமுறை விவாதிப்போம். எனக்கு தக்காணத்தில் அமைந்துள்ள ஹொய்சளர்களையும், காகதீயர்களையும் அடக்கி, சுல்தானிய சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தக் கட்டளை. இதில் காகதீயர்களை ஓரளவு அடக்கி விடலாம். ஹொய்சளர்கள் இரு அரசுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள். அவர்களில் உன் சகோதரனுடன் பயிலும் வீர வல்லாளனுக்கு தமிழகத்தின் மேல் எப்போதும் ஒரு கண். உன் பாட்டனார் அவர்களைத் தமிழகத்திலிருந்து விரட்டியதோடு மட்டுமல்லாமல், ஹொய்சளத்திற்கே சென்று ஆட்சி புரிந்தாரல்லவா?
எனவே, மதுரையில் உன் ஆட்சியைத் துவக்கு. மதுரை பலவீனமடைந்தது போல மேலுக்குத் தோற்றத்தை ஏற்படுத்து. இதுதான் தருணமென்று வல்லாளன் இங்கு படையெடுத்து வருவான். அவனது வடக்கு எல்லை பலவீனப்படும். அது போதும் எனக்கு. அவனது பங்காளி அரசை அழித்து விட்டு, தக்காணத்தில் சுல்தானிய அரசை நிறுவி விடுவேன். அது மட்டுமல்லாமல் அவன் பின்னாலேயே தொடர்ந்து வந்து நசுக்கி விடுகிறேன். '
'மொத்தத்தில் மதுரை எனக்கு, தக்காணம் உனக்கு' - என்று எள்ளலாகச் சொல்லிச் சிரித்தான் சுந்தர பாண்டியன்.
அவன் சிரிப்பில் சேர்ந்து கொண்டான் மாலிக் கஃபூர்.
(தொடரும்)
மாலிக் கஃபூர் என்ற பெயரைக் கேட்டதும் இளவழுதியும், வீரபாண்டியனும் வாயைப் பிளக்கக் காரணமிருந்தது. அந்தக் காலத்தில் தில்லி சுல்தானின் படைத்தளபதியான மாலிக் கஃபூர் ஏற்கனவே ஒரு முறை தேவகிரி யாதவர்களைச் சிறை பிடித்துச் சென்றவன். ஆகவே அனைத்துத் தென்னிந்திய அரசுகளுக்கும் அவனிடம் ஒரு வித வெறுப்பும் எதிர்ப்பும் நிறைந்திருந்தன. அத்தகைய வேண்டா விருந்தாளி ஏன் இங்கு வரவேண்டும்? அதுவும் சுந்தர பாண்டியனுடன் ஏன் வரவேண்டும் என்ற கேள்வி இருவர் மனதிலும் எழுந்தது.
மேலும் தொடர்ந்த மாராயர், 'அவர்கள் இருவரும் இந்தப் பக்கம் வந்ததோடல்லாமல் எங்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர்' என்று அன்று நடந்த நிகழ்ச்சியை அசை போடலானார்.
=====
அங்கு அழைத்து வரப்பட்ட இருவரிடம் தென்பட்ட களைப்பும், அவர்களின் கிழிந்த உடையும் பல நாட்கள் சரியான உணவு உட்கொள்ளாமலும், வேறு உடை தரிக்காமலும் இருந்திருக்க வேண்டும் என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கியது.
மாலிக் கஃபூர் நல்ல தேகக்கட்டுடன் இருந்தாலும் அவனது உயரம் அவனை ஒல்லியாகக் காட்டியது. முகத்தில் கடுமையைத் தேக்கி நின்றாலும் பெண்மையின் நளினம் அவன் முகத்தில் அவ்வப் போது தாண்டவமாடியது. (மாலிக் கஃபூர் ஒரு திரு நங்கை). அவன் பிறப்பால் இந்து. தில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் அடிமையாகச் சேர்ந்து அவரது நேசத்தைப் பெற்று இஸ்லாத்தைத் தழுவியவன். மாலிக் கஃபூரின் திறமையைக் கண்ட அலாவுதீன் கில்ஜி அவனை படைத் தளபதியாக நியமித்து தக்காணத்தைப் பிடிக்க ஆணையிட்டார். அதைச் சிரமேற்கொண்டு தேவகிரியை அப்போதுதான் பிடித்திருந்தான் மாலிக் கஃபூர்.
சரியான உயரமும் அருமையான தேகக் கட்டும் படைத்த சுந்தர பாண்டியன் பெயருக்கேற்றார் போல் நன்றாகவே இருந்தான். மேலுக்குப் புன்முறுவலோடு அமைந்திருந்த அவன் முகத்தில் ஒருவித அமைதியின்மையும், குரோதமும் தாண்டவமாடியதைக் கவனிக்கத் தவறவில்லை மாராயர். கொல்லிமலை எல்லையில் வழி தெரியாமல் இருந்த இவர்களை இங்கு அழைத்து வந்தனர் மலை மக்கள். அவர்களுக்கு மாராயர் என்றால் நல்ல மரியாதை. ஆனால் இவர்கள் தான் மாலிக் கஃபூர் மற்றும் சுந்தர பாண்டியன் என்பது அப்போது யாருக்குமே தெரியாது.
'தங்களைப் பார்த்தால் வடதேசத்தவர் போல் தெரிகிறதே' என்று வினவினார் மாராயர்.
'ஆம் நான் வட தேசத்தவன் தான்' என்றான் மாலிக் சுத்தத்தமிழில்.
'நான் வட தேச யாத்திரை செய்து விட்டு வரும் வழியில் இவரை சந்தித்தேன். இவர் தென் தேச யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். நாங்கள் இருவரும் சில காலம் பழகியதில் என் மொழி அவருக்கும் அவர் மொழி எனக்கும் பழகி விட்டது. நாங்கள் மதுரை செல்ல எண்ணியிருந்தோம். நானும் இவரும் கொல்லிமலை வழியாக வரும் பொழுது வழி தவறி விட்டோம். ஒரு நாள் எங்கள் குதிரைகளும் எங்களை விட்டு விட்டுப் போய்விட்டன. ஒரு வாரமாக மலையில் திரிந்த பின் இந்த மலை மக்கள் உங்களிடம் எங்களைச் சேர்த்தனர். தற்போது மிக அவசரமாக நாங்கள் மதுரைக்குச் செல்ல வேண்டும். எங்களுக்கு மாற்று உடைகளும் குதிரைகளும் ஏற்பாடு செய்ய வேண்டும். பணத்தைப் பற்றிக் கவலையில்லை' என்றான் சுந்தர பாண்டியன் அதிகார தோரணையோடு.
