Monday, October 13, 2008

வானவில் 13-10-2008

அன்புள்ள நண்பர்களே,

கடந்த ஒரு வாரமாக பல்வேறு காரணங்களால் தொடர்ந்து பதிவுலகப் பக்கம் வர முடியவில்லை. இதோ இன்னொரு வான வில்.

தமிழகத்தில் நிலவி வரும் 6 1/2 மணி நேர மின்வெட்டைப் பற்றி யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. எல்லோரும் அட்ஜஸ்ட் செய்து கொண்டார்கள் போலிருக்கிறது. இது மேலும் அதிகமாகாமல் இருந்தால் சரி. உ.பி.யில் கூட இவ்வளவு மின்வெட்டு இல்லை என்பதுதான் வருத்தமான செய்தி.:((

=====

பங்குச் சந்தையின் வீழ்ச்சியை அடுத்து, மிக வேகமாக செயல்பட்ட ஆர்.பி.ஐ. கேஷ் ரிசர்வ் ரேஷியோ (இதற்கெல்லாம் தமிழ் அர்த்தம் தெரிய வில்லையே சாமி..)வை, 1.50 சதவீதத்தை உடனடியாகக் குறைத்தது. .25% (25 அடிப்படைப் புள்ளிகள்) ஏற்றினாலே அரை சதவீதம் முதல் ஒரு சதவீதம் வரை வட்டியை ஏற்றும் வங்கிகள், இந்த சி.ஆர்.ஆர் குறைப்பைப் பற்றி வாயையே திறக்க வில்லை.
ஆனாலும் வங்கிகளுக்குப் பேராசைதான்.

====

நேற்று (ஞாயிறு) சென்னையில் நல்ல மழை பெய்தாலும், மக்கள் ரங்கனாதன் தெருவில் கூடுவதை நிறுத்த வில்லை. மழையை விட இவர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
நேற்றுதான் வடகிழக்குப் பருவமழையின் முதல் மழை பெய்தது. நேற்றே சென்னையின் பல முக்கிய இடங்களில் தண்ணீர் தேங்கியது. ஒன்றிரண்டு மணி நேரங்களில் இது குறைந்து விட்டாலும், விடாது மழை பெய்தால் சற்று சிரமம்தான்.

====

சென்னையில் மக்கள் அப்படி எங்குதான் செல்வார்களோ தெரியவில்லை. எப்போது பார்த்தாலும், எங்கு பார்த்தாலும் ஒரே டிராஃபிக் தான்.
இப்போதெல்லாம் மெயின் ரோடுக்குப் பக்கத்தில் இருக்கும் சந்து பொந்துகளெல்லாம் கூட வண்டிகளால் நிரம்பி வழிகின்றன.

====

தீபாவளிக்காக விடப்பட்ட சிறப்பு ரயில்களிலும் ஹவுஸ் ஃபுல். இ டிக்கட் தான் இதற்கும் காரணம் என்கின்றனர். இ. டிக்கட்டிற்கும் கோட்டா வேண்டும் என்பது, திருச்சி ரயில் நுகர்வோரின் கோரிக்கை. நியாயமான கோரிக்கையாகத்தான் படுகிறது.

====

நாளை மறு நாள், சக்கர வியூகத்தின் அடுத்த பகுதி வெளி வர இருக்கிறது. படிக்கத் தவறாதீர்கள்.


அன்புடன்
இளைய பல்லவன்.