Saturday, July 25, 2009

ஃபைனல் இன்டர்வியூ

கடந்த ஆறு மாதமாக முயற்சித்தும் ஒன்றும் சரியாக அமையவில்லை. இந்த முறைதான் ஃபைனல் இன்டர்வியூ வரை வந்திருக்கிறது. இப்போதும் முழுமையான திருப்தி இல்லைதான் என்றாலும் இது வரை வந்ததிலேயே இதுதான் பெஸ்ட் என்று சொல்லக்கூடியவாறு இருப்பதுதான் ஹை லைட். சம்பள விவகாரம்தான் இழுத்தடிக்கிறது.

'கூடவோ குறைச்சலோ, இதயே முடிக்கப் பாருங்க. எத்தனை நாள்தான் இப்படி தேடிக்கிட்டே இருக்கப் போறீங்க' என்று, தங்கமணி காலையில் சொன்னது நினைவில் வந்தது. எனக்கும் சரியாகப் பட்டது.

தங்கமணியின் சப்போர்ட்டால்தான் இத்தனை நாள் தள்ள முடிந்தது. இது போன்று எல்லோருக்கும் அமைவது கடினம்தான்.

அதை நினைத்துத்தான் இந்த முறை எப்படியும் முடித்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். எல்லாம் முதல் ரவுண்ட் இன்டர்வியூவிலேயே பேசியாகிவிட்டது. சி.டி.சி. விவகாரம் தான் இழுத்தடிக்கிறது. அதற்காகத்தான் இந்த இன்டர்வியூ.

விரைவாகவே அலுவலகம் சென்று காத்திருக்க ஆரம்பித்தேன். இப்படி காத்திருக்க வேண்டியிருக்கிறதே என்றும் நினைத்துக் கொண்டேன். என்ன செய்வது. நேரம் அவ்வளவுதான்.

அவர் வந்துவிட்டதாக ஆபீஸ் பாய் வந்து சொன்னான். சந்திப்பு அறையில் காத்திருப்பதாகவும் சொன்னான்.

அந்த அறை நோக்கி நடந்தேன். முருகா என்று நினைத்தது மனம்.

'குட் மார்னிங்க்' என்றேன்.

'வெரி குட் மார்னிங்க்' என்றார் அவரும்.

சிறிது ஆசுவாசத்திற்குப் பிறகு,

'சொல்லுங்க.. ' என்றார்.

'நீங்கதான் சொல்லணும்' - நான்.

'நேரடியாகவே விஷயத்துக்கு வர்றேன். நீங்க சொல்ற சி.டி.சி. மார்கெட் நிலவரத்திற்கு சற்றும் பொருத்தமில்லாமல் இருக்கிறது. நீங்க வேணும்னா நாலு எடத்துல விசாரிக்கலாம். மத்ததெல்லாம் முடிந்து விட்ட நிலையில், இந்த விஷயத்திற்காக இழுத்தடிப்பது எனக்கும் நன்றாகப் படவில்லை.' என்ற ரீதியில் பேசிய அவர்,

'கூட்டி கழிச்சி பாத்தா எல்லாம் சரியாகத்தான் வரும்' என்று அண்ணாமலை ராதாரவியானார்.

மீண்டும் ஒரு முறை யோசித்தேன். தங்கமணி சொன்னது ஞாபகம் வந்தது. முடிவெடுத்துவிட்டேன்.

'ஓ கே. நீங்க சொல்றதுக்கே ஒத்துக்கிறேன். மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாமா?'

'குட். தாங்க்ஸ். இட்ஸ் ஃபைன் வித் மீ' என்று சொன்னார்.

'சரி வாங்க. எங்க ஜி. எம். ஐ மீட் பண்ணிட்டு, ஹெச். ஆர்.ல போய் அப்பாய்ன்ட்மென்ட் ஆர்டர் வாங்கிக்கலாம்' என்றேன்.

ஒரு வழியாக ஆறு மாதமாக காலியாக இருந்த என்னுடைய சபார்டினேட் போஸ்டுக்கு இன்று ஆள் எடுத்துவிட்ட மகிழ்ச்சியில், ஜி.எம். ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தோம்.

இந்த்க்காலத்தில் தகுதி, திறமை, அனுபவத்தோடு ஆள் கிடைப்பது எவ்வளவு கஷ்டம் என்பது பட்டால்தான் புரிகிறது.

மிஸ்டர். தங்கமணி, எம்.டெக்., எம்.பி.ஏ., ஜி.எம். என்று பெயர்ப் பலகை போட்ட ரூம் கதவு எங்களை வரவேற்றது.

சிறுகதை, ரிப்பீட்டு

8 comments:

ஐந்திணை said...

:-)

☀நான் ஆதவன்☀ said...

மீள் பதிவு?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

final interview maeas sakkaraviyukam?

CA Venkatesh Krishnan said...

நன்றி ஐந்திணை!

CA Venkatesh Krishnan said...

ஆமா ஆதவன்!

அதுதான் ரிப்பீட்டுன்னு வகைப் படுத்தியிருக்கேன்.

CA Venkatesh Krishnan said...

//
SUREஷ் (பழனியிலிருந்து) said...

final interview maeas sakkaraviyukam?
//

இருக்கலாம் சுரேஷ்!!

Prabhu said...

ச்சே... நான் கூட நீங்க தான் வேல தேடுறீங்கன்னு நெனச்சுட்டேன்!

CA Venkatesh Krishnan said...

///
Blogger pappu said...

ச்சே... நான் கூட நீங்க தான் வேல தேடுறீங்கன்னு நெனச்சுட்டேன்!
///

தேங்க்ஸ் பப்பு!!