கேட்பது உதவியாயினும் இப்படி அதிகாரமாகக் கேட்டது மாராயருக்குப் பிடிக்கவில்லை. மனதிற்குள் கருவிக்கொண்டே, 'அதனாலென்ன. அப்படியே செய்து விடலாம். இருவரும் மிகவும் களைத்திருக்கிறீர்கள். சற்று ஓய்வெடுத்துக் கொண்டு செல்லலாமே.' என்றார்.
அனைவரும் அவ்வாறு கூறவே, பாண்டிய இளவலுக்கு வேறு வழியில்லாமல் போய்விட்டது. அவ்வூரின் முக்கியச் சத்திரத்தில் ஸ்நானபானங்களை முடித்துக் கொண்டு குதிரைக்காகக் காத்திருந்தனர் இருவரும். அவர்களுக்கு வேறு ஏதாவது தேவையிருக்குமா என்று அறிந்துவர தேன்மொழியை அனுப்பினார் மாராயர். அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்த தேன்மொழி, உள்ளிருந்து வந்த பேச்சுச் சத்தத்தில் மாலிக், மதுரை, சுந்தரன் என்ற பெயர் அடிபடவே சற்று நிதானித்தாள். அவர்கள் பேசுவதைக் கேட்கக் கேட்க அடக் கடவுளே, இது என்ன சோதனை என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். அவர்கள் பேசியது இது தான்.
'சுந்தரா, இப்போது கிளம்பினால் மதுரையை எப்போது அடையலாம்?'
'எங்கும் நிறுத்தாமல் சென்றால், ஐந்து ஜாமத்திற்குள் சேர்ந்து விடலாம்'
'மதுரையில் அதிக காலம் தங்க முடியாது சுந்தரா. இங்கு கொல்லி மலையில் சுற்றியதில் நமது திட்டத்தையெல்லாம் மாற்றவேண்டும் போலிருக்கிறதே.'
'கொல்லிமலை விஜயம் ஒருவிதத்தில் நன்மை என்றுதான் சொல்லவேண்டும் மாலிக். இது போன்ற ஒரு இடம் நமக்கு கடவுளாக அமைத்துக் கொடுத்தது. ஒரு வேளை நமது திட்டம் பாழ்பட்டால், நாம் வர வேண்டிய இடம் இதுதான்'
'உன் சகோதரன் எப்போது மதுரை வருகிறான்? அதற்குமுன் நம் காரியம் முடிய வேண்டும்'
'அவன் விஜயதசமிக்குப் பின்னர்தான் வருவான். அதற்குத்தான் இன்னும் ஒரு மாதம் இருக்கிறதே. ஏன் வீணில் அவசரப் படுகிறாய்?'
'இது அவசரப் படுவதல்ல சுந்தரா, சொல்லி முடிப்பதற்குள் செய்து முடித்துவிடவேண்டும் என்பதுதான் என் கொள்கை. காலம் இருக்கிறதே என்று நினைத்தால் மேலும் பல தடங்கல்கள் வரலாம். நாம் இப்போது இங்கு வந்ததே ஒரு தடங்கலாகப் படுகிறது. இதனால் நமது திட்டத்தில் தோல்வி ஏற்படலாம்'
'நீ வீணில் கற்பனை செய்கிறாய் மாலிக். இங்கிருப்பவர்கள் வட நாட்டவர் போல் அல்ல. இங்கு எண்ணித் துணிக கருமம் என்பதில் எண்ணுவதிலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டுவிடுவார்கள். நான் தான் சற்று வேறு பட்டவன்'
'சரி, மொத்தத்தில் நமது திட்டத்தை மீண்டும் ஒருமுறை விவாதிப்போம். எனக்கு தக்காணத்தில் அமைந்துள்ள ஹொய்சளர்களையும், காகதீயர்களையும் அடக்கி, சுல்தானிய சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தக் கட்டளை. இதில் காகதீயர்களை ஓரளவு அடக்கி விடலாம். ஹொய்சளர்கள் இரு அரசுகளாகப் பிரிந்து கிடக்கிறார்கள். அவர்களில் உன் சகோதரனுடன் பயிலும் வீர வல்லாளனுக்கு தமிழகத்தின் மேல் எப்போதும் ஒரு கண். உன் பாட்டனார் அவர்களைத் தமிழகத்திலிருந்து விரட்டியதோடு மட்டுமல்லாமல், ஹொய்சளத்திற்கே சென்று ஆட்சி புரிந்தாரல்லவா?
எனவே, மதுரையில் உன் ஆட்சியைத் துவக்கு. மதுரை பலவீனமடைந்தது போல மேலுக்குத் தோற்றத்தை ஏற்படுத்து. இதுதான் தருணமென்று வல்லாளன் இங்கு படையெடுத்து வருவான். அவனது வடக்கு எல்லை பலவீனப்படும். அது போதும் எனக்கு. அவனது பங்காளி அரசை அழித்து விட்டு, தக்காணத்தில் சுல்தானிய அரசை நிறுவி விடுவேன். அது மட்டுமல்லாமல் அவன் பின்னாலேயே தொடர்ந்து வந்து நசுக்கி விடுகிறேன். '
'மொத்தத்தில் மதுரை எனக்கு, தக்காணம் உனக்கு' - என்று எள்ளலாகச் சொல்லிச் சிரித்தான் சுந்தர பாண்டியன்.
அவன் சிரிப்பில் சேர்ந்து கொண்டான் மாலிக் கஃபூர்.
