Saturday, June 13, 2009

மீண்டு(ம்) வந்து கொண்டிருக்கிறேன்!!!

மீண்டு(ம்) வந்து கொண்டிருக்கிறேன்!!!

வலைப்பூவும், தமிழ்மணமும் நீங்காமல் நெஞ்சில் நிறைந்திருக்க
வாராமல் வந்துகொண்டிருந்தேன் இத்துணை நாளாய்.

ஆம்
என் வலைப்பூ வழியாக வாராமல், பதிவுலகத்தின் பக்கங்களை
எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன் அவ்வப்போது.
ஏக்கங்கள்...
என்னால் எழுத முடியவில்லையே என்று
எண்ணங்கள்....
எதுவும் தொடரமுடியவில்லையே என்று...

அழுத்தும் பணிச்சுமைகள்
அன்றாடம் ஆறு மணி நேரம்
அதுதான் ஓய்வின் சமயம்

இடையில் ஒரு தேர்வுக்கான தயாரிப்பு
இத்துணை இக்கட்டான நிலையிலும்...
இதுதான் வாழ்க்கை
இப்படியான சூழலின்
இறுக்கம் குறைந்திருக்கிறது
இப்போது...

நண்பர்களும் அன்பர்களும்
நலமென்று தெரிகிறது
நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும்
நன்றாய் வளர்கிறது வலைப்பூங்காவனம்.
நான் மட்டும்....


ஒன்று புரிந்தது...

வலைப்பூவில்லா வாழ்க்கை
வாழ்க்கையில்லா வாழ்க்கை..


இதோ...

வந்து கொண்டிருக்கிறேன்..மீண்டு(ம்)
வந்துகொண்டிருக்கிறேன்...
வந்துவிடும் சக்கர வியூகமும், மொக்கைக் கவிதைகளும்...

வலைப்பூவே நீ வாழ்க வாழ்க..

என்னைக் காணாமல் ஏங்கிய (?) அன்பு நெஞ்சங்களுக்கும்
எண்ணத்தை வெளிப்படுத்திய சுரேஷ் (பழனியிலிருந்து), சதீசுகுமார், தீனதயாளன் அவர்களுக்கும்
என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த நான் ஆதவனுக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

டிஸ்கி: இது கவிதையான்னு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க. அப்படியே ஓட்டும் போடுங்க..

No comments: