Saturday, June 13, 2009

மீண்டு(ம்) வந்து கொண்டிருக்கிறேன் ! ! !

வலைப்பூவும், தமிழ்மணமும் நீங்காமல் நெஞ்சில் நிறைந்திருக்க
வாராமல் வந்துகொண்டிருந்தேன் இத்துணை நாளாய்.

ஆம்
என் வலைப்பூ வழியாக வாராமல், பதிவுலகத்தின் பக்கங்களை
எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன் அவ்வப்போது.
ஏக்கங்கள்...
என்னால் எழுத முடியவில்லையே என்று
எண்ணங்கள்....
எதுவும் தொடரமுடியவில்லையே என்று...

அழுத்தும் பணிச்சுமைகள்
அன்றாடம் ஆறு மணி நேரம்
அதுதான் ஓய்வின் சமயம்

இடையில் ஒரு தேர்வுக்கான தயாரிப்பு
இத்துணை இக்கட்டான நிலையிலும்...
இதுதான் வாழ்க்கை
இப்படியான சூழலின்
இறுக்கம் குறைந்திருக்கிறது
இப்போது...

நண்பர்களும் அன்பர்களும்
நலமென்று தெரிகிறது
நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும்
நன்றாய் வளர்கிறது வலைப்பூங்காவனம்.
நான் மட்டும்....


ஒன்று புரிந்தது...

வலைப்பூவில்லா வாழ்க்கை
வாழ்க்கையில்லா வாழ்க்கை..


இதோ...

வந்து கொண்டிருக்கிறேன்..மீண்டு(ம்)
வந்துகொண்டிருக்கிறேன்...
வந்துவிடும் சக்கர வியூகமும், மொக்கைக் கவிதைகளும்...

வலைப்பூவே நீ வாழ்க வாழ்க..

என்னைக் காணாமல் ஏங்கிய (?) அன்பு நெஞ்சங்களுக்கும்
எண்ணத்தை வெளிப்படுத்திய சுரேஷ் (பழனியிலிருந்து), சதீசுகுமார், தீனதயாளன் அவர்களுக்கும்
என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த நான் ஆதவனுக்கும்
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

டிஸ்கி: இது கவிதையான்னு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க. அப்படியே ஓட்டும் போடுங்க..

21 comments:

பழமைபேசி said...

//இது கவிதையான்னு கொஞ்சம் சொல்லிட்டுப் போங்க.//

வாழ்த்துப்பா!
வாழ்த்துவது நுகர்பவன் கடமை,
துதிப்பது பக்தனின் வழமை,
ஓதுவது தொண்டனின் மடமை,
பா என்பது உந்தன் உடமை, ஆக
நீ வாழ்த்துப்பா! இது உந்தன்
வாழ்த்துப்பா!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வாங்க பாஸ்.., வாங்க...,

உங்களுக்கு இரண்டு ஓடும் போட்டு அழைக்கிறோம் வாங்க

நசரேயன் said...

//வாங்க பாஸ்.., வாங்க...,

உங்களுக்கு இரண்டு ஓடும் போட்டு அழைக்கிறோம் வாங்க//

நானும்

இராகவன் நைஜிரியா said...

பட்டயக் கணக்கரே...

வருக... மீண்டு வருக...

உங்கள் வரவு நல்வரவாகுக..

CA Venkatesh Krishnan said...

அய்யா பழமைபேசியாரே..

அப்ப்ப்பப்ப்ப்பா...

CA Venkatesh Krishnan said...

சுரேஷ்,

இரண்டு ஓடா?!

வந்துகொண்டேஏஏஏஏ இருக்கிறேன்.

CA Venkatesh Krishnan said...

சுரேஷ்,

தொடர் பதிவுக்கு அழைத்ததற்கு மிக்க நன்றி.

CA Venkatesh Krishnan said...

நன்றி நசரேயன் !!!

CA Venkatesh Krishnan said...

நன்றி இராகவன் சார்!!!

நைஜீரியாவில் ஐ.எஃப்.ஆர்.எஸ் இருக்கா?

வேத்தியன் said...

வாங்க வாங்க...

CA Venkatesh Krishnan said...

Thanks வேத்தியன்

Anonymous said...

சுபா ,
வாங்க வாங்க,Late வந்தாலும், LATEST சுவாரஸ்யமாக பதிவ போடுங்க்.,

☀நான் ஆதவன்☀ said...

வெல்கம் பேக் பல்லவன்

இனிமே லேட்டா வந்தா ஸ்வீடோட("சக்கர வியூகம்) தான் வரனும்

நேசமித்ரன் said...

வாங்க சார் ..
நல்ல பதிவர்கள் எல்லாமே பாதியில் எழுதாம போய்டுராங்களேன்னு நினைச்சுட்டு இருந்தேன் ..
வந்துடீங்க...
வாங்க..

CA Venkatesh Krishnan said...

/// Anonymous said...
சுபா ,
வாங்க வாங்க,Late வந்தாலும், LATEST சுவாரஸ்யமாக பதிவ போடுங்க்.,
///

நன்றி சுபா,

லேட்டஸ்டா வந்துக்கிட்டே இருக்கேன்!!!

Sathis Kumar said...

வாங்க இளையபல்லவரே.. நல்லாருக்கீங்களா?

http://urupudaathathu.blogspot.com/ said...

இது கவுஜ தான்...
இது கவுஜ தான்...

(அவ்வ்வ்வ்வ்வ்.. எப்படி எல்லாம் பொய் சொல்ல வேண்டிருக்கு)

http://urupudaathathu.blogspot.com/ said...

//"மீண்டு(ம்) வந்து கொண்டிருக்கிறேன் ! ! !"///

"மீண்டு(ம்) படிக்க நானும் வந்து கொண்டிருக்கிறேன்

CA Venkatesh Krishnan said...

//
நான் ஆதவன் said...
வெல்கம் பேக் பல்லவன்

இனிமே லேட்டா வந்தா ஸ்வீடோட("சக்கர வியூகம்) தான் வரனும்
///

வாங்க ஆதவன். வந்து விட்டேன்.
ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே.. அர்ச்சனா சுவீட் ஞாபகம் வருதே

CA Venkatesh Krishnan said...

//
நேசமித்ரன் said...
வாங்க சார் ..
நல்ல பதிவர்கள் எல்லாமே பாதியில் எழுதாம போய்டுராங்களேன்னு நினைச்சுட்டு இருந்தேன் ..
வந்துடீங்க...
வாங்க
//

நன்றி நேசமித்ரன்.
நல்ல பதிவர்கள்னு ஒரு புதுக் குழுவுக்கு கோடு போட்டுட்டீங்க.
ரோடு போட்டுடுவோம்.

CA Venkatesh Krishnan said...

//
சதீசு குமார் said...
வாங்க இளையபல்லவரே.. நல்லாருக்கீங்களா?
//

நன்றி சதீசுகுமார், உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது. மிக்க நலம்.