(தொடரும்)
Tuesday, November 25, 2008
பண வீக்கம் - பணத்தின் மதிப்பு, சேமிப்பு, முதலீடு
பணவீக்கம் என்பது விலையேற்றத்தில் ஏற்படும் மாற்றம் என்று முன்னர் பார்த்தோம். இதன் இன்னொரு பரிமாணம் பணத்தின் மதிப்பு வீழ்வது.
உங்களிடம் ரூ.100 உள்ளது. அதை வைத்து ரூ.100 மதிப்புள்ள பொருட்கள் வாங்கலாம். அடுத்த வருடம் 8% பணவீக்கம் காரணமாக அதே பொருட்களை வாங்க உங்களுக்கு ரூ.108 தேவைப்படும். அல்லது உங்களிடம் இருக்கும் ரூ.100க்கு குறைந்த பொருட்களே வாங்க முடியும். ஆக ஒரு வருடத்தில் உங்கள் ரூ.100-ன் மதிப்பு ரூ.92 ஆகக் குறைந்து விட்டது. இதற்குக் காரணம் பணவீக்கம் தான்.
ஒரு வேளை நீங்க்ள் இந்த ரூ.100-ஐ வங்கியில் 10%க்கு வைப்புத்தொகையாக வைத்திருந்தால் உங்களுக்கு ஒரு வருடத்திற்குப் பிறகு ரூ.110 கிடைக்கும். இதில் பணவீக்கத்தின் தாக்கம் ரூ.8 போக மீதி ரூ.2 தான் உண்மையான வருமானம். இதை Inflation Adjusted Rate of Return என்பார்கள்.
உண்மையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கும் தொகைக்கு இப்போது வட்டி 8 .5% வழங்கப் படுகிறது. இன்றைய பணவீக்க நிலையில் நிகர ஐ.ஏ.ஆர்.ஆர். பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். முன்பு 12% வட்டி வழங்கப் பட்டு வந்த போது பணவீக்கத்தின் தாக்கம் அவ்வளவாகத் தெரியாமல் இருந்தது.
அடுத்த முறை நீங்கள் ஏதாவது முதலீடோ சேமிப்போ செய்யும் போது இந்த ஐ.ஏ.ஆர்.ஆர்.-ஐ நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
===
சேமிப்பும் முதலீடும்
நிறைய பேருக்கு சேமிப்புக்கும் முதலீட்டிற்கும் வித்தியாசம் தெரிவதில்லை. சேமிப்பு என்பது வேறு, முதலீடு என்பது வேறு. அடுத்து வரும் மூன்று அடிப்படைத் தன்மைகளின் அளவைப் பொறுத்து அது சேமிப்பா, முதலீடா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
1. Liquidity - உடனடியாக அதே அளவு பணமாக மாற்றக் கூடிய தன்மை.
2. Safety - முதலுக்கே மோசமில்லாத நிலை.
3. Return - திரும்ப வரும் லாபம்.
பணமாக நீங்கள் உங்கள் வீட்டிலோ, லாக்கரிலோ வைத்திருந்தால் அதிக பட்ச லிக்விடிடி, சேஃப்டியும் ரிடர்னும் கிடையாது.
வங்கி வைப்புத் தொகையாக வைத்திருந்தால் - தேவையான போது மாற்றிக் கொள்ளலாம். நல்ல வங்கியாக இருந்தால் சேஃப்டி உண்டு. ரிடர்ன் குறைவுதான்.
ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், லிக்விடிடியும் சேஃப்டியும் மிகக் குறைவு. ரிடர்ன் அதிகம். ரிஸ்கும் அதிகம். இதைத்தான் Risk Return Trade Off (Higher the Risk Higher the Return) என்று கூறுவார்கள்.
நிலமாக முதலீடு செய்தால் லிக்விடிடி மிகக் குறைவு. சேஃப்டி அதிகம். ரிடர்ன் உடனடியாகக் கிடைக்காது.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் மட்டுமல்லாமல் அரசாங்கங்களும் விரும்பி முதலீடு செய்யும் பொருள் 'தங்கம்'. தங்கத்தைப் போல ஒன்று முதலீட்டிற்கும் சேமிக்கவும் ஏற்ற பொருள் இதுவரை ஏற்படவே இல்லை என்று கூறலாம்.
அடிப்படையாக நமக்கு லிக்விட் கேஷ் தேவைப்படும். அதற்கு, தங்கமாகவோ, வங்கி வைப்பு நிதியாகவோ ஒரு பகுதி கண்டிப்பாக இருக்க வேண்டும். இது நம்முடைய 6 மாத பணத்தேவையின் அளவில் இருப்பது நல்லது.
அடுத்து முதலீடு. நீங்கள் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யலாம் அல்லது நிலமாக வாங்கிப் போடலாம். ஷேர் மார்க்கெட்டில் நீங்கள் நுழைய உங்களுக்கு அடிப்படைத் தேவை, முதலீடு முடிவுகளை நீங்களாக எடுப்பது. ஒரு கேள்வி பதில் ஃபோரத்தில் ஒரு ருசிகரமான கேள்வி பதில் கீழே.
கேள்வி: நான் ரிலையன்ஸ் இன்ஃபோவை ரூ.860க்கு வாங்கினேன். இப்போது ரூ.450ல் இருக்கிறது. இப்போது விற்கலாமா?
பதில்: நீங்கள் ரூ.860ல் ஏன் வாங்கினீர்கள்? இப்போது ரூ.450க்கு ஏன் விற்கப் பார்க்கிறீர்கள். இந்தக் கேள்விகளுக்கு சரியான விடை தெரியாவிட்டால் நீங்கள் ஷேர் மார்க்கெட் பக்கம் வழி தவறி வந்து விட்டீர்கள்.
இன்னும் தொடர்வோம்.
உங்களிடம் ரூ.100 உள்ளது. அதை வைத்து ரூ.100 மதிப்புள்ள பொருட்கள் வாங்கலாம். அடுத்த வருடம் 8% பணவீக்கம் காரணமாக அதே பொருட்களை வாங்க உங்களுக்கு ரூ.108 தேவைப்படும். அல்லது உங்களிடம் இருக்கும் ரூ.100க்கு குறைந்த பொருட்களே வாங்க முடியும். ஆக ஒரு வருடத்தில் உங்கள் ரூ.100-ன் மதிப்பு ரூ.92 ஆகக் குறைந்து விட்டது. இதற்குக் காரணம் பணவீக்கம் தான்.
ஒரு வேளை நீங்க்ள் இந்த ரூ.100-ஐ வங்கியில் 10%க்கு வைப்புத்தொகையாக வைத்திருந்தால் உங்களுக்கு ஒரு வருடத்திற்குப் பிறகு ரூ.110 கிடைக்கும். இதில் பணவீக்கத்தின் தாக்கம் ரூ.8 போக மீதி ரூ.2 தான் உண்மையான வருமானம். இதை Inflation Adjusted Rate of Return என்பார்கள்.
உண்மையில் ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கும் தொகைக்கு இப்போது வட்டி 8 .5% வழங்கப் படுகிறது. இன்றைய பணவீக்க நிலையில் நிகர ஐ.ஏ.ஆர்.ஆர். பூஜ்ஜியமாகத்தான் இருக்கும். முன்பு 12% வட்டி வழங்கப் பட்டு வந்த போது பணவீக்கத்தின் தாக்கம் அவ்வளவாகத் தெரியாமல் இருந்தது.
அடுத்த முறை நீங்கள் ஏதாவது முதலீடோ சேமிப்போ செய்யும் போது இந்த ஐ.ஏ.ஆர்.ஆர்.-ஐ நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
===
சேமிப்பும் முதலீடும்
நிறைய பேருக்கு சேமிப்புக்கும் முதலீட்டிற்கும் வித்தியாசம் தெரிவதில்லை. சேமிப்பு என்பது வேறு, முதலீடு என்பது வேறு. அடுத்து வரும் மூன்று அடிப்படைத் தன்மைகளின் அளவைப் பொறுத்து அது சேமிப்பா, முதலீடா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
1. Liquidity - உடனடியாக அதே அளவு பணமாக மாற்றக் கூடிய தன்மை.
2. Safety - முதலுக்கே மோசமில்லாத நிலை.
3. Return - திரும்ப வரும் லாபம்.
பணமாக நீங்கள் உங்கள் வீட்டிலோ, லாக்கரிலோ வைத்திருந்தால் அதிக பட்ச லிக்விடிடி, சேஃப்டியும் ரிடர்னும் கிடையாது.
வங்கி வைப்புத் தொகையாக வைத்திருந்தால் - தேவையான போது மாற்றிக் கொள்ளலாம். நல்ல வங்கியாக இருந்தால் சேஃப்டி உண்டு. ரிடர்ன் குறைவுதான்.
ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்தால், லிக்விடிடியும் சேஃப்டியும் மிகக் குறைவு. ரிடர்ன் அதிகம். ரிஸ்கும் அதிகம். இதைத்தான் Risk Return Trade Off (Higher the Risk Higher the Return) என்று கூறுவார்கள்.
நிலமாக முதலீடு செய்தால் லிக்விடிடி மிகக் குறைவு. சேஃப்டி அதிகம். ரிடர்ன் உடனடியாகக் கிடைக்காது.
இவையெல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் மட்டுமல்லாமல் அரசாங்கங்களும் விரும்பி முதலீடு செய்யும் பொருள் 'தங்கம்'. தங்கத்தைப் போல ஒன்று முதலீட்டிற்கும் சேமிக்கவும் ஏற்ற பொருள் இதுவரை ஏற்படவே இல்லை என்று கூறலாம்.
அடிப்படையாக நமக்கு லிக்விட் கேஷ் தேவைப்படும். அதற்கு, தங்கமாகவோ, வங்கி வைப்பு நிதியாகவோ ஒரு பகுதி கண்டிப்பாக இருக்க வேண்டும். இது நம்முடைய 6 மாத பணத்தேவையின் அளவில் இருப்பது நல்லது.
அடுத்து முதலீடு. நீங்கள் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்யலாம் அல்லது நிலமாக வாங்கிப் போடலாம். ஷேர் மார்க்கெட்டில் நீங்கள் நுழைய உங்களுக்கு அடிப்படைத் தேவை, முதலீடு முடிவுகளை நீங்களாக எடுப்பது. ஒரு கேள்வி பதில் ஃபோரத்தில் ஒரு ருசிகரமான கேள்வி பதில் கீழே.
கேள்வி: நான் ரிலையன்ஸ் இன்ஃபோவை ரூ.860க்கு வாங்கினேன். இப்போது ரூ.450ல் இருக்கிறது. இப்போது விற்கலாமா?
பதில்: நீங்கள் ரூ.860ல் ஏன் வாங்கினீர்கள்? இப்போது ரூ.450க்கு ஏன் விற்கப் பார்க்கிறீர்கள். இந்தக் கேள்விகளுக்கு சரியான விடை தெரியாவிட்டால் நீங்கள் ஷேர் மார்க்கெட் பக்கம் வழி தவறி வந்து விட்டீர்கள்.
இன்னும் தொடர்வோம்.
Wednesday, November 19, 2008
சக்கர வியூகம் - ஒர் அறிவிப்பு
சக்கரவியூகம், ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை வெளியிடப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வாரம் அழுத்தும் பணிச்சுமைகளால், இன்று வெளிவர வேண்டிய சக்கர வியூகத்தின் அடுத்த அத்தியாயம் வெளியிட முடியவில்லை. தயவு செய்து மன்னிக்கவும்.
அடுத்த வாரம் இரு அத்தியாயங்களாக வரும்.
நன்றி.
அடுத்த வாரம் இரு அத்தியாயங்களாக வரும்.
நன்றி.
