Thursday, December 18, 2008

கிறுக்கலாய் சில கவிதைகள்....

முதன்மை

முதல் கவிதை

முதல் காதல்

முதல் முத்தம்

முடியும் வரை

தொடரும்...

===

முழுமை

அழகாய் நீ

அணிகலனாய் நான்

முயல்வோம்

முழுமை பெற

===


எதிர்பார்ப்பு

ஏங்குகிறது

எந்தன் நெஞ்சு

ஏந்திழையை

எதிர்பார்த்து

===

துணை

கனவும் கற்பனையும்

காதவழி வாராது

செயலும் சொல்லும்

செல்லும் எங்கெங்கும்

===

ஒன்று

நான் நீ

நீ நான்

நாம் நாம்

எல்லாம் ஒன்று

9 comments:

குடுகுடுப்பை said...

இதில் உங்கள் திறமை தெரிவதாக தோன்றவில்லை

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//
முதல் கவிதை

முதல் காதல்

முதல் முத்தம்

முடியும் வரை
//


பார்க்கும் எல்லோரிடமும் முதல் என்றுதான் சொல்ல வேண்டும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//முழுமை

அழகாய் நீ

அணிகலனாய் நான்

முயல்வோம்

முழுமை பெற//


இது வேற மாதிரியில்ல இருக்குது (வடிவேலு தொணியில் படிக்கவும்)

நசரேயன் said...

/*//முழுமை

அழகாய் நீ

அணிகலனாய் நான்

முயல்வோம்

முழுமை பெற//


இது வேற மாதிரியில்ல இருக்குது (வடிவேலு தொணியில் படிக்கவும்)

*/
எனக்கும் அப்படித்தான் தோனுது

CA Venkatesh Krishnan said...

விமர்சனத்திற்கு நன்றி குடுகுடுப்பை. இதுதான் முதல் முயற்சி.

(இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஒடம்ப ரணகளமாக்கிடறாங்கப்பா)

CA Venkatesh Krishnan said...

//
SUREஷ் கூறியது...

பார்க்கும் எல்லோரிடமும் முதல் என்றுதான் சொல்ல வேண்டும்.
//

ம்ம்ம்ம்.... அனுபவம் பேசுது. நோட் பண்ணிக்கறேன்.

CA Venkatesh Krishnan said...

//
SUREஷ் கூறியது...

இது வேற மாதிரியில்ல இருக்குது (வடிவேலு தொணியில் படிக்கவும்)
//

//
நசரேயன் கூறியது...

எனக்கும் அப்படித்தான் தோனுது
//

அப்படியா ?!?!?!?!?!...

தமிழ் said...

அருமை

CA Venkatesh Krishnan said...

//
திகழ்மிளிர் கூறியது...
அருமை
//

உங்கள் கமென்டைப் பார்த்து கண்கள் பனித்தன, இதயம் இனித்தது.

நன்றி.