Tuesday, June 30, 2009

திரைக்கதை எழுதுவது எப்படி . . . 2

சென்ற பகுதியில் தமிழ் சினிமாவின் ஒரு அறிமுகத்தையும், திரைக்கதையின் முக்கியத்துவத்தையும் பார்த்தோம். ஒரு கதையைக் கொடுத்து அதற்கான திரைக்கதையை அமைக்குமாறும் கேட்டுக்கொண்டேன். நண்பர் சுரேஷ், உடனடியாக ஒரு திரைக்கதையை எழுதி அசத்திவிட்டார். அதை இங்கே பார்க்கலாம்.

இப்போது திரைக்கதையைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.


திரைக்கதை என்றால் என்ன?

ஒரு கதையை திரைப்படமாக எடுப்பதற்காக மாற்றப்படுவது திரைக்கதை எனப்படுகிறது. கதை என்பது நாம் படித்துத் தெரிந்து கொள்வது. அதில் படிப்பவரின் கற்பனைக்குத்தான் முதலிடம். ஆனால் திரைப்படம் அப்படியல்ல. பார்ப்பவரை நம் பார்வைக்குத் திருப்ப வேண்டும். அப்படி திருப்பும் முயற்சிதான் திரைக்கதை. இது சரியாக இருக்கும் போது படம் வெற்றியடைகிறது. இல்லாவிட்டால் தோல்வி.


கதைக்கும் திரைக்கதைக்கும் என்ன வித்தியாசம் ?

கதையில் வர்ணனைகளும் காட்சியமைப்பும் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும். திரைக்கதையில் அதை விஷுவலாகக் காட்ட முயற்சி செய்வார்கள். உதாரணமாக ஒரு கிராமத்தைப் பற்றி விளக்க கதையில் இரண்டு பக்கங்களில் விவரிக்க வேண்டியிருக்கும். ஆனால் ஒரு காட்சியில் அத்தனையையும் பார்ப்பவருக்கு விளக்கிவிடலாம். கூட ஒரு பின்னணி இசை சேரும்போது அதன் எஃபெக்ட் உச்சமாகும்.

ஆனால் கதையில் கிராமத்து வர்ணனையை நான் படிக்கும் போது நான் பார்த்த கிராமத்தை உருவகப்படுத்திக் கொள்வேன். நீங்கள் படிக்கும் போது உங்களுக்குத் தெரிந்த கிராமத்தை உருவகப்படுத்திக் கொள்வீர்கள்.

ஆனால் திரையில் தோன்றுவது ஒரு கிராமம்!. நம் அனைவரையும் அதையே உருவகப்படுத்தச் சொல்லி கட்டாயப்படுத்தும். அதை நாம் விரும்புவதும் விரும்பாததும் படத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். திரைக்கதை என்பது ஒரு நேர்த்தியான மாஸ்டர் ப்ளான் போல இருக்க வேண்டும். டெக்னிகலான மேட்டர்களைப் பிறகு பார்ப்போம்.

திரைக்கதையால் என்ன பயன்?

இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன், ஒருவன் அல்லது ஒருத்தி எதற்காகத் திரைப்படம் பார்க்க வருகிறார்கள் என்று யோசிக்க வேண்டும்? நான் எதற்காக திரைப்படம் பார்க்கச் செல்கிறேன்?

1. எனக்கு ஒரு என்டெர்டெய்ன்மென்ட் தேவைப்படுகிறது.
2. எனக்கு ஒரு புதிய அனுபவம் கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பு இருக்கிறது
3. கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு கிடைக்க வேண்டும். (வேல்யூ ஃபார் மனி)
4. என் நேரம் வேஸ்ட் ஆகிவிட்டது என்று நான் எண்ணக்கூடாது.

இந்த எதிர்ப்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் எந்தத் திரைக்கதையும் வெற்றித் திரைக்கதைதான்!!


சரி இனி முக்கிய மேட்டருக்குச் செல்வோம்...

நீங்கள் நிறைய திரைப்படங்களைப் பார்த்திருப்பீர்கள். அவற்றின் ஒற்றுமையை சற்று அலசுவோமா?

1. முதலில் இனிமையாகத் துவங்கும். கதாபாத்திரங்கள் (நாயகன், நாயகி, வில்லன் போன்றோர்), கதைக்களம் ஆகியவற்றின் அறிமுகம்

2. பிரச்சனை உருவாதல். போராட்டம்.

3. முடிவு.

99.99% படங்களின் அமைப்பு இவ்வாறு இருப்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இதைத்தான் த்ரீ-ஆக்ட்-ஸ்ட்ரக்சர் என்று சொல்வார்கள். புராண இதிகாசங்கள் முதல் புதுப்படங்கள் வரை இந்த ஸ்ட்ரக்சர் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்.

இப்படிச் சொல்வது, அடுப்பில் பாத்திரத்தை வைத்து சமைத்துப் பரிமாறுவதுதான் சமையல் கலை என்று சொல்வதற்கு ஒப்பாகும். அல்லது, புத்தகத்தில் கணக்கெழுதி, வருடத்திற்கு ஒருமுறை ஆடிட் செய்து டாக்ஸ் கட்டுவதுதான் கணக்குப் பதிவியல் என்று சொல்வதற்கு ஒப்பாகும்.

இது உண்மைதான் என்றாலும், இது மட்டுமே உண்மையல்ல....


மேற்கொண்டு தொடர்வோம்...

எக்சர்சைஸ் 2: இந்த த்ரீ ஆக்ட் ஸ்ட்ரக்சர் அடிப்படையில் முதல் பகுதியில் சொன்ன கதைக்கு திரைக்கதை அமைத்துத்தாருங்கள்.

(தொடரும்)..

தமிழ்மணத்திலும் தமிழிஷிலும் ஓட்டுப்போடுவது, இந்தப்பதிவு பலரையும் சென்றடைய உதவி செய்வதாக இருக்கும்.

8 comments:

ரவி said...

புத்தகமே போடும் அளவுக்கு எளிமையாகவும் அழகாகவும் இருக்குது பதிவு...!!!

சி தயாளன் said...

எளிமையா இருக்கு :-)

CA Venkatesh Krishnan said...

//
செந்தழல் ரவி said...
புத்தகமே போடும் அளவுக்கு எளிமையாகவும் அழகாகவும் இருக்குது பதிவு...!!!
//
நன்றி ரவி!!!

CA Venkatesh Krishnan said...

//
’டொன்’ லீ said...
எளிமையா இருக்கு :-)
//

நன்றி டொன்!!!

☀நான் ஆதவன்☀ said...

ஆஹா அண்ணே எல்லாத்துறையிலும் புகுந்து விளையாடுறீங்களே....

படிக்க ரொம்ப சுலுவா இருக்குண்ணே. எழுதுங்க..

CA Venkatesh Krishnan said...

//
☀நான் ஆதவன்☀ said...
ஆஹா அண்ணே எல்லாத்துறையிலும் புகுந்து விளையாடுறீங்களே....

படிக்க ரொம்ப சுலுவா இருக்குண்ணே. எழுதுங்க..
//

எல்லாம் உங்கள மாதிரி ஆளுங்க உசுப்பேத்தி உடறதால வர்ற வென!.

வேறென்னத்தச் சொல்ல!!...

கண்டிப்பா தொடர வேண்டியதுதான்!!!...

CA Venkatesh Krishnan said...

திரைக்கதைப் பதிவுகள் தொடரும்.

Anonymous said...

இளைய பல்லவன் said...
திரைக்கதைப் பதிவுகள் தொடரும்.