Tuesday, November 18, 2008
2605/06 பல்லவன் சூப்பர் பாஸஞ்சர்
பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் என்பது பெயர். திருச்சிக் காரர்களுக்கு பல்லவன் என்றாலே ஒரு கெத்து. ஆரம்பிக்கும் போது நாலே நிறுத்தங்கள். படிப்படியாக உயர்ந்து இப்போது வெற்றிகரமாக 10 நிறுத்தங்களைக் கொண்டு மெதுவாக / லேட்டாகச் செல்கிறது பல்லவன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்ப்ரஸ்
தற்போது இந்தவண்டி நின்று செல்லும் நிறுத்தங்கள்.
1.தாம்பரம்
2. செங்கல்பட்டு
3. மேல்மருவத்தூர்
4.விழுப்புரம்
5.விருத்தாசலம்
6.அரியலூர்
7.லால்குடி
8.ஸ்ரீரங்கம்
9.கோல்டன் ராக் (சென்னையிலிருந்து வரும்போது), மாம்பலம் (திருச்சியிலிருந்து செல்லும்ப் போது)
10. திருச்சி சந்திப்பு.
தின்டிவனம் கூடிய விரைவில் சேர்ந்துவிடக்கூடும். பெண்ணாடம், கல்லக்குடி பழங்காநத்தம் (டால்மியாபுரம்) ஆகியவையும் காலப் போக்கில் சேரலாம்.இவை இல்லாமல் ஒருவழிப் பாதை என்பதால் க்ராசிங்கிற்காக பல இடங்களிலும் நிறுத்தப்படுகிறது.
அட்டவணைப்படி ஐந்தரை மணி நேரத்தில் சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்றுவிடும் என்று போடப்படுகிறது. பெரும்பாலும் 6 முதல் ஆறரை மணி நேரம் ஆகி விடுகிறது.
எனவே, இரயில்வே துறைக்கு இப்படி ஒரு லெட்டர் அனுப்பலாமா என்று யோசிக்கிறேன்.
அன்புள்ள இரயில்வேத்துறைக்கு,
இப்பவும் பல்லவன் எக்ஸ்ப்ரசின் நிறுத்தங்கள் அதிகரித்துள்ளது தாங்கள் அறிந்ததே:(. இது பயணியர் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவாக இருக்கலாம். இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
ஆனால் இதை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் என்று கூறிக்கொண்டு கூடுதலாக சூப்பர் ஃபாஸ்ட் சர்சார்ஜ் வசூலிப்பது சரியில்லை.
தயவு செய்து பல்லவன் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரசை சாதா எக்ஸ்ப்ரசாக மாற்றி, சூப்பர் ஃபாஸ்ட் சர்சார்ஜ் (ரூ 10 ஐ) எங்களுக்குத் திருப்பிக் கொடுத்தால், உங்கள் பெயரைச் சொல்லி ஒரு பொண்டா டி (BONDA & TEA) ஐ.ஆர்.சி.டி.சி. கேன்டீனிலேயே சாப்பிடுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
சூப்பர் ஃபாஸ்ட் சர்சார்ஜ் கொடுத்து
பல்லவன் பாசஞ்சரில் பயணிப்போர் சங்கம்:(((
இதில் ஏதாவது சேர்க்க வேண்டுமா, நீக்க வேண்டுமா? சொன்னா பண்ணிடலாம்.;-)
தற்போது இந்தவண்டி நின்று செல்லும் நிறுத்தங்கள்.
1.தாம்பரம்
2. செங்கல்பட்டு
3. மேல்மருவத்தூர்
4.விழுப்புரம்
5.விருத்தாசலம்
6.அரியலூர்
7.லால்குடி
8.ஸ்ரீரங்கம்
9.கோல்டன் ராக் (சென்னையிலிருந்து வரும்போது), மாம்பலம் (திருச்சியிலிருந்து செல்லும்ப் போது)
10. திருச்சி சந்திப்பு.
தின்டிவனம் கூடிய விரைவில் சேர்ந்துவிடக்கூடும். பெண்ணாடம், கல்லக்குடி பழங்காநத்தம் (டால்மியாபுரம்) ஆகியவையும் காலப் போக்கில் சேரலாம்.இவை இல்லாமல் ஒருவழிப் பாதை என்பதால் க்ராசிங்கிற்காக பல இடங்களிலும் நிறுத்தப்படுகிறது.
அட்டவணைப்படி ஐந்தரை மணி நேரத்தில் சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்றுவிடும் என்று போடப்படுகிறது. பெரும்பாலும் 6 முதல் ஆறரை மணி நேரம் ஆகி விடுகிறது.
எனவே, இரயில்வே துறைக்கு இப்படி ஒரு லெட்டர் அனுப்பலாமா என்று யோசிக்கிறேன்.
அன்புள்ள இரயில்வேத்துறைக்கு,
இப்பவும் பல்லவன் எக்ஸ்ப்ரசின் நிறுத்தங்கள் அதிகரித்துள்ளது தாங்கள் அறிந்ததே:(. இது பயணியர் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவாக இருக்கலாம். இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
ஆனால் இதை சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் என்று கூறிக்கொண்டு கூடுதலாக சூப்பர் ஃபாஸ்ட் சர்சார்ஜ் வசூலிப்பது சரியில்லை.
தயவு செய்து பல்லவன் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்ப்ரசை சாதா எக்ஸ்ப்ரசாக மாற்றி, சூப்பர் ஃபாஸ்ட் சர்சார்ஜ் (ரூ 10 ஐ) எங்களுக்குத் திருப்பிக் கொடுத்தால், உங்கள் பெயரைச் சொல்லி ஒரு பொண்டா டி (BONDA & TEA) ஐ.ஆர்.சி.டி.சி. கேன்டீனிலேயே சாப்பிடுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு,
சூப்பர் ஃபாஸ்ட் சர்சார்ஜ் கொடுத்து
பல்லவன் பாசஞ்சரில் பயணிப்போர் சங்கம்:(((
இதில் ஏதாவது சேர்க்க வேண்டுமா, நீக்க வேண்டுமா? சொன்னா பண்ணிடலாம்.;-)
Sunday, November 16, 2008
ஐ.டி. துறையில் தொழிற்சங்கங்கள் ஏன் இல்லை?
தோழர் வினவு, ஐ.டி. துறை நண்பா உனக்கு ரோஷம் வேணுண்டா என்ற அவரது நட்சத்திரப் பதிவில், ஐ.டி.துறையில் தொழிற்சங்கம் அமைத்திட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அவரது பதிவிற்குப் பின்னூட்டமிடலாம் என்ற எண்ணத்தில் எழுந்த சிந்தனைகள் ஒரு முழுப் பதிவிற்குண்டான செய்திகளை அளித்ததால் இந்தப் பதிவு.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்றார் வள்ளுவப் பெருந்தகை.
அவரே, நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் என்றும் இயம்பியுள்ளார். ஒரு கொல்லன் பட்டறையில் சூடான இரும்பைத் தணிக்க குளிர்ந்த நீரில் அந்த வார்ப்பினை அமிழ்த்த வேண்டும். அதற்காக சுரத்தால் தவிக்கும் ஒருவனை அதே முறையில் குளிர் நீரில் அமிழ்த்தினால் என்னவாகும்?. இவற்றைக் கருத்தில் கொண்டு இப்பதிவை வடிக்கிறேன்.
முதலில் ஐ.டி. துறையில் தொழிற்சங்கம் தொடங்கிட வேண்டுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தொழிற்சங்கங்கள் எதற்காகத் தோன்றின?
தொழிலாளிகளுக்கு காலமோ, நேரமோ இன்றி 18 மணி நேரம் வரை கூட தொழிற்சாலைகளில் பணிபுரிந்திட வேண்டியிருந்தது. சரியான அல்லது பாதுகாப்பான தொழிற்சூழல் இல்லை. கூலி என்ன கொடுக்கிறார்களோ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. தொழிலாளியின் வாழ்க்கையில் பாதுகாப்பற்ற தன்மையும், அவன் இறந்தால் அவன் குடும்பம் நிர்க்கதியாய் நிற்க வேண்டிய சூழலும் நிலவின. அதிகார வர்க்கத்தின் கை மேலோங்கியிருந்தது. இவ்வாறான நிலையில் தொழிலாளி, ஒரு இயந்திரத்தை விட மோசமான முறையில் நடத்தப்பட்ட அவலம் இருந்தது. இவற்றை அகற்றிடத் தோன்றியதுதான் தொழிற்சங்கங்கள்.
இத்தகைய சீர்கேடுகள் ஐ.டி. துறைத் தொழிலாளர்களிடையே உள்ளதா? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1. தொழிலாளிகளுக்கு காலமோ, நேரமோ இன்றி 18 மணி நேரம் வரை கூட தொழிற்சாலைகளில் பணிபுரிந்திட வேண்டியிருந்தது.
ஐ.டி. துறையிலும் 8 மணி நேரம்தான் வேலை செய்ய வேண்டும் என்றிருந்தாலும், பெரும்பாலும் அவர்கள் இரவு ஒன்பது மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆனால் மொத்த நேரமும் பணியிலேயே ஈடுபடுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. பணிகளுக்கிடையே, ரிலாக்ஸ் செய்து கொள்ள பல்வேறு சூழல்கள் உள்ளன. உதாரணத்திற்கு, இந்தப் பதிவைக் கூட பணிக்கிடையே யாராவது படித்துக் கொண்டிருக்கலாம்.
2. சரியான அல்லது பாதுகாப்பான தொழிற்சூழல் இல்லை.
இது நிச்சயமாக ஐ.டி. தொழிலாளர்களுக்கு இல்லை. உலகத் தரம் வாய்ந்த, முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட்ட, அனைத்து வசதிகளுடன் கூடிய பணியிடத்தில்தான் இவர்கள் வேலை செய்கிறார்கள்.
3. கூலி என்ன கொடுக்கிறார்களோ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
ஐ.டி. துறையில் இருக்கக் கூடிய ஒரு பிரச்சினை 'அட்ரிஷன்' என்று சொல்லக் கூடிய வேலையை விட்டு தொழிலாளர்கள் அடிக்கடி செல்லும் சூழல். இதில் ஒரு ஐ.டி. தொழிலாளியே, தனது சம்பளத்தை நிர்ணயிக்கும் நிலை உள்ளது. இது போக, பணியில் நுழையும் போதே, மாத சம்பளம் 20000 முதல் கிடைக்கிறது. இது மற்ற துறையில் உள்ள தொழிலாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்தும் அடைய முடியாத இலக்காகும். எனவே, குறைந்த பட்ச் சம்பளம் அடிப்படை சம்பளம் என்பதெல்லாம் அடிபட்டுப் போகிறது.
4. தொழிலாளியின் வாழ்க்கையில் பாதுகாப்பற்ற தன்மையும், அவன் இறந்தால் அவன் குடும்பம் நிர்க்கதியாய் நிற்க வேண்டிய சூழலும் நிலவின.
ஐ.டி. துறையில் பணியாற்றும் அனைவரும் க்ரூப் இன்ஷ்யூரன்ஸ் முதலியவற்றில் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். சில நிறுவனங்கள் நிர்வாகமே இழப்பீட்டுத் தொகை வழங்குகிறது.
5. அதிகார வர்க்கத்தின் கை மேலோங்கியிருந்தது.
இது எங்கும் எப்போதும் இருப்பதால், ஐ.டி. துறையிலும் காணப்படுகிறது என்றே வைத்துக் கொள்ளவேண்டும்.
கலெக்டிவ் பார்கெய்னிங்
மேற்சொன்னவற்றைத் தவிர தொழிற்சங்கத்தின் முக்கியப் பலன் அது கலெக்டிவ் பார்கெயினிங் என்ற தொழிலாளர் ஒற்றுமைக்கு அடிகோலியது. தனி மனிதனின் குரல் ஓங்கி ஒலிக்கமுடியாத போது, இதன் மூலம், சம்பளம், பணிச்சூழல், மற்ற பயன்கள் ஆகியவற்றை நிர்வாகத்திடம் கேட்டுப் பெற முடிந்தது.
ஆனால் ஐ.டி. துறையில், ஒருவரின் சம்பளம் மற்றொருவருக்குக் கிடையாது மற்றும் தெரியாது. பணிச்சூழலில் எந்தவித குறைபாடும் இருக்க முடியாது. வீட்டுக்குச் செல்லவும் அழைத்து வரவும் பேருந்து, கார் வசதி ஆகியவை உள்ளன. ஆகவே, இந்தத் தேவைகளும் இல்லை.
தொழிற்சங்கங்களில் பெரும்பாலும் ஆண்களே உள்ளனர். ஐ.டி. துறையில் பெண்களின் பங்களிப்பு 50 சதவீதம் வரை என்று கூட சொல்லலாம். ஆகவே தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்றே வைத்துக் கொண்டாலும், 50% பேர்தான் முன் வருவார்கள். அவர்களிலும் பிற மாநிலத்தவர் இருப்பார்கள். அட்ரிஷன் காரணமாக நிரந்தரமாக இருப்பவர்கள் குறைவாதலால் அவர்களுக்கு நிர்வாகமே அதிகச் சம்பளம், அலவன்சு, ப்ரமோஷன் முதலியவற்றைச் செய்து கொடுத்து விடுகிறது. புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களும், பிற நிறுவனங்களிலிருந்து அப்போதுதான் வேலைக்குச் சேர்ந்தவர்களும் தொழிற்சங்கம் அமைத்திட நிச்சயம் முன் வரமாட்டார்கள். அப்படி அமைந்திட்டாலும் தொடர்ந்து நடத்திட முடியாத சூழல், அதாவது வேறு வேலைக்குச் செல்லுதல், ட்ரான்ஸ்ஃபர், ஆன் சைட் முதலிய சூழல்கள் உருவாகும்.
இவ்வாறாக பல்வேறு கோணங்களில் பகுத்துப் பார்க்கும் போது, ஐ.டி.துறையின் தற்போதைய சூழலில் தொழிற்சங்கம் தீர்வாகாது என்பதே நிதர்சனமான உண்மை.
ஆனால், தற்போது ஐ.டி. துறையில் நிலவி வரும் சுணக்கமான போக்கு, உலகப் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மந்தமான நிலையின் எதிரொலியாகும். ஐ.டி. துறையில் மற்ற உற்பத்தித் துறை போல், பொருள் விற்றாலும் விற்காவிட்டாலும் உற்பத்தி செய்து இருப்பாக வைத்துக் கொள்ள முடியாது. தேவைக்கேற்பதான் பணி செய்ய முடியும்.
இந்த நிலையில், ஐ.டி. தொழிலில் பணி புரிவோர், தங்கள் சம்பளத்தில் ஒரு கணிசமான பகுதியை எதிர்காலத்தின் தேவைக்காக சேமித்தல் வேண்டும். இங்கு சேமிப்பு என்பது வேறு, முதலீடு என்பது வேறு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். சேமிப்பு என்பது நாட்டுடைமை ஆக்கப் பட்ட வங்கிகளில் வைப்பு நிதியாக இருக்கலாம். இதைப் பற்றி விரிவாகப் பிறகு. ஐ.டி. தொழிலாளிக்கு தன் திறமைதான் மூலதனம். பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் மேலும் தெளிவை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என்றார் வள்ளுவப் பெருந்தகை.
அவரே, நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும் வாய் நாடி வாய்ப்பச் செயல் என்றும் இயம்பியுள்ளார். ஒரு கொல்லன் பட்டறையில் சூடான இரும்பைத் தணிக்க குளிர்ந்த நீரில் அந்த வார்ப்பினை அமிழ்த்த வேண்டும். அதற்காக சுரத்தால் தவிக்கும் ஒருவனை அதே முறையில் குளிர் நீரில் அமிழ்த்தினால் என்னவாகும்?. இவற்றைக் கருத்தில் கொண்டு இப்பதிவை வடிக்கிறேன்.
முதலில் ஐ.டி. துறையில் தொழிற்சங்கம் தொடங்கிட வேண்டுமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தொழிற்சங்கங்கள் எதற்காகத் தோன்றின?
தொழிலாளிகளுக்கு காலமோ, நேரமோ இன்றி 18 மணி நேரம் வரை கூட தொழிற்சாலைகளில் பணிபுரிந்திட வேண்டியிருந்தது. சரியான அல்லது பாதுகாப்பான தொழிற்சூழல் இல்லை. கூலி என்ன கொடுக்கிறார்களோ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. தொழிலாளியின் வாழ்க்கையில் பாதுகாப்பற்ற தன்மையும், அவன் இறந்தால் அவன் குடும்பம் நிர்க்கதியாய் நிற்க வேண்டிய சூழலும் நிலவின. அதிகார வர்க்கத்தின் கை மேலோங்கியிருந்தது. இவ்வாறான நிலையில் தொழிலாளி, ஒரு இயந்திரத்தை விட மோசமான முறையில் நடத்தப்பட்ட அவலம் இருந்தது. இவற்றை அகற்றிடத் தோன்றியதுதான் தொழிற்சங்கங்கள்.
இத்தகைய சீர்கேடுகள் ஐ.டி. துறைத் தொழிலாளர்களிடையே உள்ளதா? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
1. தொழிலாளிகளுக்கு காலமோ, நேரமோ இன்றி 18 மணி நேரம் வரை கூட தொழிற்சாலைகளில் பணிபுரிந்திட வேண்டியிருந்தது.
ஐ.டி. துறையிலும் 8 மணி நேரம்தான் வேலை செய்ய வேண்டும் என்றிருந்தாலும், பெரும்பாலும் அவர்கள் இரவு ஒன்பது மணி வரை அலுவலகத்தில் இருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. ஆனால் மொத்த நேரமும் பணியிலேயே ஈடுபடுகிறார்களா என்றால் நிச்சயம் இல்லை. பணிகளுக்கிடையே, ரிலாக்ஸ் செய்து கொள்ள பல்வேறு சூழல்கள் உள்ளன. உதாரணத்திற்கு, இந்தப் பதிவைக் கூட பணிக்கிடையே யாராவது படித்துக் கொண்டிருக்கலாம்.
2. சரியான அல்லது பாதுகாப்பான தொழிற்சூழல் இல்லை.
இது நிச்சயமாக ஐ.டி. தொழிலாளர்களுக்கு இல்லை. உலகத் தரம் வாய்ந்த, முழுவதும் குளிர்சாதனம் செய்யப்பட்ட, அனைத்து வசதிகளுடன் கூடிய பணியிடத்தில்தான் இவர்கள் வேலை செய்கிறார்கள்.
3. கூலி என்ன கொடுக்கிறார்களோ அதைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.
ஐ.டி. துறையில் இருக்கக் கூடிய ஒரு பிரச்சினை 'அட்ரிஷன்' என்று சொல்லக் கூடிய வேலையை விட்டு தொழிலாளர்கள் அடிக்கடி செல்லும் சூழல். இதில் ஒரு ஐ.டி. தொழிலாளியே, தனது சம்பளத்தை நிர்ணயிக்கும் நிலை உள்ளது. இது போக, பணியில் நுழையும் போதே, மாத சம்பளம் 20000 முதல் கிடைக்கிறது. இது மற்ற துறையில் உள்ள தொழிலாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்தும் அடைய முடியாத இலக்காகும். எனவே, குறைந்த பட்ச் சம்பளம் அடிப்படை சம்பளம் என்பதெல்லாம் அடிபட்டுப் போகிறது.
4. தொழிலாளியின் வாழ்க்கையில் பாதுகாப்பற்ற தன்மையும், அவன் இறந்தால் அவன் குடும்பம் நிர்க்கதியாய் நிற்க வேண்டிய சூழலும் நிலவின.
ஐ.டி. துறையில் பணியாற்றும் அனைவரும் க்ரூப் இன்ஷ்யூரன்ஸ் முதலியவற்றில் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். சில நிறுவனங்கள் நிர்வாகமே இழப்பீட்டுத் தொகை வழங்குகிறது.
5. அதிகார வர்க்கத்தின் கை மேலோங்கியிருந்தது.
இது எங்கும் எப்போதும் இருப்பதால், ஐ.டி. துறையிலும் காணப்படுகிறது என்றே வைத்துக் கொள்ளவேண்டும்.
கலெக்டிவ் பார்கெய்னிங்
மேற்சொன்னவற்றைத் தவிர தொழிற்சங்கத்தின் முக்கியப் பலன் அது கலெக்டிவ் பார்கெயினிங் என்ற தொழிலாளர் ஒற்றுமைக்கு அடிகோலியது. தனி மனிதனின் குரல் ஓங்கி ஒலிக்கமுடியாத போது, இதன் மூலம், சம்பளம், பணிச்சூழல், மற்ற பயன்கள் ஆகியவற்றை நிர்வாகத்திடம் கேட்டுப் பெற முடிந்தது.
ஆனால் ஐ.டி. துறையில், ஒருவரின் சம்பளம் மற்றொருவருக்குக் கிடையாது மற்றும் தெரியாது. பணிச்சூழலில் எந்தவித குறைபாடும் இருக்க முடியாது. வீட்டுக்குச் செல்லவும் அழைத்து வரவும் பேருந்து, கார் வசதி ஆகியவை உள்ளன. ஆகவே, இந்தத் தேவைகளும் இல்லை.
தொழிற்சங்கங்களில் பெரும்பாலும் ஆண்களே உள்ளனர். ஐ.டி. துறையில் பெண்களின் பங்களிப்பு 50 சதவீதம் வரை என்று கூட சொல்லலாம். ஆகவே தொழிற்சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்றே வைத்துக் கொண்டாலும், 50% பேர்தான் முன் வருவார்கள். அவர்களிலும் பிற மாநிலத்தவர் இருப்பார்கள். அட்ரிஷன் காரணமாக நிரந்தரமாக இருப்பவர்கள் குறைவாதலால் அவர்களுக்கு நிர்வாகமே அதிகச் சம்பளம், அலவன்சு, ப்ரமோஷன் முதலியவற்றைச் செய்து கொடுத்து விடுகிறது. புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களும், பிற நிறுவனங்களிலிருந்து அப்போதுதான் வேலைக்குச் சேர்ந்தவர்களும் தொழிற்சங்கம் அமைத்திட நிச்சயம் முன் வரமாட்டார்கள். அப்படி அமைந்திட்டாலும் தொடர்ந்து நடத்திட முடியாத சூழல், அதாவது வேறு வேலைக்குச் செல்லுதல், ட்ரான்ஸ்ஃபர், ஆன் சைட் முதலிய சூழல்கள் உருவாகும்.
இவ்வாறாக பல்வேறு கோணங்களில் பகுத்துப் பார்க்கும் போது, ஐ.டி.துறையின் தற்போதைய சூழலில் தொழிற்சங்கம் தீர்வாகாது என்பதே நிதர்சனமான உண்மை.
ஆனால், தற்போது ஐ.டி. துறையில் நிலவி வரும் சுணக்கமான போக்கு, உலகப் பொருளாதார நிலையில் ஏற்பட்டுள்ள மந்தமான நிலையின் எதிரொலியாகும். ஐ.டி. துறையில் மற்ற உற்பத்தித் துறை போல், பொருள் விற்றாலும் விற்காவிட்டாலும் உற்பத்தி செய்து இருப்பாக வைத்துக் கொள்ள முடியாது. தேவைக்கேற்பதான் பணி செய்ய முடியும்.
இந்த நிலையில், ஐ.டி. தொழிலில் பணி புரிவோர், தங்கள் சம்பளத்தில் ஒரு கணிசமான பகுதியை எதிர்காலத்தின் தேவைக்காக சேமித்தல் வேண்டும். இங்கு சேமிப்பு என்பது வேறு, முதலீடு என்பது வேறு என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். சேமிப்பு என்பது நாட்டுடைமை ஆக்கப் பட்ட வங்கிகளில் வைப்பு நிதியாக இருக்கலாம். இதைப் பற்றி விரிவாகப் பிறகு. ஐ.டி. தொழிலாளிக்கு தன் திறமைதான் மூலதனம். பல்வேறு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் மேலும் தெளிவை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.